Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கிளிநொச்சியில் அப்பிள் செய்கை சாத்தியமானது – மாதிரி அப்பிள் கன்றிலிருந்து அறுவடை செய்துள்ளார் ஒரு விவசாயி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கிளிநொச்சியில் அப்பிள் செய்கை சாத்தியமானது – மாதிரி அப்பிள் கன்றிலிருந்து அறுவடை செய்துள்ளார் ஒரு விவசாயி

 

 

 

     by : Jeyachandran Vithushan

குளிர்வலய கன்றுகளை வெப்ப வலயங்களில் உருவாக்குவதில்விவசாயிகள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். இதுவரை காலமும் வெளிநாடுகளிலிருந்து அப்பிள்கள் இறக்குமதி செய்யப்பட்டு வந்துள்ளன.

கொரோனோ அச்சுறுத்தல் நிறை்த இக்காலகட்டத்தில் இறக்குமதி பொருட்களும், உற்பத்திகளும் நாட்டில் அரிதாகவே கிடைக்கின்றது. எனினும் இறக்குமதி செய்யப்படும் உற்பத்திகளை இலங்கையிலும் மேற்கொள்ள முடியும் என்பதை பல விவசாயிகள் நிடூபித்துள்ளனர்.

1960ம் ஆண்டு காலப்பகுதியில் இலங்கையில் முதல் முதலாக அப்பிள் பயிரிடப்பட்டது நுவரேலியா மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட அப்பிள் செய்கை பின்னர் கைவிடப்பட்டது. எனினும் சில பகுதிகளில் வீட்டுத்தோட்டமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

இந்த நிலையில் குளிர் வலயங்களில் மாத்திரமல்ல வெப்ப வலயங்களிலும் அப்பிள் செய்கையை மெற்கொள்ள முடியுமா என்ற கேள்விக்கு கிளிநொச்சியை சேர்ந்த விவசாயி ஒருவர் நிரூபித்து காட்டியுள்ளார்.

லண்டனிலிருந்து சிறு கன்றினை எடுத்து வந்து கடந்த 4 வருடங்களிற்கு முன்னர் தனது தோட்டத்தில் நாட்டிய அவர் சாதாரண தாவரங்கள் போலவே பராமரித்து வந்துள்ளார். குறித்த அப்பிள் மரம் கடந்த வருடம் காய்த்துள்ளது. அதனை அறுவடை செய்த அவர் தொடர்ந்தும் அதனை பராமரித்து வருகின்றார்.

தற்போது குறித்த மரம் மீண்டும் அறுவடைக்கு தயாராகி வருகின்றது. இறக்குமதி அப்பிள்களின் சுவையை கொண்டதாகவும் அதன் அளவில் சிறியதாக காணப்படுவதாகவும் அமரசிங்கம் தெரிவிக்கின்றார். எனினும் குறித்த தொவரத்தை முறையான ஆலோசனைகளுடன் பராமரிக்கும் சந்தர்ப்பத்தில் சிறந்த பெறுபேற்றினை காண முடியும் என அவர் நம்பிக்கை வெளியிடுகின்றார்.

கிளிநொச்சி பச்சிலைப்பள்ளி பிரதேசத்தில் விவசாய உற்பத்தியில் ஈடுபடும் அமரசிங்கம் என்ற இந்த விவசாயி தனது காணியில் திராட்சை, அன்னாசி உள்ளிட்ட குளிர்வலய தாவர உற்பத்திகளை மேற்கொண்டு வருகின்றார்.

எனினும் குறித்த செய்கையில் ஓரளவு வெற்றி கண்டுள்ளதாக தெரிவிக்கும் அவர், அதற்கான ஆலோசனைகளும், உதவிகளும் கிடைக்கும் இடத்தில் செய்கையில் மேலும் முன்னேற்றத்தை காண முடியும் எனவும் அவர் தெரிவிக்கின்றார்.

Kilinochchci-applehg-428x248.jpg

Kilinochchci-apple-428x251.jpg

  • கருத்துக்கள உறவுகள்

முள்ளியவளை பகுதியில் எனது அக்காவின் வீட்டில் கனகாலமாக சில கோப்பிக் கண்டுகள் வளர்த்து கோப்பிக் கொட்டைகள் எடுத்திருக்கிறா.......அந்த இடங்களை சூழவும் பலா மரங்களும்,சமண்டலை மரங்களும் நிறைய இருந்தன.குளிர்ச்சியாக இருக்கும் இடங்களில் ஊடுபயிராக வீட்டுத் தேவைகளுக்கு செய்யலாம். ......! 👍

  • கருத்துக்கள உறவுகள்

பச்சை அப்பிள் நுவரெலியா பகுதியில் நன்கு வளர்ந்து காய்க்கின்றன. நாங்கள் அங்கு சென்ற போது புடுங்கிச் சாப்பிட்டிருக்கிறோம்.

கிளிநொச்சியில் அப்பிள் என்பது புதுவிடயம் என்றாலும் முயற்சிக்கு வாழ்த்துக்கள்.

