Jump to content

மன்னாரில் மீட்கப்பட்ட மனித எச்சங்கள், சங்கிலியன் காலத்திற்கு உரியவை


Recommended Posts

5 hours ago, Justin said:

எல்லா நாடுகளும் தமிழரைக் கருவறுத்தல் எனும் ஒரே நோக்கத்திற்காகவே இயங்குகின்றன என்ற இறுதி முடிவுக்கு வரலாம்!

இன்னுமா முடிவுக்கு வரவில்லை....!! இந்த நாடுகளுக்கெல்லாம் தலைமை இந்தியாதான் என்பதுகூடத் தெரியவில்லையா....?? Bildergebnis für cat+eye+closed

Link to comment
Share on other sites

  • Replies 52
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

இது ஓர் வாட்ஸப் பகிர்வு.

 

மன்னார் மனித எலும்புக்கூடுகளை பீட்டா பெற்றுக்கொண்ட திகதி   25.01.2019. 
அறிக்கையிடப்பட்ட திகதி  21.02.2019.

“மன்னார் புதைகுழி தொடர்பான காபன் பரிசோதனை முடிவுகள் தமிழர் தரப்புக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தும்” என கவுரவ சுமந்திரன் எம்.பி அதிர்ச்சி வெளியிட்ட திகதி 02.02.2019.

இதிலிருந்து என்ன தெரிகிறது என்றால், கவுரவ சுமந்திரன். எம்.பி. முக்காலமும் உணரக்கூடியவர். முன்கூட்டியே ஆருடம் சொல்லக்கூடியவர். காலத்தை தன் கைவிரல்களால் கணிப்பிடக்கூடியவர்.

கவுரவ சுமந்திரன் ஐயா...நீவிர் தமிழர் குலத்துக்கு கிடைத்த சொத்து. மாதுஷிடமே சிக்காத முத்து.

Link to comment
Share on other sites

Quote

மன்னாரில் மீட்கப்பட்ட மனித எச்சங்கள், சங்கிலியன் காலத்திற்கு உரியவை

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, Paanch said:

இன்னுமா முடிவுக்கு வரவில்லை....!! இந்த நாடுகளுக்கெல்லாம் தலைமை இந்தியாதான் என்பதுகூடத் தெரியவில்லையா....?? Bildergebnis für cat+eye+closed

நீங்கள் சொல்வது சரிதான்! உலகின் 192 நாடுகள் அல்லது சுயாட்சிப் பிரதேசங்களின் தலைவர்கள் ஒவொருவரும்  துயிலெழும் போதே "இன்று ஈழத்தமிழர்களுக்கு எப்படி ஆப்பிறுக்கலாம்?" என்று யோசித்துக் கொண்டு தான் எழும்புவார்கள் என்று "மக்கள்" சொல்லக் கேட்டிருக்கிறேன்!

யூதர்களுக்குக் கூட இப்படி நடக்கவில்லை! நாம் எப்படி கவனத்தை ஈர்த்தோம் என்று நான் யோசிப்பதுண்டு! நாங்கள் நீராவியில் புட்டு அவிக்கும் ரெக்னொலொஜியை இரகசியமாக உருவாக்கியது தான் காரணமாக இருக்கும் என நினைக்கிறேன்! நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, தமிழ் சிறி said:

 

அந்த குழிகளுக்குள்..... பிஸ்கற் பெட்டியை சுத்தி வரும், பொலித்தீன்  பேப்பரும் இருந்தாக முன்பு செய்தியில்  வந்தது.

மண்டை ஓட்டில்... துப்பாக்கி சூட்டுடன், இருந்தது எல்லாம்... 500 வருடங்களுக்கு முன்பு நடந்திருக்குமா? 

சங்கிலியன் காலத்தில்...  துப்பாக்கி,  பொலித்தீன் எல்லாம்...  பாவனையில் இருந்ததை... சிங்களமும், அமெரிக்காவும் தான் தெளிவு படுத்த வேண்டும்.

அந்த எலும்புகளின் ஒரு இயல்பாகச் சொல்லப் பட்டது துப்பாக்கிக் காயங்கள் என்று அடையாளம் காணப் பட்ட காயங்கள் இல்லாமல் இருந்தது தான்! துப்பாக்கிக் காயங்கள் போல தெரியும் துளைகள் இலங்கையில் பணி செய்யும் எந்த மருத்துவராலும் அடையாளம் காணப்படக் கூடியவை. மேலும் வெற்று ரவைகளும் இருக்க வேண்டும். சுட்டு விட்டு பிணத்தை வெட்டி சன்னத்தை அகற்றி விட்டுப் புதைத்திருந்தால் வெற்றுச் சன்னம் கிடைக்காது. ஐனூறு வருடத்தில் மேலே மண் மாறியிருக்கும். எனவே எலும்பின் வயதை விட மண்ணின், கூட வந்த பொருட்களின் வயது குறைவாகத் தான் இருக்கும்.

இங்கே இந்தக் கண்டு பிடிப்புப் பற்றி சந்தேகம் கிளப்புவதில் நியாயம் இருக்கிறது. ஆனால் பொய்யான தகவல்களை உண்மை போலப் பரப்பாமலே சந்தேகங்களை வெளிப்படுத்தலாம் என்பதற்காக மட்டுமே இதைச் சொல்கிறேன். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, கிருபன் said:

இது ஓர் வாட்ஸப் பகிர்வு.

 

மன்னார் மனித எலும்புக்கூடுகளை பீட்டா பெற்றுக்கொண்ட திகதி   25.01.2019. 
அறிக்கையிடப்பட்ட திகதி  21.02.2019.

“மன்னார் புதைகுழி தொடர்பான காபன் பரிசோதனை முடிவுகள் தமிழர் தரப்புக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தும்” என கவுரவ சுமந்திரன் எம்.பி அதிர்ச்சி வெளியிட்ட திகதி 02.02.2019.

இதிலிருந்து என்ன தெரிகிறது என்றால், கவுரவ சுமந்திரன். எம்.பி. முக்காலமும் உணரக்கூடியவர். முன்கூட்டியே ஆருடம் சொல்லக்கூடியவர். காலத்தை தன் கைவிரல்களால் கணிப்பிடக்கூடியவர்.

கவுரவ சுமந்திரன் ஐயா...நீவிர் தமிழர் குலத்துக்கு கிடைத்த சொத்து. மாதுஷிடமே சிக்காத முத்து.

இதற்கு எளிமையான விளக்கம் இருக்கிறது. வாட்ஸப், முகநூலில் முளைக்கும் "திடீர் அறிவாளிகளுக்கு" தெரியாத தகவல் சுமந்திரன் உடபட பல கிறிஸ்தவர்களுக்கு பல ஆண்டுகளாகவே தெரியும்! "மரித்த விசுவாசிகள்" என்ற பதம் கிறிஸ்தவர் அல்லாதோருக்குத் தெரிய வாய்ப்பில்லை! ஆனால், மன்னாரில் எலும்புகள் கண்டெடுத்த பிரதேசம், துப்பாக்கிச் சன்னக் காயங்கள் இல்லாமை போன்ற தகவல்களை சட்ட மருத்துவ அறிக்கையில் பார்த்த போது சும் ஊகித்திருக்கக் கூடும்! இதுவே என் ஊகம்! அப்ப இதை ஏன் முதலே அவர் சொல்லவில்லை? எனப் பலர் கேட்கலாம்! இதை அவர் முதலே சொல்லியிருந்தால் இப்ப இருப்பதை விட நிறையக் கதைகள் பின்னியிருப்பார்கள்!

இதை சுமந்திரனையோ, இந்த ஆய்வு முடிவையோ ஆதரிக்கும் நோக்கில் நான் சொல்லவில்லை! எங்கள் காழ்ப்புணர்வுகளினூடாக எம் முன் இருக்கும் பல தரவுகளில் எமக்கு விருப்பமானவற்றை எடுத்துக் கொண்டு, விருப்பமில்லாதவற்றை தவிர்த்து விடும் வேலையைச் செய்கிறோம்! இது குறுகிய காலத்தில் எமக்கு உதவலாம்! நீண்டகால நோக்கில் இது தீமை, ஈழத்தமிழர்கள் எதைச் சொன்னாலும் உலகில் யாரும் நம்பாத ஒரு நிலை வரும்! உலகில் இப்போது பிலிப்பைன்ஸ், நைஜீரியா போன்ற நாடுகளின் பிரஜைகளுக்கு இந்த reputation இருக்கிறது!

Link to comment
Share on other sites

16 minutes ago, Justin said:

 ஈழத்தமிழர்கள் எதைச் சொன்னாலும் உலகில் யாரும் நம்பாத ஒரு நிலை வரும்! உலகில் இப்போது பிலிப்பைன்ஸ், நைஜீரியா போன்ற நாடுகளின் பிரஜைகளுக்கு இந்த reputation இருக்கிறது!

 

மத்திய கிழக்கு நாடுகளில் பரவலாக வேலையின் நிமித்தம் வாழ்பவர்கள்தான், இந்த நைஜீரியா, பிலிப்பைன்ஸ் மக்கள்.

அவர்கள் சொல்வதை, யாரும் நம்புவதில்லையா?

