Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

"இலங்கையில் வடக்கு கிழக்கு இணையாவிட்டால் தமிழர் உரிமை பறிபோகும்": சி.வி.விக்னேஸ்வரன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஜீவனண்ணா, துளசி போன்றவர்கள் ஏன் விக்கி ஐயாவ பார்த்து அச்சப்படுகிறீர்கள்?! தேர்தலில மக்கள் யாருக்கு ஆதரவு என்று தெரியவரும் தானே.

பின்கதவால கட்சிக்குள்ள வந்து அதே பின்கதவால கட்சி தலைமையும் கைப்பற்றியுள்ளவ தான் பயப்பிடவேணும். கொஞ்சமாவது மிஞ்சி இருந்த தமிழர்களின் பேரம் பேசும் வலுவையும் இல்லாமலாக்கியத விடவா எமது சனங்களுக்கு விக்கி ஐயா கெடுதல் செய்துபோட்டார்?

த.தே.கூட்டமைப்ப காலி பண்ணாமல் அப்புகாத்தர் ஓயமாட்டார், அதுதானே அவருக்கு வழங்கப்பட்டபணி!

  • Replies 77
  • Views 5.6k
  • Created
  • Last Reply
12 hours ago, வாத்தியார் said:

 

 

அபிவிருத்திக்கு முன்னர் தீர்வு எமக்கு முக்கியம்

இதை எல்லோரும் மனதில் வைத்துக்கொள்ளுங்கள்.

தீர்வு என்பது எட்டாக்கனி.

விரும்பியோ, விரும்பாமலோ இதை மனதில் ஏற்று, ஜீரணித்துத்தான் ஆக வேண்டிய நிலை மக்களுக்கு.

வடக்கின் அபிவிருத்தி அமைச்சர்,  ரணில் காங்கேசன்துறைக்கு வருகை தர உள்ளார்.

தீர்வை ஒரு புறம் வைத்துவிட்டு,  ரணிலுடன் கைகுலுக்குவதற்கு இப்போதே யாழ் மக்கள் தயாராம்.

  • கருத்துக்கள உறவுகள்
51 minutes ago, thulasie said:

தீர்வு என்பது எட்டாக்கனி.

விரும்பியோ, விரும்பாமலோ இதை மனதில் ஏற்று, ஜீரணித்துத்தான் ஆக வேண்டிய நிலை மக்களுக்கு.

வடக்கின் அபிவிருத்தி அமைச்சர்,  ரணில் காங்கேசன்துறைக்கு வருகை தர உள்ளார்.

தீர்வை ஒரு புறம் வைத்துவிட்டு,  ரணிலுடன் கைகுலுக்குவதற்கு இப்போதே யாழ் மக்கள் தயாராம்.

சம்பந்தர் பதவிக்கும்.... சுமந்திரன் அரசிற்காகவும்..... போராடும்போது ரணிலுக்கு என்ன குறை.
அவர்கள் வரும்போது ஆட்களை லாரியில் ஏற்றி வர அவர்களுக்கு சேவைசெய்ப்பவர்கள் தயாராகத்தான் இருக்கின்றனர்.

  • கருத்துக்கள உறவுகள்
Quote

வடக்கின் அபிவிருத்தி அமைச்சர்,  ரணில் காங்கேசன்துறைக்கு வருகை தர உள்ளார்.

தீர்வை ஒரு புறம் வைத்துவிட்டு,  ரணிலுடன் கைகுலுக்குவதற்கு இப்போதே யாழ் மக்கள் தயாராம்.

நாங்களும் அந்த யாழில தானே இருக்கிறம்!

பேரூந்தில கொண்டு வந்திறக்க ஆயத்தமோ? தமிழ்நாட்டு ஜனநாயக(குவாட்டரும் கோழிப்புரியாணியும்) முறையில கூட்டிவருகினமோ?!

Edited by ஏராளன்
forgotten quote

  • கருத்துக்கள உறவுகள்

அபிவிருத்தியும் தீர்வும் சமாந்திரமாக நடப்பதற்க்கு யார் தயாரோ அவரக்குத்தான் எனது வாக்கு

On 1/28/2019 at 12:49 PM, ஜீவன் சிவா said:

நிச்சயமா அனைவரையும் நாட்டையும் கொன்றொழித்து அட்டகாசம் பண்ணிய அந்த படுகொலைகாரக் கும்பலிடம்  மட்டும் இல்லை என்று தெரியும்.

அந்த படுகொலைகாரக் கும்பல் கூலிக்கு கொலைகளை செய்துவிட்டு வெளிநாடுகளுக்கு தப்பிச்சென்று விட்டு மீண்டும் இலங்கை வந்து சுவிஸ் குமார் போல அங்குமிங்கும் நடமாடுவதா கேள்வி!

22 minutes ago, Rajesh said:

அந்த படுகொலைகாரக் கும்பல் கூலிக்கு கொலைகளை செய்துவிட்டு வெளிநாடுகளுக்கு தப்பிச்சென்று விட்டு மீண்டும் இலங்கை வந்து சுவிஸ் குமார் போல அங்குமிங்கும் நடமாடுவதா கேள்வி!

அதைத்தான் நானும் சொன்னேன் 

அந்த படுபாதக கொள்ளைக்கார, கொலைகார  கும்பலிடம் கூலிக்கு வேலை செய்து சுத்தினது போதாது என்று இப்பவும் சுவிஸ் குமார் ரேஞ்சுக்குக்கு பண்ணிற அட்டகாசம் கொஞ்சமா.

கொன்றது போதாதா 

கொள்ளை அடித்ததும் போதாதா 

அழித்ததும் போதாதா 

9 hours ago, ஏராளன் said:

ஜீவனண்ணா, துளசி போன்றவர்கள் ஏன் விக்கி ஐயாவ பார்த்து அச்சப்படுகிறீர்கள்?!

இங்கு யாருமே அச்சப்படவில்லை 

கனவில் மிதக்கவேண்டாம் என்கின்றோம் - யதார்த்தம் வேறு.

தேர்தலின் பின்னால் கதைக்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, பிரபாதாசன் said:

சுமந்திரனுக்கு மிண்டு கொடுப்பவர்கள் முதலில் ஒன்றை புரியவும் . அரசியல் தீர்வு ஒன்றுதான் சிறந்த அபிவிருத்திக்கு முன்னோடி , இதன் விளக்கம் புரியாதவர்கள் விக்கி ஐயாவை விமர்சனம் பண்ண தகுதி அற்றவர்கள் . 

முதலில் எமக்கான நிலையான தீர்வு வேண்டும் அதனைத்தான் விக்கி ஐயா தனது காலத்தில் இடித்துரைத்தார் . 
வெளி நாட்டு முகவர்களுடன் இதன் ஆணித்தரமாக கூறினார் . ஆனால் இடையில் இந்த சுமந்திரன் குழப்பம் விளைவிக்காது இருந்திருந்தால் சிலவற்றை செயல் படுத்தி இருக்க முடியும் .
தமிழ் மக்கள் மத்தியில் நம்பிக்கையான தலைவர் என்று நடந்தும் காட்டினார் . இதனை பொறுக்க முடியாத அவசரங்களான சம்பந்தன் சுமந்திரன் ரணிலுடன் சேர்ந்து காசு வாங்கி துரோகிகளாகி எம் வாழ்வை அழித்தவர்கள் .
போர்க்குற்ற விசாரணையை இல்லாமல் செய்தது யார் , சுமந்திரன் என்கின்ற துரோகி தானே . 
இறந்தவர்களின் ஆத்மா இவரை அழிக்காமல் விடாது . இவர் எல்லாம் மக்கள் பிரதிநிதி .....பார்த்த இடத்தில் ....

உங்களுக்குப் பதில் எழுதுவது வீண் என்பது என் கருத்து! இருந்தாலும், தகவல்களை உறுதி செய்ய முயலாத முயற்சியின்மையை வைத்துக் கொண்டு மற்றவர்களுக்குத் தகுதி நிர்ணயிக்கும் போது அதைச் சுட்டிக் காட்ட வேண்டியிருக்கிறது!

