Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

2020 தேர்தல் முடிவுகள்!!!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Pavithra-Wanniarachchi.jpg

இரத்தினபுரி மாவட்டத்தில் அதிகூடிய விருப்பு வாக்குகளை பெற்று பவித்ரா வன்னியாராச்சி முன்னிலை

இரத்தினபுரி மாவட்டத்தில் அதிகூடிய விருப்பு வாக்குகளை முன்னாள் சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி  பெற்று முதலிடத்தில் உள்ளார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன சார்பில் தேர்தலில் போட்டியிட்ட  இவர் இரத்தினபுரி மாவட்டத்தில் 446,668 வாக்குகளை பெற்றுள்ளார்.

குறித்த மாவட்டத்தில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மொத்தமாக 8 ஆசனங்களையும் ஐக்கிய மக்கள் சக்தி 3 ஆசனங்களையும் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

http://athavannews.com/இரத்தினபுரி-மாவட்டத்தில/

  • Replies 252
  • Views 52.4k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, தமிழ் சிறி said:

வரலாற்றுத் தோல்வியை பதிவு செய்தது ரணில் தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி

இவ்வளவு இடியாப்ப சிக்கலுக்குள்ளும் இவரை நினைத்து சந்தோசப்படுகிறேன்.

இருந்தும் கிடைத்த ஒரேஒரு போனஸ் சீற் இவருக்கு தான்.

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, ஈழப்பிரியன் said:

இவ்வளவு இடியாப்ப சிக்கலுக்குள்ளும் இவரை நினைத்து சந்தோசப்படுகிறேன்.

இருந்தும் கிடைத்த ஒரேஒரு போனஸ் சீற் இவருக்கு தான்.

42 வருடங்கள்... மக்களின் வாக்குகளைப்  பெற்று,
பாராளுமன்றம் போனவர்... இம்முறை, போனஸ்  ஆசனம் கிடைத்து, உள்ளே போயுள்ளார். :)

அவரின்... ஜனாதிபதி கனவு நிறைவேறாமலேயே, 
அரசியல் வாழ்க்கை... முடிவிற்கு வந்துள்ளது. :grin:

போற போக்கில்... தனது கட்சியையும், குழி தோண்டிப் புதைத்த.. திறமைசாலி. 🤣

###########    ################    ###############     ############

mahindha-2.jpg

ரணிலின் சாதனையை முறியடித்தார் மஹிந்த

குருநாகல் மாவட்டத்தில் போட்டியிட்ட பொதுஜன பெரமுனவின் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ விருப்பு வாக்குகளில் முன்னிலையில் உள்ளார்.

இவர்  5,27,364 அதிகூடிய விருப்பு வாக்குகளைப் பெற்று சாதனை படைத்துள்ளார்.

அதாவது கடந்த 2015 தேர்தலில் கொழும்பு மாவட்டத்தில் போட்டியிட்ட ரணில் விக்ரமசிங்க 5,00,566 வாக்குகளைப் பெற்றிருந்தார்.

அந்த சாதனையை  தற்போது பொதுஜன பெரமுனவின் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ முறியடித்துள்ளார்.

நடைபெற்று முடிந்துள்ள பொதுத்தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன 145 ஆசனங்களைப் பெற்று அமோக வெற்றியைப் பதிவுசெய்துள்ளது.

அக்கட்சி, 68 இலட்சத்து, 53ஆயிரத்து 693 வாக்குகளைப் பெற்றுள்ளதுடன் செல்லுபடியான மொத்த வாக்குகளில் 59.09 வீத வாக்குகளைப் பெற்றுள்ளது.

அதாவது மூன்றில் இரண்டு பெரும்பான்மைக்கு இன்னும் 5ஆசனங்களே குறித்த கட்சிக்கு தேவைப்படுகின்றது. எனவே அதனை தனக்கு ஆதரவான கட்சிகளுடன் இணைந்து 3/2பெரும்பான்மையை பெற்றுக்கொள்ளும் வாய்ப்பு அதிகம் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

http://athavannews.com/ரணிலின்-சாதனையை-முறியடித/

 

###############    #################    ################  ########

sampanthan-3.jpg

திருகோணமலையில் விருப்பு வாக்குகளில் முன்னிலை வகிப்போர் தொடர்பான விபரம்

திருகோணமலை மாவட்டத்தில் அதிக விருப்பு வாக்குகள் ஐக்கிய மக்கள் சக்திக்கு கிடைக்கப்பெற்றுள்ளது.

நடைபெற்று முடிந்த பொதுத்தேர்தலில் முடிவுகளின் பிரகாரம் ஐக்கிய மக்கள் சக்தி சார்பில் இருவரும், இலங்கை தமிழ் அரசு கட்சியில் ஒருவரும், பொதுஜன பெரமுனவில் ஒருவரும் தெரிவாகியுள்ளார்கள்.