பிலிப்பைன்ஸ் நாட்டு ஜனாதிபதியின் அறிவுரையின்படிதான், போதை பொருளை முற்றாக ஒழிப்பேன் என்று சொல்கிறார், நமது மைத்திரி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, thulasie said:

 

மத்திய கிழக்கு நாடுகளில் பரவலாக வேலையின் நிமித்தம் வாழ்பவர்கள்தான், இந்த நைஜீரியா, பிலிப்பைன்ஸ் மக்கள்.

அவர்கள் சொல்வதை, யாரும் நம்புவதில்லையா?

பிலிப்பைன்ஸ் நாட்டு ஜனாதிபதியின் அறிவுரையின்படிதான், போதை பொருளை முற்றாக ஒழிப்பேன் என்று சொல்கிறார், நமது மைத்திரி.

துளசி, துரும்பைப் பிடித்துக் கொண்டு திரியைத் திசை திருப்பி நேரத்தை வீணாக்காதீர்கள்! இங்கே பேசும் தலைப்புக்கு ஆக்க பூர்வமாக எதுவும் பங்களிக்க முடியாவிட்டால், பேசாமல் இருங்கள்! அமைதி நல்லதல்லவா?

Link to comment
Share on other sites

1 hour ago, Justin said:

நீங்கள் சொல்வது சரிதான்! உலகின் 192 நாடுகள் அல்லது சுயாட்சிப் பிரதேசங்களின் தலைவர்கள் ஒவொருவரும்  துயிலெழும் போதே "இன்று ஈழத்தமிழர்களுக்கு எப்படி ஆப்பிறுக்கலாம்?" என்று யோசித்துக் கொண்டு தான் எழும்புவார்கள் என்று "மக்கள்" சொல்லக் கேட்டிருக்கிறேன்!

 

வட இந்தியாவில் உள்ளவனுக்கே தெரியாது, இலங்கையில் தமிழர் என்ற இனம் இருக்கிறதா இல்லையா  என்று!

நீங்கள் 192 நாடுகளில் உள்ளவர்களைப்பற்றி சொல்கிறீர்கள்?

துயில் எழும்போது, எல்லாரும் காப்பி, டீ குடிப்பதற்கு - சீனி, கோப்பி, தேயிலைத் தேடுவார்களேயொழிய, ஈழத்தமிழர்களைத் தேடுவதாவது!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Justin said:

அந்த எலும்புகளின் ஒரு இயல்பாகச் சொல்லப் பட்டது துப்பாக்கிக் காயங்கள் என்று அடையாளம் காணப் பட்ட காயங்கள் இல்லாமல் இருந்தது தான்! துப்பாக்கிக் காயங்கள் போல தெரியும் துளைகள் இலங்கையில் பணி செய்யும் எந்த மருத்துவராலும் அடையாளம் காணப்படக் கூடியவை. மேலும் வெற்று ரவைகளும் இருக்க வேண்டும். சுட்டு விட்டு பிணத்தை வெட்டி சன்னத்தை அகற்றி விட்டுப் புதைத்திருந்தால் வெற்றுச் சன்னம் கிடைக்காது. ஐனூறு வருடத்தில் மேலே மண் மாறியிருக்கும். எனவே எலும்பின் வயதை விட மண்ணின், கூட வந்த பொருட்களின் வயது குறைவாகத் தான் இருக்கும்.

இங்கே இந்தக் கண்டு பிடிப்புப் பற்றி சந்தேகம் கிளப்புவதில் நியாயம் இருக்கிறது. ஆனால் பொய்யான தகவல்களை உண்மை போலப் பரப்பாமலே சந்தேகங்களை வெளிப்படுத்தலாம் என்பதற்காக மட்டுமே இதைச் சொல்கிறேன். 

ஜஸ்ரின் அண்ணா என்புகள் பழுதடையாமல் இருந்ததை பார்க்கும் போது சந்தேகம் இயல்பாக வருகின்றது?
கிட்டத்தட்ட 500 ஆண்டுகளான என்புகள் ஓரளவாவது உக்க தொடங்கியிருக்கும் தானே?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, ஏராளன் said:

ஜஸ்ரின் அண்ணா என்புகள் பழுதடையாமல் இருந்ததை பார்க்கும் போது சந்தேகம் இயல்பாக வருகின்றது?
கிட்டத்தட்ட 500 ஆண்டுகளான என்புகள் ஓரளவாவது உக்க தொடங்கியிருக்கும் தானே?

ஏராளன், நான் ஏற்கனவே சொன்னது போல இப்படி நியாயமான காரணங்களை முன் வைத்து சந்தேகங்களை எழுப்ப வேண்டும்! ஆனால், துப்பாக்கிக் காயம் இருந்தது, பொலித்தீன் இருக்கிறது என்பதெல்லாம் வீக்கான காரணங்கள் மட்டுமல்ல, சில பொய்யான தகவல்களுமாகும்! எலும்பு உக்குவதற்கு அல்லது பேணப்படுவதற்கு பல வெளிக்காரணிகள் இருக்கலாம்! மன்னார் உப்புச் செறிவு கூடிய நிலம் என்பதால் உக்குதல் குறைந்ததா என்றும் பார்க்க வேண்டும்!

 கேள்விகளை எழுப்புவது நல்லது! நிபுணத்துவம் உள்ளவர்களிடம் இருந்து பதில் வந்தாலும் நாம் நம்பப் போவதில்லை என்றால், கேள்விகளுக்கு வேறு அர்த்தங்கள் இருக்கின்றன என்று தான் சந்தேகம் வரும்! நிபுணர்களிடம் விட்டு விட்டு எங்கள் வேலையை நாம் பார்ப்பது தான் உரிய முடிவை எங்களுக்குத் தரும் என நான் நினைக்கிறேன்!

Link to comment
Share on other sites

 

---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

தமிழ் மக்களின் சந்தேகத்துக்கு மற்றுமொரு காரணம்

மாத்தளை மனிதப் புதைகுழியில் இருந்து 2014 இல் கண்டுபிடிக்கப்பட்ட எச்சங்கள் அமெரிக்கா அனுப்பப்பட்ட போது அவை 1950 காலத்தை சேர்ந்தவை என்றபோது மன்னார் போல் மாத்தளை மனிதப் புதை குழிக்கும் பொறுப்பாக இருந்த பேராசிரியர் சோமதேவா அப்போது எச்சங்களில் கலப்பு செய்யப்பட்டதாக குற்றஞ்சாட்டி அவை 1986 இற்கும் 1990 இற்கும் இடைப்பட்டவை என்றார். அதாவது ஜே.வி.பி கிளர்ச்சியின் போது கொல்லப்பட்ட்வர்கள் என்ற அர்த்தத்தில். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, nunavilan said:

 

---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

தமிழ் மக்களின் சந்தேகத்துக்கு மற்றுமொரு காரணம்

மாத்தளை மனிதப் புதைகுழியில் இருந்து 2014 இல் கண்டுபிடிக்கப்பட்ட எச்சங்கள் அமெரிக்கா அனுப்பப்பட்ட போது அவை 1950 காலத்தை சேர்ந்தவை என்றபோது மன்னார் போல் மாத்தளை மனிதப் புதை குழிக்கும் பொறுப்பாக இருந்த பேராசிரியர் சோமதேவா அப்போது எச்சங்களில் கலப்பு செய்யப்பட்டதாக குற்றஞ்சாட்டி அவை 1986 இற்கும் 1990 இற்கும் இடைப்பட்டவை என்றார். அதாவது ஜே.வி.பி கிளர்ச்சியின் போது கொல்லப்பட்ட்வர்கள் என்ற அர்த்தத்தில். 

நுணா, காபன் டேற்றிங்கின் margin of error நூறு வருடங்கள் தாண்டும்! 1950 இற்கும் 1990 இற்கும் இடையில் 40 வருடங்களே! இதனால் தான் பல வாசிப்புகள் எடுத்து 95% வாய்ப்பு, 68% வாய்ப்பு என்று விளைவைத் தருகிறார்கள். 5500 வருடங்கள் அரை வாழ்வுடைய C14 இல் இருந்து 1950 இற்கும் 1990 இற்கும் இடைப்பட்ட சாம்பிளை பிரித்தறிவது கடினம் என நினைக்கிறேன்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, Justin said:

அந்த எலும்புகளின் ஒரு இயல்பாகச் சொல்லப் பட்டது துப்பாக்கிக் காயங்கள் என்று அடையாளம் காணப் பட்ட காயங்கள் இல்லாமல் இருந்தது தான்! துப்பாக்கிக் காயங்கள் போல தெரியும் துளைகள் இலங்கையில் பணி செய்யும் எந்த மருத்துவராலும் அடையாளம் காணப்படக் கூடியவை. மேலும் வெற்று ரவைகளும் இருக்க வேண்டும். சுட்டு விட்டு பிணத்தை வெட்டி சன்னத்தை அகற்றி விட்டுப் புதைத்திருந்தால் வெற்றுச் சன்னம் கிடைக்காது. ஐனூறு வருடத்தில் மேலே மண் மாறியிருக்கும். எனவே எலும்பின் வயதை விட மண்ணின், கூட வந்த பொருட்களின் வயது குறைவாகத் தான் இருக்கும்.

