Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நியுசிலாந்தில் வணிகவளாகத்தில் கத்திக்குத்து தாக்குதலை மேற்கொண்டவர் இலங்கையை சேர்ந்தவர்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, valavan said:

தொடர்ச்சியாக கண்காணிக்கப்பட்டு வந்த ஒருவரை பிடித்து நாடு கடத்தாமல், கடைசிவரை அவரை பத்திரமா பாதுகாத்து நியூசிலாந்து மக்களுக்குகத்திகுத்து வாங்கி கொடுத்திருக்கு காவல்துறை.

வளவன்….சிலவேளை, இந்த முஸ்லீம் பயங்கர வாதிகளை, சிலோன் சோனகனை வைத்து… கூண்டோடை அப்பிறதுக்கு, நியூசிலாந்து காவல் துறை திட்டம் போட்டிருக்கலாம். அதுக்குள்ளை.. சிலோன் சோனலன் முந்தி விட்டான்.

என்றாலும்… அவனை, 60 வினாடிக்குள்… அல்லாவிடம் அனுப்பி வைத்து விட்டார்கள். இப்ப… அவன் அங்கை, 76 கன்னிப் பெண்களுக்கு… கால் கழுவி கொண்டிருப்பான்.

Edited by தமிழ் சிறி

  • Replies 71
  • Views 5k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

நியூஸிலாந்தில் அப்பாவி ம‌க்க‌ள் மீது மேற்கொள்ள‌ப்ப‌ட்ட‌ த‌னி ந‌ப‌ர் தாக்குத‌லை கடுமையாக கண்டிக்கிறோம்.

 

received_513032726623299.jpeg

நியூஸிலாந்து போன்ற‌ அமைதியான‌ நாடுக‌ளில் வாழ‌க்கிடைப்ப‌தே பெரும் பாக்கிய‌மாகும். 

அத‌னை மீறி இத்த‌கைய‌ தாக்குத‌லை ந‌ட‌த்திய‌வ‌ர் நிச்ச‌ய‌ம் ஒரு ம‌ன‌ நோயாளியாக‌த்தான் இருக்கும்.

 

இந்த‌ நிலையில் த‌னி ஒரு ம‌னித‌னின் த‌வ‌றை ஒரு ச‌மூக‌த்தின் மீதோ, ச‌ம‌ய‌த்தின் மீதோ போடாம‌ல் அந்த‌ ம‌னித‌ன் மீது ம‌ட்டுமே போட்ட‌ பிர‌த‌ம‌ர் ஜெஸிந்தா மெட‌ம் பாராட்டுக்குரிய‌வ‌ர், ம‌ரியாதைக்குரிய‌வ‌ர், எடுத்துக்காட்டான‌வ‌ர்.

 

ஜெசிந்தா மெட‌ம் எதிர்க்க‌ட்சி த‌லைவி அல்ல‌. நாட்டின் பிர‌த‌ம‌ர். அத்த‌கைய‌ பிர‌த‌ம‌ர் இவ்வாறு துணிச்ச‌லாக‌ பேசியுள்ளார்.

 

ஆனால் ந‌ம‌து நாட்டில் சில‌ முட்டாள்க‌ள் ஈஸ்ட‌ர் தாக்குத‌லை ந‌ட‌த்திய‌ போது இப்ப‌டியொரு வார்த்தையை பிர‌த‌ம‌ர் ர‌ணிலோ, அமைச்ச‌ர் ச‌ஜித்தோ சொல்ல‌வில்லை. மாறாக‌ ஒரு அப்பாவி முஸ்லிம் ச‌மூக‌த்தின் மீது அடிக்க‌ விட்டு பார்த்துக்கொண்டிருந்த‌ன‌ர்.

 

 

த‌னிந‌ப‌ர்க‌ள் த‌வ‌று செய்வ‌து எல்லா ச‌மூக‌ங்க‌ளிலும் உள்ள‌து. அத‌ற்காக‌ அந்த‌ ச‌மூக‌த்தின் மீது ப‌ழி போடுவ‌து அறிவுள்ளோர் செய‌ல் அல்ல‌.

