Jump to content

`காதலர் நாள்` கொண்டாட்டம் தமிழர் மரபா? ::வி.இ.குகநாதன்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

`காதலர் நாள்` கொண்டாட்டம் தமிழர் மரபா? ::வி.இ.குகநாதன்

spacer.png

 

பெப்ரவரி 14 இல் உலகெங்கும் காதலர் நாள் கொண்டாடப்படுகின்றது. இந்த நாள் வந்தால் போதும், சிலர் தம்மைக் கலாச்சாரக் காவலர்கள் எனக் கூறிக் கொண்டு, அடாவடிகளில் இறங்கி விடுவார்கள். கேட்டால்: “காதலர் நாள் தமிழ்க் கலாச்சாரமன்று, ஆங்கிலேயக் கலாச்சாரம்” எனப் பொங்குவார்கள்; உண்மையில் அவர்களுக்குக் `கலாச்சாரம்` என்ற சொல்லே தமிழல்ல எனத் தெரியாத போது, தமிழ்ப் பண்பாடு எப்படித் தெரியப் போகுகின்றது. அவர்களை அணுகிப் பார்த்தால், அவர்களில் மிகப் பெருமளவானோர் சாதி வெறியர்களாக /மத வெறியார்களாக இருப்பதனைக் காணலாம். ஆண்டு முழுவதும் தமக்கிடையே சண்டை இட்டுக் கொள்ளும் இந்து-இசுலாமிய அடிப்படைவாதிகள் ஒரே புள்ளியில் ஒன்றுபடும் நாளும் இந்த நாளேயாகும். மதம்-சாதி என்பனவே தமிழர்களின் மரபல்ல (சான்று – கீழடி) எனும் போது; இந்த அடிப்படைவாதிகள் பொங்கி எழுவது தமது சாதி-மதங்களுக்காகவேயன்றி, தமிழுக்காகவல்ல என்பது தெளிவாகின்றது. இவர்களை ஒரு புறம் ஒதுக்கிவிட்டுத் தமிழர் பண்பாடு `காதலர் நாள்` கொண்டாடத்தினை ஏற்றுக் கொள்கின்றதா எனப் பார்ப்போம்.

பழங் காலத்தில் தமிழர்கள் காதலை மட்டுமல்ல காமத்தினையே கூடக் கொண்டாடினார்கள். `காமம்` என்ற சொல் இன்று போல அன்று மறைவான சொல்லன்று. ஐயன் வள்ளுவனே குறளில் குறிப்பிடும் மூன்றாவது பால் காமத்துப் பாலேயாகும் (அறம், பொருள், காமம்). பின்னரான காலப்பகுதியில் காமத்துப் பாலை `இன்பத்துப் பால்` என மாற்றி விட்டார்கள். உண்மையில் அது தவறு. காமம் வேறு, இன்பம் வேறு. இத் தவறு குறித்துப் பாவாணர் முதல் பல அறிஞர்கள் எழுதியுள்ளார்கள்.

ஊடுதல் காமத்திற்கு இன்பம் அதற்குஇன்பம்

கூடி முயங்கப் பெறின்” : (குறள் 1330)

{காமத்திற்கு இன்பம் தருவது ஊடுதல் ஆகும்; ஊடல் முடிந்தபின் கூடித் தழுவப்பெற்றால் அந்த ஊடலுக்கு இன்பமாகும்}

பார்த்தீர்களா! வள்ளுவனே காமம், இன்பம் ஆகிய இரண்டினையும் வேறுபடுத்திக் காட்டியுள்ளதனை. காமத்தினால் விளைவதே காதல். முனைவர் இரவி சங்கர் இந்த இரு சொற்களையும் பின்வருமாறு தொடர்புபடுத்துவார்.

# “`கா` = காத்தல் என்ற வேர்ச்சொல்லினை அடியாகக் கொண்டவையே காதல், காமம் ஆகிய இரு சொற்களும். 

கா-மம்= விழைவு காத்தல் : Desire to Love

கா-தல்= விழைந்ததை, வாழ்வில் கா(த்துக்) கொள்ளல்!: During the Love.

மேலும் காமம் என்பது முறை தவறும் போது, அது கழிநுகர்ச்சி (Lust ) எனப்படுமே தவிர காமமே கழிநுகர்ச்சியன்று.

காமம் என்பது காரணம் (Cause ), இன்பம் என்பது விழைவது (Effect ). “#

எனவேதான் பழந் தமிழர்கள் காதலை மட்டுமன்றிக் காமத்தினையும் கொண்டாடினார்கள்.

சங்க இலக்கியங்களில் காமன் விழா :-


spacer.png

பொதுவாக ஒரு காலத்தின் பண்பாடு, பழக்க வழக்கங்களைப் படம் பிடித்துக் காட்டும் கருவியாக இலக்கியங்கள் திகழுவதாகச் சொல்லுவார்கள். அந்த வகையில் சங்க இலக்கியங்கள் என்ன சொல்லுகின்றன எனப் பார்ப்போம். சங்க இலக்கியங்களில் `காமன் விழா` பெரிதும் சிறப்பித்துக் கூறப்படுகின்றது.குறுந்தொகைப் பாடலிலும் ஒரு செய்தி ` காமன் விழா` தொடர்பாகக் கூறப்படுகின்றது.

மள்ளர் குழீஇய விழவினானும்

மகளிர் தழீஇய துணங்கையானும்

யாண்டும் காணேன் மாண் தக்கோனை

யானும் ஓர் ஆடு_கள_மகளே என் கை

கோடு ஈர் இலங்கு வளை நெகிழ்த்த 5

பீடு கெழு குரிசிலும் ஓர் ஆடு_கள_மகனே

: குறுந்தொகை 31 : 1-6

மேலுள்ள பாடலில் `கரிகால் வளவன் மகள் ஆட்டனந்தி, ஆதிமந்தி என்னும் சேரனிடம் காதல் கொண்டாள்,அவர்கள் இருவரும் காவிரிப்பூம் பட்டினத்தில் காதல் திருவிழாவின் போது புனலாடிக் கொண்டிருந்தனர், அப்போது ஆதிமந்தியை காவிரி ஆற்றுநீர் அடித்துச் சென்றது, ஆட்டனந்தி காவிரி நதிக்கரை வழியே தேடிச் சென்றாள், அவள் தேடிச் சென்றபோது, காமனுக்கு வில்விழா நடந்து கொண்டிருந்தது` என்ற செய்தி சொல்லப்படுகின்றது.

கலித்தொகையும் காமன் விழா பற்றிப் பேசுகின்றது. ஆற்றங்கரையில் நடைபெறும் காமன்விழாவில் தலைவன் தன்னுடன் கலந்து கொள்ள வேண்டும் எனத் தலைவி பாடுவதாகப் பின்வரும் பாடல் அமைகின்றது.

கண் நிலா நீர் மல்க கவவி நாம் விடுத்த_கால்

ஒண்_நுதால் நமக்கு அவர் வருதும் என்று உரைத்ததை

மல்கிய துருத்தியுள் மகிழ் துணை புணர்ந்து அவர்

வில்லவன் விழவினுள் விளையாடும் பொழுது அன்றோ

:கலித்தொகை 35:11-14

{பொருள் – கண்ணுக்குள் நிற்காத அளவு நீர் பெருக, அவரைத் தழுவியபின் நாம் அவரைச் செல்ல விடுத்தபோது, ஒளிபடைத்த நெற்றியையுடையவளே! நம்மிடம் அவர் வருவதாகச் சொல்லிச் சென்றது; பெருகிய நீர்நடுவேயுள்ள ஆற்றுமேட்டில், தாம் மகிழும் துணையான எம்முடன் கூடிக்கலந்து, அவர் வில்லவனான காமன் திருவிழாவில் விளையாடும் காலம் அன்றோ?}

பரத்தையருடன் கூடக் காமன்விழா கொண்டாடப்பட்டுள்ளது.

உறல் யாம் ஒளி வாட உயர்ந்தவன் விழவினுள்

விறல் இழையவரோடு விளையாடுவான்-மன்னோ

: கலித்தொகை 30: 13-14

{ அவரை அடைவதற்குரிய நான் இங்கே அழகிழந்து வாட, காமன் விழாவில் சிறந்த அணிகலன் அணிந்த பரத்தையரோடு விளையாடி மகிழ்ந்திருப்பாரோ!}

பொருள் தேடுவதற்காகப் பிரிந்து சென்ற தலைவனை நோக்கி வருந்தி இளைத்துப் போயுள்ள தலைவியினை, இதோ தலைவன் காமன் விழா கொண்டாடத் தலைவன் வந்துவிட்டதாகத் தோழி ஆற்றும் பாடல் வருமாறு.