அரசியல் தீர்வு அபிவிருத்திக்கு mandatory முன்னோடியல்ல, ஒரு ஊக்கி மட்டுமே! சும்மா சோற்றுக்குக் கவலைப் பட வேண்டிய தேவையில்லாத இடங்களில் இருந்து கொண்டு தாயகத்தில் இருப்பவர்கள் உங்களுக்குப் பிடித்த அரசியலுக்காக உணவையும் இருப்பிடத்தையும் தியாகம் செய்யக் கேட்பது சரியல்ல! அது அரசியல் தீர்வை அவர்கள் மறக்கச் செய்யுமேயொழிய ஒரு நாளும் ஊக்குவிக்காது!

மேலும், ஆதாரமில்லாத வதந்திகளை வைத்துக் கொண்டு கோபாவேசம் கொள்வதையும் குறையுங்கள்! சும் சம் எங்கே ரணிலிடம் காசு வாங்கினார்கள்? எந்த ரொய்லெற் ஊடகத்தில் அது செய்தியாக வந்தது? சும் மாகாண சபைக்குப் போட்ட தடை என்னவெண்டு எங்கயாவது கேட்டால் ஓடி ஒளிவதைத் தவிர உங்களின் பதில் என்ன? (உங்கள் பதில் அவசியமில்லை இவற்றுக்கு! ஏனெனில் இதுவும் "வசந்தி" தான்! )

  • கருத்துக்கள உறவுகள்
Quote

ங்கு யாருமே அச்சப்படவில்லை 

கனவில் மிதக்கவேண்டாம் என்கின்றோம் - யதார்த்தம் வேறு.

தேர்தலின் பின்னால் கதைக்கலாம்.

உங்கள் கருத்துக்கள் அப்படி தெரியவில்லையே!
மக்கள் அவர் மீது வைத்துள்ள நம்பிக்கை வேறு, நீங்கள் அவர் தோற்பார் என காணும் கனவு வேறு தான் அண்ணா.
தேர்தல் வரை பொறுத்திருப்பமே.
எனக்கு என்ன ஆச்சரியம் என்னவென்றால் த.தே.கூட்டமைப்பு நம்பிய மக்களுக்கு செய்த துரோகத்த விட விக்கி ஐயா செய்த பெருந்துரோகம் என்ன?

  • கருத்துக்கள உறவுகள்
Quote

சும் மாகாண சபைக்குப் போட்ட தடை என்னவெண்டு எங்கயாவது கேட்டால் ஓடி ஒளிவதைத் தவிர உங்களின் பதில் என்ன?

அண்ணா சயந்தன், ஆர்னோல்ட், டெனிஸ்வரன் போன்ற தன்னுடைய விசுவாசிகளை வைத்து முதலமைச்சருக்கு சேறு பூசியதையும் அவருடைய பணிகளை நெருக்கடிக்குட்படுத்தியதையும் சுலபமாக மறப்பது ஏனோ?!

3 hours ago, சுவைப்பிரியன் said:

அபிவிருத்தியும் தீர்வும் சமாந்திரமாக நடப்பதற்க்கு யார் தயாரோ அவரக்குத்தான் எனது வாக்கு

 

வெறும் ஏட்டில் இருக்கும் தீர்வு, மக்களுக்கு சோறு போடாது.

சோற்றை முற்படுத்துபவர்களுக்கு,  எப்போதோ மக்கள் வாக்களிக்க இசைவாக்கம் அடைந்துவிட்டார்கள்.

13 hours ago, Justin said:

உங்களுக்குப் பதில் எழுதுவது வீண் என்பது என் கருத்து! இருந்தாலும், தகவல்களை உறுதி செய்ய முயலாத முயற்சியின்மையை வைத்துக் கொண்டு மற்றவர்களுக்குத் தகுதி நிர்ணயிக்கும் போது அதைச் சுட்டிக் காட்ட வேண்டியிருக்கிறது!

அரசியல் தீர்வு அபிவிருத்திக்கு mandatory முன்னோடியல்ல, ஒரு ஊக்கி மட்டுமே! சும்மா சோற்றுக்குக் கவலைப் பட வேண்டிய தேவையில்லாத இடங்களில் இருந்து கொண்டு தாயகத்தில் இருப்பவர்கள் உங்களுக்குப் பிடித்த அரசியலுக்காக உணவையும் இருப்பிடத்தையும் தியாகம் செய்யக் கேட்பது சரியல்ல! அது அரசியல் தீர்வை அவர்கள் மறக்கச் செய்யுமேயொழிய ஒரு நாளும் ஊக்குவிக்காது!

மேலும், ஆதாரமில்லாத வதந்திகளை வைத்துக் கொண்டு கோபாவேசம் கொள்வதையும் குறையுங்கள்! சும் சம் எங்கே ரணிலிடம் காசு வாங்கினார்கள்? எந்த ரொய்லெற் ஊடகத்தில் அது செய்தியாக வந்தது? சும் மாகாண சபைக்குப் போட்ட தடை என்னவெண்டு எங்கயாவது கேட்டால் ஓடி ஒளிவதைத் தவிர உங்களின் பதில் என்ன? (உங்கள் பதில் அவசியமில்லை இவற்றுக்கு! ஏனெனில் இதுவும் "வசந்தி" தான்! )

இவருக்கு பதில் சொல்வது வீண் வேலை , இருந்தாலும் சமப்ந்தன் சுமந்திரன் மாவை காசு வாங்கியது உண்மை , நிறைய ஆதாரங்கள் உள்ளது . சும்மா பக்க வாத்தியம் வாசிக்க வேண்டாம் இந்த பொறுக்கிகளுகு . யாழ்ப்பாணத்தில் உள்ள எல்லா மக்களும் இதனை அறிவர்.

எப்படி மாகாணசபையை குழப்பினார் என்று நடிக்கின்ற உங்கள் போன்றவர்கள் இந்த அரங்கில் பதிவிட வேண்டாம் . வேதனையுடன் இருக்கின்ற மக்களின் ரத்தம் குடிக்கின்ற இந்த அரசியல் வாதிகள் துரத்தப்படுவர் .

கோப்புப்பலவு மக்களுக்காக இந்த சுமந்திரன் என்ன செய்தவர் . சொல்ல முடியுமா ? 

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, Justin said:

சும்மா சோற்றுக்குக் கவலைப் பட வேண்டிய தேவையில்லாத இடங்களில் இருந்து கொண்டு தாயகத்தில் இருப்பவர்கள் உங்களுக்குப் பிடித்த அரசியலுக்காக உணவையும் இருப்பிடத்தையும் தியாகம் செய்யக் கேட்பது சரியல்ல!

சோறு மட்டும் தான் முக்கியமாயின்,  புலம்பெயர்ஸ் பின்பும், புலம்பெயர்ஸ் பொருளாதார, தொழில்நுட்ப, மற்றும் ஏனைய வளங்களை கொடுத்திருந்தாலும், யுத்தம் தொடர்ந்து நடந்திருக்க முடியாது, அரசியல், மற்றும் இனம், அடையாளம், பொருள் அழிப்பு  ஓர்மமும் அதை எதிர்க்கவேண்டும், எதிர்பதத்திற்கான ஏதுவான சூழலும்   இன்றி. 

19 hours ago, thulasie said:

சோற்றை முற்படுத்துபவர்களுக்கு,  எப்போதோ மக்கள் வாக்களிக்க இசைவாக்கம் அடைந்துவிட்டார்கள்.

மக்கள் என்று யாரை சொல்றீங்க? உங்களையும் உங்கள் குடும்பத்தையுமா?

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, பிரபாதாசன் said:

இவருக்கு பதில் சொல்வது வீண் வேலை , இருந்தாலும் சமப்ந்தன் சுமந்திரன் மாவை காசு வாங்கியது உண்மை , நிறைய ஆதாரங்கள் உள்ளது . சும்மா பக்க வாத்தியம் வாசிக்க வேண்டாம் இந்த பொறுக்கிகளுகு . யாழ்ப்பாணத்தில் உள்ள எல்லா மக்களும் இதனை அறிவர்.

எப்படி மாகாணசபையை குழப்பினார் என்று நடிக்கின்ற உங்கள் போன்றவர்கள் இந்த அரங்கில் பதிவிட வேண்டாம் . வேதனையுடன் இருக்கின்ற மக்களின் ரத்தம் குடிக்கின்ற இந்த அரசியல் வாதிகள் துரத்தப்படுவர் .

கோப்புப்பலவு மக்களுக்காக இந்த சுமந்திரன் என்ன செய்தவர் . சொல்ல முடியுமா ? 