 

ஆட்சியாள‌ர்க‌ளின் ம‌னோ நிலையை வைத்தே நாட்டு ம‌க்க‌ள் எதையும் தீர்மானிப்ப‌ர். ஒரு ச‌மூக‌த்துக்கெதிராக‌ தாக்குத‌ல் ந‌ட‌த்துவ‌தை அர‌சு அனும‌திக்கும் என்ற‌ உண‌ர்வு இருந்தால் ம‌ட்டுமே கும்ப‌லாக‌ தாக்க‌ முனைவ‌ர்.

 

இவ்வாறுதான் 83 ஜூலை தாக்குத‌லும், க‌ண்டி, திக‌ன‌, மினுவாங்கொடை, காலி என‌ ஐ தே க‌ ஆட்சியின் அனும‌தியுட‌ன் தாக்குத‌ல் ந‌ட‌த்த‌ப்ப‌ட்ட‌தாகும்.

 

அதே போல் யாரோ சில‌ர் செய்த‌ அமெரிக்க‌ கோபுர‌ தாக்குத‌லுக்காக‌ அமெரிக்கா ஆப்கான் மீது குண்டுக‌ள் போட்டு ல‌ட்ச‌க்க‌ன‌க்கான‌ பொது ம‌க்க‌ளை அழித்த‌ன‌ர்.

 

இந்த‌ வ‌கையில் பிர‌த‌ம‌ர் ஜெஸிந்தாவின் வார்த்தைக‌ள் அர‌சிய‌ல் த‌லைவ‌ர்க‌ளுக்கு எடுத்துக்காட்டாகும்.

 

Mubarak Abdul Majeed

https://www.madawalaenews.com/2021/09/blog-post_97.html

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, தமிழ் சிறி said:

வளவன்….சிலவேளை, இந்த முஸ்லீம் பயங்கர வாதிகளை, சிலோன் சோனகனை வைத்து… கூண்டோடை அப்பிறதுக்கு, நியூசிலாந்து காவல் துறை திட்டம் போட்டிருக்கலாம். அதுக்குள்ளை.. சிலோன் சோனலன் முந்தி விட்டான்.

என்றாலும்… அவனை, 60 வினாடிக்குள்… அல்லாவிடம் அனுப்பி வைத்து விட்டார்கள். இப்ப… அவன் அங்கை, 76 கன்னிப் பெண்களுக்கு… கால் கழுவி கொண்டிருப்பான்.

இந்த நபர் பள்ளிவாசலில் இன்னொருவரிடம் தான் சிரியா போய் ஐசில் உடன் சேரபோவதாக சொல்லி உள்ளார், பின்னர் சிங்கபூருக்கு ஒருவழி டிக்கெட் போட்டு ஆக்லாண்ட் ஏர்போட்டில் தடுத்துள்ளார்கள், வேட்டை கத்தி வாங்கி கைதாகியுள்ளார், ஐசில் பிரசுரங்களை வைத்திருந்துள்ளார்.

எனிலும் இவரை “பயங்கரவாத தாக்குதலுக்கு தயார் படுத்தினார்” என்று தண்டித்து வருட கணக்கில் உள்ளே போட நியூசிலாந்து சட்டம் இடம் கொடுக்கவில்லையாம்.

அதனால் ஐசில் ஆதரவு பிரசுரம் வைத்திருந்தார், கத்தி வாங்கினார் என்ற சின்ன குற்றத்துக்கே வழக்கு போட்டுள்ளார்கள்.

அந்த வழக்கிலும் “நான் இன்னும் 10 கத்தி வாங்குவேன், அது என் உரிமை” என ஜூரியிடம் கூறியுள்ளார்.

நியூசிலாந்து சட்டத்தில் உள்ள ஓட்டைகள்காரணமாகவே இந்த தாக்குதல் சாத்தியமானதாக தெரிகிறது.

