Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தில்... தமிழுக்கு முதல் இடம்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

No photo description available.

No photo description available.

No photo description available.

No photo description available.

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தில்... தமிழுக்கு முதல் இடம். 

இலங்கை வரலாற்றில் முதல் தடவையாக சர்வதேச செயற்பாடுகள் இடம்பெறும் பகுதியொன்றில் தமிழ் மொழிக்கு முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் – பலாலி பகுதியில் நிர்மாணிக்கப்பட்டுள்ள யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள பெயர் மற்றும் அறிவிப்பு பலகைகளில் தமிழ் மொழிக்கு முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளது.

-பிரசாந்தன் நவரத்தினம்.-

  • Replies 83
  • Views 9.3k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

வாக்காளர்களின் மனங்களை மாற்றும் ஒரு தந்திரோபாய உத்தி தான். சில படங்களில் கூரை தற்காலிகமாக அமைக்கப்பட்டது போல் காணப்படுகின்றது. குறுக்கும் நெடுக்குமாக கம்பிகள் தெரிகின்றன.

  • கருத்துக்கள உறவுகள்

எது எப்படி இருந்த போதிலும் ஒரு சர்வதேச விமான நிலையம் வடமாகாணத்தில் இருப்பது நல்லதுதான். என்ன தானிய அறையாக மாறாமல் இருக்கும்படி பார்த்து கொள்ள வேண்டும்.....!  👍

  • கருத்துக்கள உறவுகள்
53 minutes ago, vanangaamudi said:

வாக்காளர்களின் மனங்களை மாற்றும் ஒரு தந்திரோபாய உத்தி தான். சில படங்களில் கூரை தற்காலிகமாக அமைக்கப்பட்டது போல் காணப்படுகின்றது. குறுக்கும் நெடுக்குமாக கம்பிகள் தெரிகின்றன.

புலம் பெயர்ந்த தமிழர்களின் வருகையையும், தமிழ்நாட்டு உல்லாச பயணத்தையும், வணிகத்தையும் அதிகரிக்கும் நோக்கத்திலேயே இந்த விமானநிலையம் அமைக்கப்படுகிறது. இதன் மூலம் அந்நிய செலாவணியை அதிகரிக்க முடியும் என்று இந்தியா ஆலோசனை வழங்கி இருக்கலாம்.  போர்க்கால கடனுக்கான வட்டி கட்ட பெருமளவு அந்நிய செலாவணி இலங்கைக்கு தேவை. அதை தமிழரிடம் இருந்து பெற்றுக் கொள்ள தமிழ் இங்கே உதவுகிறது.

Edited by Jude

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, vanangaamudi said:

வாக்காளர்களின் மனங்களை மாற்றும் ஒரு தந்திரோபாய உத்தி தான். சில படங்களில் கூரை தற்காலிகமாக அமைக்கப்பட்டது போல் காணப்படுகின்றது. குறுக்கும் நெடுக்குமாக கம்பிகள் தெரிகின்றன.

வேண்டாத பெண்டாட்டி கைபட்டால் குற்றம். கால் பட்டால் குற்றம் 😂

நாமல் ராஜபக்சவின் twitter பதிவு. 😀

The @officialunp staunchly opposed the Mattala Airport saying there was no need for another international airport, despite its location in a crucial tourist zone in #SriLanka. Why is an international airport being promoted now right before elections?

இலங்கை வரலாற்றில் முதல் தடவையாக சர்வதேச செயற்பாடுகள் இடம்பெறும் பகுதியொன்றில் தமிழ் மொழிக்கு முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளது.

வெற்றி! தமிழர் போராட்டம் இத்துடன் முடிவிற்கு வந்து விட்டது  🙂 

  • கருத்துக்கள உறவுகள்
55 minutes ago, Lara said:

Why is an international airport being promoted now right before elections?

before%2Belection%2Bafter%2Belection%2B1.jpg

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ampanai said:

இலங்கை வரலாற்றில் முதல் தடவையாக சர்வதேச செயற்பாடுகள் இடம்பெறும் பகுதியொன்றில் தமிழ் மொழிக்கு முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளது.

