Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சம்பந்தன், சுமந்திரன், மாவை ஆகியோர் இராஜினாமா செய்து ஒதுங்கியிருப்பது தமிழ் மக்களிற்கு செய்யும் பெரும் உதவி – ஆனந்தசங்கரி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சம்பந்தன், சுமந்திரன், சேனாதிராஜா ஆகியோர் சிறிது காலத்திற்கு பதவியை இராயினாமா செய்து ஒதுங்கியிருப்பது தமிழ் மக்களிற்கு செய்யும் பெரும் உதவியாக இருக்கும் என வீ.ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சியில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தமிழ் மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் ஜெனிவா விடயம் தொடர்பில் அடிக்கடி கூறிக்கொள்ளும் சுமந்திரன், ஜெனிவா அமர்வின்போது விடுதலைப்புலிகளே அதிகளவான மக்களை கொன்றனர் என தெரிவித்த கருத்துடன் ஜெனவா சாட்சியமாக மாற்றப்பட்டு அப்பிரச்சினை முடிவுக்கு வந்துவிட்டது. அப்போது ஐக்கிய தேசிய கட்சிக்கு சார்பாக செயற்பட்டு, ரணில் விக்கரமசிங்கவிற்காக செயற்பட்டு வந்த சுமந்திரன் இன்று தற்போதுள்ள அரசுக்கும் அவ்வாறாக செயற்படமுற்படுகின்றார் என அவர் குறித்த ஊடக சந்திப்பில் தெரிவித்திருந்தார். தற்போது மீண்டும் ஜெனிவா விடயங்கள் தொடர்பில் கருத்துக்கள் தெரிவித்து வரும் சுமந்திரன் மீண்டும் ஏற்கனவே கூறியது போன்றதான விடயத்தை மீண்டும் கூறி ஜெனிவா சாட்சியத்தை முதலாவதாக பதிவு செய்யப்போகின்றார் எனவும் அவர் இதன்போது குற்றம் சாட்டினார்.

இவ்வாறான நிலையிலேயே, இன்று அனைவரும் ஒரே குடையின்கீழ் ஒன்று சேர வேண்டும் என சுமந்திரன் அழைப்பு விடுத்து வருகின்றார். நீங்கள் இதுவரை காலமும் தமிழ் மக்களிற்கு செய்த துரோகங்கள் போதும் எனவும், குறிப்பிட்ட சில காலத்திற்கு ஒதுங்கி இருங்கள் எனவும் இதன்போது ஆனந்தசங்கரி தெரிவித்தார்.

ஐக்கிய தேசிய கட்சிக்கு தொடர்ந்தும் நீங்கள் கொடுத்த வந்த ஆதரவினால் தமிழ் மக்களிற்கு எந்த நன்மையும் ஏற்பட்டிருக்கவில்லை. நீங்கள் பல இலட்சம் பெறுமதியில் வாகன சலுகைகளை பெற்று சுகங்களை அனுபவித்தீர்கள். இந்த நிலையில் மாற்று அணிகள் ஒன்றும் தேவை இல்லை. அனைவரும் எம்முடன் இணையுங்கள் என சுமந்திரன் தெரிவிக்கின்றார். நீங்கள் இதுவரை தமிழ் மக்களிற்கு செய்தது போதும் என அவர் இதன்போது தெரிவித்தார்.

