Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புத்தூரில் சடலத்துடன் ஒரு பகுதியினர் காத்திருப்பு: பொலிஸ், இராணுவம் குவிப்பு!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

புத்தூரில் சடலத்துடன் ஒரு பகுதியினர் காத்திருப்பு: பொலிஸ், இராணுவம் குவிப்பு!

 

 

by : Dhackshala

Jaffna-Puttur-Peoples-Protest-2.jpg

யாழ்ப்பாணம், புத்தூர் கலைமதி கிராமத்தில் உள்ள மயானத்தில் சடலத்தை எரிக்கவிடாது நூற்றுக்கணக்கான மக்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில், புத்தூர் மயானத்தில் சடலத்தை தகனம் செய்ய வந்தவர்கள் மயானத்தில் இருந்து 500 மீற்றர் தூரத்தில் பொலிஸாரால் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர்.

அத்துடன், மயானப் பகுதியில் அப்பகுதி மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள நிலையில் பொலிஸ் மற்றும் இராணுவத்தினர் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர்.

Jaffna-Puttur-Peoples-Protest-2-1-scaled

Jaffna-Puttur-Peoples-Protest-2-2-scaled

புத்தூரில் சடலத்தை எரிக்கவிடாது நூற்றுக்கணக்கான மக்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்!

யாழ்ப்பாணம், புத்தூர் கலைமதி கிராமத்தில் உள்ள மயானத்தில் சடலத்தை எரிக்கவிடாது நூற்றுக்கணக்கான மக்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளமையால், அங்கு பதற்றமான சூழ்நிலை நிலவுவதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

இது தொடர்பாக தெரியவருவதாவது, புத்தூர் கலைமதி கிராமத்தில் உள்ள மயானத்தை அகற்றுமாறு மயானத்தை சூழ வசிக்கும் மக்கள் தொடர்ச்சியாக போராட்டங்களை முன்னெடுத்து வந்தனர்.

எனினும் அந்த மயானத்தில் சடலங்களை எரியூட்டுவதற்கு மல்லாகம் நீதவான் நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது. இந்நிலையில், 2017ஆம் ஆண்டு மல்லாகம் நீதவான் நீதிமன்றால் வழங்கப்பட்ட கட்டளைக்கு ஆட்சேபனை தெரிவித்து யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் மயானத்தைச் சூழவுள்ள மக்கள் சார்பில் சீராய்வு மனுத் தாக்கல் செய்யப்பட்டது.

வழக்கின் எதிர் மனுதாரர்களாக கிந்துப்பிட்டி மயான நிர்வாகம், அச்சுவேலி பொலிஸார் மற்றும் சட்டமா அதிபர் ஆகியோர் குறிப்பிடப்பட்டனர்.

அந்த மனு யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றால் 2017ஆம் ஆண்டு செப்டெம்பர் 19ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது இந்து மயானத்தில் சடலங்களை எரியூட்டுவதற்கு இடைக்காலத் தடை விதிக்கப்பட்டது.

இந்த சீராய்வு மனு மீதான விசாரணை சுமார் இரண்டு வருடங்களாக யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் இடம்பெற்று வந்தது. மனு மீதான இறுதிக் கட்டளை கடந்த நவம்பர் 8ஆம் திகதி வழங்கப்பட்டது.

மல்லாகம் நீதவான் நீதிமன்றால் 2017ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 6ஆம் திகதி வழங்கிய கட்டளையை இரத்துச் செய்து கட்டளையிட்ட யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி அன்னலிங்கம் பிரேமசங்கர், சீராய்வு மனுவையும் தள்ளுபடி செய்தார்.

இந்த நிலையில் கிந்துப்பிட்டி இந்து மயானத்தில் சடலங்களை எரியூட்டுவதற்கு அனுமதி கோரும் தரப்பு மல்லாகம் நீதவான் நீதிமன்றில் நகர்த்தல் பத்திரத்தை கடந்த நவம்பர் மாதம் முன்வைத்தனர்.

