Jump to content

சீதனம் வேண்டாம் - சிறுகதை


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

 

thaamboolam-muthal-thirumanam-varai_755.

 

மகளின் திருமணம் கூடி வந்ததில் வாணிக்கு மனதில் நின்மதி குடிகொண்டது. மூன்று பிள்ளைகளையும் வளர்த்து ஆளாக்கி பல்கலைக்கழகம் அனுப்பி வைத்து மூத்த மகளும் இரண்டாவது மகளும் வேலையும் செய்யத் தொடங்கியாயிற்று. ஆனாலும் இன்னும் வாணியால் நின்மதியாக இருக்க முடியவில்லை. பிள்ளைகளைக் கலியாணம் கட்டிக்கொடுத்தால்த்தான்  ஒரு பெரிய பாரம் குறைஞ்ச மாதிரி. படிச்சு முடிக்கும் வரைக்கும் கூட பிள்ளைகள் இருவரும் யாரையாவது காதலிக்கிறேன் என்று கொண்டு வந்தால் என்ன செய்வது என்ற பயம் கூடவே ஓடிக்கொண்டே இருந்ததுதான். காதலிக்கிறது தப்பில்லை. ஆனால் வெள்ளையையோ அல்லது காப்பிலியையோ அல்லது வேற படிக்காமல் ஊர் சுத்துற எங்கட காவாலியள் யாரின் வலையில் பிள்ளைகள் விழாமல் இருக்கவேணும் எண்டு வேண்டாத  தெய்வங்கள் இல்லை. பிள்ளைகளுக்கும் சாடைமாடையாக ஒழுங்காய் இருக்கவேணும் எண்டு சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் சொல்லிச் சொல்லி நல்லகாலம் அவர்கள் இருவரும் யாரிடமும் மாட்டுப்படேல்லை.

இது தானாக வந்த சம்மந்தம். வீட்டுக்குக் கடைசிப் பெடியன். தகப்பன் இல்லை சீதனம் எதுவும் கேட்க மாட்டினம் என்று நண்பி குடுத்த சாதகத்தை வாங்கிப் பொருத்தம் பார்த்த வாணிக்குச் சந்தோசத்தில் தலைகால் புரியவில்லை. 80 வீதம் பொருத்தம். இதை விட்டுடாதேங்கோ என்று  பொருத்தம் பார்த்த அய்யர் சொன்ன உடனேயே தொலைபேசி இலக்கம் வாங்கி பெடியனின் தாயுடன் கதைத்துவிட்டாள் வாணி. மகளின் படத்தை அனுப்பச் சொன்னதும் வற்சப்பில் அனுப்பி அது தாய்க்குப் பிடிச்சு பிறக்கு மகனுக்கும் பிடிச்சு பெடியன்ர படத்தையும் அனுப்பி மகள் பார்த்துப் பிடிச்சிருக்கு என்ற பிறகு நேர்ல தாயும் மகனும் வர பையனைப் பார்த்து  வாணிக்கு நின்மதி வந்தது. சிலபேர் படத்தில வடிவாயிருப்பினம். நேர்ல பார்க்க சப் என்று இருக்கும்.

என்ன இருந்தாலும் மூத்த மருமகன் எல்லே. களையாக இருந்தாலும் படிப்பு கொஞ்சம் சுமார் தான். அவசரப்படாதையென்று கணவன் கூறியதை வாணி ஏற்கவில்லை. எங்கட பிள்ளையும் பிஸ்நெஸ் மானேஜ்மென்ட் தானே படிச்சவள். பெடியன்ர பக்கம் பிரச்சனையில்லை. இதையே செய்வம் என்று ஒருவாறு கலியாணக்காட் அடிக்கிற வரையும் வந்தாச்சு. பெடியன் ரெஸ்க்கோவில மனேச்சராய் இருக்கிறான். அது காணும். வேலை வெட்டியில்லாத பெடியளுக்கே எங்கடை ஆட்கள் பிள்ளையளைக் கலியாணம் கட்டிக்குடுக்கினம். அதுக்கு இது எவ்வளவோமேல் என்று மனதையும் ஆறுதல்படுத்தி கணவனின் வாயையும் அடைத்து விட்டாள். உங்கை எத்தினை குமர்ப்பிள்ளைகள் முப்பது முப்பத்தைந்து கடந்தும் கலியாணம் கட்டாமல் இருக்குதுகள். அப்பிடிப் பார்க்கேக்குள்ள பெடியன் நல்ல பெடியனாத் தெரியிறான் என்று மனதுள் கூறிக்கொண்டு அடுத்த வேலையைப் பார்க்க ஆரம்பிக்கிறாள்.  

அவள் காலையில் பத்து மணிமுதல் பள்ளி ஒன்றில் டின்னர் லேடியாக வேலை செய்வது. பின்னர் மாலை மூன்றுமணிக்கு இந்த வேலை முடிய  ஐந்து மணியிலிருந்து பதினொருமணிவரை சான்விச் செய்யும் நிறுவனம் ஒன்றில் வேலை. கணவனும் அங்கேயே வேலை செய்வதால் இரவுவேலை முடிய கணவனுடனேயே வீட்டுக்கு வருவதில் எந்தப்பிரச்சனையும் இல்லை. எதுக்கு இரவிரவா வேலை செய்யிறாய். பின்னேரம் பிள்ளையளுடன் இரன் என்று கணவன் கூறியதையும் கேட்கவில்லை. வீட்டு மோற்கேஜ் இன்னும் ஒண்டரைலட்சம் இருக்கு. அதையும் கட்டி முடிச்சிட்டா நின்மதியாக இருக்கலாம் என்பதும் பிள்ளைகளின் திருமணத்துக்கு எப்பிடியும் ஒரு ஐம்பதாவது வேணும் என்னும் அவளின் கணக்கும் எவ்வளவு சொல்லியும் கணவனுக்குப் புரியாதது கவலைதான்.

ஒருவாறு இரண்டு நகைச் சீட்டுப் போட்டுப் போட்டு ஏற்கனவே கொஞ்ச  நகைகள் வாங்கி வைத்திருக்கிறாள். மக்களின் சம்பளமும் இவள் கட்டுப்பாட்டில் தான். அந்தவரை பிள்ளைகளை தான் நன்றாக வளர்த்திருப்பதாக இறுமாப்பு இவளுக்கு. கலியாணக் காட் தெரிவு செய்யவே நாலு நாட்கள். சிம்பிளாய் இருக்கட்டும் என்று பார்த்தால் மகள் தெரிவு செய்த ஒரு காட் இரண்டு பவுன்ஸ் முடியுது. ஒருதடவை  சொல்லிப் பார்த்தபின் விட்டுவிட்டாள். சரி ஒருதடவை தானே திருமணம். தங்கள் விருப்பத்துக்குச் செய்யட்டுமன் என்று மனதைச் சமாதானப்படுத்திக்கொண்டாள். சின்ன ஒரு மண்டபத்தில் செய்யலாம். ஒரு இரண்டாயிரத்துள் முடிக்கலாமென்று பார்த்தால் மாப்பிள்ளையின் தாய்  தங்களுக்கு ஒரு ஐநூறு பேராவது வருவினம். கொஞ்சம் நல்ல கோலா எடுங்கோ எண்டதில் பெடியனும் பெட்டையும் அலைந்து திரிந்து எடுத்த கோல் ஏழாயிரம். என்ன இவ்வளவு அதிகமா இருக்கே என்றதற்கு இரண்டு நாட்களுக்கு இது மலிவு அம்மா என்று மகள் சொன்னதைக் கேட்டு நெஞ்சே அடைத்துவிட்டது வாணிக்கு. எதுக்கம்மா இரண்டு நாட்கள் என்றதற்கு அதுதான் இப்ப பாசன். முதல் கிழமை பதிவுத் திருமணம் முடிய எல்லாருக்கும் பார்ட்டி எங்கட விருப்பப்படி.. அடுத்த கிழமை அய்யரோட எங்கட கல்சர்ப்படி உங்கடை ஆசைக்கு வெட்டிங் அம்மா என்று மகள் கொஞ்சலாகக் கூறியதில் எதுவும் சொல்லமுடியாமல் தலையை மட்டும் ஆட்டவேண்டியதாகிவிட்டிது.  எங்களுக்கும் ஒரு ஐநூறு சனமாவது வரும்தான். பதினைந்து வருடங்களாக இங்க குடுத்ததுகளை  வாங்கத்தானே வேணும் என்பதாய் மனதை சமாதானம் செய்து கொண்டாள். ஏன் அவள் உந்த எடுப்பு எடுக்கிறாள் என்று கணவர் சினக்க அந்தாளையும் ஒருவாறு சமாதானம் செய்தாயிற்று.

