Jump to content

‘ஸ்ரீதேவி இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ்’ என்ற பெயரில், யாழ்ப்பாணத்துக்கு... புதிய ரயில் சேவை ஆரம்பம்.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%8E%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B8%E0%AF%8D.jpg

‘ஸ்ரீதேவி  இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ்’ ரயில் சேவை ஆரம்பம்.

‘ஸ்ரீதேவி இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ்’ என்ற பெயரில் யாழ்ப்பாணத்திற்கான புதிய ரயில் சேவை ஆரம்பிக்கப்படவுள்ளது.

கொழும்பு கோட்டையிலிருந்து இன்று மாலை 3.55 மணிக்கு புறப்படும் ‘ஸ்ரீதேவி இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ்’ இரவு 10 மணிக்கு யாழ்ப்பாணத்தை சென்றடையவுள்ளது.

அத்துடன், குறித்த ரயில் இரவு 10.16 காங்கேசன்துறையை சென்றடையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

அதேபோன்று காங்கேசன்துறையிலிருந்து அதிகாலை 3.45 மணிக்கு புறப்பட்டுஇ யாழ்ப்பாணத்தை வந்தடைந்து யாழ்ப்பாணத்தில் இருந்து காலை 4.05 புறப்பட்டு கொழும்பு கோட்டையினை காலை 10.24 மணிக்கு ‘ஸ்ரீதேவி இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ்’ வந்தடையவுள்ளது.

இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டுள்ள எஸ் 13 பவர் மூலம் ‘ஸ்ரீதேவி இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ்’ ரயில் இயக்கப்படவுள்ளது.

இதேவேளைஇ ‘ஸ்ரீதேவி இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ்’ சேவையுடன் யாழ்ப்பாணத்திற்கான ரயில் சேவைகள் 7 ஆக அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

http://athavannews.com/ஸ்ரீதேவி-இன்டர்சிட்டி-எ/

 

 

Link to comment
Share on other sites

1980 களில் என்றால் இந்த தொடரூந்தில் ❤️ இடம் பிடிக்க எந்த விலை கொடுத்தாவது பல  நண்பர்கள்(நண்பர்களுக்கு துணையாக நானும்) முண்டியடித்திருப்பர். இப்போது.....😪

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, tulpen said:

1980 களில் என்றால் இந்த தொடரூந்தில் ❤️ இடம் பிடிக்க பல நண்பர்கள் முண்டியடித்திருப்பர். இப்போது.....😪

Bildergebnis für ஸà¯à®°à¯à®¤à¯à®µà®¿

 

இப்ப, மட்டும் என்னவாம்.... 
சரோஜாதேவி,  சாவித்திரி,   ஸ்ரீதேவி   ரசிகர்கள் இன்னும் இருக்கின்றார்கள். :)

ஆனால் ஒன்று... முந்தி மாதிரி,  ஓடும்...  ரயிலில் பாய்ந்து,
 "சீட்"   பிடிக்க முடியாத,   "கொண்டிஷனில்"  இருந்தாலும்,  :grin:
அவர்கள்,  "ஸ்ரீதேவி ரயிலில்"  💓....  "ரிக்கற்"  பதிவு பண்ணி,  
பயணம் செய்து, தமது ஆசையை.... தீர்த்துக் கொள்வார்கள். :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, தமிழ் சிறி said:

கொழும்பு கோட்டையிலிருந்து இன்று மாலை 3.55 மணிக்கு புறப்படும் ‘ஸ்ரீதேவி இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ்’ இரவு 10 மணிக்கு யாழ்ப்பாணத்தை சென்றடையவுள்ளது.

அத்துடன், குறித்த ரயில் இரவு 10.16 காங்கேசன்துறையை சென்றடையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

அதேபோன்று காங்கேசன்துறையிலிருந்து அதிகாலை 3.45 மணிக்கு புறப்பட்டுஇ யாழ்ப்பாணத்தை வந்தடைந்து யாழ்ப்பாணத்தில் இருந்து காலை 4.05 புறப்பட்டு கொழும்பு கோட்டையினை காலை 10.24 மணிக்கு ‘ஸ்ரீதேவி இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ்’ வந்தடையவுள்ளது.

ஏழு மணிக்கே வெறிச்சோடும் வடக்கு.எப்படி இதில் பயணம் செய்யப் போகிறார்கள்.?

அதிகாலை 3 மணிக்கு ரொம்ப கஸ்டப்படப் போறாங்க.

வழிப்பறி செய்ய நல்ல வசதி.

சிறிதேவி பேயாக அலையுது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, tulpen said:

1980 களில் என்றால் இந்த தொடரூந்தில் ❤️ இடம் பிடிக்க எந்த விலை கொடுத்தாவது பல  நண்பர்கள்(நண்பர்களுக்கு துணையாக நானும்) முண்டியடித்திருப்பர். இப்போது.....😪

இப்போதும் முண்டியடிப்பார்கள் தமிழர்கள் ரசிகர்கள் அல்லவா. ஆனாலும் துபாய்க்கு பயணம் போறவர்கள் அதில் ஏறக்கூடாது அது சிறீதேவிக்குப் பிடிக்காது. 😲

Link to comment
Share on other sites

48 minutes ago, ஈழப்பிரியன் said:

ஏழு மணிக்கே வெறிச்சோடும் வடக்கு.எப்படி இதில் பயணம் செய்யப் போகிறார்கள்.?

அதிகாலை 3 மணிக்கு ரொம்ப கஸ்டப்படப் போறாங்க.

வழிப்பறி செய்ய நல்ல வசதி.

சிறிதேவி பேயாக அலையுது.

3 அல்லது 4 மணித்தியால வேலைக்காக கொழும்பு செல்கின்றவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இந்த சேவை இருக்க போகின்றது. கொழும்பில் 4 மணி நேரத்தில் முடியக் கூடிய வேலைக்கு கூட ஒரு நாளுக்கு மேல் அங்கு தங்கி இருக்க வேண்டி இருக்கு. அல்லது ஒரு நாளில் வேலை முடித்து திரும்பி வருவதெனில் ரூபா1500 இற்கு மேல் கொடுத்து ஒழுங்கான வசதிகளும் இல்லாத பேரூந்தில் ஏறி (சாரதியின் திமிர் பேச்சுகளையும் அடாவடித்தனமான போக்குகளையும் சகிச்சுக் கொண்டு) அதிகாலை கொழும்பில் இறங்கி எங்காவது தங்கி மதியம் வேலையை பார்த்து  மீண்டும் இரவு பயணித்து அடுத்த நாள் அதிகாலையில் தான் யாழ்ப்பாணம் சேர வேண்டி இருக்கும். இதனால் வீண் அலைச்சலும், நித்திரை குறைவும் ஏற்படுவதுடன் மோசமான விபத்துகளுக்கும் ஆளாகின்றனர்.

இந்த சேவையின் மூலம் 4 மணிக்கு யாழ்ப்பாணத்தில் ஏறி 10:16 இற்கு கொழும்பில் இறங்கி அலுவலை முடித்துக் கொண்டு 3:45 இற்கு கொழும்புக்கு ஏறி இரவு 10:25 இற்கு ஊர் போய் இரவுச் சாப்பாட்டை வீட்டிலேயே முடிச்சுக் கொண்டு வந்த களைப்பு தீர படுக்க முடியும். 3:45 இனை தவர விட்டால் அடுத்த ரயில் 6 மணி அளவில் இருக்கு என்று நினைக்கின்றேன்.