2006, 2007 ம் ஆண்டுகளில் இந்திய அரசியலமைப்பு முறையிலான தீர்வு திட்டம் ஒன்றே எமது அரசியல் பிரச்சினைக்கு தீர்வு என தொடர்ந்தும் வலியுறுத்தி வந்துள்ளேன். இவ்விடயம் தொடர்பில் அப்போது இருந்த ஜனாதிபதி மற்றம் அஸ்கிரிய தேரர்கள் ஆகியோருக்கு தெளிவு படுத்தியுள்ளேன். அவர்களும் அதை ஏற்றனர். சிங்கள அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஏற்றிருந்தனர். அதேவேளை பெரும்பாலன சிங்கள மக்களும் அதனை ஏற்றிருந்தனர். இன்று மீண்டும் குறித்த தீர்வை முன்வைப்பதற்கான சூழல் ஏற்பட்டுள்ளது. இந்தசந்தர்ப்பத்தினை மீண்டும் நான் ஆரம்ப புள்ளியாக பயன்படுத்த உள்ளேன். தமிழர் விடுதலை கூட்டணி அழிந்துவிட்டதாக எண்ணாதீர்கள். அது அழியா வரம் பெற்றது. இதுவரை ஏமாற்று அரசியல் செய்தவர்களை் யார் என்பதை மக்கள் நன்று உணர்ந்துள்ளனர். இந்த நிலையில் அரசியல் தீர்வை ஆரம்பித்த தமிழர் விடுதலை கூட்டணியே முடிவுக்கு கொண்டு வந்தது என்ற நிலைப்பாட்டை உருவாக்க அனைவரும் ஒன்றாக இணையுங்கள் என அவர் இதன்போது அழைப்பு விடுத்ததார்.

2006, 2007ம் ஆண்டுகளில் ஜனாதிபதி மற்றும் அஸ்கிரிய தேரர்களிற்கு எழுதிய கடிதங்கள், அக்காலகட்டத்தில் எழுதப்பட்ட கட்டுரைகள் என அனைத்தையும் மீண்டும் இந்திய ஜனாதிபதி பிரதமர் மற்றும் அரச தலைவர்களின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளேன். அவர்களிற்கு அவற்றை அனுப்பி வைத்துள்ளேன் எனவும் அவர் தெரிவித்தார். ஓரிரு நாட்களில் ஜனாதிபதி உள்ளிட்டோரை நான் சந்திக்க உள்ளேன். நல்லதொரு சந்தர்ப்பம் மீண்டும் கூடியுள்ளது. தம்முடன் இணையுமாறு தெரிவிப்பதற்கு சுமந்திரனுக்கோ சம்பந்தனுக்கோ தகுதி கிடையாது.

நடைபெற்ற தேர்தலில் தமிழ் மக்கள் தமது கருத்தை ஏற்றே வாக்களித்ததாக கூறிக்கொள்கின்றனர். உண்மை அதுவல்ல. தமழ் தேசிய கூட்மைப்பு எவ்வாறான நிலை எடுக்கும் என்பதை மக்கள் அவர்களின் அறிவிற்புக்கு முன்பாகவே அறிந்திருந்தனர். ஆனால் தமிழ் மக்கள் ஏற்கனவே யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பதை தீர்மானித்திருந்தனர். இந்த நிலையில் தாம் கூறிதான் மக்கள்  தீர்மானித்தனர் என்பது முழுக்க முழுக்க பொய் எனவும் அவர் தெரிவித்தார்.

இந்த நிலையில் தமிழர் விடுதலை கூட்டணி விட்ட இடத்திலிருந்து தமிழ் மக்களிற்கான தீர்வினை பெற்றுக்கொள்வதற்கான பயணத்தை மீண்டும் ஆரம்பிக்கின்றது. இதுவரை தமிழ் மக்கள் ஒரு தரப்பினருக்கு தமது அதிகாரத்தை வழங்கினர். ஒருமுறை அதனை மாற்றி எம்கு அந்த சந்தர்ப்பம் ஒன்றை தந்து பாருங்கள் எனவும் அவர் தெரிவித்தார்.

