Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அருட் தந்தைக்கு கன்னத்தில் அறையும் பிக்கு! தென்தமிழீழத்தில் சம்பவம்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

 

அருட் தந்தைக்கு கன்னத்தில் அறையும் பிக்கு! தென்தமிழீழத்தில் சம்பவம்!

thero-thamnail-1024x579.jpg
 

(மட்டக்களப்பு, தமிழீழம்)
தென் தமிழீழம் மட்டக்களப்பு நகரில் உள்ள ‘சிறீ மக்களராம ராஜமகா வித்தியாராஜா’ என்ற பௌத்த விகாரையின் தலைமை பிக்குவான அம்பிட்டிய சுமணரத்தின தேரர் அருட் தந்தை ஒருவருக்கு கன்னத்தில் அறையும் காணொளி பெரும் அதிர்ச்சியை தமிழர் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது. . மேற்படி சம்பவம் பற்றி அறியப்படுவதாவது பெந்திகோஸ் மத அமைப்பின் அருட் தந்தை இறந்தவர்கள் கடைசியல் எங்கே போகிறார்கள் என கேட்க ‘நீ எனக்கு மதம் படிப்பிக்க முயல்கிறாயா?’ என அம்பிட்டிய சுமணரத்தின தேரர் அருட் தந்தைக்கு கன்னத்தில் அறைந்துள்ளார். மேற்படிக் காணொளியும் தமிழில் விளக்கமும் கீழே இணைக்கப்பட்டுள்ளது.
இதேவேளை
தலைக் கவசம் அணியாமல் மோட்டார் சைக்கிள் ஒன்றில் வந்த அருட் தந்தை ஒருவரை நிறுத்திய மேற்படி பிக்கு காவல்துறையினர் முன்னிலையில் தகாத வார்தைகளால் திட்டியுள்ளார்.
கடந்த சில ஆண்டுகளாக மேற்படி பிக்குவின் அடவாடித் தனங்கள் மட்டக்களப்பில் அதிகரித்து வருகிறது.
விடுதலைப்புலிகளின் பாதுகாப்பில் தென்தமிழீழம் இருந்தபோது அவர்களோடு நல்ல உறவில் அவர்களுக்கு கீழ்ப்படிவாக இந்த அம்பிட்டிய சுமணரத்தின தேரர் என்ற பிக்கு இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழில் திரு.றோய்

மேற்படிக் காணொளியும் தமிழில் விளக்கமும் கீழே :

  • Replies 232
  • Views 22.7k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

ஒரு மௌலவியிடம் இவ்வாறு நடந்துகொள்ள முடியுமா ?

 

" இருக்குமிடத்தில் இருந்துகொண்டால் எல்லாம் சௌக்கியமே "

  • கருத்துக்கள உறவுகள்

இந்த போதகர், அந்த பிக்குவை மதம் மாற்ற வெளிக்கிட்டால் பேசாமல் இருப்பாரோ🤣🤣🤣

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, ரதி said:

இந்த போதகர், அந்த பிக்குவை மதம் மாற்ற வெளிக்கிட்டால் பேசாமல் இருப்பாரோ🤣🤣🤣

அப்போ  அடித்தது  சரி??

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, விசுகு said:

அப்போ  அடித்தது  சரி??

யார் என்று தெரிந்து கதைக்கப் போகோணும்.இல்லாட்டில் உந்த நிலை தான்  😂

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, ரதி said:

யார் என்று தெரிந்து கதைக்கப் போகோணும்.இல்லாட்டில் உந்த நிலை தான்  😂

கோத்தபாய முதல் மகனல்லே??

 

"தென் தமிழீழம் மட்டக்களப்பு நகரில் உள்ள ‘சிறீ மக்களராம ராஜமகா வித்தியாராஜா’ என்ற பௌத்த விகாரையின் தலைமை பிக்குவான அம்பிட்டிய சுமணரத்தின தேரர் அருட் தந்தை ஒருவருக்கு கன்னத்தில் அறையும் காணொளி பெரும் அதிர்ச்சியை தமிழர் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது."

 

எங்கள் அதிர்ச்சியை உலக மக்களுக்கும் எடுத்துச்செல்லலாம். சமூகவலைத்தளங்களில் அதிரவைக்கலாம். 
 

  • கருத்துக்கள உறவுகள்

பிக்குவின்.. அதிரடி இன்னும்... இருக்கு.

 

 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ரதி said:

இந்த போதகர், அந்த பிக்குவை மதம் மாற்ற வெளிக்கிட்டால் பேசாமல் இருப்பாரோ🤣🤣🤣

அட்வைஸெல்லாம் ஆளைப்பார்த்தாவது பண்ணணும் இந்தாள் பேசுற பேச்சுக்கு அந்தாள் கைய விசுக்கிறார் 

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, nunavilan said:

விடுதலைப்புலிகளின் பாதுகாப்பில் தென்தமிழீழம் இருந்தபோது அவர்களோடு நல்ல உறவில் அவர்களுக்கு கீழ்ப்படிவாக இந்த அம்பிட்டிய சுமணரத்தின தேரர் என்ற பிக்கு இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

கிழக்கின் விடிவெள்ளி முரளிதரன் இது பற்றி என்ன சொல்கிறாராம் அவரின் காலத்தில் இந்த பிக்கு அமைதியாக இருந்தவர் .