கொழும்பு - யாழ் வீதிப் போக்குவரத்தை விட ரயில் போக்குவரத்து பல மடங்கு பாதுகாப்பானது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
42 minutes ago, நிழலி said:

இந்த சேவையின் மூலம் 4 மணிக்கு யாழ்ப்பாணத்தில் ஏறி 10:16 இற்கு கொழும்பில் இறங்கி அலுவலை முடித்துக் கொண்டு 3:45 இற்கு கொழும்புக்கு ஏறி இரவு 10:25 இற்கு ஊர் போய் இரவுச் சாப்பாட்டை வீட்டிலேயே முடிச்சுக் கொண்டு வந்த களைப்பு தீர படுக்க முடியும். 3:45 இனை தவர விட்டால் அடுத்த ரயில் 6 மணி அளவில் இருக்கு என்று நினைக்கின்றேன்.

இந்த தொடரூந்தில் ஏறவும் இறங்கவும் நிச்சயம் யாருடைய உதவி தேவை.

புதியவர்கள் தனியே போனால் அவலங்கள் காத்திருக்கும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ஈழப்பிரியன் said:

இந்த தொடரூந்தில் ஏறவும் இறங்கவும் நிச்சயம் யாருடைய உதவி தேவை.

புதியவர்கள் தனியே போனால் அவலங்கள் காத்திருக்கும்.

ஊருக்கு போகும் போது.... நமக்கென்று,  ஒரு சில உறவுகள் இருக்கும் தானே....
அவர்கள், எம்மை... ரயில் நிலையத்துக்கு வந்து, வரவேற்பார்கள் தானே...
அதுகும்... இல்லா விட்டால், ஊருக்கு போகும் ஆசையையே... வராது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, நிழலி said:

கொழும்பு - யாழ் வீதிப் போக்குவரத்தை விட ரயில் போக்குவரத்து பல மடங்கு பாதுகாப்பானது.

உண்மைதான் பயணிகள் பாதுகாப்பு அதிகரிக்கும். ஆனால் பாதை கடப்பவர்களின் பாதுகாப்பு...??? முதலில் பாதுகாப்பான கடவைகளை நிர்மாணித்துவிட்டு எத்தனை ரயில்களை வேண்டுமானாலும் ஓட்டிச் சேவையை புரியட்டும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிறீதேவியின் விசிறி யாரோ.. சொறீலங்கா தொடருந்து துறையில் இருக்கினம் போல..

சிறீதேவியின் ரயில் பயணங்களில் இருந்து இந்த பயணத்தை எம்மவர்கள்.. இப்படி பாடி பாடி.. பயணிக்க வேண்டியான். அப்படியே.. இடையில... விபத்துகளில் மாணவர்களை... மாடுகளை பலியிட்டுப் பயணிக்க வேண்டியான்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, ஈழப்பிரியன் said:

ஏழு மணிக்கே வெறிச்சோடும் வடக்கு.எப்படி இதில் பயணம் செய்யப் போகிறார்கள்.?

அதிகாலை 3 மணிக்கு ரொம்ப கஸ்டப்படப் போறாங்க.

வழிப்பறி செய்ய நல்ல வசதி.

சிறிதேவி பேயாக அலையுது.

நீங்கள் இதை பல தடைவை  இங்கை இதை எழுதுகிறீகள்.வடக்கில் எங்கை 7 மணிக்கு எல்லாம் வெறிச்சோடுது என்டு எனக்கு ஒருக்காச் சொல்லுங்கோ.போய்ப் பார்ப்போம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, தமிழ் சிறி said:

‘ஸ்ரீதேவி  இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ்’

பெயரை  கேக்கவே ஒரே கிளுகிளுப்பாய் கிடக்கு...tw_yum:
அது சரி ஏன் ரயிலுக்கு ஸ்ரீதேவி எண்டு பெயர் வைச்சவங்கள்?
ஸ்ரீலங்கா தேவியாய் இருக்குமோ?

Link to comment
Share on other sites

3 hours ago, சுவைப்பிரியன் said:

நீங்கள் இதை பல தடைவை  இங்கை இதை எழுதுகிறீகள்.வடக்கில் எங்கை 7 மணிக்கு எல்லாம் வெறிச்சோடுது என்டு எனக்கு ஒருக்காச் சொல்லுங்கோ.போய்ப் பார்ப்போம்.

இப்படி கற்பனை கதைகளை கட்டி விடுவதில் எம்மவர் வல்லவர்.

41 minutes ago, குமாரசாமி said:

பெயரை  கேக்கவே ஒரே கிளுகிளுப்பாய் கிடக்கு...tw_yum:
அது சரி ஏன் ரயிலுக்கு ஸ்ரீதேவி எண்டு பெயர் வைச்சவங்கள்?
ஸ்ரீலங்கா தேவியாய் இருக்குமோ?

உங்களுக்கு சிறீதேவி எல்லாம் சரி வராது வேண்டும் என்கறால் சரோஜாதேவி என்று ஒரு புது சேவை தொடங்கலாம் 😁😁😁

5 hours ago, Paanch said:

உண்மைதான் பயணிகள் பாதுகாப்பு அதிகரிக்கும். ஆனால் பாதை கடப்பவர்களின் பாதுகாப்பு...??? முதலில் பாதுகாப்பான கடவைகளை நிர்மாணித்துவிட்டு எத்தனை ரயில்களை வேண்டுமானாலும் ஓட்டிச் சேவையை புரியட்டும். 

ஒழுங்காக பார்த்து கடந்தால் ஒரு பிரச்சினையும் வராது.

Link to comment
Share on other sites

3 hours ago, nedukkalapoovan said:

சிறீதேவியின் விசிறி யாரோ.. சொறீலங்கா தொடருந்து துறையில் இருக்கினம் போல..

சிறீதேவியின் ரயில் பயணங்களில் இருந்து இந்த பயணத்தை எம்மவர்கள்.. இப்படி பாடி பாடி.. பயணிக்க வேண்டியான். அப்படியே.. இடையில... விபத்துகளில் மாணவர்களை... மாடுகளை பலியிட்டுப் பயணிக்க வேண்டியான்.

 

சிங்களவனுக்கு சொறிலங்காவாது இருக்கு; எங்களுக்கு ஒரு பரப்பு நிலம் கூட இல்லை.அதே போல் சொறிலங்காவின் பொருளாதார வளர்ச்சியை பார்க்கும் போது அது நீண்டகாலம் சொறிலங்காவாக இராது.

Link to comment
Share on other sites

2 hours ago, குமாரசாமி said:

அது சரி ஏன் ரயிலுக்கு ஸ்ரீதேவி எண்டு பெயர் வைச்சவங்கள்?

அர்ஜுனா ரணதுங்கட கனவுக்கன்னியோ தெரியல?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Dash said:

 

உங்களுக்கு சிறீதேவி எல்லாம் சரி வராது வேண்டும் என்கறால் சரோஜாதேவி என்று ஒரு புது சேவை தொடங்கலாம் 😁😁😁

 

ஏன் நாங்கள் திரிஷா ரயில்,நயன்தாரா ரயில் பற்றி சிந்திக்கக்கூடாது? 😎

Link to comment
Share on other sites

நான் சொறிலங்கன்ட ட்ரைன்ல ஒருக்கா போனபிறகு போறதில்ல. அதுவும் இடைல ஒருதரம் அந்தப் பயணமும் எப்பிடி இருக்கு என்டு தெரிஞ்சுகொள்ள தான்.