"நிறைய ஆதாரம் இருக்கிறது" என்று பத்து முறை எழுதி விடுங்கள்! பிறகு அதுவே யாழில் ஆதாரமாகி விடும். ஆனால் என்ன, தேசிக்காய்கள் ஒவ்வொருவரும் மாறி மாறி ஒவ்வொருவர் முதுகை சுகமாக சொறிய மட்டுமே அந்த ஆதாரம் உதவும்!

 சொல்லும் ஒரு வசனத்திற்கு, ஒரு ரொய்லெற்  ஊடகத்தில் இருந்து கூட செய்து ஆதாரம் காட்ட இயலாமல் இருக்கிறது உங்கள் பிதற்றல்கள்! இந்த இலட்சணத்தில் நீங்கள் யார் எழுதலாம் எழுதக் கூடாது என்று கூட அறிவுரை தருகிறீர்கள்!

கேள்வியின் நாயகனாக திசை மாறி மாறி ஓடிக் கொண்டிருக்காமல் முதல் பதில்கள் தரவுகள் தாருங்கள்! அதன் பிறகு அவர் என்ன யாருக்குச் செய்தார் என்று நீங்களே தேடிப் படிக்கப் பழகுவீர்கள்!

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Kadancha said:

சோறு மட்டும் தான் முக்கியமாயின்,  புலம்பெயர்ஸ் பின்பும், புலம்பெயர்ஸ் பொருளாதார, தொழில்நுட்ப, மற்றும் ஏனைய வளங்களை கொடுத்திருந்தாலும், யுத்தம் தொடர்ந்து நடந்திருக்க முடியாது, அரசியல், மற்றும் இனம், அடையாளம், பொருள் அழிப்பு  ஓர்மமும் அதை எதிர்க்கவேண்டும், எதிர்பதத்திற்கான ஏதுவான சூழலும்   இன்றி. 

சோறெண்டால் "சோறு" என்ற சொல் மட்டுமல்ல! அது சிம்பொலிக்காக பொருளியல் சம்பந்தமான எல்லாவற்றையும் சேர்த்துச் சொன்னது.

இரண்டையும் சமாந்தரமாகக் கொண்டு செல்லும் வசதி போர் நடந்த போது இருக்கவில்லை. மாகாண சபை தமிழர் கையில் வந்த போது அந்த வசதி வந்தது. அதைச் செய்ய தீவிர அரசியல் போக்கு தடையாக இருந்தது தான் விக்கியரின் செயலின்மைக்குக் காரணம். புலிகள் ரோக்கியோ சந்திப்பை சமாதான பேச்சு வார்த்தையில் அமெரிக்கா மேலும் ரணில் மீதும் கோபம் கொண்டு தவிர்த்ததும் இந்த "தீர்வு முன், அபிவிருத்தி பின்" என்ற கோட்பாட்டினால் தான். ஆகவே, இரண்டு தடவைகள் பரீட்சிக்கப் பட்டு கையைச் சுட்டுக் கொண்ட ஒரு கோட்பாட்டை இப்ப தீவிர தேசியர்கள் எடுப்பது எனக்கு அதிசயமாகத் தெரியவில்லை! ஆனால், வரலாற்றில் எந்த நாடுகளில் அல்லது சமூகத்தில் இந்தக் கோட்பாடு வெற்றிகரமான முடிவைத் தந்திருக்கிறது என்று கூறுங்கள்! அதில் இருந்து கற்க முயலலாம்!

  • கருத்துக்கள உறவுகள்
23 hours ago, ஏராளன் said:

அண்ணா சயந்தன், ஆர்னோல்ட், டெனிஸ்வரன் போன்ற தன்னுடைய விசுவாசிகளை வைத்து முதலமைச்சருக்கு சேறு பூசியதையும் அவருடைய பணிகளை நெருக்கடிக்குட்படுத்தியதையும் சுலபமாக மறப்பது ஏனோ?!

இலங்கை அரசியலில் இதெல்லாம் தடையா தம்பி? நானும் ஏதோ சுமந்திரன் விக்கி ஐயாவின் இன்ரர்கூலர் வாகனத்துக்கு முன்னால படுத்துக் கிடந்து தடை போட்டவர் எண்டு நினைச்சன்!

 அரசியலுக்கு வந்த விக்கி ஐயா முதலில் தன்னை "கனம் நீதியரசர் அவர்களே!" என்று அரசியலிலும் விளிப்பார்கள் என்று எதிர்பார்த்து வந்து , பிறகு அதிர்ந்து, குழம்பி, மனம் நொந்து பிறகு சேறடிப்பிற்கெல்லாம் பதில் சொல்ல வெளிக்கிட்டுத் திரும்பிப் பார்த்தால் மாகாண சபை காலம் முடிந்து விட்டிருந்தது!

அவர் நல்லவர், ஆனால் திரும்பி வந்தால் இதையே தான் செய்வார்! ஆனால் தாயகம் அதை விரும்பினால் அவர்கள் வாக்களித்து வெல்ல வைக்கட்டும்!

3 hours ago, Rajesh said:

மக்கள் என்று யாரை சொல்றீங்க? உங்களையும் உங்கள் குடும்பத்தையுமா?

இது போன்ற குடும்பத்தை இழுத்து ஒருவரை அவமானம் செய்ய வைக்கும் கருத்துகளை யாழ் விதிகள் ஊக்குவிப்பதில்லை! Fair game என்று பதில் தருபவரும் இதைச் செய்தால் உங்கள் நிலைமை என்ன என்று யோசித்துப் பார்த்து எழுதுங்கள்!

  • கருத்துக்கள உறவுகள்

thlai.jpg
வல்லரசுகளின் நலன்களுக்காக அழிக்கப்பட்ட ஈழத்தமிழின விடுதலைப்போராட்டம்

விடுதலைப் புலிகளின் வீழ்ச்சிக்குப் பின்னர், அதுபற்றிய ஆய்வுக் கட்டுரைகளைத் தமிழில் எழுதியவர்களில் அனேகர் அவர்களின் வீழ்ச்சிக்கு பின்வரும் காரணங்களைத் தவறாது குறிப்பிடுகின்றனர்.சக இயக்கங்களை அழித்தமை, மாற்றுக் கருத்துக்களில்லாத இறுகிய ஒற்றைத் தன்மை, முஸ்லிம் மக்களை வெளியேற்றியமை, ராஜீவ் காந்தியைப் படுகொலை செய்தமை, உலகின் புதிய ஒழுங்கைக் கவனத்தில் கொள்ளாமை என்பவைகளாகும்.

இவை, கண்ணி வெடிகளிற்குப் பயந்து அங்கும் இங்கும் விலகாத ஒரு நேர்கோட்டுத்தன்மை கொண்டவையாகவே இருக்கிறது. உலகின் புதிய ஒழுங்கு தவிர்ந்த ஏனையவை, ஒரு விடுதலை இயக்கம் என்ற வகையில் அவர்கள் மேற்கொண்டிருக்கக்கூடாத செயற்பாடுகள்தான். விடுதலைப் புலிகள், தமிழ் மக்கள்மீது அக்கறை கொண்டிருந்தாலும், அவ்வக்கறை இராணுவ அமைப்பிற்கு மேலான நிலையில் வைக்கப்பட்டிருக்கவில்லை என்பதையும் மறுப்பதற்கில்லை.

ஆனால், இவைகள் நீதியை விரும்புபவர்களின் கவனத்திற்குரியனவாக இருப்பவைகளே தவிர, சர்வதேச ஆதிக்க அரசுகளின் உண்மையாக கவனத்துக்குரியவை அல்ல.

இவற்றில் ராஜீவ் காந்தியின் கொலை ஒரு விதிவிலக்கு. உண்மையில் இக் கொலைக்கு இந்தியா தனது வல்லாதிக்கக் கனவுகளின் பின்னணியிலேயே அதிக அழுத்தம் கொடுத்தது. அது விடுதலைப் புலிகளை அழிப்பதற்கு தானாக அவர்கள் மடியில் விழுந்த கனி.

அக் கொலை நடைபெற்றிருக்காவிடினும், இந்தியா அவர்களை அழித்தே இருக்கும். வேறு காரணங்களைத் தேடியிருக்கும் என்றே நான் கருதுகின்றேன். 


