Jump to content

ஒரே இரவில் மூவாயிரம் இராணுவ வீரர்களை கொன்றொழித்ததாக கருணா பெருமிதம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

ஒரே இரவில் தாம் இரண்டாயிரம் முதல் மூவாயிரம் வரையிலான இராணுவ வீரர்களை கொன்றொழித்துள்ளதாக முன்னாள் பிரதி அமைச்சர் கருணா அம்மான் எனப்படும் வினாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார்.

ஆனையிறவு பகுதியில் வைத்து ஒரே இரவில் இவ்வாறு இராணுவப் படைவீரர்களை கொன்றொழித்ததாகத் தெரிவித்துள்ளார்.

தேசியப் பட்டியல் ஊடாக நாடாளுமன்றிற்கு வருமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ச விடுத்த கோரிக்கையை தாம் நிராகரித்து விட்டதாகத் தெரிவித்துள்ளார்.

கருணா அம்மான் கொரோனா வைரஸ் தொற்றை விடவும் அபாயமானவர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

தேசியப் பட்டியல் ஊடாக தெரிவாவதனை விடவும் தாம் மக்களின் ஆணையின் அடிப்படையில் நாடாளுமன்றம் செல்லவே விரும்புவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

அண்மையில் தேர்தல் பிரச்சாரக் கூட்டமொன்றில் பங்கேற்று உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

https://www.tamilwin.com/community/01/248995?ref=home-imp-parsely

Link to comment
Share on other sites

  • Replies 225
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

கருணா... காணாமல் போக, ஆயத்தப் படுத்துகிறரர் போலுள்ளது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் கொரோனாவை விட பயங்கரமானவன்’: அம்மான் அதகளம்!

நான் கொரோனாவை விட பயங்கரமானவன் என ஒருவர் கூறியிருக்கிறார். அது உண்மைதான். கொரோனாவினால் உயிரிழந்தவர்களை விட, என்னால் கொல்லப்பட்ட இராணுவத்தினரின் எண்ணிக்கை மிக அதிகம்“ என கூறியுள்ளார் தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவர் விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா).

அம்பாறை, நாவிதன்வெளியில் நடந்த தேர்தல் பிரச்சாரக்கூட்டமான்றில் இதனை தெரிவித்துள்ளார்.

பொத்துவில் பிரதேசசபை தவிசாளர் அண்மையில் நடந்த கூட்டமொன்றில் கருணா கொரோனாவை விட ஆபத்தானவர் என தெரிவித்திருந்தார். அதற்கு பதிலடி கொடுத்து உரையாற்றியபோதே இதனை தெரிவித்துள்ளார்

“நான் கொரோனாவை விட ஆபத்தானவன் என்று பொத்துவில் பிரதேசசபை தவிசாளர் கூறியுள்ளார். ஆம், நான் கொரோனாவை விட ஆபத்தானவன். நான் விடுதலைப் புலியில் இருந்தபோது, கிளிநொச்சியிலுள்ள ஆனையிறவு முகாமில் 2,000 முதல் 3000 இராணுவத்தை கொன்றேன். இலஙகையில் கொரோனாவினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையை விட இது அதிகம்“ என்றார்.

தேசியப் பட்டியல் ஊடாக நாடாளுமன்றிற்கு வருமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ச விடுத்த கோரிக்கையை தாம் நிராகரித்து விட்டதாகவும், தேசியப் பட்டியல் ஊடாக தெரிவாவதனை விடவும் தாம் மக்களின் ஆணையின் அடிப்படையில் நாடாளுமன்றம் செல்லவே விரும்புவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

https://www.pagetamil.com/130906/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ம்ம். இவர் ஆனையிறவு பக்கம் போனவரோ தெரியாது. இதில வெட்டிப் பெருமை வேற. ஆனையிறவு வெற்றிக்கு பாடுபட்டவர்களை காட்டிக்கொடுத்து கொன்றொழித்தது.. கொல்லப்பட்ட சிங்கள இராணுவத்தை விட அதிகம். அதனால் தான் இப்படி பேச முடிகிறது. 

Link to comment
Share on other sites

கொரேனாவும் கண்ணுக்குத் தெரியாமல்தான் இருக்கு. இவரும் கண்ணுக்குத் தெரியாமல்தான் இருந்தவர்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தேசிய பட்டியல் ஆசனம் மூலம் நாடாளுமன்றத்திற்குள் நுழைவதற்கு தனக்கு விருப்பமில்லை என பிரதமர் மகிந்த ராஜபக்சவிற்கு தெரிவித்துள்ளதாக விநாயகமூர்த்தி முரளீதரன் குறிப்பிட்டுள்ளார்.