இதன்போது, ‘மயானத்தைச் சுற்றி மதில் அமைத்து சடலங்களை அங்கு எரியூட்ட முடியும். அதனை எதிர்த் தரப்பு தடுக்க முடியாது. அங்கு குழப்பம் விளைவித்தாலோ மதிலை உடைத்து அத்துமீறினாலோ அந்தத் தரப்புக்கு எதிராக பொலிஸார் உடன் நடவடிக்கை எடுக்கவேண்டும்’ என மல்லாகம் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Jaffna-5-1-scaled.jpg

Jaffna-4-2-scaled.jpg

Jaffna-6-scaled.jpg

Jaffna-1-2-scaled.jpg

Jaffna-2-2-scaled.jpg

  • Replies 66
  • Views 5.9k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

யாழ்கள நண்பர்களே இந்த பிரச்சினையின் வரலாற்றுப் பின்னணி என்ன? சாதியா? சுற்றுப்புற சூழல் மாசடைதலை தடுத்தலா? தயவு செய்து பின்னணி தகவல் அறிய உதவுங்கள்

  • கருத்துக்கள உறவுகள்

இது பிரதானமாக சாதி தான். மயானத்தை சுற்றி இருப்பவர்கள் தாழ்ந்த சாதியினர்.அவர்களுக்கும் மற்றையவர்களுக்கும் ஏற்கனவே பிரச்சினை வேறு காரணங்களால் அது தான்

  • கருத்துக்கள உறவுகள்

இதையெல்லாம் பார்க்க இறந்தவருக்கு கொடுத்துவைக்கவில்லை 
இருக்கும்போது அடுத்தவனையும் மனிதனாக மத்தித்திருங்கள் 
இறந்தபோதும் மனிதனாக செல்லலாம். 

எடுப்பார் பிள்ளையாகி அடுத்தவனின் உசுப்பேத்தலை கேட்டு 
சொந்த வாழ்க்கையை உங்கள் சொந்த ஊர்களிலேயே நாசம் பண்ணுவதா?

சைவமதத்தில் பிறப்பது என்னை பொறுத்தவரை ஒரு பெரும்பாக்கியம் 
அப்படி பிறந்ததும் சைவம் தெரியாது ... சைவத்தை அழிக்கவந்த  இந்துமதம் 
என்ற சாக்கடைக்குள் வீழ்ந்து  ஊர் உலகமே சிரிக்கும்படிக்கு  சேறடித்து 
நாறிப்போய் கிடக்கிறது சமூகம். 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, வாதவூரான் said:

இது பிரதானமாக சாதி தான். மயானத்தை சுற்றி இருப்பவர்கள் தாழ்ந்த சாதியினர்.அவர்களுக்கும் மற்றையவர்களுக்கும் ஏற்கனவே பிரச்சினை வேறு காரணங்களால் அது தான்

சிறு பரிந்துரை. சரியென்றால் ஏற்றுக்கொள்ளவும்.

தாழ்ந்த என்கின்ற சொற்பாவனையை இங்கே தவிர்க்கலாம் என்பது எனது அபிப்பிராயம்.

  • கருத்துக்கள உறவுகள்

 

இதற்கு காரணம் சாதி இல்லை என்றும் , இறந்தவரும்,அவரது உறவுகளும், ஆர்ப்பாட்டம் செய்ப்பவர்களும் ஒரே சாதி தான் என்றும் சொல்லினம்...முதலில் அங்க மயானம் மட்டும் தான் இருந்ததாம் . இப்ப மயானத்தை  சுத்தி ஆட்கள் கொஞ்சம்,கொஞ்சமாய்  வீடு  கட்டி வந்து விட்டு மயானத்திற்கு தங்களுக்கும் ஒரே வெளி தான் அதனால் எரிக்க விட மாட்டோம் என்று நிக்கினமாம்....ஒரே சாதிக்குள் நடக்கும் பிரச்சனையை வேறு சாதியை சேர்ந்த சிலர் பின்னால் இருந்து தூண்டி விடினமாம் 