இங்கே இந்தக் கண்டு பிடிப்புப் பற்றி சந்தேகம் கிளப்புவதில் நியாயம் இருக்கிறது. ஆனால் பொய்யான தகவல்களை உண்மை போலப் பரப்பாமலே சந்தேகங்களை வெளிப்படுத்தலாம் என்பதற்காக மட்டுமே இதைச் சொல்கிறேன். 

ஜஸ்ரின்... நீங்கள், நல்லாய்... பூசி, மெழுகி  🗣️ கதைக்கின்றீர்கள்.  
உங்களது... கதையை பார்க்க,  "ஈயம் பூசின மாதிரியும், பூசாத மாதிரியும்"  இருக்குது. 

துப்பாக்கியால்... சுட்டால்,  மண்டை ஓட்டுக்குள் தான்.... ரவை  (குண்டு) நிற்கும் என்று, உங்களுக்கு, யார் சொன்னது? 

அப்படி... அது, துப்பாக்கி சூடு தான் என்று... இலங்கை தமிழ் உணர்வு உள்ள மருத்துவர் ஒருவர் சொல்லி விட்டு,  வீடு போய் சேர முடியுமா?

நீங்கள் எழுதிய பகுதிகளை,  மீண்டும் ஒரு முறை... பொறுமையாக, இருந்து வாசித்துப் பாருங்கள்.
உங்களுக்கே.. தலையை சுத்திக் கொண்டு வரும்,  என்பது திண்ணம். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, தமிழ் சிறி said:

ஜஸ்ரின்... நீங்கள், நல்லாய்... பூசி, மெழுகி  🗣️ கதைக்கின்றீர்கள்.  
உங்களது... கதையை பார்க்க,  "ஈயம் பூசின மாதிரியும், பூசாத மாதிரியும்"  இருக்குது. 

துப்பாக்கியால்... சுட்டால்,  மண்டை ஓட்டுக்குள் தான்.... ரவை  (குண்டு) நிற்கும் என்று, உங்களுக்கு, யார் சொன்னது? 

அப்படி... அது, துப்பாக்கி சூடு தான் என்று... இலங்கை தமிழ் உணர்வு உள்ள மருத்துவர் ஒருவர் சொல்லி விட்டு,  வீடு போய் சேர முடியுமா?

நீங்கள் எழுதிய பகுதிகளை,  மீண்டும் ஒரு முறை... பொறுமையாக, இருந்து வாசித்துப் பாருங்கள்.
உங்களுக்கே.. தலையை சுத்திக் கொண்டு வரும்,  என்பது திண்ணம். 

உயிரோடு புதைத்தால் சன்னமும் வராது....வெற்று ரவைகளும் வராது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

காபன் அணுக்கதிர் வீச்சின் வீரியத்தை வைத்து ஒரு பொருளின் வயதெல்லையைக் கண்டுபிடிக்கிறார்கள். ஆனால், இவை துல்லியமானவைதானா என்பது ஒரு பிரச்சனைதான். ஜஸ்டின் குறிப்பிட்டதுபோல 50 இலிருந்து 100 வருடங்கள் வரை முன்னுக்கோ பின்னுக்கொ இவை நடந்திருக்கலாம் என்பது வெறும் 35 வருட கால சிங்களவர்களின் தமிழர்மீதான இனக்கொலைக்கு இவை சாட்சியங்களாகப் பாவிக்கப்பட முடியாதவை. அதுமட்டுமல்லாமல், இந்த சாட்சியங்களின் நம்பகத்தன்மையைக் கேள்விக்குறியாக்கி சிங்களம் தப்பிப்பதற்கே அதிக வாய்ப்பிருக்கிறது. அதுவும் 500 வருடங்கள் என்று கணிப்பிடப்படுவதால், சங்கிலியன் செய்த கொலைகள் என்று இப்போதே எள்ளி நகையாடி வருகிறார்கள். அதுமட்டுமல்லாமல், இனி எந்தப் பகுதியில் மனித எச்சங்கள் கிடைக்கப் பெற்றாலும் சிங்களவர்கள் அவற்றை இலகுவாக தமிழர் தலையிலோ அல்லது போர்த்துக்கேயர், ஒல்லாந்தர் அல்லது ஆங்கிலேயர் தலையிலோ கட்டிவிட வாய்ப்பிருக்கிறது.

இந்த மனித எச்சங்களின் பரிசோதனைபற்றி பல கேள்விகள் இருக்கின்றன. நடத்தப்பட்ட முறை, ஆய்வில் ஈடுபட்டவர்கள், மாதிரிகள் தெரிவுசெய்யப்பட்ட முறை, வெளிப்படைத்தன்மை என்று சந்தேகங்கள் இருக்கின்றன. 

என்னைபொறுத்தவரை, இப்பரிசோதனை வெளிப்படையாக பாதிக்கப்பட்ட உறவுகள் முன்னால் சர்வதேச அங்கீகாரம் பெற்ற நிபுணர்குழுவினால் மீண்டும் மேற்கொள்ளப்பட வேண்டும். அப்போது வரும் முடிவை ஏற்றுக்கொளலாம்.

 

Link to comment
Share on other sites

திட்டமிட்ட வகையில் இந்த ஆய்வு அறிக்கை முழுமையாக சோடிக்கப்பட்டது!
காரணம்:
(1) அங்கு கிடைத்த பிஸ்கற் பாக்கெட் பிளாஸ்டிக் உறை
(2) கிடைத்த சில ஆவணங்கள்
(3) கிடைத்த பிளாஸ்டிக் தலைமுடி கிளிப்புகள்
(4) கிடைத்த பொலித்தீன்கள்
(5) ஆய்வுக்கு முன்னரே அரசின் எடுபிடிகள் தமிழர்கள் ஏமாறுவார்கள் எனக் கூறியமை
(6) பல அரச ஆய்வகங்கள் இருக்கும் போது ஒரு தனியார் நிறுவனத்துக்கு அனுப்பியமை
(7) அங்கு கடமையாற்றிய தமிழ் நீதிபதிகள் அடிக்கடி மாற்றப்படடமை.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 3/8/2019 at 3:15 PM, தமிழ் சிறி said:

ஜஸ்ரின்... நீங்கள், நல்லாய்... பூசி, மெழுகி  🗣️ கதைக்கின்றீர்கள்.  
உங்களது... கதையை பார்க்க,  "ஈயம் பூசின மாதிரியும், பூசாத மாதிரியும்"  இருக்குது. 

துப்பாக்கியால்... சுட்டால்,  மண்டை ஓட்டுக்குள் தான்.... ரவை  (குண்டு) நிற்கும் என்று, உங்களுக்கு, யார் சொன்னது? 

அப்படி... அது, துப்பாக்கி சூடு தான் என்று... இலங்கை தமிழ் உணர்வு உள்ள மருத்துவர் ஒருவர் சொல்லி விட்டு,  வீடு போய் சேர முடியுமா?

நீங்கள் எழுதிய பகுதிகளை,  மீண்டும் ஒரு முறை... பொறுமையாக, இருந்து வாசித்துப் பாருங்கள்.
உங்களுக்கே.. தலையை சுத்திக் கொண்டு வரும்,  என்பது திண்ணம். 

தமிழ் சிறி, நீங்கள் தான் மீண்டும் பள்ளிக்குப் போய் தமிழ் வாசிக்கக் கற்றுக் கொள்ள வேண்டும்! மேலும், இந்த அகழ்வில் மருத்துவ அதிகாரியாக இருப்பவர் தமிழர் என்று எங்கே வாசித்தீர்கள்? அவர் ஒரு சிங்களவர்! தலையினுள் சென்று சன்னம் வெளிவரும் போது நுழைந்த துளையை விட வெளிவரும் துளை பெரிதாக இருக்கும் என்பது பொதுவாக யாருக்கும் தெரிந்த விடயம். இந்த இரண்டு சத்தியக் கூறுகளில் ஒன்றாவது நடந்ததாக நான் வாசிக்கவில்லை, நீங்கள் செய்திகளில் கண்டிருந்தால் ஆதாரத்தை இங்கே கொண்டு வந்து இணையுங்கள், பேசலாம்!

இப்படி உங்களுக்கு எதுவும் தெரியாமல் இருக்க , மற்றவர் fact ஆக சொல்வது பூசி மெழுகுவது போல் இருந்தால், நக்கலை கண்ணாடியொன்றைப் பார்த்து உங்களுக்கு நீங்களே செய்து கொள்வது தான் பொருத்தம்!😎

On 3/8/2019 at 5:39 PM, குமாரசாமி said:

உயிரோடு புதைத்தால் சன்னமும் வராது....வெற்று ரவைகளும் வராது.