 

நான் மக்களின் ஆணையுடன் நாடாளுமன்றம் வருவேன் தேசிய பட்டியலில் எனக்கு விருப்பமில்லை என பிரதமர் மகிந்த ராஜபக்சவிடம் தெரிவித்துள்ளேன் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

நான் கொவிட் 19தை விட ஆபத்தானவன் என தெரிவித்துள்ள கருணா நான் விடுதலைப்புலிகள் அமைப்பில் இருந்தவேளைஆனையிறவில் ஒரே இரவில் 2000 முதல் 3000 வரையிலான இராணுவத்தினரை கொலை செய்தவன்,இது கொரோனா வைரஸ் பலியெடுத்த உயிர்களை விட அதிகம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

http://www.jaffnamuslim.com/2020/06/2000-3000.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆனையிறவுச் சமருக்கும் கும்மானுக்கும் என்ன தொடர்பு?

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆயிரக்கணக்கான படையினரை கொலை செய்தேன் – கருணாவிற்கு கருத்திற்கு ருவான் விஜயவர்த்தன எதிர்ப்பு

Post Views: 85
June 20, 2020

ஆனையிறவில் ஆயிரக்கணக்கான இராணுவத்தினரை கொலை செய்தேன் என விநாயகமூர்த்தி முரளீதரன் வெளியிட்டுள்ள கருத்திற்கு முன்னாள் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜயவர்த்தன தனது எதிர்ப்பினை வெளியிட்டுள்ளார்.

ruwan-wije-1-300x241.jpg

டுவிட்டர் பதிவில் ருவான் விஜயவர்த்தன தனது கருத்தினை வெளியிட்டுள்ளார்.
நான் கொரோனா வைரசினை விட ஆபத்தானவன், ஆனையிறவில் 2000 முதல் 3000 படையினரையும் கிளிநொச்சியில் ஆயிரக்கணக்கான படைவீரர்களையும் கொலை செய்தேன் என கருணா தெரிவித்துள்ளார் எனருவான் விஜயவர்த்தன தெரிவித்துள்ளார்.

 

karuna-3-1-300x169.jpg

ராஜபக்ச தேசியவாதமும் தேசப்பற்றும் பேசும் அதேவேளை கிழக்கில் அவர்களுடைய நபர் ஆயிரக்கணக்கான படைவீரர்களை கொலை செய்தேன் என தெரிவிக்கின்றார் என ருவான் விஜயவர்த்தன தெரிவித்துள்ளார்.

 

http://thinakkural.lk/article/48103

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, MEERA said:

ஆனையிறவுச் சமருக்கும் கும்மானுக்கும் என்ன தொடர்பு?

 

கொஞ்சம் பொறுங்க கூகிள், விக்கிபீடியாவ பார்த்து சொல்லுறன் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஏதோ தான் தனித்து கணணி  கேம் விளையாடி  மாதிரி  ஆனையிறவுக்கதையையும் விடுகிறார்

அந்த மீட்சிக்காக  தமிழர்களும்  அவர்களது  சேனையும்  கொடுத்த விலையையும் தியாகத்தையும்  மிதித்தபடி.....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, பெருமாள் said:

 

. நான் விடுதலைப் புலியில் இருந்தபோது, கிளிநொச்சியிலுள்ள ஆனையிறவு முகாமில் 2,000 முதல் 3000 இராணுவத்தை கொன்றேன்.

 நீங்கள் விடுதலைபுலிகள் அமைப்பில் இருந்திருக்காவிட்டால்

ஒரு  சிங்களபடைவீரனின் வீட்டு நாயைகூட உங்களால் கொல்ல முடிந்திருக்குமா அம்மான்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இராணுவத்தை கொன்றதாக பெருமை பேசுவதா ஜனாதிபதியை வாழ்த்தும் முறை?

Mangala-1.jpg?189db0&189db0

ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவிற்குப் பிறந்தநாள் வாழ்த்துத் தெரிவித்துள்ள முன்னாள் நிதி அமைச்சர் மங்கள சமரவீர, ‘தாம் கொன்ற படையினரின் எண்ணிக்கையைக்கூறிப் பெருமையடைவது தான்’ பொதுஜன பெரமுன வேட்பாளர் கருணா யுத்த நாயகன் ஜனாதிபதிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கூறும் முறையா என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.