இப்பவும் இவரின் பெயரை வெளியிட சட்ட தடை. இன்னும் சில நாட்கள் எடுக்குமாம் பெயரை சொல்ல.

https://www.dailymail.co.uk/news/article-9957273/New-Zealand-police-waited-outside-supermarket-knifeman-injured-seven-avoid-spotted.html

  • கருத்துக்கள உறவுகள்

நியூசிலாந்தில் பொலிஸாரால் சுட்டுக்கொல்லப்பட்டவர் மட்டக்களப்பு- காத்தான்குடியை சேர்ந்தவர் என அடையாளம்!

 
 

நியூசிலாந்தில் உள்ள பல்பொருள் அங்காடி ஒன்றில் மக்கள் மீது தாக்குதலை நடத்திய நிலையில் பொலிஸாரால் சுட்டுக்கொல்லப்பட்டவர் மட்டக்களப்பு காத்தான்குடியை சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

நியூசிலாந்தின் ஓக்லாந்திலுள்ள விற்பனை நிலையமொன்றில் மக்கள் மீது தாக்குதல் நடாத்திய குறித்த நபர், ஐ.எஸ். அடிப்படைவாத கொள்கைகள் கொண்ட இலங்கையர் எனவும் இது தீவிரவாத தாக்குதல் எனவும் பிரதமர் ஜெசிந்தா ஆர்டெர்ன் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் இவ்வாறு சுட்டுக்கொல்லப்பட்டவர், மட்டக்களப்பு- காத்தான்குடி முதலாம் வட்டாரத்தினை சேர்ந்த முகமட் சம்சுதீன் ஆதில் என்பவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இவர் எட்டு வயதிலேயே கொழும்புக்குச் சென்று அங்கு கொழும்பு இந்துக்கல்லூரியில் கல்வி கற்றுள்ளதாகவும் பின்னர் 2011ஆம் ஆண்டு நியூசிலாந்து சென்றுள்ளதாகவும் ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

குறித்த விடயம் தொடர்பான விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் மற்றும் குற்றப்புலனாய்வுத்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.

https://athavannews.com/2021/1237640

  • கருத்துக்கள உறவுகள்

உறுதிப்படாத தகவல்.

பயங்கரவாதி சம்சுதீன் - கொழும்பு சென்பீட்டர்ஸ் மாணவன். அவரின் தந்தை ரகர் வீரர் துவான் சம்சுதீன்.

  • கருத்துக்கள உறவுகள்
23 hours ago, விசுகு said:

அவர்கள் அதை ஒத்துக்கொள்ளவதில்லை 

ஆனால் உலகத்துக்கு சிங்களம் அப்படி தான் காட்டும்.

பிரித்தானியாவில் தடையை நீடிக்க சொன்ன காரணங்களை பார்த்தால் இது புரியும்??

 

 

20 hours ago, குமாரசாமி said:

 இன்று சிலோன் முஸ்லீம் யாரவது நான் தமிழன் என்று சொல்ல கேள்விப்பட்டுருக்கின்றீர்களா?
ஈழத்தமிழர் பிரச்சனை சம்பந்தமாக ஏதாவது கூட்டம் நடக்குது எண்டால் மட்டும்  தங்களுக்கும் ஒரு அலகு, சுழகு வேணுமெண்டு தொப்பியோட குந்திடுவாங்க....