நல்ல கற்பனை! ஆனால் ஆதாரம் எங்கே? காணாமல் போனோரில் எத்தனை பேர் கதறக் கதற உயிரோடு புதைக்கப் பட்டிருக்கக் கூடும் என்று உங்களிடம் தகவலாவது இருக்கிறதா? கற்பனையை விட்டு விட்டு நடக்கக் கூடிய விடயங்களை ஆராயுங்கள்! சிங்களவன் கொடுமையானவன் தான், ஆனால் முட்டாள் அல்ல!  முன்னூறு பேரை இப்படி ஆழம் குறைந்த குழியில் போட்டு மூடுவதா அல்லது கொன்று விட்டு உடலைப் புதைப்பதா அவனுக்கு வேலை குறைவானது? மூக்கைச் சுற்றித் தலையைத் தொடும் உங்களை மாதிரி சிங்களவனின் அறிவை எடை போடக் கூடாது!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 3/8/2019 at 10:02 PM, போல் said:

திட்டமிட்ட வகையில் இந்த ஆய்வு அறிக்கை முழுமையாக சோடிக்கப்பட்டது!
காரணம்:
(1) அங்கு கிடைத்த பிஸ்கற் பாக்கெட் பிளாஸ்டிக் உறை
(2) கிடைத்த சில ஆவணங்கள்
(3) கிடைத்த பிளாஸ்டிக் தலைமுடி கிளிப்புகள்
(4) கிடைத்த பொலித்தீன்கள்
(5) ஆய்வுக்கு முன்னரே அரசின் எடுபிடிகள் தமிழர்கள் ஏமாறுவார்கள் எனக் கூறியமை
(6) பல அரச ஆய்வகங்கள் இருக்கும் போது ஒரு தனியார் நிறுவனத்துக்கு அனுப்பியமை
(7) அங்கு கடமையாற்றிய தமிழ் நீதிபதிகள் அடிக்கடி மாற்றப்படடமை.

 

என்ன ஆவணங்கள் கிடைத்தன என்று குறிப்பிடுங்கள்? பிளாஸ்டிக், இன்ன பிற பொருட்கள் பிற்காலத்தில் மண்மாறிய போது வந்திருக்கலாம் என்று பல இடங்களில் மேலே நான் குறிப்பிட்டிருக்கிறேன். அமெரிக்காவில் இப்படிப் பட்ட பாரிய முதலீடு தேவைப்படும் ஆய்வகங்கள் தனியார் தான்! "அரச பகுப்பாய்வுத் திணைக்களம்" சிறி லங்காவில் தான் பிரபலம்! 

உங்களுக்குப் பிடித்த பதில் உலகில் எந்த ஆய்வகத்தில் சோதித்தாலும் கிடைக்காது! நீங்கள் நம்பும் ஒண்றை ஏன் தான் சோதித்தறிவான்? பரிசோதனைகள் வேண்டாம்! உங்கள் மேலுள்ள லிஸ்ரை நீதிமன்றில் சமர்ப்பித்தால் அவர்கள் தீர்ப்பிடுவார்கள் என நினைக்கிறேன்! 😎

Link to comment
Share on other sites

3 hours ago, Justin said:

பிளாஸ்டிக், இன்ன பிற பொருட்கள் பிற்காலத்தில் மண்மாறிய போது வந்திருக்கலாம்

அதெப்படி எலும்புக்கூடுகள் அப்படியே இருக்க மண் மட்டும் மாற முடியும்?
அதிலும் பெண்களின் தலைகளின் அருகே மட்டும் பிளாஸ்டிக் கிளிப்புகளும், அங்கங்கே சில மலிபன் பிஸ்கற் பிளாஸ்ட்டிக் உறைகளும் அகப்படும்?

அதெப்படி ஆழமான ஓரிடத்தில் பாஸ்போர்ட் கவர் போல சந்தேகிக்கப்படும் ஒரு கவரும் கண்டெடுக்கப்பட்டிருந்தது?
அதெப்படி சில சிறுவர் கைகளுக்குரிய பிளாஸ்டிக் வளையல்கள் அங்கங்கே இருந்தன? (பெரியவர் அளவில் எதுவும் இருக்கவில்லை, தங்கநகைகள் கிடைக்கவில்லை கொலை செய்யப்படும் முன்னர் அவை அகற்றப்பட்டிருக்கலாம்).
சில இலங்கை நாணயக் குற்றிகளும் மீட்கப்பட்டிருந்ததாக நேற்று ஒருவர் கூறினார் (அதை நான் முன்னர் கேள்விப்பட்டிருக்கவில்லை).  

இன்னும் பல செய்திகள் யாழில் வந்திருந்தது.
பல மாதங்களின் முன்னர் முக்கியத்துவம் கருதி இது சம்பந்தமாக செய்திகள் அனைத்தையும் ஒரே இடத்தில் பதிவது நல்லது என "நவீனனின்" பதிந்த ஒரு செய்தியின் கருத்தில் பகிரங்கமாக கேட்டிருந்தேன். ஆனால் யாரும் எந்தவொரு முயற்சியும் எடுக்கவில்லை!

அது ஒருபுறமிருக்க, அமெரிக்காவில் கூலிக்காக மாரடிப்பவர்கள் அதிகம் என்றும் அதற்காக சிங்கள அரசு பலகோடிகளை பலதடவைகள் கொட்டியது என்பதுவும் வரலாறு!

ஆனாலும், அமெரிக்காவில் தில்லுமுல்லுகள் நடப்பதே இல்லை என்று நம்புவது உங்கள் உரிமை!

 

4 hours ago, Justin said:

உங்களுக்குப் பிடித்த பதில் உலகில் எந்த ஆய்வகத்தில் சோதித்தாலும் கிடைக்காது! நீங்கள் நம்பும் ஒண்றை ஏன் தான் சோதித்தறிவான்? பரிசோதனைகள் வேண்டாம்! உங்கள் மேலுள்ள லிஸ்ரை நீதிமன்றில் சமர்ப்பித்தால் அவர்கள் தீர்ப்பிடுவார்கள் என நினைக்கிறேன்! 😎

மேலும் உங்கள் விதண்டாவாத கருத்துக்களுக்கு பதில் எழுதுவது விழலுக்கு இறைத்த நீர் போன்றதே!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சங்கிலியன் போன்ற இனப்படுக்கொலையாளியின் வம்சத்திலா தமிழர்கள் வந்தார்கள். சிங்களவனை இனப்ப்டுகொலையாளி என்கின்றோம். மிலேச்சத்தனம் பிடித்தவன் என்று கூறுகின்றோம், அப்படியானால் சங்கிலியன்? அவன் என்ன சாத்வீகனா? ஏன் இவனை தமிழர்கள் தூக்கிப்பிடிக்க வேண்டும். 600 பேரை அநியாயமாய் கொன்ற‌வனல்லவா?

பிரான்ஸில் கூட சில தினங்களுக்கு முன்பு தமிழர்கள் தாங்களுக்குள் அடிப்பட்டு இறந்தார்கள். தாங்கள் கோட்படுகளுக்கு ஒத்து வராதவர்களை தாக்குவது, கொல்லுவது போன்றவகளுக்கு சங்கிலியனும் ஓர் உதரணம். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, colomban said:

சங்கிலியன் போன்ற இனப்படுக்கொலையாளியின் வம்சத்திலா தமிழர்கள் வந்தார்கள். சிங்களவனை இனப்ப்டுகொலையாளி என்கின்றோம். மிலேச்சத்தனம் பிடித்தவன் என்று கூறுகின்றோம், அப்படியானால் சங்கிலியன்? அவன் என்ன சாத்வீகனா? ஏன் இவனை தமிழர்கள் தூக்கிப்பிடிக்க வேண்டும். 600 பேரை அநியாயமாய் கொன்ற‌வனல்லவா?

பிரான்ஸில் கூட சில தினங்களுக்கு முன்பு தமிழர்கள் தாங்களுக்குள் அடிப்பட்டு இறந்தார்கள். தாங்கள் கோட்படுகளுக்கு ஒத்து வராதவர்களை தாக்குவது, கொல்லுவது போன்றவகளுக்கு சங்கிலியனும் ஓர் உதரணம். 

ஏன் சங்கிலியன் காலத்துக்குப் போகிறீர்கள்.. ஜே வி பி மீதான அடக்குமுறையில் எத்தனையோ அப்பாவி சிங்கள இளைஞர்கள்.. கொன்று குவிக்கப்பட்டார்கள்.. எம்பிலிப்பிட்டிய உட்பட பல மனிதப் புதைகுழிகள் கிண்டப்பட்டன.

தமிழர்கள் வரலாற்றில்.. பல புதைகுழிகளை  சிங்களம் உருவாக்கி இருந்தாலும் செம்மணிப் புதைகுழி சர்வதேச அளவில் கவனத்தை ஈர்த்து நீதி இன்றி நீர்த்துப்போனது. அதைச் செய்தவர் இன்றைய நல்லிணக்கத் தேவதை அன்றைய சமாதான தேவதை என்று வர்ணிக்கப்பட்ட சந்திரிக்கா அம்மையார்.

உலகில் எல்லா மன்னர்களும்.. புதைகுழிகளுக்குச் சொந்தக்காரர்களாக இருந்த படியால் தான் மக்கள்.. சனநாயகத்தை விரும்ப நேரிட்டது. சனநாயகம்.. தோற்றிவித்த புதைகுழிகள் என்பது பல. ஆனால் மக்களுக்கு வேறு தேர்வுக்கு இடமில்லாமல்.. சனநாயக பாசிசவாதம் பார்த்துக் கொள்வதால்.. மக்கள் அநியாயமாக நீதி இன்றி இறந்து கொண்டிருக்கிறார்கள்.

மன்னார் புதைகுழி சங்கிலியன் காலத்தான் என்பது நம்பக் கூடிய ஒன்றாகவே இல்லை. அமெரிக்கனுக்கு வழங்கப்பட்ட மாதிரி உண்மையில்.. மன்னார் புதைகுழி மாதிரியா.. என்பதில் இருந்து.. ஒரு தனியார் நிறுவனத்தின் ஊடாக இந்தப் பரிசோதனை செய்யப்பட்டதன் நோக்கம் என்ன... என்பது ஈறாக பல கேள்விக்கணைகள் அங்கு தொக்கு நிற்கின்றன. 