இன்னொரு கலித்தொகைப் பாடலையும் பார்ப்போம்.

நாம் இல்லா புலம்பு ஆயின் நடுக்கம் செய் பொழுது ஆயின்

காமவேள் விழவு ஆயின் கலங்குவள் பெரிது என

ஏமுறு கடும் திண் தேர் கடவி 25

நாம் அமர் காதலர் துணை தந்தார் விரைந்தே

: கலித்தொகை 29: 23-26

{ பொருள்-நாம் இல்லாத தனிமைத் துயருடன், தனிமையில் மனத்தை நடுங்கவைக்கும் இளவேனிற்காலத்தில், காமவேளுக்குரிய விழா நடக்கும்போது கலங்கிப்போவாளே பெரிதும் என்று பகைவர் மயக்கமுறும் வகையில் விரைவாக ஓடும் திண்ணிய தேரினை ஓட்டிக் கொண்டு நாம் விரும்பும் காதலர் நமக்குத் துணையாக இருக்க விரைந்து வருகின்றார்}.

பிற்காலத்தில் இந்தக் `காமன்` என்பவனே `மன்மதன் ` ஆக்கப்படுகின்றான். இதோ கீழுள்ள பரிபாடலைப் பாருங்கள்.

`எழுது எழில் அம்பலம் காமவேள் அம்பின்

தொழில் வீற்றிருந்த நகர்”: பரிபாடல் 18:28

என்று காமவேள் பற்றிப் பரிபாடல் எனும் சங்க இலக்கிய நூல் குறிக்கின்றது . இந்த காமன் தான் பிற்காலத்தில் `மன்மதன்` ஆக்கப்படுகின்றான். இதிலிருந்தே மன்மதன் கையில் வில், மற்றும் அவன் அம்பு விடுதல் போன்ற புராண உருவகப்படுத்தல்கள் பிற்காலத்தில் தோன்றியிருக்கலாம். இங்கு காமன் விழாவினை `வில்லவன் விழா` என அழைக்கப்பட்டமை எமது கருத்துக்குக் கூடிய வலுவூட்டும்.

காமன் விழாவில் கலந்து கொள்வதற்காகச் சென்ற இணையர் (காதல் சோடிகள்) தங்கியிருக்க அமைக்கப்பட்ட குடிலினை `மூதூர்ப் பொழில்` மற்றும் `இளவந்திகை` என்ற பெயர்களில் அழைக்கப்பட்டதாகச் சிலம்பு சொல்லுகின்றது . { இந்த நிகழ்வு காதலர்கள் காதலர் நாளை ஒட்டி விடுதிகளுக்குச் சென்று தங்கியிருப்பதனை ஏனோ நினைவுபடுத்துகின்றது.}

மேலே பார்த்த சங்க காலப் பாடல்களில் `காமன் விழா` கொண்டாடப்பட்டதனைத் தெளிவாகப் பார்த்தோம். எக் காலப் பகுதியில் இந்த விழா (காமன் விழா/ காமவேள் விழா) கொண்டாடப்பட்டது என இனிப் பார்ப்போம். பின்வரும் ஆண்டாள் பாடலினைப் பாருங்கள்.

காமன்போதரு காலமென் றுபங்

குனிநாள்கடை பாரித்தோம்,”

: நாச்சியார் திருமொழி (11).

{ எங்களுக்குத் துன்பம் நீங்குமே, காமன் வருகின்ற காலமென்று, பங்குனி நாள் அவன் வரும் வழியில் கடை விரித்தோம்}

மேலும், காமதேவனுக்காக எடுக்கப் பட்ட அந்த விழா, பங்குனி மாதம் இருபத்தொன்பதில் சித்திரை நாளில் (சித்திரை விண்மீன் கூடிய நன்னாளில்) நிறைவு பெற்றுள்ளது. அதேபோல், பங்குனித் திங்களுக்கு முன், மாசித் திங்கள் சித்திரை நாளில் விழாவிற்கான கால்கொண்டு கொடியெடுத்துள்ளனர் என்பதை அடியார்க்கு நல்லார் தரும் விளக்கத்தால் அறியலாம். எனவே மாசி- பங்குனி மாத காலப்பகுதியில் காமன் விழா கொண்டாடப்பட்டமை தெரிய வருகின்றது. இத்தகைய காமன் விழாவே சிலப்பதிகாரத்தில் இந்திர விழாவாக உரு மாறியது என்ற கருத்தும் ஒன்றுமுள்ளது. ` இந்திர விழா` (உரு மாறிய காமன் விழா) பின்பனிக் காலத்தில் இடம் பெற்றதாகச் சிலப்பதிகாரம் கூறுகின்றது [சிலம்பு. 2:14: 106 – 112.] இங்கு `பின்பனிக்காலம்` என்பது இன்றைய மாசி-பங்குனி மாதக் காலமேயாகும்.

சோழ நாட்டில் மட்டுமல்லாமல் பாண்டிய நாட்டிலும் கொண்டாடப்பட்டது. மதுரை நகரில் நிகழ்ந்த வில்விழாவைச் சிலப்பதிகாரம் குறிப்பிடப்படுகிறது.

கொண்டலொடு புகுந்து கோமகன் கூடல் 

வெங்கண் நெடுவேள் வில்விழாக் காணும் 

பங்குனி முயக்கத்துப் பனியர சியாண்டுளன்

:(சிலம்பு. மதுரை: ஊர்காண்: 110 – 112)

எனவே காமவேள் விழா தமிழகம் எங்கும் கொண்டாடப்பட்டுள்ளது.

எனவே மேலே பார்த்த இலக்கியச் சான்றுக ளின்படி மாசி முதல் பங்குனி மாதக் காலப் பகுதியில் ஒரு தொடர் விழாவாகவே காமன் விழா கொண்டாடப்பட்டமை தெளிவாக்குகின்றது. புராணக் கதைகளும் மன்மதனின் ( பெயர் மாற்றப்பட்ட காமன்) பிறந்த நாளாக மாசி மாத முழுமதி (பௌர்ணமி) நாளினையே சொல்லுகின்றன. எனவே இன்றைய வலன்ரைன் நாள் (Valentine’s Day ) கொண்டாடப்படும் காலப்பகுதியினை ஒத்த ஒரு காலப் பகுதியில் கொண்டாடப்பட்ட ஒரு தொடர் விழாவாகவே காமன் விழா காணப்படுகின்றது. பழைய தொடர் விழாக்கள் யாவும் இன்றைய பரபரப்பான உலகில் ஒரு நாள் விழாவாகச் சுருங்கிப் போவது இயல்பானது {எ.கா – தைத்திருநாள் விழா}. அந்த வகையில் உலகுடன் ஒத்து, பெப்ரவரி 14 இல் காதலர் நாளினைக் கொண்டாடுவது தமிழர் மரபுக்கு முரணானதல்ல.

முடிவாகக் காதலர் நாளினைக் கொண்டாடுவது தமிழர் பண்பாட்டுக்கு முரணானதல்ல. மரபுகளுக்கு அப்பால் சாதி+ மத வெறியர்களைக் கடுப்பாக்குவதற்காகவேனும் காதலர் நாளினைக் கொண்டாடலாம். நோய்த் தொற்றுக் காலத்தில் உரிய எச்சரிக்கையுடன் கொண்டாடக் கூடிய நாடுகளில் கொண்டாடுங்கள். எல்லோருக்கும் காதலர் நாள் வாழ்த்துகள்.
 

https://inioru.com/tamils-valentines-day/

 

 

Link to comment
Share on other sites

16 minutes ago, Paanch said:

Love.jpg

காதலியின் அல்லது காதலனின் காதலும் உன்னதமானது தான் பாஞ்ச். ❤️

Link to comment
Share on other sites

44 minutes ago, tulpen said:

காதலியின் அல்லது காதலனின் காதலும் உன்னதமானது தான் பாஞ்ச். ❤️

மறுக்கவில்லை ருல்பென் அவர்களே! காதலர் தினம் என்றால்... காதலன் காதலிதானே எல்லோர் நினைவிலும் வருவார்கள்!! 

சூரியனைக் காண்பதற்கு வெளிச்சம் எதற்கு.? 🔦

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, கிருபன் said:

ஆண்டு முழுவதும் தமக்கிடையே சண்டை இட்டுக் கொள்ளும் இந்து-இசுலாமிய அடிப்படைவாதிகள் ஒரே புள்ளியில் ஒன்றுபடும் நாளும் இந்த நாளேயாகும்.