 

2 hours ago, Kapithan said:

ஒரு மௌலவியிடம் இவ்வாறு நடந்துகொள்ள முடியுமா ?

அதெல்லாம் பருப்பு வேகாது எங்கு கன்னத்தை காட்டுபவர்கள் இருக்கிறார்களோ அங்குதான் சிங்களம் வீரம் காட்டுவதுண்டு இது பற்றி கிறிஸ்தவ சிங்கள ராணுவ வீரர்கள் என்ன நினைக்கிறார்கள் என்று சிங்கள இணையங்களை படிக்கும் உறவுகள் இங்கு பகிர்ந்துகொண்டால்  நல்லது .

  • கருத்துக்கள உறவுகள்

ரசன்  எவ்வழி குடிகள் அவ்வழி. ஒரு துறவி இந்த ஆட்டம் ஆடினால் இவரால் வழி நடத்தப்படுபவர்கள் எதைக் கடைப்பிடிப்பார்கள்? இவரது மதமும், இவரால் வழிநடத்தப்படுபவர்களும்  வெட்கித் தலை குனியவேண்டும்.  சரியாய் கன்னத்தைப் பார்த்து அறைந்து இருக்கிறார் ஒரு மத குரு. அழிவின் பாதைக்கு அழைத்துச் செல்கிறார் சிறு துறவிகளை. 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
 
 
Y_wXnfON_x96.jpg
 
மட்டக்களப்பு வண. #அம்பிடிய #சுமணரத்ன தேரர், #பெளத்த மதத்திற்கு அவமானம். இவர் பகிரங்கமாக ஏனைய மத போதகர்களை, அரசு ஊழியர்களை தாக்கி, இனவாதமும், தூஷணமும் பேசி, பொலிஸாரை மதிக்காமல், சட்டத்தை கையில் எடுக்கிறார். இதுபற்றி வண. மகாநாயக்க பெளத்த தேரர்களின் கருத்தை நாட போகிறேன். # lka
 
 
Image
 
10:36 AM · Dec 28, 2019
  • கருத்துக்கள உறவுகள்

கேட்ட கேள்விக்கு விடை தெரியாவிட்டால் தெரியாது என்று சொல்லிவிட்டால் பதிலை சொல்லிவிட்டு போறார் போதகர். அதுக்கு இப்பிடியே அறையிறது? பதிலும் தெரியாது, பக்குவமும் தெரியாது. இதெல்லாம் ஒரு மதகுரு. மேலிடமும் தலை கழண்டதுகள் போல....

ஜனாதிபதி மாளிகையிலிருந்து அவசர பாராட்டு அழைப்பு வந்திருக்கும் இந்த ரவுடி பிக்குவுக்கு.   மகாநாயக்கர் ஒரு சிறப்பு அழைப்பு எடுத்து நாடடைக் காக்கும் வீரன் என்று சிறப்பிப்பார், அவ்வளவுதான். கருதினால் வருவார் ஏன் குரு ஹெல்மெட் அணியெல, பிக்குவுக்கு சலூட் அடிக்கேல? என்ற கேள்வியோட.  

ஆங்கிலத்தில் உள்ள ஒளிப்பதிவு, பகிரலாம் பரப்பலாம் 

 

  • கருத்துக்கள உறவுகள்

நான் படிக்கிற காலத்தில புத்த மதம் அன்பைப் போதிக்கிறது, அது அன்பின் மதம்  எனச்சொல்லித் தந்தார்கள். இன்று குடுக்காரர் கையில் அகப்பட்டு அடிதடியைப்  போதிக்கிறது இன்றைய  புத்தமதம்.

  • கருத்துக்கள உறவுகள்

மட்டக்களப்பு மங்களராம விஹாராதிபதி பெளத்த மதத்திற்கு அவமானம்- மனோ கணேசன்

மட்டக்களப்பு மங்களராம விஹாராதிபதி அம்பிடிய சுமண ரத்ன தேரர், பெளத்த மதத்திற்கு அவமானம். இவர் பகிரங்கமாக ஏனைய மத போதகர்களை, அரசு ஊழியர்களை தாக்கி, இனவாதமும், தூஷணமும் பேசி, பொலிஸாரை மதிக்காமல், சட்டத்தை கையில் எடுக்கிறார். இதுபற்றி வண. மகாநாயக்க பெளத்த தேரர்களின் கருத்தை நாட போகிறேன்’ என முன்னாள் அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.ஏனைய மதகுருக்களை அவமானப்படுத்தும் செயல்பாடுகளில் ஈடுபடுகின்ற சுமண ரத்ன தேரர் தொடர்பாக காணொளிகள் பெரும் பரபரப்பையும், ஏற்படுத்தியுள்ள நிலையில், முன்னாள் அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தன்னுடைய முகநூல் மற்றும் டுவிட்டர் பக்கத்தில் கருத்து பதிவிட்டிருக்கிறார்.(15)
 

http://www.samakalam.com/செய்திகள்/மட்டக்களப்பு-மங்களராம-வி/

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, Kapithan said:

ஒரு மௌலவியிடம் இவ்வாறு நடந்துகொள்ள முடியுமா ?