எனக்கு அவர்களை பிடிக்காது என்பதற்காய் அவர்கள் தமிழர் இல்லை என்றாகி விட மாட்டார்கள் ...அவர்களது தாய் மொழி தமிழ் ...அதைத் தான் அவர்கள் வீட்டில் கதைக்கிறார்கள் ...தமிழ் சோனகர் என்றே தங்களை சொல்லிக் கொள்கிறார்கள் 
 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
3 hours ago, ரதி said:

 

எனக்கு அவர்களை பிடிக்காது என்பதற்காய் அவர்கள் தமிழர் இல்லை என்றாகி விட மாட்டார்கள் ...அவர்களது தாய் மொழி தமிழ் ...அதைத் தான் அவர்கள் வீட்டில் கதைக்கிறார்கள் ...தமிழ் சோனகர் என்றே தங்களை சொல்லிக் கொள்கிறார்கள் 
 

இலங்கையில் நடந்த இனக்கலவரங்களில் சிங்களம் யாரை தேடித்தேடி  கொலை செய்து,பெண்களை வன்புணர்வு செய்து, சொத்துக்களை சூறையாடியது? இனக்கலவரங்களில் முஸ்லீம்கள் அகதியாக மட்டக்களப்பு யாழ்ப்பாணம் நோக்கி சென்றார்களா? ஈழத்தமிழர்  உரிமைப்போராட்டத்திற்க்காக இன்று எந்த முஸ்லீம் அரசியல்வாதி பாராளுமன்ற கூட்டங்களில் விவாதிக்கின்றார்? 😡

முஸ்லீம்களும் தமிழர் என்று சிங்கள இனவாதிகள் நினைக்கின்றார்களா?
 

 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
21 hours ago, நியாயத்தை கதைப்போம் said:

கனடா தமிழர்களும் குடும்பத்துக்கு பத்து பிள்ளைகளை பெற்று சந்ததியை விருத்தி செய்யலாமே? யார் மறித்தது?

நீங்கள் சொல்லுறது சரிதான்.......இருந்தாலும் தமிழர்கள் உழைத்து சம்பாதித்து சொந்தக்காலில் நிற்க விரும்பும் மானத்தமிழர்கள்.பிள்ளைக்காசில் பயங்கரவாதத்திற்கு காசு கொடுப்பவர்கள் அல்ல.வந்து சேர்ந்து வாழவைக்கும் நாட்டிற்கு கண்ணியமாக இருக்க நினைப்பவர்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, ரதி said:

 

எனக்கு அவர்களை பிடிக்காது என்பதற்காய் அவர்கள் தமிழர் இல்லை என்றாகி விட மாட்டார்கள் ...அவர்களது தாய் மொழி தமிழ் ...அதைத் தான் அவர்கள் வீட்டில் கதைக்கிறார்கள் ...தமிழ் சோனகர் என்றே தங்களை சொல்லிக் கொள்கிறார்கள் 
 

சரியாகச் சொன்னீர்கள்! நாம் என்ன தான் மணலுக்குள் தலை புதைத்தாலும்,  இன்று பி.பி.சியும் அவர் இலங்கையைச் சேர்ந்த தமிழர் என்று செய்தியில் அறிமுகம் செய்திருக்கிறது! ஏன்? இஸ்லாம் என்பது அவர் மதம்; தமிழ் என்பது இனம்!

"...He has now been identified as Ahamed Aathil Mohamed Samsudeen, a 32-year-old Tamil, who arrived in New Zealand in 2011 and sought refugee status"

https://www.bbc.com/news/world-asia-58446260 

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் பேசும் முஸ்லிம்கள்.. சர்வதேச.. மத அடிப்படைவாதக் குற்றங்களை இழைத்தால்.. அவர்கள் தமிழர்களாகி விடுகிறார்கள். ஆனால் உள்நாட்டில்.. அரசியல் உரிமை என்று வந்தால்.. தனி இனம்... இனச்சுத்திகரிப்பு..  தனி அலகு.. முஸ்லீம்கள் இனமாகி விடுகிறார்கள்.

பிபிசிக்கு தமிழ் முஸ்லிமுக்கும்.. தமிழர்களுக்கும் வித்தியாசம் தெரியல்லையா.. அல்லது.. இரு சமூகங்களுக்கும் இடையே உள்ள வேறுபாடு தெரியவில்லையா.. அல்லது இந்தச் செய்தியை விளங்காத மாதிரி வில்லங்கத்தில் புனைய முனைகிறதா பிபிசி..??!