யார் துரோகமிழைத்தனர் என்பதை தமிழ் மக்கள் நன்கு உணர்ந்துள்ளனர். இந்த நிலையில் அனைத்து தரப்பினரும் தமிழர் விடுதலை கூட்டணியுடன் இணைந்து பயணிக்க வருமாறு பிகிரங்கமாக அழைப்பு விடுக்கின்றேன். தமிழர் விடுதலை கூட்டணி என்பது பெரும் தலைவர்களால் விட்டு செல்லப்பட்ட பெரும் சொத்து. அந்த கட்சியின் ஊடாகவே தீர்வை பெற்றுக்கொள்ள முடியும். எனவே, அனைவரும் ஒன்றாக இணையுமாறும் தமிழர் விடுதலை கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தங்கரி இதன்போது அழைப்பு விடுத்திருந்தார்.

http://ilakkiyainfo.com/சம்பந்தன்-சுமந்திரன்-மா/

புலிகளுக்கு விரோதமாக கருத்துக்களை கூறி சிங்கள அரசுக்கு ஆதரவாக செயல்பட்டு அவர்களிடமிருந்து சன்மானங்களை பெற்ற சங்கரி ஐயா இப்போது மற்றவர்களை குற்றம் சாட்டுவது அவ்வளவு நியாயமாக தெரியவில்லை.

ஒரு காலத்தில் தமிழர்களுக்கு எதிராகத்தான் நீங்கள் செயல்படடீர்கள். மத்தவர்கள் ஓய்வெடுக்கு முன்னர் நீங்கள் ஓய்வெடுத்தால் இன்னும் நன்றாக இருக்கும். 

  • கருத்துக்கள உறவுகள்

மன்மதராசாவுக்கு மட்டும் இளமை துள்ளி விளையாடுதோ ? 

நீங்களும்தான் நிரந்தர ஓய்வு எடுக்க வேண்டும். 

  • கருத்துக்கள உறவுகள்

வேலையில் இருந்து ஓய்வு பெறும் வயதை அரசியல்வாதிகளும் பின்பற்ற சட்டம் இயற்றுங்கோ!

  • கருத்துக்கள உறவுகள்

சம்பந்தர் ஐயா பற்றி பேசும் விமர்சிக்கும் அருகதை நண்பர் ஆனந்தசங்கரி அவர்களுக்கு இல்லை என்பதை பணிவன்புடன் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
4 hours ago, Maharajah said:

மன்மதராசாவுக்கு மட்டும் இளமை துள்ளி விளையாடுதோ ? 

நீங்களும்தான் நிரந்தர ஓய்வு எடுக்க வேண்டும். 

ஆ-சங்கரி:-  அதெல்லாம் ஏலாது.....  கிளிநொச்சியிலை இப்பதான் மாங்கொட்டை  தாட்டு வைச்சனான்.அது முளைச்சு வளர்ந்து காய் காய்ச்சு பழம் பழுத்து அதின்ரை கொட்டை சூப்பிப்போட்டுத்தான் ஓய்வெடுப்பன். 😎

  • கருத்துக்கள உறவுகள்

துரோகம் செய்தவன் எல்லாம் திருந்தினாலும் நல்லவனா இருந்து துரோகம் செய்கிறவன் தான் இன்னும் இருந்து கொண்டு இருக்கிறான் ஆனந்த சங்கரியர் கூறியதில் பிழை இல்லை போல் தோன்றுது பெயருக்கு மட்டும் சம், சும் , சேனா கும்பல் இதுவரைக்கும் இருக்கு 

2 hours ago, poet said:

சம்பந்தர் ஐயா பற்றி பேசும் விமர்சிக்கும் அருகதை நண்பர் ஆனந்தசங்கரி அவர்களுக்கு இல்லை என்பதை பணிவன்புடன் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்.

கருத்தும் , விமர்சனமும் யாரும் சொல்லலாம் அல்லவா பொயட்

 

6 hours ago, Vankalayan said:

புலிகளுக்கு விரோதமாக கருத்துக்களை கூறி சிங்கள அரசுக்கு ஆதரவாக செயல்பட்டு அவர்களிடமிருந்து சன்மானங்களை பெற்ற சங்கரி ஐயா இப்போது மற்றவர்களை குற்றம் சாட்டுவது அவ்வளவு நியாயமாக தெரியவில்லை.

ஒரு காலத்தில் தமிழர்களுக்கு எதிராகத்தான் நீங்கள் செயல்படடீர்கள். மத்தவர்கள் ஓய்வெடுக்கு முன்னர் நீங்கள் ஓய்வெடுத்தால் இன்னும் நன்றாக இருக்கும். 

