Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பிள்ளையை தத்தெடுத்தல்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மகளின் ஓவியம் அருமை, உடையார். அவருக்கு பாராட்டுக்கள். ஈன்ற பொழுதின் தன் மகனைச் சான்றோன் என  கேட்ட தாய் " என்ற குறளுக்கு அமைய  பெற்றோருக்கு பெருமை சேர்க்கும்  பிள்ளையை பெற்றுள்ளீர்கள்.

  • Replies 53
  • Views 8.6k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, உடையார் said:

நன்றி பையா, என்னால் முடிந்ததை செய்கிறேன், கடமைப்பட்டவன் பலருக்கு. 

பிள்ளைகளையும் பழக்கி எடுக்கனும், மற்றவர்களுக்கு உதவினால் அது ஒரு தனி மகிழ்ச்சி, அவர்களுக்கும் விருப்பம், இதுதான் முதல் தொடக்கம் 

என‌து ம‌ச்சாள் , இறுதிக‌ட்ட‌ போரில் பொற்றோர‌ இழ‌ந்த‌ பிள்ளைக‌ளை த‌த் எடுத்து வ‌ள‌க்கிரா , அந்த‌ பிள்ளைக‌ளுக்கு ம‌ச்சாள் தான் அம்மா , அன்பை காட்டி பிள்ளைக‌ளின் ம‌ன‌சில் நீங்கா இட‌ம் பிடித்து விட்டா உடையார் ஜ‌யா , 

என‌க்கும் விருப்ப‌ம் போரால் பாதிக்க‌ப் ப‌ட்ட‌ இர‌ண்டு குடும்ப‌த்துக்கு என்னால் முடிந்த‌தை உத‌வ‌னும் என்று ,
அடுத்த‌ வ‌ருட‌ம் இர‌ண்டு கும்ப‌த்துக்கும் மாத‌ம் மாத‌ம் உத‌வ‌னும் என்று முடிவு ப‌ண்ணி இருக்கிறேன் , உத‌வி போட்டு இடையில் விட்டால் உற‌வுக‌ளை பாதிக்கும் , ஒன்ன‌ செய்ய‌ தொட‌ங்கினா ஒழுங்காய் செய்ய‌னும் , 

அது என்னால் முடியும் அந்த‌ உத‌வியை  என் வாழ் நாள் பூரா செய்ய‌ முடியும்  

Edited by பையன்26

  • கருத்துக்கள உறவுகள்
On 4/6/2020 at 02:45, உடையார் said:

பிள்ளையை தத்தெடுத்தல்

நான் இங்குள்ள நிறுவனத்திற்கு வருடத்தில் இருமுறை உதவிசெய்வேன் (https://www.cbm.org.au/).   

அவர்கள் அதை மூன்றாம் உலக நாடுகளில் உள்ள வறிய மக்களுக்கு உதவி செய்வார்கள், இன்றைக்கு எனக்கு வந்த கடிதத்தை பார்த்துவிட்டு, தான் வைத்திருந்த AUD20/- தந்தார் அவர்களுக்கு சேர்த்து அனுப்ப சொல்லி.  நான் கேட்கவில்லை, அவராக தந் து மிகவும் சந்தோஷமாக இருந்திச்சு (மூன்று பிள்ளைகளுக்கும்  உதவி செய்ய விருப்பம், ஊருக்கு போகும் போது வொள்ளவத்தை யாழ்பாணத்தில் நிற்கும் வறியவர்களுக்கு பணம் அவர்களை கொண்டுதான் கொடுப்பேன்). 

வந்த கடித்ததில் இருந்த படம் 

20200604-143654.jpg

 

பிறகு கேட்டார் தான் ஒரு பிள்ளையை தத்தெடுத்து படிப்பிக்கப் போகின்றேன் என்று, அந்த பிள்ளை சின்ன பிள்ளையாக இருக்கனும் என்பது அவாவின் வேண்டுகோள். அப்ப நில்மினி தந்த  மகளிர் இல்லத்தில் (https://mahalirillam.org/au/sponsorship/) ஒருவரை தேர்ந்து எடுக்க சொல்லியுள்ளேன், அவர் அவர்களை இன்று தொடர்பு கொண்டுள்ளார், பார்ப்போம்.