 

" இருக்குமிடத்தில் இருந்துகொண்டால் எல்லாம் சௌக்கியமே "

இதே மௌலவியாய் இருந்ததால் அடித்து பின்னி எடுத்திருப்பார்... ஆனால் மௌலவிகள் முட்டாள்கள் இல்லை ...அவர்களுக்கு யாரிட்டை எங்க ,எப்ப வாய் கொடுப்பது என்று தெரியும் 😉
 

9 hours ago, satan said:

கேட்ட கேள்விக்கு விடை தெரியாவிட்டால் தெரியாது என்று சொல்லிவிட்டால் பதிலை சொல்லிவிட்டு போறார் போதகர். அதுக்கு இப்பிடியே அறையிறது? பதிலும் தெரியாது, பக்குவமும் தெரியாது. இதெல்லாம் ஒரு மதகுரு. மேலிடமும் தலை கழண்டதுகள் போல....

ஜனாதிபதி மாளிகையிலிருந்து அவசர பாராட்டு அழைப்பு வந்திருக்கும் இந்த ரவுடி பிக்குவுக்கு.   மகாநாயக்கர் ஒரு சிறப்பு அழைப்பு எடுத்து நாடடைக் காக்கும் வீரன் என்று சிறப்பிப்பார், அவ்வளவுதான். கருதினால் வருவார் ஏன் குரு ஹெல்மெட் அணியெல, பிக்குவுக்கு சலூட் அடிக்கேல? என்ற கேள்வியோட.  

உங்களை மாதிரி மதம் மாற்றும் கும்பலுக்கு விழுந்தும் மீசையில் மண் ஒட்டாது😂

  • கருத்துக்கள உறவுகள்

 இங்கு யாரும் மதம் மாற்றுவது பற்றி கருத்து எழுதவில்லை. ஒரு மதத்துக்கு எதிரான அடாவடி பற்றித்தான் எழுதுகிறார்கள் என நினைக்கிறன். அல்லது எனக்குதான் எதுவும் விளங்கவில்லையோ?

  • கருத்துக்கள உறவுகள்

EB74-CF3-D-2474-404-B-A0-F1-04-E3-A2-E02

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ரதி said:

இதே மௌலவியாய் இருந்ததால் அடித்து பின்னி எடுத்திருப்பார்... ஆனால் மௌலவிகள் முட்டாள்கள் இல்லை ...அவர்களுக்கு யாரிட்டை எங்க ,எப்ப வாய் கொடுப்பது என்று தெரியும் 😉
 

உங்களை மாதிரி மதம் மாற்றும் கும்பலுக்கு விழுந்தும் மீசையில் மண் ஒட்டாது😂

அடித்தது சரி என்கிறீர்களா ?

நியாயம் அற்ற கருத்தாகப் தெரிகிறது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
11 hours ago, satan said:

நான் படிக்கிற காலத்தில புத்த மதம் அன்பைப் போதிக்கிறது, அது அன்பின் மதம்  எனச்சொல்லித் தந்தார்கள். 


 

புத்த மதத்தின் அன்பு என்பது, ஏட்டில் மட்டுந்தான் 

நிஜ வாழ்வில் எதிர்பார்க்கக் கூடாது 


கூட்டில் வாழ்ந்த குருவி,  மழையில் நனைந்து கொண்டிருந்த குரங்கிடம் உபதேசம் செய்த கதைபோல ஆகிவிட்டது,  கிறிஸ்தவப் போதகரின் நிலை.

 

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Kavi arunasalam said:

EB74-CF3-D-2474-404-B-A0-F1-04-E3-A2-E02

பிக்கு மொட்டையாகத் தானே இருப்பார்?

  • கருத்துக்கள உறவுகள்
On 12/28/2019 at 9:47 AM, ரதி said:

இந்த போதகர், அந்த பிக்குவை மதம் மாற்ற வெளிக்கிட்டால் பேசாமல் இருப்பாரோ🤣🤣🤣

 போதகர் கைலாசா வந்து நித்தியானந்தம் அடையுமாறு வேண்டுகோள் விடுக்கிறேன்.

ஜெய் நித்தியானந்தம்:100_pray:

  • கருத்துக்கள உறவுகள்

இந்த அருட்தந்தை பார்க்க ஏன் ரௌடி போல்  இருக்கிறார்.?????? அவரின் கண்ணாடிக் கலரும் ஆளும். 

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, ஈழப்பிரியன் said:

பிக்கு மொட்டையாகத் தானே இருப்பார்?

சரியாகச் சொன்னீர்கள் ஈழப்பிரியன். தலையில் மட்டுமல்ல தாடை ,கை, கால் என்று உடம்பு முழுக்க ரோமங்களைக் காண முடிகிறது. காணாததற்கு இரண்டு பற்கள் துருத்திக் கொண்டு...

பிக்கு ஆடைக்குள் ஏதோ ஒன்று

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.