Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிங்கள வரலாற்றினுள் புகுந்து குடையும் விக்கியர்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சிங்கள வரலாற்றினுள் புகுந்து குடையும் விக்கியர்

இன்று பாராளுமன்றில், பேசிய யாழ் மாவட்ட எம்பி விக்கினேஸ்வரன், திருகோணமலை திரியாய பகுதியில், மக்களின் விவசாய நிலத்தினுள் செல்ல விடாமல் ஒரு பிக்கு ஒருவர் தடுத்துள்ளமை, மிகவும் கவலைக்குரியது. 40% மக்கள் விவசாயத்தினை வாழ்வாதாரமாக கொண்டுள்ள ஒரு நாட்டில், தீடீரென எந்த வித அரச முன்னெடுப்புகளும் இல்லாமல், ஒருவர் விவசாயிகளை தடுப்பதை அனுமதிக்க முடியாது, இதனை பிரதமர் தலையிட்டு தீர்வு காணவேண்டும் என்று தெரிவித்தார்.

மேலும், இந்த வரலாற்று சம்பந்தமான இடங்களை தெரிவு செய்யும் வேலைகளை தனிமனிதர்களிடம் கையளிக்காமல், தமிழ், இஸ்லாமிய, சிங்கள மற்றும் தென்னாசிய வரலாறு தெரிந்த வெளிநாடு ஆய்வலர்களை உள்ளடக்கிய ஒரு குழு ஒன்றினை அமைக்க வேண்டும்.

தீவில் உள்ள பௌத்த சின்னங்கள், தமிழ் பவுத்தர்களுடையதா, சிங்கள பவுத்தர்களுடையதா என்பது தொடர்பில் ஆய்வுகள் மேற்க்கொள்ளப்படவேண்டும். சிங்கள மொழியின் வரலாறுக்கும், பௌத்தத்தின் வரலாறுக்கும் பாரிய இடைவெளி உள்ளதால், தமிழ் பௌத்தத்தினை வெறுமனே, சிங்கள பௌத்தமாக கூறி நடவடிக்கை எடுப்பது சரியானது அல்ல.

சிங்கள மொழி தோன்றிய காலப்பகுதியும், தீவுக்கு பௌத்தம் வந்த காலப்பகுதியும் ஒன்றாக இல்லாததால், இது குறித்து ஆய்வுகள் செய்யப்படவேண்டும். சிங்களமொழியின் ஆரம்பம் குறித்து ஆய்வுகள் செய்யப்பட்டு அதுகுறித்து தெளிவுகள் தரப்படவேண்டும். 

குறித்த இடத்தில், பண்டைய பொருட்கள் இருந்தால், அவை தமிழ் பௌத்தத்துக்கு உரியதாக இருந்தால், அதனை தமிழர்கள் தான் முன்னெடுக்கவேண்டும் அன்றி வேறு யாரும் அல்ல என்பதைனை இங்கே குறிப்பிட விரும்புகிறேன்.

வழமைபோல, அசந்து போன சிங்களவர்கள், கிளம்பி விட்டார்கள்.... 'அப்போதே சொன்னேன் பார்த்தாயா, இவர் இனவாதி, இவருக்கு வேண்டும் தமிழ் ஈழம்'.... தொடங்கி விட்டார்கள்.

மெதுவாக, ஆனால் உறுதியாக ஐயா வைக்கும் ஆப்பு, சிலரை சங்கடப்படுத்தவே செய்கிறது.

அவர் சொல்ல வருவது, கிறிஸ்துவுக்கு முன் மகிந்தவும், சங்கமித்தையும் ஊடாக பௌத்தம் வந்தது தமிழர்களிடம். கிறிஸ்துவுக்கு பின் 6ம் நூறாண்டில் சிங்கள மொழி உருவானது. ஆகவே வரலாறில் தெளிவு வேண்டும் என்கிறார். மேலும் சிங்கள மக்கள், மகாவம்சத்தினை நம்பாமல், தமது வரலாறு குறித்து ஆய்வு செய்து சரியான தகவல்களை எடுத்துக் கொள்ளவேண்டும், என்பதனை.

 

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்

ஒருத்தருக்காவது தில்லு முதுகெலும்பு இருக்குது என்று சந்தோஷப்படுவோம்

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, ragaa said:

ஒருத்தருக்காவது தில்லு முதுகெலும்பு இருக்குது என்று சந்தோஷப்படுவோம்

அதுதான் விக்கி ஐயா, பார்ப்போம் பொறுத்திருந்து, இந்த கயிறு இழுந்தல் போட்டியை,

இனியொரு கலவரம் வராமலிருக்கனும்

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, உடையார் said:

அதுதான் விக்கி ஐயா, பார்ப்போம் பொறுத்திருந்து, இந்த கயிறு இழுந்தல் போட்டியை,

இனியொரு கலவரம் வராமலிருக்கனும்

நியாயமான பயம். 🤔

  • கருத்துக்கள உறவுகள்

2013 இல் இவர் வரவை ஆதரித்து எழுதிய போது விக்கியிடம் நான் எதிர்பார்த்தது

1. ஊழல் இன்மை ✔️

2. உண்மையை துணிந்து பேசல்✔️

3. தமிழ் தேசியத்தின் மீது பற்று✔️

4. 2009 போரின் பின்னான கையறு நிலையில் நின்ற எமது மக்களுக்கு ஒன்றுபட்ட இலங்கைக்குள், ஒரு கெளரவமான தீர்வை எடுக்கும் நயம் அல்லது இராசதந்திரம்

4ம் விடயமும் அவரிடம் இருக்கிறது என்பதை அவர் காட்ட இன்னும் கால அவகாசம் உண்டு.

ஈகோவை விட்டு சகல தமிழ் தேசிய சக்திகளையும் ஒரு அணியில் திரட்டி 13 ஐ தக்கவைக்க விக்கி முயற்சிக்க வேண்டும். 

செய்வாரா?

 

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, உடையார் said:

இனியொரு கலவரம் வராமலிருக்கனும்

கடந்த கால வரலாறு எமக்கு அந்தப் பயத்தை ஏற்படுத்தினாலும், சிங்களவன் இனியொரு இனக்கலவரத்தை ஏற்படுத்தி தன் தலையில்  தானே மண் அள்ளிக்கொட்ட மாட்டான். வேறுவழியில் செய்வான். விக்கினேஸ்வரன் ஐயாவைத் துலைக்கலாம், ரவிராஜுக்கு நடந்ததுபோல். அவருக்கும் தமிழ் மக்களுக்கும் இடையில் நம்பிக்கை இழப்பு செய்யலாம். அதற்காக வாயை மூடிக்கொண்டிருந்தால் நாம் அடிமைகளாக இருக்க வேண்டியதே.? பிறகு எதற்கு சர்தேசம் போக வேண்டும்? அறிக்கைகள் விடவேண்டும்? போராட்டம் நடத்த வேண்டும்? மேடை போட்டு பேச வேண்டும்? தேர்தல் நடத்த வேண்டும்? உறுப்பினர்களை தெரிந்தெடுக்க வேண்டும்?  சும்மா இருக்கலாமே? அவர் முதலமைச்சராக இருந்த போது அவருக்கு குடைச்சல் கொடுத்து, குற்றச் சாட்டுகளை அடுக்கி அரசாங்கமும் அதன் முகவர்களும் அவரை வெளியில் அனுப்பிய காரணமும் அதே. அவர் வாய்மூடி ஞானியாக இருக்க மாட்டார் என்பதே.

 

6 hours ago, goshan_che said:

ஈகோவை விட்டு சகல தமிழ் தேசிய சக்திகளையும் ஒரு அணியில் திரட்டி 13 ஐ தக்கவைக்க விக்கி முயற்சிக்க வேண்டும்.

 

சுமந்திரன் ஒரு நேர் காணலில் கூறியிருந்தார் தமிழ்கட்சிகள் பல உள்ளன, விக்கினேஸ்வரன் தனித்து இயங்க முடியாது அவர்களுடன் இணைந்தே செயற்படவேண்டும். மனோ கணேசன் கூறியது விக்கினேஸ்வரன் ஐயா பாராளுமன்றத்தில்  தெரிவித்தது அவரது சொந்தக்கருத்து. ஆக இவர்கள் அவரது கருத்தை ஏற்றுக்கொள்ளவில்லை, அதனாலேயே அவரோடு சேர்ந்து குரல் கொடுக்க முன்வரவில்லை. இவர்களோடு விக்கி ஐயா சேர்ந்தால் அவரால் இயல்பாக பேச முடியாது, முன் போல் ஓரங்கட்ட வாய்ப்புள்ளது. தனித்தும் செயற்பட முடியாது, மீண்டும் அவரை  குற்றவாளியாக்கி அவர் குரலை அடக்கவே சந்தர்ப்பம் உண்டு.

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, satan said:

 

 

சுமந்திரன் ஒரு நேர் காணலில் கூறியிருந்தார் தமிழ்கட்சிகள் பல உள்ளன, விக்கினேஸ்வரன் தனித்து இயங்க முடியாது அவர்களுடன் இணைந்தே செயற்படவேண்டும். மனோ கணேசன் கூறியது விக்கினேஸ்வரன் ஐயா பாராளுமன்றத்தில்  தெரிவித்தது அவரது சொந்தக்கருத்து. ஆக இவர்கள் அவரது கருத்தை ஏற்றுக்கொள்ளவில்லை, அதனாலேயே அவரோடு சேர்ந்து குரல் கொடுக்க முன்வரவில்லை. இவர்களோடு விக்கி ஐயா சேர்ந்தால் அவரால் இயல்பாக பேச முடியாது, முன் போல் ஓரங்கட்ட வாய்ப்புள்ளது. தனித்தும் செயற்பட முடியாது, மீண்டும் அவரை  குற்றவாளியாக்கி அவர் குரலை அடக்கவே சந்தர்ப்பம் உண்டு.