ஏனைய சக இயக்கங்கள், மாற்றுக் கருத்துக்கள், முஸ்லிம் மக்கள் வெளியேற்றம் போன்றவைகள் வல்லாதிக்க சத்திகளின் உண்மையான, நேர்மையான கவனத்துக்குரியவைகளாக இருந்தால், இன்றைய உலக நாடுகளில் அனேகமானவை அழிவுக்குள்ளாக்கப்பட்டிருக்கவேண்டும் அல்லது ஒவ்வொரு நாடும் தனக்குத்தானே குண்டுகளை வீசி அழிவுகளை ஏற்படுத்தியிருக்கவேண்டும்.

நீதியின் நிமித்தம் விடுதலைப் புலிகள் அழிக்கப்பட்டிருந்தால், அதே நீதியின் நிமித்தம் ஒவ்வொரு நாடுகளும் தற்கொலை செய்துகொள்ளும் அரசுகளாக மாறியிருக்கவேண்டும். அதுவே அவர்களிற்குரிய தகுதியும் நீதியுமாகும்.

வல்லரசு நாடுகள் அதுவும் அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம், ஐக்கிய நாடுகள் சபை போன்றவை உலக வளங்களின்மீது தீராக் காதல் கொண்ட நாடுகள் என்பதை புதிதாகச் சொல்லிவைக்க வேண்டியதில்லை. வல்லாதிக்க நாடுகள் விடுதலைப் புலிகளின் அழிவுக்கான வரையறைகளை ஏன் வகுத்துக்கொண்டது?

இதற்கான வேரினை 08-04-1990ல் அனிதா பிரதாப்பிற்கு பிரபாகரன் அளித்த செவ்வியில் கண்டுகொள்ளலாம்.

‘எமது மக்களின் சுதந்திரத்திலும், விடுதலையிலும் எந்த ஒரு சக்தி தலையிடுவதற்கும் நாம் அனுமதிக்க மாட்டோம்’.
‘எந்த ஒரு அன்னிய சக்தியும் எங்கள் பிரச்சனையில் தலையிட்டு எங்கள்மீது ஆதிக்கம் செலுத்தவும், நாங்கள் தொடர்பான முடிவு எடுப்பதையும் நாங்கள் விரும்பவில்லை’.


அன்னிய சக்திகள் என்பது, ஈழத்தமிழர் பிரச்சனையை மையமாக வைத்து சாதுரியமாக உள் நுழைந்துகொண்ட பின்னர், தமது பொருளாதார நலன்களுக்குரிய தளமாக, தமிழீழ மண்ணைப் பாவிப்பதை நோக்காகக் கொண்ட எல்லா நாடுகளும்தான். திருமலையின் புல்மோட்டையில், முன்பு இலங்கை அரசின் அனுமதியுடன் ‘இல்மனைட்’ கனிமப் பொருளுக்குரிய மண்ணை சேகரித்துக்கொண்டிருந்த யப்பானியரை விடுதலைப் புலிகள் தடுத்து நிறுத்தியமையை இங்கு நினைவுகூரலாம்.

விடுதலைப் புலிகளது தலைவரது மேற்கூறிய தன்மையை மாற்றுவதற்காக ‘பெரியண்ணன்’ இந்தியா உட்பட அனேக நாடுகள் வெளிப்படையான பேச்சுவார்த்தைகளிலும் மறைமுகமான ஆசை வார்த்தைகளிலும், பயமுறுத்தல்களிலும் முயற்சித்தது. இதற்கு 1987ல் புது டில்லியின் ‘அசோகா விடுதியில்’ இலங்கை இந்திய ஒப்பந்தத்தை ஏற்கும்படி, பிரபாகரனுடன் இந்தியத் தூதுவர் ஜே.என். டிக்சிற் மேற்கொண்ட உரையாடல்களே சாட்சி. தமிழர் உரிமை சார்ந்து பிரபாகரன் எந்த விட்டுக் கொடுப்பிற்கும் தயாராக இருக்கவில்லையென்பதை பின்னர் டிக்சிற் முதலமைச்சர் எம்.ஜி. ஆருக்கு இவ்வாறு கூறினார்.

”தமிழர் விடுதலைக் கூட்டணியும் சகல போராளிக் குழுக்களும் இந்த ஒப்பந்தத்தை ஆதரிக்கின்றனர். ஆனால் இவர்கள் மட்டும் இதை எதிர்க்கிறார்கள். தமிழீழத் தனியரசைத் தவிர வேறு எதையும் இவர்கள் ஏற்கமாட்டார்கள்போல் தெரிகிறது….”

2002ல் சந்திரிகா பண்டாரநாயக்காவை ஜனாதிபதியாகவும் ரணில் விக்ரமசிங்காவை பிரதமராகவும் கொண்ட சிறிலங்கா அரசிற்கும், விடுதலைப் புலிகளிற்கும் ஏற்பட்ட ஒப்பந்தத்தின்பின், அமெரிக்காவில் நடைபெற்ற நிதியுதவும் நாடுகள் மகாநாட்டில் விடுதலைப் புலிகள் அழைக்கப்படாமையினால், ரோக்கியோவில் நடைபெற்ற உதவி வழங்கும் நாடுகள் மகாநாட்டில் பங்கு கொள்ள விடுதலைப் புலிகள் மறுத்துவிட்டனர்.

இந்த முடிவை மாற்றி, அவர்களை அந்த மகாநாட்டில் பங்குபற்ற வைக்க அனைத்து நாடுகளும் வற்புறுத்தியபோதும் அவர்கள் உறுதியாக மறுத்தமையையும் பின்னர் 2003 ஜுலையில் விடுதலைப் புலிகளின் அரசியல் பிரிவுப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்செல்வன் ஊடகவியலாளர் சங்கப் பிரதிநிதிகளிடம்”எந்த வல்லாதிக்க சக்திக்கும் அடிபணியாமல் எமது குறிக்கோளில் உறுதியாகவுள்ளோம்;. இதற்காக நாம் எவ்வாறான சக்திக்கும் முகம்கொடுத்து வருகிறோம். இனிமேலும் முகம் கொடுக்கவும் தயாராகவுள்ளோம்.”

என்று கூறியதையும் நினைவு கூரலாம். இது அனைத்துலக நாடுகளிற்கும் தெளிவாக ஒன்றை உணர்த்தியது. பிரபாகரன் எந்த சக்திகளிற்கும் வளைந்து கொடுக்கக்கூடியவர் அல்ல என்பதைத்தான்.

இந்த அழுத்தமான விட்டுக்கொடாமை என்பது மேற்கத்தைய, ஏன் இன்றைய கீழத்தேசங்களிலும் ‘இராஜதந்திரம்’ என்ற அரசியல் சொல்லின் அர்த்தத்துடன் முற்றும் முரண்படுகிறது. குறிக்கப்பட்ட நோக்கை அடைவதற்கு எப்படியும், எல்லா விதங்களிலும் எல்லா அறநெறிகளிற்கும் மாறான வழிமுறைகளிற்கூட செயற்படலாம் என்பது இந்த இராஜதந்திர விதிகள்.

இந்த தந்திர வழிகள் மூலம் தங்கள் காரியத்தை சாதித்துக் கொள்ள முடியாது போய்விடின், நேரடியாக ஆயுத பலத்தின்மூலம் தம் நோக்கினை அடைந்து கொள்ளலாம். இதுவே நியாயம் அல்லது உலகின் ஒழுங்கு. இந்தக் கருத்தை தமது கட்டுப்பாட்டிலுள்ள தகவல் வெளிப்பாட்டுச் சாதனங்கள் ஊடாக உருவாக்கிக்கொள்வார்கள்.

இந்த வழிமுறைக்கு, மாறிவரும் புதிய ஒழுங்கின் வல்லாதிக்கப் போட்டியின் நெளிவு சுழிவுகளிற்கு ஏற்ப, பிரபாகரனின் அழுத்தமான விட்டுக்கொடாமை உவப்பானதாக இல்லாமல் போனது மாத்திரமல்ல, அது ஆபத்தான அடையாளமாகவும் காணப்பட்டது. ஏனெனில் வல்லாதிக்க நாடுகளின் நலன்களிற்கான சுரண்டலின் பகுதியாக பிரபாகரனது ஆளுகைக்கு உட்பட்ட பிரதேசங்களைக் கொண்டுவரமுடியாது என்பதை உணர்த்தின.

