Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

“மேதகு” திரைப்படம் குறித்து முகநுாலில் பதிந்தவர் பயங்கரவாதச்சட்டத்தில் கைது

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

“மேதகு” திரைப்படம் குறித்து முகநுாலில் பதிந்தவர் பயங்கரவாதச்சட்டத்தில் கைது

breaking

தென்  தமிழீழம் :-

தமிழீழ  தேசியத் தலைவர் வே.பிரபாகரனை  போற்றி முகநூலில் கருத்து வெளியிட்டிருந்த திருகோணமலையைச் சேர்ந்த இளைஞர் ஒருவர்  பயங்கரவாத சட்டத்தின் கீழ் பேரினவாத சிங்கள காவல்துறை குற்றப்பிரிவால்  கைது செய்யப்பட்டுள்ளார்.

திருகோணமலையில்  முச்சக்கரவண்டிச் சாரதியாக கடமையாற்றும் 24 வயதுடைய இளைஞரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

இது குறித்து கருத்து வெளியிட்ட  காவல்துறைப் பேச்சாளரும் பிரதிப் பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோகண,

“தேசிய ஒற்றுமையை சீர்குலைக்கும் வகையிலான பதிவுகளை இட்டிருப்பதாலும் பயங்கரவாத தடைச்சட்டம், அரசியல், சிவில் உரிமைக்கான சர்வதேச சட்டம் என்பவற்றின் கீழ் குற்றமாக கருதப்படுகின்றது” என்றார்.

மேலும் குறித்த இளைஞனிடம் தொடர்ந்தும் விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாகவும் இன்று நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அண்மையில் வெளியாகிய “மேதகு” திரைப்படம் தொடர்பான பதிவை முகநூலில் பகிர்ந்தமைக்காகவே  குறித்த இளைஞன் கைது செய்யப் பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

https://www.thaarakam.com/news/359049ca-d0af-4ec9-81fc-83bfc93bb339

 

 

  • கருத்துக்கள உறவுகள்

பெயரை சொன்னாலே சும்மா அதிரிதில்ல ...சிங்களத்துக்கு....திருப்பி அடிச்சதால வந்த பயம்.......நாடு பிரிவனைக்கு போகது ஒருநாளும் ஆனால் உங்கன்ட பயம் தொடர் கதை தான்....

 

அது சரி இப்படி யாழ்களத்திலிருந்து எழுதி போட்டு ஊருக்கு துணிஞ்சு போகலாமோ

  • கருத்துக்கள உறவுகள்

பட இயக்குனர், நடிகர் என இதில் சம்பந்தப்பட்டவர்களுக்காகவும் தமது எதிர்ப்பினை தெரிவிக்கலாமே. அந்தந்த நாடுகளில் அவர்கள் தம் நாட்டு சட்ட திட்டங்களுக்கு ஏற்ப தமிழருக்கு சாதகமாய் ஏதாவது செயற்படுத்தினால் அங்கு எதிர்ப்பு தெரிவிப்பதும், அவர்களுக்கு பாடம் நடத்துவதும் தமது நாடு எவ்வளவு சர்வாதிகார இறுக்கத்தில் இருக்கிறது என்பதை தாங்களாகவே காட்டிக்கொடுத்து விடுவார்கள். இதற்குள் மனித உரிமை காக்கினமாமெல்லே. 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, putthan said:

பெயரை சொன்னாலே சும்மா அதிரிதில்ல ...சிங்களத்துக்கு....திருப்பி அடிச்சதால வந்த பயம்.......நாடு பிரிவனைக்கு போகது ஒருநாளும் ஆனால் உங்கன்ட பயம் தொடர் கதை தான்....

 

அது சரி இப்படி யாழ்களத்திலிருந்து எழுதி போட்டு ஊருக்கு துணிஞ்சு போகலாமோ

முகநூலில் தான் இப்ப தொடங்கியிருக்கு, போக போக தான் தெரியும்!