அவரின் கனவு ஊரில் ஒரு வைத்தியசாலை கட்டி ஏழைகளுக்கு வைத்தியம் பார்ப்பது தான். பார்ப்போம் காலம் பதில் சொல்லும்.  

மனைவியிடம் கர்நாடக சங்கீத படிக்க வந்த சின்ன பிள்ளைகளில் சிலர் மகளிடம்தான் படிக்கனுமென்று விரும்பினார்கள், அதனால் அவருக்கும் வருமானம் வருகின்றது, இப்ப ஆண்டு 11. அத்துடன் வரைதல் பாடமும் எடுக்கின்றவா சிலருக்கு,

அவர் வரைந்த படம், போனகிழமை தன் நண்பிக்கு கொடுக்க வரைந்த படத்தை, நாங்கள் சுட்டு வீட்டில் மாட்டிவிட்டோம், இப்ப வேற வரைகின்றா

20200602-085620.jpg

 

 

இந்த பதிவை படித்து மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன். இப்படி ஒவ்வொரு குடும்பமும் தம்மால் ஏலுமானதை  மற்றவர்களுக்கு உதவும்படி செய்தால் எவ்வளவு நல்லம்? உங்கள் மகளின் painting மிகவும் அழகாக இருக்கிறது 

  • கருத்துக்கள உறவுகள்
56 minutes ago, nilmini said:

இந்த பதிவை படித்து மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன். இப்படி ஒவ்வொரு குடும்பமும் தம்மால் ஏலுமானதை  மற்றவர்களுக்கு உதவும்படி செய்தால் எவ்வளவு நல்லம்? உங்கள் மகளின் painting மிகவும் அழகாக இருக்கிறது 

உண்மை தான் அக்கா , 
புல‌ம்பெய‌ர் நாட்டு உற‌வுக‌ள் ம‌ன‌ம் வ‌ந்து உத‌வினால் , த‌மிழீழ‌த்தில் எவ‌ள‌வோ ம‌க்க‌ள் நின்ம‌தியோடு வாழ்வார்க‌ள் /

எம‌க்காக‌ போராடின‌ போராளிக‌ளை இந்த‌ நிலைக்கு விட்டுட்டோமே என்று நினைத்து க‌வ‌லைப் ப‌டுவ‌துண்டு ,

அன்மையில் முக‌ நூலில் ஒரு ப‌ட‌ம் பார்த்தேன் மாவீர‌ரின் தாய் ரோட்டில் குப்பை கூட்டுவ‌த‌ , ப‌ட‌த்தை பார்க்கும் போது நான் யோசிச்ச‌து அந்த‌ தாயின் ம‌க‌ன் இருந்து இருக்க‌னும் தாயை இந்த‌ நிலையில் விட்டு இருக்க‌ மாட்டார் என்று ,

  • கருத்துக்கள உறவுகள்
52 minutes ago, பையன்26 said:

உண்மை தான் அக்கா , 
புல‌ம்பெய‌ர் நாட்டு உற‌வுக‌ள் ம‌ன‌ம் வ‌ந்து உத‌வினால் , த‌மிழீழ‌த்தில் எவ‌ள‌வோ ம‌க்க‌ள் நின்ம‌தியோடு வாழ்வார்க‌ள் /

எம‌க்காக‌ போராடின‌ போராளிக‌ளை இந்த‌ நிலைக்கு விட்டுட்டோமே என்று நினைத்து க‌வ‌லைப் ப‌டுவ‌துண்டு ,

அன்மையில் முக‌ நூலில் ஒரு ப‌ட‌ம் பார்த்தேன் மாவீர‌ரின் தாய் ரோட்டில் குப்பை கூட்டுவ‌த‌ , ப‌ட‌த்தை பார்க்கும் போது நான் யோசிச்ச‌து அந்த‌ தாயின் ம‌க‌ன் இருந்து இருக்க‌னும் தாயை இந்த‌ நிலையில் விட்டு இருக்க‌ மாட்டார் என்று ,

