Jump to content

வடக்கு மாகாண சபைக்கு மத்திய அரசு ஒதுக்கிய நிதி எவ்வளவு தெரியுமா?


Recommended Posts

money.jpg

வடக்கு மாகாண சபையின் முதலாவது ஆட்சிக்காலத்தில் மத்திய அரசால் சுமார் 17 ஆயிரத்து 256 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

தகவல் அறியும் உரிமை சட்டத்தின் ஊடாக வடக்கு மாகாண திறைசேரியிடம் இருந்து இந்தத் தகவல் பெறப்பட்டுள்ளது.

2013 ஆம் ஆண்டு மத்திய அமைச்சிடமிருந்து கிடைக்கப்பெற்ற கட்டுநிதியூடாக,

  1. அபிவிருத்திக்கு 618 மில்லியன் ரூபாய்,
  2. பிரமாண கொடைக்காக 195 மில்லியன் ரூபாய்,
  3. பாடசாலைக் கல்வியை ஒரு அறிவு மையமாக பரிணாமம் பெறச் செய்யும் செயற்திட்டத்திற்காக 310 மில்லியன் ரூபாயும்,
  4. யுனிசெப் திட்டத்தில் 188.05 மில்லியன் ரூபாயும்,
  5. 1000 பாடசாலை செயற்திட்டத்திற்காக 28 மில்லியன் ரூபாயும் ஒதுக்கீடு செய்யப்பட்டது.

 

2014 ஆம் ஆண்டு மத்திய அமைச்சிடமிருந்து கிடைக்கப்பெற்ற கட்டுநிதியூடாக,

  1. அபிவிருத்திக்கு 908 மில்லியன் ரூபா,
  2. பிரமாண கொடைக்காக 1280 மில்லியன் ரூபாய்,
  3. பாடசாலைக் கல்வியை ஒரு அறிவு மையமாக பரிணாமம் பெறச் செய்யும் செயற்திட்டத்திற்காக 286.47 மில்லியன் ரூபாயும்,
  4. சுகாதாரத்துறை அபிவிருத்திக்கு 180 மில்லியன் ரூபாயும்,
  5. யுனிசெப் 50.98 மில்லியன் ரூபாயும்,
  6. 1000 பாடசாலை செயற்திட்டத்திற்காக 35 மில்லியன் ரூபாயும் ஒதுக்கீடு செய்யப்பட்டது.

 

2015 ஆம் ஆண்டு மத்திய அமைச்சிடமிருந்து கிடைக்கப்பெற்ற கட்டுநிதியூடாக,

  1. அபிவிருத்திக்கு 1440 மில்லியன் ரூபா,
  2. பிரமாண கொடைக்காக 400 மில்லியன் ரூபாயும்,
  3. பாடசாலைக் கல்வியை ஒரு அறிவு மையமாக பரிணாமம் பெறச் செய்யும் செயற்திட்டத்திற்காக 335.61 மில்லியன் ரூபாயும்,
  4. சுகாதாரத்துறை அபிவிருத்திக்கு 355 மில்லியன் ரூபாயும்
  5. யுனிசெப் 16.43 மில்லியன் ரூபாயும் ஒதுக்கீடு செய்யப்பட்டது.

 

2016 ஆம் ஆண்டு மத்திய அமைச்சிடமிருந்து கிடைக்கப்பெற்ற கட்டுநிதியூடாக,

  1. அபிவிருத்திக்கு 1800 மில்லியன் ரூபாயும்,
  2. பிரமாண கொடைக்காக 437 மில்லியன் ரூபாயும்,
  3. பாடசாலைக் கல்வியை ஒரு அறிவு மையமாக பரிணாமம் பெறச் செய்யும் செயற்திட்டத்திற்காக 289 மில்லியன் ரூபாயும்,
  4. சுகாதாரத்துறை அபிவிருத்திக்கு 365 மில்லியன் ரூபாயும்,
  5. யுனிசெப் 7.81 மில்லியன் ரூபாயும்,
  6. சிறந்த பாடசாலை 685.35 மில்லியன் ரூபாயும் ஒதுக்கீடு செய்யப்பட்டது.

 

2017 ஆம் ஆண்டு மத்திய அமைச்சிடமிருந்து கிடைக்கப்பெற்ற கட்டுநிதியூடாக,

  1. அபிவிருத்திக்கு 3620.50 மில்லியன் ரூபாயும்,
  2. பிரமாண கொடைக்காக 605.70 மில்லியன் ரூபாயும்,
  3. பாடசாலைக் கல்வியை ஒரு அறிவு மையமாக பரிணாமம் பெறச் செய்யும் செயற்திட்டத்திற்காக 252 மில்லியன் ரூபாயும்,
  4. சுகாதாரத்துறை அபிவிருத்திக்கு 360 மில்லியன் ரூபாயும்,
  5. யுனிசெப் 7.81 மில்லியன் ரூபாயும்,
  6. அருகிலுள்ள சிறந்த பாடசாலை ஆயிரத்து 153 மில்லியன் ரூபாயும் ஒதுக்கீடு செய்யப்பட்டது.

 

2018 ஆம் ஆண்டு மத்திய அமைச்சிடமிருந்து கிடைக்கப்பெற்ற கட்டுநிதியூடாக,

  1. அபிவிருத்திக்கு 1300.00 மில்லியன் ரூபாயும்,
  2. பிரமாண கொடைக்காக 350 மில்லியன் ரூபாயும்,
  3. பாடசாலைக் கல்வியை ஒரு அறிவு மையமாக பரிணாமம் பெறச் செய்யும் செயற்திட்டத்திற்காக 79 மில்லியன் ரூபாயும்,
  4. சுகாதாரத்துறை அபிவிருத்திக்கு 324.80 மில்லியன் ரூபாயும் ஒதுக்கீடு செய்யப்பட்டது.

இவ்வாறு 17 ஆயிரத்து 256. 15 மில்லியன் ரூபாய் வடக்கு மாகாணத்தின் கடந்த ஜந்தாண்டு கால அபிவிருத்திக்காக மத்திய அரசால் ஒதுக்கீடு செய்யப்பட்டது.

இத் தகவல்கள் யாவும் 2018ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 15ஆம் திகதி வடக்கு மாகாண பிரதம செயலாளர் அலுவலகம் ஊடாக மாகாண திறைசேரி தகவல் அலுவலரிடமிருந்து தகவலறியும் உரிமை சட்டம் ஊடாகப் பெற்றுக்கொள்ளப்பட்ட தகவல்கள் ஆகும்.

இதேவேளை, மத்திய அரசால் ஒதுக்கீடு செய்யப்பட்டு தருவதாக அறிவிக்கப்பட்ட நிதியில் பெரும் பகுதி நிதி வழங்கப்படுவதில்லை என்று வடக்கு மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சர் நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன் பல சந்தர்ப்பங்களில் சுட்டிக்காட்டியிருந்தார்.