 

இதை தடுக்கும் மக்களின் வீடுகளுக்கான போக்குவரத்து, மின்சாரம் போன்றவற்றை துண்டித்தால் பிரச்சினை தீர்ந்துவிடும்.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Rajesh said:

இதை தடுக்கும் மக்களின் வீடுகளுக்கான போக்குவரத்து, மின்சாரம் போன்றவற்றை துண்டித்தால் பிரச்சினை தீர்ந்துவிடும்.

அந்த ஏழை மக்களுக்கு மின்சாரமோ ஒழுங்கான போக்குவரத்தோ இல்லாவிட்டால் எப்படி துண்டிப்பீர்கள்?  இவற்றை உடனடியாக ஏற்படுத்தி கொடுத்துவிட்டு “துண்டித்து விடுவோம்” என்று மிரட்டி பாருங்கள்.

12 hours ago, ரதி said:

 

இதற்கு காரணம் சாதி இல்லை என்றும் , இறந்தவரும்,அவரது உறவுகளும், ஆர்ப்பாட்டம் செய்ப்பவர்களும் ஒரே சாதி தான் என்றும் சொல்லினம்...முதலில் அங்க மயானம் மட்டும் தான் இருந்ததாம் . இப்ப மயானத்தை  சுத்தி ஆட்கள் கொஞ்சம்,கொஞ்சமாய்  வீடு  கட்டி வந்து விட்டு மயானத்திற்கு தங்களுக்கும் ஒரே வெளி தான் அதனால் எரிக்க விட மாட்டோம் என்று நிக்கினமாம்....ஒரே சாதிக்குள் நடக்கும் பிரச்சனையை வேறு சாதியை சேர்ந்த சிலர் பின்னால் இருந்து தூண்டி விடினமாம் 

 

சமரசம் உலவும் இடம்தான் மயானம்। அங்கு தாழ்ந்தவன் , உயர்ந்தவன் என்று ஒன்றுமில்லை। ரதி அக்கா சொல்வதை பார்த்தால் அங்கு சாதி பிரச்சினை இல்லைபோல தெரிகின்றது। அப்படி என்றால் அங்கு சுகாதார, சுற்று சூழல் மாசுபடும் என்பதுதான் முக்கிய காரணமாக இருக்கும்।

அங்கு இந்த மயானம் இருந்ததும் , அதட்கு நீதிமன்றம் அனுமதி கொடுத்துமிருக்கிறது। எனவே இந்த பிரச்சினையை (சுகாதாரம், சுற்று சூழல்) தீர்க்க ஒரே வழி மின்சார மூலமாக உடல்களை தகனம் செய்வதுதான்।

இப்போது எல்லா இடங்களிலும் இப்படியான மின்சார எரியூட்டிகளை அமைத்திருக்கிறார்கள்। கனத்தை, கொஹுவளை, தெஹிவளை இப்படியாக எல்லா இடங்களிலும் அமைக்கப்பட்டிருக்கிறது। இந்த மாயணங்கள் எல்லாம் மக்கள் அண்டிய பகுதிகளில்தான் இருக்கின்றன।

இப்போதிருக்கிற விறகு தட்டுப்பாடினால் இலங்கையில் உள்ள அநேகமான இடங்களில் மின்சார எரியூட்டிகளைத்தான் பயன்படுத்துகிறார்கள்। 

  • கருத்துக்கள உறவுகள்

வல்லை மண்டான் மயானத்தில் உடலம் தகனம்

February 27, 2020

IMG_7435-800x600.jpg

புத்தூர் மேற்கு சிறுப்பிட்டி கலைமதி கிந்துபிட்டி மாயனத்தில் உடலை தகனம் செய்ய வந்தவர்களை வல்லை மண்டான் மயானத்தில் தகனம் செய்யுமாறு மல்லாகம் நீதிமன்று கட்டளை பிறப்பித்துள்ளது.