உலகிலேயே அதிகம் தானம் செய்பவர்கள் அமெரிக்கர் தான். 2005 சுனாமியின்போது அமெரிக்கர்களின் டொனேஷன்தான் உலகில் உள்ள எந்த ஒரு அமைப்பிலும் பார்க்க அதிகமாக இருந்தது ( அந்த பணம் எல்லாம் அரசியல்வாதிகளின் கைக்குள் போனது வேறு கதை) 55% வீதமான அமெரிக்கர்கள் தானம் செய்கிறார்கள். இது 10 வாரங்களுக்கு முன் 63% வீதமாக இருந்தது. Global  charitable percentage 20% தான். அதிலும் எம்மக்களை பற்றி சொல்லவே தேவையில்லை. மிகக்குறைந்தவர்களே தானம் செய்கிறார்கள் . Diaspora தமிழர்கள் எல்லாம் சேர்ந்து போராளிகள் குடும்பங்களுக்கு ஒரு அமைப்பு அமைத்து உதவி செய்தால் எவ்வளவு புண்ணியம். எல்லேரும் பிஸி. மற்றவர்களை பற்றி நினைக்க நேரம் இல்லை 

  • கருத்துக்கள உறவுகள்
58 minutes ago, nilmini said:

உலகிலேயே அதிகம் தானம் செய்பவர்கள் அமெரிக்கர் தான். 2005 சுனாமியின்போது அமெரிக்கர்களின் டொனேஷன்தான் உலகில் உள்ள எந்த ஒரு அமைப்பிலும் பார்க்க அதிகமாக இருந்தது ( அந்த பணம் எல்லாம் அரசியல்வாதிகளின் கைக்குள் போனது வேறு கதை) 55% வீதமான அமெரிக்கர்கள் தானம் செய்கிறார்கள். இது 10 வாரங்களுக்கு முன் 63% வீதமாக இருந்தது. Global  charitable percentage 20% தான். அதிலும் எம்மக்களை பற்றி சொல்லவே தேவையில்லை. மிகக்குறைந்தவர்களே தானம் செய்கிறார்கள் . Diaspora தமிழர்கள் எல்லாம் சேர்ந்து போராளிகள் குடும்பங்களுக்கு ஒரு அமைப்பு அமைத்து உதவி செய்தால் எவ்வளவு புண்ணியம். எல்லேரும் பிஸி. மற்றவர்களை பற்றி நினைக்க நேரம் இல்லை 

இங்கை எம்ம‌வ‌ர்க‌ளுக்குள் போட்டி என்ன‌ என்றால் , அவை சீத‌ன‌ம் 7ல‌ச்ச‌ம் குரோன்  குடுத்தா அவையை விட‌ தாங்க‌ள் கூட‌ குடுக்க‌னும் , ஆட‌ம்ப‌ர‌மான‌ கொண்டாட்ட‌ங்க‌ள் இப்ப‌டி சொல்லிட்டு போக‌லாம் அக்கா டென்மார்க் வாழ் த‌மிழ‌ர்க‌ளின் கூத்துக‌ளை ,

என்ர‌ சொந்த‌மும் லேசு ப‌ட்ட‌வை இல்ல‌ , கொண்டாட்ட‌த்துகு காசை கொட்டி ஆட‌ம்ப‌ர‌மாய் செய்வின‌ம் , ஆனால் ஊரில் எம்ம‌வ‌ர்க‌ள் ப‌டும் க‌ஸ்ர‌ங்க‌ள் அவைக்கு தெரிவ‌து இல்ல‌ , அஜித்தின்ட‌ விஜேயின்ட‌ ப‌ட‌ம் எப்ப‌ வ‌ரும் திரைய‌ர‌ங்கில் போய் பார்க்க‌லாம் இது தான் அவ‌ர்க‌ளுடைய‌ வாழ்க்கை /

என்னையும் கொண்டாட்ட‌த்துக்கு கூப்பிடுவின‌ம்  ஏதாவ‌து நொண்டி சாட்டை சொல்லிவிட்டு சொந்த‌ங்க‌ளின் கொண்டாட்ட‌ங்க‌ளில் க‌ல‌ந்து கொள்ளுவ‌தில்லை , 

பெரும்பால‌ன‌ யாழ்க‌ள‌ உற‌வுக‌ள் ம‌னித‌ நேய‌த்த‌ மிக‌வும் நேசிக்கிற‌வை , அவையும் வெளியில் தெரியாம‌ க‌ஸ்ர‌ப்ப‌ட்ட‌ உற‌வுக‌ளுக்கு உத‌வின‌ம் ,

எம்மால் ஆன‌ உத‌வியை உற‌வுக‌ளுக்கு செய்வோம் அக்கா 👏🙏

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

மகள் அருமையாக வரைந்துள்ளார். வாழ்த்துக்கள் உடையார்.