அத்துடன், ஒதுக்கீடு செய்யப்படும் நிதி முழுமையாக செலவிடப்படுவதில்லை என்று மாகாண முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் சி.தவராசா குற்றஞ்சாட்டியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

http://athavannews.com/வடக்கு-மாகாண-சபைக்கு-மத்/

Link to comment
Share on other sites

இவ்வளவு பணத்தை பெற்றும் ஒன்றும் செய்யாமல் வெற்று அறிக்கைகளை விட்டதும், ஒன்றுக்கும் உதவாத நூற்றுக்கணக்கான பிரேரணைகளை நிறைவேற்றியதும், மாகாணசபை உறுப்பினர்களுடன் நீதிமன்றத்தில் மல்லுக்கட்டியதும் தான் வடக்கு மாகாணசபையினதும் விக்கி ஐயாவினதும் சாதனை.

கொடுத்த நிதியில் ஒரு பகுதிஅயை திருப்பி அனுப்ப வேண்டி வந்தது ஒன்றே போதும் விக்கி ஐயாவின் செயற்திறன் அற்ற திறமைக்கு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நிதி ஒதுக்கப்பட்டாலும்.. திட்டங்கள் ஆளுநரால்.. மத்திய அரசால்... ஒப்புக்கொள்ளப்படாமல் திரும்பிய நிதி தான் அதிகம். இது விக்கி ஐயாவின் செயற்திறனின்மையை காட்டவில்லை.. மாகாண சபைகள் என்பது உப்புச்சப்பற்றவை என்பதை மீண்டும் காட்டி நிற்கின்றன.

அதுபோக..யாழில்... தீவகத்தில்... சதுப்பு நிலத்தில் வீட்டுத்திட்டம் அமைப்பு.. கடலுக்குள் தாவரம் வளர்ப்பு.. கடலை மறித்து இராணுவத்துக்கு தடாகம் அமைப்பு.. என்று டக்கி அங்கிள் எவ்வளத்தை அநாவசியமாகச் செலவு செய்தும் சுருட்டியும் உள்ளார் என்பதை அங்கு போய் பார்த்தால் தெரியும்.

தெருக்கள்.. கூட.. மகிந்தர் கட்சிக்கு அல்லது அவரின் கூட்டாளிக்கட்சிகளுக்கு ஆதரவான இடங்களில் திருத்தப்பட்டும்.. மற்றவை பராமரிப்பற்றும் இருக்கக் காணலாம். இதில் மாகாண அரசு தலையிடவே முடியாது.

பண்ணை கடலில் அமைக்கப்பட்ட சுற்றுலா மையம்.. சிதைந்து போய் கிடக்கிறது. படகுகள்.. கடலுக்குள் செயற்பாடற்று.. உக்குகிறது.

எந்தத் திட்டமும்.. நீண்ட கால தேவைகள்.. பராமரிப்புக்கள் குறித்த அக்கறையற்று.. குறும் அரசியல்.. நோக்கோடும்.. காசு கொள்ளை அடிக்கும் நோக்கடுமே செய்யப்படுகிறது.

வீடமைப்பு திட்டத்துக்கு வீட்டுக்கு 7 இலச்சம் ஒதுக்கப்பட்டும்.. 3.5 இலட்சத்தில் அரைகுறை வீடுகளை கட்டி மக்களிடம் கையளித்துவிட்டு.. மிகுதி 50% ஐ அரசியல்வாதிகளும் அலுவர்களுக்கும் பொக்கட்டுக்குள் போட்டுக்கொண்டது தான் நடந்திருக்கிறது.

இப்படி.. சொறீலங்கா எங்கனும்.. ஊழலும்.. சுருட்டலும்.. அரசியல் செல்வாக்கும்.. சட்ட ஒழுங்கின்மைகளும் தலைவிரித்தாடுகிறது. இதில் விக்கி ஐயா வின் பக்களிப்பு என்பது 1% கூட அமையாது. ஆனால்.. குற்றச்சாட்டுக்கள் எல்லாம் விக்கி ஐயாவை நோக்கி பாய்வது தான் வேடிக்கை.  🙄

Link to comment
Share on other sites

1 minute ago, nedukkalapoovan said:

நிதி ஒதுக்கப்பட்டாலும்.. திட்டங்கள் ஆளுநரால்.. மத்திய அரசால்... ஒப்புக்கொள்ளப்படாமல் திரும்பிய நிதி தான் அதிகம். இது விக்கி ஐயாவின் செயற்திறனின்மையை காட்டவில்லை.. மாகாண சபைகள் என்பது உப்புச்சப்பற்றவை என்பதை மீண்டும் காட்டி நிற்கின்றன.

அதுபோக..யாழில்... தீவகத்தில்... சதுப்பு நிலத்தில் வீட்டுத்திட்டம் அமைப்பு.. கடலுக்குள் தாவரம் வளர்ப்பு.. கடலை மறித்து இராணுவத்துக்கு தடாகம் அமைப்பு.. என்று டக்கி அங்கிள் எவ்வளத்தை அநாவசியமாகச் செலவு செய்தும் சுருட்டியும் உள்ளார் என்பதை அங்கு போய் பார்த்தால் தெரியும்.

தெருக்கள்.. கூட.. மகிந்தர் கட்சிக்கு அல்லது அவரின் கூட்டாளிக்கட்சிகளுக்கு ஆதரவான இடங்களில் திருத்தப்பட்டும்.. மற்றவை பராமரிப்பற்றும் இருக்கக் காணலாம். இதில் மாகாண அரசு தலையிடவே முடியாது.

பண்ணை கடலில் அமைக்கப்பட்ட சுற்றுலா மையம்.. சிதைந்து போய் கிடக்கிறது. படகுகள்.. கடலுக்குள் செயற்பாடற்று.. உக்குகிறது.

எந்தத் திட்டமும்.. நீண்ட கால தேவைகள்.. பராமரிப்புக்கள் குறித்த அக்கறையற்று.. குறும் அரசியல்.. நோக்கோடும்.. காசு கொள்ளை அடிக்கும் நோக்கோருமே செய்யப்படுகிறது.

வீடமைப்பு திட்டத்துக்கு வீட்டுக்கு 7 இலச்சம் ஒதுக்கப்பட்டும்.. 3.5 இலட்சத்தில் அரைகுறை வீடுகளை கட்டி மக்களிடம் கையளித்துவிட்டு.. மிகுதி 50% ஐ அரசியல்வாதிகளும் அலுவர்களுக்கும் பொக்கட்டுக்குள் போட்டுக்கொண்டது தான் நடந்திருக்கிறது.

இப்படி.. சொறீலங்கா எங்கனும்.. ஊழலும்.. சுருட்டலும்.. அரசியல் செல்வாக்கும்.. சட்ட ஒழுங்கின்மைகளும் தலைவிரித்தாடுகிறது. இதில் விக்கி ஐயா வின் பக்களிப்பு என்பது 1% கூட அமையாது. ஆனால்.. குற்றச்சாட்டுக்கள் எல்லாம் விக்கி ஐயாவை நோக்கி பாய்வது தான் வேடிக்கை.  🙄

அப்ப எப்படி கிழக்கு மாகாணசபையால் பல நல்ல திட்டங்களையும் தன் அதிகாரத்துக்கு உட்பட்ட ரீதியில் அபிவிருத்திகளையும் செய்ய முடிந்தது?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, நிழலி said:

அப்ப எப்படி கிழக்கு மாகாணசபையால் பல நல்ல திட்டங்களையும் தன் அதிகாரத்துக்கு உட்பட்ட ரீதியில் அபிவிருத்திகளையும் செய்ய முடிந்தது?