சிறுப்பிட்டியை சேர்ந்த ஒருவர் இயற்கை எய்திய நிலையில் அவரின் பூதவுடலை கிந்து பிட்டி மயானத்தில் தகனம் செய்ய உறவினர்கள் முயற்சித்த போது , குறித்த மாயனத்தை சூழவுள்ள மக்கள் அதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.  அதனால் அப்பகுதியில் பதட்டம் ஏற்பட்டதை தொடர்ந்து  காவல்துறையினர்  , காவல்துறை விசேட அதிரடிப்படையினர் மற்றும் இராணுவத்தினர் அப்பகுதியில் குவிக்கப்பட்டனர்.

இந்நிலையில் இரு தரப்பினரிடமும் காவல்துறையினர் பேச்சுக்களை நடாத்திய போதிலும் இரு தரப்பினரும் ஒரு நிலைப்பாட்டிற்கு வராத நிலையில் இரு தரப்பினை சேர்ந்த நால்வரை மல்லாகம் நீதிவானிடம் அழைத்து சென்றிருந்தனர்.

சம்பவம் தொடர்பில் விசாரணை செய்த நீதிவான் , சடலத்தை எரிக்க விடாது எதிர்ப்பு தெரிவித்த தரப்பினரை சேர்ந்த நால்வரையும் கைது செய்ய உத்தரவிட்ட நீதிவான் , சடலத்தை எரியூட்ட வந்த தரப்பினரை வேறு மயானத்தில் தகனம் செய்யுமாறு கட்டளை பிறப்பித்தார்.

அதனை அடுத்து மயானத்தில் இருந்து சுமார் 500 மீற்றர் தூரத்தில் உடலத்தை தகனம் செய்ய வந்திருந்தவர்கள் சுமார் நான்கரை மணித்தியாலம் காத்திருந்த நிலையில் , நீதிமன்ற கட்டளையை அடுத்து வல்லையில் உள்ள மண்டான் மயானத்தில் உடலத்தை தகனம் செய்ய கொண்டு சென்று உடலத்தை தகனம் செய்தனர்.

குறித்த சுடலையில் தகனம் செய்ய கூடாது என சூடலையை சூழவுள்ள மக்கள் கடந்த 2017ஆம் ஆண்டு நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்த நிலையில் சுடலையில் உடலத்தை தகனம் செய்து வரும் தரப்பினர் அதற்கு ஆட்சேபனை தெரிவித்த நிலையில் இரண்டு வருட காலமாக நீதிமன்றில் நடைபெற்ற வழக்கு விசாரணைகளை அடுத்து கடந்த நவம்பர் மாதம் 08ஆம் திகதி , “மயானத்தைச் சுற்றி மதில் அமைத்து சடலங்களை அங்கு எதியூட்ட முடியும். அதனை எதிர்த்தரப்புத் தடுக்க முடியாது. அங்கு குழப்பம் விளைவித்தாலோ மதிலை உடைத்து அத்துமீறினாலோ அந்த தரப்புக்கு எதிராக காவல்துறையினர்  உடன் நடவடிக்கை எடுக்கவேண்டும்” என்று மல்லாகம் நீதிமன்றம்  உத்தரவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது #வல்லை   #உடலம் #தகனம்  #சிறுப்பிட்டி  #கிந்துபிட்டிமாயனம்

 

http://globaltamilnews.net/2020/137579/

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, Kapithan said:

சிறு பரிந்துரை. சரியென்றால் ஏற்றுக்கொள்ளவும்.

தாழ்ந்த என்கின்ற சொற்பாவனையை இங்கே தவிர்க்கலாம் என்பது எனது அபிப்பிராயம்.