ஒரே குலுக்கம். வசதி இல்லாத சீட்கள். தடிங் புடிங் ஊஊ என்டு ஒரே சத்தம்.  
நிறையபேர் பெரிய பொதிகளை தலைக்கு மேல ரக்ல வைச்சுட்டு படுறபாட்டை பாக்க நிம்மதியும் போய்டும். இடைல ஏறுற / இறங்குற ஆக்களிட தொந்தரவுகள் எக்கச்சக்கம். நிறைய சிங்கள ராணுவக் காடையர்கள் கூட பயணிப்பது. இப்பிடி நிறைய பிரச்சினைகள்.

இரவு பஸ் பயணம் மிகமிக வசதியானது. சீட் வசதியானது. குலுக்கம் மிக குறைவு. சத்தம் மிக குறைவு. பொதிகள் பிரச்சினை இல்லை. இடைல ஏறுற / இறங்குற ஆக்களிட தொந்தரவுகள் இல்லை. 7-8 மணிநேர பயணத்துல 5 மணிநேரமாவது நிம்மதியா நித்திரை கொள்ளலாம். வசதியான இடத்துல ஏறி, வசதியான இடத்துல இறங்கலாம். எல்லாத்துக்கும் மேல முயற்சி உள்ள சில தமிழனின் பொருளாதாரத்தை மேம்படுத்த என்னாலான மிகச்சிறு பங்களிப்பு என்ற திருப்பதி. இந்த பஸ்களில் பணிபுரியும் உதவியாளர்கள் பெரும்பாலும் பக்குவமற்றவர்கள் என்ற குறைபாடு இருந்தாலும் என்ன செய்வது நமது சகோதரன் தானே என்டு மனதைத் தேத்திக்கொள்வதுண்டு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, குமாரசாமி said:

பெயரை  கேக்கவே ஒரே கிளுகிளுப்பாய் கிடக்கு...tw_yum:
அது சரி ஏன் ரயிலுக்கு ஸ்ரீதேவி எண்டு பெயர் வைச்சவங்கள்?
ஸ்ரீலங்கா தேவியாய் இருக்குமோ?

சில வேளை சிறிலங்கா தேவி என்றால் ஆர்ப்பாட்டம் பண்ணுவார்கள் என நினைத்து அரசாங்கம் ஶ்ரீ தேவி என பெயரை வச்சிருக்கலாம் தமிழ்ர்களும் ஶ்ரீ தேவி என்றால் வாயையும் சூ...... தையும் அடைக்கலாம் என நினைச்சிருக்கும் போல .

ஆனால் ஶ்ரீதேவியில் பலர் குந்தி போகத்தான் போறார்கள் ஐ மீன் பயணம் செய்யத்தான் போகிறார்கள் இதுக்குள்ள கதை வேற

1 hour ago, Rajesh said:

நான் சொறிலங்கன்ட ட்ரைன்ல ஒருக்கா போனபிறகு போறதில்ல. அதுவும் இடைல ஒருதரம் அந்தப் பயணமும் எப்பிடி இருக்கு என்டு தெரிஞ்சுகொள்ள தான்.

ஒரே குலுக்கம். வசதி இல்லாத சீட்கள். தடிங் புடிங் ஊஊ என்டு ஒரே சத்தம்.  
நிறையபேர் பெரிய பொதிகளை தலைக்கு மேல ரக்ல வைச்சுட்டு படுறபாட்டை பாக்க நிம்மதியும் போய்டும். இடைல ஏறுற / இறங்குற ஆக்களிட தொந்தரவுகள் எக்கச்சக்கம். நிறைய சிங்கள ராணுவக் காடையர்கள் கூட பயணிப்பது. இப்பிடி நிறைய பிரச்சினைகள்.

இரவு பஸ் பயணம் மிகமிக வசதியானது. சீட் வசதியானது. குலுக்கம் மிக குறைவு. சத்தம் மிக குறைவு. பொதிகள் பிரச்சினை இல்லை. இடைல ஏறுற / இறங்குற ஆக்களிட தொந்தரவுகள் இல்லை. 7-8 மணிநேர பயணத்துல 5 மணிநேரமாவது நிம்மதியா நித்திரை கொள்ளலாம். வசதியான இடத்துல ஏறி, வசதியான இடத்துல இறங்கலாம். எல்லாத்துக்கும் மேல முயற்சி உள்ள சில தமிழனின் பொருளாதாரத்தை மேம்படுத்த என்னாலான மிகச்சிறு பங்களிப்பு என்ற திருப்பதி. இந்த பஸ்களில் பணிபுரியும் உதவியாளர்கள் பெரும்பாலும் பக்குவமற்றவர்கள் என்ற குறைபாடு இருந்தாலும் என்ன செய்வது நமது சகோதரன் தானே என்டு மனதைத் தேத்திக்கொள்வதுண்டு.

இதை பலர் ஏற்றுக்கொள்வார்கள் சிலர் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் தற்போது நடக்கும் விபத்துக்களால் சிலர் பஸ்ஸில் போவதை தவிர்த்தே வருகிறார்கள்  எப்போதும் போட்டி 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 9/5/2019 at 3:00 PM, சுவைப்பிரியன் said:

நீங்கள் இதை பல தடைவை  இங்கை இதை எழுதுகிறீகள்.வடக்கில் எங்கை 7 மணிக்கு எல்லாம் வெறிச்சோடுது என்டு எனக்கு ஒருக்காச் சொல்லுங்கோ.போய்ப் பார்ப்போம்.

சுவை நீங்க கனதூரம் போகத் தேவையில்லை.

நல்லூர் திருவிழாவையே பாருங்கள்.முன்னர் 8-9 மணிவரை நடந்த திருவிழா 6-7 மணியாகவே இன்னமும் இருக்கிறது.7.30க்கே இந்த இடம் அமைதியாகிறது.

முன்னர் 11 மணிவரை ஓடிய பேரூந்துகள் இன்றுவரை விரைவாகவே(எத்தனை மணியென்று தெரியவில்லை)சேவையை முடித்துக் கொள்கின்றன.

2017 இல் இருமாதங்களாக நின்ற போது ஏற்பட்ட அனுபவங்களே.

மற்றபடி எமது மக்கள் சந்தோசமாக இருந்தால் உங்களைப் போலவே எனக்கும் சந்தோசம்.

இந்த நிலையில் சிறிதேவி புகைவண்டி ஊர் அடங்கிய பின்பே வந்து போகிறது என்பதே எனது ஆதங்கம்.

Link to comment
Share on other sites

2 hours ago, ஈழப்பிரியன் said:

சுவை நீங்க கனதூரம் போகத் தேவையில்லை.

நல்லூர் திருவிழாவையே பாருங்கள்.முன்னர் 8-9 மணிவரை நடந்த திருவிழா 6-7 மணியாகவே இன்னமும் இருக்கிறது.7.30க்கே இந்த இடம் அமைதியாகிறது.

முன்னர் 11 மணிவரை ஓடிய பேரூந்துகள் இன்றுவரை விரைவாகவே(எத்தனை மணியென்று தெரியவில்லை)சேவையை முடித்துக் கொள்கின்றன.

2017 இல் இருமாதங்களாக நின்ற போது ஏற்பட்ட அனுபவங்களே.