தான் கொரோனாவை விட ஆபத்தானவன், புலிகள் இயக்கத்தில் இருந்த போது ஆணையிறவில் ஒரே இரவில் இராணுவத்தினரில் 2000 – 3000 பேரைக் கொலை செய்தார் என்று கருணா எனும் வி.முரளிதரன் தெரிவித்த கருத்து தொடர்பிலே மேற்கண்டவாறு மங்கள கேள்வி எழுப்பியுள்ளார்.

 

https://newuthayan.com/இராணுவத்தை-கொன்றதாக-பெரு/

1 hour ago, valavan said:

 நீங்கள் விடுதலைபுலிகள் அமைப்பில் இருந்திருக்காவிட்டால்

ஒரு  சிங்களபடைவீரனின் வீட்டு நாயைகூட உங்களால் கொல்ல முடிந்திருக்குமா அம்மான்?

சரியான கேள்வி - இந்த கருநாய்க்கு இது விளங்குமா? அற்ப உடல் காம பசிக்காக எம் விடுதலை போராட்டத்தை காட்டிக்ககொடுத்த இந்த கழிசடையிடம் இதையெல்லாம் கேட்க முடியுமா? கேட்டாலும், பதிலிருக்குமா??? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, valavan said:

 நீங்கள் விடுதலைபுலிகள் அமைப்பில் இருந்திருக்காவிட்டால்

ஒரு  சிங்களபடைவீரனின் வீட்டு நாயைகூட உங்களால் கொல்ல முடிந்திருக்குமா அம்மான்?

அவர் விடுதலைபுலிகள் அமைப்பில் இருந்திருக்காவிட்டால் அம்மான்  எப்படி  வந்தது?????

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யுத்த காலத்தில் 2000 தொடக்கம் 3000 ஆயிரம் வரையிலான இராணுவத்தினரை கொன்றதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பின கருணா அம்மான் எனப்படும் விநாயக மூர்த்தி முரளிதரன் குறிப்பிட்டுள்ளமை ஒன்றும் பாரதூரமான விடயமல்ல.

தமிழீழ விடுதலை புலிகள் தொடர்பான இரகசிய தகவல்களை இவர் இறுதியில் வழங்கியதன் காரணமாகவே யுத்தத்தை விரைவாக முடிவுக்கு கொண்டு வர முடிந்தது என அட்மிரல் சரத் வீரசேகர தெரிவித்தார்.

யுத்த காலத்தில் ஆணையிறவு பகுதியில் 2000 தொடக்கம் 3000 ஆயிரம் இராணுவத்தினரை கொன்றதாக கருணா அம்மான் குறிப்பிட்ட செய்தி தொடர்பில் வினவிய போது அவர் மேற்கண்டவா று செய்தி ஊடகமொன்றுக்கு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில், யுத்த காலத்தில் இரண்டு தரப்பிலும் படையினர் கொல்லப்பட்டார்கள். இராணுவத்தினால் விடுதலை புலிகள் அமைப்பினர் யுத்த களத்தில் கொல்லப்பட்டார்கள்.

இராணுவத்தினருக்ககு எதிராகவும் புலிகள் அமைப்பு பல்வேறு வழிமுறைகள் ஊடாக தாக்குதல்களை முன்னெடுத்தார்கள். யுத்த காலத்தில் கருணா அம்மான் கிழக்கு மாகாண படைத்தளபதி பொறுப்பாளராக செயற்பட்டார். இதன் போதே இத்தாக்குதல் இடம் பெற்றிருக்கலாம்.

கருணா அம்மான் விடுதலை புலிகள் அமைப்பில் இருந்து விலகி இராணுவத்திற்கும், அரசாங்கத்திற்கும் ஒத்துழைப்பு வழங்கினார் இதன் பின்னரே இவருக்கு மன்னிப்பு வழங்கப்பட்டது.

தமிழிழ விடுதலை புலிகள் அமைப்பு, அதன் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் தொடர்பில் இவர் பல்வேறு இரகசிய தகவல்களை அரசாங்கத்தற்கு வழங்கினார். இவர் வழங்கிய தகவல்களை அடிப்படையாகக் கொண்டே இறுதிக்கட்ட யுத்தம் குறுகிய காலத்தில் நிறைவுக் கு கொண்டு வரப்பட்டது.