புலிகளுக்கு எதிராக கருத்துக்கள் யார்தான் கூறவில்லை 

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, poet said:

சம்பந்தர் ஐயா பற்றி பேசும் விமர்சிக்கும் அருகதை நண்பர் ஆனந்தசங்கரி அவர்களுக்கு இல்லை என்பதை பணிவன்புடன் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்.

உங்களின் கருத்துப்படி பார்த்தால் சம்பந்தர் ஐயா தன்னைத்தானே விமர்சித்தால்தான் உண்டு.

(நீங்கள் கூறவிரும்புவதை புரிந்துகொள்கிறேன்.  ஆனாலும்.. ஒரு சின்னக் கடி கடிச்சால் தான் எனக்கு நித்திரை வரும் 😃)

 

Edited by Maharajah
எழுத்துப்பிழை

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தனிக்காட்டு ராஜா said:

துரோகம் செய்தவன் எல்லாம் திருந்தினாலும் நல்லவனா இருந்து துரோகம் செய்கிறவன் தான் இன்னும் இருந்து கொண்டு இருக்கிறான் ஆனந்த சங்கரியர் கூறியதில் பிழை இல்லை போல் தோன்றுது பெயருக்கு மட்டும் சம், சும் , சேனா கும்பல் இதுவரைக்கும் இருக்கு 

கருத்தும் , விமர்சனமும் யாரும் சொல்லலாம் அல்லவா பொயட்

 

புலிகளுக்கு எதிராக கருத்துக்கள் யார்தான் கூறவில்லை 

அன்புக்குரிய தனிக்காட்டு ராஜா , மன்னிக்க வேண்டுகிறேன்.  விமர்சன கருத்து சொல்ல எலோருக்கும் உரிமை உண்டு. யாரும் சொல்லல்லாம் . திரு.ஆனந்தசங்கரி சொன்ன கருத்தில் எனக்கு உடன்பாடில்லை என பதிவு செய்திருக்க வேண்டும். நன்றி

1 hour ago, Maharajah said:

(ஆனாலும்.. ஒரு சின்னக் கடி கடிச்சால் தான் எனக்கு நித்திரை வரும் 😃)

 

இவ்வளவு நாளும் எனக்கு மட்டும் தான் இப்படியான வியாதி இருக்கு என்று நினைச்சுக் கொண்டு இருந்தனான் ..

  • கருத்துக்கள உறவுகள்

ஆனந்த சங்கரியே......  👉🏿 "காறித் துப்பும்" 👈🏿 அளவுக்கு,
சம்பந்தன், சுமந்திரன், மாவையின்... அரசியல் இருப்பது... பெரும்  கேவலம்.  :shocked:

இதிலிருந்து... தமிழ் மக்களுக்கு, விடிவே... கிடைக்காதா
2020´ம் ஆண்டு, நல்ல செய்தியை... கொண்டு வரட்டும்.

  • கருத்துக்கள உறவுகள்
53 minutes ago, poet said:

அன்புக்குரிய தனிக்காட்டு ராஜா , மன்னிக்க வேண்டுகிறேன்.  விமர்சன கருத்து சொல்ல எலோருக்கும் உரிமை உண்டு. யாரும் சொல்லல்லாம் . திரு.ஆனந்தசங்கரி சொன்ன கருத்தில் எனக்கு உடன்பாடில்லை என பதிவு செய்திருக்க வேண்டும். நன்றி

புலவரே, 

கூறியவரின் தகுதியில் குறைகண்டீரோ அல்லது கூறியவரின் கருத்தில் குறை கண்டீரோ ? 

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, Maharajah said:

புலவரே, 

கூறியவரின் தகுதியில் குறைகண்டீரோ அல்லது கூறியவரின் கருத்தில் குறை கண்டீரோ ? 