மற்ற பலவற்றிலும் சாதி மதவாதிகளின் கருத்துக்களை பார்த்தால் முஸ்லிம் அடிப்படைவாதிகள் தெரிவிக்கும் கருத்துக்கள் போன்றே ஒற்றுமையாக இருக்கும்.

 

10 hours ago, கிருபன் said:

மதம்-சாதி என்பனவே தமிழர்களின் மரபல்ல (சான்று – கீழடி) எனும் போது;

இது பெருமைக்குரியது.

Link to comment
Share on other sites

எல்லோருக்கும் இனிய காதலர் தின வாழ்த்துக்கள்.
காதலும், காமமும் தமிழுக்கு புதிதல்ல. எமது பண்டைய கால இலக்கியங்களில் அதற்கு ஒரு தனித்துவமான இடமிருந்தது.

Image

Image

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 14/2/2021 at 06:03, கிருபன் said:

`காதலர் நாள்` கொண்டாட்டம் தமிழர் மரபா? ::வி.இ.குகநாதன்

spacer.png

 

பெப்ரவரி 14 இல் உலகெங்கும் காதலர் நாள் கொண்டாடப்படுகின்றது. இந்த நாள் வந்தால் போதும், சிலர் தம்மைக் கலாச்சாரக் காவலர்கள் எனக் கூறிக் கொண்டு, அடாவடிகளில் இறங்கி விடுவார்கள். கேட்டால்: “காதலர் நாள் தமிழ்க் கலாச்சாரமன்று, ஆங்கிலேயக் கலாச்சாரம்” எனப் பொங்குவார்கள்; உண்மையில் அவர்களுக்குக் `கலாச்சாரம்` என்ற சொல்லே தமிழல்ல எனத் தெரியாத போது, தமிழ்ப் பண்பாடு எப்படித் தெரியப் போகுகின்றது. அவர்களை அணுகிப் பார்த்தால், அவர்களில் மிகப் பெருமளவானோர் சாதி வெறியர்களாக /மத வெறியார்களாக இருப்பதனைக் காணலாம். ஆண்டு முழுவதும் தமக்கிடையே சண்டை இட்டுக் கொள்ளும் இந்து-இசுலாமிய அடிப்படைவாதிகள் ஒரே புள்ளியில் ஒன்றுபடும் நாளும் இந்த நாளேயாகும். மதம்-சாதி என்பனவே தமிழர்களின் மரபல்ல (சான்று – கீழடி) எனும் போது; இந்த அடிப்படைவாதிகள் பொங்கி எழுவது தமது சாதி-மதங்களுக்காகவேயன்றி, தமிழுக்காகவல்ல என்பது தெளிவாகின்றது. இவர்களை ஒரு புறம் ஒதுக்கிவிட்டுத் தமிழர் பண்பாடு `காதலர் நாள்` கொண்டாடத்தினை ஏற்றுக் கொள்கின்றதா எனப் பார்ப்போம்.

பழங் காலத்தில் தமிழர்கள் காதலை மட்டுமல்ல காமத்தினையே கூடக் கொண்டாடினார்கள். `காமம்` என்ற சொல் இன்று போல அன்று மறைவான சொல்லன்று. ஐயன் வள்ளுவனே குறளில் குறிப்பிடும் மூன்றாவது பால் காமத்துப் பாலேயாகும் (அறம், பொருள், காமம்). பின்னரான காலப்பகுதியில் காமத்துப் பாலை `இன்பத்துப் பால்` என மாற்றி விட்டார்கள். உண்மையில் அது தவறு. காமம் வேறு, இன்பம் வேறு. இத் தவறு குறித்துப் பாவாணர் முதல் பல அறிஞர்கள் எழுதியுள்ளார்கள்.

ஊடுதல் காமத்திற்கு இன்பம் அதற்குஇன்பம்

கூடி முயங்கப் பெறின்” : (குறள் 1330)

{காமத்திற்கு இன்பம் தருவது ஊடுதல் ஆகும்; ஊடல் முடிந்தபின் கூடித் தழுவப்பெற்றால் அந்த ஊடலுக்கு இன்பமாகும்}

பார்த்தீர்களா! வள்ளுவனே காமம், இன்பம் ஆகிய இரண்டினையும் வேறுபடுத்திக் காட்டியுள்ளதனை. காமத்தினால் விளைவதே காதல். முனைவர் இரவி சங்கர் இந்த இரு சொற்களையும் பின்வருமாறு தொடர்புபடுத்துவார்.

# “`கா` = காத்தல் என்ற வேர்ச்சொல்லினை அடியாகக் கொண்டவையே காதல், காமம் ஆகிய இரு சொற்களும். 

கா-மம்= விழைவு காத்தல் : Desire to Love

கா-தல்= விழைந்ததை, வாழ்வில் கா(த்துக்) கொள்ளல்!: During the Love.

மேலும் காமம் என்பது முறை தவறும் போது, அது கழிநுகர்ச்சி (Lust ) எனப்படுமே தவிர காமமே கழிநுகர்ச்சியன்று.

காமம் என்பது காரணம் (Cause ), இன்பம் என்பது விழைவது (Effect ). “#

எனவேதான் பழந் தமிழர்கள் காதலை மட்டுமன்றிக் காமத்தினையும் கொண்டாடினார்கள்.

சங்க இலக்கியங்களில் காமன் விழா :-


spacer.png

பொதுவாக ஒரு காலத்தின் பண்பாடு, பழக்க வழக்கங்களைப் படம் பிடித்துக் காட்டும் கருவியாக இலக்கியங்கள் திகழுவதாகச் சொல்லுவார்கள். அந்த வகையில் சங்க இலக்கியங்கள் என்ன சொல்லுகின்றன எனப் பார்ப்போம். சங்க இலக்கியங்களில் `காமன் விழா` பெரிதும் சிறப்பித்துக் கூறப்படுகின்றது.குறுந்தொகைப் பாடலிலும் ஒரு செய்தி ` காமன் விழா` தொடர்பாகக் கூறப்படுகின்றது.

மள்ளர் குழீஇய விழவினானும்

மகளிர் தழீஇய துணங்கையானும்

யாண்டும் காணேன் மாண் தக்கோனை

யானும் ஓர் ஆடு_கள_மகளே என் கை

கோடு ஈர் இலங்கு வளை நெகிழ்த்த 5

பீடு கெழு குரிசிலும் ஓர் ஆடு_கள_மகனே

: குறுந்தொகை 31 : 1-6

மேலுள்ள பாடலில் `கரிகால் வளவன் மகள் ஆட்டனந்தி, ஆதிமந்தி என்னும் சேரனிடம் காதல் கொண்டாள்,அவர்கள் இருவரும் காவிரிப்பூம் பட்டினத்தில் காதல் திருவிழாவின் போது புனலாடிக் கொண்டிருந்தனர், அப்போது ஆதிமந்தியை காவிரி ஆற்றுநீர் அடித்துச் சென்றது, ஆட்டனந்தி காவிரி நதிக்கரை வழியே தேடிச் சென்றாள், அவள் தேடிச் சென்றபோது, காமனுக்கு வில்விழா நடந்து கொண்டிருந்தது` என்ற செய்தி சொல்லப்படுகின்றது.

கலித்தொகையும் காமன் விழா பற்றிப் பேசுகின்றது. ஆற்றங்கரையில் நடைபெறும் காமன்விழாவில் தலைவன் தன்னுடன் கலந்து கொள்ள வேண்டும் எனத் தலைவி பாடுவதாகப் பின்வரும் பாடல் அமைகின்றது.

கண் நிலா நீர் மல்க கவவி நாம் விடுத்த_கால்

ஒண்_நுதால் நமக்கு அவர் வருதும் என்று உரைத்ததை

மல்கிய துருத்தியுள் மகிழ் துணை புணர்ந்து அவர்

வில்லவன் விழவினுள் விளையாடும் பொழுது அன்றோ

:கலித்தொகை 35:11-14

{பொருள் – கண்ணுக்குள் நிற்காத அளவு நீர் பெருக, அவரைத் தழுவியபின் நாம் அவரைச் செல்ல விடுத்தபோது, ஒளிபடைத்த நெற்றியையுடையவளே! நம்மிடம் அவர் வருவதாகச் சொல்லிச் சென்றது; பெருகிய நீர்நடுவேயுள்ள ஆற்றுமேட்டில், தாம் மகிழும் துணையான எம்முடன் கூடிக்கலந்து, அவர் வில்லவனான காமன் திருவிழாவில் விளையாடும் காலம் அன்றோ?}

பரத்தையருடன் கூடக் காமன்விழா கொண்டாடப்பட்டுள்ளது.