மன்னித்துக் கொள்ளுங்கோநான் அந்த அர்த்தத்தில் சொல்லவில்லை . இது எங்களுக்கு பக்கத்து ஊர் தான். பொதுவாக மயானத்துக்கு பக்கத்தில் யாரும் குடியிருப்பதில்லை. ஆனால் இவர்களுக்கு வேறு இடத்தில் காணி வாங்க அருகில் உள்ள உயர் சாதி என்று சொல்லப்படுபவர்கள் விடவில்லை . இந்த மயானப்பிரச்சினைநீண்ட காலமாக இருக்கிறது.இந்த மயானம்நாலைந்து கிராமங்களுக்கு பொதுவானது. இது இன்னுமொரு கிராமத்தினருக்கும் மயானத்துக்கு அருகில் உள்ளவர்களுக்குமான பிரச்சினை.இதை தீர்ப்பது என்றால் அவர்களுக்கு வேறு இடத்தில் காணி கொடுப்பது தான்.

மேலும் இறந்தவர் அதே சாதியை சேர்ந்தவர் இல்லை

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, வாதவூரான் said:

மன்னித்துக் கொள்ளுங்கோநான் அந்த அர்த்தத்தில் சொல்லவில்லை . இது எங்களுக்கு பக்கத்து ஊர் தான். பொதுவாக மயானத்துக்கு பக்கத்தில் யாரும் குடியிருப்பதில்லை. ஆனால் இவர்களுக்கு வேறு இடத்தில் காணி வாங்க அருகில் உள்ள உயர் சாதி என்று சொல்லப்படுபவர்கள் விடவில்லை . இந்த மயானப்பிரச்சினைநீண்ட காலமாக இருக்கிறது.இந்த மயானம்நாலைந்து கிராமங்களுக்கு பொதுவானது. இது இன்னுமொரு கிராமத்தினருக்கும் மயானத்துக்கு அருகில் உள்ளவர்களுக்குமான பிரச்சினை.இதை தீர்ப்பது என்றால் அவர்களுக்கு வேறு இடத்தில் காணி கொடுப்பது தான்.

மேலும் இறந்தவர் அதே சாதியை சேர்ந்தவர் இல்லை

நீங்கள் என்னைப் பிழையாக எடுத்துக்கொள்ளக் கூடாது வாதவூரான். பிழைகாணும் நோக்கத்தில் நான் எழுதவில்லை. யாழ் களத்தை கடந்த பத்து வருடங்களுக்கு மேலாக அவதானித்து வருபவன். அந்த புரிதலின் அடிப்படையில் எழுதினேன். தங்கள் புரிதலுக்கு நன்றி.

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, poet said:

யாழ்கள நண்பர்களே இந்த பிரச்சினையின் வரலாற்றுப் பின்னணி என்ன? சாதியா? சுற்றுப்புற சூழல் மாசடைதலை தடுத்தலா? தயவு செய்து பின்னணி தகவல் அறிய உதவுங்கள்

இங்கே வாதவூரனை தவிர ஏனையோர் எழுதியதில் பல உண்மைக்குப் புறம்பானவை.

1. இது சாதி சம்பந்த பட்டது. இறந்தவர் வெள்ளாளர். மயானத்தை சுற்றி குடி இருப்பவர்கள் (கலைமதி கிராமம்) பள்ளர் சாதியினர் (பெரும்பாலும்).

2. மயானத்தை சுற்றி உள்ள காணியை தனியாரிடம் இருந்து தாம் முறைப்படி விலைக்கு வாங்கி அங்கே குடியிருப்புகளை அமைத்ததாயும். அதுவே இப்போ கலைமதி கிராமத்தில் ஒரு அங்கம் எனவும், தமது கிராமத்தின் அருகில் பிணத்தை எரிக்க வேண்டாம் எனவும் அந்த மக்கள் வேடுண்டுகிறார்கள்.