நீங்கள் சொல்வது யதார்தமாகவே படுகிறது.

வரலாற்றை பற்றி சொல்வது அவரவர் பிரச்சனை. ஆனால் எல்லாரும் 13ஐ தக்கவைக்க வேண்டும் என்பதில் ஒரே கொள்கை நேர் கோட்டில் வருபவர்கள்தானே.

இந்த ஒரு விடயத்தை மட்டும் முன்னிறுத்தியாவது ஒரு குறைந்த பட்ச வேலைதிட்டத்தில் இணைந்து செயல்படவேண்டும். 

இது எனது ஆசை, நப்பாசை. வெகு விரைவில் ஆகக்கூடும் நிராசை.

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, satan said:

விக்கினேஸ்வரன் ஐயாவைத் துலைக்கலாம், ரவிராஜுக்கு நடந்ததுபோல். அவருக்கும் தமிழ் மக்களுக்கும் இடையில் நம்பிக்கை இழப்பு செய்யலாம். அதற்காக வாயை மூடிக்கொண்டிருந்தால் நாம் அடிமைகளாக இருக்க வேண்டியதே.? பிறகு எதற்கு சர்தேசம் போக வேண்டும்? அறிக்கைகள் விடவேண்டும்? போராட்டம் நடத்த வேண்டும்? மேடை போட்டு பேச வேண்டும்? தேர்தல் நடத்த வேண்டும்? உறுப்பினர்களை தெரிந்தெடுக்க வேண்டும்?  சும்மா இருக்கலாமே? அவர் முதலமைச்சராக இருந்த போது அவருக்கு குடைச்சல் கொடுத்து, குற்றச் சாட்டுகளை அடுக்கி அரசாங்கமும் அதன் முகவர்களும் அவரை வெளியில் அனுப்பிய காரணமும் அதே. அவர் வாய்மூடி ஞானியாக இருக்க மாட்டார் என்பதே.

தோழர்..

கூட்டணி கும்பல் சேர்த்தால் தனிபட்ட கருத்து/சொந்த கருத்து என்டு பஞ்சாயத்து பண்ணி பாதி நேரம் தாவு தீர்ந்துவிடும் ..👌

விக்கி ஐயா கூட்டணி என்டு கும்பல் சேர்க்காமல்  சொந்த கட்சியில் இரண்டாம் கட்ட , மூன்றாம் கட்ட தலைவர்களை , இளம் தலைமுறையினரை அவர்க்கு பின் கொள்கை பிடிப்புடன் வளர்த்தெடுக்க வேண்டும் .. செய்வாரா .. விடுவார்களா.? காலம் முடிவு செய்யும் ..👍

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, goshan_che said:

2013 இல் இவர் வரவை ஆதரித்து எழுதிய போது விக்கியிடம் நான் எதிர்பார்த்தது

1. ஊழல் இன்மை ✔️

2. உண்மையை துணிந்து பேசல்✔️

3. தமிழ் தேசியத்தின் மீது பற்று✔️

4. 2009 போரின் பின்னான கையறு நிலையில் நின்ற எமது மக்களுக்கு ஒன்றுபட்ட இலங்கைக்குள், ஒரு கெளரவமான தீர்வை எடுக்கும் நயம் அல்லது இராசதந்திரம்

4ம் விடயமும் அவரிடம் இருக்கிறது என்பதை அவர் காட்ட இன்னும் கால அவகாசம் உண்டு.

ஈகோவை விட்டு சகல தமிழ் தேசிய சக்திகளையும் ஒரு அணியில் திரட்டி 13 ஐ தக்கவைக்க விக்கி முயற்சிக்க வேண்டும். 

செய்வாரா?

கோசான் அண்ணை 
2ம் , 3ம் இருந்தால் 4 சரிவராது 
4 வது  இருந்தால் 2ம் ,3ம் செட் ஆகாது 
இரண்டும் எதிரெதிர் துருவங்கள், ரெண்டிற்கும் நடுவில் நிற்கப்போனால் ஐயா தனது தனித்தன்மையை இழக்கவேண்டிவரும் ,அத்துடன் செயல்படா நிலைக்கு போய் மக்களின் எதிர்ப்பையும் சந்தித்து காணாமல் போவார், கூத்தமைப்பிற்கு நடந்ததும் இதுவே   

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை வரலாற்றில் சிங்கள பவுத்தர்களின் சரித்திரத்தையே கேள்விக்குறியாக்கி விக்கி ஐயா புதிய களமுனையை திறந்திருக்கிறார். இனி வரும் காலங்களில் நிச்சயம் தமிழினம் அவருக்கு பின்னால் அணிதிரண்டு பேராதரவை வழங்குவர். திராணியற்ற பெரும் பெரும் ஜாம்பவான் தமிழ் அரசில்வாதிகளுடன் எதிரணியில் நிற்பதும் அவ்வளவு சுலபமான காரியமில்லை. ஐயாவின் கட்சியில் தனியாளாய் நாடாளுமன்றத்திற்கு தெரிவான பின்னரும் சளைகாமல் தனது கடமையை சரிவர செய்வதாகவே தெரிகிறது. வாழா வெட்டியாக நாடாளுமன்றம் சென்றுவரும் சம்சும் கோஷ்டிக்கு இவர் மிகபெரிய சவால். பொறுத்திருந்து பார்ப்போம்.