இந்த விட்டுக்கொடாமை, தமிழர் வாழ்வு சார்ந்த அகம், புறம் என்ற அடிப்படையில் மானம், வீரம் என்ற தொன்மைக் கருத்தமைவுகளால் கட்டமைக்கப்பட்டிருக்கலாம். கொண்ட கொள்கை வழுவாமை வீரத்தின் குறியீடாகவும், சந்தர்ப்பவாதம் துரோகத்தனமாகவும் கருதப்பட்டது.

உயிர்வாழ்தல் மானத்துடன் தெடர்புடையதாக தமிழ் இலக்கியங்களில் பதியப்பட்டு இருந்தது. ‘மயிர் நீர்ப்பின் உயிர் வாழாக் கவரிமான்’ ஒரு முக்கிய குறியீடாகத் தமிழர் வாழ்வில் நிலை பெற்றது. புறமுதுகு காட்டாது மார்பில் காயத்துடன் போர்க்களத்தில் மடிவதொன்றே மகத்துவமுடையது. இவைகள் தமிழர் வாழ்வில் நீக்கமற நிறைந்திருந்தது. அத்துடன் மார்பில் காயத்துடன், வீரமுடன் மடிபவர்கள் நடுகைக் கற்கள் மூலம் வணக்கத்திற்குரியவர்களாகவும் ஆக்கப்பட்டிருந்தார்கள்.

விடுதலைப் புலிகளின் தலைவர் இந்த தமிழர் மாண்பு சார்ந்த கருத்துக்களால் மிகவும் ஈர்க்கப்பட்டவர் என்பதற்கு சோழர் புலிக்கொடியும், அவர் தனக்குத் தேர்ந்துகொண்ட கரிகாலன் என்ற புனைபெயரும் போர்க்களத்தில் மடிபவர்கள் வணக்கத்திற்குரியவர்கள் என்பதை சுட்டும் மாவீரர் துயிலும் இல்லங்களும் மிக எளிமையான சாட்சியங்களாகும்.

இவை அவரது அரசியல் கருத்தமைவில் கணிசமான தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கும் என்ற கருத்து இலகுவில் புறக்கணிக்கக்கூடியவையல்ல. இந்தத் தமிழர் மாண்பின் சாரம், மேற்கின் இராஜதந்திர அர்த்தங்களுக்குள் வளைந்து காரியத்தைச் சாதிக்கும் தன்மையைத் தொடர்ந்தும் தாமதப்படுத்திக்கொண்டே இருந்திருக்கிறது.

விடுதலைப் புலிகள் தமது வளர்ச்சிப் போக்கில் ஒரு கெரில்லாப் போராட்ட அமைப்பு என்பதையும் தாண்டி, உலகம் அதுவரையிலும் எந்த விடுதலைப் போராட்ட அமைப்பிலும் காணமுடியாத வகையில் கடற்படை, விமானப்படை என்ற பூரண அர்த்தத்தில் கொள்ளாவிடினும் விமானத்திலிருந்து தாக்கும் திறன் ஆகியவற்றைத் தம்முள் கொண்டிருந்ததோடு ஓர் அரசிற்குரிய அனைத்துக் கட்டமைப்பையும் கொண்டிருந்தனர். இந்த அசுர வளர்ச்சி விடுதலைப் போராட்டங்களை எதிர்கொண்ட அனைத்து நாடுகளிற்கும் அச்ச உணர்வை ஏற்படுத்தியிருந்தது.

விடுதலைப் புலிகளின் அரசிற்குரிய பரிமாணம் ஏனைய விடுதலைப் போராட்ட அமைப்புகளிற்கும் முன்னுதாரணமாக அமைந்துவிடும் என்பதுதான் அந்த அச்சம். பல விதங்களிலும் மேற்கின் அரசியல் அமைவிற்கு முரணாக இருந்த விடுதலைப் புலிகளை எப்படி அழிக்கலாம் என்ற அவர்களின் கவலைக்கு மருந்தாக அமைந்ததுதான் அமெரிக்க இரட்டைக் கோபுர தாக்குதல்.

இரட்டைக் கோபுரத் தாக்குதலிற்குப் பின்னர் அனைத்து அரசியல் நிலைமைகளும் தலைகீழாக மாறியது. விடுதலைப் போராளிகளாகக் கருதப்பட்ட அனைவரும் சடுதியாக பயங்கரவாதிகளாக மாற்றப்பட்டார்கள். தேசிய இனம் என்ற வரையறைக்குள் பிரிந்து செல்லும் உரிமையை அங்கீகரித்தவர்கள், தேசிய இனம் என்ற சொல்லிற்குப் பதிலாக சிறுபான்மையினம் என்ற சொல்லைப் பாவிக்கத் தொடங்கினர். இதன்மூலம் தேசிய இனத்திற்கு அளிக்கப்பட்டுவந்த வரையறைகள், உரிமைகள் இல்லாதொழிக்கும் நிலை உருவாகியது. தத்தம் நாடுகளில் தேசியப் பிரச்சனையின் போராட்டங்களை எதிர்கொண்ட அனைத்து நாடுகளும் இந்த ஒற்றை ஒழுங்கிற்குள் மிக மகிழ்ச்சியாக இணைந்து கொண்டனர்.

விடுதலைப் புலிகளை அழிப்பதற்கு ‘எந்தப் பேயோடும் இணைந்து கொள்ளும்’ இலங்கையின் பொது அரசியற்போக்கிற்கு ‘வாராது போல்வந்த மாமணி’ச் சூழ்நிலை இது.

”அமெரிக்கா தனது பயங்கரவாத அமைப்புக்களின் பட்டியலில் விடுதலைப் புலிகளைச் சேர்த்துக் கொண்டது, சர்வதேச அளவில் புலிகளைப் பலவீனப்படுத்தவும், தனிமைப்படுத்தவும் முதன்மையான பங்காற்றியிருக்கிறது’ என ஐ.நா. சபைக்கான அமெரிக்காவின் முன்னாள் உப நிரந்தரப் பிரதிநிதியும் இலங்கைக்கான முன்னாள் அமெரிக்கத் தூதுவருமான பீற்றர் போர்லிக் கூறியதை இங்கு ஞாபகப்படுத்திக் கொள்ளலாம்.

இந்தச் சர்வதேசச் சூழலை, தமிழ் ஆய்வாளர்கள் கருதியதற்கு மாறாக, உலக மாற்றங்களை விடுதலைப் புலிகள் நன்றாகவே உணர்ந்திருந்தனர் என்றே கொள்ளவேண்டும். அதனால்தான் அவர்கள் தாமாகவே முன்வந்து பேச்சுவார்த்தைக்குரிய கதவினைத் திறந்தார்கள். இரட்டைக் கோபுர தாக்குதல் நடைபெற்ற ஆண்டையும் (11-09-2001) விடுதலைப் புலிகளின் சமாதான முன்னெடுப்பிற்கான யுத்தநிறுத்த அறிவிப்பு ஆண்டையும் (24-12-2001) கவனித்தால் இது நன்கு புரியும்.

இரு தரப்பையும் சம தரப்பாக ஏற்றுக்கொண்டு பேச்சு வார்த்தைக்கு ஆதரவளித்த மேற்குலகம், அரசிற்குச் சார்பான நிலைப்பாட்டை உடனே எடுக்கத் தொடங்கியது. அதன் முதற்படிதான் முன்னர் குறிப்பிட்ட அமெரிக்க மகாநாட்டிற்கு விடுதலைப் புலிகள் அழைக்கப்படாமை.

சம தரப்பென்ற வகையில் விடுதலைப் புலிகளும் அழைக்கப்படவேண்டும் என்ற கருத்தை இலங்கை அரசு முன்வைத்திருந்தால் அரசின் நம்பகத் தன்மையையாவது அது உறுதிப்படுத்தியிருக்கும். ஆனால் அவர்கள் அதற்கு மாறாக உள்ளுர மகிழ்ச்சி அடைந்தமை, அவர்களது வழமையான நம்பகத் தன்மையின்மையையே உணர்த்தியது.