  • கருத்துக்கள உறவுகள்

(பிபிசியிடம் எழுத்துமூலமாக.. தவறு சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. பார்ப்போம் செய்தியை திருத்தினமோ என்று. )

  • கருத்துக்கள உறவுகள்

அகதி கோரிக்கைக்கு விண்ணப்பித்துள்ளார் என செய்தியில் உள்ளது. அவர் தன்னை நியூசிலாந்து அரசுக்கு எப்படி அறிமுகம் செய்தார் என்று யாருக்கு தெரியும்? நீதிமன்ற தடை நீக்கப்பட்டு அவர் விபரம் பகிரங்கப்படுத்தப்பட்டால் உண்மை அறியவரும்.

3 hours ago, குமாரசாமி said:

நீங்கள் சொல்லுறது சரிதான்.......இருந்தாலும் தமிழர்கள் உழைத்து சம்பாதித்து சொந்தக்காலில் நிற்க விரும்பும் மானத்தமிழர்கள்.பிள்ளைக்காசில் பயங்கரவாதத்திற்கு காசு கொடுப்பவர்கள் அல்ல.வந்து சேர்ந்து வாழவைக்கும் நாட்டிற்கு கண்ணியமாக இருக்க நினைப்பவர்கள்.

அப்படித்தான் நானும் நம்பிக்கொண்டு உள்ளேன். 😉

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, பெருமாள் said:

உங்கள் கருத்து திரிக்கு சம்பந்தமில்லாத கருத்து .

உண்மைதான். சுட்டிக்காட்டியமைக்கு நன்றி. கனடா அகதிகள் விவகாரம், மற்றும் பல்லின மக்களின் அரசியல் பங்களிப்பு பற்றி வேறோர் உரையாடலில் வறுத்து எடுக்கலாம். 

  • கருத்துக்கள உறவுகள்

நியூசிலாந்து சூப்பர் மார்க்கெட்டில் 6 பேரை குத்திய இலங்கையர் காத்தான்குடியை சேர்ந்தவர்

  • யூ.எல். மப்றூக்
  • பிபிசி தமிழுக்காக
ஒரு மணி நேரத்துக்கு முன்னர்
கத்தியால் கொலை செய்தவர் - கோப்புப் படம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

நியூசிலாந்து ஒக்லான்ட் நகரிலுள்ள சூப்பர் மார்க்கட் ஒன்றில் பொதுமக்கள் ஆறு பேரை கத்தியால் குத்திய பின்னர் அந்த நாட்டு போலிசாரால் சுட்டுக் கொல்லப்பட்டதாக கூறப்பட்ட இலங்கையர், காத்தான்குடியைச் சேர்ந்தவர் எனத் தெரியவந்துள்ளது.

இலங்கை ஈஸ்டர் தொடர் குண்டுவெடிப்பின் மூளையாக செயல்பட்ட சஹரான் சொந்த ஊர் இது என்பது குறிப்பிடத்தக்கது.

நியூசிலாந்து கத்திக்குத்து சம்பவத்தில் குற்றம்சாட்டப்படும் இந்த நபர், 2011ஆம் ஆண்டு இலங்கையிலிருந்து நியூசிலாந்துக்கு மாணவர் விசா மூலம் சென்றவர் என இலங்கை போலீஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.

முகம்மது சம்சுதீன் அஹமட் ஆதில் என்பது அவர் பெயர் என்பதும் தெரியவந்துள்ளது. இவர் 1989ஆம் ஆண்டு பிறந்தவர் என, அவரது தயார் எம்.ஐ. பரீதா பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.

நியூசிலாந்தில் சுட்டுக் கொல்லப்பட்ட மேற்படி நபர், மட்டக்களப்பு புனித மெதடிஸ்த மத்திய கல்லூரி, அட்டுலுகம பிரதேசத்திலுள்ள பாடசாலை மற்றும், கொழும்பு இந்துக் கல்லூரி ஆகியவற்றில் கல்வி கற்றவர்.