Maharajah  பக்கத்தில் முருங்கை மரங்கள் இல்லை. பதில்தானே? தலை வெடிக்கமுன் சொல்லிவிடுகிறேன். ஆதாரபூர்வமான விவாதங்களை விடுத்து ”சாத்தான் வேதம் ஓதுகிறதுபோல” என்று கூறியவரின் தகுதியில் குறைகாணுவது சிறந்த விவாத முறைமையில்லை. பதிலில் நிலவும் தெரிவுகள் பற்றி  ஒன்று கூற வேணும். மக்களும் எதிரியும் சர்வதேச சமூகமும் ஏன் வாக்களிக்கும் மக்கள்கூட கழத்தில் நின்று நிலவும் தெரிவுகளுக்கு மத்தியில் தான் அரசியல் செய்வார்கள். சதுரங்கமும் அப்படித்தானே ஆடுகிறார்கள். இருக்கிற காய்களை பலப்படுத்தி நகர்த்தித்தானே ஆடுவீர்கள். எங்கள் ராணிக்காய் தேசிய இன அரசியல் தான். இன்றைய நிலையில் எல்லா விமர்சனங்களோடும் தன் வல்லமைக்குள் சம்பந்தரைதவிர வேறுயாரும் அந்தக் காயைப் போட்டுடைக்காமல் காப்பாற்ரவில்லை. வெட்டுப்பட்ட காய்களை நகர்த்த முடியாது  அல்லது நீங்கள் விரும்புமிடத்தில் விரும்பும்காயை தள்ளி வைத்தும் நகர்த்த முடியாது.  சதுரங்கப் பலகையில் மட்டுமல்ல அரசியல் பலகையிலும் அப்படித்தான். அதனால்தான் ஜனாதிபதித்தேர்தலின்போது வடகிழக்கு மாகாணங்களில்  சஜித் பெற்ற வெற்றியை சம்பந்தன் ஐயாவின் வெற்றியெனவாதிட்டு நாம் நகர்த்தக்கூடிய காயை பலப்படுத்தினேன். நண்பன் தமிழ் சிறியும்  என் பதிலை வாசிக்க வேண்டும். நிழலிக்கு, சிறப்பு வரவேற்பும் விருந்தும். விபரத்துக்கு பைபிள் கதைகளை வாசிக்கவும். 

Edited by poet

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, poet said:

Maharajah  பக்கத்தில் முருங்கை மரங்கள் இல்லை. பதில்தானே? தலை வெடிக்கமுன் சொல்லிவிடுகிறேன். ஆதாரபூர்வமான விவாதங்களை விடுத்து ”சாத்தான் வேதம் ஓதுகிறதுபோல” என்று கூறியவரின் தகுதியில் குறைகாணுவது சிறந்த விவாத முறைமையில்லை. பதிலில் நிலவும் தெரிவுகள் பற்றி  ஒன்று கூற வேணும். மக்களும் எதிரியும் சர்வதேச சமூகமும் ஏன் வாக்களிக்கும் மக்கள்கூட கழத்தில் நின்று நிலவும் தெரிவுகளுக்கு மத்தியில் தான் அரசியல் செய்வார்கள். சதுரங்கமும் அப்படித்தானே ஆடுகிறார்கள். இருக்கிற காய்களை பலப்படுத்தி நகர்த்தித்தானே ஆடுவீர்கள். வெட்டுப்பட்ட காய்களை நகர்த்த முடியாது  அல்லது நீங்கள் விரும்புமிடத்தில் விரும்பும்காயை தள்ளி வைத்தும் நகர்த்த முடியாது.  சதுரங்கப் பலகையில் மட்டுமல்ல அரசியல் பலகையிலும் அப்படித்தான். அதனால்தான் ஜனாதிபதித்தேர்தலின்போது வடகிழக்கு மாகாணங்களில்  சஜித் பெற்ற வெற்றியை சம்பந்தன் ஐயாவின் வெற்றியெனவாதிட்டு நாம் நகர்த்தக்கூடிய காயை பலப்படுத்தினேன். நண்பன் தமிழ் சிறியும்  என் பதிலை வாசிக்க வேண்டும். நிழலிக்கு, சிறப்பு வரவேற்பும் விருந்தும். விபரத்துக்கு பைபிள் கதைகளை வாசிக்கவும். 