ஐக்கிய மக்கள் சக்தி சார்பில் எம்.எஸ்.தௌபீக் 43,759 வாக்குகள்,(ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்), இம்ரான் மஹ்ரூப் 39,029 வாக்குகள் (ஐக்கிய மக்கள் சக்தி) ஆகியோரும் இலங்கை தமிழ் அரசு கட்சியில்  தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்மந்தன் 21,422 வாக்குகள், பொதுஜன பெரமுனவில் கபில நுவான் அதுகோரலவும் 30,056 வாக்குகளையும் பெற்று தெரிவாகியுள்ளார்கள்.

திருகோணமலை மாவட்ட முன்னாள் இராஜாங்க அமைச்சர் சுசந்த புஞ்சிநிலமே(பொதுஜன பெரமுன), பிரதியமைச்சர் அப்துல்லா மஃறூப் (ஐக்கிய மக்கள் சக்தி) ஆகியோர் தோல்வியடைந்துள்ளனர்.

 திருகோணமலை மாவட்டத்தில் நால்வர் நாடாளுமன்ற உறுப்பினர்களாக தெரிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, சண்டமாருதன் said:

 

 

 

தூசன வார்த்தைகளும் பறக்குது காற்றில்😂😂,

கொரோணாவும் காற்றில் பறந்துவிட்டது இவர்களின் ஆக்கிரோசத்தைப்பார்த்து

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, சண்டமாருதன் said:

 

 

 

கூத்தமைப்பில் பல படித்த புதிய  இளைஞர்கள் கேட்கிறார்கள் ஏன் நீங்கள் அவர்களை ஆதரிக்கலாமே என்று  சொன்ன சொம்புகளுக்கு இந்த சம்பவம் ஒரு பாடம் , இந்த கிழப்பெருச்சாளிகளில்  ஒன்று கூட அந்த கட்சியில் நீடிக்கும்வரை அது சாட்சாத் கூத்தமைப்பே தான் , நீங்கள் தேர்ந்தெடுக்கும் புதிய இளைஞர்களுக்கும் இதுதான் நிலைமை இந்த பெருச்சாளிகளுக்கு ஆமாம் போட்டே காலம் கழிப்பீர் இல்லை கிழித்தெறியப்படுவீர், டெமோ எப்படி ...? அனுபவமே சரியான ஆசான்... இன்னும் வரும் 

9 minutes ago, உடையார் said:

தூசன வார்த்தைகளும் பறக்குது காற்றில்😂😂,

கொரோணாவும் காற்றில் பறந்துவிட்டது இவர்களின் ஆக்கிரோசத்தைப்பார்த்து

 

ரவிராஜின்  மனைவி வெற்றி பெற்றதாக அறிவித்த பின்னர் சுமந்திரன் வெற்றி பெற்றதாக அறிவித்துள்ளார்கள் என் சொல்கின்றார்கள். சுமந்திரன் பெரிய விழையாட்டு காட்டுகின்றார் போலுள்ளது , எது உண்மை என்பது தெரியவில்லை. 

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, சண்டமாருதன் said:

ரவிராஜின்  மனைவி வெற்றி பெற்றதாக அறிவித்த பின்னர் சுமந்திரன் வெற்றி பெற்றதாக அறிவித்துள்ளார்கள் என் சொல்கின்றார்கள். சுமந்திரன் பெரிய விழையாட்டு காட்டுகின்றார் போலுள்ளது , எது உண்மை என்பது தெரியவில்லை. 

சண்டமாருதன்,  கீழுள்ள இணைப்பை... பாருங்கள். 
உங்கள் சந்தேகங்களுக்கு, பதில் கிடைக்கும்.  :)

 

7 minutes ago, அக்னியஷ்த்ரா said:

கூத்தமைப்பில் பல படித்த புதிய  இளைஞர்கள் கேட்கிறார்கள் ஏன் நீங்கள் அவர்களை ஆதரிக்கலாமே என்று  சொன்ன சொம்புகளுக்கு இந்த சம்பவம் ஒரு பாடம் , இந்த கிழப்பெருச்சாளிகளில்  ஒன்று கூட அந்த கட்சியில் நீடிக்கும்வரை அது சாட்சாத் கூத்தமைப்பே தான் , நீங்கள் தேர்ந்தெடுக்கும் புதிய இளைஞர்களுக்கும் இதுதான் நிலைமை இந்த பெருச்சாளிகளுக்கு ஆமாம் போட்டே காலம் கழிப்பீர் இல்லை கிழித்தெறியப்படுவீர், டெமோ எப்படி ...? அனுபவமே சரியான ஆசான்... இன்னும் வரும் 

இந்த தேர்தலில் கொள்கைகளோ மக்கள் நலனோ அதுசார்ந்த அரசியலோ முன்போல் இல்லை, முடிந்தளவு அதிகாரங்களை கைப்பற்றும் போட்டியே மேலோங்கி நின்றது. இனிமேல் இப்படித்தான் போகும.  