கிழக்கில் தமிழர் பகுதிகளில் நடந்த அபிவிருத்தி அல்லது நல்ல திட்டங்கள் என்ன..??!

கிழக்கு சவுதி பணத்தில்.. திட்டமிட்ட.. இஸ்லாமிய மயமாக்களின் கீழ் தான் திட்டங்கள் அமுலாக்க காண முடிகிறது.

கிழக்கில்.. சேலையும்.. தலையில்.. ஒரு துண்டும் போட்டுத் திரிந்த இஸ்லாமியப் பெண்கள் எல்லாம்.. இப்போ கண் மட்டும் தெரியும் அளவுக்கு உடுப்புகளோடு.. இப்படி பல திட்டங்கள் இஸ்லாமிய கடும் சட்டங்கள் அமுலாகி இருப்பதோடு சவுதி மற்றும் சில முஸ்லீம் நாடுகளின் உதவியுடன்.. நிதிக் கடன் திட்டங்களும் அமுலாக்கப்பட்டு வருகின்றன.

இருந்தும்.. இவை எல்லா முஸ்லீம் மாவட்டங்களையும் அடைவதில்லை. தமிழர் பிராந்தியத்தை அண்டிய இஸ்லாமிய ஆக்கிரமிப்பை நோக்கோடு கொண்டு அமையும் திட்டங்களே பல.🙄

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Quote

அப்ப எப்படி கிழக்கு மாகாணசபையால் பல நல்ல திட்டங்களையும் தன் அதிகாரத்துக்கு உட்பட்ட ரீதியில் அபிவிருத்திகளையும் செய்ய முடிந்தது?

சந்திரகாந்தன் மகிந்தவின் ஆசியோடு செயற்பட்டதை சுலபமாக மறக்கின்றீர்களே!

Quote

கொடுத்த நிதியில் ஒரு பகுதிஅயை திருப்பி அனுப்ப வேண்டி வந்தது ஒன்றே போதும் விக்கி ஐயாவின் செயற்திறன் அற்ற திறமைக்கு.

மேலே எங்கும் வந்த நிதி திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படவில்லையே.

Link to comment
Share on other sites

2 minutes ago, nedukkalapoovan said:

கிழக்கில் தமிழர் பகுதிகளில் நடந்த அபிவிருத்தி அல்லது நல்ல திட்டங்கள் என்ன..??!

கிழக்கு சவுதி பணத்தில்.. திட்டமிட்ட.. இஸ்லாமிய மயமாக்களின் கீழ் தான் திட்டங்கள் அமுலாக்க காண முடிகிறது.

கிழக்கில்.. சேலையும்.. தலையில்.. ஒரு துண்டும் போட்டுத் திரிந்த இஸ்லாமியப் பெண்கள் எல்லாம்.. இப்போ கண் மட்டும் தெரியும் அளவுக்கு உடுப்புகளோடு.. இப்படி பல திட்டங்கள் இஸ்லாமிய கடும் சட்டங்கள் அமுலாகி இருப்பதோடு சவுதி மற்றும் சில முஸ்லீம் நாடுகளின் உதவியுடன்.. நிதிக் கடன் திட்டங்களும் அமுலாக்கப்பட்டு வருகின்றன.

இருந்தும்.. இவை எல்லா முஸ்லீம் மாவட்டங்களையும் அடைவதில்லை. தமிழர் பிராந்தியத்தை அண்டிய இஸ்லாமிய ஆக்கிரமிப்பை நோக்கோடு கொண்டு அமையும் திட்டங்களே அமையும்.🙄

ஆகவே மத்திய அரசின் ஒத்துழைப்புடன் மட்டுமல்லாமல் அவர்களின் தயவு இன்றி கூட கிழக்கு மாகாணசபையால் வெற்றிகரமாக இஸ்லாமியமயப் படுத்தக் கூடியதாக இருந்திருக்கு. அவர்களின் நோக்கில் அவர்கள் வெற்றி பெற்று இருக்கின்றார்கள் என்று தானே அர்த்தம். ஆனால் வடக்கு மாகாணசபை?

1 minute ago, ஏராளன் said:

சந்திரகாந்தன் மகிந்தவின் ஆசியோடு செயற்பட்டதை சுலபமாக மறக்கின்றீர்களே!

புரியவில்லை. சந்திரகாந்தன் பிள்ளையான் மகிந்தவின் துணையுடன் கிழக்கை அபிவிருத்தி செய்தார் என்று சொல்கின்றீர்களா? (இதே போன்ற ஒரு கருத்தை ரதியும் இன்னொரு திரியில் வைத்து இருந்தார்)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, நிழலி said:

ஆகவே மத்திய அரசின் ஒத்துழைப்புடன் மட்டுமல்லாமல் அவர்களின் தயவு இன்றி கூட கிழக்கு மாகாணசபையால் வெற்றிகரமாக இஸ்லாமியமயப் படுத்தக் கூடியதாக இருந்திருக்கு. அவர்களின் நோக்கில் அவர்கள் வெற்றி பெற்று இருக்கின்றார்கள் என்று தானே அர்த்தம். ஆனால் வடக்கு மாகாணசபை?

கிழக்கை இஸ்லாமிய மயப்படுத்தி.... இயன்ற வரை சிங்கள மயப்படுத்தி தமிழர்களின் தாயகக் கோட்பாட்டை சிதைக்கனும் என்ற வகையில்.. அங்கு சிங்கள அரசும்.. இஸ்லாமிய அடிப்படைவாதிகளும் கூட்டிணைந்து செயற்படுவது.. ஹிஸ்புல்லா.. ஆளுநராக நியமிக்கப்பட்ட வகையில் இருந்து மிகவும் எளிதாக அறிந்து கொள்ளலாம். ஆனால்.. உண்மையில் நிலை இவை எல்லாம் அங்கு நன்கு திட்டமிட்டு சிக்கல் தன்மைகளோடு.. நடைமுறையாகிறது.

அதேவேளை.. வடக்கில்.. தமிழர்களின் ஆட்சி அமைந்தாலும்.. அது தீர்க்கமாக இருக்கக் கூடாது என்பதிலும் இதே சக்திகள் இருக்கும் போது. வடக்கிலோ.. கிழக்கிலோ தமிழர் தரப்பால்.. எதை உருப்படியாக செய்ய முடியும்... செய்ய நினைத்தாலும்..??! 🙄

Link to comment
Share on other sites

சரி, அப்படி என்றால் வடக்கை அபிவிருத்தி செய்வதற்கு என்ன வழிகள் இருக்கு என நினைக்கின்றீர்கள்? அவ் வழிகளில் ஏன் விக்கி ஐயா தொடக்கம் எவரும் முயற்சிக்கவில்லை?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முயற்சிக்கவில்லை என்பது தவறு. முயற்சித்தார்கள் தடைகள் போடப்பட்டு.. முடக்கப்பட்டார் என்பதே யதார்த்தம். இதனை முன்னாள் ஆளுநர் குரோ இதய சுத்தி உள்ளவராக இருந்தார்.. பகிரங்கமாக ஒப்புக் கொள்ளலாம்.