3. இல்லை இந்த காணிகள் எல்லாம் கள்ள உறுதியில் வாங்கியவை. ஆண்டாண்டு காலமாக இதில் நாம் பிணம் எரித்தோம், தொடர்ந்தும் எரிப்போம் என்கிறனர், மயானத்தில் இருந்து தொலைவில் வசிக்கும் வெள்ளாளர்.

4. வரலாறு யார் பக்கம் எனத் தெரியவில்லை - ஆனால் எனக்கு அது தேவையும் இல்லை. தற்போதைய நிலை என்ன? அங்கே ஒரு கிராமம் உருவாகி பல தசாப்தங்கள் ஆகி விட்டது.  அருகே பல வேறு மயானங்கள் இருக்கும் போது குடியிருப்புக்குள் கொண்டுபோய்தான் பிணத்தை ஏரிப்போம் என்பது மனிதாபிமானமற்ற செயல் மட்டுமல்ல, எளிய யாழ்பாணத்து வெள்ளளா மனோநிலையே அன்றி வேறில்லை. இதில் மின்சாரத்தை வெட்டுங்கள் என்பதெல்லாம் சாதிய புத்தியின் அடுத்த படிநிலை.

பிகு: அவர்கள் தாழ்ந்த சாதியினர் இல்லை, தாழ்தப்பட்டவர்கள் (உங்களால்). நீங்கள் உயர்சாதியினர் அல்ல உயர்த்தப்பட்டவர்கள் ( உங்களால்).

இதை ஏற்க மனமிலாவிட்டால், பள்ளன் பறையன் என்றே எழுதுங்கள் அதில் ஒன்றும் அவர்கள் அவமானப்படப்போவதே இல்லை 😡

Edited by goshan_che

  • கருத்துக்கள உறவுகள்

உந்தச் சனங்கள் ஒண்டும் திருந்தவே போவதில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
58 minutes ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

உந்தச் சனங்கள் ஒண்டும் திருந்தவே போவதில்லை.

பொதுப்படையாக உந்தச் சனங்கள்  என கூறுவதற்கான காரணங்கள் ஏதுமுண்டோ ?

 

  • கருத்துக்கள உறவுகள்

http://www.pagetamil.com/108560/

இந்த செய்தியின் உண்மை,பொய்  தெரியாது 

 

  • கருத்துக்கள உறவுகள்
40 minutes ago, ரதி said:

http://www.pagetamil.com/108560/

இந்த செய்தியின் உண்மை,பொய்  தெரியாது 

 

இது நிச்சயமாக சாதி பிரச்சனைதான்.

பேஜ்தமிழ் ஒரு சாதி சார்பாக எழுதி, இதை குடும்ப பகை என சித்தரிக்கிறது.

ஒரு குடும்பத்தின் பகைக்காக ஒட்டு மொத்த கிராமமும் சேர்ந்து தகனத்தை மறிக்குமா?

எவனதோ குடும்ப விசயத்தில் நாம் ஏன் தலையிடுவான் என்று விலகி அல்லவா செல்வார்கள்?

இது பல ஆண்டுகளாக ஓடும் பிரச்சினை. பேஸ்புக்கில் போய் கலைமதி எனத் தேடுங்கள் தெரியும்.

பிகு: நான் முன்பே சொன்னேன், கள்ள உறுதியா, முன்னர் இது மயானமா என்பதெல்லாம் இப்போ வேண்டாத கதைகள். இப்போ அங்கே மக்கள் குடி இருக்கிறார்களா இல்லையா? அப்போ அங்கே எரிக்காமல் வேறு இடத்தில் எரிப்பதுதான் ஒரே வழி.

அதாவது இவர்கள் சொல்கிறார்கள், வெள்ளாள பிணத்தின் தகனத்துக்கான உரிமை, பள்ளர்களின் வாழ்வதற்கான உரிமையிலும் மேலானதாம்!

 

நிறைய பேருக்கு தமிழர் தாயகத்தில் மத சண்டை சாதிச் சண்டை தேவைப்படுது.