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, MEERA said:

கிருபன் உட்பட பலர் சவால் விட்டிருந்தனர் இம்முறை சுத்துமாத்திரன் ஒரு இலட்சம் வாக்குகளால் வெல்வார் என்று.

சுமந்திரன் வெல்வார் என்றுதான் சொல்லியிருந்தேன். ஆனால் ஒரு இலட்சம் வாக்கு அவருக்குக் கிடைக்கும் என்று ஒருபோதும் எழுதியதில்லை.

சுமந்திரன் தனது பேட்டியில் ஒரு இலட்சம் கிடைக்கும் என்று ஒருமுறை சொல்லியிருந்தார். ஆனால் அப்படி போடுமளவிற்கு மக்கள் தொகையே யாழ்ப்பாணத்தில் இல்லை ( முன்னர் குதிரை கஜேந்திரனுக்கு அள்ளி அள்ளி செருகி அவர் ஒரு இலட்சம் எடுத்திருந்தார், கிடைத்த வாக்குகளுக்கு 40,000 சவப்பெட்டிக் கதையை பாராளுமன்றத்தில் சொல்லியிருந்தார்!)

  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, சண்டமாருதன் said:

 

ரவிராஜின்  மனைவி வெற்றி பெற்றதாக அறிவித்த பின்னர் சுமந்திரன் வெற்றி பெற்றதாக அறிவித்துள்ளார்கள் என் சொல்கின்றார்கள். சுமந்திரன் பெரிய விழையாட்டு காட்டுகின்றார் போலுள்ளது , எது உண்மை என்பது தெரியவில்லை. 

ஆளும் கட்சிக்கு அவர் தேவை - பின் கதவு அவருக்கு புதிதல்ல, விளையாட்டு காட்டிவிட்டார்🙈,

மிக கேவலமான செயல்😡; மக்கள் இதை மறந்துவிடுவார்கள் இன்னும் சில வருடங்களில், அவரும் முகத்தில் பட்ட எச்சியை வழித்துக்கொண்டு மீண்டும் கை கூப்பி வருவார்

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, உடையார் said:
45 minutes ago, சண்டமாருதன் said:

 

ரவிராஜின்  மனைவி வெற்றி பெற்றதாக அறிவித்த பின்னர் சுமந்திரன் வெற்றி பெற்றதாக அறிவித்துள்ளார்கள் என் சொல்கின்றார்கள். சுமந்திரன் பெரிய விழையாட்டு காட்டுகின்றார் போலுள்ளது , எது உண்மை என்பது தெரியவில்லை. 

ஆளும் கட்சிக்கு அவர் தேவை - பின் கதவு அவருக்கு புதிதல்ல, விளையாட்டு காட்டிவிட்டார்🙈,

மிக கேவலமான செயல்😡; மக்கள் இதை மறந்துவிடுவார்கள் இன்னும் சில வருடங்களில், அவரும் முகத்தில் பட்ட எச்சியை வழித்துக்கொண்டு மீண்டும் கை கூப்பி வருவார்

ஏதோ நிகழ்ச்சி நிரல் நடக்கப் போகுது பொறுத்திருந்து பார்ப்போம்.

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, அக்னியஷ்த்ரா said:

எல்லோரும் கூத்தமைப்பின் பின்னடைவிற்கு புறக்காரணங்களை தேடுகிறார்கள்யொழிய 
அகக்காரணங்களையும் அவர்கள் விட்ட பாரிய பிழைகளையும் சீர்தூக்கி பார்க்க விரும்பவில்லை 
இவர்கள் எல்லாம் சொல்லவருவது அவர்கள் என்ன கூத்தை ஆடினாலும் சரி தமிழர்கள் தொடர்ந்து அவர்களுக்கே வாக்களித்து தமது பிரதிநிதித்துவத்தை காக்க வேண்டும் என்பதே, 
இந்த ஒற்றை புள்ளியைத்தான் தமிழகர்களும் இவ்வளவு காலமும் பின்பற்றினார்கள் அதே ஒற்றை புள்ளியை தான் தங்கள் வரப்பிரசாதமாக எடுத்துக்கொண்ட கூத்தாடிகள்  தாம் என்ன செய்தாலும் மீண்டும் மக்கள் எங்களை தான் அனுப்பப்போகிறார்கள் என்ற அசாத்திய தன்னம்பிக்கையில் மக்கள் எதற்காக அவர்களை அனுப்பினார்களோ அதைமறந்து  அவர்களுக்கே பாடமெடுக்க தொடங்கினார்கள். இந்த தேர்தல் அவர்களுக்கு வலிமையான பாடத்தை சொல்லியிருக்கிறது, ஒரு சில இடங்களில் தமிழர் பிரதிநிதித்துவம் இழக்கப்பட்டிருந்தாலும் கூத்தாடிகளுக்கு ஒரு எதிர்க்கடையை போட நாங்கள் தயாராகிக்கொண்டு வருகிறோம் என்ற தெளிவான செய்தி மக்களிடமிருந்து சொல்லப்பட்டிருக்கிறது, சும்மா வெளிநாட்டு சக்திகள் ,புலம் பெயர் தமிழர்கள் என்று அழுது வடிக்காமல் இங்கு வாக்களிக்கும் மக்களின் பல்ஸை பிடித்து பாருங்கள்
இதுவே அவர்கள் சொல்லியிருக்கும் செய்தி 