ஜெயபாலன் அண்ணா.... வணக்கம்.
உங்களை... யாழ். பல்கலைக் கழக..  முன் வீதியில் உள்ள,
குமாரசாமி வீதியில்.... சிவராஜலிங்கம் மாஸ்ரர் வீட்டிற்கு முன் இருந்த,
மண் கும்பியில்  இருந்து, அரசியல் பேசி இருக்கின்றோம்.
அந்தத் தருணங்களை... என்றுமே... மறக்க மாட்டேன்  :)

அப்போதும், இப்போதும்.... எமது  அரசியல் பார்வைகள் எதிரானவை. :120_speaking_head:

ஆனால்... நீங்கள்  இன்றும் எனது  நண்பர். 👯‍♂️
அதுதான் முக்கியம். 💓

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, poet said:

Maharajah  பக்கத்தில் முருங்கை மரங்கள் இல்லை. பதில்தானே? தலை வெடிக்கமுன் சொல்லிவிடுகிறேன். ஆதாரபூர்வமான விவாதங்களை விடுத்து ”சாத்தான் வேதம் ஓதுகிறதுபோல” என்று கூறியவரின் தகுதியில் குறைகாணுவது சிறந்த விவாத முறைமையில்லை. பதிலில் நிலவும் தெரிவுகள் பற்றி  ஒன்று கூற வேணும். மக்களும் எதிரியும் சர்வதேச சமூகமும் ஏன் வாக்களிக்கும் மக்கள்கூட கழத்தில் நின்று நிலவும் தெரிவுகளுக்கு மத்தியில் தான் அரசியல் செய்வார்கள். சதுரங்கமும் அப்படித்தானே ஆடுகிறார்கள். இருக்கிற காய்களை பலப்படுத்தி நகர்த்தித்தானே ஆடுவீர்கள். எங்கள் ராணிக்காய் தேசிய இன அரசியல் தான். இன்றைய நிலையில் எல்லா விமர்சனங்களோடும் தன் வல்லமைக்குள் சம்பந்தரைதவிர வேறுயாரும் அந்தக் காயைப் போட்டுடைக்காமல் காப்பாற்ரவில்லை. வெட்டுப்பட்ட காய்களை நகர்த்த முடியாது  அல்லது நீங்கள் விரும்புமிடத்தில் விரும்பும்காயை தள்ளி வைத்தும் நகர்த்த முடியாது.  சதுரங்கப் பலகையில் மட்டுமல்ல அரசியல் பலகையிலும் அப்படித்தான். அதனால்தான் ஜனாதிபதித்தேர்தலின்போது வடகிழக்கு மாகாணங்களில்  சஜித் பெற்ற வெற்றியை சம்பந்தன் ஐயாவின் வெற்றியெனவாதிட்டு நாம் நகர்த்தக்கூடிய காயை பலப்படுத்தினேன். நண்பன் தமிழ் சிறியும்  என் பதிலை வாசிக்க வேண்டும். நிழலிக்கு, சிறப்பு வரவேற்பும் விருந்தும். விபரத்துக்கு பைபிள் கதைகளை வாசிக்கவும். 

ஆரோக்கியமான, பரஸ்பரம் மரியாதைமிக்க கருத்தாடல் எப்போதும் நன்மை பயக்கும். 

  • கருத்துக்கள உறவுகள்

சம்பந்தர் ஐயா தன் இயலாமைகளை இயலுமையாக சொல்லி சொல்லி சொந்த மக்களையே ஏமாற்றிவிட்டார் என்றே நான் கருதுகிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, நிழலி said:

இவ்வளவு நாளும் எனக்கு மட்டும் தான் இப்படியான வியாதி இருக்கு என்று நினைச்சுக் கொண்டு இருந்தனான் ..