இன்று மூன்றாவது நாளாக சேலை எடுப்பதற்காய் அலைந்தாயிற்று. ஆயிரம் பவுண்ட்ஸ் சேலைவரை பார்த்தும் மகளுக்குப் பிடிக்கவில்லை என்பது சினத்தைத்தான் வரவழைத்தது என்றாலும் எதுவும் செய்ய முடியாது பார்த்துக்கொண்டே இருக்க மட்டும் தான் முடிந்தது. மண்டப அலங்காரம், வீடியோ, உணவு, கேக் அது இது என்று எல்லாம் பாத்துப்பார்த்தது ஓடர் செய்து முடிய கிட்டத்தட்ட முப்பதினாயிரம் பவுன்சுக்குக் கிட்ட முடிய வாணிக்கு மலைப்பாகத்தான் இருந்தது.

 கலியாணம் பேசி முடிஞ்சு இரண்டு பக்கத்தாரும் இருந்து கதைத்தபோது  சீதனம் எதுவும் எங்களுக்கு வேண்டாம். கலியானச் செலவையும் நாங்கள் அரைவாசி பொறுக்கிறம் என்று வாயால் சொன்னதோடு சரி. அதுக்குப் பிறகு மறந்துபோய்த் தன்னும் எதுவுமே அவர்கள் கதைக்கவில்லை. செலவுக்கணக்கை அவைக்குக் காட்டுவமோ அப்பா என்று மனிசனிட்டைக் கேட்டதுக்கு சும்மா பேசாமல்விடு என்றதில் இவளும் அதுபற்றி மகளிடம் கூடக்  கதைக்கவில்லை. என்ன இருந்தாலும் வீட்டில் முதல் திருமணம் என்பதும் ஐநூறு பேர்ல நானூற்றைம்பது பேராவது கட்டாயம் வருவினம். எப்பிடியும் ஒரு இருபதாயிரம் சேரும். ஒரு ஐயாயிரத்தை எடுத்துக்கொண்டு மகளின்ர பேர்ல போட்டுவிடுவம். பிறகு அவை வீடு வாங்க உதவும் என்று மனதில் எண்ணியபடியே கலியாண வேலையில் மூழ்கிப் போனாள்.

அப்பப்பா ஒரு கலியாணத்தை நடத்தி முடிக்க எவ்வளவைச் செய்யவேண்டி இருக்கு. முந்தியெல்லாம் ஒரு அய்யரே வந்து எல்லாவற்றையும் செய்திட்டுப் போவார். இப்ப ஐயர்மாருக்கு ஒரு சிண் வேறை. இரண்டு பேருக்கும் தட்சணை தனித்தனி. அதுக்காக அய்யர் இல்லாமல் கலியாணம் செய்ய ஏலுமே என்றும் மனத்தைத் தேற்றி மாப்பிளை பெண்ணின் கழுத்தில் தாலி கட்டி முடியத்தான் வாணிக்கு பெரிய நின்மதி ஏற்பட்டது.

கிட்டத்தட்ட சொன்ன எல்லாருமே வந்திருந்து மணமக்களை வாழ்த்தியது அதைவிட பெரிய நின்மதி. சாப்பிட்டு முடியவே சிலர் வேலைக்குப் போகவேணும் என்று இவளிடம் என்வலப்பைக் கொடுத்துவிட்டுக் கிளம்பிவிட்டினம். நிண்டு படம் எடுத்துவிட்டுப் போங்கோ என்று இவள் சொன்னாலும் இன்னும் வீடியோக்காரர் பெண்ணையும் மாப்பிள்ளையையும் தனியா வைத்துப் படம் எடுத்து முடியவில்லை. சனங்கள் வேற சாப்பிட்டு முடிய தாமே வரிசையில் நிற்கவாரம்பிக்க இவள் ஆக்கள் வெயிற் பண்ணீனம். கேக்கை வெட்டிப்போட்டு பிறகு ஆட்கள்போனப்பிறகு இவையை வைத்து எடுங்கோவன் என்றதையும் வீடடியோக்காரர் கேட்கவில்லை.

ஒருவாறு எல்லாரும் மணமக்களுடன் நின்று படம் எடுத்து முடிய வாணியின் குடும்பம் சகோதரர்கள் என்று ஒரு ஐந்து மணிக்கு திருமண வீடு நிறைவுக்குவர மணவறையில் பக்கத்தில் பரிசுகள் பணம் வைத்தபடி கொண்டுவரும் காட்டுகள் என்பவற்றைப் போடுவதற்கு அழகிய வேலைப்பாட்டுடன் வைக்கப்பட்டிருந்த மொய்ப் பெட்டிக்குக் காவலாக வாணி தனது மகனைக் காவலுக்கு வைத்திருந்தாள். ஆனால் இப்போது பார்க்க மாப்பிள்ளையின் தாயார் அப்பெட்டிக்குப் பக்கத்தில் போய் இவள் மகனிடம் எதோ சொல்லிவிட்டு பெட்டியைத் தூக்கிக்கொண்டு போய் தான் இருந்த கதிரையில் வைக்க சுள் என்று கோபம் தலைக்கு எற இவள் செய்வதறியாது திகைத்து நிக்கிறாள்.

கணவனைத் தேடிப்பிடித்து நீங்கள் போலிக் கேளுங்கோ அப்பா என்று சொல்ல எனக்கு ஏலாது. கொஞ்சம் அமைதியாய் இரு. அவையிண்ட ஆட்களும் தானே காசு குடுத்திருப்பினம். அதை எடுத்துப்போட்டு எங்கடையைக் குடுத்துவிடுவினம். எல்லாத்துக்கும் முன்னதுறதுதான் உன்ர வேலை என்று சொல்ல அவளுக்கும் அது நியாயமாகப் பட தன்னை எண்ணி வெட்கம் ஏற்பட்டது அவளுக்கு.  

திருமணம் முடிந்து ஒருவாரம் மாப்பிளை வீட்டிலேயே மக்களும் தங்கிவிட இவள் மகளைப் பார்க்கும் ஆவலில் போன் செய்து என்னம்மா இண்டைக்காவது நீங்கள் வாறியளோ என்று கேட்க இரண்டுநாள் கழித்து வருகிறோம் என்று மகள் கூற எத்தனை நாட்கள் வளர்த்து ஆளாக்கியும் கணவன் வந்ததும் எப்படி பிள்ளைகள் பெற்றோரை மறந்துவிடுகிறார்கள் என்று தவிப்போடு கணவனிடம் சொல்ல, அவள் மட்டும் இல்லை நீயும் அப்பிடித்தானே என்று கணவனின் கூற்றில் உண்மை இருக்க வேறு வழியின்றி இரண்டு  நாட்கள் மக்களின் வரவுக்காக காத்திருக்க ஆரம்பித்தாள்.

காலையில் மலர்ந்த முகத்துடன் மகளைக் கண்டதும் எல்லா ஆதங்கங்களும் ஓடி ஒழிய கட்டி அணைத்தவளிடம் அம்மா இதை முதலில் பிடியுங்கோ. மாமி இதை உங்களிடம் குடுக்கச் சொல்லித் தந்தவ. பிறகு நான் மறந்திடுவன் என்று கூறி மகள் குடுத்த என்வலப்பை திறந்து பார்த்தவள், அதற்குள் ஒரு வெள்ளைத் தாளில் இவள் சொல்லித் திருமணத்துக்கு வந்தவர்கள் பெயர்கள் மட்டும் நிரையாக எழுதப்பட்டிருப்பதைக் கண்டு கோபம், அவமானம், கண்ணீர்  என்பவற்றை ஒருங்கே அடக்கியபடி வாங்கோ பிள்ளையள் முதல்ல சாப்பிடுவம் என்றபடி குசினிக்குச் செல்லலானாள். 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்லதொரு சிறுகதை.....யூரோப் திருமணங்களை ஊன்றிக் கவனித்து எழுதி இருக்கின்றீர்கள் சகோதரி.......!  😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்லகதை. யதார்தமானதும் கூட.

ஆனால் பிள்ளைகளை இப்படி வளர்த்தால். இப்படித்தான் முடியும். பிள்ளைகளின் சம்பாத்தியத்தையும் தானே நிர்வகிக்கும் அளவுக்கு எல்லாவற்றையும் தன்கையில் வைத்திருக்கும் தாய்கு, பிள்ளைகள் கலியாணம் முடித்து தனிவழியே போகும் போது அதிர்சி ஏற்படுவது தவிர்கவியலாதது.

இப்படி வளர்க்கபடும் பிள்ளைகள் கலியாணம் முடித்த பின்னும் தாய் தந்தையரை பணக் எடுக்கும் ஏடிஎம் போல பாவிப்பதும் இதனால்தான்.