குரோ செய்த செயல்கள்.... வாள் வெட்டுக்கும்பலை இராணுவத்தின் தயவோடு உருவாக்கி.. விசேட அதிரடிப்படையை யாழ் கோட்டைக்கு அருகில் முகாமிட வைத்தது தான்.

இப்படி ஆளுநரிடம் அதிகாரங்கள் பொதிந்த நிலையில்.. மாகாண சபை என்பது.. ஒரு உப்புச்சப்பற்றது.

சர்வதேச நிதிகளில் அமைந்த திட்டங்களில் கூட காசு சுருட்டல் நிகழ்ந்துள்ளதே தவிர திட்டங்கள் முறையாக அமுலாகாத நிலையில்..

பல சர்வதேச நிதிகளும்.. நாடுகளும் திட்டங்களில் இருந்து பின்வாங்கி உள்ளன.

நோர்வே கூட கொண்டு வர இருந்த சில திட்டங்களுக்கு மகிந்த கொம்பனி.. 10% தொடக்கம்.. 20% கையூட்டு கேட்ட நிலையில்.. நோர்வே பின்வாங்கிச் சென்றிருக்கிறது.

இப்படிப் பல. இந்த நிலையில் விக்கி ஐயா.. தமிழருக்கு என்ன செய்ய முடியுமோ.. அதை தன்னால் இயன்ற வரை செய்ய முற்பட்டிருக்கிறார் என்பது தான் யதார்த்தம். ஆனால்.. அவரால்.. எதையும் பூரணமாகச் செய்ய முடியவில்லை. அதற்கு இடமளிக்கப்படவில்லை. 🙄

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரின் கடந்த ஆண்டுக்கான நிதி ஒதுக்கீட்டில் எங்கள் ஊரின் வீதி ஜனவரி மாதம் முடிய முன்னர் புனரமைக்கப்பட்டது, மத்திய அரசு நிதியை உடனுக்குடன் வழங்க தாமதமானதாலேயே.
இது போலவே முதலமைச்சரின் காலத்திலும் ஆண்டுக்கான குறித்தொதுக்கப்பட்ட நிதியின் மீதியை வருட இறுதியில்  வழங்கிவிட்டு செலவு செய்யவில்லை( உண்மையில் வருட இறுதியில் அவசரமாக செலவளிக்கப்பட்டது)
என்று மத்திய அரசும் அதனோடு ஒத்தோடுபவர்களும் வாதித்தனர், ஆனால் விக்கி ஐயா வந்த நிதி எதுவும் செலவளிக்கப்படாமல் திருப்பி அனுப்பப்படவில்லை என பல தடவை அறிவித்துள்ளார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, நிழலி said:

ஆகவே மத்திய அரசின் ஒத்துழைப்புடன் மட்டுமல்லாமல் அவர்களின் தயவு இன்றி கூட கிழக்கு மாகாணசபையால் வெற்றிகரமாக இஸ்லாமியமயப் படுத்தக் கூடியதாக இருந்திருக்கு. அவர்களின் நோக்கில் அவர்கள் வெற்றி பெற்று இருக்கின்றார்கள் என்று தானே அர்த்தம். ஆனால் வடக்கு மாகாணசபை?

புரியவில்லை. சந்திரகாந்தன் பிள்ளையான் மகிந்தவின் துணையுடன் கிழக்கை அபிவிருத்தி செய்தார் என்று சொல்கின்றீர்களா? (இதே போன்ற ஒரு கருத்தை ரதியும் இன்னொரு திரியில் வைத்து இருந்தார்)

ரதி எங்கே சொன்னார்?... பிள்ளையான் திரும்பவும் முதலமைச்சராய் வரக் கூடாது என்பதற்காகத் தான் தூக்கி உள்ளே  வைத்து இருக்கிறார்கள்...வந்தால் தமிழர்களுக்கு நல்லது செய்து போடுவார்...இங்கே யாழில் எழுதுபவர்களுக்கு கிழக்கில் தமிழ் சனம் எப்படிப் போனாலும் பரவாயில்லை அவர்கள்[பிள்ளையான்] உள்ளே இருந்தால் சரி.

வெட்கமில்லாமல் இங்கே சிலர்  சீவிக்கு சப்போட் பண்ணுவதை பார்த்தால் அவரே அனந்த கண்ணீர் வடிப்பார் 
  

Link to comment
Share on other sites

விக்னேஸ்வரன் அவர்களின் தலைமையிலான தமிழ் தேசிய கூட்டமைப்பின் வட மாகாணசபை செய்திருக்கக் கூடிய பலவற்றை செய்யவில்லை என்பதுவும், மக்கள் நலன்கள் தொடர்பாக வெளிப்படையாக தெரியாத பலவற்றையும் செய்துள்ளனர் என்பதையும் மறுக்க முடியாது.

வட மாகாணசபையின் பதவிக் காலத்தில், சுமந்திரன் - மாவை - ஸ்ரீதரன் - சரவணபவன் - சிவஞானம் போன்றவர்கள் ரணிலுடன் - ஆளுநர்களுடன் - சேர்ந்து போட்ட முட்டுக்கட்டைகள் வட மாகாணசபையின் செயற்திறனை 40% க்கும் அதிகமாக குறைந்திருந்தது என்பதையும் மறுக்க முடியாது.

விக்னேஸ்வரன் அவர்களின் அரசியல் கையாளுதல் அனுபவமின்மையும், அவருடன் கூடவிருந்த குள்ளநரிகள் போன்றவர்களின் செயற்பாடுகளும் வட மாகாணசபையின் செயற்திறனை 10% க்கும் அதிகமாக குறைந்திருந்தது என்பதையும் மறுக்க முடியாது.

மாகாண சபையின் செயற்பாடுகளை முழுமையாக கட்டுப்படுத்தும் அதிகாரம் திட்டமிட்ட தமிழின அழிப்பை செய்துவரும் சிங்கள-பௌத்த பயங்கரவாத இயந்திரத்தின் கைகளில் இருப்பதையும் எவரும் மறுக்க முடியாது. இது தமிழின விரோத ஹிந்திய கயவர்களால் ஏற்படுத்தப்பட்ட பொறி!   

இதே இடத்தில் மாவை அல்லது சுமந்திரன் இருந்திருந்தால் விக்னேஸ்வரன் அவர்கள் சாதித்ததில் 40% ஜக் கூட செய்திருக்க மாட்டார்.

இதே இடத்தில் சம்மந்தன் இருந்திருந்தால் விக்னேஸ்வரன் அவர்கள் சாதித்ததில் 5% ஜக் கூட செய்திருக்க மாட்டார்.