வெற்றி! தமிழர் போராட்டம் இத்துடன் முடிவிற்கு வந்து விட்டது  🙂 

உங்களுக்கு ஒரு இரண்டாவது பேரழிவு வராமல் தமிழர் பிரச்சினை முடிவுக்கு வரக்கூடாதென்ற படபடப்பு இருப்பது புரிகிறது! 

2 hours ago, Lara said:

நாமல் ராஜபக்சவின் twitter பதிவு. 😀

The @officialunp staunchly opposed the Mattala Airport saying there was no need for another international airport, despite its location in a crucial tourist zone in #SriLanka. Why is an international airport being promoted now right before elections?

தேர்தல் வரும்பொழுது ஆட்சியில் உள்ள மற்றும் எதிர்க்கட்சிகள் 'பணத்தை' இறைப்பதும் வாக்குறுதிகளை அள்ளி வீசுவந்தும் சனநயாக விழுமியங்களில் ஒன்று 🙂 

  • கருத்துக்கள உறவுகள்

பெருமளவு வட இலங்கை தமிழர்கள் தென்னிந்தியா போவது வருவதும். கட்டுநாயக்கவில் இருந்து 7 மணி தொலைவில் யாழ் இருப்பதும், இங்கே ஏலெவே இருந்த விமானநிலையமே தரமுயர்தப்படுகிறது என்பதும் நாமல் பேபிக்கு தெரியும்.

இதை அத்துவானக் காட்டில், கட்டுநாயக்கவில் இருந்து 4 மணத்தியால தூரத்தில், புதிதாக பெரும் எடுப்பில் தாம் கட்டிய விமான நிலையத்தோடு ஒப்பிடுவது சரியில்லை என்பதும் தெரியும்.

ஆனால் அரசியல் செய்ய, இனவாதத்தை கையில் எடுத்து, தமிழனுக்கு ஏர்போர்ட் எதுக்குன்னு கூவினாத்தான் போணியாகும்.

  • கருத்துக்கள உறவுகள்

நல்லவிடயம்

ஆனால்  சிங்களம்   இதை  ஏன்  செய்கின்றது  என்ற  சந்தேகம்

வரலாற்றில்  நரித்தந்திரமாக  ஏமாற்றப்பட்ட  தமிழர்களுக்கு வரவே செய்யும்

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, விசுகு said:

நல்லவிடயம்

ஆனால்  சிங்களம்   இதை  ஏன்  செய்கின்றது  என்ற  சந்தேகம்

வரலாற்றில்  நரித்தந்திரமாக  ஏமாற்றப்பட்ட  தமிழர்களுக்கு வரவே செய்யும்

சாமி, சாமி வோட்டு, வோட்டு.

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, goshan_che said:

சாமி, சாமி வோட்டு, வோட்டு.

எனது  கவலையெல்லாம்

கூட்டமைப்பின் திருகுதாளங்களாலும் 

சுயநலங்களாலும்

கையாலாகாத்தனங்களாலும்

ஏமாற்றப்பட்டு நொந்து போயிருக்கும் எனது  இனம்

தேசியக்கட்சிகளை  நாடி  போய்விடக்கூடாது  என்பது  தான்

  • கருத்துக்கள உறவுகள்

இதை கிந்தியா - தமிழ் நாடு கூட்டே செய்வது போல தோன்றுகிறது.

சமீபத்தில், யாழ்பணத்தில் இருக்கும் இந்திய அரசின் consulate இல், இந்திய அரசின் சுதந்திர தினம், சொறி சிங்களம் கடுமையாக எதிர்த்தும், உயர் ஸ்தானிகர் (High Commision, தலை நகரம் அளவில்) அளவில் நடத்தப்பட்டதாக அறிந்தேன்.

இது அதன் தொடர்ச்சியோ என்று பார்க்கப்பட வேண்டி உள்ளது.

சிங்களதில், எந்த தரப்பாவது, விரும்பி செய்திருப்பார்கள் என்று நான் நினைக்கவில்லை.