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, goshan_che said:

நீங்கள் சொல்வது யதார்தமாகவே படுகிறது.

வரலாற்றை பற்றி சொல்வது அவரவர் பிரச்சனை. ஆனால் எல்லாரும் 13ஐ தக்கவைக்க வேண்டும் என்பதில் ஒரே கொள்கை நேர் கோட்டில் வருபவர்கள்தானே.

இந்த ஒரு விடயத்தை மட்டும் முன்னிறுத்தியாவது ஒரு குறைந்த பட்ச வேலைதிட்டத்தில் இணைந்து செயல்படவேண்டும். 

இது எனது ஆசை, நப்பாசை. வெகு விரைவில் ஆகக்கூடும் நிராசை.

நீங்க சொல்லுறத ஏத்துக்கறத்துக்கு மனசு அடிச்சுக்குது எசமான்... ஆனா பளச புறட்டிப்பாத்தா மனசு ஏத்துக்க மாட்டேங்குதெ எசமா ஏத்துக்க மாட்டேங்குதே....🤔

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, அக்னியஷ்த்ரா said:

கோசான் அண்ணை 
2ம் , 3ம் இருந்தால் 4 சரிவராது 
4 வது  இருந்தால் 2ம் ,3ம் செட் ஆகாது 
இரண்டும் எதிரெதிர் துருவங்கள், ரெண்டிற்கும் நடுவில் நிற்கப்போனால் ஐயா தனது தனித்தன்மையை இழக்கவேண்டிவரும் ,அத்துடன் செயல்படா நிலைக்கு போய் மக்களின் எதிர்ப்பையும் சந்தித்து காணாமல் போவார், கூத்தமைப்பிற்கு நடந்ததும் இதுவே   

அக்னி,

நீங்கள் சொல்வது உண்மையே. 

2,3 ஐ 4 உடன் பலன்ஸ் பண்ணி போவதுதான் இலங்கை தமிழ் அரசியலில் மக்களை வெல்ல வைப்பதற்க்கான சூட்சுமம்.

ஆனால் இது ஒரு impossible எதிர்பார்ப்பா?

விக்கி மட்டும் அல்ல யாராலேயும் முடியாத விடயமா?

எனக்கும் பதில் தெரியவில்லை.

1 hour ago, Kapithan said:

நீங்க சொல்லுறத ஏத்துக்கறத்துக்கு மனசு அடிச்சுக்குது எசமான்... ஆனா பளச புறட்டிப்பாத்தா மனசு ஏத்துக்க மாட்டேங்குதெ எசமா ஏத்துக்க மாட்டேங்குதே....🤔

குத்துங்க எசமான், குத்துங்க.

இந்த தமிழங்களே இப்படித்தான் எசமான்😡.

  • கருத்துக்கள உறவுகள்

என்னைப் பொறுத்தவரை ஒவ்வொரு தமிழ்தேசிய கட்சிகளும் ஒவ்வொரு நிகழ்ச்சிநிரலுடன் இறங்கி அடிக்கவேணும்.

ஒருவர் வரலாறு சிங்களவர் யாரு என்று திசை திருப்ப

மற்றொருவர் சரவதேசம் போர்க்குற்றம் என்று முழங்க

மற்றொருவர் இந்தியா 13+ என்று முழங்க

மற்றவர் உள்நாட்டில் காணி விடுவிப்பு, மீள் குடியேற்றம், காணமல் போனார் என்று முழங்க

இன்னும் சிலர் அபிவிருத்தி ஊரக வளரச்சி என்று முழங்க

சமஷ்டி, தேசிய உரிமைகள் என்று முழங்க

பாடசாலைகள் மட்டத்திலும், 2000 இற்கு பிறகு பிறந்தவர்களை அரசியல் மயப்படுத்த என்று பல்வேறு களங்கள் ஒரே நேரத்தில் திறக்கப்படவேண்டும்.

ஒரே தலைப்பை சிங்கள பத்திரிகைகளில் பேசு பொருளாக வைத்திருக்க விடாது மாறி மாறி அரசியல் தாக்குதல்கள் நடக்கவேண்டும்.

ஆனால் இவ்வளவும் என் கனவு மட்டுமே.😢

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, முதல்வன் said:

என்னைப் பொறுத்தவரை ஒவ்வொரு தமிழ்தேசிய கட்சிகளும் ஒவ்வொரு நிகழ்ச்சிநிரலுடன் இறங்கி அடிக்கவேணும்.