 

தாயக மக்கள் அன்று தொடக்கம் இன்று வரை தெளிவாகத்தான் இருக்கின்றனர்...

  • கருத்துக்கள உறவுகள்

இந்த தேர்தல் முடிவுகளுடன் தமிழருக்கான அரசியல் தீர்வுகள் எந்த காலமும் சாத்தியமில்லை என்பது உறுதியாகிவிட்டது.

அரசியல் தீர்வை தரவும் சிங்கள தலைமை யாரும் இல்லை,

அரசியல் தீர்வை பெறவும் தமிழர்களிடம் தலைமை ஏதும் இல்லை.

தாயக தமிழர்கள்  கல்வி பொருளாதாரம் வேலை வாய்ப்பு என்று அடிப்படை தேவைகளை மட்டும் கவனித்துக்கொண்டு பேசாமல் சிங்களவனை பகைக்காமல் அவர்களுடன் இணக்கமாய் வாழ்வதே உசிதம்.

தமது இருப்புக்காக தமிழர்களை உசுப்பேத்திவிட்டுக்கொண்டு தாம் சிங்களவருடன் ஒட்டியுறவாடிக்கொண்டிருக்கும் தமிழ்கட்சிகளை இனியும் நம்பினால் வாழ்க்கை அவ்வளவுதான்.

தமிழர்தரப்பினால் பாராளுமன்றம் சென்றவர்கள் சிங்களவர்களுடன் கொழும்பில் ஒற்றுமையாய் வாழும்போது.

வாக்களித்த தமிழ்மக்கள்  மட்டும் எதுக்கு சிங்களவர்களுடன் பகையை வளர்த்து வடக்கு கிழக்கில் வாழவேண்டும்?

இனிமேல் இலங்கை சிங்களவனின் நாடு, அதற்கும் நமக்கும் சம்பந்தமில்லை  என்று நினைத்துக்கொண்டு தாயக தமிழர்கள் வாழ்ந்தால் சிங்களவனிடமிருந்து தப்பித்து கொள்கிறோமோ இல்லையோ தமிழ் அரசியல்வாதிகளின் கோமாளிதனங்களிருந்து  தப்பித்துக்கொண்டு நிம்மதியாய் வாழலாம்.

 

  • கருத்துக்கள உறவுகள்


 உத்தியோகபூர்வமற்ற தகவல் 
கருணா  கட்சி மாறி மொட்டில் தேசியப்பட்டியல் மூலம் உள்ளே வர கொழும்பில்  பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதாக பிந்திக்கிடைத்த தகவல் தெரிவிக்கிறது .பார்க்கலாம் உண்மையா என்று 

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, அக்னியஷ்த்ரா said:


 உத்தியோகபூர்வமற்ற தகவல் 
கருணா  கட்சி மாறி மொட்டில் தேசியப்பட்டியல் மூலம் உள்ளே வர கொழும்பில்  பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதாக பிந்திக்கிடைத்த தகவல் தெரிவிக்கிறது .பார்க்கலாம் உண்மையா என்று 

மகிந்த மாத்தயா விசுவாசத்திற்காக எப்படியும் தம்பி கோத்தபாயவுடன் பரிந்துபேசி அம்மான் அம்பாறை தமிழர்களின் பிரதிநிதியாக பாரளுமன்றில் இருக்க உதவுவார்😁

அப்படியே சம்சும், அம்பிகா அம்மையாரை அவுஸுக்கு ஓடாமல் பார்த்து போனஸ் ஆசனத்தைக் கொடுத்தால் எல்லாம் சிறப்பாக இருக்கும்.

நாங்கள் “மீண்டும் கோமாளிகள்” நாடகத்தை அடுத்த ஐந்து வருடங்களுக்குப் பார்க்கலாம்!!

அடுத்த பொதுத் தேர்தலில் திருமலையில் ஒரு தமிழர்கூட தேர்தலில் வெல்லமுடியாதவாறு புதிய யாப்பு பார்த்துக்கொள்ளும். அம்பாறையில் இது ஏற்கனவே நடைமுறைக்கு வந்தாயிற்றுத்தானே!