நன்றி சுமே, சின்ன வயதிலிருந்தே வரைதலில் நல்ல ஈடுபாடு

12 hours ago, nunavilan said:

மகளின் ஓவியம் அருமை, உடையார். அவருக்கு பாராட்டுக்கள். ஈன்ற பொழுதின் தன் மகனைச் சான்றோன் என  கேட்ட தாய் " என்ற குறளுக்கு அமைய  பெற்றோருக்கு பெருமை சேர்க்கும்  பிள்ளையை பெற்றுள்ளீர்கள்.

நன்றி நுணாவிளான், சந்தோஷமாக இருக்கு

 

11 hours ago, பையன்26 said:

என‌து ம‌ச்சாள் , இறுதிக‌ட்ட‌ போரில் பொற்றோர‌ இழ‌ந்த‌ பிள்ளைக‌ளை த‌த் எடுத்து வ‌ள‌க்கிரா , அந்த‌ பிள்ளைக‌ளுக்கு ம‌ச்சாள் தான் அம்மா , அன்பை காட்டி பிள்ளைக‌ளின் ம‌ன‌சில் நீங்கா இட‌ம் பிடித்து விட்டா உடையார் ஜ‌யா , 

என‌க்கும் விருப்ப‌ம் போரால் பாதிக்க‌ப் ப‌ட்ட‌ இர‌ண்டு குடும்ப‌த்துக்கு என்னால் முடிந்த‌தை உத‌வ‌னும் என்று ,
அடுத்த‌ வ‌ருட‌ம் இர‌ண்டு கும்ப‌த்துக்கும் மாத‌ம் மாத‌ம் உத‌வ‌னும் என்று முடிவு ப‌ண்ணி இருக்கிறேன் , உத‌வி போட்டு இடையில் விட்டால் உற‌வுக‌ளை பாதிக்கும் , ஒன்ன‌ செய்ய‌ தொட‌ங்கினா ஒழுங்காய் செய்ய‌னும் , 

அது என்னால் முடியும் அந்த‌ உத‌வியை  என் வாழ் நாள் பூரா செய்ய‌ முடியும்  

கேட்க மிக்க மகிழ்ச்சியாக இருக்கு, எம்மக்களின் கல்வி தரத்தை உயர்த்திவிட்டால் போதும், அவர்கள் மற்றவர்களை முன்னேற்றிவிடுவார்கள்

10 hours ago, nilmini said:

இந்த பதிவை படித்து மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன். இப்படி ஒவ்வொரு குடும்பமும் தம்மால் ஏலுமானதை  மற்றவர்களுக்கு உதவும்படி செய்தால் எவ்வளவு நல்லம்? உங்கள் மகளின் painting மிகவும் அழகாக இருக்கிறது 

நன்றி நில்மினி, கேட்ட பத்திரங்களை அனுப்பிவிட்டேன், இன்னும் அவர்களிடமிருந்து பதிலில்லை, இது நன்றாக போனல், அவர்களடமிருந்து இன்னுமொரு பிள்ளையை மகனின் பெயரால் உதவி செய்ய யோசித்துள்ளேன், பார்ப்போம்.

7 hours ago, பையன்26 said:

இங்கை எம்ம‌வ‌ர்க‌ளுக்குள் போட்டி என்ன‌ என்றால் , அவை சீத‌ன‌ம் 7ல‌ச்ச‌ம் குரோன்  குடுத்தா அவையை விட‌ தாங்க‌ள் கூட‌ குடுக்க‌னும் , ஆட‌ம்ப‌ர‌மான‌ கொண்டாட்ட‌ங்க‌ள் இப்ப‌டி சொல்லிட்டு போக‌லாம் அக்கா டென்மார்க் வாழ் த‌மிழ‌ர்க‌ளின் கூத்துக‌ளை ,

என்ர‌ சொந்த‌மும் லேசு ப‌ட்ட‌வை இல்ல‌ , கொண்டாட்ட‌த்துகு காசை கொட்டி ஆட‌ம்ப‌ர‌மாய் செய்வின‌ம் , ஆனால் ஊரில் எம்ம‌வ‌ர்க‌ள் ப‌டும் க‌ஸ்ர‌ங்க‌ள் அவைக்கு தெரிவ‌து இல்ல‌ , அஜித்தின்ட‌ விஜேயின்ட‌ ப‌ட‌ம் எப்ப‌ வ‌ரும் திரைய‌ர‌ங்கில் போய் பார்க்க‌லாம் இது தான் அவ‌ர்க‌ளுடைய‌ வாழ்க்கை /