16 வயது முதலே. உழைப்பு, சேமிப்பு, சொந்த காசை மேலாண்மை செய்ய பழக்கப் பட்ட பிள்ளைகள் இப்படி வருவது குறைவு, என் அவதானத்தில்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
48 minutes ago, suvy said:

நல்லதொரு சிறுகதை.....யூரோப் திருமணங்களை ஊன்றிக் கவனித்து எழுதி இருக்கின்றீர்கள் சகோதரி.......!  😁

அண்ணா மீண்டும் ஒருதடவை கடைசிப் பந்தியை வாசித்துவிடுங்கள். நான் எழுதாமல் விட்ட ஒரு வசனத்தைச் சேர்த்துள்ளேன்.

36 minutes ago, goshan_che said:

நல்லகதை. யதார்தமானதும் கூட.

ஆனால் பிள்ளைகளை இப்படி வளர்த்தால். இப்படித்தான் முடியும். பிள்ளைகளின் சம்பாத்தியத்தையும் தானே நிர்வகிக்கும் அளவுக்கு எல்லாவற்றையும் தன்கையில் வைத்திருக்கும் தாய்கு, பிள்ளைகள் கலியாணம் முடித்து தனிவழியே போகும் போது அதிர்சி ஏற்படுவது தவிர்கவியலாதது.

இப்படி வளர்க்கபடும் பிள்ளைகள் கலியாணம் முடித்த பின்னும் தாய் தந்தையரை பணக் எடுக்கும் ஏடிஎம் போல பாவிப்பதும் இதனால்தான்.

16 வயது முதலே. உழைப்பு, சேமிப்பு, சொந்த காசை மேலாண்மை செய்ய பழக்கப் பட்ட பிள்ளைகள் இப்படி வருவது குறைவு, என் அவதானத்தில்.

மன்னியுங்கள் கோசான் மீண்டும் ஒருதடவை கடைசிப் பந்தியை வாசிக்கமுடியுமா? ஒரு வசனம் எழுதாது விட்டதில் கதையின் போக்கே மாறிவிட்டது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

அண்ணா மீண்டும் ஒருதடவை கடைசிப் பந்தியை வாசித்துவிடுங்கள். நான் எழுதாமல் விட்ட ஒரு வசனத்தைச் சேர்த்துள்ளேன்.

மன்னியுங்கள் கோசான் மீண்டும் ஒருதடவை கடைசிப் பந்தியை வாசிக்கமுடியுமா? ஒரு வசனம் எழுதாது விட்டதில் கதையின் போக்கே மாறிவிட்டது. 

சுமே அன்ரி,

தெரிந்தோ தெரியாமலோ நீங்கள் ஒரு இலக்கிய புதுமையை படைத்துள்ளீர்கள். ஒரு வசனத்தை சேர்ப்பதால்/விலக்குவதால் கதையின் போக்கை இரு வேறுபட்ட திசைகளில் போகச் செய்வதெல்லாம் ஜீனியஸ் டச் 😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கதை அருமை ... தற்காலத்தில் இப்படியும்  நடக்கலாம் . உண்மையில்  திருமணத்தில் சேரும் காசு யாருக்கு ...போக வேண்டும். ? மண மகனின் மண மகளின் பெற்றோர் கொடுத்ததை தானே திரும்பி கொடுத்து இருப்பார்கள். எனது எண்ணப்படி ..மணமக்களுக்கு தான் சேர வேண்டும் அவர்கள் புதுவாழ்வு தொடங்க.
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புலம்பெயர் நாடுகளில் பேச்சுத் திருமணங்களை கண்முன்னே கதை கொண்டுவந்திருக்கு. சம்பிரதாயம் என்ற பெயரில் சாதகம் பார்க்கும் மூடத்தனமும், கலியாணம் என்றாலே ஆடம்பரமும் நிறைந்துள்ள கலியாணங்கள்தான் நம்மவர் திருமணங்கள். 

கடைசி பந்தியில் வசனம் மாற்றமுன்னரும் வாசித்திருந்தேன். 😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, goshan_che said:

சுமே அன்ரி,

தெரிந்தோ தெரியாமலோ நீங்கள் ஒரு இலக்கிய புதுமையை படைத்துள்ளீர்கள். ஒரு வசனத்தை சேர்ப்பதால்/விலக்குவதால் கதையின் போக்கை இரு வேறுபட்ட திசைகளில் போகச் செய்வதெல்லாம் ஜீனியஸ் டச் 😂


நீங்கள் ஜீனியஸ் என்பதை நான் மறந்துவிட்டேன்.😀

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, நிலாமதி said:

கதை அருமை ... தற்காலத்தில் இப்படியும்  நடக்கலாம் . உண்மையில்  திருமணத்தில் சேரும் காசு யாருக்கு ...போக வேண்டும். ? மண மகனின் மண மகளின் பெற்றோர் கொடுத்ததை தானே திரும்பி கொடுத்து இருப்பார்கள். எனது எண்ணப்படி ..மணமக்களுக்கு தான் சேர வேண்டும் அவர்கள் புதுவாழ்வு தொடங்க.
 

 இரு பகுதியினரும் கலந்து பேசி மணமக்களுக்குக் கொடுக்கலாம் அல்லது பெண்ணின் பக்கம் வந்ததை அவர்களுக்கு கொடுத்துவிட்டு தமதை தாமே வைத்திருக்கலாம்.மணமகனின் தாயின் செயல்தான் பண்பற்றது. திருமணச் செலவில் பாதியையும் கொடுக்காது சேர்ந்த பணம் எல்லாவற்றையும் தாமே எடுப்பது எந்த விதத்தில் நியாயம்.?

11 hours ago, கிருபன் said:

புலம்பெயர் நாடுகளில் பேச்சுத் திருமணங்களை கண்முன்னே கதை கொண்டுவந்திருக்கு. சம்பிரதாயம் என்ற பெயரில் சாதகம் பார்க்கும் மூடத்தனமும், கலியாணம் என்றாலே ஆடம்பரமும் நிறைந்துள்ள கலியாணங்கள்தான் நம்மவர் திருமணங்கள். 

கடைசி பந்தியில் வசனம் மாற்றமுன்னரும் வாசித்திருந்தேன். 😁

 நேற்று யாழ்கள நட்பு ஒருவர் தொலைபேசியில் கதைக்கும்போது  நான் எழுதியது பற்றி விளங்காமல் கதை த்தார். நான் நினைத்தேன் சிலவேளை நான் எழுதியது மற்றவர்களுக்கு விளங்கவில்லையா என்று. 😀வேறு ஒன்றும் இல்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
23 minutes ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:


நீங்கள் ஜீனியஸ் என்பதை நான் மறந்துவிட்டேன்.😀

இதற்குரிய fees ஐ. நீங்கள் எனக்கு தரவேண்டியதில் இருந்து கழிக்கவும்.😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, goshan_che said:

இதற்குரிய fees ஐ. நீங்கள் எனக்கு தரவேண்டியதில் இருந்து கழிக்கவும்.😂

அதுக்கென்ன 😊

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சுமே உங்கள் உறவினர்கள் யாரோ வீட்டில் நடந்ததை இங்கே எடுத்து விட்டிருக்கிறியள்.
பாராட்டுக்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இது பொதுவானதாகத்தான் இதுவரையில் இருக்கிறது 
எமது சமூகம் ஆணாதிக்க சிந்தனையின் வடிவமைப்புதான் என்றாலும் 
அதே ஆண்கள் தமக்கு பெண் பிள்ளைகள் பிறக்கும்போது அதை வட்டியுடன் கொடுத்து விடுகிறார்கள் 
இந்த பெண்கள் இதற்கு முந்தைய நாட்களில் அதை உழைப்பதும் இல்லை என்பதால் 
அந்த வலியை உணர சந்தர்ப்பம் இருப்பதில்லை. 
சீதன கொடுமை என்றால் கூட பொதுவாக மாப்பிள்ளையின் தாயாரால்தான் அது முண்டுகொடுத்து 
முன்னெடுக்க படுவதை பொதுவாக காணலாம்.

இனி பெண்கள் தாமும் வேலைக்கு சென்று உழைக்க தொடங்கும்போதுதான் 
பணத்தின்  உழைப்பின் பெறுமதி தெரிந்துகொண்டு ஒரு சம நிலையை பெண்கள் 
பேண தொடங்குவார்கள் என்று எண்ணுகிறேன்.

எல்லாம் ஒரு வட்ட சாலையாக இருப்பதால்  மகிழ்ச்சி 
ஊரில் சாதியை சொல்லி அடுத்தவனை சொறிஞ்சு வாழ்ந்த பலர் 
யுத்த காலத்தில் எல்லா இடமும் கையேந்தி நின்றதை பார்த்து இருக்கிறேன். 
சொல்லிகாட்டி சூடு சுரணை வரும்படி செய்ய மனது துடிக்கும் .....  அதல்லாம் மனிதர்களுக்குத்தானே 
இருக்கும் என்றுவிட்டு போய்விடுவதுண்டு. 
எல்லாம் அடுத்தவனை சுரண்டி வாழலாம் எனும் எண்ணத்தில் பிறப்பது 
இயற்கை புரிந்து தனக்கும்  உழைத்து இயற்கைக்கும் உண்மையாய் இருப்பவர்கள் மட்டுமே நிம்மதியாக வாழுவார்கள். மற்ற எல்லா வினையும் ஊரை சுத்தி ஒரு நாள் சொந்த வீடு வந்தே சேரும். 