 

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, அக்னியஷ்த்ரா said:


 உத்தியோகபூர்வமற்ற தகவல் 
கருணா  கட்சி மாறி மொட்டில் தேசியப்பட்டியல் மூலம் உள்ளே வர கொழும்பில்  பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதாக பிந்திக்கிடைத்த தகவல் தெரிவிக்கிறது .பார்க்கலாம் உண்மையா என்று 

தேசியப்பட்டிலில் மகிந்தா கூப்பிட்டார் ஆனால் நான் மக்களின் ஆணையுடன் தான் வருவேன் என்றார். இப்போது பின் கதவால்.....

மக்கள் தெளிவாகவே இருக்கின்றனர்.

1 minute ago, கிருபன் said:

மகிந்த மாத்தயா விசுவாசத்திற்காக எப்படியும் தம்பி கோத்தபாயவுடன் பரிந்துபேசி அம்மான் அம்பாறை தமிழர்களின் பிரதிநிதியாக பாரளுமன்றில் இருக்க உதவுவார்😁

அப்படியே சம்சும், அம்பிகா அம்மையாரை அவுஸுக்கு ஓடாமல் பார்த்து போனஸ் ஆசனத்தைக் கொடுத்தால் எல்லாம் சிறப்பாக இருக்கும்.

நாங்கள் “மீண்டும் கோமாளிகள்” நாடகத்தை அடுத்த ஐந்து வருடங்களுக்குப் பார்க்கலாம்!!

அடுத்த பொதுத் தேர்தலில் திருமலையில் ஒரு தமிழர்கூட தேர்தலில் வெல்லமுடியாதவாறு புதிய யாப்பு பார்த்துக்கொள்ளும். அம்பாறையில் இது ஏற்கனவே நடைமுறைக்கு வந்தாயிற்றுத்தானே!

 

கூட்டமைப்பின் தேசியப்பட்டியல் மாவைக்கு என்ற செய்தி உலவுகிறது

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, MEERA said:

தேசியப்பட்டிலில் மகிந்தா கூப்பிட்டார் ஆனால் நான் மக்களின் ஆணையுடன் தான் வருவேன் என்றார். இப்போது பின் கதவால்.....

மக்கள் தெளிவாகவே இருக்கின்றனர்.

தற்போதும் பின்கதவால் வருபவர்கள் தான் தமிழர்களின் தலைவிதியை தீர்மானிக்கிறார்கள் என்பதை மறந்துவிட்டீர்களா மீரா அண்ணை 
மக்களின் ஆணை கிடைத்தவர்களையே பின் கதவு காலி செய்யும் 
பின் கதவின் பவர் அப்பிடி 

5 hours ago, ஈழப்பிரியன் said:

நானும் அவரின் கணிப்பு தவறு என்று சொல்லியிருந்தேன்.
மன்னிக்கவும் குரூசோ.

அதில் ஒரு தவறும் இல்லை. எல்லாம் கணிப்பீடு தானே. நான் சிங்களவர்களுடன் கதைக்கும்போது அறிந்து கொண்டதில் இருந்துதான் அப்படி எழுதினேன். நன்றி.

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, நிழலி said:

நான் எழுதியதை மீண்டும் வாசியுங்கள். நான் எங்கு கருணாவால் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பிரதினித்துவம் இழக்கப்பட்டு இருக்கு என்று எழுதியிருக்கின்றேன்? நான் எழுதியது கருணாவால் தமிழர் பிரதினித்துவம் இழக்கப்பட்டு இருக்கு என்று தான் எழுதியிருக்கின்றேன். இரண்டுக்கும் இடையில் வேறுபாடு இருப்பது புரியவில்லையா?
மகிந்த அணி கருணாவை அம்பாறையில் களமிறக்கியதே தமிழர் வாக்குகளை பிரித்து தமிழர் பிரதிநிதித்துவத்தை இல்லாமல் ஆக்குவதற்காக (என அன்றும் எழுதியிருந்தேன்). அது தான் இன்று நிறைவேறி இருக்கின்றது.

முஸ்லிம்களிடம் இருந்து கருணா காப்பாற்றி அருள் புரிவார் என்று நம்பி ஈற்றில் தமிழ் மக்கள் மீது மிகவும் துவேசம் கொண்ட அத்தாவுல்லா அணி சார்பாக ஒருவரை வெல்ல வைத்தது தான் அவருக்கு வாக்களித்தவர்களுக்கும் ஆதரவு கொடுத்தவர்களுக்கும் கிடைத்த பயன்.