என்னையும் கொண்டாட்ட‌த்துக்கு கூப்பிடுவின‌ம்  ஏதாவ‌து நொண்டி சாட்டை சொல்லிவிட்டு சொந்த‌ங்க‌ளின் கொண்டாட்ட‌ங்க‌ளில் க‌ல‌ந்து கொள்ளுவ‌தில்லை , 

பெரும்பால‌ன‌ யாழ்க‌ள‌ உற‌வுக‌ள் ம‌னித‌ நேய‌த்த‌ மிக‌வும் நேசிக்கிற‌வை , அவையும் வெளியில் தெரியாம‌ க‌ஸ்ர‌ப்ப‌ட்ட‌ உற‌வுக‌ளுக்கு உத‌வின‌ம் ,

எம்மால் ஆன‌ உத‌வியை உற‌வுக‌ளுக்கு செய்வோம் அக்கா 👏🙏

ஒரு நாள் ஆடம்பரமாக செய்யும் செலவை, பலருக்கு உதவலாம்

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, பையன்26 said:

இங்கை எம்ம‌வ‌ர்க‌ளுக்குள் போட்டி என்ன‌ என்றால் , அவை சீத‌ன‌ம் 7ல‌ச்ச‌ம் குரோன்  குடுத்தா அவையை விட‌ தாங்க‌ள் கூட‌ குடுக்க‌னும் , ஆட‌ம்ப‌ர‌மான‌ கொண்டாட்ட‌ங்க‌ள் இப்ப‌டி சொல்லிட்டு போக‌லாம் அக்கா டென்மார்க் வாழ் த‌மிழ‌ர்க‌ளின் கூத்துக‌ளை ,

என்ர‌ சொந்த‌மும் லேசு ப‌ட்ட‌வை இல்ல‌ , கொண்டாட்ட‌த்துகு காசை கொட்டி ஆட‌ம்ப‌ர‌மாய் செய்வின‌ம் , ஆனால் ஊரில் எம்ம‌வ‌ர்க‌ள் ப‌டும் க‌ஸ்ர‌ங்க‌ள் அவைக்கு தெரிவ‌து இல்ல‌ , அஜித்தின்ட‌ விஜேயின்ட‌ ப‌ட‌ம் எப்ப‌ வ‌ரும் திரைய‌ர‌ங்கில் போய் பார்க்க‌லாம் இது தான் அவ‌ர்க‌ளுடைய‌ வாழ்க்கை /

என்னையும் கொண்டாட்ட‌த்துக்கு கூப்பிடுவின‌ம்  ஏதாவ‌து நொண்டி சாட்டை சொல்லிவிட்டு சொந்த‌ங்க‌ளின் கொண்டாட்ட‌ங்க‌ளில் க‌ல‌ந்து கொள்ளுவ‌தில்லை , 

பெரும்பால‌ன‌ யாழ்க‌ள‌ உற‌வுக‌ள் ம‌னித‌ நேய‌த்த‌ மிக‌வும் நேசிக்கிற‌வை , அவையும் வெளியில் தெரியாம‌ க‌ஸ்ர‌ப்ப‌ட்ட‌ உற‌வுக‌ளுக்கு உத‌வின‌ம் ,

எம்மால் ஆன‌ உத‌வியை உற‌வுக‌ளுக்கு செய்வோம் அக்கா 👏🙏

அதுதான் எல்லா இடமும் நம் மக்களிடையே நடக்குது தம்பி. எனது சொந்தம் நட்பு வட்டாரம் முழுக்க அதே தான். மிகச்சிலரே கொஞ்சமாவது செய்கிறார்கள். ஆனால் எல்லோருக்கும் தேவை என்ன என்று தெரிகிறது மனம் தான் இல்லை. எல்லாம் சுயநலம் தான். நீர் சொன்னமாதிரி யாழ் கள  உறுப்பினர் பலரும் தமக்கு முடிந்த அளவு எமது மக்களுக்கு உதவுகிறார்கள். அதை விட நாம் ஒன்றுமே செய்ய முடியாது தம்பி . இப்போது  செய்வதிலும் பார்க்க , சிறப்பாக ஏதாவது எமது மக்களுக்கு அதிலும் முக்கியமாக போராளிகளின் குடும்பங்களுக்கு ஏதாவது ஒரு வகையில் உதவ வேண்டும் என்றுதான் முயற்சி செய்கிறேன். உமது மனித நேயம் கண்டு மிகவும் மகிழ்ச்சி. 