மற்றபடி எமது மக்கள் சந்தோசமாக இருந்தால் உங்களைப் போலவே எனக்கும் சந்தோசம்.

இந்த நிலையில் சிறிதேவி புகைவண்டி ஊர் அடங்கிய பின்பே வந்து போகிறது என்பதே எனது ஆதங்கம்.

 

 

பொதுவாகவே நகரப் புறம் தவிர்ந்த ஏனைய பகுதியில் இருக்கும் எம்  ஊர் மக்கள் இரவு 8 மணிக்கு முன் இரவுச் சாப்பாட்டை முடிச்சுக் கொண்டு 10 மணிக்கு முதல் படுக்கப் போகும் வழக்கத்தைக் கொண்டவர்கள். இதற்கு முக்கிய காரணங்கள் அடுத்த நாள் விடிய பாடசாலைக்கு போக வேண்டும், வேலைக்கு போக வேண்டும், தோட்டங்களுக்கு போக வேண்டும், கோயிலுக்கு போக வேண்டும் மற்றும் இன்னபிற விடிய வேலைகளுக்காக.. ஆனால் நகர்புறத்தில் இவை எல்லாம் கொஞ்சம் தாமதமாகவே இடம்பெறும்.

நான் கடந்து 3 வருடங்களாக தொடர்ந்து ஊர் போகின்றபடியால் அங்குள்ள இன்றைய வழக்கங்களை கொஞ்சம் அதிகமாக நுனிப்புல் மேய்ந்து இருக்கின்றேன். அப்படி மேய்ந்ததில் இரவு 9 மணிக்கும் யாழ் நகரப் பகுதி உயிர்ப்புடன் இயங்கிக் கொண்டு இருந்ததை அவதானித்துள்ளேன்.  கொழும்பு - யாழ் பேரூந்து வண்டி சேவை கூட 9 மணிக்கு பின் தான் பயணிக்க தொடங்குகின்றது (பண்ணை வீதிக்கருகில் 7:30 இற்கே ஆரம்பித்து பின் யாழ் டவுனுக்கு வந்து அங்கிருக்கும் பயணிகளை ஏற்ற 9 மணிக்கும் மேலாகின்றது), அதுவரைக்கும் அனேகமான உணவு விடுதிகள் தொடக்கம் பலசரக்கு கடைகள் வரை திறந்து இருக்கின்றன. முச்சக்கர வண்டிகள் ஓடித் திரிகின்றன. மொபைல் போன்கள் திருத்தும் கடைகள் அப்ப தான் பூட்டத் தொடங்குகின்றன.

நான் யாழ்ப்பாணத்தில் கொத்து ரொட்டி வாங்க கடைக்கு போனது இரவு 8:30. சாராயக் கடையும் திறந்து இருந்தது (கொத்து சாப்பிட முதல் குடிக்க வேண்டும் அல்லவா), என்னை பார்த்து விட்டு சித்தியின் மகன போனது இரவு 10 மணிக்கு...

இப்படிச் சொல்வதால் அங்கு எந்த அச்சமும் அச்சுறுத்தல்களும் கள்ளர் பயமும் வாள்வெட்டு அபாயங்களும் இல்லை என்பதல்ல. எல்லாம் இருக்கின்றன். சனம் வீட்டு கேட்டினை 8 மணிக்கே பூட்ட தொடங்குகின்றனர்.. ஆனால் புலம்பெயர் தமிழ் மீடியாக்கள் ஊதிப் பெருப்பித்து காட்டும் பிம்பத்தை போல அல்ல யாழ்ப்பாணமும் அதனை சுற்றியுள்ள இடங்களும் (கிளிநொச்சியில் கூட இரவு 9 மணிவரைக்கும் உயிர்ப்புடன் இருப்பதாக அறிய முடிகின்றது).

இந்த வருடமும் ஊர் போக கிளம்புகின்றேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ஈழப்பிரியன் said:

சுவை நீங்க கனதூரம் போகத் தேவையில்லை.

நல்லூர் திருவிழாவையே பாருங்கள்.முன்னர் 8-9 மணிவரை நடந்த திருவிழா 6-7 மணியாகவே இன்னமும் இருக்கிறது.7.30க்கே இந்த இடம் அமைதியாகிறது.

முன்னர் 11 மணிவரை ஓடிய பேரூந்துகள் இன்றுவரை விரைவாகவே(எத்தனை மணியென்று தெரியவில்லை)சேவையை முடித்துக் கொள்கின்றன.

2017 இல் இருமாதங்களாக நின்ற போது ஏற்பட்ட அனுபவங்களே.

மற்றபடி எமது மக்கள் சந்தோசமாக இருந்தால் உங்களைப் போலவே எனக்கும் சந்தோசம்.

இந்த நிலையில் சிறிதேவி புகைவண்டி ஊர் அடங்கிய பின்பே வந்து போகிறது என்பதே எனது ஆதங்கம்.

ஐயா,

முன்னமும் “பட பஸ்” என்று அர்தசாமத்தில் ஓடும் பஸ் இருந்ததுதானே?

நாம் பலர் 24/7 வாழக்கைக்கு பழகி விட்டு, ஊருக்குப் போனதும் ஊர் ஏதோ 7 மணிக்கே அடங்கி விடுவது போல ஒரு பிரமை ஏற்படுகிறது.

ஊரில் இப்போதும் மக்கள் சூரியனை பின்பற்றியே பெரிதும் தமது அலுவல்களை செய்கிறார்கள். 8 மணிக்கு அநேகமாக எல்லா வீடுகளிலும் சாப்பாடு ஆகிவிடும். இதுவே வெளிநாட்டில் எண்டால் 10 மணி.

நைற் சிப்ட் என்பது அங்கே மிக அரிதானது, எனவே 8 மணிக்கு அங்கே ஊரடங்குவது வழமையே. 

ஆனால், திருவிழாக்கள், பார்டிகள், இரவுக்காட்சிகள் எல்லாமும் இருக்கிறன.

இரவில் பயணம் செய்பவர்கள் அநேகமாக முன்கூட்டியே வீடு திரும்பும் ஏற்பாட்டுடனே வருகிறார்கள். 

இந்த ரெயிலில் போவோர்கூட, நாவற்குழி வர, தெரிஞ்ச ஓட்டோக்கு அல்லது நண்பனுக்கு ஒரு கோல் கொடுப்பர் - அவர்கள் ஸ்டேசனில் வந்து ஏற்றிக் கொள்வர்.

ஆனால் நிழலி சொன்னது போல இந்த சேவை - நல்லதொரு அம்சமே.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்னொரு விடயம். 

நானறிந்த வரையில் வெளிநாடு வந்த எல்லோருமே செலவழிக்கும் வேகத்தை அதிகப்படுத்தி உள்ளோம். தேவையில்லாமல் டிவியை ஓட விடுவது, வாகனத்தை ஸ்டார்ட்டில் விடுவது, நடக்கும் தூரத்துக்கு வாகனம் எடுப்பது, மின் குமிழிகளை அநியாயமா எரிய விடுவது, பகலில் செய்ய கூடிய விடயங்களை ( பார்டி, சிறு நிகழ்வுகள்) இரவில் விளக்கொளியில் செய்வது இப்படி.