இனியும் இதற்கு பின்னரும் கூட கருணாவால் தமிழ் மக்களுக்கு நன்மை கிடைக்கும் என நம்புவது உங்கள் உரிமை. ஆனால் அதற்காக நான் எழுதாத ஒன்றை எழுதியதாக நினைப்பது தவறு.

நிழலி, இதுவரை அம்பாறையில் கூட்டமைப்பு தான் இருந்தது ....ஏதாவது செய்தார்களா? ...இல்லை...அதனால் தான் அம்பாறையில் நின்ற முதல் தடவையே அவருக்கு 30031 வோட்டுக்கள் கிடைத்தன ...கருணா இந்த தேர்தலில் நின்றுயிருக்கா விட்டாலும் கூட்டமைப்பு வென்று இருக்காது...அங்குள்ள தமிழர்கள் சிங்களவர்களுக்கு கணிசமான அளவு வோட் போட்டு இருக்கினம் ...இவர் நின்று இருக்கா விட்டால் அந்த வோட்டுக்கள் சிங்கள ,முஸ்லீம் கட்சிகளுக்கு போகுமேயொழிய கூட்டமைப்புக்கு இல்லை என்ற யதார்த்தத்தை புரிந்து கொள்ளுங்கள்.


 

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, அக்னியஷ்த்ரா said:

தற்போதும் பின்கதவால் வருபவர்கள் தான் தமிழர்களின் தலைவிதியை தீர்மானிக்கிறார்கள் என்பதை மறந்துவிட்டீர்களா மீரா அண்ணை 
மக்களின் ஆணை கிடைத்தவர்களையே பின் கதவு காலி செய்யும் 
பின் கதவின் பவர் அப்பிடி 

உண்மை நேற்றிரவு யாழில் நடந்ததே....!

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, nilmini said:

Dr. முரளி வல்லிபுரநாதன் எழுதியது 2020 பாராளுமன்ற தேர்தல்:  பிரபாகரன் பிறந்த மண்ணில் தமிழ்த் தேசியம் தோற்றது. 
2020 பாராளுமன்ற தேர்தல் தொடர்பான கட்சி அரசியலுக்கு அப்பாற்பட்ட ஒரு ஆரம்ப குடித்தொகை சார்ந்த ஆய்வு கட்டுரையாக இதை வரைகிறேன்.  தமிழ் பகுதிகளை பொறுத்தவரையில் இதுவரை வெளிப்படுத்தப்பட்ட முடிவுகள் தமிழ் தேசியக் கூட்டமைப்பை பொறுத்தவரையில் அனைத்து மாவட்டங்களிலும் பாரிய பின்னடைவை காட்டுகிறது. இதில் மிகவும்  மோசமான எதிர்பாராத பின்னடைவாக பிரபாகரன் மற்றும் பல போராளிகளை உருவாக்கிய வல்வெட்டித்துறை மண்ணைக் கொண்ட உடுப்பிட்டித் தொகுதியில் ஏற்பட்ட பின்னடைவை குறிப்பிடலாம். முதல் தடவையாக சிங்கள பேரினவாதக் கட்சி ஓன்று உடுப்பிட்டியில் முதலிடத்தை பிடித்துள்ளதுடன் பாராளுமன்ற சரித்திரத்தில் பல தசாப்தங்களாக  தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கோட்டையாக இருந்த உடுப்பிட்டியில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு 3ம் நிலைக்கு பின்தள்ளப்பட்டுள்ளது. (படம் இணைக்கப்பட்டுள்ளது : நன்றி : டெய்லி மிரர் ). இந்த மற்றம் எவ்வாறு ஏற்பட்டது என்பதையும்   இதை அடைவதற்கு எவ்வாறான உபாயங்கள் பயன்படுத்தப்பட்டன என்பதை ஆராய்வதும்தமிழர்களின் எதிர்காலம் இலங்கையில் எவ்வாறு இருக்கப்  போகிறது என்பதை எதிர்வு கூறுவதற்கு வழிவகுக்கும். எழுந்தமானமாக பார்க்கும் போது தமிழர் போராட்ட வரலாறு பற்றி சரியாக அறியாத தமிழ் தேசியத்தில் பற்றுறுதி அற்ற புதிய இளம் வாக்காளர்கள் வாக்காளர் பட்டியலில் உள்வாங்கப்படும் போது தமிழ் தேசியத்தின் பின்னடைவு தவிர்க்க முடியாது என்று கருதினாலும் இந்த தோல்வியின் பின்னால் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சூழ்ச்சிகளை அவதானிக்கக் கூடியதாக உள்ளது. முதலாவதாக தமிழர் பகுதியில் உள்ள மகிந்த எதிர்ப்பு உணர்வை மறைப்பதற்கு மொட்டு சின்னம் தவிர்க்கப்பட்டு கை சின்னம் பயன்படுத்தப்பட்டது. இரண்டாவதாக தமிழினத்தின் அடிப்படை பலவீனமான சாதித்துவம் திட்டமிட்ட முறையில் பயன்படுத்தப்பட்டது. கிராமம் கிராமமாக தாழ்த்தப்பட்ட சமூகத்தை சார்ந்தவர்கள் அணுகப்பட்டு அவர்களுடைய வாக்குகளை இலக்கு வைத்து பல்வேறு உதவிகள் வழங்கப்பட்டன. தேர்தலுக்கு பின்னர் அடுத்தகட்ட தமிழர் பகுதியில் திட்டமிட்ட  சிங்கள குடியேற்றத்துக்கு இந்த நபர்களே துணை போகப்போகிறார்கள் என்பதை அறியாத அப்பாவி இளைஞர்களும் ஒதுக்கப்பட்ட மக்களும் தங்களுக்கு கிடைத்த உதவிகளுக்கு கைமாறாக வாக்குகளை வாரி வழங்கினார்கள். இதை விட தமிழ்ப் பகுதியில் பல சுயேச்சைக்  குழுக்கள் தமிழர் வாக்குகளை சிதறடிப்பதற்காக திட்டமிட்ட முறையில்  களம் இறக்கப்பட்டிருந்தனர். கிழக்கை பொறுத்தவரையில் தமிழர் வாக்குகளை சிதைப்பதற்காக முஸ்லீம் எதிர்ப்புணர்வை பயன்படுத்தும் குழுக்கள் திட்டமிட்ட முறையில் இறக்கி விடப்பட்டதானால் சூழ்ச்சியாளர்கள் எதிர்பார்த்ததை போல தமிழர் பிரதிநிதித்துவம் மட்டக்களப்பில் 4 இல் இருந்து 3 ஆகவும் அம்பாறையில் 0 ஆகவும் குறையும் இழிநிலை ஏற்ப்பட்டது.  ஒட்டுமொத்தமாக பார்க்கும்போது பாராளுமன்றத்தில் தமிழர் பிரதிநிதிகள்  சிறிய சிறிய எண்ணிக்கையை கொண்ட பல குழுக்களாக பிரிந்துள்ளதுடன் தெரிவு செய்யப்பட்டவர்களில் பலர் தெரிவு செய்யப்பட்டாலும் பாராளுமன்றத்துக்கு ஒழுங்காக செல்லாதவர்களாகவும் பாராளுமன்ற அனுபவம்,  சட்டப் புலமை ஆங்கில அறிவு இல்லாதவர்களாகவும் எழும்பி நின்று ஒரு உரையை திறம்பட  அற்ற முடியாதவர்களாகவும் இருக்கிறார்கள். இந்த தேர்தலில்  தமிழருக்கு ஏற்பட்ட இந்த இழிநிலைக்கு உள்நாட்டு சக்திகள் மாத்திரமல்லாது வெளிநாட்டிலுள்ள பல சக்திகளும் காரணமாவார்கள். உதாரணமாக நாடு கடந்த அரசாங்கம் மற்றும் வெளிநாட்டிலுள்ள "தமிழ் தேசியம்"பேசும் குழுக்கள் வெளிப்படையாகவே தமிழ் தேசியக்  கூட்டமைப்பை நிராகரித்தும் முன்னாள் முதலமைச்சர் விக்னேஸ்வரனை ஆதரித்தும் வெளிப்படையாகவே பிரச்சாரம் செய்திருந்தார்கள். 
இதே வேளை தென்பகுதியில் அறிவிக்கப்பட்ட தொகுதிகளில் ஏற்கெனவே 128 ஆசனங்கள் உறுதி செய்யப்பட்ட நிலையில் உருவாகும் அரசாங்கத்துக்கு 2/3 பெரும்பான்மையான 150 ஆசனங்களை பெற்றுக் கொள்வது ஒரு பெரிய விடயமாக இருக்கப்போவதில்லை. அப்படி சில ஆசனங்கள் குறைந்தாலும் தமிழர் பிரதிநிதிகளில் ஒரு பகுதியினர் ஆதரவு அளிப்பதற்கும் இணைந்து செயல்படவும்  தயாராகவே  இருக்கிறார்கள். இதன் மூலமாக செய்யப்பட்ட சூழ்ச்சிகளின் அடிப்படை நோக்கமாகிய 2/3 பெரும்பான்மையை பெறுவது உறுதி ஆகியுள்ளதுடன் அடுத்த 5 வருடங்களில் சிங்கள பவுத்தத்தின் அதிகாரத்தை அதிகரிக்கும் வகையில்  பல சட்டவாக்கங்களும் அரசியலமைப்பு மாற்றங்களும் ஏற்படப் போகிறது. துரதிஷ்ட வசமாக தமிழர் தரப்பில் இந்த மாற்றங்களை விளங்கி குரல் கொடுக்கக் கூடிய ஆளுமையுள்ள தலைவர்கள் அருகியுள்ளனர். ஏற்கெனவே திட்டமிட்டுள்ளபடி சிங்கள குடியேற்றங்களை தமிழ்ப் பகுதிகளில் வேகமாக மேற்கொள்ள எந்த தடையும் இருக்கப் போவதில்லை என்பதுடன் ஏற்கெனவே  கிழக்கில் ஆரம்பித்துள்ள பண்டைய  தமிழர் ஆட்சி அடையாளங்களையும் புராதன சைவ ஆலயங்களையும் அழிக்கும் செயல்களும் இனி முழுமூச்சுடன் நாடெங்கும் இடம் பெறும். முடிவாக அடுத்த 5 வருடங்கள் ஈழ தமிழர் வரலாறில் களப்பிரர் யுகம் போல ஒரு இருண்ட காலமாக இருக்கப் போகிறது. குறைந்த பட்சம் இஸ்லாமிய சமூகம் எவ்வாறு ஒற்றுமையாக ஒன்றுபட்டு வாக்களித்து தமது அடையாளத்தை பேணி மீண்டும் எழுந்து நிற்கிறார்கள் என்பதை அவதானித்து செயற்படாவிட்டால் தமிழினம் இலங்கையில் இன்னும் பல பின்னடைவுகளை சந்திப்பது தவிர்க்க முடியாதது ஆகிவிடும். நன்றி