 

 

Edited by Kadancha
add info.

37 minutes ago, விசுகு said:

ஆனால்  சிங்களம்   இதை  ஏன்  செய்கின்றது  என்ற  சந்தேகம்

அர்ஜுனா ரணதுங்க நீண்டகால அரசியல் நோக்கில் ஹிந்தியாவையும் தமிழரையும் மகிழ்ச்சிப்படுத்தவே பலாலி விமான நிலையப்பணிகளை வரும் தேர்தலுக்குள் முடிக்க முழுமூச்சாக இயங்குவதாக தெரிகிறது.

இதற்கு பிரதிபலனாக வருங் காலத்தில் ஹிந்திய கொலைகாரர்கள் அர்ஜுனா ரணதுங்கவை அரச உயர் பதவிகளுக்கு ஆதரிக்கக் கூடும்!

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, Kadancha said:

இதை கிந்தியா - தமிழ் நாடு கூட்டே செய்வது போல தோன்றுகிறது.

சமீபத்தில், யாழ்பணத்தில் இருக்கும் இந்திய அரசின் consulate இல், இந்திய அரசின் சுதந்திர தினம், சொறி சிங்களம் கடுமையாக எதிர்த்தும், உயர் ஸ்தானிகர் (High Commision, தலை நகரம் அளவில்) அளவில் நடத்தப்பட்டதாக அறிந்தேன்.

இது அதன் தொடர்ச்சியோ என்று பார்க்கப்பட வேண்டி உள்ளது.

 

அப்படியே  ஒரு  காந்தி  சிலையையும்  வைத்து  மாலை  போட்டுவிட்டால் சுபம்

1 minute ago, போல் said:

அர்ஜுனா ரணதுங்க நீண்டகால அரசியல் நோக்கில் ஹிந்தியாவையும் தமிழரையும் மகிழ்ச்சிப்படுத்தவே பலாலி விமான நிலையப்பணிகளை வரும் தேர்தலுக்குள் முடிக்க முழுமூச்சாக இயங்குவதாக தெரிகிறது.

இதற்கு பிரதிபலனாக வருங் காலத்தில் ஹிந்திய கொலைகாரர்கள் அர்ஜுனா ரணதுங்கவை அரச உயர் பதவிகளுக்கு ஆதரிக்கக் கூடும்!

ஐதேக  எப்பொழுதும் இந்தியுடன்  சங்கமமாகும்  கட்சி  தானே?

  • கருத்துக்கள உறவுகள்

ஆனால், இது உணர்வு பூர்வமாக தமிழரை திருப்தி படுத்துவது.

சிங்களதிற்கு பொருள்சார் சுளைகள். நடைமுறையில் சிங்கள நிர்வாகம்.

 

14 minutes ago, விசுகு said:

ஐதேக  எப்பொழுதும் இந்தியுடன்  சங்கமமாகும்  கட்சி  தானே?

ஐதேக மட்டுமல்ல எந்தவொரு சிங்களக் கட்சிகளும் எக்காலத்திலும் ஹிந்தியனுடன் உளப்பூர்வமாக ஐக்கியமாதில்லை. ஆனால் ஐக்கியம் போல நடித்து ஹிந்தியனை ஏமாற்றுவதில் வல்லவர்கள். சிங்களவனின் தந்திரத்தில் ஏமாறுவது ஹிந்தியனின் வழமையான பிச்சைக்கார புத்தி.

சிறிசேன கூரே போன்ற ஒருசில விதிவிலக்குகளைத் தவிர ஜெ.ஆர்., பிரேமதாச ... உட்பட பெரும்பாலான ஐதேக வினர் ஹிந்தியனை ஒருபோதும் மதித்ததில்லை.

மதிமயங்கி ஹிந்தியனுடன் முழுமையாக ஐக்கியமாகி தமிழின அழிவுக்கு துணைபோவது தமிழரசுக்கட்சி, தமிழர் விடுதலைக்கூட்டணி, புளட் ஈபிடிபி, .... என்று பல தமிழ்க் கட்சிகளை  பட்டியலிடலாம்.