எத்தனையோ சர்வதேச மனித உரிமை அமைப்புக்கள் உள்ளன.. அவற்றின் மேற்பார்வையின் கீழ்.. நடுநிலையான ஆய்வு மையங்களில்.. மாதிரிகள் ஆராயப்பட வேண்டும். அதுவும் மாதிரிகள்.. உண்மையாக புதைகுழியில் இருந்து எடுக்கப்பட்டதற்கான நேரடி கண்காணிப்பு அவசியம். வெறும் ஒரு தனியார் நிறுவனத்தின் முடிவின் பிரகாரம்.. இந்த விடயத்தில் தீர்வு எட்டுவது என்பது அறிவியல் ரீதியாகக் கூட முட்டாள் தனமானது.  ஏனெனில் அந்த நிறுவனத்தின் பின்னணி.. இந்த ஆய்வு மாதிரிகளை சமர்ப்பித்தவர்களுக்கும் அந்த நிறுவத்திற்கும் உள்ள வெளிப்படையற்ற தொடர்புகள்..சிங்கள அரச செல்வாக்கு.. அமெரிக்க அரச செல்வாக்கு.. என்று பல பக்கச்சார்புக் காரணிகள்.. இந்த ஆய்வில் செல்வாக்குச் செலுத்தி இருக்கக் கூடிய வாய்ப்பு உள்ளது. அந்த வகையில்.. இந்த ஆய்வு முடிவு.. நடுநிலையானதாகக் கருத முடியாது.

இந்த ஆய்வு பக்கச் சார்ப்பற்ற.. நடுநிலையான நீதியான.. சர்வதேச மனித உரிமை அமைப்புக்களின் மேற்பார்வையின் கீழ் பெறப்படும் மாதிரியில் இருந்து.. அவர்கள் பிரேரிக்கும்.. வெவ்வெறு ஆய்வு கூடங்களில் (குறைந்தது 5 இல்) மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டு.. மாதிரிகளின் பின்னணித்தகவல்கள் ஆய்வுகூடங்களுக்கு வழங்கப்படாத வகையில் ரகசியம் காக்கப்பட்டு.. செய்யப்படும்.. ஆய்வு முடிவின் மூலமே ஓரளவுக்கு உண்மைத் தன்மை கண்டறியப்பட முடியும்.

ஆனால்.. தற்போதைய ஆய்வு முடிவு.. சிங்கள ஆட்சியாளகளையும்... சிங்கள இனப்படுகொலை பயங்கரவாத இராணுவத்தை காப்பாற்ற.. நன்கு திட்டமிட்டு நிகழ்த்தப்பட்ட ஒன்றாகவும்.. தமிழர்கள்.. வரலாற்றுரீதியாக மனிதப் படுகொலை புரியும் கொடூரர்கள் போன்ற ஒரு தோற்றப்பாட்டை உருவாக்கவும் செய்யப்பட்டிருக்கும்.. மோசடி ஆகும். 🙄

Link to comment
Share on other sites

15 hours ago, Justin said:

என்ன ஆவணங்கள் கிடைத்தன என்று குறிப்பிடுங்கள்? பிளாஸ்டிக், இன்ன பிற பொருட்கள் பிற்காலத்தில் மண்மாறிய போது வந்திருக்கலாம் என்று பல இடங்களில் மேலே நான் குறிப்பிட்டிருக்கிறேன். அமெரிக்காவில் இப்படிப் பட்ட பாரிய முதலீடு தேவைப்படும் ஆய்வகங்கள் தனியார் தான்! "அரச பகுப்பாய்வுத் திணைக்களம்" சிறி லங்காவில் தான் பிரபலம்! 

உங்களுக்குப் பிடித்த பதில் உலகில் எந்த ஆய்வகத்தில் சோதித்தாலும் கிடைக்காது! நீங்கள் நம்பும் ஒண்றை ஏன் தான் சோதித்தறிவான்? பரிசோதனைகள் வேண்டாம்! உங்கள் மேலுள்ள லிஸ்ரை நீதிமன்றில் சமர்ப்பித்தால் அவர்கள் தீர்ப்பிடுவார்கள் என நினைக்கிறேன்! 😎

காதில பூ வைக்கிற கதையாக இருக்கு ? ஆமா இனி ...மண் மாறி இருக்கும் ..வேறென்ன அப்படியே சுத்துமாத்து மாதிரி ....சுத்த வேண்டியதுதான் .....அது சரி 500 வருடமாக எப்படி இரும்பு உக்காது ? கைவிலங்கிடப்படட ஒரு எலும்பும் எடுத்தார்கள் .....
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பல நூற்றாண்டுகள் ஆகியும் கொஞ்சம் கூட 
நிறம் மாறாத மண்டையோடு பற்கள் கொண்ட இரும்பை ஒத்த ஒரு 
மனித இனம் இலங்கை எனும் சிறுதீவில் வாழ்ந்ததுக்கான 
ஆதாரங்கள் கண்டெடுக்க பட்டுள்ளது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உலகிலேயே இல்லை,பொய் என்ற சொற்களுக்கு எதிராக போராடினால் வெல்வது கடினம்.
இல்லை,பொய் என்ற சொற்களை பயன்படுத்துபவர்களாலும், எதெற்கெடுத்தாலும் ஆதாரம் கேட்கும் நம்பாச்சாதிகளாலும் தான் ஈழத்தமிழினம் நொடிக்கு நொடி அழிந்து கொண்டு வருகின்றது.

2009க்கு பின் 10 வருடங்கள் ஆகியும்....சிங்களத்தின் கோரமுகம் வெளிப்படையாக தெரிந்தும்.....இன்றும் சிங்களத்துக்காகவும் தன் வாழ்வுக்காகவும் வக்காலத்து வாங்கும் ஜென்மங்களை என்னவென்று சொல்வது.