ஆனால், பல ஆடம்பரங்கள் வந்த பின்பும், நுண்கடன் தொல்லைகளுக்குள்ளும் மக்கள் பெரிதும் அங்கே இன்னமும் சிக்கனமாகவே வாழ்கிறார்கள். குறிப்பாக யாழில்.

திருமண வைபவங்கள், ரிசப்சன் கூட பகலில்தான். 

களவு இல்லை என்பதல்ல, ஆனால் அது ஒரு பூதாகாரமான பிரச்சினை அல்ல. 

மக்களின் இயல்பு நிலையே அப்படித்தான்.

அடுத்த முறை கிழக்குக்கு போனால், ஆடி அமாவாசை நேரம் மட்டகளப்புக்கு போங்கள்.

நகர், கல்லடி போன்ற இடங்களில் மாரி, காளி கோயில்கள் வருடாந்த பூசை, தீ மிதி என இரவிரவாக ஒரே அமர்களப்படும்.

அடுத்து மாமாங்க திருவிழா இராபவனி, கீரைப்புட்டு, கடைகள் என 2 கிழமை ஒரே கொண்டாட்டம்.

போன தடவை சூரன் போரன்று கசூரினா பீச்சில் இருந்து 7 மணிக்கு வெளிகிட்டேன், ஒவ்வொரு ஊரிலும் சூரனைப் பார்த்து, நண்பரின் சண்டிலிப்பாய் இல்லத்துக்கு வர 2 மணி நேரம் எடுத்தது. அவ்வளவு நெரிசல்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 9/8/2019 at 2:47 PM, ஈழப்பிரியன் said:

சுவை நீங்க கனதூரம் போகத் தேவையில்லை.

நல்லூர் திருவிழாவையே பாருங்கள்.முன்னர் 8-9 மணிவரை நடந்த திருவிழா 6-7 மணியாகவே இன்னமும் இருக்கிறது.7.30க்கே இந்த இடம் அமைதியாகிறது.

முன்னர் 11 மணிவரை ஓடிய பேரூந்துகள் இன்றுவரை விரைவாகவே(எத்தனை மணியென்று தெரியவில்லை)சேவையை முடித்துக் கொள்கின்றன.

2017 இல் இருமாதங்களாக நின்ற போது ஏற்பட்ட அனுபவங்களே.

மற்றபடி எமது மக்கள் சந்தோசமாக இருந்தால் உங்களைப் போலவே எனக்கும் சந்தோசம்.

இந்த நிலையில் சிறிதேவி புகைவண்டி ஊர் அடங்கிய பின்பே வந்து போகிறது என்பதே எனது ஆதங்கம்.