ஆகவே தற்போது இவர் குறிப்பிட்டுள்ள கருத்து இராணுவத்தில் உயிர்நீத்தவர்களின் உறவுகளுக்கு பாதிப்பினை ஏற்படுத்துவதாக காணப்படுகின்றது.

இவ்வாறான கருத்துக்களை குறிப்பிடுவதை தவிர்த்துக் கொள்ள வேண்டும். இறுதிக்கட்ட யுத்தத்தை மிக விரைவில் நிறைவுக்கு கொண்டு வர வேண்டும் என்ற தேவை காணப்பட்டதால் இவரது உதவியை அப்போது பெற்றுக் கொண்டோம்.

இறுதிக்கட்ட யுத்தத்தில் இரண்டு தரப்பிலும் பாரிய இழப்புக்கள் ஏற்பட்டுள்ளன. யுத்தத்தை நோக்கி பயணிக்கையில் இழப்புக்களை நிச்சயித்துக் கொள்ளவேண்டும் என்பது இராணுவத்தினருக்கு சாதாரண ஒரு விடயமாகும். 30 வருட யுத்தத்தை நிறைவுக்கு கொண்டு வந்ததன் காரணமாகவே இன்று தமிழ் முஸ்லிம் மக்கள் சுதந்திரமாக வாழ்கிறார்கள் என்றா

https://www.tamilwin.com/special/01/249054?ref=imp-news

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அம்மான் நாக்கிலே சனி...

சிங்களவர்கள் பொருமிக் கொண்டு இருக்கிறார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, nedukkalapoovan said:

ம்ம். இவர் ஆனையிறவு பக்கம் போனவரோ தெரியாது. இதில வெட்டிப் பெருமை வேற. ஆனையிறவு வெற்றிக்கு பாடுபட்டவர்களை காட்டிக்கொடுத்து கொன்றொழித்தது.. கொல்லப்பட்ட சிங்கள இராணுவத்தை விட அதிகம். அதனால் தான் இப்படி பேச முடிகிறது. 

இப்படியான விசயங்களில் கருத்தெழுதாமல்  இருப்பது உங்களுக்கு மரியாதை தம்பி 🙂
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
27 minutes ago, ரதி said:

இப்படியான விசயங்களில் கருத்தெழுதாமல்  இருப்பது உங்களுக்கு மரியாதை தம்பி 🙂
 

ஏன் ஆனையிறவுச் சமருக்கு கும்மானோட போனனீங்களோ...?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, MEERA said:

ஏன் ஆனையிறவுச் சமருக்கு கும்மானோட போனனீங்களோ...?

நீங்கள் விரும்புகிறீர்களோ ,இல்லையோ ஆனையிறவு சமரில் கருணாவின் பங்கும் இருந்தது .
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, ரதி said:

நீங்கள் விரும்புகிறீர்களோ ,இல்லையோ ஆனையிறவு சமரில் கருணாவின் பங்கும் இருந்தது .
 

எந்தப் பக்கத்தால எந்த ரீமை கொண்டு போனவர்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கொலைக்காரன் கருணாவை, உடனடியாக கைது செய்யுங்கள் - ராவணா பலய

(எம்.மனோசித்ரா)

 

கருணா அம்மான் முன்வைத்துள்ள கருத்துக்கள் பாரதூரமானதாகும். 2000 - 3000 இராணுவ வீரர்களை கொன்றதாகக் கூறுவது நாட்டில் நடைமுறையிலுள்ள சட்டத்திற்கு முரணானதாகும்.

 

எனவே அவரை மனித கொலையுடன் தொடர்புபட்ட சட்டத்தின் கீழ் கைது செய்ய முடியும். இதற்கான நேரடியாக நடவடிக்கையை  முன்னெடுக்குமாறு ராவணா பலய அமைப்பின் தலைவர் இத்தேகந்த சுததிஸ்ஸ தேரர் தெரிவித்தார்.

 

இன்று சனிக்கிழமை ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் கூறுகையில், உயிர்த்த ஞாயிறு தாக்குதலை விடவும் இது மிகப் பாரதூரமானதாகும்.

 

இந்த சம்பவம் மாத்திரமின்றி இதே போன்று இவர் இன்னும் பல மனிதப்படுகொலைகளுடன் தொடர்புபட்டவராவார். எனவே தற்போது அவருக்கு எதிராக சட்டத்தை நடைமுறைப்படுத்த முடியும்.