இலங்கையின் அரசியலமைப்பின்படி நாடு முழுவதற்குமான தேசிய  மொழியாகவும், நிர்வாக மொழியாகவும் சிங்கள மொழியும், தமிழ் மொழியும்  ஏற்கப்பட்டுள்ளன. அதேவேளை வடக்கு, கிழக்கு மாகாணங்களின் முதன்மை நிர்வாக  மொழியாகத் தமிழும் ஏனைய ஏழு மாகாணங்களின் முதன்மை நிர்வாக மொழியாகச்  சிங்களமும் இருக்குமென்றும் கூறப்பட்டுள்ளது.

ஆங்கிலம் இணைப்பு மொழியாக ஏற்கப்பட்டுள்ளது.

இருப்பினும், நாட்டின் எப்பகுதியிலும் ஒரு குடிமகன்  தனக்கு விரும்பிய ஏதாவது ஒரு மொழியில் தனது அரசுடான தொடர்புகளையும்  அன்றாடக் கடமைகளையும் ஆற்றிக் கொள்ள முடியுமென்ற உரிமையும்  வழங்கப்பட்டிருக்கின்றது.அதேவேளை இரு மொழிகளையும் முதன்மை மொழியாகக் கொண்ட  மாகாணங்களில் மாற்று மொழியான சிங்களம் அல்லது தமிழை தாய்மொழியாகக்  கொண்டவர்கள் வாழும் பிரதேச செயலகப் பிரிவுகளை இரு மொழிப் பிரதேச செயலகப்  பிரிவுகளாக, அதாவது இருமொழிகளையும் அன்றாடம் அரச அலுவலகங்களில்  பயன்படுத்தும் உரிமையுடையவையாகப் பிரகடனப்படுத்தவும் சட்டத்தில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
44 minutes ago, போல் said:

ஐதேக மட்டுமல்ல எந்தவொரு சிங்களக் கட்சிகளும் எக்காலத்திலும் ஹிந்தியனுடன் உளப்பூர்வமாக ஐக்கியமாதில்லை. ஆனால் ஐக்கியம் போல நடித்து ஹிந்தியனை ஏமாற்றுவதில் வல்லவர்கள். சிங்களவனின் தந்திரத்தில் ஏமாறுவது ஹிந்தியனின் வழமையான பிச்சைக்கார புத்தி.

சிறிசேன கூரே போன்ற ஒருசில விதிவிலக்குகளைத் தவிர ஜெ.ஆர்., பிரேமதாச ... உட்பட பெரும்பாலான ஐதேக வினர் ஹிந்தியனை ஒருபோதும் மதித்ததில்லை.

மதிமயங்கி ஹிந்தியனுடன் முழுமையாக ஐக்கியமாகி தமிழின அழிவுக்கு துணைபோவது தமிழரசுக்கட்சி, தமிழர் விடுதலைக்கூட்டணி, புளட் ஈபிடிபி, .... என்று பல தமிழ்க் கட்சிகளை  பட்டியலிடலாம்.

மிகச் சரியான கணிப்பு... போல். :)

6 hours ago, Paanch said:

before%2Belection%2Bafter%2Belection%2B1.jpg

பெற்றோல் விலையை குறைத்தது ஐ.ஓ.சி

      2019 ஒக்டோபர் 11 , பி.ப. 12:48

லங்கா ஐ.ஓ.சி நிறுவனம் பெற்றோல் விலையை குறைக்க தீர்மானித்துள்ளது.

ஒக்டேன் 92 ரக பெற்றோல் மற்றும் யூரோ 03 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 02 ரூபாயால் குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக லங்கா ஐ.ஓ.சி நிறுவனம் அறிவித்துள்ளது.

அதன்படி, ஒக்டேன் 92 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் புதிய விலை 142 ரூபாய் ஆகும்.