உறல் யாம் ஒளி வாட உயர்ந்தவன் விழவினுள்

விறல் இழையவரோடு விளையாடுவான்-மன்னோ

: கலித்தொகை 30: 13-14

{ அவரை அடைவதற்குரிய நான் இங்கே அழகிழந்து வாட, காமன் விழாவில் சிறந்த அணிகலன் அணிந்த பரத்தையரோடு விளையாடி மகிழ்ந்திருப்பாரோ!}

பொருள் தேடுவதற்காகப் பிரிந்து சென்ற தலைவனை நோக்கி வருந்தி இளைத்துப் போயுள்ள தலைவியினை, இதோ தலைவன் காமன் விழா கொண்டாடத் தலைவன் வந்துவிட்டதாகத் தோழி ஆற்றும் பாடல் வருமாறு.

இன்னொரு கலித்தொகைப் பாடலையும் பார்ப்போம்.

நாம் இல்லா புலம்பு ஆயின் நடுக்கம் செய் பொழுது ஆயின்

காமவேள் விழவு ஆயின் கலங்குவள் பெரிது என

ஏமுறு கடும் திண் தேர் கடவி 25

நாம் அமர் காதலர் துணை தந்தார் விரைந்தே

: கலித்தொகை 29: 23-26

{ பொருள்-நாம் இல்லாத தனிமைத் துயருடன், தனிமையில் மனத்தை நடுங்கவைக்கும் இளவேனிற்காலத்தில், காமவேளுக்குரிய விழா நடக்கும்போது கலங்கிப்போவாளே பெரிதும் என்று பகைவர் மயக்கமுறும் வகையில் விரைவாக ஓடும் திண்ணிய தேரினை ஓட்டிக் கொண்டு நாம் விரும்பும் காதலர் நமக்குத் துணையாக இருக்க விரைந்து வருகின்றார்}.

பிற்காலத்தில் இந்தக் `காமன்` என்பவனே `மன்மதன் ` ஆக்கப்படுகின்றான். இதோ கீழுள்ள பரிபாடலைப் பாருங்கள்.

`எழுது எழில் அம்பலம் காமவேள் அம்பின்

தொழில் வீற்றிருந்த நகர்”: பரிபாடல் 18:28

என்று காமவேள் பற்றிப் பரிபாடல் எனும் சங்க இலக்கிய நூல் குறிக்கின்றது . இந்த காமன் தான் பிற்காலத்தில் `மன்மதன்` ஆக்கப்படுகின்றான். இதிலிருந்தே மன்மதன் கையில் வில், மற்றும் அவன் அம்பு விடுதல் போன்ற புராண உருவகப்படுத்தல்கள் பிற்காலத்தில் தோன்றியிருக்கலாம். இங்கு காமன் விழாவினை `வில்லவன் விழா` என அழைக்கப்பட்டமை எமது கருத்துக்குக் கூடிய வலுவூட்டும்.

காமன் விழாவில் கலந்து கொள்வதற்காகச் சென்ற இணையர் (காதல் சோடிகள்) தங்கியிருக்க அமைக்கப்பட்ட குடிலினை `மூதூர்ப் பொழில்` மற்றும் `இளவந்திகை` என்ற பெயர்களில் அழைக்கப்பட்டதாகச் சிலம்பு சொல்லுகின்றது . { இந்த நிகழ்வு காதலர்கள் காதலர் நாளை ஒட்டி விடுதிகளுக்குச் சென்று தங்கியிருப்பதனை ஏனோ நினைவுபடுத்துகின்றது.}

மேலே பார்த்த சங்க காலப் பாடல்களில் `காமன் விழா` கொண்டாடப்பட்டதனைத் தெளிவாகப் பார்த்தோம். எக் காலப் பகுதியில் இந்த விழா (காமன் விழா/ காமவேள் விழா) கொண்டாடப்பட்டது என இனிப் பார்ப்போம். பின்வரும் ஆண்டாள் பாடலினைப் பாருங்கள்.

காமன்போதரு காலமென் றுபங்

குனிநாள்கடை பாரித்தோம்,”

: நாச்சியார் திருமொழி (11).

{ எங்களுக்குத் துன்பம் நீங்குமே, காமன் வருகின்ற காலமென்று, பங்குனி நாள் அவன் வரும் வழியில் கடை விரித்தோம்}

மேலும், காமதேவனுக்காக எடுக்கப் பட்ட அந்த விழா, பங்குனி மாதம் இருபத்தொன்பதில் சித்திரை நாளில் (சித்திரை விண்மீன் கூடிய நன்னாளில்) நிறைவு பெற்றுள்ளது. அதேபோல், பங்குனித் திங்களுக்கு முன், மாசித் திங்கள் சித்திரை நாளில் விழாவிற்கான கால்கொண்டு கொடியெடுத்துள்ளனர் என்பதை அடியார்க்கு நல்லார் தரும் விளக்கத்தால் அறியலாம். எனவே மாசி- பங்குனி மாத காலப்பகுதியில் காமன் விழா கொண்டாடப்பட்டமை தெரிய வருகின்றது. இத்தகைய காமன் விழாவே சிலப்பதிகாரத்தில் இந்திர விழாவாக உரு மாறியது என்ற கருத்தும் ஒன்றுமுள்ளது. ` இந்திர விழா` (உரு மாறிய காமன் விழா) பின்பனிக் காலத்தில் இடம் பெற்றதாகச் சிலப்பதிகாரம் கூறுகின்றது [சிலம்பு. 2:14: 106 – 112.] இங்கு `பின்பனிக்காலம்` என்பது இன்றைய மாசி-பங்குனி மாதக் காலமேயாகும்.

சோழ நாட்டில் மட்டுமல்லாமல் பாண்டிய நாட்டிலும் கொண்டாடப்பட்டது. மதுரை நகரில் நிகழ்ந்த வில்விழாவைச் சிலப்பதிகாரம் குறிப்பிடப்படுகிறது.

கொண்டலொடு புகுந்து கோமகன் கூடல் 

வெங்கண் நெடுவேள் வில்விழாக் காணும் 

பங்குனி முயக்கத்துப் பனியர சியாண்டுளன்

:(சிலம்பு. மதுரை: ஊர்காண்: 110 – 112)

எனவே காமவேள் விழா தமிழகம் எங்கும் கொண்டாடப்பட்டுள்ளது.

எனவே மேலே பார்த்த இலக்கியச் சான்றுக ளின்படி மாசி முதல் பங்குனி மாதக் காலப் பகுதியில் ஒரு தொடர் விழாவாகவே காமன் விழா கொண்டாடப்பட்டமை தெளிவாக்குகின்றது. புராணக் கதைகளும் மன்மதனின் ( பெயர் மாற்றப்பட்ட காமன்) பிறந்த நாளாக மாசி மாத முழுமதி (பௌர்ணமி) நாளினையே சொல்லுகின்றன. எனவே இன்றைய வலன்ரைன் நாள் (Valentine’s Day ) கொண்டாடப்படும் காலப்பகுதியினை ஒத்த ஒரு காலப் பகுதியில் கொண்டாடப்பட்ட ஒரு தொடர் விழாவாகவே காமன் விழா காணப்படுகின்றது. பழைய தொடர் விழாக்கள் யாவும் இன்றைய பரபரப்பான உலகில் ஒரு நாள் விழாவாகச் சுருங்கிப் போவது இயல்பானது {எ.கா – தைத்திருநாள் விழா}. அந்த வகையில் உலகுடன் ஒத்து, பெப்ரவரி 14 இல் காதலர் நாளினைக் கொண்டாடுவது தமிழர் மரபுக்கு முரணானதல்ல.

முடிவாகக் காதலர் நாளினைக் கொண்டாடுவது தமிழர் பண்பாட்டுக்கு முரணானதல்ல. மரபுகளுக்கு அப்பால் சாதி+ மத வெறியர்களைக் கடுப்பாக்குவதற்காகவேனும் காதலர் நாளினைக் கொண்டாடலாம். நோய்த் தொற்றுக் காலத்தில் உரிய எச்சரிக்கையுடன் கொண்டாடக் கூடிய நாடுகளில் கொண்டாடுங்கள். எல்லோருக்கும் காதலர் நாள் வாழ்த்துகள்.
 

https://inioru.com/tamils-valentines-day/

 

 

ஆதலால் ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

காதல் காமம் என்றால் என்ன.🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, சுவைப்பிரியன் said:

காதல் காமம் என்றால் என்ன.🤣

காதலின்றி காமம்கொள்பவர்கள் அனைவரும் அவ்வுடலை மட்டுமே நாடுகிறார்கள். 