 

தான் செய்த குற்றத்தை அவரே ஒத்துக் கொண்டுள்ளார். சஹரானைப் போன்றே இவரும் மனிதப் படுகொலையைச் செய்துள்ளார்.

 

தேர்தல் களத்தில் இருந்து கொண்டு இவ்வாறான  கருத்தினை பகிரங்கமாக  தெரிவிப்பதன் மூலம் மீண்டும் தனி ஈழ கோரிக்கையை முன்வைக்கின்றாரா என்ற சந்தேகம் எழுகின்றது.

 

எனவே ஜனாதிபதி உள்ளிட்ட உயர் அதிகாரிகளிடம் உரிய நடவடிக்கையை துரிதமாக முன்னெடுக்குமாறு கோரிக்கை விடுக்கின்றோம்.

 

நாட்டிலுள்ள சாதாரண மக்களின் பிள்ளைகளே இராணுவ வீரர்களாக யுத்த களத்திற்குச் சென்றனர். அவர்களே எல்.டி.டி.ஈ. பயங்கரவாத குழுவுக்கு எதிராக முகாம் அமைத்தார்கள். அவ்வாறான அப்பாவிகள் 2000 - 3000 பேரை ஒரே நேரத்தில் கொன்ற இவர் அரசியலில் அங்கத்துவம் வகிக்க முடியுமா ?

 

கொலைகாரரொருவர் பாராளுமன்ற உறுப்பினராக இருக்க முடியுமா? நாட்டின் சட்டத்தை சவாலுக்குட்படுத்திய இது போன்ற நபர்களுக்கு அரசியலில் வாய்ப்பளிக்க முடியுமா ? எனவே கருணா அம்மானுக்கு ஒரு விடயத்தைக் கூற விரும்புகின்றேன். முன்னரை போல தற்போது விளையாட முடியாது. காரணம் தேசிய பாதுகாப்பை ஸ்திரப்படுத்தக் கூடிய தலைவர் உருவாகியுள்ளார்

http://www.jaffnamuslim.com/2020/06/blog-post_337.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பெருமாள் said:

யுத்த காலத்தில் 2000 தொடக்கம் 3000 ஆயிரம் வரையிலான இராணுவத்தினரை கொன்றதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பின கருணா அம்மான் எனப்படும் விநாயக மூர்த்தி முரளிதரன் குறிப்பிட்டுள்ளமை ஒன்றும் பாரதூரமான விடயமல்ல.

தமிழீழ விடுதலை புலிகள் தொடர்பான இரகசிய தகவல்களை இவர் இறுதியில் வழங்கியதன் காரணமாகவே யுத்தத்தை விரைவாக முடிவுக்கு கொண்டு வர முடிந்தது என அட்மிரல் சரத் வீரசேகர தெரிவித்தார்.

யுத்த காலத்தில் ஆணையிறவு பகுதியில் 2000 தொடக்கம் 3000 ஆயிரம் இராணுவத்தினரை கொன்றதாக கருணா அம்மான் குறிப்பிட்ட செய்தி தொடர்பில் வினவிய போது அவர் மேற்கண்டவா று செய்தி ஊடகமொன்றுக்கு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில், யுத்த காலத்தில் இரண்டு தரப்பிலும் படையினர் கொல்லப்பட்டார்கள். இராணுவத்தினால் விடுதலை புலிகள் அமைப்பினர் யுத்த களத்தில் கொல்லப்பட்டார்கள்.

இராணுவத்தினருக்ககு எதிராகவும் புலிகள் அமைப்பு பல்வேறு வழிமுறைகள் ஊடாக தாக்குதல்களை முன்னெடுத்தார்கள். யுத்த காலத்தில் கருணா அம்மான் கிழக்கு மாகாண படைத்தளபதி பொறுப்பாளராக செயற்பட்டார். இதன் போதே இத்தாக்குதல் இடம் பெற்றிருக்கலாம்.

கருணா அம்மான் விடுதலை புலிகள் அமைப்பில் இருந்து விலகி இராணுவத்திற்கும், அரசாங்கத்திற்கும் ஒத்துழைப்பு வழங்கினார் இதன் பின்னரே இவருக்கு மன்னிப்பு வழங்கப்பட்டது.