மாற்றுக்கருத்து மாணிக்கவாதிகள் அவலை நினைத்து வெறும் உரலை இடிக்கின்றார்கள்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 26 APR, 2024 | 09:33 PM (எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்) மாற்றுத்திறனாளிகளுக்கு  வழங்கப்படும் உதவித்தொகை கொடுப்பனவு  5000 ரூபாவிலிருந்து  7500 ரூபா  வரை அதிகரிக்கப்பட்டாலும் அவை குறித்த திகதிகளில் கிடைப்பதாக இல்லை எனத் தெரிவிக்கப்படுகிறது. மாற்றுத்திறனாளிகள் சமூகத்தை இவ்வாறான சிரமங்களுக்கு உள்ளாக்காமல் இவ்விடயம் தொடர்பில் ஆராய்ந்து நடவடிக்கை எடுக்குமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச வலியுறுத்தினார். பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (26) பிரதமரிடம் இந்தக் கோரிக்கையை விடுத்த அவர் மேலும் பேசுகையில், பொது நிர்வாக சுற்றறிக்கை 1988/27இன் பிரகாரம், அரச நிறுவனங்களில் வேலைவாய்ப்பை வழங்கும்போது மாற்றுத் திறனாளிக்கு 3 வீத  வேலைவாய்ப்பை வழங்க வேண்டும் என இருந்தாலும், அது இன்று வரை நடைமுறைப்படுத்தப்படவில்லை. மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள் குறித்து புதிய சட்டமூலம் கொண்டுவரப்படும் என்று கூறப்பட்டாலும் இதுவரை அது கொண்டுவரப்படவில்லை. குறித்த புதிய சட்டமூலம் சமர்ப்பிக்கப்படாமைக்கான காரணங்கள் என்ன? சனத்தொகை கணக்கெடுப்பின் பிரகாரம், இந்நாட்டில் 17 இலட்சம் மாற்றுத்திறனாளிகள் இருக்கின்றனர்.  இவர்களது உரிமைகள் தொடர்பில் பல முறை கேள்வியெழுப்பியுள்ளேன். சைகை மொழி சட்டத்தைப் பாராளுமன்றத்தில் கொண்டு வந்து அதை நாட்டின் சட்டமாக மாற்றுங்கள். பொது இடங்களில் மாற்றுத்திறனாளிகள் பிரவேச  அணுகல் விடயத்தில் பிரச்சினைகளைச் சந்தித்து வருகின்றனர். மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தும் உபகரணங்களுக்கு வற்  வரியிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டாலும், சந்தையில் தட்டுப்பாடு நிலவுகிறது. அவற்றுக்கான தீர்வுகளை வழங்குங்கள். அதுமட்டுமல்லாமல் இவர்களின் காப்புறுதி குறித்து அவதானம் செலுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன் என்றார். https://www.virakesari.lk/article/182038
    • KKR vs PBKS: பேர்ஸ்டோ விஸ்வரூபம், வெலவெலத்துப் போன கொல்கத்தா - பஞ்சாபின் வரலாற்று சேஸிங் பட மூலாதாரம்,SPORTZPICS கட்டுரை தகவல் எழுதியவர், போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக ஒரு மணி நேரத்துக்கு முன்னர் 2024 ஐபிஎல் சீசனில் ஒரு அணி 250 ரன்களுக்கு மேல் அடித்தாலும் அது பாதுகாப்பில்லாத ஸ்கோர் என்பது நேற்றைய பஞ்சாப் - கொல்கத்தா அணிகளுக்கு இடையிலான ஆட்டத்தில் தெரிந்துவிட்டது. 'என்ன அடி... என்ன மாதிரியான ஷாட்கள்...' என்று ரசிகர்களைப் பிரமிக்க வைத்த ஆட்டம் நேற்று நடந்தது. களத்தில் நீயா-நானா பார்த்துவிடலாம் என்ற ரீதியில் கொல்கத்தா அணி வீரர்களும், பஞ்சாப் வீரர்களும் மோதினர். இரு அணி பேட்டர்களின் பேட்டில் இருந்து சிக்ஸர்களும், பவுண்டரிகளும் பறந்தவாறு இருந்தன. கொல்கத்தாவில் நேற்று நடந்த இந்த ஆட்டத்தில் மட்டும் 37 பவுண்டரிகள், 42 சிக்ஸர்கள், 523 ரன்கள் சேர்க்கப்பட்டன. ஏறக்குறைய 10 ஓவர்களை ரசிகர்கள் வானத்தைப் பார்த்தவாறு அமர்ந்திருந்திருக்கும் அளவுக்கு பந்துகள் சிக்ஸருக்கும், பவுண்டரிக்கும் பறந்தவாறு இருந்தன. இதுவரை ஐபிஎல் டி20 தொடரில், டி20 போட்டிகளில் சேஸிங் செய்ய முடியாத ஸ்கோரை அடைந்து, பஞ்சாப் கிங்ஸ் அணி புதிய வரலாறு படைத்துள்ளது. கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 போட்டியின் 42வது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது பஞ்சாப் கிங்ஸ். முதலில் பேட் செய்த கொல்கத்தா அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 261 ரன்கள் சேர்த்தது. 262 ரன்கள் என்னும் கடின இலக்கைத் துரத்திய பஞ்சாப் கிங்ஸ் அணி 2 விக்கெட் இழப்புக்கு 262 ரன்கள் சேர்த்து, 8 விக்கெட் வித்தியாசத்தில் 8 பந்துகள் மீதமிருக்கையில் வென்றது.   வரலாற்று சேஸிங் பட மூலாதாரம்,SPORTZPICS ஐபிஎல் டி20 போட்டியில், உலக டி20 வரலாற்றில் இதுவரை எந்த அணியும் 261 ரன்களை சேஸிங் செய்தது இல்லை. ஆனால், அதையும் 8 பந்துகள் மீதமிருக்கும்போது சேஸிங் செய்து பஞ்சாப் கிங்ஸ் டி20 கிரிக்கெட்டிலும், ஐபிஎல் டி20 லீக்கிலும் புதிய வரலாற்றையும், சாதனையையும் படைத்துள்ளது. கொல்கத்தா அணி 6 விக்கெட்டுகளை இழந்து சேர்த்த ஸ்கோரை பஞ்சாப் அணி 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து சேஸிங் செய்து சவால்விட்டது. பஞ்சாப் கிங்ஸ் பேட்டர்கள் பேர்ஸ்டோ, சஷாங் இருவரும் நேற்று இருந்த ஃபார்முக்கு 285 ரன்களைக்கூட சேஸிங் செய்திருப்பார்கள். இருவரும் மதம்பிடித்த யானை போல் பேட்டால் கொல்கத்தா பந்துவீச்சாளர்களை வதம் செய்தனர். சவாலாக மாறும் பஞ்சாப் இந்த வெற்றியால் பஞ்சாப் கிங்ஸ் அணி புள்ளிப்பட்டியலில் பெரிதாக முன்னேற்றம் ஏதும் அடையவில்லை என்றாலும், பஞ்சாப் கிங்ஸ் அணியின் வெற்றி, மற்ற அணிகளுக்கு அச்சத்தைத் தரும். அடுத்து வரும் போட்டிகளில் பஞ்சாப் அணி தொடர் வெற்றி பெற்றால், ப்ளே ஆஃப் சுற்று இன்னும் கடும் போட்டி நிறைந்ததாக மாறிவிடும். பஞ்சாப் கிங்ஸ் அணி வெற்றியால் 9 போட்டிகளில் 3 வெற்றி, 6 தோல்வி என 6 புள்ளிகளுடன் 8வது இடத்தில் இருக்கிறது. நிகர ரன்ரேட் மைனஸ் 0.187 என்ற ரீதியில் இருக்கிறது. அடுத்தடுத்த போட்டிகளில் பஞ்சாப் அணி பெறும் வெற்றி, புள்ளிப் பட்டியலில் பெரிய மாற்றத்தைக் கொண்டு வரக்கூடும். கொல்கத்தா அணி இந்தத் தோல்வியால் 2வது இடத்திலிருந்து சரியவில்லை. ஆனால் அந்த அணியின் நிகர ரன்ரேட் சரிந்துவிட்டது. இதற்கு முன் ஒரு புள்ளிக்கு மேல் நிகர ரன்ரேட் வைத்திருந்த கொல்கத்தா இந்தத் தோல்வியால் 0.972 ஆகக் குறைந்துவிட்டது. கொல்கத்தா அணி 8 போட்டிகளில் 5 வெற்றி, 3 தோல்வி என 10 புள்ளிகளுடன் 2வது இடத்தில் நீடிக்கிறது.   