இவருடைய தந்தை முகம்மட் சம்சுதீன் அரச பாடசாலைகளில் அதிபராகக் கடமையாற்றி ஓய்று பெற்ற பின்னர், தற்போது தனது மகளுடன் கனடாவில் வசித்து வருகிறார்.

முகம்மது சம்சுதீன் அஹமட் ஆதில்
 
படக்குறிப்பு,

முகம்மது சம்சுதீன் அஹமட் ஆதில்

ஆதிலுக்கு ஒரு சகோதரியும் இரண்டு ஆண் சகோதரர்களும் உள்ளனர். இவர்கள் அனைவரும் வெளிநாடுகளில் வசித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது. ஆதில் குடும்பத்தில் கடைசிப் பிள்ளையாவார்.

ஆதிலின் தாய் மட்டுமே தற்போது அவர் பிறந்த ஊரான காத்தான்குடியில் உள்ளார். இலங்கை போலீசார், குற்றப் புலனாய்வு பிரிவினர் உள்ளிட்ட பாதுகாப்பு தரப்பினர் ஆதிலின் தாயை தொடர்ச்சியாக விசாரித்து வருகின்றனர்.

இதேவேளை கனடாவிலுள்ள தனது மகளிடமும் அந்த நாட்டுப் போலீசார், ஆதில் தொடர்பில் விசாரணை நடத்தியதாகவும் அவரது தாய் பிபிசி தமிழிடம் மேலும் தெரிவித்தார்.

ஆதில் தொடர்பாக அவரது தாய் பிபிசி தமிழுக்கு வழங்கிய பிரத்யேக நேர்க்காணல் ஒன்று விரைவில் வெளியாகும்.

https://www.bbc.com/tamil/sri-lanka-58453628

உங்கள் முயற்சிக்கு மிக்க நன்றி. கவனத்தில் கொள்வார்கள் என நம்புவோமாக...........

9 hours ago, nedukkalapoovan said:

(பிபிசியிடம் எழுத்துமூலமாக.. தவறு சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. பார்ப்போம் செய்தியை திருத்தினமோ என்று. )

 

 

Edited by manimaran
Duplicated message

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, nedukkalapoovan said:

(பிபிசியிடம் எழுத்துமூலமாக.. தவறு சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. பார்ப்போம் செய்தியை திருத்தினமோ என்று. )

நல்ல முயற்சி நெடுக்ஸ். முஸ்லீம்களை தனி இனமாக Moors என்று இலங்கை சட்டங்களே சொல்லும் போது, இவரை தமிழ் என பிபிசி சொல்வது பிழைதான்.

எப்படியும் உங்களுக்கு பதில் போட்டே ஆக வேண்டும். என்ன சொல்கிறார்கள் என்பதை அறியத்தாருங்கள்.

திருத்தாவிட்டால் OFCOM போகலாம். 

 

Edited by goshan_che

  • கருத்துக்கள உறவுகள்

🤔 BBC தமிழிற்குதான் சரியான செய்திகளை போடத்தெரியவில்லை என்றால் BBC ஆங்கிலமும் பிரச்சனையாக உள்ளமையால் நான் இனிமேல் “The Age” அல்லது அதன் சகோதர பத்திரிக்கையான “Sydney Morning Herald” மட்டுமே வாசிக்க நினைத்துள்ளேன் ஏனெனில் அவர்கள் மாத்திரமே “The man who stabbed at least five people and injured another two in a terrorist attack at an Auckland shopping mall has been named as Ahamed Aathill Mohammad Samsudeen after a suppression order was lifted on Saturday night.

Samsudeen, 32, arrived in New Zealand in 2011 from Sri Lanka on a student visa.

A Muslim, he arrived seeking refugee status, claiming he and his father had experienced serious problems with Sri Lankan authorities due to their political backgrounds.” என செய்தி போட்டிருக்கிறார்கள்.. 

 https://www.google.com.au/amp/s/amp.smh.com.au/world/oceania/terrorist-who-stabbed-6-people-in-nz-named-20210904-p58otd.html

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, manimaran said:

உங்கள் முயற்சிக்கு மிக்க நன்றி. கவனத்தில் கொள்வார்கள் என நம்புவோமாக...........