Edited by nilmini

  • கருத்துக்கள உறவுகள்
On ‎04‎-‎06‎-‎2020 at 17:45, உடையார் said:

பிள்ளையை தத்தெடுத்தல்

 

20200602-085620.jpg

 

 

 

 

தக்கார் தகவிலர் என்பது அவரவர் 

எச்சத்தாற் காணப் படும். 

வாழ்த்துக்கள் உடையார் ...

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, சாமானியன் said:

 

 

தக்கார் தகவிலர் என்பது அவரவர் 

எச்சத்தாற் காணப் படும். 

வாழ்த்துக்கள் உடையார் ...

நன்றி சாமானியன் 

  • கருத்துக்கள உறவுகள்

அருமையாக வரைந்துள்ளார். வாழ்த்துக்கள் உடையார்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, சுவைப்பிரியன் said:

அருமையாக வரைந்துள்ளார். வாழ்த்துக்கள் உடையார்.

நன்றி சுவைப்பிரியன். 

இன்றுதான் எல்லாம் படிவங்களை நிரப்பி பணமும் எனது வங்கி கணக்கில் இருந்து அனுப்பிவிட்டேன் ஒரு வருடத்திற்கு, தொடர்ந்து பத்து வருடங்களுக்கு உதவ விரும்பியுள்ளா. மகளிடமிருந்து மாதம் மாதம் நான் வங்கிடுவேன், அதுதான் ஒப்பந்தம் இருவருக்கமிடையில். நன்றிகள் மீண்டும் அனைவருக்கும் வாழ்தியதிற்கும் ஊக்கம் தந்திற்கும்

Fund For Mahalir Illam

ABN – 47 467 887 194

Membership Form

Web - http://www.mahalirillam.org /       

“CARING FOR MAHALIR IN NEED”

 

 

Sponsorship Type

 

1)     Child Sponsor donation (A$40/month/child + $10 Ekalvi)

2)     Monthly donation – A$50  (for projects)

3)     Ad- Hoc donation/monthly /annually

 

 

Bank details Commonwealth Bank (Hay Market) BSB: 06 2006; A/c No:011033596.

    Account name: “Fund for Mahalir Illam”

admin@mahalirillam.org

  • கருத்துக்கள உறவுகள்

 .பிள்ளைக்கு முதல் வாழ்த்துக்கள் , பின்னர் தான் உங்களுக்கு அண்ணா.😀மேலும் அவர் பணி தொடரட்டும்.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, யாயினி said:

 .பிள்ளைக்கு முதல் வாழ்த்துக்கள் , பின்னர் தான் உங்களுக்கு அண்ணா.😀மேலும் அவர் பணி தொடரட்டும்.

யாயினி உங்களை இங்கு காண்பதில் மகிழ்ச்சி.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, யாயினி said:

 .பிள்ளைக்கு முதல் வாழ்த்துக்கள் , பின்னர் தான் உங்களுக்கு அண்ணா.😀மேலும் அவர் பணி தொடரட்டும்.

நன்றிகள் யாயினி, மகளிடம் கூறுகின்றேன்

  • கருத்துக்கள உறவுகள்

உயிரோட்டமான ஓவியம். மூக்கு கண்கள் அவை நோக்கும் திசை இருகண்களிலும் கச்சிதமாக அமைந்திருக்கிறது உடையார் ஒரு தலைசிறந்த ஓவியராக வருவார். வாழ்த்துக்கள்.