ஒருவர் வரலாறு சிங்களவர் யாரு என்று திசை திருப்ப

மற்றொருவர் சரவதேசம் போர்க்குற்றம் என்று முழங்க

மற்றொருவர் இந்தியா 13+ என்று முழங்க

மற்றவர் உள்நாட்டில் காணி விடுவிப்பு, மீள் குடியேற்றம், காணமல் போனார் என்று முழங்க

இன்னும் சிலர் அபிவிருத்தி ஊரக வளரச்சி என்று முழங்க

சமஷ்டி, தேசிய உரிமைகள் என்று முழங்க

பாடசாலைகள் மட்டத்திலும், 2000 இற்கு பிறகு பிறந்தவர்களை அரசியல் மயப்படுத்த என்று பல்வேறு களங்கள் ஒரே நேரத்தில் திறக்கப்படவேண்டும்.

ஒரே தலைப்பை சிங்கள பத்திரிகைகளில் பேசு பொருளாக வைத்திருக்க விடாது மாறி மாறி அரசியல் தாக்குதல்கள் நடக்கவேண்டும்.

ஆனால் இவ்வளவும் என் கனவு மட்டுமே.😢

இதனால் தான் இவர்கள் எல்லா விடயங்களிலும் இணைய வேண்டியதில்லை என நான் நினைக்கிறேன். தற்போது இருக்கும் துரும்பான 13 இற்கு மட்டும் இணைந்து வாக்களிக்கலாம். மற்றபடி போர்க்குற்ற விசாரணைக்கு ஒருவர், வரலாற்றிற்கு ஒருவர், அபிவிருத்திக்கு ஒரு தரப்பு என சமாந்தரமாகச் செல்லட்டும். இந்த முறையில் ஒரு இழப்பும் இருக்காது தமிழர்களுக்கு! இந்த 13 விடயத்தில் பிள்ளையான் குழுவையும் எப்படியாவது இணைக்க முயற்சித்தால் இன்னும் சிறப்பு!

(வெள்ளிக் கிழமை எங்கள் இருவருக்கும் கனவு கூடிப் போய்ச்சுது!😁)

  • கருத்துக்கள உறவுகள்
51 minutes ago, முதல்வன் said:

என்னைப் பொறுத்தவரை ஒவ்வொரு தமிழ்தேசிய கட்சிகளும் ஒவ்வொரு நிகழ்ச்சிநிரலுடன் இறங்கி அடிக்கவேணும்.

ஒருவர் வரலாறு சிங்களவர் யாரு என்று திசை திருப்ப

மற்றொருவர் சரவதேசம் போர்க்குற்றம் என்று முழங்க

மற்றொருவர் இந்தியா 13+ என்று முழங்க

மற்றவர் உள்நாட்டில் காணி விடுவிப்பு, மீள் குடியேற்றம், காணமல் போனார் என்று முழங்க

இன்னும் சிலர் அபிவிருத்தி ஊரக வளரச்சி என்று முழங்க

சமஷ்டி, தேசிய உரிமைகள் என்று முழங்க

பாடசாலைகள் மட்டத்திலும், 2000 இற்கு பிறகு பிறந்தவர்களை அரசியல் மயப்படுத்த என்று பல்வேறு களங்கள் ஒரே நேரத்தில் திறக்கப்படவேண்டும்.

ஒரே தலைப்பை சிங்கள பத்திரிகைகளில் பேசு பொருளாக வைத்திருக்க விடாது மாறி மாறி அரசியல் தாக்குதல்கள் நடக்கவேண்டும்.

ஆனால் இவ்வளவும் என் கனவு மட்டுமே.😢

 

45 minutes ago, Justin said:

இதனால் தான் இவர்கள் எல்லா விடயங்களிலும் இணைய வேண்டியதில்லை என நான் நினைக்கிறேன். தற்போது இருக்கும் துரும்பான 13 இற்கு மட்டும் இணைந்து வாக்களிக்கலாம். மற்றபடி போர்க்குற்ற விசாரணைக்கு ஒருவர், வரலாற்றிற்கு ஒருவர், அபிவிருத்திக்கு ஒரு தரப்பு என சமாந்தரமாகச் செல்லட்டும். இந்த முறையில் ஒரு இழப்பும் இருக்காது தமிழர்களுக்கு! இந்த 13 விடயத்தில் பிள்ளையான் குழுவையும் எப்படியாவது இணைக்க முயற்சித்தால் இன்னும் சிறப்பு!

(வெள்ளிக் கிழமை எங்கள் இருவருக்கும் கனவு கூடிப் போய்ச்சுது!😁)

முதல்வன்,

இந்த கோணத்தில் நான் சிந்திக்கவில்லை ஆனால் நல்லாத்தான் இருக்கு.

கிட்டதட்ட 85-87 யாழ் குடாநாட்டை பல இயக்கங்கள் சேர்ந்து கட்டுப்பாட்டில் வைத்திருந்தமை போல.