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, கிருபன் said:

“மேதகு” திரைப்படம் குறித்து முகநுாலில் பதிந்தவர் பயங்கரவாதச்சட்டத்தில் கைது

தென்  தமிழீழம் :-

தமிழீழ  தேசியத் தலைவர் வே.பிரபாகரனை  போற்றி முகநூலில் கருத்து வெளியிட்டிருந்த திருகோணமலையைச் சேர்ந்த இளைஞர் ஒருவர்  பயங்கரவாத சட்டத்தின் கீழ் பேரினவாத சிங்கள காவல்துறை குற்றப்பிரிவால்  கைது செய்யப்பட்டுள்ளார்.

திருகோணமலையில்  முச்சக்கரவண்டிச் சாரதியாக கடமையாற்றும் 24 வயதுடைய இளைஞரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

இது குறித்து கருத்து வெளியிட்ட  காவல்துறைப் பேச்சாளரும் பிரதிப் பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோகண,

“தேசிய ஒற்றுமையை சீர்குலைக்கும் வகையிலான பதிவுகளை இட்டிருப்பதாலும் பயங்கரவாத தடைச்சட்டம், அரசியல், சிவில் உரிமைக்கான சர்வதேச சட்டம் என்பவற்றின் கீழ் குற்றமாக கருதப்படுகின்றது” என்றார்.

மேலும் குறித்த இளைஞனிடம் தொடர்ந்தும் விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாகவும் இன்று நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அண்மையில் வெளியாகிய “மேதகு” திரைப்படம் தொடர்பான பதிவை முகநூலில் பகிர்ந்தமைக்காகவே  குறித்த இளைஞன் கைது செய்யப் பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

https://www.thaarakam.com/news/359049ca-d0af-4ec9-81fc-83bfc93bb339

 

 

படம், சிங்களத்தில டப்பிங் வந்தா என்ன செய்யபோகினம்?

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, putthan said:

பெயரை சொன்னாலே சும்மா அதிரிதில்ல ...சிங்களத்துக்கு....திருப்பி அடிச்சதால வந்த பயம்.......நாடு பிரிவனைக்கு போகது ஒருநாளும் ஆனால் உங்கன்ட பயம் தொடர் கதை தான்....

 

அது சரி இப்படி யாழ்களத்திலிருந்து எழுதி போட்டு ஊருக்கு துணிஞ்சு போகலாமோ

 

அந்தளவுக்கு சிங்களவனுக்கு  வராது தெரியாது??

ஆனால்  எங்கடயள்  நிச்சயமா போட்டுக்கொடுக்கும்???😭

  • கருத்துக்கள உறவுகள்
25 minutes ago, விசுகு said:

 

அந்தளவுக்கு சிங்களவனுக்கு  வராது தெரியாது??

ஆனால்  எங்கடயள்  நிச்சயமா போட்டுக்கொடுக்கும்???😭

அதாலை தானே புனை பெயரிலை இருக்கிறோம்.

சொந்த பெயரிலை இருக்கிற ஆட்கள் முக்கியமா அரசியல் கதையாயினம் அல்லது, குண்டக்க, மண்டக்கவா கதைப்பினம்.

  • கருத்துக்கள உறவுகள்
46 minutes ago, Nathamuni said:

அதாலை தானே புனை பெயரிலை இருக்கிறோம்.

சொந்த பெயரிலை இருக்கிற ஆட்கள் முக்கியமா அரசியல் கதையாயினம் அல்லது, குண்டக்க, மண்டக்கவா கதைப்பினம்.

நாங்க மே 18 க்கு பின் போவதில்லை என்ற வைராக்கியம் .

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Nathamuni said:

அதாலை தானே புனை பெயரிலை இருக்கிறோம்.

சொந்த பெயரிலை இருக்கிற ஆட்கள் முக்கியமா அரசியல் கதையாயினம் அல்லது, குண்டக்க, மண்டக்கவா கதைப்பினம்.