பேர்ஸ்டோ விஸ்வரூபம் பட மூலாதாரம்,SPORTZPICS பஞ்சாப் கிங்ஸ் அணி இதுவரை சந்தித்த 9 போட்டிகளிலும் பேர்ஸ்டோ ஒரு போட்டியில்கூட அரைசதம் அடிக்காமல் இருந்ததால், இந்த சீசன் அவருக்கு மோசமாக அமைந்துவிட்டதாக விமர்சனங்கள் எழுந்தன. ஆனால், நேற்று நிதானமாகத் தொடங்கிய பேர்ஸ்டோ, அதன்பின் கோடை இடி முழக்கம்போல் அடிக்கத் தொடங்கினார். பேர்ஸ்டோ பேட்டிலிருந்து தெறித்த பந்துகள் பெரும்பாலும் சிக்ஸர்களாகவும், பவுண்டரிகளாகவும் பறந்தன. மிரட்டலாக பேட் செய்த பேர்ஸ்டோ 45 பந்துகளில் சதம் அடித்து, 108 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்து ஆட்டநாயகன் விருது வென்றார். பேர்ஸ்டோ கணக்கில் மட்டும் 9 சிக்ஸர்கள், 8 பவுண்டரிகள் அடங்கும். ஐபிஎல் டி20 தொடரில் பேர்ஸ்டோ அடித்த 2வது சதம் இது. மூன்று பார்ட்னர்ஷிப்பில் முடிந்த ஆட்டம் அதேபோல பேர்ஸ்டோவுக்கு நெம்புகோலாக இருந்தது தொடக்க பேட்டர் பிரப்சிம்ரன் சிங். இவரின் அதிரடி ஆட்டத்தால் உற்சாகம் பெற்ற பேர்ஸ்டோ வெளுத்து வாங்கத் தொடங்கினார். பிரப்சிம்ரன் சிங் 20 பந்துகளில் 54 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். இவரின் கணக்கில் 5 சிக்ஸர்கள், 4 பவுண்டரிகள் அடங்கும். அதேபோல சஷாங் சிங் 28 பந்துகளில் 68 ரன்கள் சேர்த்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இவரின் கணக்கில் 8 சிக்ஸர்கள், 2 பவுண்டரிகள் அடங்கும். ஐபிஎல் ஏலத்தில் தவறிப்போய் வேறு சஷாங் சிங்கை எடுத்துவிட்டோமே என்று கவலைப்பட்ட பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு, தற்போது சஷாங் சிங் பெரிய சொத்தாக, முத்தாக மாறிவிட்டார். இந்த 3 பேட்டர்களும் சேர்ந்துதான் கொல்கத்தா அணி சேர்த்த இமாலய ஸ்கோரை எளிதாக சேஸிங் செய்து வெற்றி பெற்றனர். பிரப்சிம்ரன் சிங்-பேர்ஸ்டோ ஜோடி முதல் விக்கெட்டுக்கு 93 ரன்கள் பார்ட்னர்ஷிப், ரூஸோ-பேர்ஸ்டோ 2வது விக்கெட்டுக்கு 85 ரன்கள் பார்ட்னர்ஷிப், சஷாங் சிங்-பேர்ஸ்டோ 3வது விக்கெட்டுக்கு 84 ரன்கள் பார்ட்னர்ஷிப் என மொத்தமே 3 பார்ட்னர்ஷிப்பில் ஆட்டத்தை முடித்துவிட்டனர்.   நேற்றைய ஆட்டத்தில் படைக்கப்பட்ட சாதனைகள் பட மூலாதாரம்,SPORTZPICS கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் கொல்கத்தா அணிக்கு எதிராக 262 ரன்களை பஞ்சாப் கிங்ஸ் சேஸிங் செய்தது டி20 வரலாற்றிலும், ஐபிஎல் டி20 வரலாற்றில் மிக அதிகபட்சம். இதற்கு முன் டி20 கிரிக்கெட்டில் 259 ரன்களை தென் ஆப்பிரிக்கா சேஸிங் செய்ததே அதிகபட்சமாக இருந்தது. ஐபிஎல் தொடரில் 224 ரன்களை ராஜஸ்தான் ராயல்ஸ் சேஸிங் செய்ததுதான் அதிகபட்சமாக இருந்தது, அந்த ரன்களைவிட 38 ரன்கள் கூடுதலாக சேஸிங் செய்துள்ளது. இந்த ஆட்டத்தில் மட்டும் 42 சிக்ஸர்கள் அடிக்கப்பட்டன. டி20 போட்டிகளில் அடிக்கப்பட்ட அதிகபட்ச சிக்ஸர்கள் இதுவாகும். இதற்கு முன் கடந்த மாதம் மும்பை-சன்ரைசர்ஸ் அணிகளுக்கு இடையேயும், கடந்த வாரம் ஆர்சிபி, சன்ரைசர்ஸ் இடையே 38 சிக்ஸர்கள் அடிக்கப்பட்டதுதான் அதிகபட்சமாக இருந்தது. அது நேற்றைய ஆட்டத்தில் முறியடிக்கப்பட்டது. சேஸிங்கில் பஞ்சாப் கிங்ஸ் அணி 24 சிக்ஸர்களை நேற்று விளாசியது. இது டி20 கிரிக்கெட்டில் ஒரு அணி அடித்த 2வது அதிகபட்ச சிக்ஸர்களாகும். ஐபிஎல் வரலாற்றில் சேஸிங் செய்யும் அணி அடித்த அதிகபட்ச சிக்ஸர்கள் என்ற பெருமையை பஞ்சாப் பெற்றது. இதற்கு முன் ஆர்சிபி, டெல்லி கேபிடல்ஸுக்கு எதிராக சன்ரைசர்ஸ் 22 சிக்ஸர்கள் அடித்ததே அதிகபட்சமாக இருந்தது. இந்த ஆட்டத்தில் மட்டும் 523 ரன்கள் சேர்க்கப்பட்டன. இதன் மூலம் டி20 போட்டிகளில் இரு அணிகள் சேர்ந்து சேர்க்கப்பட்ட 2வது அதிகபட்ச ஸ்கோர் இது. கடந்த வாரம் ஆர்சிபி, சன்ரைசர்ஸ் அணிகள் சேர்ந்து 549 ரன்கள் சேர்த்தன. கொல்கத்தா, பஞ்சாப் அணிகளில் 4 தொடக்க ஆட்டக்காரர்கள் பில்சால்ட்(75), சுனில் நரேன்(71), பிரப்சிம்ரன் சிங்(54), ஜானி பேர்ஸ்டோ(108) ஆகியோர் அரைசதம் அடித்தனர். ஐபிஎல் வரலாற்றில் இரு அணிகளின் தொடக்க ஆட்டக்காரர்கள் 50 ரன்களுக்கு மேல் குவித்தது இதுதான் முதல்முறை. டி20 போட்டியில் இது 11வது முறை. 4 தொடக்க ஆட்டக்காரர்களும் சேர்ந்து 308 ரன்கள் சேர்க்கப்பட்டது ஐபிஎல் வரலாற்றில் முதல்முறை. இந்த ஆட்டத்தில் 5 பேட்டர்கள் 200 ஸ்ட்ரைக் ரேட்டுக்கு மேல் வைத்து அரைசதம் அடித்ததும் ஐபிஎல் வரலாற்றில் முதல்முறை. சால்ட்(25பந்துகள்), நரைன்(23பந்துகள்), பிரப்சிம்ரன்(18), பேர்ஸ்டோ(23), சஷாங் சிங்(23) ஆகியோர் குறைந்த பந்துகளில் அரைசதம் அடித்து ஸ்ட்ரைக் ரேட்டை 200க்கு மேல் வைத்திருந்தனர். டி20 போட்டிகளில் 200க்கும் மேற்பட்ட ரன்களை பஞ்சாப் கிங்ஸ் அணி 7வது முறையாக வெற்றிகரமாக சேஸிங் செய்துள்ளது. இதுதான் டி20 போட்டிகளில் ஒரு அணியின் அதிகபட்ச சேஸிங். மும்பை இந்தியன்ஸ், இந்தியா, ஆஸ்திரலேியா, குவெட்டா கிளாடியேட்டர்ஸ் ஆகிய அணிகள் 5 முறை மட்டுமே 200 ரன்களுக்கு மேல் சேஸிங் செய்துள்ளன.   பந்துவீச்சாளர்கள் பாவம் பட மூலாதாரம்,SPORTZPICS கொல்கத்தா ஈடன் கார்டன் போன்ற பேட்டர்களுக்காகவே வடிவமைக்கப்பட்ட, சொர்க்கபுரி ஆடுகளத்தில் பந்துவீச்சாளர்கள் நிலைமை படுமோசமாகும். இந்த ஆட்டத்தில் இரு அணிகளைச் சேர்ந்த பந்துவீச்சாளர்களும் துவைத்து எடுக்கப்பட்டனர். இரு அணிகளிலும் சுனில் நரைன், ராகுல் சாஹர் இருவர்தான் ஒற்றை இலக்கத்தில் ரன்ரேட்டை வைத்திருந்தனர். மற்ற வகையில் இரு அணிகளின் அனைத்து பந்துவீச்சாளர்களும் ஓவருக்கு சராசரியாக 15 ரன்களை வாரி வழங்கினர். இதுபோன்ற பேட்டர்களுக்கு மட்டும் சாதகமான ஆடுகளத்தில் பந்துவீச்சாளர்கள் நிராயுதபாணியாக மாற்றப்படுகிறார்கள். குறிப்பாக ரஸல், ரபாடா, அங்குல் ராய், சாம்கரன், ஹர்சல் படேல், வருண், ஹர்சித் ராணா, சமீரா ஆகியோர் வீசிய ஒவ்வொரு ஓவரிலும் சராசரியாக 17 ரன்கள் விளாசப்பட்டன. டி20 போட்டி "ரசிகர்களின் ரசிப்புத்தன்மையை அதிகப்படுத்துவதற்காக சிக்ஸர்கள், பவுண்டரிகள் அதிகம் கிடைக்க வேண்டும் என்பதற்காக பேட்டர்களுக்கு மட்டும் உதவும் விக்கெட்டாக மாற்றுவது ஆட்டத்தை ஒருதரப்பாகவே கொண்டு செல்லும். இதில் பந்துவீச்சாளர்களின் பணி, அவர்களுக்கான அறம், மரியாதை அறவே இல்லாமல் போகும்," என்ற விமர்சனம் ஒருபுறம் இதனால் முன்வைக்கப்படுகிறது. பேட்டர்களுக்கும், பந்துவீச்சாளர்களுக்கும் சமவாய்ப்பு வழங்கும் விதத்தில் ஆடுகளம் அமைக்கப்பட்டால்தான் ஆட்டம் சுவாரஸ்யமாகச் செல்லும். பேட்டர்களுக்கான விக்கெட்டாக மாற்றப்படும்போது, பந்துவீச்சாளர்கள் நம்பிக்கை உடைக்கப்படும், பந்துவீச்சாளர்கள் நம்பிக்கை இழந்து அடுத்தடுத்த போட்டிகளில் அவர்களின் திறமை பாதிக்கப்படும். எதிர்காலத்தில் இளம் தலைமுறைகள்கூட பேட்டர்களாக மாற விரும்புவார்களே தவிர பந்துவீச்சாளர்கள் மீது வெறுப்பு உண்டாகிவிடும். இதுபோன்ற பேட்டர்களுக்கான விக்கெட் என்பது வீடியோ கேம் பார்த்த உணர்வுதான் ரசிகர்களுக்கு ஏற்படும்.   கொல்கத்தா என்ன செய்யப் போகிறது? பட மூலாதாரம்,SPORTZPICS கொல்கத்தா அணியில் தொடக்க ஆட்டக்காரர்ள் பில்சால்ட்(75), சுனில் நரேன்(71) இருவரும் அருமையான அடித்தளத்தை அமைத்துக் கொடுத்து 138 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். அடுத்து வந்த பேட்டர்கள் வெங்கடேஷ் (39), ரஸல்(24), ஸ்ரேயாஸ்(28) என கேமியோ ஆடி உயிரைக் கொடுத்து 261 ரன்கள் சேர்த்தனர். பெரும்பாலும், 120 பந்துகளைக் கொண்ட டி20 போட்டியில் 262 ரன்களை சேஸிங் செய்வது என்பது மிகக்கடினமானது என்று பார்க்கப்பட்டது. 