ஜஸ்டின் சொல்வது போல் - தனி தனி specialism தை வைத்து கொண்டு - 13க்கான அழுத்தம் என்ற வகையில் அந்த ஒரு விடயத்தில் மட்டும் 3 கட்சியும் ஒன்றாய் பயணிக்கலாம்.

 அடுத்த கட்டமாக மனோ போன்றோரிடம் “வெளியில் இருந்து ஆதரவு” கோரலாம்.

அதற்கும் அடுத்த கட்டமாக பிள்ளயான் போன்றோரின் ஆதரவையும் கோரலாம். ஆனால் அவர் இணைவது உண்மையில் அவர் சுயமானவரா அல்லது அரசின் 100% பங்காளியா என்பதில் தங்கியுளது.

டக்லஸ், கருணா, அங்கயன், வியாழேந்திரன் இவர்களை இணைப்பது கடினம், இணையவும் மாட்டார்கள். ஆனால் அவர்கள் முடிந்தவை அபிவிருத்தியை செய்யலாம்.

#கனவு காணும் வாழ்கை யாவும்.....

Edited by goshan_che

  • கருத்துக்கள உறவுகள்

முதல்வன் சொன்ன "பல திசைகளில் வெடி கொழுத்திப் போட்டு காரியம் சாதிப்பது" என்பதை வாசித்த போது பிரெக்சிற் வெளியேற்றத்திற்கு உழைத்த டொமினிக் கம்மிங்ஸ் பற்றிய திரைப்படம் நினைவுக்கு வருகிறது! கம்மிங்ஸ் செய்தது அது தான், அங்கே ஒரு வெடி, ஊடகங்களும் எதிர் தரப்பும் அங்கே ஓடும், பிறகு இங்கே ஒரு கிரனைற் ஊடகங்களும் எதிர்தரப்பும் இங்கே ஓடி வரும்! 

A balding man in a blue jumper, his untidy shirt sticking out at the edges. He standings against a red background, with the word Brexit in large white letters.

டொனால்ட் ட்ரம்ப் தேர்தலில் வென்ற போது ஒரு ரஷ்ய பத்திரிகையாளர் பின்வருமாறு  எச்சரிந்திருந்தார்! "இவர் பல வெடிகளை மாறி மாறிப் போட்டு ஊடகங்களை மிக பிசியாக வைத்திருப்பார். திரைக்குப் பின் தனது கட்சியும் வாக்காளர்களும் எதிர்பார்த்த காரியங்களை சத்தமில்லாமல் முடித்து விடுவார். இந்த சத்தமில்லாத காரியங்களை நாம் கவனமாக அவதானித்து வெளிக்கொணர வேண்டும்". இதை பலர் கவனிக்கவில்லை. இரண்டு உயர்நீதிமன்ற நீதிபதிகள் தாரை தப்பட்டையோடு வந்தார்கள்! அவர்களுக்கு கீழ் இருக்கும் சமஷ்டி நீதிமன்றங்களில்  டசின் கணக்கில் இன்று ட்ரம்பின் பார்வை கொண்ட நீதிபதிகள் ஆரவாரமின்றி அமர்த்தப் பட்டிருக்கிறார்கள். ஒரு லிபரல் ஆதரவு தீர்ப்பைப் பெற வேண்டுமானால் கல்லில் நார் உரிக்க வேண்டும்! 

இது போலத் தான் தமிழர்கள் இனி நடந்து கொள்ள வேண்டும்! என்னைப் பொறுத்த வரை எங்கள் தாயக அரசியலில் diversity is a blessing!

 

12 hours ago, முதல்வன் said:

என்னைப் பொறுத்தவரை ஒவ்வொரு தமிழ்தேசிய கட்சிகளும் ஒவ்வொரு நிகழ்ச்சிநிரலுடன் இறங்கி அடிக்கவேணும்.

ஒருவர் வரலாறு சிங்களவர் யாரு என்று திசை திருப்ப

மற்றொருவர் சரவதேசம் போர்க்குற்றம் என்று முழங்க

மற்றொருவர் இந்தியா 13+ என்று முழங்க

மற்றவர் உள்நாட்டில் காணி விடுவிப்பு, மீள் குடியேற்றம், காணமல் போனார் என்று முழங்க

இன்னும் சிலர் அபிவிருத்தி ஊரக வளரச்சி என்று முழங்க

சமஷ்டி, தேசிய உரிமைகள் என்று முழங்க

பாடசாலைகள் மட்டத்திலும், 2000 இற்கு பிறகு பிறந்தவர்களை அரசியல் மயப்படுத்த என்று பல்வேறு களங்கள் ஒரே நேரத்தில் திறக்கப்படவேண்டும்.

ஒரே தலைப்பை சிங்கள பத்திரிகைகளில் பேசு பொருளாக வைத்திருக்க விடாது மாறி மாறி அரசியல் தாக்குதல்கள் நடக்கவேண்டும்.