சமாதான காலத்தில் 14-06-2002 ல் முல்லைத்தீவு கடற்பரப்பில் கடற் புலிகள் 12 பேர் கடற்படையினரால் கொல்லப்பட்டனர். இது ஒரு பாரதூரமான விளைவாகவும், இதனால் ஏற்படும் விடுதலைப் புலிகளின் சீற்றம், யுத்த நிறுத்தத்தையே முடிவுக்குக் கொண்டுவரும் எனவும் பலரால் எதிர்பார்க்கப்பட்டது. ஏனெனில் 1987ல் விடுதலைப் புலிகள், இந்திய இராணுவத்தினருடன் பொருதிக்கொண்டதற்கும் இதை ஒத்த சம்பவமே காரணமாயிருந்தது என்பதை இங்கு கவனத்தில் கொள்ளலாம். இதேபோன்ற முறிவு ஏற்படாமைக்கு, இந்த பொறியை அவர்கள் நன்கு உணர்ந்திருந்தார்கள் என்பதுதான் காரணம்.

சுமாதானப் பேச்சு வார்த்தைகளின்போது இரு தரப்பும் நியாயமான தீர்வின் அடிப்படையில் ஈடுபடவில்லை என்பது, அக்காலத்திலேயே பலராலும் உணரப்பட்டது. பேச்சுவார்த்தையை புலிகள் முறியடிப்பதற்கான சந்தர்ப்பங்களை ஏற்படுத்த அரசும், அரசு முறியடிப்பதற்கான சந்தர்ப்பங்களை புலிகளும் ஏற்படுத்த முனைந்த வேளைகளில், இந்தியா உட்பட வல்லரசு நாடுகள், புலிகளை முறியடிப்பதற்கான சந்தர்ப்பங்களிற்காகக் காத்திருந்தது.

உதவி வழங்கும் ரோக்கியோ மகாநாட்டில் விடுதலைப் புலிகள் பங்குபற்ற மறுத்தமை அவர்களிற்கான அபாயத்தை முன்னறிவித்தது. அக்கால அமெரிக்க இராஜாங்க அமைச்சர் கிறிஸ்ரினா ரொக்கா ”இன நெருக்கடிக்குத் தீர்வுகாண்பதற்கான சமாதான முயற்சிகளின் சிறந்த நலன்களாகவும், தமிழ் மக்களின் நலன்களிற்காகவும், ஏன் தங்களின் நலன்களிற்காகவும் விடுதலைப் புலிகள் ரோக்கியோ மகாநாட்டில் பங்குபற்ற வேண்டும்” என்றார்.

இதில் ‘தங்களின் நலன்’ என்ற வார்த்தை, விடுதலைப் புலிகளின் முதுகைத் தடவுவதற்கல்ல என்பதை அனைவரும் அறிவார். அதேவேளை அமெரிக்காவின் பிரதி ராஜாங்க அமைச்சர் றிச்சட் ஆமிரேஜ் ”பேச்சுவார்த்தைக்கு வராத ஒரு குழு சர்வதேசத்தை மிரட்டும் தொனியில் பேசுவதை ஏற்றுக்கொள்ள முடியாது” என்றார். இதனோடு பேச்சுவார்த்தையின்போது ஒப்புக்கொள்ளப்பட்ட விடயங்களை, குறிப்பாக பாதுகாப்பு வலயம் போன்றவைகளின் இழுத்தடிப்புக்கள், அரசால் மறுக்கப்பட்ட இடைக்காலத் தீர்வு போன்றவைகள் தமிழீழத்தில் வீசப்போகும் பெரும் புயலுக்கான கருமேகங்களின் திரட்சியானது.

இக் கருமேகங்களின் பின்புலத் திரட்சியில் விடுதலைப் புலிகளை அழித்தொழிக்கும் Project Beacon உருவாகியது. இத்திட்டம் இலங்கையுடன், இந்தியா உட்பட பல வல்லரசு நாடுகளின் உதவியுடனும் நல்லாசியுடனும் 2005ல் ஒஸ்லோவில், உருவாக்கப்பட்டது.


2006ல் இருந்து 2009 வரையுமான காலப்பகுதிக்குள் மூன்று கட்டங்களாக விடுதலைப் புலிகளை ஒழித்துக்கட்டுவது, யுத்தத்தில் பொதுமக்கள் படுகொலைகள் கட்டற்றுப் போகும்போது புலம்பெயர் நாட்டு மக்கள் கிளர்ந்தெழாதவாறு முக்கியமானவர்களைக் கைதுசெய்தல், மக்கள் பீதியடைந்து விடுதலைப் புலிகளிற்கு எதிராக திரும்புவார்கள் என்ற நம்பிக்கையும், தொடர் குண்டுவீச்சில் தமிழர்களின் வாழ்வாதாரங்களைச் சிதைத்தல், போன்ற உப திட்டங்களும் அதனுடன் இணைந்திருந்தது.

இதன் பின்னர் இந்தியா சீனா இரசியா பாகிஸ்தான் போன்ற முக்கிய ஆசிய நாடுகளினதும், வல்லரசுகளின் உதவியுடனும் 25-05-2006ல் தொடங்கிய போர் 18-5-2009ல் விடுதலைப் புலிகள் சிதறடிக்கப்பட்டபின் முடிவுக்கு வந்தது. இந்த வெற்றிக்கு சில நாடுகள் அளித்த அதீத வாழ்த்துக்கள், விடுதலைப் புலிகளின் அழிவை அவர்கள் எந்தப் பின்னணியில் விரும்பியிருந்தார்கள் என்பதைத் தெளிவுபடுத்தும்.

இந்த இனப்படுகொலையின் வெறியாட்டத்தின் பின், கிட்டத்தட்ட மூன்று இலட்சத்திற்கு மேற்பட்ட மக்களை, இலங்கை அரசு வதைமுகாமில் மிருகங்களாக அடைத்து வைத்துவிட்டு, தமிழர்களை வெற்றிகொண்டதைக் கொண்டாடிய விதம், பல நாடுகளை அசௌகரியத்திற்கு உள்ளாக்கியபோதிலும், வெற்றி மமதையில் இருந்த பேரினவாத அரசிற்கு அதுவெல்லாம் ஒரு பொருட்டாகவே தெரியவில்லை.

வெற்றியின் பின்னர் சர்வதேச நாடுகள், குறிப்பாக அமெரிக்கா, ஐ.நா.சபை, ஐரோப்பிய ஒன்றியம் ஆச்சரியப்படத்தக்க வகையில் இந்தியாகூட வெளியிட்ட அறிக்கைகளில், இவர்களின் உதவிக்கும் நெறிப்படுத்தலுக்கும் வெற்றிக்கும் பிரதிபலிப்பாக சில வாக்குறுதிகளை இலங்கை அளித்திருந்ததாக அறியமுடிகிறது. அது விடுதலைப் புலிகளின் அழிவிற்குப் பின்னர் அரசு ஒரு அரசியல் தீர்வுத் திட்டத்தை முன் வைக்கும் என்பதுதான்.

ஏனெனில் இந்தியா, அமெரிக்கா, ஐ.நா.சபை, ஐரோப்பிய ஒன்றியம் அனைத்தும் ஒரே விடயத்தை இலங்கை அரசிற்கு திரும்பத்திரும்ப வலியுறுத்திக்கொண்டு வருகிறார்கள். அது அரசு வாக்குறுதி அளித்தபடி இனப் பிரச்சனைக்கான தீர்வாக அதிகாரப் பகிர்வுத்திட்டத்தை விரைவாக முன்வைக்க வேண்டும் என்பதுதான். இத்திட்டம் இந்தியாவால் முன்வரையப்பட்ட 13வது அரசியல் சீர்திருத்தச் சட்டமும் அதற்கு அப்பாலும் என்று கணிக்கப்பட்டிருந்தது.

இக்காலங்களில் இலங்கை ஜனாதிபதியும் அவரது கட்சி அங்கத்தவர்களும் வெளியிட்ட முக்கியமான சில கருத்துக்கள் இவை

”இலங்கையில் சிறுபான்மையினர் என்ற ஒன்று இல்லை. அனைவரும் இலங்கையரே”
”அவர்கள் (தமிழர்கள்) எது வேண்டுமென்று நினைக்கிறார்களோ அது அவர்களிற்கு கிடைக்காது”
”விடுதலைப் புலிகள் அழிந்தபிறகு தமிழர் பிரச்சனையென ஒன்றும் இல்லை”
”முதலில் மீள்குடியேற்றம் அதன்பிறகே அரசியல் தீர்வு”

மீள்குடியேற்றத்திற்கு மூன்றுமாத காலஅவகாசம் பின்னர் கண்ணிவெடி அகற்றுதல் என்ற பேரில் உத்தேசமாக ஐந்து வருடங்கள் ஆக்கப்பட்டிருக்கின்றது.