தமிழிழ விடுதலை புலிகள் அமைப்பு, அதன் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் தொடர்பில் இவர் பல்வேறு இரகசிய தகவல்களை அரசாங்கத்தற்கு வழங்கினார். இவர் வழங்கிய தகவல்களை அடிப்படையாகக் கொண்டே இறுதிக்கட்ட யுத்தம் குறுகிய காலத்தில் நிறைவுக் கு கொண்டு வரப்பட்டது.

ஆகவே தற்போது இவர் குறிப்பிட்டுள்ள கருத்து இராணுவத்தில் உயிர்நீத்தவர்களின் உறவுகளுக்கு பாதிப்பினை ஏற்படுத்துவதாக காணப்படுகின்றது.

இவ்வாறான கருத்துக்களை குறிப்பிடுவதை தவிர்த்துக் கொள்ள வேண்டும். இறுதிக்கட்ட யுத்தத்தை மிக விரைவில் நிறைவுக்கு கொண்டு வர வேண்டும் என்ற தேவை காணப்பட்டதால் இவரது உதவியை அப்போது பெற்றுக் கொண்டோம்.

இறுதிக்கட்ட யுத்தத்தில் இரண்டு தரப்பிலும் பாரிய இழப்புக்கள் ஏற்பட்டுள்ளன. யுத்தத்தை நோக்கி பயணிக்கையில் இழப்புக்களை நிச்சயித்துக் கொள்ளவேண்டும் என்பது இராணுவத்தினருக்கு சாதாரண ஒரு விடயமாகும். 30 வருட யுத்தத்தை நிறைவுக்கு கொண்டு வந்ததன் காரணமாகவே இன்று தமிழ் முஸ்லிம் மக்கள் சுதந்திரமாக வாழ்கிறார்கள் என்றா

https://www.tamilwin.com/special/01/249054?ref=imp-news

இந்தச் செய்தி உண்மையானால், இச் செய்தியில் கூறப்பட்டது தொடர்பாக  இரதி அக்காவின் நிலைப்பாடு என்ன 🤔

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kapithan said:

இந்தச் செய்தி உண்மையானால், இச் செய்தியில் கூறப்பட்டது தொடர்பாக  இரதி அக்காவின் நிலைப்பாடு என்ன 🤔

கருணா காட்டிக் கொடுத்து தான் புலிகள் தோத்தார்கள் என்பது புலிகளையும்,தலைவரையும் அவமதிக்கும் செயல் என்று நான் நினைக்கிறேன் .
கருணா காட்டிக் கொடுக்கா விட்டாலும் அந்த யுத்தத்தில் புலிகள் தோத்து இருப்பார்கள்.
கருணாவும் ,அவரது படைகளும் அந்த நேரத்தில் புலிகளோடு நின்றிருந்தாலும் கூட அந்த சண்டையில் தோத்து தான் இருப்பார்கள்...ஆனால் இன்னும் கொஞ்ச நாள் போராட்டம் நீடித்து இருக்கும்...இன்னும் அதிக உயிரிழப்புக்கள் ஏற்பட்டு இருக்கும்  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, MEERA said:

எந்தப் பக்கத்தால எந்த ரீமை கொண்டு போனவர்?

 

8 minutes ago, ரதி said:

கருணா காட்டிக் கொடுத்து தான் புலிகள் தோத்தார்கள் என்பது புலிகளையும்,தலைவரையும் அவமதிக்கும் செயல் என்று நான் நினைக்கிறேன் .
கருணா காட்டிக் கொடுக்கா விட்டாலும் அந்த யுத்தத்தில் புலிகள் தோத்து இருப்பார்கள்.
கருணாவும் ,அவரது படைகளும் அந்த நேரத்தில் புலிகளோடு நின்றிருந்தாலும் கூட அந்த சண்டையில் தோத்து தான் இருப்பார்கள்...ஆனால் இன்னும் கொஞ்ச நாள் போராட்டம் நீடித்து இருக்கும்...இன்னும் அதிக உயிரிழப்புக்கள் ஏற்பட்டு இருக்கும்  

சரி இதை விட்டிட்டு, ஆனையிறவிற்கு வாங்கோ...