ஆனால் இவ்வளவும் என் கனவு மட்டுமே.😢

 

ஒருங்கிணைந்து ஒடுக்குமுறைக்கு எதிராக போராட முடியாது என்ற முடிவின் பின்னரே இந்த கனவு காணநேரிடுகின்றது. ஆயுதப்போராட்டத்தின் ஆரம்பத்தில் பலதரப்பட்ட இயக்கங்களின் தேற்றப்பாட்டை இது நினைவுபடுத்துகின்றது. தனித்தனி கோரிக்கைகளை முன்வைத்து குழுக்களாக இயங்க தொடங்கிவிட்டால் குறிப்பிட்ட காலத்தில் சிங்கள அதிகாரத்தின் கட்டுப்பாட்டில் குழுக்கள் வந்துவிடும். தனித் தனியாக திரியும் போது பேரினவாத்தின் வேட்டைக்கு சுலபமாக இலக்காகும் நிலை ஏற்படும். குறிப்பிட்ட காலத்தின் பின்னர் ஒன்றிணைப்பது தமிழ்ச் சமூகத்தில் சாத்தியமற்றும் போகும். மேலும் பத்துக் குழுக்கள் பத்து கோரிக்கைகளை வைத்து முன்நகரும்போது அந்த பத்துக் குழுக்களுக்குள்ளும் முரண்பாடுகளை மூட்டிவிட்டு கோரிக்கைகளை பலவீனப்படுத்தவும் முடியும். 

ஒரு பொதுக் கருத்தில் உறுதியாக பத்துக் குழுக்கள் இருப்பது வேறுவிசயம். ஒரு பொது தலமையின் வழிநடத்தலின் கீழ் பத்துக் குழுக்கள் இயங்குவது வேறுவிசயம். ஆனால் பத்துக் குழக்கள் தன்னிச்சையாக இயங்குவது வேறு விசயம். ஒரு தேர்தலில் இந்த பத்து குழுக்களும் மூன்று சிங்களக் கட்சிகளுக்கு பின்னால் போவார்கள். மக்களின் வாக்கு பலம் சிதையும். 

தன்னிச்சையான குழுக்களை எதற்கு தலமை ஏற்கவேணும் என்பதை விரைவில் எதிர்த்தரப்பு தீர்மானித்து விடும். அதற்கு ஏற்ற சமூக முரண்பாடுகள் எம்மிடத்தில் உள்ளது. கருணா பிள்ளையான் கிழக்கு பிரதேசவாதத்திற்கு தலமை ஏற்பது போல. 

பொருளாதார ஆதாயம் சொத்துக் குவிப்பு நோக்கிலான அரசியல் ஈடுபாடு முன் எப்போதுமில்லாதளவுக்கு காணப்படுகின்றது என்பது கவனத்தில் எடுக்கவேண்டிய முக்கியமான விசயம். 

என் மனதில் பட்டவை மற்றபடி உங்கள் கனவை கலைக்க விரும்பவில்லை. 

 

 

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, சண்டமாருதன் said:

ஒருங்கிணைந்து ஒடுக்குமுறைக்கு எதிராக போராட முடியாது என்ற முடிவின் பின்னரே இந்த கனவு காணநேரிடுகின்றது. ஆயுதப்போராட்டத்தின் ஆரம்பத்தில் பலதரப்பட்ட இயக்கங்களின் தேற்றப்பாட்டை இது நினைவுபடுத்துகின்றது. தனித்தனி கோரிக்கைகளை முன்வைத்து குழுக்களாக இயங்க தொடங்கிவிட்டால் குறிப்பிட்ட காலத்தில் சிங்கள அதிகாரத்தின் கட்டுப்பாட்டில் குழுக்கள் வந்துவிடும். தனித் தனியாக திரியும் போது பேரினவாத்தின் வேட்டைக்கு சுலபமாக இலக்காகும் நிலை ஏற்படும். குறிப்பிட்ட காலத்தின் பின்னர் ஒன்றிணைப்பது தமிழ்ச் சமூகத்தில் சாத்தியமற்றும் போகும். மேலும் பத்துக் குழுக்கள் பத்து கோரிக்கைகளை வைத்து முன்நகரும்போது அந்த பத்துக் குழுக்களுக்குள்ளும் முரண்பாடுகளை மூட்டிவிட்டு கோரிக்கைகளை பலவீனப்படுத்தவும் முடியும். 

ஒரு பொதுக் கருத்தில் உறுதியாக பத்துக் குழுக்கள் இருப்பது வேறுவிசயம். ஒரு பொது தலமையின் வழிநடத்தலின் கீழ் பத்துக் குழுக்கள் இயங்குவது வேறுவிசயம். ஆனால் பத்துக் குழக்கள் தன்னிச்சையாக இயங்குவது வேறு விசயம். ஒரு தேர்தலில் இந்த பத்து குழுக்களும் மூன்று சிங்களக் கட்சிகளுக்கு பின்னால் போவார்கள். மக்களின் வாக்கு பலம் சிதையும். 