  • கருத்துக்கள உறவுகள்

சிலருக்கு ஒற்றுமை எனும் பெயரில் சாதிய ஒடுக்குமுறைகளை கண்டும் காணாமல் விட வேணும் என்ற தேவை இருக்கிறது.

  • கருத்துக்கள உறவுகள்

சிலருக்கு சாதி பிரச்சனை,மதபிரச்சனையைகளை தீருங்கள் அதன் பின்பு இனபிர்ச்சனைக்கு தீர்வு காணலாம் என்ற புரட்சிகர சிந்தனையும் உண்டு.....இது மார்க்சிய ,மவோசியவாதிகளுக்கு அதிகம் உண்டு.....
வாழ்க்கை வாழ்வதற்கே .....😃

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, putthan said:

சிலருக்கு சாதி பிரச்சனை,மதபிரச்சனையைகளை தீருங்கள் அதன் பின்பு இனபிர்ச்சனைக்கு தீர்வு காணலாம் என்ற புரட்சிகர சிந்தனையும் உண்டு.....இது மார்க்சிய ,மவோசியவாதிகளுக்கு அதிகம் உண்டு.....
வாழ்க்கை வாழ்வதற்கே .....😃

அந்தச் சிலரில் முதன்மையானவர் பிரபாகரன்.

ஏன்னென்றால் அவர்தான் தன் ஆளுகைக்கு உட்பட்ட பிரதேசத்திலும், தன் ஆளுமைக்கு உட்பட்ட பிரதேசங்களிலும் சாதி, மத பிரச்சினைகளை அடக்கி, இனப்பிரச்சினை தீர்வு காண முயன்றார்.

சம்பந்தனா, டக்லசா, சுமந்திரனா, சுரேசா, சித்தரா, கஜேந்திரன்களா, ஐங்கரநேசனா, விக்கியா,

யாழின் அத்தனை அரசியல் தலைமைத்துவத்தையும் வெள்ளாளர் கையில் வைத்திருக்கும் போது, ஊடகங்களும், புலம்பெயர் ஊடகங்களும் அவர்களினதே எனும் போது,

தமது அரசியலை முன்னிறுத்தியேனும் இடதுசாரிகள் மட்டுமே அந்த மக்களுக்கா களத்தில் நிற்கிறார்கள்.

ஏனைய நான் குறிப்பிட்ட தலைமைகள் எல்லாம் வெள்ளாள தரப்புக்கே வேலை செய்கிறார்கள்.

இது இப்படி இருக்க அந்த மக்கள் இந்த தம்மை ஆதரிக்கும் கட்சியைதானே ஆதரிப்பார்கள்.

சாதியத்தை நீங்கள் தமிழ் தேசிய அரசியலில் இருந்து வெளியேற்றினால் மக்கள் ஏன் கம்யூனிஸ்ட் பின்னால் போகப் போகிறார்கள்.

பிகு: இது இன்று நேற்றல்ல, மாவிட்டபுரம் கோவிலுக்குள் சக தமிழன் போகக்கூடாது என்று “அடங்கா தமிழன்” சுந்தரலிங்கம் கோவில் வாசலில் துவக்கோடு நின்ற காலம் தொட்டு, காரைநகரில் பொது கிணறில் மலம் ஊற்றிய காலம் தொட்டு, டிராக்டர் வைத்து தேரிழுக்கும் காலம் வரை - தமிழ் தேசிய அரசியலின் கள்ள பிள்ளைதான் வெள்ளாள சாதிய மேலாதிக்க வெறி.

பிரபாகரனின் தலைமையிலான காலம் மட்டுமே விதிவிலக்கு.