வெறும்பெண்ணுடலை காமத்துடன் நாடுபவர்களுக்கு அப்பெண்ணுடலும் பொருட்டல்ல. அவர்கள் தங்களைத் தாங்களே புணர்ந்துகொள்கிறார்கள். தன் கட்டைவிரலை சுவைத்துண்ணும் குழந்தைகள்.👶

Link to comment
Share on other sites

9 minutes ago, சுவைப்பிரியன் said:

காதல் காமம் என்றால் என்ன.🤣

அதை பற்றி உரையாற்ற தமிழ்சிறீ அவர்களை மேடைக்கு அழைக்கிறோம்.

தமிழ் சிறீ எங்கிருந்தாலும் உடனடியாக ஒலிபெருக்கி நிலையத்துக்கு வரவும்.  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பலன்டைன் டேக்கு வேலையிடத்திலை வேலை செய்யிற இரண்டு மூண்டு பேருக்கு பூ குடுத்து அசத்துவம் எண்டுட்டு பூக்கடைக்கு போய் ஒரு றோசாப்பூவின்ரை விலையை கேட்டால் எனக்கு அஞ்சும் கெட்டு அறிவும் கெட்டுப்போச்சுது. நாய் பேய் விலை விக்கிறாங்களப்பா..:shocked:

நைசாய் அல்டியிலை சொக்கிளேட்டை வாங்கிக்குடுத்து சமாளிச்சிட்டன்.:love:

Link to comment
Share on other sites

5 hours ago, குமாரசாமி said:

பலன்டைன் டேக்கு வேலையிடத்திலை வேலை செய்யிற இரண்டு மூண்டு பேருக்கு பூ குடுத்து அசத்துவம் எண்டுட்டு பூக்கடைக்கு போய் ஒரு றோசாப்பூவின்ரை விலையை கேட்டால் எனக்கு அஞ்சும் கெட்டு அறிவும் கெட்டுப்போச்சுது. நாய் பேய் விலை விக்கிறாங்களப்பா..:shocked:

இப்படி எத்தனை பேர் ஆளுக்கு இரண்டோ மூண்டோ இன்னும் அதிகம் பேருக்கோ பூக்குடுத்து அசத்த நினைச்சிருப்பங்கள் அண்ணை! 😆 அந்த டிமாண்டால தான் பூக்கடைக் காரன் விலையைக் கூட்டி உங்களையே அசத்திட்டான் போல! 😆

5 hours ago, குமாரசாமி said:

நைசாய் அல்டியிலை சொக்கிளேட்டை வாங்கிக்குடுத்து சமாளிச்சிட்டன்.:love:

உங்கட நாட்டு சொக்ளேற்றுக்கள் எங்கட ஊரில உள்ள அல்டிக்கு வாறது. எங்களுக்கு மிகவும் பிடிச்சது. இதுக்காகவே சில நேரம் அல்டிக்குப் போறது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, tulpen said:

அதை பற்றி உரையாற்ற தமிழ்சிறீ அவர்களை மேடைக்கு அழைக்கிறோம்.

தமிழ் சிறீ எங்கிருந்தாலும் உடனடியாக ஒலிபெருக்கி நிலையத்துக்கு வரவும்.  

May be an image of text that says 'பெப். 14 கிறிஸ்தவ துறவி வாலன்டைன் நினைவுதினம் Valentine's HAPPY, Day'

ருல்ப்பனுக்கு... இண்டைக்கு, இதோடை  பொழுது  போகும்.  :grin: 🤣

//கிறிஸ்தவ மத இலட்சியத்திற்காக... தியாக மரணத்தை தழுவிக் கொண்ட.. புனித வாலன்டைன் துறவியின் நினைவு தினம்... காதலர் தினமானது எப்படி?//

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, சுவைப்பிரியன் said:

காதல் காமம் என்றால் என்ன.🤣

சுவைப்பிரியன்,  கீழே வருவது நான் சொல்லும் விளக்கமில்லை!  புத்தர் சொன்ன விளக்கம்!

அன்புக்கும், ஆசைக்கும் என்ன வித்தியாசம்?

நீங்கள் ஒரு அழகிய பூவொன்றைப் பார்க்கின்றீர்கள்!

அந்தப் பூவின் மீது அன்பிருந்தால்...அதை மரத்திலிருந்த படியே ரசிப்பீர்கள்! அதைப் பிடுங்க மாட்டீர்கள்.!

அதன் மீது ஆசையிருந்தால்.....அந்தப்  பூவைப் பறித்து முகர்ந்து பார்ப்பீர்கள்!

இந்த விடை உங்கள் கேள்விக்கும் பதிலாக அமையும் என நம்புகின்றேன்!

ஏதோ நம்மால  முடிஞ்சது..!🥰

Link to comment
Share on other sites

4 hours ago, புங்கையூரன் said:

அந்தப் பூவின் மீது அன்பிருந்தால்...அதை மரத்திலிருந்த படியே ரசிப்பீர்கள்! அதைப் பிடுங்க மாட்டீர்கள்.!

அதன் மீது ஆசையிருந்தால்.....அந்தப்  பூவைப் பறித்து முகர்ந்து பார்ப்பீர்கள்!

அருமையான விளக்கம் அண்ணா.

அத்துடன் பூவைப் பறிக்கும்போது செடியில் பால் வருவது போல, காதலில் பால் மயக்கம் வந்தால் அதைக் காமம் ஆகிவிடும் என்று எடுத்துக்கொள்ளலாமா! 😀

இன்னொன்றும் சொல்லலாம்; பூவை மரத்திலிருந்து பறிக்காமலே நிபந்தனையற்ற அன்புடன் ரசிக்கும்போது கிடைக்கும் மகிழ்ச்சியின் அளவுக்கு ஈடில்லை! அதனால் தானோ என்னவோ வென்றாலும், தோற்றாலும் காதல் என்ற உணர்வே பெரிதாகக் கொண்டாடப்படுகிறது! 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, மல்லிகை வாசம் said:

இப்படி எத்தனை பேர் ஆளுக்கு இரண்டோ மூண்டோ இன்னும் அதிகம் பேருக்கோ பூக்குடுத்து அசத்த நினைச்சிருப்பங்கள் அண்ணை! 😆 அந்த டிமாண்டால தான் பூக்கடைக் காரன் விலையைக் கூட்டி உங்களையே அசத்திட்டான் போல! 😆

உங்கட நாட்டு சொக்ளேற்றுக்கள் எங்கட ஊரில உள்ள அல்டிக்கு வாறது. எங்களுக்கு மிகவும் பிடிச்சது. இதுக்காகவே சில நேரம் அல்டிக்குப் போறது. 