வட மாகாணசபையின் பதவிக் காலத்தில், வேறுயாராலும் செய்திருக்க முடியாத ஒன்றை விக்னேஸ்வரன் அவர்கள் உறுதியாக செய்து முடித்திருந்தார். அது சிங்கள-பௌத்த அரசின் திட்டமிட்ட இனவழிப்புகளையும், ஆக்கிரமிப்புக்களையும் சட்டவலுவுள்ள ஆவணங்களாக தயாரித்து சர்வதேச பிரதிநிதிகள் பலரிடம் கையளித்துள்ளார்.

எனவே, இவற்றையும் மனதில் கொண்டு கருத்தெழுவது தமிழினத்தின் எதிர்காலத்துக்கு  உதவியாக இருக்கும்.

அதற்காக உண்மைகளை (விக்னேஸ்வரன் அவர்களால் செய்யமுடியாது போனவற்றை) மறைக்கத் தேவையில்லை. உண்மைகளை மறைப்பதுவும் நல்ல எதிர்காலத்துக்கு  உதவப் போவதில்லை.

தமது பலவீனங்களை விக்னேஸ்வரன் அவர்கள் தரப்பும் உணர்ந்து திருந்த வேண்டும்.

அதற்காவே இந்த தலைப்பை இங்கு இணைத்தேன்!

Link to comment
Share on other sites

7 hours ago, ரதி said:

 

வெட்கமில்லாமல் இங்கே சிலர்  சீவிக்கு சப்போட் பண்ணுவதை பார்த்தால் அவரே அனந்த கண்ணீர் வடிப்பார் 
  

இதுதான் உண்மை.

விக்கியாரின் அத்தியாயம் எப்போதோ முடிந்துவிட்டது.

இனி தலை காட்ட முடியாது.

Link to comment
Share on other sites

2 hours ago, போல் said:

 

விக்னேஸ்வரன் அவர்களின் அரசியல் கையாளுதல் அனுபவமின்மையும், அவருடன் கூடவிருந்த குள்ளநரிகள் போன்றவர்களின் செயற்பாடுகளும் வட மாகாணசபையின் செயற்திறனை 10% க்கும் அதிகமாக குறைந்திருந்தது என்பதையும் மறுக்க முடியாது.

தமது பலவீனங்களை விக்னேஸ்வரன் அவர்கள் தரப்பும் உணர்ந்து திருந்த வேண்டும்.

 



உண்மைதான்.

விக்கியார் அரசியலில் கத்துக்  குட்டி.

நீதிவானாக நீதிமன்றங்களிலும் பஞ்சாயத்து தீர்ப்புகளை, எப்படித்தான் வழங்கி இருப்பாரோ, யாமறியோம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த தரவுகள்  ஏற்றப்படுத்த முனையும் தோற்றதின் நிதர்சனமும், உண்மையான நிலவரத்தின் நிதர்சனத்தையும் சொல்லாடல்களையும், வரிக்கிளுக்கிடையேயும் கூர்ந்து கிரகித்தால் உண்மை புலப்படும்.

செய்தியின் சாராம்சம், பெருமளவு நிதி வடமாகாணசபைக்கு ஒதுக்கப்பட்டாலும், விக்கியின் அரசியல் மற்றும் நிர்வாக அனுபவமின்மையே நிதி பயன்படுத்தப்படாமல் போனததற்கான காரணம். ஓர்தரவுகளின் படி  சனநாயக அமைப்பிடற்கு வழங்கப்பட்டாலும், செலவு செய்யப்படாமையின்  குறையை, குற்றத்தை ஓர் தனி நபரின் மீது சுமத்துவது.

விக்கி மீது வெளிப்படையான விமர்சனம் இல்லாவிட்டாலும், அவர் மீதான குறை தொக்காக  தொனிக்கிறது.

இங்கே அதை வரிக்கு வரி மேளம் அடித்து காட்டுபவர்களும் இருக்கிறார்கள், செய்தியை விட.

தரவுகளின் படி, நிதி ஒதுக்கப்பட்டது என்றே இருக்கிறது. நிதி ஒதுக்கம் என்பது ஓர் மெலெழுந்தவரியான திட்டமிடல். இதில் எந்த விதமான இறுதியான தீர்மானமோ, ஆகக்குறைந்தது வாக்குறுதியோ இல்லை.

ஒதுக்கப்பட்ட நிதி, அனுப்பப்பட்டதா (அதாவது திரை சேரியின் மத்திய வங்கி கணக்கில் இருந்து) என்பதாய் யாரவது உறுதி படுத்த முடியுமா?

அப்படி அது அனுப்பப்பட்டிருந்தால், அது ஆளுநரின் கட்டுப்பாட்டிலுள்ள வங்கி
கணக்கிற்கு வந்தடைந்திருக்கும்.  ஆனாலும், அந்த நிதி எப்போது வந்தடைந்தது என்பது தெரியாது. நிதியாண்டின் இறுதி வாரத்தில் வந்தாலும் வந்தடைந்தது என்பதே அர்த்தம், ஆனால் நடைமுறையில் ஒன்றுமே செய்யதிருக்கமுடியாது, ஆளுநரால் கூட.

அப்படி ஆளுநர் வங்கிகணக்கில் நிதி வந்தடைந்திருந்தால், வடமாகாணசபையின் பாதீடு மற்றும் சமர்ப்பிக்கப்பட்ட திட்டங்களுக்கான நிதி ஆளுநர் வங்கி கணக்கில் இருந்து, உரிய ஆவணங்களில் ஆளுநர் மற்றும் திறைசேரியின் ஒப்புதல் ஒப்பத்துடன், உரிய நேரத்தில்,வடமாகாண சபையின் வங்கி கணக்கிற்க்கு விடுவிக்கப்பட்டதா (funds released) ?

வடமாகாண சபையின் வங்கி கண்ணக்கு கூட, திறைசேரியால் முடக்க  அல்லது தடுக்க முடியும், அப்படி நிதி வடமாகாணசபை வங்கி கணக்கிற்கு விடுவிக்கப்பட்டாலும்.

இது public finance இல் உள்ள சாதாரண கட்டுப்பட்டு முனைகளும், அதிகார  மையங்களும்.

சொறி லங்கா, இதை விட அதிகார கட்டுப்பட்டு முனைகளை, வடமாகாண சபையை பொறுத்தவரை உருவாக் கியிருந்தால், அதில் ஒன்றும் வியப்பில்லை.

மேலே சொல்லியவற்றை மனதில் இருத்தி, தரவுகளை மீண்டும் வாசியுங்கள்.

உங்களுக்கே, செய்தியின் தரவுகள் ஏற்ப்படுத்த முனையும் தோற்றத்தின் விம்பம், யாரை தாக்குவதற்கு என்பது புரியும்.