அதாவது... ஈயம் பூசின மாதிரியும், ஈயம்  பூசாத மாதிரியும்... இருக்க வேணும் எண்டு சொல்லுறியள். 🤣

  • கருத்துக்கள உறவுகள்
48 minutes ago, பெருமாள் said:

நாங்க மே 18 க்கு பின் போவதில்லை என்ற வைராக்கியம் .

 

எல்லா இடமும்  சுத்துகிற நீங்க  ஏன்  ஊருக்கு மட்டும் போறதில்லை? என்று  என்னிடம்  கேட்போருக்கு 

நான் சொல்லும்  பதில் :

இன்றைய சிங்களவனுக்கு என்னை தெரியாது ??

அந்தளவுக்கு  அவனுக்கு  வராது????

ஆனால்  எங்கடயள்  நிச்சயமா போட்டுக்கொடுக்கும்???😪

என்ர எதிரி வெளியில  இல்லை என்னோட தான்....?

Edited by விசுகு
ஒரு வரிகள் சேர்க்க

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாரும் தாங்கள் தாங்கள அவதானமாகத்தான இருக்கினம்.அது தப்பும் இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, விசுகு said:

 

அந்தளவுக்கு சிங்களவனுக்கு  வராது தெரியாது??

ஆனால்  எங்கடயள்  நிச்சயமா போட்டுக்கொடுக்கும்???😭

அவர்கள் சிங்களத்தின் முகவர்களாக செயற்பட அமர்த்தப்பட்டுளார்கள். அது அவர்களின் தொழில். கேட்டால் புலனாய்வாளர். 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
8 hours ago, விசுகு said:

 

எல்லா இடமும்  சுத்துகிற நீங்க  ஏன்  ஊருக்கு மட்டும் போறதில்லை? என்று  என்னிடம்  கேட்போருக்கு 

நான் சொல்லும்  பதில் :

இன்றைய சிங்களவனுக்கு என்னை தெரியாது ??

அந்தளவுக்கு  அவனுக்கு  வராது????

ஆனால்  எங்கடயள்  நிச்சயமா போட்டுக்கொடுக்கும்???😪

என்ர எதிரி வெளியில  இல்லை என்னோட தான்....?

இலங்கையில் இருப்பவர்கள் 80களில் இருந்த மனோநிலைக்கு வந்து விட்டார்கள்..
தொலைபேசியில் நீ எப்பிடிச்சுகம்
நான் நல்ல சுகம். நாட்டுநிலைமைகள் பற்றி கேட்டால் ஆடு புல்லு மேயுது கோழி முட்டை போட்டது என்று கதையை மாற்றி விடுகின்றார்கள்.

அவர்கள் பிரச்சனை இல்லாமல் வாழ வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, satan said:

அவர்கள் சிங்களத்தின் முகவர்களாக செயற்பட அமர்த்தப்பட்டுளார்கள். அது அவர்களின் தொழில். கேட்டால் புலனாய்வாளர். 

புலனாய்வாளர்களும் பிழைக்கத்தானே வேணும்....என்று சொன்னாலும் சொல்லுவினம்....

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, குமாரசாமி said:

இலங்கையில் இருப்பவர்கள் 80களில் இருந்த மனோநிலைக்கு வந்து விட்டார்கள்..
தொலைபேசியில் நீ எப்பிடிச்சுகம்
நான் நல்ல சுகம். நாட்டுநிலைமைகள் பற்றி கேட்டால் ஆடு புல்லு மேயுது கோழி முட்டை போட்டது என்று கதையை மாற்றி விடுகின்றார்கள்.

அவர்கள் பிரச்சனை இல்லாமல் வாழ வேண்டும்.

நாட்டில இருக்கிற மூன்று பாசையில் கதைச்சாலும் கண்டு பிடித்து விடுவார்கள்.... சிங்களவன் சீனா பாசை படிச்சு விளங்க முதல் எங்கன்ட சனமும் நாங்களும் சீனா பாசை படிச்சு சிங்களவனுக்கு புலனாய்வு சிங்கங்களுக்கும் தண்ணி காட்ட வேண்டும் ....