அதாலைதான் நானும் அல்டிக்கு போறனான். மற்றும் படி...............😁

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கூகா என என் கிளை கூடி அழப் போகா வகை, மெய்ப்பொருள் பேசியவா நாகாசல வேலவ நாலு கவித் தியாகா சுரலோக சிகாமணியே.    
    • அதெல்லாம் இருக்கட்டும், குஜாரத்தில் தானே தீவைத்த இந்துக்களின் ரயிலுக்குப் பழிவாங்க ஆயிரமாயிரம் முஸ்லீம்களைப் படுகொலை செய்ததற்காக அமெரிக்காவே இவருக்கு தடை விதித்திருந்தது. இந்த லட்சணத்தில் இந்தியஅ மனிதநேயத்திற்குப் பாதுகாப்பான நாடாம். 
    • தமிழ்ப் பொதுவேட்பாளரை இறக்கி ரணில் ஐய்யாவுக்கு விழப்போற வாக்குகளைத் தடுத்துப்போடுவாங்கள் என்கிற கவலையில இருக்கிறம் உங்களுக்கு நக்கலாக் கிடக்கு என்ன?  ரணில் மாத்தையாட்ட, ஜயவேவா!
    • நீங்கள் அரசாங்கத்துடன் திம்புவில் பேசலாம், நான் இராணுவத்துடன் கிரிக்கெட் விளையாடினால் தவறோ? ‍- பரி யோவானின் ஆனந்தராஜனும், இந்தியர்களை அலைக்கழித்த இலங்கையும்   மறுநாளான ஆடி 24 ஆம் திகதி டிக் ஷிட் அவர்கள் நீலன் திருச்செல்வத்தைச் சந்தித்தார். தமிழர்களின் பிரச்சினையின் சிக்கல்களை பண்டாரி சரியாக உணர்ந்துகொள்ளத் தவறிவிட்டதாக டிக் ஷிட்டிடம் தெரிவித்தார் நீலன். மேலும் பிரச்சினைக்கு உடனடியாகத் தீர்வொன்றினைக் கண்டுபிடிக்குமாறு பண்டாரி  அழுத்தம்கொடுத்து வந்தமை, ஜெயாரிற்கு தமிழர்களுடன், தீர்வெதனையும் தராத, வெற்றுப் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடும் வாய்ப்பினையும் ஏற்படுத்திக் கொடுத்திருப்பதாகவும் நீலன் கூறினார். சந்திரிக்காவின் ஆட்சியின்போது பிரபல சிங்கள இனவாதியான பேராசிரியர் ஜி.எல்.பீரிஸுடன் இணைந்து தீர்வுப்பொதியொன்றினைத் தயாரித்த நீலன் திருச்செல்வம் மேலும், டிக்ஷிட்டிடன் பேசும்போது தமிழரின் தாயகம் தொடர்பாகவும், அதனை திட்டமிட்ட அரச ஆதரவிலான சிங்களக் குடியேற்றங்கள் மூலம் இரு துண்டுகளாக உடைக்க சிங்களவர்கள் முயன்றுவருவது குறித்தும் விளக்கியதோடு, தமிழர்கள் தமது தாயகத்தில் சுயநிர்ணய உரிமைகொண்டவர்களாக வாழ்தலே எந்தவொரு தீர்விற்கும் அடிப்படையாக அமைதல் வேண்டுமென்றும் அழுத்தமாகக் கூறினார்.  இதற்குக் குறைவான எந்தத் தீர்வினையும் தமிழர்கள் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை என்பதனையும் அவர் டிக்ஷிட்டிடம் தெரிவித்தார். நீலனுக்குப் பதிலளித்த டிக்ஷிட், இவ்விடயங்கள் குறித்து தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினர் ரஜீவிடமும், பண்டாரியிடமும் தெளிவாகப் பேசவேண்டும் என்று கூறினார். "இனப்பிரச்சினையின் தீர்விற்கான அடிப்படை குறித்த ஆவணம் ஒன்றைத் தயாரித்து ஜெயாருக்கு அனுப்பிவைப்பதற்காக என்னை தில்லிக்கு அழைத்திருக்கிறார்கள். நான் நாளை பயணமாகிறேன். நீங்கள் என்னிடம் தற்போது கூறிய விடயங்களை தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினர் ஒரு ஆவணமாகத் தயாரித்து அனுப்பினால், நாம் ஜெயாருக்கு அனுப்பவிருக்கும் ஆவணத்தை அதன் அடிப்படியில் உருவாக்கிக்கொள்ளலாம்" என்று நீலனை நோக்கிக் கூறினார் டிக்ஷிட்.    அப்போது சென்னையில் தங்கியிருந்த அமிர்தலிங்கத்திடம் இவ்விடயங்கள் குறித்து நீலன் தெரிவித்தார். அதன் பின்னர் ஆடி 26 ஆம் திகதி தமது பேரம்பேசலின் நிலைப்பாடு குறித்த விளக்கமான கடிதம் ஒன்றினை அமிர்தலிங்கமும், சிவசிதம்பரமும் ரஜீவ் காந்திக்கு அனுப்பி வைத்தனர். அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்த சில முக்கிய விடயங்கள் கீழே, "தமிழர் பிரச்சினைக்கான எந்தவொரு தீர்வின் அடிப்படையும் தமிழர்கள் தமது தாயகத்தில் தம்மைத்தாமே ஆளும் உரிமையினை உறுதிப்படுத்துவதாக இருக்க வேண்டும். பலஸ்த்தீனத்தில் இஸ்ரேல் செய்துவருகின்ற திட்டமிட்ட ஆக்கிரமிப்பிற்கு நிகரான ஆக்கிரமிப்பினை இலங்கையில் தொடர்ச்சியாக ஆட்சிக்கு வரும் சிங்கள அரசுகள் செய்துவருவதுடன்,  தமிழர் தாயகத்தின் ஒருமைப்பாட்டினைச் சிதைக்கும் நோக்குடன், தமிழர்களின் ஆட்சேபணைக்கு மத்தியிலும், அரச ஆதரவிலான திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்களை சுதந்திரக் காலத்திலிருந்து செய்து வருகின்றன". "தமிழர் தாயகத்தை இரண்டாகத் துண்டாக்குவதன் மூலம் கிழக்கு மாகாணத்தில் தமிழர்களை முற்றாக அழித்துவிட சிங்கள அரசுகள் முயன்று வருகின்றன. கிழக்கில் தமிழர்களை அப்புறப்படுத்துவதனூடாக தமிழர்களின் பிரச்சினைக்கான தீர்வை வழங்கமுடியும் என்று ஜெயவர்த்தன கருதிவருகின்ற போதிலும், நீங்கள் அதனை ஒரு தீர்வாக ஏற்றுக்கொள்ள மாட்டீர்கள் என்று நம்புகிறோம். தமது தாயகம் துண்டாடப்படுவதை தமிழர்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை" என்று அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.  புலிகளின் எச்சரிக்கைகளுக்கு மத்தியிலும் இலங்கை இராணுவத்துடன் துடுப்பாட்டப் போட்டியொன்றினை ஒழுங்குசெய்த பரி யோவான் கல்லூரி அதிபர் ஆனந்தராஜன்  ஆடி 27 ஆம் திகதி மாலை டிக்ஷிட் தில்லியை வந்தடைந்தார். அந்நாள் காலையிலேயே யாழ்ப்பாணம் புனித யோவான் கல்லூரியின் அதிபர் ஆனந்தராஜா கொல்லப்பட்டிருந்தார். பரி யோவான் கல்லூரியின் துடுப்பாட்ட அணிக்கும், இலங்கை இராணுவத்தின் துடுப்பாட்ட அணிக்கும் இடையிலான சிநேகபூர்வ கிரிக்கெட் போட்டியொன்றினை பரி யோவான் கல்லூரி மைதானத்தில் நடத்த முயன்றதனால் அவர் சுடப்பட்டார். போட்டியினை நடத்துவதற்கான முயற்சிகளில் அவர் இறங்கியபோது புலிகளால் பலதடவைகள் அவருக்கு அதனைச் செய்யவேண்டாம் என்று எச்சரிக்கைகள் விடப்பட்டு வந்தன. ஆனால், அவ்வெச்சரிக்கைகளை உதாசீனம் செய்த ஆனந்தராஜா, "நீங்கள் அரசாங்கத்துடன் திம்புவில் பேச்சுவார்த்தை நடத்த முடியும் என்றால், இராணுவத்துடன் கிரிக்கெட் ஆட்டம் ஒன்றினை நான் ஒழுங்குசெய்வதில் என்ன தவறு இருக்க முடியும்?" என்று அவர் பதிலுக்கு தனது செயலை நியாயப்படுத்தி வந்தார்.  