மறுவளமாக, யாரையும் குறைக்கவோ அல்லது கூட்டுவதத்திற்கோ இதை நான் இங்கு எழுதவில்லை.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, நிழலி said:

இவ்வளவு பணத்தை பெற்றும் ஒன்றும் செய்யாமல் வெற்று அறிக்கைகளை விட்டதும், ஒன்றுக்கும் உதவாத நூற்றுக்கணக்கான பிரேரணைகளை நிறைவேற்றியதும், மாகாணசபை உறுப்பினர்களுடன் நீதிமன்றத்தில் மல்லுக்கட்டியதும் தான் வடக்கு மாகாணசபையினதும் விக்கி ஐயாவினதும் சாதனை.

 

20 hours ago, ஏராளன் said:

மேலே எங்கும் வந்த நிதி திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படவில்லையே.

செய்தியின் தரவுகள் ஏற்றப்படுத்த முனைந்த தோற்றத்தை நீங்களே ஏற்றுக்கொண்டு விட்டீர்கள், ஓர் மறு கேள்வியுமின்றி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விக்கி ஐயா வே சொல்லி இருக்கிறார் அபிவிருத்தி செய்ய நினைத்தால் தனது தனிபடபட்ட தொடர்புகள் முலம் செய்திருக்கலாம் ஆனால் அபிவிருத்திக்கு முன் தீர்வுதான் முக்கியம் என்று

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, சுவைப்பிரியன் said:

விக்கி ஐயா வே சொல்லி இருக்கிறார் அபிவிருத்தி செய்ய நினைத்தால் தனது தனிபடபட்ட தொடர்புகள் முலம் செய்திருக்கலாம்

அர்த்தம் உங்களுக்கு புரியவில்லையா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, சுவைப்பிரியன் said:

விக்கி ஐயா வே சொல்லி இருக்கிறார் அபிவிருத்தி செய்ய நினைத்தால் தனது தனிபடபட்ட தொடர்புகள் முலம் செய்திருக்கலாம் ஆனால் அபிவிருத்திக்கு முன் தீர்வுதான் முக்கியம் என்று

தீர்வும் இல்லை,அபிவிருத்தியும் இல்லை.இப்படியே காலத்தை கடத்த வேண்டியது தான் 😧

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
29 minutes ago, ரதி said:

தீர்வும் இல்லை,அபிவிருத்தியும் இல்லை.இப்படியே காலத்தை கடத்த வேண்டியது தான் 😧

மட்டக்களப்பில் பிள்ளையானின் அபிவிருத்தி ( நீங்கள் கூறும்) எங்கே?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, சுவைப்பிரியன் said:

விக்கி ஐயா வே சொல்லி இருக்கிறார் அபிவிருத்தி செய்ய நினைத்தால் தனது தனிபடபட்ட தொடர்புகள் முலம் செய்திருக்கலாம் ஆனால் அபிவிருத்திக்கு முன் தீர்வுதான் முக்கியம் என்று