வாணியின் திருமணத்தில் வந்த பணம் அவர் கணவர் வீட்டுக்கு தானே போயிருக்கும்? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, ஈழப்பிரியன் said:

சுமே உங்கள் உறவினர்கள் யாரோ வீட்டில் நடந்ததை இங்கே எடுத்து விட்டிருக்கிறியள்.
பாராட்டுக்கள்.

ஓமண்ணா எனக்குத் தெரிந்தவர்கள் தான்

 

7 hours ago, Maruthankerny said:

இது பொதுவானதாகத்தான் இதுவரையில் இருக்கிறது 
எமது சமூகம் ஆணாதிக்க சிந்தனையின் வடிவமைப்புதான் என்றாலும் 
அதே ஆண்கள் தமக்கு பெண் பிள்ளைகள் பிறக்கும்போது அதை வட்டியுடன் கொடுத்து விடுகிறார்கள் 
இந்த பெண்கள் இதற்கு முந்தைய நாட்களில் அதை உழைப்பதும் இல்லை என்பதால் 
அந்த வலியை உணர சந்தர்ப்பம் இருப்பதில்லை. 
சீதன கொடுமை என்றால் கூட பொதுவாக மாப்பிள்ளையின் தாயாரால்தான் அது முண்டுகொடுத்து 
முன்னெடுக்க படுவதை பொதுவாக காணலாம்.

இனி பெண்கள் தாமும் வேலைக்கு சென்று உழைக்க தொடங்கும்போதுதான் 
பணத்தின்  உழைப்பின் பெறுமதி தெரிந்துகொண்டு ஒரு சம நிலையை பெண்கள் 
பேண தொடங்குவார்கள் என்று எண்ணுகிறேன்.

எல்லாம் ஒரு வட்ட சாலையாக இருப்பதால்  மகிழ்ச்சி 
ஊரில் சாதியை சொல்லி அடுத்தவனை சொறிஞ்சு வாழ்ந்த பலர் 
யுத்த காலத்தில் எல்லா இடமும் கையேந்தி நின்றதை பார்த்து இருக்கிறேன். 
சொல்லிகாட்டி சூடு சுரணை வரும்படி செய்ய மனது துடிக்கும் .....  அதல்லாம் மனிதர்களுக்குத்தானே 
இருக்கும் என்றுவிட்டு போய்விடுவதுண்டு. 
எல்லாம் அடுத்தவனை சுரண்டி வாழலாம் எனும் எண்ணத்தில் பிறப்பது 
இயற்கை புரிந்து தனக்கும்  உழைத்து இயற்கைக்கும் உண்மையாய் இருப்பவர்கள் மட்டுமே நிம்மதியாக வாழுவார்கள். மற்ற எல்லா வினையும் ஊரை சுத்தி ஒரு நாள் சொந்த வீடு வந்தே சேரும். 

வாணியின் திருமணத்தில் வந்த பணம் அவர் கணவர் வீட்டுக்கு தானே போயிருக்கும்? 

 மாப்பிளையின் தாய் எடுத்துக்கொண்டு இவர்கள் பக்கம் இருந்து வந்து எல்வலப் கொடுத்தவர் பெயரையும் தொகையையும் மட்டும் மருமகளிடம் எழுதிக் கொடுத்திருந்தார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல...கதை...சுமே..!

நான் பிறந்த எனது இனத்தின்...பார்வைகளும்...நம்பிக்கைகளும்...மிகவும் சுயநலம் படித்தவை..!

இந்த நம்பிக்கையில் இருந்து கொஞ்சம் விலகிச் செல்ல என்னும் போது...இடையில் ஏதோ ஒரு சம்பவம் வந்து..அந்த நம்பிக்கையை வலுப்படுத்தும்!

அதைப் போலவே உங்கள் கதையும்..!

சிந்து வெளியிலிருந்து....துரத்தப்பட்டு...ஓட இடமில்லாமல்....இலங்கையில் ஒதுங்கிய இனமென்பதால்..அந்தச் சுய நலக் குணம் வந்திருக்கலாமோ ..என்னவோ..!

இந்தக் காலத்தில்....எல்லாவற்றையும்...மற்றவர்களை...நம்பாமல்...முன் கூட்டியே ..பேசி முடிவு செய்வதே..புத்தி சாலித்தனம் போல உள்ளது! முடியுமால்...எழுத்தில் வாங்குவது...இன்னும் நல்லது!

தொடர்ந்தும் உங்கள் படைப்புக்க்களைத் தாருங்கள்! 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உங்களுக்கு குடுத்த மொய்ப்பணம் வேண்டுமென்றால் பிள்ளைக்கு பூப்புனித நீராட்டு விழா செய்யுங்கோ.....அல்லது பெரிய ஹோல் எடுத்து உங்களுக்கே பிறந்தநாள் விழா செய்யுங்கோ,அதை விட்டுட்டு திருமணம் இரு பகுதியும் குடுக்கும் பணம்தான் வரப்போகுது.அதை மணமக்களிடம் குடுத்து, அதன்பின் வரும் சம்பந்தப்பட்டவர்களின் விழாக்களுக்கு நீங்களே சென்று மொய் கொடுக்கவேண்டும் என்று சொல்லி விடலாம்..... சில சமயம் இதில் வரும் பணத்தை நம்பித்தான் அவர்கள் ஹோல், வீடியோ,மேளம் இன்னோரன்ன செலவுகளுக்கு அட்வான்ஸ் மட்டும் குடுத்து ஒழுங்கு செய்திருப்பினம். அதை முன்பே பேசி சரி செய்து கொள்ள வேண்டும். அதுதான் முறை....!

இங்கு பாரிஸில் இப்பொழுது புது வழக்கம் ஒன்று  (ட்ரெண்ட்) உருவாகியுள்ளது. அதாவது மணமக்களின் உறவினர்களோ அல்லது நண்பர்களோ அன்று மட்டும் விதம் விதமான பெறுமதியான கார்கள் எல்லாம் வாடகைக்கு எடுத்து வந்து ஊர்வலமாக  விலாசம் காட்டுவார்கள். பின்பு இவர்களும் அவர்களுக்கு வரும்போது செய்ய வேண்டும்.......!  

சகோதரி எழுதியது வெறும் ஜூ ஜூ பி ....இதைவிட அப்பனான விடயங்கள் எல்லாம் நடக்குது.....வேறொரு ஐ.டி எடுத்துதான் எழுதவேண்டும்......!     😁 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்லகதை  சுமே

கதையல்ல  நிஐம் தான்

 

புத்தி  சொல்வதும்

தீர்ப்பு  சொல்வதும் சுலபம்

அந்தந்த இடத்திலிருக்கும் போது

எல்லோரும்  வேண்டும்

அதிலும்  பிள்ளை வாழப்போகுமிடம்  என்பதால் 

கண்கணைக்கூட  கட்டுப்படுத்த  வேண்டி  வரும்  என்பதை  அழகாக  சொல்லியுள்ளீர்கள்

இதற்கெல்லாம்  அடிப்படைக்காரணம்

பற்றாக்குறையும் பகட்டு  விழாக்களும் தான்

விரலுக்கேற்ற  வீக்கம்  என்பதை  மனதிலிருத்தி  வாழ்ந்தால்  எல்லாம் சுபம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, புங்கையூரன் said:

நல்ல...கதை...சுமே..!

நான் பிறந்த எனது இனத்தின்...பார்வைகளும்...நம்பிக்கைகளும்...மிகவும் சுயநலம் படித்தவை..!

இந்த நம்பிக்கையில் இருந்து கொஞ்சம் விலகிச் செல்ல என்னும் போது...இடையில் ஏதோ ஒரு சம்பவம் வந்து..அந்த நம்பிக்கையை வலுப்படுத்தும்!

அதைப் போலவே உங்கள் கதையும்..!

சிந்து வெளியிலிருந்து....துரத்தப்பட்டு...ஓட இடமில்லாமல்....இலங்கையில் ஒதுங்கிய இனமென்பதால்..அந்தச் சுய நலக் குணம் வந்திருக்கலாமோ ..என்னவோ..!

இந்தக் காலத்தில்....எல்லாவற்றையும்...மற்றவர்களை...நம்பாமல்...முன் கூட்டியே ..பேசி முடிவு செய்வதே..புத்தி சாலித்தனம் போல உள்ளது! முடியுமால்...எழுத்தில் வாங்குவது...இன்னும் நல்லது!

தொடர்ந்தும் உங்கள் படைப்புக்க்களைத் தாருங்கள்! 