  • கருத்துக்கள உறவுகள்
34 minutes ago, குமாரசாமி said:

இலங்கையில் இருப்பவர்கள் 80களில் இருந்த மனோநிலைக்கு வந்து விட்டார்கள்..
தொலைபேசியில் நீ எப்பிடிச்சுகம்
நான் நல்ல சுகம். நாட்டுநிலைமைகள் பற்றி கேட்டால் ஆடு புல்லு மேயுது கோழி முட்டை போட்டது என்று கதையை மாற்றி விடுகின்றார்கள்.

அவர்கள் பிரச்சனை இல்லாமல் வாழ வேண்டும்.

அவ்வளவோடு நிறுத்திக்கொண்டால்  பிரச்சனையை கேட்பவர்கள் விளங்கி  நிறுத்திக்கொள்கிறார்கள். கேட்காமலேயே எதிரியை புகழ்பவர்களாலும், போர்த்து மூடுபவர்களாலுமே பிரச்சனை.

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, விசுகு said:

 

எல்லா இடமும்  சுத்துகிற நீங்க  ஏன்  ஊருக்கு மட்டும் போறதில்லை? என்று  என்னிடம்  கேட்போருக்கு 

நான் சொல்லும்  பதில் :

இன்றைய சிங்களவனுக்கு என்னை தெரியாது ??

அந்தளவுக்கு  அவனுக்கு  வராது????

ஆனால்  எங்கடயள்  நிச்சயமா போட்டுக்கொடுக்கும்???😪

என்ர எதிரி வெளியில  இல்லை என்னோட தான்....?

ஐயா உங்களுக்கு இது வெறும் மனப்பயம்.

நீங்கள் இலங்கை குடியுரிமை இல்லை தானே?

தனியாக செல்லாமல் சேர்ந்து செல்லுங்கள். இலங்கை பயணம் பற்றி நெருக்கமான உறவுகள், நண்பர்கள், குடும்பத்தினருக்கு மட்டும் தெரிந்தால் போதும்.

அங்கு அரசியலை தவிர்த்து அடக்கமாக வாசியுங்கள். ஒரு சிக்கலும் வராது.

உங்களை போன்றவர்கள் கட்டாயம் இலங்கை சென்று யதார்த்த நிலமையை பார்த்து வரவேண்டும்.

ஒரு தடவை சென்று வந்தால் மனப்பயம் நீங்கிவிடும்.

நீங்கள் தடை செய்யப்பட்ட பட்டியலில் இருந்தால் உள்ளே அனுமதிக்காமல் திருப்பி அனுப்புவார்கள். 

இலங்கையில் போர் ஓய்ந்து விட்டது. வெளிநாட்டு மக்களின் வருகையை இலங்கை எதிர்பார்க்கின்றது. 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
31 minutes ago, நியாயத்தை கதைப்போம் said:

நீங்கள் தடை செய்யப்பட்ட பட்டியலில் இருந்தால் உள்ளே அனுமதிக்காமல் திருப்பி அனுப்புவார்கள். 

எப்படியானவர்கள் தடை செய்யப்பட்ட பட்டியலுக்குள் அடக்கப்படுவார்கள்?

33 minutes ago, நியாயத்தை கதைப்போம் said:

தனியாக செல்லாமல் சேர்ந்து செல்லுங்கள்.

தனியாக சென்று ஏதாவது நடக்கும் என்றால் உத்தரவாதம் இல்லாத நாடு என்றுதானே அர்த்தம்?

  • கருத்துக்கள உறவுகள்
27 minutes ago, குமாரசாமி said:

எப்படியானவர்கள் தடை செய்யப்பட்ட பட்டியலுக்குள் அடக்கப்படுவார்கள்?

தனியாக சென்று ஏதாவது நடக்கும் என்றால் உத்தரவாதம் இல்லாத நாடு என்றுதானே அர்த்தம்?

யாரோடை சேர்ந்து ......................??? 