அவர் அதைச் செய்திருக்கலாம் என்பது தான் என் அபிப்பிராயம். மேலும், மாகாண சபையின் தற்போதைய குறைபாடுகள் நிவர்த்திக்கும் வரை அபிவிருத்தி இயலாது என்பதும் ஒரு நொண்டிச்சாட்டு எனக் கருதுகிறேன். ஆளுனரோடு ஆளுனரின் செயலாளரோடு (அவரோடும் மோதல் இருந்ததாக தகவல்?) working relationship ஆவது வைத்திருந்து பணியார்றியிருக்கலாம். கடஞ்சா சொல்வது போல ஒதுக்கியதும் வந்ததும் வெவ்வேறாக இருக்க இந்த உராய்வுள்ள உறவுகள் தான் காரணமோ தெரியாது.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இலங்கையரசாங்கம் முன்வைத்த தீர்வுத்திட்டத்தினை முற்றாக நிராகரித்து, நான்கு அம்சக் கோரிக்கையின் அடிப்படையிலான தீர்வினை கோரிய தமிழ்த் தரப்பு   நான்காம் நாள் பேச்சுக்கள் பெரும் குழப்பத்திற்குள் நுழைந்தன. ஜெயவர்த்தன இன்னொரு சதியைத் திட்டமிட்டு அரங்கேற்றினார். பொலீஸாரைக் கொண்டு அரங்கேற்றப்பட்ட இச்சதியில் கொழும்பில் குண்டுத்தாக்குதலில் ஈடுபட வந்திருந்த ஈரோஸ் அமைப்பின் உறுப்பினர்களைத் தாம் கைதுசெய்திருப்பதாக ஜெயார் தெரிவித்தார். ஜனாதிபதி மாளிகைக்கு அண்மையாக சுற்றித்திருந்த இரு இளைஞர்களைக் கைதுசெய்து விசாரித்தவேளை அவர்கள் ஜனாதிபதியைக் கொல்வதற்காக ஈரோஸ் தலைமைப் பீடத்தால் அனுப்பிவைக்கப்பட்டிருப்பதை ஒத்துக்கொண்டதாக பொலீஸார் அறிவித்தனர். ஜெயாரின் திட்டத்தின்படி, கொழும்பு ஊடகங்களும் இச்செய்தியை பெரும் எடுப்பில் வெளியிட்டிருந்தன. இதனைச் செய்தியாக்கும்போது டெயிலி நியுஸ் காரியாலயத்தில் இருந்த உற்சாககத்தினை நேரடியாக நாண் கண்டேன். மறுநாள் ஆசிரியர்த் தலையங்கம் "முறியடிக்கப்பட்ட ஜனாதிபதி மீதான படுகொலை முயற்சி" என்று வெளியாகியிருந்தது. தன்மீதான இந்தப் பழியை சோடிக்கப்பட்ட புரளி என்று ஈரோஸ் தலைமைப்பீடம் அறிவித்தது. பொதுத் தபாலகத்திற்குச் சென்றுகொண்டிருந்த இரு அப்பாவிகளைக் கைதுசெய்து, கடுமையான சித்திரவதைகளின் பின்னர் பொய்யான வாக்குமூலம் ஒன்றினை கொடுக்க வைத்தே பொலீஸார் இந்த நாடகத்தினை ஆடுகிறார்கள் என்று ஈரோஸ் அமைப்பு விளக்கியிருந்தது.  நான்காம் நாள் பேச்சுக்கள் ஆரம்பமாகிய வேளை, அரசாங்கத்தின் பொய்யான வதந்திகுறித்து ஈரோஸ் அமைப்பினரும் ஏனைய தமிழ்ப் பிரதிநிதிகளும் தமது ஆட்சேபணையைத் தெரிவித்தார்கள். "இது ஜெயாரின் புரளி" என்றும் அதனை அழைத்தார்கள். அன்றைய நாளின் பெரும்பகுதி யுத்தநிறுத்த மீறல்கள் குறித்து ஒருவரையொருவர் சாடுவதிலேயே கழிந்தது. யுத்தநிறுத்த மீறல்கள் குறித்த வாக்குவாதங்கள் முடிவடைந்த பின்னர் பேசிய ஹெக்டர் ஜெயவர்த்தன தான் முன்வைத்துள்ள யோசனைகளை அதிகாரப் பரவலாக்கத்திற்கான அடிப்படையாக வைத்து செயற்பட முடியும் என்று கூறினார். அதற்குப் பதிலளித்த தமிழ்த் தரப்பு, அதிகாரங்கள், அதிகாரப் பரவலாக்கத்திற்கான அலகு, அரசாங்கத்தின் கட்டமைப்பு என்பன குறித்த சிக்கல்கள் தீர்க்கப்பட வேண்டும் என்றும், தமிழர்கள் எதிர்பார்க்கும் அதிகாரங்களுக்கும், அரசால் முன்வைக்கப்படும் அதிகாரங்களுக்கும் இடையே பாரியளவு இடைவெளி காணப்படுவதாகவும் விமர்சித்தனர்.  பேச்சுக்கள் முறிவடைவதைத் தவிர்ப்பதற்காக இந்திய அரசாங்கம் தனது வெளிநாட்டமைச்சர் ரொமேஷ் பண்டாரியை திம்புவிற்கு அனுப்பியது. இரு தரப்பினருடனும் ரொமேஷ் பண்டாரி ஒன்றன் பின் ஒன்றாக பல சந்திப்புக்களை நடத்தினார்.தமிழர் தரப்புடன் பேசிய பண்டாரி, அரசாங்கம் முன்வைத்திருக்கும் தீர்வு ஆலோசனையினை நிராகரிப்பதாகவும், ஒன்றுபட்ட இலங்கைக்குள் தமிழர்களின் அபிலாஷைகளை தீர்க்கக்கூடிய புதியதொரு தீர்வுத்திட்டத்துடன் அரசு வரவேண்டும் என்கிற கோரிக்கையினையும் முன்வைத்து அறிக்கையொன்றினை வெளியிடுமாறு கேட்டுக்கொண்டார். இதன்மூலம் அன்று முறிவடைய‌ இருந்த பேச்சுக்களை அவரால் நீட்டிக்க முடிந்தது. பேச்சுவார்த்தையின் ஐந்தாம் நாளான ஆடி 12 ஆம் திகதி தமிழ்ப் பிரதிநிதிகள் ஒன்றிணைந்து அரசு முன்வைத்திருக்கும் தீர்வுக்கான ஆலோசனைகளை நிராகரிப்பதாக அறிக்கையொன்றினை வெளியிட்டனர். அறிக்கை வெளியிடப்பட முன்னர் தமிழ் மக்களைஅவமானப்படுத்தும் விதமாக இலங்கைஅயரசாங்கம் தனது தீர்வு யோசனையினை முன்வைத்திருப்பதாகவும் அவர்கள் குற்றஞ்சாட்டினர். அமிர்தலிங்கம் ஒருபடி மேலே சென்று, அரசு முன்வைத்திருக்கும் யோசனைகளை ஏற்றுக்கொள்ளமுடியாது என்று கூறினார்.  தமிழ்ப் பிரதிநிதிகள் சார்பாக டெலோ அமைப்பின் சார்ள்ஸ் அறிக்கையினை சமர்ப்பித்தார். தொடர்ச்சியாக ஆட்சிக்கு வந்த சிங்கள அரசாங்கங்களுக்கு தமிழரின் அபிலாஷைகள் குறித்த எமது கோரிக்கைகளை ஜனநாயக வழியில் புரியப்படுத்த முடியாமையினாலேயே நாம் ஆயுதம் தூக்கவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டோம். மேலும், எமது தேசியம் மீதான சிங்கள அரசுகளின் ஒடுக்குமுறையும், எம் மக்கள் மீது கட்டவிழ்த்துவிடப்பட்டிருக்கும் அரச பயங்கரவாதமும், எம் மக்கள் மீதான இனவழிப்பும் அடக்குமுறைக்குள்ளாக்கப்பட்டிருக்கும் எம் மக்களுக்கான தர்க்கரீதியான ஒரே தீர்வு தனிநாடுதான் என்கிற நிலைமைக்கு எம்மைக் கொண்டுவந்து விட்டிருக்கிறது. இதன் தர்க்கரீதியான வெளிப்பாடே ஆயுதப்போராட்டம் என்றால் அது மிகையில்லை. ஆனாலும், இலங்கையரசாங்கம் நியாயமான, ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்வொன்றினை முன்வைக்கும் பட்சத்தில் அமைதியான அத்தீர்வினை பரிசீலிக்க தமிழ் மக்கள் தயாராகவே இருக்கிறார்கள். ஏனென்றால், தமிழ் மக்கள் அமைதியினை விரும்பும் ஒரு மக்கள் கூட்டமாகும். சிறிலங்கா அரசாங்கத்தினால் முன்வைக்கப்பட்டிருக்கும் தீர்வு ஆலோசனைகள் எந்தவிதத்திலும் நேர்மையானதாகவோ, அமைதியை ஏற்படுத்தும் முகாந்திரங்களையோ கொண்டிருக்கவில்லை என்பதை எம்மால் உணர்ந்துகொள்ளமுடிகிறது. முதலாவதாக, சிறிலங்கா அரச பிரதிநிதிகள் குழுவின் தலைவர் தனது உரையில், இந்தத் தீர்வு