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Posts

    • யாழில் சகோதரிக்கு போதை ஊசி செலுத்தி, பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய சகோதரன் கைது Published By: DIGITAL DESK 3 26 APR, 2024 | 03:41 PM   தனது சகோதரியை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தி வந்ததுடன், சகோதரியை வலுக்கட்டாயமாக பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி வந்த குற்றச்சாட்டில் சகோதரன் கைது செய்யப்பட்டு, நீதிமன்ற உத்தரவில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.  யாழ்ப்பாணம் நகர் பகுதியை அண்டிய கிராமத்தைச் சேர்ந்த 34 வயதுடைய பெண்ணொருவர் தனது பெற்றோர் உயிரிழந்த நிலையில், சகோதரியுடன் வடமராட்சி கிழக்கு பகுதியில் உள்ள ஆதரவற்றோர் இல்லத்தில் வசித்து வந்துள்ளார்.  இந்நிலையில், கடந்த டிசம்பர் மாதம் பெண்ணின் சகோதரி உயிரிழந்துள்ளார். அதனை அடுத்து இல்லத்தில் வசித்து வந்த சகோதரியை , யாழ்.நகர் பகுதியை அண்டிய பிரதேசத்தில் வாழும் சகோதரன் தன்னுடன் அழைத்து வந்து தங்க வைத்துள்ளார்.  இந்நிலையில், கடந்த ஜனவரி மாதம் குறித்த பெண்ணுக்கு போதைப்பொருட்களை வலுக்கட்டாயமாக நுகர வைத்தும், போதை ஊசிகளை செலுத்தியும் பாலியல் வன்புணர்வுக்கு கும்பல் ஒன்று உட்படுத்தி வந்துடன் பெண்ணை சித்திரவதைக்கு உள்ளாக்கியும் வந்துள்ளது.  பின்னர் கடந்த வாரம் மீண்டும் ஆதரவற்றோர் இல்லத்தில் பெண்ணை கொண்டு சென்று சகோதரன் சேர்த்துள்ளார். இல்லத்தில் பெண்ணின் நடவடிக்கையில் மாற்றங்கள் தென்பட்டதுடன், உடலில் காயங்கள் காணப்பட்டமையால், இல்ல நிர்வாகத்தினரால் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் பெண்ணை சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.  வைத்திய சிகிச்சையின் போதே பெண் தனக்கு நேர்ந்த கொடுமைகளை விபரித்துள்ளார். அதனை அடுத்து சட்ட வைத்திய அதிகாரியினால், முன்னெடுக்கப்பட்ட மருத்துவ பரிசோதனைகளின் போது, பெண் பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளமையும், பெண்ணை அடித்து துன்புறுத்தி சித்திரவதைக்கு உள்ளாக்கியமைக்கான காயங்கள் உடலில் காணப்பட்டுள்ளமையும் உறுதிப்படுத்தப்பட்டது.  சம்பவம் தொடர்பில் ஆரம்ப விசாரணைகளை முன்னெடுத்த பருத்தித்துறை பொலிஸார், குற்றம் நடைபெற்ற பிரதேசம் யாழ்ப்பாண தலைமை பொலிஸ் நிலைய பிரிவுக்கு உட்பட்டது என்றதன் அடிப்படையில் , யாழ்ப்பாண பொலிஸாருக்கு தகவல் அளிக்கப்பட்டதை அடுத்து, யாழ்ப்பாண பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்தனர்.  விசாரணைகளின் அடிப்படையில் பெண்ணின் சகோதரனே, பெண்ணை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தி வந்தமையும், போதைப்பொருட்களை கட்டாயப்படுத்தி நுகர வைத்து பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியமையும் தெரிய வந்துள்ளது.  அதனை அடுத்து சகோதரனை கைது செய்த பொலிஸார் விசாரணைகளின் பின்னர் யாழ்,நீதவான் நீதிமன்றில் நேற்று வியாழக்கிழமை முற்படுத்தியவேளை, சகோதரனை விளக்கமறியலில் வைக்குமாறு மன்று உத்தரவிட்டது.  அதேவேளை, பெண்ணை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தியவர்கள் என 08 பேரை அடையாளம் கண்டுள்ளதாகவும், அவர்களை கைது செய்வதற்கு நடவடிக்கைகளை முன்னெடுத்து உள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.   யாழில் சகோதரிக்கு போதை ஊசி செலுத்தி, பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய சகோதரன் கைது | Virakesari.lk