பதின்ம வயதில் நிறைய ஓவியங்களைக் கிறுக்கிய அநுபவம் உண்டு. பள்ளிக்கூடத்தில் போர் அடித்தால் படிப்பதைத்தவிர பிடித்தமானது விளையாட்டு, மற்றும் ஓவியம் வரைதல் ஆரம்பித்தது ஐந்தாம் ஆண்டு சமயப்புத்தகத்திலிருந்த நடன விநாயகரை வரைவதிலிருந்து ஒரு தடவை பள்ளிகூட விடுமுறைக்கு முதல் நாள் ரிப்போர்ட் கார்ட் வாங்கிக் கொண்டுதான் வீடு செல்ல வேண்டும். சிநேகிதிகள் அவரவர் பாட்டுக்கு படக்கதைகள், டக்கோ டிக்கோ டொஸ், இலக்கப்பெட்டி என்று விளையாட நான் எனது நோட் புக்கில் ஏதோ ஓவியத்தை கற்பனையில் நிறுத்தி வரைந்து கொண்டிருக்க என் அன்புத்தோழி ஏதோ கதைகேட்க நான் பதில் தரவில்லை என்பதற்காக எனது ஓவியத்தின் மேல் சரக் புரக் என்று இரு கோடுகளைப்போட்டு கிறுக்கலாக்கி விட்டாள் அன்றைய நாள் எனக்கு மிகவும் கோபம் வந்துவிட்டது அந்த நிமிடத்தில் எனது ஆருயிர்தோழியிடம் கோபம்போட்டேன். வருடக்கணக்காக அவளிடம் பேசுவதை தவிர்த்திருந்தேன். கிட்டத்தட்ட 10 வருடங்களாக பேசவில்லை. கனடா வரும் சமயத்தில்தான் அவளுடன் மீளப்பேசினேன். நானும் என் நண்பியும் அச்சம்பவத்தால் இழந்த அழகான பொழுகள் ஏராளம். எல்லாம் ஓவியக்கிறுக்கு செய்த வேலை.

உங்கள் மகளின் ஓவியம் அவவின் மனம் போலவே மிகவும் அழகாக இருக்கின்றது.👌

 உங்களுக்கும் உங்கள் குடும்பத்தவர்களுக்கும் வாழ்த்துக்கள் உடையார் அண்ணா 💐👏

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, வல்வை சகாறா said:

உயிரோட்டமான ஓவியம். மூக்கு கண்கள் அவை நோக்கும் திசை இருகண்களிலும் கச்சிதமாக அமைந்திருக்கிறது உடையார் ஒரு தலைசிறந்த ஓவியராக வருவார். வாழ்த்துக்கள்.

பதின்ம வயதில் நிறைய ஓவியங்களைக் கிறுக்கிய அநுபவம் உண்டு. பள்ளிக்கூடத்தில் போர் அடித்தால் படிப்பதைத்தவிர பிடித்தமானது விளையாட்டு, மற்றும் ஓவியம் வரைதல் ஆரம்பித்தது ஐந்தாம் ஆண்டு சமயப்புத்தகத்திலிருந்த நடன விநாயகரை வரைவதிலிருந்து ஒரு தடவை பள்ளிகூட விடுமுறைக்கு முதல் நாள் ரிப்போர்ட் கார்ட் வாங்கிக் கொண்டுதான் வீடு செல்ல வேண்டும். சிநேகிதிகள் அவரவர் பாட்டுக்கு படக்கதைகள், டக்கோ டிக்கோ டொஸ், இலக்கப்பெட்டி என்று விளையாட நான் எனது நோட் புக்கில் ஏதோ ஓவியத்தை கற்பனையில் நிறுத்தி வரைந்து கொண்டிருக்க என் அன்புத்தோழி ஏதோ கதைகேட்க நான் பதில் தரவில்லை என்பதற்காக எனது ஓவியத்தின் மேல் சரக் புரக் என்று இரு கோடுகளைப்போட்டு கிறுக்கலாக்கி விட்டாள் அன்றைய நாள் எனக்கு மிகவும் கோபம் வந்துவிட்டது அந்த நிமிடத்தில் எனது ஆருயிர்தோழியிடம் கோபம்போட்டேன். வருடக்கணக்காக அவளிடம் பேசுவதை தவிர்த்திருந்தேன். கிட்டத்தட்ட 10 வருடங்களாக பேசவில்லை. கனடா வரும் சமயத்தில்தான் அவளுடன் மீளப்பேசினேன். நானும் என் நண்பியும் அச்சம்பவத்தால் இழந்த அழகான பொழுகள் ஏராளம். எல்லாம் ஓவியக்கிறுக்கு செய்த வேலை.