 

 

நன்றி புங்கை. இது கொஞ்சம் சென்சிரிவான விடயம். பெண்ணின் வீட்டார் திருமணம் முடியும் மட்டும் வயித்தில நெருப்பைக்கட்டியது போல் தான் இருப்பார்கள். எதிர்த்து ஏதும் கதைதத்தால் கலியாணம் குழம்பிவிடுமோ என்ற பீதி இருந்துகொண்டே தான் இருக்கும்.

2 hours ago, suvy said:

உங்களுக்கு குடுத்த மொய்ப்பணம் வேண்டுமென்றால் பிள்ளைக்கு பூப்புனித நீராட்டு விழா செய்யுங்கோ.....அல்லது பெரிய ஹோல் எடுத்து உங்களுக்கே பிறந்தநாள் விழா செய்யுங்கோ,அதை விட்டுட்டு திருமணம் இரு பகுதியும் குடுக்கும் பணம்தான் வரப்போகுது.அதை மணமக்களிடம் குடுத்து, அதன்பின் வரும் சம்பந்தப்பட்டவர்களின் விழாக்களுக்கு நீங்களே சென்று மொய் கொடுக்கவேண்டும் என்று சொல்லி விடலாம்..... சில சமயம் இதில் வரும் பணத்தை நம்பித்தான் அவர்கள் ஹோல், வீடியோ,மேளம் இன்னோரன்ன செலவுகளுக்கு அட்வான்ஸ் மட்டும் குடுத்து ஒழுங்கு செய்திருப்பினம். அதை முன்பே பேசி சரி செய்து கொள்ள வேண்டும். அதுதான் முறை....!

இங்கு பாரிஸில் இப்பொழுது புது வழக்கம் ஒன்று  (ட்ரெண்ட்) உருவாகியுள்ளது. அதாவது மணமக்களின் உறவினர்களோ அல்லது நண்பர்களோ அன்று மட்டும் விதம் விதமான பெறுமதியான கார்கள் எல்லாம் வாடகைக்கு எடுத்து வந்து ஊர்வலமாக  விலாசம் காட்டுவார்கள். பின்பு இவர்களும் அவர்களுக்கு வரும்போது செய்ய வேண்டும்.......!  

சகோதரி எழுதியது வெறும் ஜூ ஜூ பி ....இதைவிட அப்பனான விடயங்கள் எல்லாம் நடக்குது.....வேறொரு ஐ.டி எடுத்துதான் எழுதவேண்டும்......!     😁 

அது மட்டும் இல்லை அண்ணா. திருமணம் முடிய மூன்றாம் நாள் ஸ்பெயினில் ரிசெப்சன். என் மகளின் நட்பில் ஒன்று கடந்த வாரம் நூறு பேரை அதற்கு அழைத்திருந்தார்கள். உந்த விசர்க் கூத்துக்கு எல்லாம் ஏன்  போகிறீர்கள் என்று நல்ல எச்சுக் கொடுத்தேன்.   

50 minutes ago, விசுகு said:

நல்லகதை  சுமே

கதையல்ல  நிஐம் தான்

 

புத்தி  சொல்வதும்

தீர்ப்பு  சொல்வதும் சுலபம்

அந்தந்த இடத்திலிருக்கும் போது

எல்லோரும்  வேண்டும்

அதிலும்  பிள்ளை வாழப்போகுமிடம்  என்பதால் 

கண்கணைக்கூட  கட்டுப்படுத்த  வேண்டி  வரும்  என்பதை  அழகாக  சொல்லியுள்ளீர்கள்

இதற்கெல்லாம்  அடிப்படைக்காரணம்

பற்றாக்குறையும் பகட்டு  விழாக்களும் தான்

விரலுக்கேற்ற  வீக்கம்  என்பதை  மனதிலிருத்தி  வாழ்ந்தால்  எல்லாம் சுபம்

உண்மைதான் அண்ணா. ஒரு திருமணம் பேசிச் செய்து முடிப்பது மிக்க கடினமான வேலை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பச்சைகள் தந்த உறவுகள் புங்கை, ஜெகதா துரை, கிருபன், நுணா, நந்தன், ஈழப்பிரியன் அண்ணா, குமாரசாமி, தமிழினி, சுவி அண்ணா ஆகிய உறவுகளுக்கும் கருத்துக்களை எழுதிய உறவுகள் அனைவருக்கும் மிக்க நன்றி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

பச்சைகள் தந்த உறவுகள் புங்கை, ஜெகதா துரை, கிருபன், நுணா, நந்தன், ஈழப்பிரியன் அண்ணா, குமாரசாமி, தமிழினி, சுவி அண்ணா ஆகிய உறவுகளுக்கும் கருத்துக்களை எழுதிய உறவுகள் அனைவருக்கும் மிக்க நன்றி.

மன்னிக்கோணும்......நான் ஆள் மாறி பச்சைய குத்திப்போட்டன். நான் இன்னும் கதையை வாசிக்கவேயில்லை.:cool:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, குமாரசாமி said:

மன்னிக்கோணும்......நான் ஆள் மாறி பச்சைய குத்திப்போட்டன். நான் இன்னும் கதையை வாசிக்கவேயில்லை.:cool:

சரி அப்ப கூச்சப்படாமல் பச்சையை திருப்ப எடுத்துக்கொள்ளுங்கள். நான் கோபிக்க மாட்டேன்.😎

Link to comment
Share on other sites

  • 3 weeks later...
On 9/29/2019 at 9:29 PM, குமாரசாமி said:

மன்னிக்கோணும்......நான் ஆள் மாறி பச்சைய குத்திப்போட்டன். நான் இன்னும் கதையை வாசிக்கவேயில்லை.:cool:

வ‌ண‌க்க‌ம் ஜ‌யா :,, இங்கை ஒருவ‌ர் ? உங்க‌ளின் ப‌ழ‌மொழிக‌ளை சுட்டு கொண்டு வ‌ந்து த‌ன‌து முக‌நூலில் போடுவார் ? கேட்டால் சொல்லுவார் த‌ன‌து சொந்த‌ த‌யாரிப்பாம் ? உண்மையை சொல்லு த‌ம்பி என்றால் """ க‌ட‌சியில் உண்மையை ஒத்து கொள்ளுவார் யாழில் சுட்ட‌ ப‌ழ‌மொழிக‌ள் தான் ? யோசிச்சு பாருங்கோ அது யாரா இருக்கும் என்று ?

Link to comment
Share on other sites

On 9/27/2019 at 4:34 PM, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

ஓமண்ணா எனக்குத் தெரிந்தவர்கள் தான்

 

 மாப்பிளையின் தாய் எடுத்துக்கொண்டு இவர்கள் பக்கம் இருந்து வந்து எல்வலப் கொடுத்தவர் பெயரையும் தொகையையும் மட்டும் மருமகளிடம் எழுதிக் கொடுத்திருந்தார்.

தற்குள் ஒரு வெள்ளைத் தாளில் இவள் சொல்லித் திருமணத்துக்கு வந்தவர்கள் பெயர்கள் மட்டும் நிரையாக எழுதப்பட்டிருப்பதைக் கண்டு கோபம், அவமானம், கண்ணீர்  என்பவற்றை ஒருங்கே அடக்கியபடி வாங்கோ பிள்ளையள் முதல்ல சாப்பிடுவம் என்றபடி குசினிக்குச் செல்லலானாள். 

 