யாழ்ப்பாண மக்களின் மனங்களையும், இதயங்களையும் வென்று, அவர்களின் ஆதரவினைப் பெற்றுக்கொள்ளும் நோக்குடன் யாழில் இயங்கிவந்த சில பிரபல பாடசாலைகளுடன் சிநேகபூர்வமான துடுப்பாட்டம் மற்றும் கால்பந்தாட்டப் போட்டிகளை இலங்கை இராணுவம் ஒழுங்குசெய்யத் திட்டமிட்டு வந்தது. இலங்கை அரசாங்கத்திற்கெதிராக மக்களை அணிதிரட்டும் தமது முயற்சியை இராணுவத்தினரின் "யாழ் மக்களின் மனங்களையும், இதயங்களையும் வெல்லுதல்" முயற்சி பாதிக்கக் கூடும் என்று கருதிய போராளிகள், இராணுவத்தின் இந்த முயற்சிக்கு எவரும் ஆதரவளிக்கக் கூடாது என்று கூறி வந்தனர். இன்று மேற்கு நாடொன்றில் வசிக்கும் புலிகளின் முன்னாள்ப் போராளியொருவரே ஆனந்தராஜாவைச் சுட்டுக் கொன்றிருந்தார். ஆனந்தராஜாவைத் தாமே கொன்றதாக புலிகள் உரிமைகோரும் துண்டுப் பிரசுரங்களை வெளியிட்டனர். தாம் பலமுறை வழங்கிய எச்சரிக்கைகளையும் மீறி இராணுவத்துடன் துடுப்பாட்டப் போட்டியை நடத்துவதில் உறுதியாக நின்றமைக்காகவே அவருக்குத் தண்டனை வழங்கப்பட்டதாக புலிகளின் அறிவித்தல் கூறியது. ஆனந்தராஜா மீதான தாக்குதல் சொல்லவேண்டியவர்களுக்குத் தெளிவான செய்தியைச் சொல்லியது. இராணுவத்தினருடனான சகலவிதமான சிநேகபூர்வப் போட்டிகளும் யாழ்ப் பாடசாலைகளால்  கைவிடப்பட்டன. யாழ் மக்களின் மனங்களையும், இதயங்களையும் வெல்லும் இராணுவத்தின் முயற்சி பிசுபிசுத்துப் போனது. ஆனந்தராஜா மீதான தாக்குதலை அரசாங்கம் தனது பிரச்சாரத் தேவைக்காகப் பயன்படுத்திக்கொண்டது. இதனை கடுமையான யுத்தநிறுத்த மீறலாகக் காட்டிய அரசாங்கம், ஆனந்தராஜாவின் கொலையோடு சம்பந்தப்பட்டவர்கள் தொடர்பாகத் தகவல் வழங்குவோரு சன்மானமாக ஐந்து லட்சம் ரூபாய்களைத் தருவதாக அறிவித்தது. ஆனால், அரசால் தாக்குதலில் ஈடுபட்டவர்களை இறுதிவரை கண்டுபிடிக்க முடியவில்லை. தில்லியில் தான் தங்கியிருந்த நான்கு நாட்களில் டிக்ஷிட், ரஜீவ் காந்தி, ரஜீவால் பிந்தள்ளப்பட்டிருந்த பார்த்தசாரதி, ரோவின் சக்சேனா மற்றும் சில வெளியுறவுத்துறை அதிகாரிகள் ஆகியோரைச் சந்தித்தார். இச்சந்திப்புக்களின்போது, இலங்கையின் ஒற்றுமையினையும், பிராந்திய ஒருமைப்பாட்டினையும் பாதிக்காத வகையில், தமிழர்கள் முன்வைத்த கோரிக்கைகளுக்குச் சாதகமான வகையில் ஜெயார் முன்வைக்கக் கூடிய ஆலோசனைகளை அவர்கள் தயாரித்தனர். இந்தியாவினால் தயாரிக்கப்பட்ட, கடப்பாடுகள் எதுவும் அற்ற இந்த ஆவணத்தில் இலங்கையினால் முன்வைக்கப்பட்ட அதிகபட்ச அதிகாரப் பரவலாக்கல் அலகான மாவட்ட அபிவிருத்திச் சபையின் அதிகாரங்களை மேம்படுத்துவது தொடர்பாகவே பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டன. தமிழரின் கோரிக்கையான பூர்வீகத் தாயகத்திற்குப் பதிலாக மாகாண அலகினை இலங்கையரசு வழங்க முடியும் என்றும், வடக்கு மாகாணமும், கிழக்கு மாகாணமும் கருத்து ரீதியாக இணைக்கப்படலாம் என்றும் இந்தியா பரிந்துரை செய்திருந்தது. இவ்வாறு அமைக்கப்படும் மாகாணங்களுக்கான அதிகாரங்கள் குறித்துப் பேசும்போது, நிதி , காணியதிகாரம், சட்டம் ‍ ஒழுங்கினை நிலைநாட்டும் அதிகாரம் ஆகியவை மத்திய அரசினால் பகிர்ந்தளிக்கப்படலாம் என்றும் பரிந்துரை செய்யப்பட்டிருந்தது. மேலும், இந்த இணைந்த மாகாணங்களில் தமிழ் உத்தியோகபூர்வ மொழியாகப் பாவிக்கப்படலாம் என்றும் பரிந்துரை செய்யப்பட்டது. ஜெயாருடன் பார்த்தசாரதி   இரண்டாம் சுற்றுப் பேச்சுக்கள் நடப்பதற்கு சற்று முன்னதாக இந்தியாவின் "கடப்பாடு அற்ற" பரிந்துரைகளின் நகல் ஒன்றினை நீலனிடம் கொடுத்த டிக்ஷிட், "இவை அனைத்தும்  பார்த்தசாரதியின் யோசனைகள் தான்" என்று கூறினார். "பண்டாரிக்கோ, சக்சேனாவுக்கோ இவைகுறித்த எந்தவிதமான அறிவும் இருக்கவில்லை" என்று நீலன் கூறினார்.  தாம் தயாரித்த "கடப்பாடற்ற" பரிந்துரைகளை ஜெயாரிடம் வழங்கி, அவற்றின் அடிப்படையில் தனது தீர்வினை ஜெயார் வரைந்துகொள்ளலாம் என்றும், பண்டாரியின் இரண்டாவது விஜயம் தொடர்பாக அவரை ஆயத்தமாக இருக்கும்படி  கூறுமாறும் டிக்ஷிட்டைப் பணித்தார் ரஜீவ் காந்தி. ஆவணி 2 ஆம் திகதி கொழும்பு வந்திறங்கிய பண்டாரி, அன்று மாலையே ஜெயாரை அவரது உத்தியோகபூர்வ வாசஸ்த்தலத்தில் சந்தித்தார். இச்சந்திப்பில் லலித் அதுலத் முதலியும் உடனிருந்தார். ஜெயாருடனான தனது சந்திப்புப் பற்றி கொழும்பு அசைன்மென்ட்டில் எழுதும் டிக்ஷிட், திம்புப் பேச்சுக்களின் தோல்வி குறித்த இந்தியாவின் அதிருப்தியை ஜெயாரிடம் தெரிவித்ததுடன், இந்தியாவினால் தயாரிக்கப்பட்ட பரிந்துரைகளை அவரிடம் தான் வழங்கியதாகவும் கூறுகிறார். இச்சந்திப்புக் குறித்து நீலனிடம் பேசும்போது, "நான் கொடுத்த பரிந்துரைகளை வாங்கிப் படித்துவிட்டு, சிறிய புன்னகையுடன் அதனை அருகில் நின்ற லலித்திடம் கையளித்தார் ஜெயார்" என்று கூறியிருக்கிறார்.   மேலும், ஜெயாருடன் பேசிய டிக்ஷிட், இலங்கை அரசால் முதலாம் கட்டப் பேச்சுக்களில் முன்வைக்கப்பட்ட ஆலோசனைகள், தமிழ்ப் போராளிகள் தமது ஆயுதங்களைக் கைவிட்டு சமாதானப் பேச்சுக்களுக்குத் திரும்புவதற்குப் போதுமான சலுகைகளைக் கொண்டிருக்கவில்லை என்றும் கூறினார். இடையில் குறுக்கிட்ட லலித் அதுலது முதலி, மிகவும் காட்டமான முறையில் இதற்குப் பதிலளித்தார். "இந்தியா தம்மை ஆதரிக்கிறது என்பதற்காக, தமிழர்கள் தாந்தோன்றித்தனமான முறையில் முன்வைக்கும் நிபந்தனைகள் எல்லாவற்றையும் நாம் ஏற்றுக்கொள்ளவேண்டும் என்கிற கட்டாயம் எமக்கு இல்லை" என்று கூறியதுடன், "நீங்கள் தமிழ்ப் பயங்கரவாதிகளுக்கு எவ்வாறான உதவிகளைச் செய்துவருகிறீர்கள் என்பது குறித்தும் நாம் அறிவோம்" என்று நீண்ட விளக்கம் றினையும்  வழ‌ங்கினார். பின்னர் பேசிய ஜெயார், "இலங்கை அரசின் சார்பாக இரண்டாம் கட்டப் பேச்சுக்களை ஹெக்டர் ஜெயவர்த்தனவே நடத்துவார் என்பதனால், அவரிடமே இந்தியாவின் பரிந்துரைகளைக் கையளிக்கிறேன்" என்று டிக்ஷிட்டிடம் கூறினார். மேலும், பண்டாரியின் வருகையினை நாம் வரவேற்கிறோம், அவர் கூறப்போவதைச் செவிமடுக்கவும் ஆயத்தமாக இருக்கிறோம் என்று ரஜீவிடம் கூறுங்கள் என்று கூறினார்.   