நன்றி பிரியன் உங்கள் பதிலுக்கு.நான் வருடத்திற்க்கு 3 மாதம் மட்டில் ஊரில் நிற்ப்பவன்.அதனால் தான் உங்களின் கருத்து என்னை குடைந்து கொன்டிருந்தது.மற்றும் படி உங்களுடன் முரன்படும் நோக்கம் எனக்கு இல்லை. உங்களின் நிலைப்பாட்டுக்கு மேலை நிழழியும் கோசானும் பதில் கோடுத்திருக்கிறாகள்.அது தான எனது பதிலும்.மீண்டும் நன்றி.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • உங்களால் எப்போதும் தமிழர்களை ஆள முடியாது.. வைரலாகும் ராகுல் காந்தி வீடியோ 04 JUN, 2024 | 04:18 PM   பா.ஜ.க.-வால் தமிழ்நாட்டை, தமிழர்களை எப்போதும் ஆளவே முடியாது என காங்கிரஸ் கட்சியின் ராகுல் காந்தி பாராளுமன்றத்தில் பேசியிருந்தார். கடந்த சில மாதங்களுக்மாதங்களுக்கு முன் இவர் பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டது. பாராளுமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் இன்று (ஜூன் 4) தமிழ்நாட்டில், தி.மு.க. தலைமையிலான இந்தியா கூட்டணி வேட்பாளர்கள் கிட்டத்தட்ட அனைத்து தொகுதிகளிலும் முன்னிலையில் உள்ளனர். பல தொகுதிகளில் தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்கள் வெற்றி உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை தமிழகத்தில் பா.ஜ.க. எந்த தொகுதியிலும் வெற்றி பெறாத சூழல் உருவாகி உள்ளது. இந்த நிலையில், "பா.ஜ.க.-வால் தமிழகத்தை ஆளவே முடியாது" என்று பேசிய ராகுல் காந்தியின் வீடியோ தற்போது மீண்டும் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. https://www.virakesari.lk/article/185310
    • "விடியல் உன் கையில்"     "இரவின் மடியில் விடியலுக்கு காத்திராதே விழிகள் திறந்தால் விடியல் உன் கையில்!"   நான் என் வீட்டின் மாடத்தில் தூணை பிடித்துக்கொண்டு நிற்கிறேன். என்னைச் சுற்றி என்ன நடக்குது என்று ஒன்றுமே புரியவில்லை. உள்ளத்தில் கொதிக்கும் வெப்பம் தாங்கமுடியாமல் இருக்கிறது. நான் இதுவரை சென்ற பாதை இப்ப குழப்பத்தை தருகிறது. நான் கீழே பார்க்கிறேன். வீதியின் ஓரத்தில் ஒரு சிவத்த மோட்டார் வாகனம் விடாமல் சத்தம் போட்டுக் கொண்டு இருக்கிறது. என் உள்ளமும் அதற்கு ஈடாக சிவந்து அலறிக் கொண்டு இருந்தது. இப்ப மாலை ஆறு மணி, இருட்ட ஆரம்பித்துக் கொண்டு இருந்தது. எனக்கு எரிச்சல் எரிச்சலாக இருந்தது. என் கண்கள் வீதியால் போகும் வாகனங்களை அங்கும் இங்குமாக நோட்டமிட்டபடி தொங்கிய தோள்களுமாக வாடிய முகமுமாக இருந்தது. என் இதயத்தில் ஒரு வெற்றிடம் விடிவு இன்றி தவிக்கிறது. அது என்ன ? என் தோல்வி தான் என்ன ? எது உண்மையில் என் வாழ்வில் பிழைத்தது? என் மனம் பல பல சிந்தனை வெள்ளத்தால் மூழ்கி, அவை ஒவ்வொன்றும் என்னைப் பார்த்து கத்திக்கொண்டு இருந்தன. அந்த வெறுமை என்னையே விழுங்கும் அளவிற்கு இருக்கிறது. அது தான் நான் உங்களுடன் என் கதையை இப்ப பகிர்கிறேன்.   நான் இலங்கையை விட்டு ஒரு அந்நியனாக லண்டன் வந்த நாளை இன்னும் மறக்கவில்லை. என் வாழ்வு ஒரு நோக்கம் கொண்டதாக, ஒரு பெரிய அந்தஸ்து நிலையில் என்னை அமைக்க ஆசைப் பட்டேன். அதை இந்த லண்டன் மாநகரம் எனக்கு தந்தது. நான் வந்து மூன்றாம் நாளே ஒரு பெரிய நிறுவனத்தில் உதவி முகாமையாளராக பதவி பெற்றேன். உண்மையில் என் நோக்கம் இதை விடப் பெரிது, என்றாலும் முதல் படியில் கால் வைத்தல் தானே ஏணியின் கடைசிப் படிக்குப் போகலாம் என்பது எனக்கு நன்றாகத் தெரியும். அது மட்டும் அல்ல, நான் என் முழுக்கவனத்தையும் அந்த நிறுவனத்திலும் என் வேலையிலும் கட்டாயம் செலவழிக்க வேண்டும் என்பதும் தெரியும். ஆனால் என் முதல் தவறை, இப்ப என் உள்ளத்தை தாக்கும் வேதனை, சொல்லிக்கொண்டு இருக்கிறது!   நான் என் வாழ்வின் மற்ற விடயங்களில் பெரிதாக கவனம் செலுத்தாமல், வேலை, வேலை , என்றே இருந்துவிட்டேன். பதவி, பதவி இதுவே இதுவே என் முழு நோக்கமாக இருந்தது. இப்ப நினைத்தால் நான் முழு முட்டாள் என்று தோன்றுகிறது. வீடு வாங்கினேன், மோட்டார் வண்டி வாங்கினேன் , பதவி உயர்வு அடைந்தேன். என் செல்வாக்கு நல்ல அழகான பெண்ணை மனைவியாக்கியது. ஆனால் என்னை எதுவுமே திருப்தி செய்யவில்லை. நான் அந்த நிறுவனத்தின் தலைமை பதவியை அடையவேண்டும், என் செல்வாக்கு , அதிகாரம் அந்த நிறுவனத்தின் ஒவ்வொரு பங்கிலும் ஒலிக்க வேண்டும். அது வரை நான் ஓயப்போவதில்லை! அது தான் என் உள்ளத்தில் எதிர் ஒலித்துக்கொண்டு இருந்தது!   ஆனால் நான் மிகத் தவறு செய்தது இப்ப தான் புரிகிறது. நான் எனக்கு ஒரு மனைவி இருக்கிறாள், அவளுக்கும் ஆசைகள் இருக்கும் என்பதை மறந்தே விட்டேன்.   அந்தஸ்துக்கு ஒரு அழகிய மனைவி, கொலு பொம்மைமாதிரி இருப்பது வாழ்வு அல்ல என்பதை நான் கனவிலும் நினைக்கவில்லை. நான் குடும்பத்தில் இருந்து மனத்தளவில் மிகத் தூரவே இருந்துவிட்டேன். ஆமாம், முதல் இரவு நாம் சந்திக்கும் பொழுது அவள் எத்தனை எதிர்பார்ப்புடன் இருந்தாள் என்பதை, இப்ப தான் அவளின் நாட்குறிப்பில் இருந்து அறிகிறேன்.   'என் கணவர் வந்ததும் ஆரத்தழுவி அன்பு செலுத்துவார் என்று எத்தனையோ கனவு கண்டேன். நாம் முதல் முதல் தனிய ஒரு அறையில் சந்திக்கிறோம். பகல் முழுவதும் திருமண கொண்டாட்டம், நண்பர்கள் உறவினர்கள் வாழ்த்துக்கள் என கழிந்தது. இரவு ஆனதும் ஆனந்தமாய் மகிழ்திருக்கலாம் என்று ஏங்கி நின்றேன். ஆனால் அவரோ, தன் நிறுவனம் பற்றியும், அதில் தான் சம்பள உயர்வுடன் அடுத்த மாதம் புது பதவிக்கு போவதாகவும், நான் வந்த ராசி வேலை செய்வதாகவும் புகழ்ந்தாரே தவிர, இது எம் இருவரின் முதல் இரவு என்பதை எனோ மறந்து விட்டார். என்ன செய்வது கணவன் கதை கதைத்தான். கண் வெட்டாமல் அவனை நான் ரசித்து கொண்டு இருந்தேன். அவரின் பேச்சின் வலி கூட எனக்கு வலிக்வில்லை. அவரை கட்டிப் பிடிக்கும் தைரியம் எனக்கில்லை. மெல்ல வாய்திறந்து, நீங்கள் அழகாக இருக்கின்றீர்கள் என்று சொன்னேன். அவரோ எல்லாம் தன் பதவி தந்த அழகு என்றார்'. என்று குறிப்பிட்டு இருந்தார்!   