எல்லோருக்கும் சிலர் கடிச்சால் பல்லு விழுந்தும் என்ற பயத்தில் கடிப்பதில்லை ஆனால் நானோ கடிக்காமல் செல்வதில்லை இந்த கோதாரிப்பழக்கம் எனக்கும் இருக்கு வெளியில் லைட்டா காட்டிக்கொள்வது 

  • கருத்துக்கள உறவுகள்

முதலில் ரெண்டு பேரும் ஒரு ஓரமா விளையாடுக ..👌

Soori_random+3_memekadai.blogspot.com.jp

  • கருத்துக்கள உறவுகள்
On 11/29/2019 at 12:56 PM, ஏராளன் said:

வேலையில் இருந்து ஓய்வு பெறும் வயதை அரசியல்வாதிகளும் பின்பற்ற சட்டம் இயற்றுங்கோ!

👍

வேலையில் உள்ள சதாரண மக்கள் வேலையில் இருந்து ஓய்வு பெறும் வயது வரும் வரை இருக்காமல் அதற்கு முன்பே எப்படியாவது வேலையில் இருந்து ஓய்வு பெற்றுகொள்ள முயற்சிக்கிறார்கள். ஆனால் அரசியல்வாதிகள் மட்டும் ஏன் ஓய்வு பெற்று கொள்ள விரும்புவது இல்லை? அரசியலில் உள்ள அதிகமான லாபங்களும் அதில் இருந்து கிடைக்கும் கிக்கும்.தமிழர்களுக்காகவே தலைவர் தனது இறுதி மூச்சுவரை உழைத்தார் என்கின்ற பெயர்.

  • கருத்துக்கள உறவுகள்
On 11/30/2019 at 11:23 AM, Maharajah said:

ஆரோக்கியமான, பரஸ்பரம் மரியாதைமிக்க கருத்தாடல் எப்போதும் நன்மை பயக்கும். 

உண்மை Maharajah , நான் கிண்டலாக முருங்கை மரம் என்றது நட்போடு சொன்னதுதான், மனசை நோகவைத்திருந்தால் மன்னிக்க வேண்டுகிறேன்

 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, poet said:

உண்மை Maharajah , நான் கிண்டலாக முருங்கை மரம் என்றது நட்போடு சொன்னதுதான், மனசை நோகவைத்திருந்தால் மன்னிக்க வேண்டுகிறேன்

 

புலவரே, 

உண்மையில் நான் அதை உங்களுக்கு எழுதவில்லை..  பொதுவாகவே எழுதினேன்  ஏனென்றால் எண்களில்  பலர் தங்கள் நியாயமான கோபங்களை வெளிக்காட்டும் போது நிதானம் தவருகின்றனர்.  அதற்காகத்தான் பொதுவாக கூறினேன்.  உங்களை சுட்டியல்ல. 

இதுவரை ஒன்டுக்குமே உதவாத சம்பந்தன், சுமந்திரன், மாவை, துரைசிங்கம், ஆனந்தசோணகிரி, எல்லாம் ஒதுக்கினால் நல்லதொரு வெளி பிறக்கும்.

புலிகளை எல்லோரும் குற்றம் சொல்லுவது இருக்கட்டும் ராஜா . ஆனால் இவர் புலிகளை குற்றம் சொல்லி சன்மானம், வெகுமதி பெற்றுக்கொண்டவர். இவர் புலிகளை வென்ற புலி. 

6 hours ago, Vankalayan said:

ஆனால் இவர் புலிகளை குற்றம் சொல்லி சன்மானம், வெகுமதி பெற்றுக்கொண்டவர். இவர் புலிகளை வென்ற புலி. 

இப்ப ஓநாய்களெல்லாம் புலிகளைப் பற்றி பேசுற காலம்!

17 hours ago, Gowin said:

இப்ப ஓநாய்களெல்லாம் புலிகளைப் பற்றி பேசுற காலம்!

புலி வருது , புலி வருது , புலித்தோல் போர்த்த நரி வருது

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.