    • மன்னார் - நானாட்டான் கமநல சேவைகள் பிரிவில் உள்ள வஞ்சியன்குளம் கமக்காரர் அமைப்புக்கு உட்பட்ட வஞ்சியக் குளக்கண்டத்தில் இன்று வெள்ளிக்கிழமை (26) காலை பயிர்களுக்கு ட்ரோன் மூலம் திரவ உரம் விசிறும் பணிகள் இடம்பெற்றன. அந்த வகையில், MI 07 இனத்தைச் சேர்ந்த பயறு செய்கைக்கான திரவ உரம் ட்ரோன் மூலம் விசிறப்பட்டது.  ட்ரோன் மூலம் திரவ உரம் விசிறும் பணிகள் இடம்பெற்றபோது மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன், கமநல அபிவிருத்தி  உதவி ஆணையர், விவசாய மாகாண பிரதி பணிப்பாளர், கமநல அபிவிருத்தி உத்தியோகத்தர், கமநல மற்றும் விவசாய திணைக்கள உத்தியோகத்தர்கள், விவசாயிகள் என பலர் களத்தில் இருந்தனர். மன்னார் - நானாட்டானில் பயிர்களுக்கு ட்ரோன் மூலம் திரவ உரம் விசிறப்பட்டது!  | Virakesari.lk
    • நெடுமாறன் அய்யா எமக்காக செய்தவற்றில் சில 1982ஆம் ஆண்டு இலங்கையில் தமிழ் நூல்கள் அதிகம் இருந்த யாழ் நூலகம் தீக்கிரையாக்கப்பட்டபோது, அவ்விடம் சென்று அதனை ஆவணப்படுத்தி, அன்றைய முதலமைச்சர் எம்.ஜி.ஆரிடம் அறிக்கை சமர்ப்பித்தார். அதன்பின், எம்.ஜி.ஆர், இலங்கையில் தமிழர் போராட்டம் குறித்து அன்றைய பிரதமர் இந்திரா காந்தியிடம் பேசினார் என்பது வரலாறு. மேலும், 1985ஆம் ஆண்டு, சிங்களப் படைகளால் பாதிக்கப்பட்ட இலங்கை தமிழ்ப்பகுதிகளை, ரகசியமாக பயணம் செய்து காணொலியாகப் பதிந்து, உலகம் முழுக்க தெரியப்படுத்தினார். அதேபோல், 1991ஆம் ஆண்டு இந்திய அமைதிப்படை இலங்கையில் செய்த கொடூரங்களை, ஆவணப்படுத்தி, அன்றைய பிரதமர் வி.பி.சிங்கிடம் இதுகுறித்து பேசி,அவரை திரும்பப்பெற வலியுறுத்தினார். இப்படி தொடர்ந்து ஈழ ஆதரவுப் போராட்டங்களில் ஈடுபட்டார், பழநெடுமாறன்.  நாங்கள் என்ன செய்தோம்.  போராடமால் வெளிநாடு சென்று இணையத்தில் மட்டுமே போராடுகிறோம்.  2010 தேர்தலில் எம்மை அழித்த சரத் பொன்சேகாவுக்கு யாழில் எம்மவர்கள் வழங்கிய அதிக வாக்குகள்.  ஆனால் நாங்கள் தமிழக அரசியல்வாதிகளைப் பார்த்து துரோகிகள் என்கிறோம். இது வேடிக்கை இல்லையா?
    • இப்படி உறைக்க சொல்லுங்கோ பாஸ். அப்பதான் எனக்கும் உறைக்கும். ஏனென்றால், நானும் இப்படித்தான் நினைச்சுக் கொண்டு இருக்கின்றேன். என் மகள் உறைப்பு சாப்பிடவே மாட்டார், ஆனால் மகன் மகளுக்கு நேர் எதிர். இதனால், அவனுக்கு "எந்த சாப்பாட்டைக் கொடுத்தாலும், சாப்பிடுவான்' என்று ஒரே நற்சான்றிதழ் கொடுப்பதுடன், அவன் விரும்பிச் சாப்பிடும் சாப்பாடுகளில், உறைப்பை தூக்கலாக போட்டுத்தான் சமைப்பது. நானும் கடும் உறைப்பு சாப்பிட்டுக் கொண்டு இருந்தனார் - இந்த வருடம் பெப்ரவரி வரைக்கும். பெப் இல் வந்த நிமோனியாவுக்கு எடுத்த  நுண்ணுயிர் எதிர்ப்பியால் / Antibiotics , மிளகாய்த் தூள் கொஞ்சம் கூடப் போட்டு சமைத்தால்.... பிச்சுக் கொண்டு போகுது.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.