மேலும் மலையக பழங்களான ஜம்பு.. லாவுலு.. ரம்புட்டான்.. மங்குஸ்தான்.. இவற்றை ஏலவே வடக்கில்.. பயிரிட்டு சிலர் சிறிதளவில் வெற்றியும் பெற்றிருக்கின்றனர். 

எதிர்காலத்தில்.. பசுமை வீடுகளை (Greenhouses) அமைத்து.. தேவையான பயிர்களை எல்லாம் பயிரிடக் கூடிய ஆய்வுகள் தாயகத்தில் செய்யப்பட்டால் நன்று.

யாழ் பல்கலை விவசாய பீடம்.. பலவற்றை சாத்தியமாக்கலாம். ஆனால்..???! 

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

விவசாயபீட dean  எமது நண்பர் ( சூரியகுமார் கிருஷ்ணபிள்ளை) அவருடன் இதைப்பற்றி கட்டாயம் கதைக்கிறேன் 

  • கருத்துக்கள உறவுகள்

நானும் இந்தக் குளிர் நாட்டில பப்பாளியும் முருங்கையும் (மிகவும் செழிப்பாக) வளர்த்தனான். ஆதவன் நியூஸ் காறன் அதைப் போடவேயில்லை 😜

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
58 minutes ago, Kapithan said:

நானும் இந்தக் குளிர் நாட்டில பப்பாளியும் முருங்கையும் (மிகவும் செழிப்பாக) வளர்த்தனான். ஆதவன் நியூஸ் காறன் அதைப் போடவேயில்லை 😜

நெல்லி மரத்தையே காட்டேல்லையாம்.....இவர் தக்காளி பப்பாளி எண்டு கடுப்பிலை திரியுறார் 🙃

முயற்சி திருவினையாக்கும்

  • கருத்துக்கள உறவுகள்

பாராட்டுக்கள்.
எந்த எந்த மண்ணில் என்னென்ன தாவரங்கள் விழையும் என்பதை மக்கள் சுலபமாக கண்டறிய ஆய்வு கூடங்கள் உதவி செய்ய வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, nedukkalapoovan said:

பச்சை அப்பிள் நுவரெலியா பகுதியில் நன்கு வளர்ந்து காய்க்கின்றன. நாங்கள் அங்கு சென்ற போது புடுங்கிச் சாப்பிட்டிருக்கிறோம்.

கிளிநொச்சியில் அப்பிள் என்பது புதுவிடயம் என்றாலும் முயற்சிக்கு வாழ்த்துக்கள்.

மேலும் மலையக பழங்களான ஜம்பு.. லாவுலு.. ரம்புட்டான்.. மங்குஸ்தான்.. இவற்றை ஏலவே வடக்கில்.. பயிரிட்டு சிலர் சிறிதளவில் வெற்றியும் பெற்றிருக்கின்றனர். 

எதிர்காலத்தில்.. பசுமை வீடுகளை (Greenhouses) அமைத்து.. தேவையான பயிர்களை எல்லாம் பயிரிடக் கூடிய ஆய்வுகள் தாயகத்தில் செய்யப்பட்டால் நன்று.

யாழ் பல்கலை விவசாய பீடம்.. பலவற்றை சாத்தியமாக்கலாம். ஆனால்..???! 

மட்டக்களப்பில் இந்தவருடம் பீற்றுட் செய்கை பல கிலோகிராம்களை தொட்டது 4000 கிலோவுக்கு மேல் 

கரட் , கோவா முயற்சித்தார்கள் இந்த்வருட வெள்ளம் வந்து அதை நிலைகுலைய வைத்துவிட்டது 

 

இந்த வீடியோவில் ஆப்பிளை காட்டினாங்களா ???

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

மட்டக்களப்பில் இந்தவருடம் பீற்றுட் செய்கை பல கிலோகிராம்களை தொட்டது 4000 கிலோவுக்கு மேல் 

கரட் , கோவா முயற்சித்தார்கள் இந்த்வருட வெள்ளம் வந்து அதை நிலைகுலைய வைத்துவிட்டது 

இந்த வீடியோவில் ஆப்பிளை காட்டினாங்களா ???

யாழிலும் போர்காலத்தில் (விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுக் காலத்தில்) இருந்து பீற்றூட்.. கரட்.. கோவா பயிற்செய்கை ஆரம்பக்கப்பட்டு விட்டது. இப்போதும் பலர் இதனை செய்கின்றனர். முன்னர் மலையக மரக்கறி லொறிகளை பார்த்திருந்த காலம் ஒன்று இல்லாமல் போனமையே அதற்கு காரணம்.

இந்த கொரோனா காலமும் மீண்டும் சிலவற்றை புதுப்பிக்கும்.

ஆம்.. பச்சை அப்பிளை காட்டினார்கள். பச்சை அப்பிள் பிரித்தானியாவில் காட்டு அப்பிள் போல் நிறைய நிற்கிறது.