ஆலோசனைகள் கடந்த வருடம் நடைபெற்ற சர்வகட்சி மாநாட்டில் இலங்கையரசாங்கத்தால் தீர்மானிக்கப்பட்ட ஆலோசனைகள் என்று திட்டவட்டமாகக் கூறிவிட்டார். ஆனால், பின்வரும் காரணங்களுக்காக சர்வகட்சி மாநாட்டினை நாம் முற்றாக நிராகரித்திருக்கிறோம், முதலாவதாக, சர்வகட்சி மாநாட்டில் பங்குகொண்ட தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி, சர்வகட்சி மாநாடு குழப்பகரமான நிலையில் முடிவிற்குக் கொண்டுவரப்பட்டவுடன் வெளியிட்ட அறிக்கையில் அதிகாரம் மிக்க பிராந்தியம் எனும் அடிப்படையில் தமிழ் மக்கள் ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்விற்கு அருகில்க் கூட சர்வக‌ட்சி மாநாட்டில் அரசால் முன்வைக்கப்பட்ட தீர்வு வரவில்லை என்பதைத் தெளிவாகக் கூறியிருந்தது. இரண்டாவதாக, ஒரு விடுதலைப் போராட்ட அமைப்பு என்கிற வகையில், நவ பாஸிஸ இலங்கையரசு, தமிழ் மக்களின் அபிலாஷைகளுக்கு இராணுவ ரீதியில் தீர்வினை வழங்கவே சர்வகட்சி மாநாட்டினை போர்வையாகப் பாவித்தது என்பதனை ஐயம் திரிபுற  நம்புகிறோம். மேலும், ஈழத்திற்கான தேசியப் பிரச்சினையினை இலங்கையரசாங்கம் இதுவரையில் புரிந்துகொள்ளவில்லை என்பதையே அது இங்கு முன்வைத்திருக்கும் தீர்வு சுட்டிக் காட்டுகிறது. அதற்கான காரணங்களை நாம் முன்வைக்கிறோம்,   1. அரசாங்கம் முன்வைத்திருக்கும் தீர்வில் தமிழ் மக்கள் ஒரு தேசமாக அங்கீகரிக்கப்படவில்லை. ஆனால், தமிழ் மக்களால் எவ்விதத்திலும் ஏற்றுக்கொள்ளப்பட முடியாத மாவட்ட ரீதியிலான அதிகாரப் பரவலாக்க அலகினை அரசு முன்வைத்திருக்கிறது. 2. அரசு முனைத்திருக்கும் தீர்வு, தமிழ் மக்களினதோ அல்லது சிங்கள மக்களினதோ சுயநிர்ணய உரிமையினை புறக்கணித்திருப்பதுடன், சர்வஜன வாக்கெடுப்பு ஒன்றின்மூலமாகவோ அல்லது அதையொத்த இன்னொரு வாக்கெடுப்பு ஒன்றின்மூலமாகவோ தீர்வினை மக்கள் முன் கொண்டுசெல்லும் வழிவகையினைக் கொண்டிருக்கவில்லை. மக்களின் விருப்பினை நிராகரித்திருக்கும் அரசாங்கம், பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையினைக் கொண்டு அரசியல் சட்டத்தில் திருத்தத்தினைச் செய்யலாம் என்று கூறுகிறது.இப்படிச் செய்வதனூடாக மக்கள் மீது அரசியல் யாப்பின் அடைப்படையில் உருவாக்கப்படவிருக்கும் சர்வாதிகாரத்தைத் திணிக்க முயல்கிறது.  ஆகவே, இந்த நிலையில் மேற்கொண்டு பேச்சுக்களில் ஈடுபடுவதில் பயனில்லை என்கிற நிலைப்பாட்டிற்கு நாம் வந்திருப்பதுடன், நாடு இன்றிருக்கும் இக்கட்டான நிலைக்குக் காரணமாகியிருக்கும் அரசாங்கமே தமிழ் மக்களால் ஏற்றுக்கொள்ளப்படக்கூடிய நேர்மையானதும், அவர்களின் அபிலாஷைகளைப் பூர்த்தி செய்யக்கூடியதுமான தீர்வினை முன்வைக்க வேண்டும் என்றும் கோருகிறோம்.    நிரந்தர சமாதானத்தினைக் கருத்தில்க் கொண்டு, தமிழ் மக்களால் பரிசீலித்துப் பார்க்கக் கூடிய தீர்வொன்றுடன் மீண்டும் இலங்கையரச பிரதிநிதிகள் குழு பேச்சுவார்த்தைகளுக்குத் திரும்பவேண்டும் என்கிற தீர்க்கமான கோரிக்கையினை நாம் முன்வைக்கிறோம். ஜனாதிபதி ஜெயாரைப் படுகொலை செய்ய எத்தனித்ததாக தம்மீது முன்வைக்கப்பட்ட அரசின் குற்றச்சட்டிற்கெதிரான தனது அதிருப்தியினை ஈரோஸ் அமைப்பு எழுத்துமூல அறிக்கையொன்றின் ஊடாக வெளியிட்டது. இந்தியாவின் ரொமேஷ் பண்டாரி பேச்சுவார்த்தைக்குழுக்களுக்கான விருந்துபசராம் ஒன்றினை வழங்கினார். பேச்சுவார்த்தையின் இறுதிநாளான ஆடி 13 ஆம் திகதி அரச தரப்புப் பிரதிநிதிகளுடன் பேசிய தமிழ்த் தரப்பு தமிழ் மக்களால் ஏற்றுக்கொள்ளக்கூடிய புதிய‌ தீர்வொன்றுடன் அடுத்த கட்டப் பேச்சுவார்த்தைக்கு வருமாறு அழைப்பு விடுத்ததுடன் தமிழ் மக்களால் ஏற்றுக்கொள்ளப்படக்கூடிய தீர்வு அமையவேண்டிய அடிப்படைகள் குறித்து தனது நிலைப்பாட்டினையும் முன்வைத்தது.   பேச்சுவார்த்தைக் குழுக்கள் இணைந்து வெளியிட்ட சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த திம்புப் பிரகடணம் இவ்வாறு அமைந்திருந்தது, தமிழ்த் தரப்பு முன்வைத்த பிரகடணம்,   தமிழ்த் தேசிய பிரச்சினைக்கான அரத்தபுஷ்ட்டியான தீர்வு பின்வரும் நான்கு அடிப்படை விடயங்களை உள்ளடக்கியதாக இருக்கவேண்டும் என்று நாம் கருதுகிறோம்,   1. இலங்கைத் தமிழர்களைத் தனியான தேசமாக அங்கீகரிப்பது 2. இலங்கையில் தமிழருக்கென்று தனியான தாயகம் இருப்பதை அடையாளம் காண்பதும் அதனை அங்கீகரிப்பதும் 3. தமிழ்த் தேசத்தின் சுயநிர்ணய உரிமையினை அங்கீகரிப்பது 4. இலங்கையில் வாழும் அனைத்துத் தமிழர்களினதும் குடியுரிமை மற்றும் அடிப்படை உரிமைகளை அங்கீகரிப்பது   பல்வேறு நாடுகள் தமக்கு உகந்த செயற்திட்டங்கள் ஊடாக இந்த அடிப்படைகள் ஏற்றுக்கொள்ளப்படுவதனை உறுதிப்படுத்தியிருக்கின்றன. தமிழ் மக்களுக்கான அடிப்படை உரிமைகள் நிராகரிக்கப்பட்டமையினாலேயே அதற்குத் தீர்வாக தனிநாட்டினை முன்வைத்துப் போராடி வருகிறோம். தமிழ் மக்களின் தேசியப் பிரச்சினைக்கான தீர்வாக இலங்கையரசாங்கம் முன்வைத்திருக்கும் தீர்வினை எம்மால் எக்காரணம் கொண்டும் ஏற்றுக்கொள்ள முடியாது என்பதை திட்டவட்டமாகக் கூறிக்கொள்கிறோம். ஆகவே, 1985 ஆம் ஆண்டு ஆடி மாதம் 12 ஆம் திகதி நாம் வெளியிட்ட அறிக்கையின்படி இலங்கையரசாங்கம் இங்கு முன்வைத்திருக்கும் தீர்வு யோசனைகளை நாம் முற்றாக நிராகரிக்கிறோம். ஆனாலும், அமைதிக்கான வழிகளைத் தேடும் மக்கள் கூட்டம் எனும் அடிப்படையில், நாம் மேலே குறிப்பிட்ட நான்கு அடிப்படை அம்சங்களை உள்ளடக்கிய புதிய தீர்வு யோசனைகளை இலங்கையரசாங்கம் முன்வைக்கும் பட்சத்தில் அவற்றைப் பரிசீலிர்த்துப் பார்க்கத் தயாராக இருப்பதையும் இங்கு கூறிக்கொள்கிறோம்.  
    • இந்த விடயத்தை நான் பலமுறை அவதானித்துள்ளேன்.  வயிற்றில் சமிபாட்டுப்(?) பிரச்சனை இருப்பதால் அவை அவ்வாறு செய்கின்றன என நான் நம்புகிறேன். 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.