தன்னிச்சையான குழுக்களை எதற்கு தலமை ஏற்கவேணும் என்பதை விரைவில் எதிர்த்தரப்பு தீர்மானித்து விடும். அதற்கு ஏற்ற சமூக முரண்பாடுகள் எம்மிடத்தில் உள்ளது. கருணா பிள்ளையான் கிழக்கு பிரதேசவாதத்திற்கு தலமை ஏற்பது போல. 

பொருளாதார ஆதாயம் சொத்துக் குவிப்பு நோக்கிலான அரசியல் ஈடுபாடு முன் எப்போதுமில்லாதளவுக்கு காணப்படுகின்றது என்பது கவனத்தில் எடுக்கவேண்டிய முக்கியமான விசயம். 

என் மனதில் பட்டவை மற்றபடி உங்கள் கனவை கலைக்க விரும்பவில்லை. 

 

நீங்கள் சொல்லுவதிலும் உண்மை உண்டு. ஆனால் அவர்களை ஒன்றிணைப்பதிலேயே காலம் நகர்ந்துவிடும். 

கட்சிகளை ஒன்றிணைப்பதை விட மக்கள் இயக்கங்களை ஒன்றிணைத்து கட்சி சாரா தலைமைத்துவம் வேண்டும்.

அந்த மக்கள் இயக்கம் கட்சிகளை வழிநடாத்த வேண்டும்.

இவற்றுக்கு எல்லாம் முதலில் மக்களுக்கு அரசியல் தெளிவு ஊட்டப்படவேண்டும். இங்கே மீண்டும் மூத்தவர் சீமானை எடுகோளாக எடுப்பதற்கு மன்னிக்கவும். அவரின் தமிழ்தேசிய உரைகளை புலம்பெயர் நாட்டில் பின்பற்றும் அளவுக்கு தாயகத்தில் இல்லை.

இதுவும் இன்னும் பலவும் புலத்துக்கும் தாயகத்துக்கும் இடையிலான தமிழ்தேசியம் விடுதலை குறித்த அரசியலில் பாரிய வெளியை உருவாக்கி நகர்கிறது. 

இங்கிருப்பவர்களால் பணத்தை மட்டுமே அனுப்பி அந்த இடைவெளியை நிரப்பமுடியாது.

இது காலம் செல்ல செல்ல அதிகரிக்கும். அதைவிட புலத்திலேயெ ஒற்றுமை இல்லை. 

இப்போ புலிகளை முன்னிறுத்தாத ஆனால் புலிகளின் கொள்கைகளை முன்னிறுத்தி அரசியல் ஞானம் எமது தாயக இளையோருக்கு ஊட்டப்படவேண்டும். 

அவர்களுக்கு வன்முறைபோதிக்காத வகையில் திரட்டி மக்கள் இயக்கமாக்க வேண்டும். அதை வைத்து அரசியல் கட்சிகளை ஒன்றிணைக்கவேண்டும். 

அதுவரை ஒரு குறிப்பிட்ட புரிதலுடன் பல்வேறு நிகழ்ச்சி நிரலில் அரசுக்கு அழுத்தம் கொடுக்கவேண்டும்.

விக்கியர் தானாக வரலாற்றை கையில் எடுத்தால், மற்றவர்கள் படுத்து தூங்காமல், அதே கடையை பக்கத்தில் போடாமல் தங்களுக்கு உரித்த அடுத்த கடையை போடவேண்டும்.

இதில் வருமானமே இலக்கு என்றால் அது தமிழ்மக்களின் சாபக்கேடு. எங்கள் போராட்டத்தின் மீதும் மாவீரர்கள் மீதும் ஏறி மிதித்து செய்யும் அரசியலாகவே அமையும். 

இவற்றை நான் கனவில் எழுதவில்லை, விழித்து நிதானமாக எழுதுகிறேன்.

அதுமட்டுமல்ல இந்த விடயம் குறித்து ஆககுறைந்த்தது யாழ்களத்தில் ஆவது ஒரு ஆரோக்கியமான கருத்தாடல் அவசியம்.

 

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, முதல்வன் said:

இங்கே மீண்டும் மூத்தவர் சீமானை எடுகோளாக எடுப்பதற்கு மன்னிக்கவும். அவரின் தமிழ்தேசிய உரைகளை புலம்பெயர் நாட்டில் பின்பற்றும் அளவுக்கு தாயகத்தில் இல்லை.

சீமானுக்கு வெளிநாடுகளில் வாழும் ஈழத்தவர்களில் தீவிரமான தொண்டர்கள் இருக்கிறார்கள் என்பதை யாழ் இணையத்திலேயே பார்க்கின்றோம். தாயகத்தில் அப்படி இல்லை என்பது உண்மை தான் அதற்காக பெருமைபடுகிறேன்.😎

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.