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்பாணத்தில் குடிமனைகள் உள்ள இடங்களில் உள்ள சகல மயானங்களும் மூடப்படவேண்டும். ஊர்களுக்கு ஒதுக்குப்புறமாக உள்ள மயானங்கள்  பொது மயானங்கள் என பிரகடனபட வேண்டும். பொது மயானங்களுக்கு இடுகாடுகளுக்கு வெளியில் புதைத்தல் எரித்தல் பாரிய குற்றச் செயலாக்கப்படுதல் வேண்டும். குறைந்த காலக்கெடுவில் பொது மயானங்கள் மின்மயானங்களாக்கப்பட வேண்டும். 

இத்தகைய சமூகங்களுக்கிடையில் நெருக்கடியை ஏற்படுத்தக்கூடிய பிரச்சினையை ஆரம்பத்திலேயே இனங்கண்டு தீர்த்து வைப்பதில் உறவுக்கார புலம்பெயர்ந்த தமிழர்களும்  ஊடகங்களும் பிரதேச கிராம நகர சபைகளும் நல்லாசிரியர்களும் கிராம அலுவலர்களும் விழிப்புடன் செயல்பட வேண்டிய காலக்கட்டம் இது என்பது இன்னும் உணரபடாதமை அதிற்ச்சி தருகிறது. பெரும்பாலான சாதி சமூக முரன்பாடுகள் சுடலை கோவில் குளம் சார்ந்தே உருவாகிறது.

இத்தகய வெட்கம்கெட்ட சாதி வெறியர்கள் உருவாக்கும்   முறுகல்களுக்கு நிதி மூலமாக பெரும்பாலும் புலம்பெயர்ந்த ஊராரும் உறவுக்காரருமே உள்ளனர்; அதனால் புலம்பெயர்ந்த தமிழர்களுக்கு அதிக பொறுப்ப்பு உள்ளது. குறிப்பாக கோவில் குழம் மயானம் என்பவையே சாதி மோதல்களின் ஆரம்பப் புள்ளிகளாக இருப்பதால் தயவு செய்து இத்தகைய நிறுவனங்களுக்கு நிபந்தனையில்லாமல் பொருள் உதவி தருவதை தவிர்த்துக்கொள்ளுவது அவசியம்.    

  • கருத்துக்கள உறவுகள்
On 2/29/2020 at 2:18 PM, goshan_che said:

 

பிரபாகரனின் தலைமையிலான காலம் மட்டுமே விதிவிலக்கு.

உண்மை...

.பிரபாகரன் காலத்தில் இந்த சிவப்பு சிந்தனையாளர்கள் என்ன செய்தார்கள் என்ற கேள்வி எழுகின்றது ?.....பிரபாகரன் சர்வாதிகாரி என்ற பிரச்சாரத்தை சர்வதேசரீதியிலும்...இந்திய அரசிடமும் முறைப்பாடு  செய்வதிலயே சிவப்பு சிந்தனையாளர்கள்நேரத்தை கழித்தனர்.....மக்களின் நலனுக்காக குரல் கொடுக்கவே இல்லை....ஏன்?
சிவப்பு சிந்தனையாளருக்கு தமிழ் தேசியத்தை விட சிறிலங்கா தேசியம் முதலிடம் பெற்றது.....என எடுத்து கொள்ளலாமா.....

  • கருத்துக்கள உறவுகள்
On 2/29/2020 at 3:39 PM, poet said:

யாழ்பாணத்தில் குடிமனைகள் உள்ள இடங்களில் உள்ள சகல மயானங்களும் மூடப்படவேண்டும்.     

மாயானங்களையும் ,இறந்தவர்களின் பூத உடலையும்  பயங்கரமாகவும் தீண்டதகாதைவைகளாக இந்துக்களாகிய நாமே ஒதுக்குகின்றோம்.....கிறிஸ்தவர்களும் ,இஸ்லாமியர்களும்  அப்படியில்லை பூத உடலை தங்களது வணக்கஸ்தலங்க்ளுக்குள் எடுத்து சென்று மரியாதை செலுத்துகின்றனர் .....மயானத்துக்கு முன்பு வாழவும் தயாராக இருக்கின்றனர்....

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.