இப்ப தான் விளங்கிச்சு ..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்றைய நாட்களில் எம்மவர் மத்தியில் இப்படி எத்தனையோ எம்மால் ஏற்றுக்கொள்ள முடியாத விடயங்கள் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. ஆனால் நான் அவதானித்தவரை பெண்ணும் மாப்பிள்ளையும் (காதலித்து திருமணம் செய்பவர்கள்) தாமே திட்டமிட்டு தமது பொருளாதார தேவைக்கேற்ப அழைக்கும் எண்ணிக்கையையும் செலவுகளையும் தம் கட்டுப்பாட்டுக்குள் வைத்து ஒழுங் கமைப்பதை காணக்கூடியதாய் உள்ளது. சுமே மிக அழகாக கதை சொல்லியுள்ளார். அதிகம் எழுத நேரமின்மையால் எழுத முடியவில்லை. திருமணத்தில் சேரும்பணம் புதுமணத் தம்பதிகளுக்கு  சேருவது சிறந்தது என்பது எனது கருத்து.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அதெல்லாம் இருக்கட்டும், குஜாரத்தில் தானே தீவைத்த இந்துக்களின் ரயிலுக்குப் பழிவாங்க ஆயிரமாயிரம் முஸ்லீம்களைப் படுகொலை செய்ததற்காக அமெரிக்காவே இவருக்கு தடை விதித்திருந்தது. இந்த லட்சணத்தில் இந்தியஅ மனிதநேயத்திற்குப் பாதுகாப்பான நாடாம். 
    • தமிழ்ப் பொதுவேட்பாளரை இறக்கி ரணில் ஐய்யாவுக்கு விழப்போற வாக்குகளைத் தடுத்துப்போடுவாங்கள் என்கிற கவலையில இருக்கிறம் உங்களுக்கு நக்கலாக் கிடக்கு என்ன?  ரணில் மாத்தையாட்ட, ஜயவேவா!
    • நீங்கள் அரசாங்கத்துடன் திம்புவில் பேசலாம், நான் இராணுவத்துடன் கிரிக்கெட் விளையாடினால் தவறோ? ‍- பரி யோவானின் ஆனந்தராஜனும், இந்தியர்களை அலைக்கழித்த இலங்கையும்   மறுநாளான ஆடி 24 ஆம் திகதி டிக் ஷிட் அவர்கள் நீலன் திருச்செல்வத்தைச் சந்தித்தார். தமிழர்களின் பிரச்சினையின் சிக்கல்களை பண்டாரி சரியாக உணர்ந்துகொள்ளத் தவறிவிட்டதாக டிக் ஷிட்டிடம் தெரிவித்தார் நீலன். மேலும் பிரச்சினைக்கு உடனடியாகத் தீர்வொன்றினைக் கண்டுபிடிக்குமாறு பண்டாரி  அழுத்தம்கொடுத்து வந்தமை, ஜெயாரிற்கு தமிழர்களுடன், தீர்வெதனையும் தராத, வெற்றுப் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடும் வாய்ப்பினையும் ஏற்படுத்திக் கொடுத்திருப்பதாகவும் நீலன் கூறினார். சந்திரிக்காவின் ஆட்சியின்போது பிரபல சிங்கள இனவாதியான பேராசிரியர் ஜி.எல்.பீரிஸுடன் இணைந்து தீர்வுப்பொதியொன்றினைத் தயாரித்த நீலன் திருச்செல்வம் மேலும், டிக்ஷிட்டிடன் பேசும்போது தமிழரின் தாயகம் தொடர்பாகவும், அதனை திட்டமிட்ட அரச ஆதரவிலான சிங்களக் குடியேற்றங்கள் மூலம் இரு துண்டுகளாக உடைக்க சிங்களவர்கள் முயன்றுவருவது குறித்தும் விளக்கியதோடு, தமிழர்கள் தமது தாயகத்தில் சுயநிர்ணய உரிமைகொண்டவர்களாக வாழ்தலே எந்தவொரு தீர்விற்கும் அடிப்படையாக அமைதல் வேண்டுமென்றும் அழுத்தமாகக் கூறினார்.  இதற்குக் குறைவான எந்தத் தீர்வினையும் தமிழர்கள் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை என்பதனையும் அவர் டிக்ஷிட்டிடம் தெரிவித்தார். நீலனுக்குப் பதிலளித்த டிக்ஷிட், இவ்விடயங்கள் குறித்து தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினர் ரஜீவிடமும், பண்டாரியிடமும் தெளிவாகப் பேசவேண்டும் என்று கூறினார். "இனப்பிரச்சினையின் தீர்விற்கான அடிப்படை குறித்த ஆவணம் ஒன்றைத் தயாரித்து ஜெயாருக்கு அனுப்பிவைப்பதற்காக என்னை தில்லிக்கு அழைத்திருக்கிறார்கள். நான் நாளை பயணமாகிறேன். நீங்கள் என்னிடம் தற்போது கூறிய விடயங்களை தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினர் ஒரு ஆவணமாகத் தயாரித்து அனுப்பினால், நாம் ஜெயாருக்கு அனுப்பவிருக்கும் ஆவணத்தை அதன் அடிப்படியில் உருவாக்கிக்கொள்ளலாம்" என்று நீலனை நோக்கிக் கூறினார் டிக்ஷிட்.    அப்போது சென்னையில் தங்கியிருந்த அமிர்தலிங்கத்திடம் இவ்விடயங்கள் குறித்து நீலன் தெரிவித்தார். அதன் பின்னர் ஆடி 26 ஆம் திகதி தமது பேரம்பேசலின் நிலைப்பாடு குறித்த விளக்கமான கடிதம் ஒன்றினை அமிர்தலிங்கமும், சிவசிதம்பரமும் ரஜீவ் காந்திக்கு அனுப்பி வைத்தனர். அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்த சில முக்கிய விடயங்கள் கீழே, "தமிழர் பிரச்சினைக்கான எந்தவொரு தீர்வின் அடிப்படையும் தமிழர்கள் தமது தாயகத்தில் தம்மைத்தாமே ஆளும் உரிமையினை உறுதிப்படுத்துவதாக இருக்க வேண்டும். பலஸ்த்தீனத்தில் இஸ்ரேல் செய்துவருகின்ற திட்டமிட்ட ஆக்கிரமிப்பிற்கு நிகரான ஆக்கிரமிப்பினை இலங்கையில் தொடர்ச்சியாக ஆட்சிக்கு வரும் சிங்கள அரசுகள் செய்துவருவதுடன்,  தமிழர் தாயகத்தின் ஒருமைப்பாட்டினைச் சிதைக்கும் நோக்குடன், தமிழர்களின் ஆட்சேபணைக்கு மத்தியிலும், அரச ஆதரவிலான திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்களை சுதந்திரக் காலத்திலிருந்து செய்து வருகின்றன". "தமிழர் தாயகத்தை இரண்டாகத் துண்டாக்குவதன் மூலம் கிழக்கு மாகாணத்தில் தமிழர்களை முற்றாக அழித்துவிட சிங்கள அரசுகள் முயன்று வருகின்றன. கிழக்கில் தமிழர்களை அப்புறப்படுத்துவதனூடாக தமிழர்களின் பிரச்சினைக்கான தீர்வை வழங்கமுடியும் என்று ஜெயவர்த்தன கருதிவருகின்ற போதிலும், நீங்கள் அதனை ஒரு தீர்வாக ஏற்றுக்கொள்ள மாட்டீர்கள் என்று நம்புகிறோம். தமது தாயகம் துண்டாடப்படுவதை தமிழர்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை" என்று அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.  புலிகளின் எச்சரிக்கைகளுக்கு மத்தியிலும் இலங்கை இராணுவத்துடன் துடுப்பாட்டப் போட்டியொன்றினை ஒழுங்குசெய்த பரி யோவான் கல்லூரி அதிபர் ஆனந்தராஜன்  ஆடி 27 ஆம் திகதி மாலை டிக்ஷிட் தில்லியை வந்தடைந்தார். அந்நாள் காலையிலேயே யாழ்ப்பாணம் புனித யோவான் கல்லூரியின் அதிபர் ஆனந்தராஜா கொல்லப்பட்டிருந்தார். பரி யோவான் கல்லூரியின் துடுப்பாட்ட அணிக்கும், இலங்கை இராணுவத்தின் துடுப்பாட்ட அணிக்கும் இடையிலான சிநேகபூர்வ கிரிக்கெட் போட்டியொன்றினை பரி யோவான் கல்லூரி மைதானத்தில் நடத்த முயன்றதனால் அவர் சுடப்பட்டார். போட்டியினை நடத்துவதற்கான முயற்சிகளில் அவர் இறங்கியபோது புலிகளால் பலதடவைகள் அவருக்கு அதனைச் செய்யவேண்டாம் என்று எச்சரிக்கைகள் விடப்பட்டு வந்தன. ஆனால், அவ்வெச்சரிக்கைகளை உதாசீனம் செய்த ஆனந்தராஜா, "நீங்கள் அரசாங்கத்துடன் திம்புவில் பேச்சுவார்த்தை நடத்த முடியும் என்றால், இராணுவத்துடன் கிரிக்கெட் ஆட்டம் ஒன்றினை நான் ஒழுங்குசெய்வதில் என்ன தவறு இருக்க முடியும்?" என்று அவர் பதிலுக்கு தனது செயலை நியாயப்படுத்தி வந்தார்.  