நன்றி சகாறா, சின்ன பிள்ளைகளில் அடிப்பட்டவைகளை நினைக்க இப்ப சிரிப்பாக இருக்கும்.

எனது மச்சாளும் நானும் ஒரு வயது வித்தியாசம், ஒரு சின்னப்பிரச்சனைக்காக 6-7 வருடங்கள் கதைக்கவில்லை அது என்ன பிரச்சனை என்று கேட்கப்படாது😀

6 hours ago, தமிழினி said:

உங்கள் மகளின் ஓவியம் அவவின் மனம் போலவே மிகவும் அழகாக இருக்கின்றது.👌

 உங்களுக்கும் உங்கள் குடும்பத்தவர்களுக்கும் வாழ்த்துக்கள் உடையார் அண்ணா 💐👏

நன்றி தமிழினி, மகளிடம் கூறிவிடுகின்றேன் 

  • கருத்துக்கள உறவுகள்
On 11/6/2020 at 06:52, உடையார் said:

 என்னால் முடிந்ததை செய்கிறேன், கடமைப்பட்டவன் பலருக்கு. 

பிள்ளைகளையும் பழக்கி எடுக்கனும், மற்றவர்களுக்கு உதவினால் அது ஒரு தனி மகிழ்ச்சி, அவர்களுக்கும் விருப்பம், இதுதான் முதல் தொடக்கம் 

பிறரிடம்  உதவி பெற்றதை மறைக்காததும்

பிறருக்கு உதவ மறுக்காததும் தான் மனிதம் .

மிகவும் நெகிழ்வான பணி உடையார்,

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, valavan said:

பிறரிடம்  உதவி பெற்றதை மறைக்காததும்

பிறருக்கு உதவ மறுக்காததும் தான் மனிதம் .

மிகவும் நெகிழ்வான பணி உடையார்,

நன்றி உங்கள் பாராட்டிற்கு Valavan🙏, பழைய வாழ்க்கையை மறக்கவில்லை, அதுதான் நிம்மதியாக என்னை வாழ வைக்கின்றது. 

  • 4 weeks later...

இன்று தான் இந்த திரியை வாசிக்கிறேன். பிரபாவின் பதிலில் சொன்ன படத்தை பார்க்க வந்தேன்.

தமிழினி சொன்னதைப்போல உங்களின் மகளின் மனசைப்போலவே ஓவியமும் மிக அழகு.

உங்கள் பணி தொடர்க.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, பகலவன் said:

இன்று தான் இந்த திரியை வாசிக்கிறேன். பிரபாவின் பதிலில் சொன்ன படத்தை பார்க்க வந்தேன்.

தமிழினி சொன்னதைப்போல உங்களின் மகளின் மனசைப்போலவே ஓவியமும் மிக அழகு.

உங்கள் பணி தொடர்க.

நன்றி பகலவன் உங்கள் பாராட்டிற்கு, மகளிடம் கூறிவிடுகின்றேன்

  • 3 weeks later...

உங்கள் மகளை நினைக்க வியப்பாக உள்ளது. ஒரு குழந்தையின் மனவிருத்தியை அந்த குழந்தையின் சூழல்தான் தீர்மானிப்பதாக சொல்வார்கள்.நீங்கள் நல்ல ஒரு சூழலை உருவாக்கி கொடுத்துள்ளீர்கள். மிக மிக அழகான ஓவியம். என் வாழ்த்துக்களை சொல்லி விடுங்கள்....

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, nige said:

உங்கள் மகளை நினைக்க வியப்பாக உள்ளது. ஒரு குழந்தையின் மனவிருத்தியை அந்த குழந்தையின் சூழல்தான் தீர்மானிப்பதாக சொல்வார்கள்.நீங்கள் நல்ல ஒரு சூழலை உருவாக்கி கொடுத்துள்ளீர்கள். மிக மிக அழகான ஓவியம். என் வாழ்த்துக்களை சொல்லி விடுங்கள்....

நன்றி நிகே. கட்டாயம் சொல்லிவிடுகின்றேன், கடவுளின் அருள்தான்

  • கருத்துக்கள உறவுகள்
On 4/6/2020 at 09:45, உடையார் said:

பிள்ளையை தத்தெடுத்தல்

வாழ்த்துக்கள் உடையார்,அன்பே கடவுள் அதனால் மனிதனும் தெய்வமாகலாம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.