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, putthan said:

அது சரி இப்படி யாழ்களத்திலிருந்து எழுதி போட்டு ஊருக்கு துணிஞ்சு போகலாமோ

 வெளிக்கிட முதல்ல ஒருதடவை  உங்கட கிரகபலனை பாத்திட்டு வெளிக்கிடுங்கோ. மதம் பிடிச்சதுகளுக்கு திரும்ப எப்போ  பிடிக்கும் என்று யாருக்கும் தெரியாது, யாரையும் குறைசொல்லவும் முடியாது. ஏனென்றால் அது அவர்களோடு கூடப்பிறந்தது. இப்போ கொஞ்சம் அடங்கியிருக்குது, உங்கட பொல்லாத கிரகம் உச்சத்திலிருந்தால் அது அவர்களுக்கு திரும்பவும் கூடும். எதுக்கும் முன் ஜாக்கிரதை வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, நியாயத்தை கதைப்போம் said:

ஐயா உங்களுக்கு இது வெறும் மனப்பயம்.

நீங்கள் இலங்கை குடியுரிமை இல்லை தானே?

தனியாக செல்லாமல் சேர்ந்து செல்லுங்கள். இலங்கை பயணம் பற்றி நெருக்கமான உறவுகள், நண்பர்கள், குடும்பத்தினருக்கு மட்டும் தெரிந்தால் போதும்.

அங்கு அரசியலை தவிர்த்து அடக்கமாக வாசியுங்கள். ஒரு சிக்கலும் வராது.

உங்களை போன்றவர்கள் கட்டாயம் இலங்கை சென்று யதார்த்த நிலமையை பார்த்து வரவேண்டும்.

ஒரு தடவை சென்று வந்தால் மனப்பயம் நீங்கிவிடும்.

நீங்கள் தடை செய்யப்பட்ட பட்டியலில் இருந்தால் உள்ளே அனுமதிக்காமல் திருப்பி அனுப்புவார்கள். 

இலங்கையில் போர் ஓய்ந்து விட்டது. வெளிநாட்டு மக்களின் வருகையை இலங்கை எதிர்பார்க்கின்றது. 

இலங்கையில் உள்ளவர்கள் பாவம், உலக நாடுகள் இலங்கையர்களுக்கு தடையற்ற விசா வழங்கினால் தமிழர்கள் மட்டுமல்ல சிங்களவர்கள் கூட இலஙகையை விட்டு வெளியேறிவிடுவார்கள், இலங்கையில் உள்ள முன்னாள் ஜனாதிபதியும் வெளினாடுதான் தற்போதைய ஜனாதிபதியும் வெளிநாடுதான, ஆனால் சாதாரண மக்களமட்டும் பரிதாபத்துக்குரியவர்கள், அவர்கள் அங்குதான் வாழவேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, நியாயத்தை கதைப்போம் said:

ஐயா உங்களுக்கு இது வெறும் மனப்பயம்.

நீங்கள் இலங்கை குடியுரிமை இல்லை தானே?

தனியாக செல்லாமல் சேர்ந்து செல்லுங்கள். இலங்கை பயணம் பற்றி நெருக்கமான உறவுகள், நண்பர்கள், குடும்பத்தினருக்கு மட்டும் தெரிந்தால் போதும்.

அங்கு அரசியலை தவிர்த்து அடக்கமாக வாசியுங்கள். ஒரு சிக்கலும் வராது.

உங்களை போன்றவர்கள் கட்டாயம் இலங்கை சென்று யதார்த்த நிலமையை பார்த்து வரவேண்டும்.

ஒரு தடவை சென்று வந்தால் மனப்பயம் நீங்கிவிடும்.

நீங்கள் தடை செய்யப்பட்ட பட்டியலில் இருந்தால் உள்ளே அனுமதிக்காமல் திருப்பி அனுப்புவார்கள். 

இலங்கையில் போர் ஓய்ந்து விட்டது. வெளிநாட்டு மக்களின் வருகையை இலங்கை எதிர்பார்க்கின்றது. 