யாழ்ப்பாண மக்களின் மனங்களையும், இதயங்களையும் வென்று, அவர்களின் ஆதரவினைப் பெற்றுக்கொள்ளும் நோக்குடன் யாழில் இயங்கிவந்த சில பிரபல பாடசாலைகளுடன் சிநேகபூர்வமான துடுப்பாட்டம் மற்றும் கால்பந்தாட்டப் போட்டிகளை இலங்கை இராணுவம் ஒழுங்குசெய்யத் திட்டமிட்டு வந்தது. இலங்கை அரசாங்கத்திற்கெதிராக மக்களை அணிதிரட்டும் தமது முயற்சியை இராணுவத்தினரின் "யாழ் மக்களின் மனங்களையும், இதயங்களையும் வெல்லுதல்" முயற்சி பாதிக்கக் கூடும் என்று கருதிய போராளிகள், இராணுவத்தின் இந்த முயற்சிக்கு எவரும் ஆதரவளிக்கக் கூடாது என்று கூறி வந்தனர். இன்று மேற்கு நாடொன்றில் வசிக்கும் புலிகளின் முன்னாள்ப் போராளியொருவரே ஆனந்தராஜாவைச் சுட்டுக் கொன்றிருந்தார். ஆனந்தராஜாவைத் தாமே கொன்றதாக புலிகள் உரிமைகோரும் துண்டுப் பிரசுரங்களை வெளியிட்டனர். தாம் பலமுறை வழங்கிய எச்சரிக்கைகளையும் மீறி இராணுவத்துடன் துடுப்பாட்டப் போட்டியை நடத்துவதில் உறுதியாக நின்றமைக்காகவே அவருக்குத் தண்டனை வழங்கப்பட்டதாக புலிகளின் அறிவித்தல் கூறியது. ஆனந்தராஜா மீதான தாக்குதல் சொல்லவேண்டியவர்களுக்குத் தெளிவான செய்தியைச் சொல்லியது. இராணுவத்தினருடனான சகலவிதமான சிநேகபூர்வப் போட்டிகளும் யாழ்ப் பாடசாலைகளால்  கைவிடப்பட்டன. யாழ் மக்களின் மனங்களையும், இதயங்களையும் வெல்லும் இராணுவத்தின் முயற்சி பிசுபிசுத்துப் போனது. ஆனந்தராஜா மீதான தாக்குதலை அரசாங்கம் தனது பிரச்சாரத் தேவைக்காகப் பயன்படுத்திக்கொண்டது. இதனை கடுமையான யுத்தநிறுத்த மீறலாகக் காட்டிய அரசாங்கம், ஆனந்தராஜாவின் கொலையோடு சம்பந்தப்பட்டவர்கள் தொடர்பாகத் தகவல் வழங்குவோரு சன்மானமாக ஐந்து லட்சம் ரூபாய்களைத் தருவதாக அறிவித்தது. ஆனால், அரசால் தாக்குதலில் ஈடுபட்டவர்களை இறுதிவரை கண்டுபிடிக்க முடியவில்லை. தில்லியில் தான் தங்கியிருந்த நான்கு நாட்களில் டிக்ஷிட், ரஜீவ் காந்தி, ரஜீவால் பிந்தள்ளப்பட்டிருந்த பார்த்தசாரதி, ரோவின் சக்சேனா மற்றும் சில வெளியுறவுத்துறை அதிகாரிகள் ஆகியோரைச் சந்தித்தார். இச்சந்திப்புக்களின்போது, இலங்கையின் ஒற்றுமையினையும், பிராந்திய ஒருமைப்பாட்டினையும் பாதிக்காத வகையில், தமிழர்கள் முன்வைத்த கோரிக்கைகளுக்குச் சாதகமான வகையில் ஜெயார் முன்வைக்கக் கூடிய ஆலோசனைகளை அவர்கள் தயாரித்தனர். இந்தியாவினால் தயாரிக்கப்பட்ட, கடப்பாடுகள் எதுவும் அற்ற இந்த ஆவணத்தில் இலங்கையினால் முன்வைக்கப்பட்ட அதிகபட்ச அதிகாரப் பரவலாக்கல் அலகான மாவட்ட அபிவிருத்திச் சபையின் அதிகாரங்களை மேம்படுத்துவது தொடர்பாகவே பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டன. தமிழரின் கோரிக்கையான பூர்வீகத் தாயகத்திற்குப் பதிலாக மாகாண அலகினை இலங்கையரசு வழங்க முடியும் என்றும், வடக்கு மாகாணமும், கிழக்கு மாகாணமும் கருத்து ரீதியாக இணைக்கப்படலாம் என்றும் இந்தியா பரிந்துரை செய்திருந்தது. இவ்வாறு அமைக்கப்படும் மாகாணங்களுக்கான அதிகாரங்கள் குறித்துப் பேசும்போது, நிதி , காணியதிகாரம், சட்டம் ‍ ஒழுங்கினை நிலைநாட்டும் அதிகாரம் ஆகியவை மத்திய அரசினால் பகிர்ந்தளிக்கப்படலாம் என்றும் பரிந்துரை செய்யப்பட்டிருந்தது. மேலும், இந்த இணைந்த மாகாணங்களில் தமிழ் உத்தியோகபூர்வ மொழியாகப் பாவிக்கப்படலாம் என்றும் பரிந்துரை செய்யப்பட்டது. ஜெயாருடன் பார்த்தசாரதி   இரண்டாம் சுற்றுப் பேச்சுக்கள் நடப்பதற்கு சற்று முன்னதாக இந்தியாவின் "கடப்பாடு அற்ற" பரிந்துரைகளின் நகல் ஒன்றினை நீலனிடம் கொடுத்த டிக்ஷிட், "இவை அனைத்தும்  பார்த்தசாரதியின் யோசனைகள் தான்" என்று கூறினார். "பண்டாரிக்கோ, சக்சேனாவுக்கோ இவைகுறித்த எந்தவிதமான அறிவும் இருக்கவில்லை" என்று நீலன் கூறினார்.  தாம் தயாரித்த "கடப்பாடற்ற" பரிந்துரைகளை ஜெயாரிடம் வழங்கி, அவற்றின் அடிப்படையில் தனது தீர்வினை ஜெயார் வரைந்துகொள்ளலாம் என்றும், பண்டாரியின் இரண்டாவது விஜயம் தொடர்பாக அவரை ஆயத்தமாக இருக்கும்படி  கூறுமாறும் டிக்ஷிட்டைப் பணித்தார் ரஜீவ் காந்தி. ஆவணி 2 ஆம் திகதி கொழும்பு வந்திறங்கிய பண்டாரி, அன்று மாலையே ஜெயாரை அவரது உத்தியோகபூர்வ வாசஸ்த்தலத்தில் சந்தித்தார். இச்சந்திப்பில் லலித் அதுலத் முதலியும் உடனிருந்தார். ஜெயாருடனான தனது சந்திப்புப் பற்றி கொழும்பு அசைன்மென்ட்டில் எழுதும் டிக்ஷிட், திம்புப் பேச்சுக்களின் தோல்வி குறித்த இந்தியாவின் அதிருப்தியை ஜெயாரிடம் தெரிவித்ததுடன், இந்தியாவினால் தயாரிக்கப்பட்ட பரிந்துரைகளை அவரிடம் தான் வழங்கியதாகவும் கூறுகிறார். இச்சந்திப்புக் குறித்து நீலனிடம் பேசும்போது, "நான் கொடுத்த பரிந்துரைகளை வாங்கிப் படித்துவிட்டு, சிறிய புன்னகையுடன் அதனை அருகில் நின்ற லலித்திடம் கையளித்தார் ஜெயார்" என்று கூறியிருக்கிறார்.   மேலும், ஜெயாருடன் பேசிய டிக்ஷிட், இலங்கை அரசால் முதலாம் கட்டப் பேச்சுக்களில் முன்வைக்கப்பட்ட ஆலோசனைகள், தமிழ்ப் போராளிகள் தமது ஆயுதங்களைக் கைவிட்டு சமாதானப் பேச்சுக்களுக்குத் திரும்புவதற்குப் போதுமான சலுகைகளைக் கொண்டிருக்கவில்லை என்றும் கூறினார். இடையில் குறுக்கிட்ட லலித் அதுலது முதலி, மிகவும் காட்டமான முறையில் இதற்குப் பதிலளித்தார். "இந்தியா தம்மை ஆதரிக்கிறது என்பதற்காக, தமிழர்கள் தாந்தோன்றித்தனமான முறையில் முன்வைக்கும் நிபந்தனைகள் எல்லாவற்றையும் நாம் ஏற்றுக்கொள்ளவேண்டும் என்கிற கட்டாயம் எமக்கு இல்லை" என்று கூறியதுடன், "நீங்கள் தமிழ்ப் பயங்கரவாதிகளுக்கு எவ்வாறான உதவிகளைச் செய்துவருகிறீர்கள் என்பது குறித்தும் நாம் அறிவோம்" என்று நீண்ட விளக்கம் றினையும்  வழ‌ங்கினார். பின்னர் பேசிய ஜெயார், "இலங்கை அரசின் சார்பாக இரண்டாம் கட்டப் பேச்சுக்களை ஹெக்டர் ஜெயவர்த்தனவே நடத்துவார் என்பதனால், அவரிடமே இந்தியாவின் பரிந்துரைகளைக் கையளிக்கிறேன்" என்று டிக்ஷிட்டிடம் கூறினார். மேலும், பண்டாரியின் வருகையினை நாம் வரவேற்கிறோம், அவர் கூறப்போவதைச் செவிமடுக்கவும் ஆயத்தமாக இருக்கிறோம் என்று ரஜீவிடம் கூறுங்கள் என்று கூறினார்.   