எனக்கு அவளை மாதிரியே அழகிய பெண்குழந்தை மூன்று ஆண்டுகள் கழித்து பிறந்தது. அவளுக்கு அது ஒரு ஆறுதல், ஆனால் நானோ இன்னும் என் வேலையில் கடுமையாகவும், பதவி, அதிகார மோகம் அபின் மாதிரியும் என்னை அதில் அடிமையாக்கி விட்டதை நான் உணரவே இல்லை. அவள் பலதடவை தனக்கு மகன் வேண்டும் என்று கூறியதையே பொருட்படுத்தாமல், எல்லாம் என் முழு நோக்கம் அடையட்டும் என்று தள்ளி கடத்திவிட்டேன் . அது அவளை எவ்வளவு பாதிக்கும் என்று யோசிக்கவே இல்லை. நாளடைவில் நான் எனக்கே அந்நியனாகி விட்டேன்!   எட்டு ஆண்டுகளுக்கு பின் அவள் மனநிலை பாதித்து தன்னையே இழக்க தொடங்கிவிட்டாள். அவள் உடல்நிலை உருக்குலைய தொடங்கியது. என் மனைவி என்று நான் பெருமை பட்ட அழகு இப்ப அவளிடம் இல்லை. ஆனால் நான் இப்ப அந்த நிறுவனத்தின் தலைமை பதவியில் மிகப்பெரிய வசதிகளுடன், அதிகாரத்துடன் இருக்கிறேன். வைத்தியர் என்னிடம் வந்து அவள் உயிருக்கு எந்த ஆபத்தும் இல்லை. அவளுக்கு நல்ல கணவனாக, அவளின் விருப்பு வெறுப்பு அறிந்து நெருக்கமாக அன்பு காட்டினால், அவள் விரைவில் குணமடைவார் என்றார்.   இப்ப என் பதவி, பொறுப்பு அதிகாரம் எல்லாம் மிக உச்சியில். எனக்கு நேரம் கிடைப்பதே குறைந்து விட்டது, ஏன், என்னையே இப்ப கவனிக்க முடியாத நிலையாகி விட்டது. அது தான் நான் இப்ப மாடியில் நின்று வெளியே பார்த்துக் கொண்டு இருக்கிறேன். கொஞ்சம் மாடியில் இருந்த கதிரையில் சாய்ந்து அயர்ந்துவிட்டேன். என் கன்னத்தை யாரோ தடவுவது போல ஒரு உணர்வு ஏற்பட்டு கண்விழித்தேன். என் ஐந்து வயது மகள் தான். நான் விழித்ததும் ஒரு முத்தம் தந்தார், மகளின் கண்ணில் கண்ணீர் ஒழுகிக்கொண்டு இருந்தது. அந்த கண்ணீர் பல கேள்விகளை என் மேல் கேட்டுக் கொண்டு இருந்தது. நான் என்றுமே நல்ல தந்தையாக மகளுக்கு இருந்தது இல்லை . ஆக இந்த ஐந்து ஆண்டும் தேவைக்கு அதிகமான விலை உயர்ந்த உடைகள், தேவைக்கு அதிகமான விலை உயர்ந்த விளையாட்டு சாமான்கள் இப்படி அளவற்று கொடுத்தேனே தவிர, ஒரு சொட்டு அன்பாக பேசியோ, விளையாடவோ, அணைக்கவோ இல்லை. எல்லாம் என் மனக்கண்ணில் ஓடிக்கொண்டு இருந்தது.   நான் என் மகளை தூக்கினேன். அவரின் கண்ணீரை துடைத்தேன். மகள் என்னை யாரோ ஒருவன் போல பார்த்தார். பின் ' அப்பா , அம்மா வருவாரா ?' என்று கேட்டார். நான் அவரை கட்டிப்பிடித்து ' கட்டாயம் வருவார், விடியல் பிறக்கும்' என்றேன். விடியல் என் கையில் தான் என்பதை, காலம் கடந்தாலும், மகளின் பார்வை, கண்ணீர் உணர்த்தியது. மகள் அதற்குப் பின் என் கையில் உறங்கிவிட்டார்.   இப்ப இருளாகிவிட்டது. அந்த இருண்ட வானில் அழகிய நிலவை பார்த்தேன். அது என் மனைவியின் முகம் மாதிரி எனக்கு தோன்றியது. இத்தனை நாளாக புறக்கணித்த என் வெறுமையை நிரப்பும் காலம் வந்துவிட்டது என்று நினைத்தேன். ஒரு தாள் எடுத்து, நான் இதுவரை முயன்று பெற்ற அந்த தலைமை பதவிக்கு விடை கொடுக்க, அதில் இருந்து விலகும் ராஜினாமா கடிதம் எழுதினேன், அதில் பிற்குறிப்பாக நான் அங்கேயே ஒரு சாதாரண ஊழியராக வேலை செய்ய விருப்பம் என்றும் குறிப்பிட்டேன், எனக்கு இப்ப மன நிம்மதி, மகளை கட்டிலில் கிடத்திவிட்டு, படுத்து இருந்த மனைவியின் பக்கத்தில் போனேன். குனிந்து அவளுக்கு ஒரு முத்தம் கொடுத்து, அவளின் தலையை என் மடியில் கிடத்தினேன், அவளின் கண்ணில் இருந்து அந்தக் கண்ணீர் என் மடியை நனைத்தது. அவளின் கையை வருடியபடி நான் என்றும் உனக்கு மட்டுமே கணவன், என் பதவியை, அந்த அதிகார மோகத்தை விவாகரத்து செய்துவிட்டேன் என்று கத்தியே விட்டேன்!     "விடியல் பிறக்கிறது, காற்றில் அதன் குரல் கேட்கிறது என் உலகம் விழிக்கிறது, மண்டியிட்டு உன்னைச் சந்திக்கிறேன் உன் மடியில் என் ஆத்மா இனி உறங்கட்டும் எம் வாழ்வு உன் கையில் இனிமையாகட்டும்!     [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
    • நான் சொன்னது சத வீதத்தை அல்ல. நோட்டாவுக்கு கூட தனியாக சதவீதம் போட்ட தற்ஸ்தமிழ் அண்ணன் கட்சியை ஒரு பொருட்டாக கூட மதிக்கவில்லை என்பதை. வியஜ பிரபாகரன், செளமியா முன்னே வருவது போல் ஆசை காட்டி என்னை மோசம் செய்துவிட்டார்கள்🤣. போன சட்ட மன்றத்தேர்தலில் தமிழ் நாட்டில் 3 வது பெரிய கட்சி…. இப்போ 8 தொகுதியில் 3வது பெரிய கட்சி🤣.
    • "தமிழர்களின் மரபும் பாரம்பரியமும்" / பகுதி: 15     எமது முன்னோர்கள் நல்ல மருந்து ஒன்றைக் கண்டு பிடித்து அதை உடல் நலியும் நேரத்தில் உண்மையாகக் கடைப்பிடித்து ஒழுங்காக நடை முறைப்படுத்தி நலத்துடன் வாழ்ந்து சென்றனர். அந்த அற்புத மருந்துக்கு பெயர் தான் உண்ணாவிரதம் ஆகும். மிருகங்கள் பொதுவாக தமது உடம்பு நோய்வாய் படும் பொழுது சாப்பிடுவதை நிறுத்தி விடுகிற உணர்வைப் பெற்று சும்மா இருந்து அதன் மூலம் அது குணமடைவதாக ஒரு குறிப்பு உண்டு.   எனவே மிருகத்தில் இருந்து பரிணமித்த மனிதனுக்கு அது தெரிந்து இருக்க அதிக வாய்ப்புண்டு. உதாரணமாக உண்ணாவிரதம் மூலம் தேகத்தில் உள்ள நோய் எதிர்ப்புச் சக்தியானது அதிக வலிமையடைதலும், அதனால் நீண்ட நாட்கள் நலமுடன் வாழுதல் ஆகும். அது மட்டும் அல்ல, இந்த உண்ணாவிரதம் குழப்பமில்லாத, பத்தியம் என்று கடுமையான விதி முறைகள் இல்லாத, மிகவும் பத்திரமான மருந்து எனலாம். மேலும் உண்ணா விரதத்தால், உடல் இலேசாக மாறுகிறது. தூய்மையடைகிறது. மூளை வளம் அதிகரிக்கிறது.   இன்று உண்ணாவிரதம் இருப்பது கணிசமான இதய ஆரோக்கியத்துக்கு வழி வகுத்து இருப்பதாக ஆய்வு மூலமாகவும் தகவல் வெளியிடப் பட்டுள்ளது.   "நோயிலே படுப்பதென்ன பெருமானே நீ நோன்பிலே உயிர்ப்பதென்ன பெருமானே"   என்று பாரதியும் பாடுகிறான். அதாவது ”நோய் வந்த போது நீ சோர்ந்து படுத்துக் கொள்கிறாய். ஆனால் நோன்பிருக்கும் போது உண்ணாதிருந்தும் மிகத்தெம்புடன் உற்சாகமாய் காணப்படுவதன் காரணம் என்ன” என்று வியக்கிறான் பாரதி.   