எரிபொருள் விலைச் சூத்திரத்திற்கமைய ஒவ்வொரு மாதமும் 10 ஆம் திகதி எரிபொருள் விலைகளில் மாற்றம் ஏற்படுத்தப்பட்டு வருகின்து.

இம்மாதம் எரிபொருட்களின் விலைகளில் மாற்றங்கள் ஏற்படாது என நிதி அமைச்சு நேற்று (10) தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

http://www.tamilmirror.lk/செய்திகள்/பறறல-வலய-கறததத-ஐ-ஓ-ச/175-239850

  • கருத்துக்கள உறவுகள்

கோட்டா அதிபராகி வந்தால் எங்கட ஏர்போட்டை மாட்டு தொளுவமா மாத்திட்டு தான் முதல் வேலை பாப்பாரு.
அப்படி இல்லை தொடர்ந்து அதை இயங்க விட்டாலும் 100 %  தென்னிலங்கை  அலுவலர்களை வேலைக்கு அமர்த்தி போக்குவரத்தை முழு கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தாலும் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை.

இந்திய இலங்கை விமான சேவைகளில் இணையவழி பயண சீட்டு பதிவுகளுக்காக  யாழ் விமான நிலையம் இன்னும் பட்டியலிடப்படவில்லை. தொடர்ச்சியான சேவைகளை கண்டபின் தான் எதுவும் நிச்சயம். எதற்கும் அதிபர் தேர்தல் நடந்து முடிய வேண்டும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, vanangaamudi said:

கோட்டா அதிபராகி வந்தால் எங்கட ஏர்போட்டை மாட்டு தொளுவமா மாத்திட்டு தான் முதல் வேலை பாப்பாரு.
அப்படி இல்லை தொடர்ந்து அதை இயங்க விட்டாலும் 100 %  தென்னிலங்கை  அலுவலர்களை வேலைக்கு அமர்த்தி போக்குவரத்தை முழு கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தாலும் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை.

இந்திய இலங்கை விமான சேவைகளில் இணையவழி பயண சீட்டு பதிவுகளுக்காக  யாழ் விமான நிலையம் இன்னும் பட்டியலிடப்படவில்லை. தொடர்ச்சியான சேவைகளை கண்டபின் தான் எதுவும் நிச்சயம். எதற்கும் அதிபர் தேர்தல் நடந்து முடிய வேண்டும்.

யாழ்ப்பாண விமான நிலையத்தை,  கோட்டா...  மாட்டுத் தொழுவமாக்கினால்,
இந்தியாவுக்கு,  இரட்டிப்பு... சந்தோசமாக இருக்குமே....  :grin:

  • கருத்துக்கள உறவுகள்

CIMG2445-1200x550.jpg_72781110_bafe287f-cf9e-473d-8e84-c0ce2b

C2dHcYSUkAAfvhq.jpg

ஏற்கனவே ரனில் சொன்னது  புலம்பெயர் தமிழர்களின் வருகையால் அந்நியசெலவாணி பில்லியனில் வருவதாக குறிப்பிட்டு இருந்தார். அதனால் வடக்கில் சர்வதேச விமானநிலையம் வருவது மேலும் அந்நிய செலவாணியை கொடுக்கும்.அது நாட்டுக்கு நல்லது தானே. மந்தலவில் மகிந்த குடும்பம் இலையான் கலைத்ததால் வந்த ஆற்றமையால் இனவாதத்தை கக்குகிறார் நாமல்.

தமிழில் முதல் முறையாக எழுத்துப்பிழை இல்லாமல் முதலில் தமிழை போட்டு தமிழ் மக்களுக்கு ஐஸ் வைத்துள்ளார்கள். அரசியல் நிச்சயமாக உண்டு. எத்தனையோ போராட்டங்களை தமிழ் மக்கள் நடாத்தியும் தீர்வு காணப்படாமல் உள்ள வேளையில் தமிழில் பெயர்ப்பலகையை  திடீரென போடுவது சந்தேகத்தை  கிளப்புகிறது. நீண்ட காலப்போக்கில் என்ன நடக்கிறது என பார்க்கலாம்.

_72780162_bus_sign.jpg

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.