ஆவணி 8 ஆம் திகதி கொழும்பு வந்தடைந்த பண்டாரி, ஜனாதிபதி ஜெயவர்த்தன, பிரதமர் பிரேமதாச, வெளியுறவு அமைச்சர் ஹமீது, பாதுகாப்பமைச்சர் லலித் அதுலத் முதலி, எதிர்க்கட்சித் தலைவர் சிறிமா ஆகியோரைச் சந்தித்தார்.   ஆனால், பண்டாரியின் ஜெயாருடனான சந்திப்பு பலனற்றுப் போயிற்று. தமிழர்களின் பிரச்சினைக்கு அரசியல்த் தீர்வொன்றினைக் காண்பதற்கு இந்தியாவினால் முன்வைக்கப்பட்டுள்ள பரிந்துரைகளின் அடிப்படையிலான தீர்வொன்றினை இலங்கை முன்வைக்க வேண்டும் என்று பண்டாரி ஜெயாரிடம் கூறினார். இரண்டாம் கட்டப் பேச்சுக்கள் மிகவும் முக்கியமானவை என்று இந்தியா கருதுவதாகவும் அவர் ஜெயாரிடம் தெரிவித்தார். இப்பேச்சுக்களும் தோல்வியடையும் பட்சத்தில் இலங்கை கடுமையான விளைவுகளைச் சந்திக்க நேரும் என்று  அவர் ஜெயாரை எச்சரித்தார். ஆனால் பண்டாரியின் அழுத்தங்களினால் ஜெயாரைப் பணியவைக்க முடியவில்லை. பண்டாரியுடன் தீர்க்கமான பேச்சுக்களில் ஈடுபடுவதையே ஜெயார் தவிர்த்தார். பண்டாரியைக் கையாளும் பணியினை தனது சகோதரர் ஹெக்டர் ஜெயவர்த்தனவிடமும், லலித் அதுலத் முதலியிடமும் கையளித்தார் ஜெயார். "எனது சகோதரரே இரண்டாம் கட்டப் பேச்சுக்களையும் எமசார்பில் நடத்தவிருப்பதால், நீங்கள் அவரிடமே உங்களின் விளக்கங்களைக் கூறுங்கள்" என்று பண்டாரியை நோக்கிக் கூறினார் ஜெயார். மேலும், "லலித் இதுகுறித்து உங்களுடன் விளக்கமாகப் பேசுவார்" என்றும் அவரிடம் கூறினார்.  பிரேமதாசவுடனான பண்டாரியின் பேச்சுக்கள் பொதுவானவையாக இருந்தன. வழ‌க்கம்போல் "மகாத்மா காந்தியில் நான் மதிப்பு வைத்திருக்கிறேன், இந்தியாவை நேசிக்கிறேன்" என்று பிரேமதாச பண்டாரியிடம் பேசத் தொடங்கினார். பின்னர், பயங்கரவாதத்தினை முற்றாக அழித்துவிட இந்தியா இலங்கைக்கு உதவேண்டும் என்றும் அவர் கோரினார். "தமிழ்ப் பயங்கரவாதம் இருக்கும்வரை, அரசியல்த் தீர்விற்கான சாத்தியங்கள் மிகவும் குறைவானவை. சிங்கள மக்களின் பெருமையும், கெளரவமும் மிகவும் பாதிக்கப்பட்டிருக்கிறன. இந்த நிலையில் அவர்கள் எந்த விட்டுக் கொடுப்பிற்கும் முன்வரப்போவதில்லை. இலங்கையில் சமாதானமும், உறுதிப்பாடும் நிலைநாட்டப்படுவதில் இந்தியாவிற்கு இருக்கும் அக்கறையினை சிங்கள மக்கள் அறிவார்கள், ஆனால் பேச்சுக்களில் மத்தியஸ்த்தம் வகிக்க இந்தியா எடுத்துவரும் முயற்சிகளை சிங்கள மக்கள் சந்தேகக் கண்ணோட்டத்துடன் பார்க்கிறார்கள். நீங்கள் தமிழர்கள் சார்பாகவே செயற்படுவதாக அவர்கள் முற்றாக நம்புகிறார்கள்" என்று அவர் பண்டாரியிடம் தெரிவித்தார். சிறிமாவுடனான சந்திப்பின்போது, "நான் திம்புப் பேச்சுக்கள் தோல்வியிலேயே முடிவடையும் என்று எதிர்பார்த்திருந்தேன். அப்படியே நடந்தது. ஏனென்றால், ஜெயவர்த்தன இப்பேச்சுக்களில் இதய சுத்தியுடன் ஈடுபடவில்லை. இரண்டாம் கட்டப் பேச்சுக்களுக்கும் இதே நிலைதான் ஏற்படும்" என்று பண்டாரியிடம் தெரிவித்தார் சிறிமா.    இலங்கையின் பேச்சுவார்த்தைக் குழுவின் தலைவரான ஹெக்டர் ஜெயவர்த்தனவுடன் பேசும்போது, "பழைய விடயங்களைத் திரும்பத் திரும்ப பேச்சுவார்த்தை மேசையில் பேசுவதைத் தவிருங்கள், எதிர்காலம் குறித்து மட்டுமே நாம் பேசலாம்" என்று கெஞ்சுவது போலக் கோரினார் பண்டாரி. இலங்கை தனது தீர்வினை எந்தெந்த இடங்களில் மேம்படுத்த முடியும் என்பது குறித்த பரிந்துரைகளை இந்தியாவின் "கடப்பாடு அற்ற" ஆவணம் கொண்டிருப்பதாக அவர் சுட்டிக் காட்டினார். இதற்குப் பதிலளித்த ஹெக்டர், "1978 ஆம் ஆண்டு யாப்பின் வரையறைகளை நான் சரியாக ஆராய்ந்து, எனது ஆலோசனைகளை அவற்றின் அடிப்படையில்  முன்வைக்கிறேன்" என்று கூறினார். லலித்துடனான பண்டாரியின் சந்திப்பு வித்தியாசகாம இருந்தது. "கடப்பாடு அற்ற" என்கிற தொனியில் இந்தியா முன்வைத்த அனைத்து பரிந்துரைகளையும் லலித் திட்டவட்டமாக நிராகரித்தார். வடக்கையும் கிழக்கையும் இணைக்கும் இந்தியாவின் யோசனையினை இலங்கை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது என்று பண்டாரியிடம் கூறினார் லலித். கிழக்கு மாகாணத்தில் சிங்களவர்களும் முஸ்லீம்களும் இணைந்து பெரும்பான்மையினராக மாறியிருப்பதாகவும், தமிழர்கள் அங்கு சிறுபான்மையினர் என்றும் அவர் கூறினார். மேலும், 1977 ஆம் ஆண்டுத் தேர்தலில் தனிநாட்டிற்கான ஆணையினை கிழக்கு மாகாண மக்கள் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணிக்கு வழங்கவில்லை என்றும் அவர் வாதிட்டார். 1982 ஆம் ஆண்டின் ஜனாதிபதித் தேர்தலும், சர்வஜன வாக்கெடுப்பும் கிழக்கு மாகாணம் அரசாங்கத்திற்கு ஆதரவாக நிற்பதையே நிரூபித்திருக்கின்றன என்று தனது வாதத்திற்கு மேலும் வலுச் சேர்த்தார் லலித்.  அடுத்ததாக, மாகாண சபைகளுக்கு வழங்கப்படும் அதிகாரங்களை மேம்படுத்தலாம் என்கிற இந்தியாவின் ஆலோசனைகளையும் லலித் புறக்கணித்தார். மாகாண சபைகளுக்கு நிதியதிகாரம், காணியதிகாரம், சட்டம் ஒழுங்கு ஆதிகாரம் ஆகியவற்றை வழங்குவதை சிங்கள மக்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை என்று அவர் கூறினார். தனிச் சிங்களச் சட்டத்தில் மாற்றங்களைச் செய்யும் அதிகாரமோ, அல்லது 1972 மற்றும் 1978 ஆம் ஆண்டு யாப்புகளின் அடிப்படையில் உருவாக்கப்பட்டிருக்கும் நாட்டின் ஒருமைப்பாடு, ஒற்றையாட்சி ஆகியவற்றில் மாற்றங்களைக் கொண்டுவரும் அதிகாரமோ இலங்கையில் எந்த அரசிற்கும் கிடையாது என்றும் அவர் கூறினார். "இந்த விடயங்களில் இலங்கையின் அரசானாலும், எதிர்க்கட்சியானாலும் அவர்கள் அனைவரினதும் நிலைப்பாடு ஒன்றுதான்" என்று மிகுந்த நம்பிக்கையுடன் பண்டாரியைப் பார்த்துக் கூறினார் லலித். 
    • கைக்காப்பு, கைப்பற்று மற்றும் தொலைநோக்கி பூட்டப்பட்ட ஏ.கே. 103 துமுக்கியால் சுட்டுப் பார்க்கிறார் தலைவர் மாமா காலம்: நான்காம் ஈழப்போர்    
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.