மனப்பயத்திற்கு

1) ஏன் தனியாக செல்லாமல் சேர்ந்து செல்ல வேண்டும்? ஏதாவது மருத்துவக் காரணங்கள் உள்ளதா 🤔?

2) பயணம் பற்றி ஏன் உறவுகள் நணபர்கள் குடும்பத்தினர்  என மட்டுப்படுத்த வேண்டும்?

3) சிறீலங்கா பயணத்திற்கும் வெளிநாட்டு குடியுரிமைக்கும் என்ன தொடர்பு?

 

நான் quote பண்ணிய கருத்திற்கு பச்சை இட்ட கற்பகம் அவர்களுக்கும் சேர்த்தே எனது கேள்விகள்.

  • கருத்துக்கள உறவுகள்

@Nathamuniயிடம் ஒரு கடிதம் வாங்கி கொண்டு போனால் ஒரு பிரச்சனையும் இராது😎

நான் சொன்னது சரிதானே தல🤣

  • கருத்துக்கள உறவுகள்
Just now, goshan_che said:

@Nathamuniயிடம் ஒரு கடிதம் வாங்கி கொண்டு போனால் ஒரு பிரச்சனையும் இராது😎

நான் சொன்னது சரிதானே தல🤣

ஏர்போர்ட்டில இறங்கி, நம்ம பெயரை சொல்லுங்கோ.... கடிதமே தேவையில்லை. பறந்தடிச்சுக்கொண்டு அலுவல் பார்த்து அனுப்பி வைப்பினம். 😁

நானே உங்கட கடிதம் வாங்கி, டக்லஸ் அங்கிள் இடம் ஒரு அலுவல் பார்க்க வேணும் எண்டு இருக்கிறன். உதவாமலே போவியள்.... 🤔
 

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, நியாயத்தை கதைப்போம் said:

ஐயா உங்களுக்கு இது வெறும் மனப்பயம்.

நீங்கள் இலங்கை குடியுரிமை இல்லை தானே?

தனியாக செல்லாமல் சேர்ந்து செல்லுங்கள். இலங்கை பயணம் பற்றி நெருக்கமான உறவுகள், நண்பர்கள், குடும்பத்தினருக்கு மட்டும் தெரிந்தால் போதும்.

அங்கு அரசியலை தவிர்த்து அடக்கமாக வாசியுங்கள். ஒரு சிக்கலும் வராது.

உங்களை போன்றவர்கள் கட்டாயம் இலங்கை சென்று யதார்த்த நிலமையை பார்த்து வரவேண்டும்.

ஒரு தடவை சென்று வந்தால் மனப்பயம் நீங்கிவிடும்.

நீங்கள் தடை செய்யப்பட்ட பட்டியலில் இருந்தால் உள்ளே அனுமதிக்காமல் திருப்பி அனுப்புவார்கள். 

இலங்கையில் போர் ஓய்ந்து விட்டது. வெளிநாட்டு மக்களின் வருகையை இலங்கை எதிர்பார்க்கின்றது. 

உங்களுக்கு என்னைவிட அங்குள்ள நிலை புரிகிறது. ஆனால்

தனியாக

அடக்கமாக

ஒருத்தருக்கும் தெரியாமல் 

.........

........

......

என்று சொல்கிறீர்கள்.

அது விழுங்கி விடும் என்று நான் சொல்வதை ஏற்காத தாங்கள் இப்படி நடந்தால் தப்பலாம் என்கிறீர்கள்.

என்னால் மேலே எழுதிய எதையும் தவிர்க்க முடியாத போது உங்கள் பதில்???

என் மண்ணுக்காக போராடியவரை நான் சந்திக்க முடியாது விட்டால்?

என் மண்ணுக்காக உயிர் கொடுத்தோரை என்னால் வணங்க முடியாது விட்டால்??

அந்த மண்ணில் நடக்கும் அவலங்களை என்னால் பேச முடியாது விட்டால்??

இவ்வளவையும் தவிர்த்து நான் அந்த நாட்டுக்கு எதற்காக போகவேண்டும்???

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.