spacer.png

 

டொக்டர் முரளி அவர்கள் பொறுப்பான பதவியில் இருந்து கொண்டு பொறுப்பாக எழுதுவது அவருக்கு நல்லது...கண்ட பாட்டுக்கு எழுதுவது வேலை போனவுடன் சும்மின் காலில் விழுகிறது ....அந்த விசுவாசம் இருக்க தான் வேண்டும்...கூட்டமைப்பு எங்கே பிழை விட்டது என்று ஆராயாமல் அப்பனையும் ,சுப்பனையும் குற்றம் சாட்டிக் கொண்டு இருப்பது சரியில்லை .
இது வரை நன்கு படித்த ஆங்கில ,சிங்கள  அறிவும் ,சட்டத் திறமையும் கொண்ட தமிழர்கள் பாராளுமன்றம் போய் என்ன சாதித்தார்கள் சுமத்திரன் உட்பட 
சிங்கள ,முஸ்லீம் எம்பிக்கள் எல்லாம் சட்டம் படித்து தான் பார்லிமென்ட் போய் மக்களுக்காய் வேலை செய்கிறார்களா?
மக்களுக்காய் கதைப்பதற்கு கொஞ்ச்மேனும் நல்ல மனம் இருந்தால் போதும் ... டக்ளஸை பாருங்கள் கொஞ்ச்மேனும் அந்த மக்களுக்கு ஏதோ செய்வதால் தான் தொடர்ந்து எத்தனை வருடங்களாய் வென்று கொண்டு இருக்கார்.
இன்னும் உரிமையை தக்க வைத்து கொள்ள முடியவில்லை அதற்குள் இருப்பு ,மண்ணாங்கட்டி என்று கொண்டு போய் பேசாமல் வேலையைப் பாருங்கள் 
 

  • கருத்துக்கள உறவுகள்

தாயகத் தமிழ் மக்களைப் பொறுத்தவரை..

வீட்டைக் குடிசையாக்கி.. சைக்கிளை ஓடவிட்டு.. மீனை ஆத்தில விட்டு.. வீணையை மீட்டி.. கட்டுமரத்தை மிதக்க விட்டிருக்கிறார்கள். 

மக்களின் முன் பிரிந்து நின்ற நிலையில்.. மக்களும் பிரிந்து நின்று தம் விருப்புக்களை வெளிப்படுத்தி இருக்கிறார்கள்.. அவ்வளவே.

ஆனாலும் சிலர் தமது சிங்களச் செல்வாக்கால் குறுக்கு வழியில் வென்றுள்ளனர். அது ஜனநாயகமே அல்ல. ஆனால் அவர்களுக்கு அது சனநாய் அகமாகும். 

  • கருத்துக்கள உறவுகள்

குட்ட குட்ட குனிபவன் மடையன்.

குனிய குனிய குட்டுபவன் மகா மடையன்.

  • கருத்துக்கள உறவுகள்

இந்த தேர்தல் முடிவுகள் கூட்டமைப்பை விட இந்தியாவுக்குத்தான் அதிக கலக்கத்தை கொடுத்திருக்கும்.

திருடனுக்கு தேள் கொட்டினமாதிரி இருக்கும் சொல்லவும் முடியாமல் மெல்லவும் முடியாமல். பார்க்கவே நல்லா இருக்கு.

அதுக்குள்ளே முதல் ஆளாக வாழ்த்துவேற.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.