இளஞ்சிவப்பு ஆப்பிள் தான் செய்கைக்கு அதிகம் பாவிப்பார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
Just now, nedukkalapoovan said:

யாழிலும் போர்காலத்தில் (விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுக் காலத்தில்) இருந்து பீற்றூட்.. கரட்.. கோவா பயிற்செய்கை ஆரம்பக்கப்பட்டு விட்டது. இப்போதும் பலர் இதனை செய்கின்றனர். முன்னர் மலையக மரக்கறி லொறிகளை பார்த்திருந்த காலம் ஒன்று இல்லாமல் போனமையே அதற்கு காரணம்.

இந்த கொரோனா காலமும் மீண்டும் சிலவற்றை புதுப்பிக்கும்.

ஆம்.. பச்சை அப்பிளை காட்டினார்கள். பச்சை அப்பிள் பிரித்தானியாவில் காட்டு அப்பிள் போல் நிறைய நிற்கிறது.

இளஞ்சிவப்பு ஆப்பிள் தான் செய்கைக்கு அதிகம் பாவிப்பார்கள்.

நுவரேலிய பச்சை அப்பிள் நல்லாத்தான் இருக்கும்  இங்கு அதிக நாட்கள் கிடப்பில் இருந்து வருவதால் என்னவோ சில பழங்கள் அதன் உன்மையான சுவையில்லை 

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

நுவரேலிய பச்சை அப்பிள் நல்லாத்தான் இருக்கும்  இங்கு அதிக நாட்கள் கிடப்பில் இருந்து வருவதால் என்னவோ சில பழங்கள் அதன் உன்மையான சுவையில்லை 

ஆம் அவை சுவை. நாங்க பச்சை ஆப்பிளை.. உப்பும் மிளகாய் தூளும் போட்டு சாப்பிடுவதுண்டு.

மேலும்.. அன்னாசிக்கறி சமைப்பது போல்.. சமைத்தால்.. மாசிக்கருவாடு எல்லாம் போட்டு.. பிரியாணியுடன் சாப்பிட மிகச் சுவையாக இருக்கும். 

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, nedukkalapoovan said:

ஆம் அவை சுவை. நாங்க பச்சை ஆப்பிளை.. உப்பும் மிளகாய் தூளும் போட்டு சாப்பிடுவதுண்டு.

மேலும்.. அன்னாசிக்கறி சமைப்பது போல்.. சமைத்தால்.. மாசிக்கருவாடு எல்லாம் போட்டு.. பிரியாணியுடன் சாப்பிட மிகச் சுவையாக இருக்கும். 

நெடுக்ஸ்.... "அன்னாசிக்கறி"  எப்படி சமைப்பது என்று,
"நாவூற வாயூற" பகுதியில்... ஒரு சமையல் குறிப்பை, பதிந்து விடுங்களேன்.  :grin:

  • கருத்துக்கள உறவுகள்
29 minutes ago, தமிழ் சிறி said:

நெடுக்ஸ்.... "அன்னாசிக்கறி"  எப்படி சமைப்பது என்று,
"நாவூற வாயூற" பகுதியில்... ஒரு சமையல் குறிப்பை, பதிந்து விடுங்களேன்.  :grin:

வீட்டில் அப்பப்ப செய்வதுண்டு....மரக்கறியாகவும் கிழங்குடன் சேர்த்து செய்யலாம்......நெடுக்ஸ் சொல்லியதுபோல் பச்சை ஆப்பிள் மிளகாய்த்தூள் உப்புடன் சாப்பிட சுவையாக இருக்கும்.இங்கு காய் மாங்காய் கிடையாது.....!   😁

  • கருத்துக்கள உறவுகள்
36 minutes ago, தமிழ் சிறி said:

நெடுக்ஸ்.... "அன்னாசிக்கறி"  எப்படி சமைப்பது என்று,
"நாவூற வாயூற" பகுதியில்... ஒரு சமையல் குறிப்பை, பதிந்து விடுங்களேன்.  :grin:

நம்ம பசங்க வழி..

 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
45 minutes ago, தமிழ் சிறி said:

நெடுக்ஸ்.... "அன்னாசிக்கறி"  எப்படி சமைப்பது என்று,
"நாவூற வாயூற" பகுதியில்... ஒரு சமையல் குறிப்பை, பதிந்து விடுங்களேன்.  :grin:

சிறித்தம்பி அன்னாசிக்காய்க்கறி சமைக்கிறதை வீடியோவாய் எடுத்துப்போடோணும்...😎

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, தனிக்காட்டு ராஜா said:

நுவரேலிய பச்சை அப்பிள் நல்லாத்தான் இருக்கும்  இங்கு அதிக நாட்கள் கிடப்பில் இருந்து வருவதால் என்னவோ சில பழங்கள் அதன் உன்மையான சுவையில்லை 

எந்தவொரு பழமாயினும், கடிபடும் தன்மை (மாங்காய் போல) உள்ளவரைக்கும் நருகல்  பொருகலான மிளகு தூளும், உப்பும் கலவையை plate இல் மெலிதான படையாக வைத்து,  பட்டும் படாத அளவில் தொட்டு உண்ணுவது மிகவும் ருசி.

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல முயற்சி, பாராட்டுக்கள் 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.