ஆவணி 8 ஆம் திகதி கொழும்பு வந்தடைந்த பண்டாரி, ஜனாதிபதி ஜெயவர்த்தன, பிரதமர் பிரேமதாச, வெளியுறவு அமைச்சர் ஹமீது, பாதுகாப்பமைச்சர் லலித் அதுலத் முதலி, எதிர்க்கட்சித் தலைவர் சிறிமா ஆகியோரைச் சந்தித்தார்.   ஆனால், பண்டாரியின் ஜெயாருடனான சந்திப்பு பலனற்றுப் போயிற்று. தமிழர்களின் பிரச்சினைக்கு அரசியல்த் தீர்வொன்றினைக் காண்பதற்கு இந்தியாவினால் முன்வைக்கப்பட்டுள்ள பரிந்துரைகளின் அடிப்படையிலான தீர்வொன்றினை இலங்கை முன்வைக்க வேண்டும் என்று பண்டாரி ஜெயாரிடம் கூறினார். இரண்டாம் கட்டப் பேச்சுக்கள் மிகவும் முக்கியமானவை என்று இந்தியா கருதுவதாகவும் அவர் ஜெயாரிடம் தெரிவித்தார். இப்பேச்சுக்களும் தோல்வியடையும் பட்சத்தில் இலங்கை கடுமையான விளைவுகளைச் சந்திக்க நேரும் என்று  அவர் ஜெயாரை எச்சரித்தார். ஆனால் பண்டாரியின் அழுத்தங்களினால் ஜெயாரைப் பணியவைக்க முடியவில்லை. பண்டாரியுடன் தீர்க்கமான பேச்சுக்களில் ஈடுபடுவதையே ஜெயார் தவிர்த்தார். பண்டாரியைக் கையாளும் பணியினை தனது சகோதரர் ஹெக்டர் ஜெயவர்த்தனவிடமும், லலித் அதுலத் முதலியிடமும் கையளித்தார் ஜெயார். "எனது சகோதரரே இரண்டாம் கட்டப் பேச்சுக்களையும் எமசார்பில் நடத்தவிருப்பதால், நீங்கள் அவரிடமே உங்களின் விளக்கங்களைக் கூறுங்கள்" என்று பண்டாரியை நோக்கிக் கூறினார் ஜெயார். மேலும், "லலித் இதுகுறித்து உங்களுடன் விளக்கமாகப் பேசுவார்" என்றும் அவரிடம் கூறினார்.  பிரேமதாசவுடனான பண்டாரியின் பேச்சுக்கள் பொதுவானவையாக இருந்தன. வழ‌க்கம்போல் "மகாத்மா காந்தியில் நான் மதிப்பு வைத்திருக்கிறேன், இந்தியாவை நேசிக்கிறேன்" என்று பிரேமதாச பண்டாரியிடம் பேசத் தொடங்கினார். பின்னர், பயங்கரவாதத்தினை முற்றாக அழித்துவிட இந்தியா இலங்கைக்கு உதவேண்டும் என்றும் அவர் கோரினார். "தமிழ்ப் பயங்கரவாதம் இருக்கும்வரை, அரசியல்த் தீர்விற்கான சாத்தியங்கள் மிகவும் குறைவானவை. சிங்கள மக்களின் பெருமையும், கெளரவமும் மிகவும் பாதிக்கப்பட்டிருக்கிறன. இந்த நிலையில் அவர்கள் எந்த விட்டுக் கொடுப்பிற்கும் முன்வரப்போவதில்லை. இலங்கையில் சமாதானமும், உறுதிப்பாடும் நிலைநாட்டப்படுவதில் இந்தியாவிற்கு இருக்கும் அக்கறையினை சிங்கள மக்கள் அறிவார்கள், ஆனால் பேச்சுக்களில் மத்தியஸ்த்தம் வகிக்க இந்தியா எடுத்துவரும் முயற்சிகளை சிங்கள மக்கள் சந்தேகக் கண்ணோட்டத்துடன் பார்க்கிறார்கள். நீங்கள் தமிழர்கள் சார்பாகவே செயற்படுவதாக அவர்கள் முற்றாக நம்புகிறார்கள்" என்று அவர் பண்டாரியிடம் தெரிவித்தார். சிறிமாவுடனான சந்திப்பின்போது, "நான் திம்புப் பேச்சுக்கள் தோல்வியிலேயே முடிவடையும் என்று எதிர்பார்த்திருந்தேன். அப்படியே நடந்தது. ஏனென்றால், ஜெயவர்த்தன இப்பேச்சுக்களில் இதய சுத்தியுடன் ஈடுபடவில்லை. இரண்டாம் கட்டப் பேச்சுக்களுக்கும் இதே நிலைதான் ஏற்படும்" என்று பண்டாரியிடம் தெரிவித்தார் சிறிமா.    இலங்கையின் பேச்சுவார்த்தைக் குழுவின் தலைவரான ஹெக்டர் ஜெயவர்த்தனவுடன் பேசும்போது, "பழைய விடயங்களைத் திரும்பத் திரும்ப பேச்சுவார்த்தை மேசையில் பேசுவதைத் தவிருங்கள், எதிர்காலம் குறித்து மட்டுமே நாம் பேசலாம்" என்று கெஞ்சுவது போலக் கோரினார் பண்டாரி. இலங்கை தனது தீர்வினை எந்தெந்த இடங்களில் மேம்படுத்த முடியும் என்பது குறித்த பரிந்துரைகளை இந்தியாவின் "கடப்பாடு அற்ற" ஆவணம் கொண்டிருப்பதாக அவர் சுட்டிக் காட்டினார். இதற்குப் பதிலளித்த ஹெக்டர், "1978 ஆம் ஆண்டு யாப்பின் வரையறைகளை நான் சரியாக ஆராய்ந்து, எனது ஆலோசனைகளை அவற்றின் அடிப்படையில்  முன்வைக்கிறேன்" என்று கூறினார். லலித்துடனான பண்டாரியின் சந்திப்பு வித்தியாசகாம இருந்தது. "கடப்பாடு அற்ற" என்கிற தொனியில் இந்தியா முன்வைத்த அனைத்து பரிந்துரைகளையும் லலித் திட்டவட்டமாக நிராகரித்தார். வடக்கையும் கிழக்கையும் இணைக்கும் இந்தியாவின் யோசனையினை இலங்கை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது என்று பண்டாரியிடம் கூறினார் லலித். கிழக்கு மாகாணத்தில் சிங்களவர்களும் முஸ்லீம்களும் இணைந்து பெரும்பான்மையினராக மாறியிருப்பதாகவும், தமிழர்கள் அங்கு சிறுபான்மையினர் என்றும் அவர் கூறினார். மேலும், 1977 ஆம் ஆண்டுத் தேர்தலில் தனிநாட்டிற்கான ஆணையினை கிழக்கு மாகாண மக்கள் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணிக்கு வழங்கவில்லை என்றும் அவர் வாதிட்டார். 1982 ஆம் ஆண்டின் ஜனாதிபதித் தேர்தலும், சர்வஜன வாக்கெடுப்பும் கிழக்கு மாகாணம் அரசாங்கத்திற்கு ஆதரவாக நிற்பதையே நிரூபித்திருக்கின்றன என்று தனது வாதத்திற்கு மேலும் வலுச் சேர்த்தார் லலித்.  அடுத்ததாக, மாகாண சபைகளுக்கு வழங்கப்படும் அதிகாரங்களை மேம்படுத்தலாம் என்கிற இந்தியாவின் ஆலோசனைகளையும் லலித் புறக்கணித்தார். மாகாண சபைகளுக்கு நிதியதிகாரம், காணியதிகாரம், சட்டம் ஒழுங்கு ஆதிகாரம் ஆகியவற்றை வழங்குவதை சிங்கள மக்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை என்று அவர் கூறினார். தனிச் சிங்களச் சட்டத்தில் மாற்றங்களைச் செய்யும் அதிகாரமோ, அல்லது 1972 மற்றும் 1978 ஆம் ஆண்டு யாப்புகளின் அடிப்படையில் உருவாக்கப்பட்டிருக்கும் நாட்டின் ஒருமைப்பாடு, ஒற்றையாட்சி ஆகியவற்றில் மாற்றங்களைக் கொண்டுவரும் அதிகாரமோ இலங்கையில் எந்த அரசிற்கும் கிடையாது என்றும் அவர் கூறினார். "இந்த விடயங்களில் இலங்கையின் அரசானாலும், எதிர்க்கட்சியானாலும் அவர்கள் அனைவரினதும் நிலைப்பாடு ஒன்றுதான்" என்று மிகுந்த நம்பிக்கையுடன் பண்டாரியைப் பார்த்துக் கூறினார் லலித். 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.