நிவாரணப் பணியாக பணம் வரும் வாசலாக அகதிகள் இருப்பதனால், அகதிகள் குடியேற்றத்தை அரசு முதன்மைப்படுத்தாது. அடுத்த ஆண்டும் மக்களைப் பராமரிக்க மேலும் 225 மில்லியன் டொலர்கள் தேவையாக இருப்பதாக இலங்கை அரசு கோரியுள்ளது இதனை உறுதிப்படுத்தும்.

இந்த உண்மையை ஐ.நா.சபை உணரும் காலம் இன்னும் கனியவில்லைபோலும். இறுதி யுத்தத்தின்போது 400 போராளிகள்தான் இருக்கின்றார்கள் என்று அறிவித்த அரசு பின் அதன் எண்ணிக்கையை மேலும் 10000 மாக உயர்த்திக் கொண்டது. இந்த எண்ணிக்கை அரசின் தேவைகளிற்காக காலத்திற்குக் காலம் தொடர்ந்து மாற்றமடைந்து கொண்டே போகும்.

அரசின் மேற்கூறிய அறிக்கைகளும் காலம் கடத்தல்களும், கடந்த அறுபது ஆண்டுகாலமாக ஈழமக்கள் கடந்துசென்ற வழியில் சர்வதேசம் வருவதற்கான கதவு திறக்கப்படுகின்றது என்பதை குறிக்கின்றது. மீள்குடியேற்றத்தின் பின்னர் அரசியல் தீர்வு என்பதனால் இப்போது ஐ.நா.சபை, அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் ஆகியன மீள் குடியேற்றம் பற்றி உரத்துக் குரல் கொடுக்கின்றனர். இதுவும் அரசின் காதுகளில் விழுவதாக இல்லை. இதன் அதிருப்தி வெளிப்பாடுகள் பல்வேறு விதங்களில் வெளிவரத் தொடங்கிவிட்டது.

பல்வேறு தடவைகள் கோரிக்கை விட்டுக் களைத்துப்போன ஐ.நா.பொதுச் செயலாளர் நாயகம் பான்.கி.மூன் சற்றும் மனம்தளராத விக்கிரமாதித்தனாய் நியுயோர்க்கில் நடைபெற்ற பொதுச் சபைக் கூட்டத்தில் கலந்துகொள்ளச் சென்ற பிரதமர் ரட்னசிறி விக்கிரமநாயக்காவிடம் ”மீள் குடியேற்றத்தைத் துரிதப்படுத்தத் தவறினால் கசப்புணர்வதான் தீவிரமடையும்” என்று கூறியுள்ளார்.

இதே போன்று ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளியுறவு ஆணையாளர் பெனிற்றா பெரேரோ வால்ட்டனர் ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரான பசில் ராஜபக்சவைச் சந்தித்து ”இடம் பெயர்ந்த மக்கள் மிகத் துரிதமாக மீளக் குடியமர்த்தப்படல் வேண்டும்” என வலியுறுத்தியுள்ளார்.

இவை எல்லாவற்றிற்கும் சிகரம் வைத்ததுபோல் இந்திய அரசியல் ஆய்வாளர் கேணல் ஹரிகரன் ”சிறிலங்கா அரசியல்வாதிகள் எப்போதும் இரட்டை நிலைப்பாடு கொண்டவர்கள். வேண்டும்போதெல்லாம் அவர்கள் எதனை வேண்டுமானாலும் பேசுவார்கள், செய்வார்கள். முன்னர் இனப் பிரச்சனைகளிற்கு தீர்வாக சமஷ்டி பற்றி பேசினார்கள். இப்போது அதைத் தூக்கி வீசிவிட்டு அதிகாரப் பகிர்வு பற்றிப் பேசுகிறார்கள். சமஷ்டி போன்று எதிர்காலத்தில் இதுவும் அரசியலிலிருந்து காணாமல் போய்விடும். சிறிலங்கா தமிழர் விடயத்தில் பாராமுகமாய் இருந்தால் கடந்த முப்பது வருடங்களில் அது சுற்றிவந்த சுழற்சியை மீண்டும் ஒருமுறை சந்திக்க வேண்டியிருக்கும்” என்கிறார்.

இப்போது மீண்டும், தீர்வுத் திட்டத்திற்கான அனைத்து கட்சி பிரதிநிதிகள் குழுவின் தலைவர் பேராசிரியர் திஸ்ஸ விதாரண ”பொதுத் தேர்தலின் பின்னரே அரசியல் தீர்வுத் திட்டம் வெளியிடப்படும்” என்கிறார்.

இதன் தொடர்ச்சியாக சர்வதேசம் சில தெளிவான நிலைப்பாடுகளை உணர்த்த முன்வரும்போது, தமிழர்களின் அர்த்தமுள்ள அரசியல் தீர்வு முன்வைக்கப்படுமா?

அல்லது சீனாவின் பின்னணியின் பலத்தில் ‘உனக்கும் பெப்பே உனது அப்பனுக்கும் பெப்பெ’ என்பதான இலங்கையின் இயல்பான மனநிலை வெளிவருமா?

அல்லது மேற்குலகின் பொருளாதாரத் தேவைகள்தான் முதன்மைப்படுத்தப்படுமா? இக் கேள்விகளே முக்கியமானது.

ஐரோப்பிய ஒன்றியத்தினால் வழங்கப்படும் GSP + வரிச் சலுகை தற்காலிகத் தடையுடன் நீள்கிறது. இப்போதைய அதன் தற்காலிக நிறுத்தமும் அதைப்பெற அரசு எடுக்கும் அதிதீவிர முயற்சியும், அமெரிக்காவினால் வெளியிடவிருந்த சிறிலங்காவின் மனித உரிமை மீறல் அறிக்கையும், சிறிலங்காவின் பாதுகாப்பு அமைச்சரின் அமெரிக்க பயணத்துடன் மெல்ல பின்தள்ளப்பட்டு, மீண்டும் வெளியிடப்பட்டுவிட்டது. மீண்டும் அமெரிக்கா தன் சுயநல அடிப்படையில் இலங்கையைப் பகைத்துக்கொள்ளக்கூடாது என்று தீர்மானித்து இருக்கிறது.

இந்தியாவும் பெரிய அழுத்தம் எதனையும் இலங்கை அரசிற்கு கொடுக்கப் போவதில்லை. இந்த ஆதரவான போக்கு அல்லது இதற்கு எதிரான கடுமையான போக்கு ஆகியவற்றின்மூலம், அர்த்தமுள்ள தீர்விற்குப் பதிலாக ஏதாவது ஒன்று, தீர்வு என்ற பெயரில் தமிழர்முன் வைக்கப்பட, இந்தியா, மேற்குலகின் அரசியல் நலன்கள் முதன்மைப்படுத்தப்படலாம்.

http://nesantamilan.blogspot.com/2010/03/

  • கருத்துக்கள உறவுகள்

நுணா ஆதாரம் இணைத்திருக்கிறார்! அமெரிக்கா மேல் ரணில் மேல் கோபம் இல்லையாம், "வளைந்து" கொடுக்காமல் இருந்ததால் அழித்து விட்டார்கள் என்று முடிகிறது. புதுவை சொன்னது போல் "கருங்கல் உடையுமேயொழிய வளையாது". ஆனால், கருங்கல் தானும் உடைந்து தன்னோடு சாக விரும்பாத மக்களையும் அல்லவா துவம்சித்துச் சென்றது? இனி ஒரு கருங்கல் எங்களுக்கு அவசியமில்லை என்பதற்கு இதுவே ஆதாரம்!

  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, Justin said:

நுணா ஆதாரம் இணைத்திருக்கிறார்! அமெரிக்கா மேல் ரணில் மேல் கோபம் இல்லையாம், "வளைந்து" கொடுக்காமல் இருந்ததால் அழித்து விட்டார்கள் என்று முடிகிறது. புதுவை சொன்னது போல் "கருங்கல் உடையுமேயொழிய வளையாது". ஆனால், கருங்கல் தானும் உடைந்து தன்னோடு சாக விரும்பாத மக்களையும் அல்லவா துவம்சித்துச் சென்றது? இனி ஒரு கருங்கல் எங்களுக்கு அவசியமில்லை என்பதற்கு இதுவே ஆதாரம்!