உண்மையில் உண்ணா நோன்பு இருக்கும் போது உயிராற்றல் உடலில் உள்ள கழிவுப் பொருள்களை எவ்வளவுக்கு முடியுமோ அவ்வளவுக்கு வெளியேற்றி விடுகிறது. இதனால் உடலின் உறுப்புகள் தூய்மையடைகின்றன. மனமும் தூய்மை யடைகிறது. உண்மையாக உயிர்த்தெழ முடிகிறது என்று பாரதி சுட்டிக் காட்டுகிறான். நோன்பு அல்லது பசித்திரு என்றால் பட்டினி கிடப்பது அல்ல. வயிற்றைக் காயப்போடுதல் ஆகும். இதை சித்த ஆயுர் வேத மருத்துவர்கள் மிகச்சிறந்த மருந்து என்பார்கள். இல்லாமையால் பட்டினி கிடப்பதற்கும், எல்லாம் இருந்தும் உண்ணாமல் நோன்பு இருப்பதற்கும் நிறைய வேறுபாடு உண்டு. இது உடலுடன் நேரடியாக சம்பந்தப் பட்டது அல்ல, மனித உணர்வுடனும் அவனது ஆளுமையின் ஆற்றலுடனும் தொடர்புடையது. அவனுக்கு எல்லா வசதியும் இருந்தும், அவன் தன் புலன் அடக்க, உணர்ச்சி அடக்கி அதன் மூலம் அவனது உணர்வு விழிக்க, உயிர் ஒங்க, அவன் கடை பிடிக்கும் ஒரு ஒழுக்கம் அல்லது ஒரு செயல் முறை தான் இந்த விரதம் என்பது ஆகும்.   சுருக்கமாக விரதம் என்பது மனதை ஒரு முகப் படுத்தல் அல்லது புலன்களை அடக்குதல் என நாம் கூறலாம். மனிதரை நெறிப்படுத்துவதற்கும் முறைப்படுத்துவதற்கும் தோன்றிய நெறிகளில் ஒன்று இந்த விரதம் என்றும் கூறலாம். மேலும் இந்த நோன்பிற்கு சிறந்த அடையாளம் என்ன என்பதை பார்த்தால் அது கட்டாயம் அவனின் ஒழுக்கமாகத்தான் இருக்கும்.   பழமையான கலாச்சாரங்களில் [In primitive cultures], ஒரு போருக்கு போகும் முன்பு ஒரு ஒழுக்கத்தை பேண, மனதை ஒரு முகப் படுத்த, நோன்பு இருக்கும் படி பெரும்பாலும் கோரப்பட்டனர். அதே போல பூப்படைதல் சடங்கில் ஒரு பகுதியாகவும் நோன்பு இருந்ததும் குறிப்பிடத் தக்கது. ஒழுக்கத்தாலே எல்லாரும் மேம்பாட்டை அடைவராவர் அதனின்று தவறுதலால், அடையக் கூடாத பொருந்தாப் பழியை அடைவர் என்று திருவள்ளுவர் தனது குறள் 137 இல்   "ஒழுக்கத்தின் எய்துவர் மேன்மை இழுக்கத்தின் எய்துவர் எய்தாப் பழி"   என்று கூறியது போல உயர்ந்தோர் என்பவர் ஒழுக்கத்திற்கு சிறந்தோர் என்பதையும் அதுவே தமிழர் பண்பு என்பதையும் நாம் மேலும் அறிகிறோம். இன்று நம்மில் பலர் விரதம் இருந்து வருவதாக கூறிவதை நாம் அன்றாட வாழ்க்கையில் கேட்க்கிறோம். ஆனால் எல்லோரும் தமது மனதை ஒரு முகப் படுத்துகிறார்களா அல்லது புலன்களை அடக்கு கிறார்களா விரத்தின் உயரிய அடையாளமான ஒழுக்கம் – நேர்மை அங்கு எல்லோரிடமும் இருக்கிறதா என்பது ஒரு கேள்விக்குறியே?   பொதுவாக விரதம் என்பது ‘மனவலிமை கொள்ளுதல் ‘ அல்லது ‘துன்பத்தினைத் தாங்குதல் ‘ என்றும் பொருள் கொள்ளலாம். தாமே துன்பத்தினை தாங்கிக் கொண்டு, தங்களை நெறிப்படுத்திக் கொள்ளும் நெறி இதுவாகும். இது ஒரு குறிக்கோளைக் கொண்டும் உள்ளடக்கியது.   உதாரணமாக அன்று சேர மன்னன் பெருஞ்சேரல் இரும்பொறைக்கும், சோழ அரசன் கரிகாலனுக்கும் சண்டை வந்தது. அந்தச் சண்டையில் பெருஞ்சேரலுக்கு முதுகில் அம்பு தைத்து காயம் ஏற்பட்டது. அதனால் அவர் நோன்பு இருந்து [வடக்கிருந்து] உயிர் துறந்தார். அன்று பெண்கள் தாம் விரும்பும் ஆடவனைக் கணவனாகப் பெறுவதற்காகத் தை நோன்பு நோற்று நீராடுவார்கள். அதன் வழியில் திருமாலை கணவனாக அடைய வேண்டி ஆண்டாளும் பாவை நோன்பு இருந்தாள்.   மேலும் உடலுக்கு நலம் விளைவிப்பதற்காக உண்ணாவிரதம் பொதுவாக இருந்தாலும், உலகின் பார்வையை தம்பக்கம் கவர்ந்திழுக்க, எதிரிகளைத் தங்கள் பக்கம் வசப்படுத்த, பல நிபந்தனைகளை பிறர் மேல் அல்லது நிறுவனங்கள் மேல் அல்லது அரசின் மேல் விதித்து வெற்றி பெற, உண்ணா விரத்ததைக் கடைபிடிப்பவர்களும் பலர் உண்டு. உதாரணமாக, இன்று மகாத்மாக காந்தி, ரொபேர்ட் ஜெரார்ட் சான்ட்ஸ் (Robert Gerard Sands, அல்லது பொதுவாக பொபி சாண்ட்ஸ் (Bobby Sands], திலீபன் என சிலர் தமது நாட்டின், இனத்தின் விடுதலைக்காக நோன்பு இருந்தனர், அதில் பொபி சாண்ட்ஸ், திலீபன் சாகும் வரை உண்ணா விரதம் இருந்து, தாம் கடைபிடித்த ஒழுக்கம்,நோக்கம் ஆகியவற்றில் இருந்து எள்ளளவும் விலகாமல் தம் விலை மதிப்பற்ற உயிரை அங்கு தியாகம் செய்தவர்கள் ஆவார்கள்.   ஒரு வேளை, ஒரு நாள் உண்ணாவிரதம் என்கிற போது, உடல் உறுப்புக்கள் ஓய்வு பெறுகின்றன. உல்லாசம் அடைகின்றன. பல நாட்கள் பட்டினி என்றால் உடல் என்ன செய்யும்? எவ்வாறு அந்த வறட்சியை சந்திக்கும்? அத்தகைய நிலைமைக்கு ஆளானவர்கள் இவர்கள் ஆவார்கள். ஆகவே நோன்பில் ஒரு ஒழுக்கம் ஒரு நோக்கம் காண்கிறோம்.   பொதுவாக இன்று மத நம்பிக்கை கலந்த ஒரு பண்பாடாக, மரபாக பல இனங்களால் பின்பற்றப் படும் ஒன்றாக நோன்பு அல்லது விரதம் காணப்படுகிறது. உதாரணமாக இஸ்லாமிய மக்கள் ‘ரம்ஜான்’ என்று ஒரு மாதம் நோன்பிருப்பதும், கிறித்தவர்களும் ‘லென்ட்’ (Lent is a time of repentance, fasting and preparation for the coming of Easter) என்று நோன்பு இருப்பதும், இந்துக்கள்,சைவர்கள் சிவராத்திரி, நவராத்திரி, கந்த சஷ்டி, தைப்பூசம் என பலதரப் பட்ட விரதம் இருப்பதும் ஆகும். நம் அலைபேசியோ அல்லது கணினியோ சற்று மெதுவாக வேலை செய்தால், நாம் அதை முற்றிலுமாக அணைத்து விட்டு, மீண்டும் மறுபடி அதை துவக்குவம் அல்லவா, அது போலத்தான் நம் உடலில் ஜீரண கோளாறு, இப்படி பல உபாதைகளுக்கு, நாம் முதலில் செய்ய வேண்டியது, உணவைத் தவிர்த்து அல்லது குறைத்து ஒரு ஒழுங்கை கடைபிடிப்பது ஆகும். இப்படி செய்வதால், உடலிலுள்ள தேவையற்ற கொழுப்புகளை விரட்டி, ஆரோக்கியமான உடலை எளிதில் பெறலாம் என்பதும் குறிப்பிடத் தக்கது.     [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]   பகுதி: 16 தொடரும்         
    • அப்ப  இனி அடிக்கடி ரெய்டு எனும் பெயரில் மோடி  கொள்ளை நடக்கும் .
  • Our picks

    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
      • 1 reply
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 46 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.