261 ரன்களை அடித்துவிட்டோம் வெற்றி உறுதி என்ற மனநிலையுடன் இருந்த கொல்கத்தா அணிக்கு நேற்றைய சேஸிங் சம்மட்டி அடியாக இறங்கியுள்ளது. 261 ரன்கள் என்பதே மிகப்பெரிய ஸ்கோர் இதையே சேஸிங் செய்துவிட்டதால், எந்த ஸ்கோர் பாதுகாப்பானது என ஆய்வு செய்ய வேண்டிய நிலையில் இருக்கிறது. அது மட்டுமல்லாமல் 160 ரன்கள் அடித்து ஐபிஎல் தொடரில் டிபெண்ட் செய்யும் அணிகள் இருக்கும் நிலையில் 261 ரன்கள் சேர்த்தும் கொல்கத்தா அணியால் டிபெண்ட் செய்ய முடியவில்லை என்பது அந்த அணியின் பந்துவீச்சு மீதும், திறன் மீது பெரிய கேள்வியை எழுப்புகிறது. பஞ்சாப் அணியை 261 ரன்களை சேஸிங் செய்ய அனுமதித்த பந்துவீச்சாளர்கள் மீது குறை சொல்வதா, அல்லது பேட்டர்களுக்கான விக்கெட்டாக மாற்றியதைக் குறை சொல்வதா என ஆய்வு செய்ய வேண்டிய நிலையில் கொல்கத்தா நிர்வாகம் இருக்கிறது. ஆனால், 261 ரன்களைக்கூட டிபெண்ட் செய்ய முடியாவிட்டால், நிச்சயமாக பந்துவீச்சில் பெரிய சிக்கல் ஏதோ இருக்கிறது என்பது மட்டும் தெரிகிறது. இந்த ஆட்டத்தில் பஞ்சாப் பேட்டர்களை சிந்திக்க வைக்கும் அளவுக்கு, நெருக்கடி தரும் அளவுக்கு கொல்கத்தா பந்துவீச்சு இல்லை என்பதுதான் நிதர்சனம். இரு ஓவர்களில் நெருக்கடியாக பந்துவீசியிருந்தால் ஆட்டம் மாறியிருக்கும். இந்த ஆட்டத்தில் கொல்கத்தா அணியின் வேகப்பந்துவீச்சாளர்கள் ஒருவர்கூட யார்க்கர் வீசவில்லை, ஸ்லோபால் பவுன்ஸர், ஷார்ட்பால் அதிகம் வீசவில்லை. பந்துவீச்சில் வேரியேஷன் என்பதே பெரிதாக இல்லாமல் பேட்டர்களின் பேட்டை நோக்கியே பந்து வீசப்பட்டது பேட்டர்களின் பணியை இன்னும் எளிதாக்கியது. ஆதலால், கொல்கத்தா அணி நிர்வாகம் பந்துவீச்சு குறித்து ஆய்வு செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது.   ‘அறியப்படாத ஹீரோ’ சஷாங் சிங் பட மூலாதாரம்,SPORTZPICS சஷாங் சிங், அஷுடோஷ் சர்மா இருவரும் இந்த சீசனில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்குக் கிடைத்த இரு சொத்துகள் என்று கூறலாம். பஞ்சாப் அணி கடந்த சில போட்டிகளில் வெற்றிவரை வந்து தோல்வி அடைந்த ஆட்டங்களில் ஆட்டத்தை ஒற்றை பேட்டராக இழுத்து வந்தவர் சஷாங் சிங். ஐபிஎல் ஏலத்தில் கொல்கத்தாவை சேர்ந்த சஷாங் சிங்கை வாங்குவதற்குப் பதிலாக இந்த சஷாங் சிங்கை ரூ.20 லட்சத்துக்கு வாங்கிவிட்டோமே என்ற கவலையில் இருந்தது. ஆனால், சஷாங் சிங் ஆட்டம் என்பது அவரின் விலையான ரூ.20 லட்சத்துக்கும் அதிகமானது என்பதை பஞ்சாப் கிங்ஸ் நிர்வாகம் புரிந்து கொண்டுள்ளது. பிகாரை சேர்ந்த சஷாங் சிங், சத்தீஸ்கர், மும்பை, புதுச்சேரி அணிகளுக்குக்கூட ரஞ்சி கோப்பையில் விளையாடியுள்ளார். தனது திறமையை அங்கீகரிக்க ஒரு ஆட்டம் கிடைக்காதா என்று ஏங்கியவர் சஷாங் சிங். மும்பை, சத்தீஸ்கர் கிரிக்கெட் வட்டாரங்கள் அறிந்திருந்த சஷாங் சிங்கை இந்தியா முழுவதும் யாரும் இதற்கு முன் அறியவில்லை. ஆனால் கடந்த சில போட்டிகளாக சஷாங் சிங் அடிக்கும் அடி, ஆட்டத்தின் திறமை, உலக கிரிக்கெட்டை திரும்பப் பார்க்க வைத்துள்ளது. டி20 உலகக் கோப்பையில் மேற்கிந்தியத் தீவுகளுக்காக விளையாட முடியுமா என்று கேட்கும் அளவுக்கு சஷாங் சிங் ஆட்டம் பேசப்பட்டு வருகிறது. பட மூலாதாரம்,SPORTZPICS பஞ்சாப் அணியில் வழக்கமாக 6வது வரிசையில் களமிறங்கும் சஷாங் சிங், நேற்று முதல்முறையாக 4வது வீரராகக் களமிறங்கினார். களமிறங்கி 3 பந்துகளைச் சந்தித்த நிலையில் வருண் பந்தவீச்சில் சஷாங் சிக்ஸர் பறக்கவிட்டார். ஒரு கட்டத்தில் பஞ்சாப் அணி வெற்றி என்பது சவாலாக இருந்த நிலையில் சஷாங் சிங் களமிறங்கிய பின் அது இலகுவானது. சமீரா ஓவரில் ஸ்வாட், ஸ்கூப், புல் ஷாட் என 3 விதங்களில் சஷாங் சிங் சிக்ஸர் விளாசி, வெற்றியை எளிதாக்கினார். அது மட்டுமல்லாமல் ஹர்சித் ராணா, ராமன்தீப் ஓவரிலும் சிக்ஸர்களை வெளுத்து வாங்கினார் சஷாங் சிங். 23 பந்துகளில் அரைசதத்தை சஷாங் அடைந்து 68 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். இவரின் கணக்கில் மட்டும் 8 சிக்ஸர்கள் அடங்கும். பேஸ்பால் ஆட்டமா? பஞ்சாப் சிங்ஸ் கேப்டன் சாம் கரன் வெற்றிக்குப் பின் கூறுகையில், “இந்த வெற்றி மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது, முக்கியமானவெற்றி. கிரிக்கெட் பேஸ்பாலாக மாறிவிட்டதா என எனக்குத் தோன்றியது. கடந்த சில போட்டிகளில் வெற்றிவரை வந்து தவறவிட்டது கடினமாக இருந்தது. நாங்கள் ஸ்கோரை பார்க்கவில்லை, வெற்றியை மட்டும்தான் பார்த்தோம். பேர்ஸ்டோ மீண்டும் ஃபார்முக்கு வந்திருப்பது அருமை. இந்த சீசனில் நாங்கள் கண்டறிந்த சிறந்த வீரர் சஷாங் சிங். அவருக்கான பணியை இன்றும் சிறப்பாகச் செய்தார். கொல்கத்தாவில் கிடைத்த பெரிய வெற்றியை நாங்கள் ரசிக்கிறோம்,” என்று தெரிவித்தார். https://www.bbc.com/tamil/articles/ckdq2ygdqpdo
    • இலங்கை சனாதிபதி தேர்தலுக்கும், இந்தியா தேர்தலுக்கும் வித்தியாசமிருக்கிறது. இந்தியா தேர்தலில் ஒருவருக்கே வாக்களிக்க முடியும். இலங்கை சனாதிபதி தேர்தலில் ஒருவருக்கு மட்டும் அல்லது 1,2,3 விருப்ப வாக்குகள் வாக்களிக்கலாம். 50% வித வாக்குக்கு மேல் ஒருவருக்கும் வாக்குகள் கிடைக்காத பட்சத்தில்  இறுதியாக வந்தவரை நீக்கிவிட்டு அவருக்கு வாக்களித்தவர்களின் 2 வது வாக்குகள்  சேர்க்கப்படும். 50% இன்னும் வராவிட்டால் இரூப்பவர்களில் கடைசியாக இருப்பரை நீக்கிவிட்டு அவருக்கு வாக்களித்தவர்களின் 2 வது வாக்குகளை சேர்த்து பார்ப்பார்கள். இப்படியே கடைசியாக மிஞ்சும் இருவரில் 50% க்கு மேல் வருபவர் தெரிவு செய்யப்படுவார். ஆனால் இதுவரை நடந்த தேர்தல்களில் முதலாவது வாக்குகலிலேயே வேட்பாளர் ஒருவர் 50%க்கு வாக்குகளை பெற்று ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டிருக்கிறார். இலங்கையில்  பலர் இம்முறையை கண்டு கொள்வதில்லை. சிவாஜிலிங்கத்துக்கு முதல் வாக்குகளையும் இரண்டாவது மூன்றாவது வாக்குகளில் பொன்சேகாவுக்கும் வாக்களித்திருக்கலாம். அவுஸ்திரேலியா தேர்தல்களிலும் 1,2,3,4 என்று வாக்களிக்கலாம். ஆனால் இங்கு பல தமிழர்கள் தொழில்கட்சிஅல்லது லிபரல் கட்சிக்கே முதலாவது வாக்காகவாக்களிக்கிறார்கள்.  ஆனால் நான் 2009 இல் எமக்காக அதிகளவு குரல் குடுத்த பசுமைக்கட்சிக்கே முதலாவது வாக்கை வழங்கி 2 வதாக பெரிய கட்சியான லிபரல் அல்லது தொழில்கட்சிக்கு வாக்களிப்பதுண்டு.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.