பலரும் சேர்ந்து கல்லைப்பிடிக்க

கல்லையும்

கல்லோடு சேர்ந்து  லட்சத்துக்கு  மேற்படட மக்களையும்

அழித்தவர்களை

கல்லை  கல்லை  குற்றம் சாட்டியடி

இவ்வாறு  தான் காப்பாற்ற  முயல்கின்றோம் என்பதற்கு இதுவே ஆதாரம்

 

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, விசுகு said:

பலரும் சேர்ந்து கல்லைப்பிடிக்க

கல்லையும்

கல்லோடு சேர்ந்து  லட்சத்துக்கு  மேற்படட மக்களையும்

அழித்தவர்களை

கல்லை  கல்லை  குற்றம் சாட்டியடி

இவ்வாறு  தான் காப்பாற்ற  முயல்கின்றோம் என்பதற்கு இதுவே ஆதாரம்

 

இங்கே யாரை நான் காப்பாற்ற முனைகிறேன் என்று சொன்னால் நான் பதில் சொல்ல உதவியாக இருக்கும்! இந்தத் திரி ஆரம்பித்தது அபிவிருத்தியை தீர்வு வரும் வரை தள்ளி வைக்க வேண்டுமா என்ற கேள்வியுடன். அதற்காக என் கருத்தும் நுணாவின் இணைப்பும். இதில் குற்றச்சாட்டும் இல்லை, காப்பாற்றுதலும் இல்லை! இது fact! "ரைற்றானிக் மூழ்கி விட்டது 1500 பேருடன்" என்றால் அது ரைற்றானிக் மீது குற்றம் சொல்வதாகாது! அது மூழ்கவே மூழ்காது என்று உறுதி கொடுத்த தயாரிப்பாளர்கள் மீது வேண்டுமானால் மறைமுகமான குற்றச் சாட்டு விழலாம்! இதில் சிக்கலாக நீங்கள் யோசிக்க ஒன்றும் இல்லை!

11 hours ago, Justin said:

நுணா ஆதாரம் இணைத்திருக்கிறார்! அமெரிக்கா மேல் ரணில் மேல் கோபம் இல்லையாம், "வளைந்து" கொடுக்காமல் இருந்ததால் அழித்து விட்டார்கள் என்று முடிகிறது. புதுவை சொன்னது போல் "கருங்கல் உடையுமேயொழிய வளையாது". ஆனால், கருங்கல் தானும் உடைந்து தன்னோடு சாக விரும்பாத மக்களையும் அல்லவா துவம்சித்துச் சென்றது? இனி ஒரு கருங்கல் எங்களுக்கு அவசியமில்லை என்பதற்கு இதுவே ஆதாரம்!

கருத்துக்களை பார்க்கும் போது புரிகின்றது பின்னணி , இவர்களை ஒதுக்கிவிட்டு எங்கள் இலக்கை நோக்கி போவதே மேல் . சுமந்திரன் ,சயந்தன், ஆனோல்ட் .....இப்படியான பொறுக்கிகள் எல்லாம் மேதாவிகள்.....
அடுத்த தேர்தலில் ஊர் பக்கம் வரட்டும் .......

11 hours ago, Justin said:

"நிறைய ஆதாரம் இருக்கிறது" என்று பத்து முறை எழுதி விடுங்கள்! பிறகு அதுவே யாழில் ஆதாரமாகி விடும். ஆனால் என்ன, தேசிக்காய்கள் ஒவ்வொருவரும் மாறி மாறி ஒவ்வொருவர் முதுகை சுகமாக சொறிய மட்டுமே அந்த ஆதாரம் உதவும்!

 சொல்லும் ஒரு வசனத்திற்கு, ஒரு ரொய்லெற்  ஊடகத்தில் இருந்து கூட செய்து ஆதாரம் காட்ட இயலாமல் இருக்கிறது உங்கள் பிதற்றல்கள்! இந்த இலட்சணத்தில் நீங்கள் யார் எழுதலாம் எழுதக் கூடாது என்று கூட அறிவுரை தருகிறீர்கள்!

கேள்வியின் நாயகனாக திசை மாறி மாறி ஓடிக் கொண்டிருக்காமல் முதல் பதில்கள் தரவுகள் தாருங்கள்! அதன் பிறகு அவர் என்ன யாருக்குச் செய்தார் என்று நீங்களே தேடிப் படிக்கப் பழகுவீர்கள்!

சரி இப்ப தானே புலிகள் இல்லை ,10 வருடமாகின்றது ஏன் நீங்கள் கூறும் அமெரிக்காவோ மற்றும் புண்ணாக்குகளோ தீர்வினை தர முன் வரவில்லை .... வீண் வம்புக்கு கருத்திடாமல் இதன் பின் உள்ள உண்மையை உணர வேண்டும் ....

துரோகிகளுக்கு தண்டனை கொடுப்பதட்கு போட்டோவும் வீடியோவும் எடுக்க  இவர் என்ன தியாகியா ....
நீங்கள் உங்கள் எஜமானரை தழுவவும் ..... 

 

Edited by பிரபாதாசன்

  • கருத்துக்கள உறவுகள்

15cp%20mythology_GUC4LHNAG.1+15cp_Mythol

புலவர்களுக்குள் சர்சை இருக்கலாம் .. ஆனால் சண்டையாக மாறிவிட கூடாது சாந்தமாக உரையாடுங்கள் .. 🤔

               -- தமிழக உறவு --

  • கருத்துக்கள உறவுகள்

இப்பவே பாதி உரிமை பறிபோயிட்டுது. யாழ் வீதிகளில்.. அராபிய உடையில் ஒரு கூட்டம். காவி உடையில் இன்னொரு கூட்டம். முப்படைகளின் உடையில் இன்னொரு கூட்டம்.. நயினாதீவை.. நாகதீபவாக்கி.. அதுக்கு ஒரு கூட்டமுன்னும்... எல்லா நுழைவாயில்களிலும்.. புத்தர் உட்காட்ந்திருக்கிறார். அவர் தான் இப்ப வடக்குக் கிழக்கில்.. தமிழ் மக்களை வரவேற்கிறார். வேடிக்கை என்னவென்றால்.. தெற்கு.. மேற்கு.. மத்தியில்.. புத்தரை காண்பது அரிதாக இருக்குது. அப்படி இருந்தாலும்.. இந்துத் தெய்வங்களும் கூட வைச்சிருக்கினம். ஆனால்.. வடக்குக் கிழக்கில் மட்டும் தான் அவர் தனிப்புத்தரா நிற்கிறார்.

சாதாரண சிங்கள மக்கள்.. இந்து தெய்வங்களையும் புத்தரோடு வணங்குவதை எப்பவுமே காண முடிகிறது.

ஆனால்.. பேரினவாத அரசியல் வியாதிகள்.. கடும்போக்கு பெளத்த பிக்குகள் தான்.. முப்படை கூலிகளை வைச்சுக் கொண்டு.. புத்தர் பாசிசம் வளர்க்கிறார்கள். அதை விட மோசமாக உள்ளது இஸ்லாமிய அடிப்படைவாதம். 😂

Edited by nedukkalapoovan

  • 3 weeks later...
On 1/31/2019 at 9:25 AM, பிரபாதாசன் said:

கருத்துக்களை பார்க்கும் போது புரிகின்றது பின்னணி , இவர்களை ஒதுக்கிவிட்டு எங்கள் இலக்கை நோக்கி போவதே மேல் . சுமந்திரன் ,சயந்தன், ஆனோல்ட் .....இப்படியான பொறுக்கிகள் எல்லாம் மேதாவிகள்.....
அடுத்த தேர்தலில் ஊர் பக்கம் வரட்டும் .......

நாங்கள் எல்லாம் பல பொறுக்கிகளை பாத்திட்டம் 

ஆனால் இவர்கள் கைகளில் ரத்தம் இல்லை 

பி கு 

தமிழ் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களை பொறுக்கிகள் என்று அழைக்கும் பொறுக்கிகளை யாழ் நிர்வாகத்திடம் விட்டுவிட்டு  விலகுகின்றேன்.

 

Edited by ஜீவன் சிவா

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.