 

 

 

3 hours ago, goshan_che said:

நல்ல முயற்சி நெடுக்ஸ். முஸ்லீம்களை தனி இனமாக Moors என்று இலங்கை சட்டங்களே சொல்லும் போது, இவரை தமிழ் என பிபிசி சொல்வது பிழைதான்.

எப்படியும் உங்களுக்கு பதில் போட்டே ஆக வேண்டும். என்ன சொல்கிறார்கள் என்பதை அறியத்தாருங்கள்.

திருத்தாவிட்டால் OFCOM போகலாம். 

 

 

முன்னைய முறைப்பாட்டிற்கு பதிலோ நடவடிக்கையோ பிபிசியால் எடுக்கப்படாத நிலை தொடர்வதால்.. மீண்டும் ஒரு முறைப்பாடு பதியப்பட்டுள்ளது.

இந்த உண்மைக்குப் புறம்பான பிபிசியின் செய்தி உள்ளடக்கத்திற்கு எதிராக தமிழ் மக்கள் பரந்த அளவில் தமது முறைப்பாட்டை பிபிசிக்கு சமர்ப்பிப்பது இன்னும் நல்லம். 

  • கருத்துக்கள உறவுகள்
Just now, nedukkalapoovan said:

 

 

முன்னைய முறைப்பாட்டிற்கு பதிலோ நடவடிக்கையோ பிபிசியால் எடுக்கப்படாத நிலை தொடர்வதால்.. மீண்டும் ஒரு முறைப்பாடு பதியப்பட்டுள்ளது.

இந்த உண்மைக்குப் புறம்பான பிபிசியின் செய்தி உள்ளடக்கத்திற்கு எதிராக தமிழ் மக்கள் பரந்த அளவில் தமது முறைப்பாட்டை பிபிசிக்கு சமர்ப்பிப்பது இன்னும் நல்லம். 

நானும் அனுப்புகிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்

2003ம் ஆம் ஆண்டு ஜனவறி மாதம் 29ம் திகதி முஸ்லிம்களால் மேற்கொள்ளப்பட்ட ஒலுவில் பிரகடனத்தின் பொழுது வாசிக்கப்பட்ட கவிதை ஒன்றில் தமிழர் தரப்பைக் குறிவைத்து கூறப்பட்டிருந்த சில வரிகள் இவை:

நாங்கள் அறுத்தெறிந்த தொப்புள் கொடி.. எங்கள் ஆண்குறியில் வெட்டி எறிந்த சதைத்துண்டு..

இவற்றால் அறிந்துகொள் – உன் மொழியால் நாங்கள் பேசும் மதம் பற்றி

இன்னும் உன்வெறி அடங்காமல் எங்களை அடித்துவிரட்ட உன் மொழிச் சாட்டையை நீ நீட்டினால்

எங்கள் நாவுகளை நாங்கள் அறுத்தெறிகின்றோம் – இனியும் உன்மொழி பேசாதபடிக்கு

  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, colomban said:

2003ம் ஆம் ஆண்டு ஜனவறி மாதம் 29ம் திகதி முஸ்லிம்களால் மேற்கொள்ளப்பட்ட ஒலுவில் பிரகடனத்தின் பொழுது வாசிக்கப்பட்ட கவிதை ஒன்றில் தமிழர் தரப்பைக் குறிவைத்து கூறப்பட்டிருந்த சில வரிகள் இவை:

நாங்கள் அறுத்தெறிந்த தொப்புள் கொடி.. எங்கள் ஆண்குறியில் வெட்டி எறிந்த சதைத்துண்டு..

இவற்றால் அறிந்துகொள் – உன் மொழியால் நாங்கள் பேசும் மதம் பற்றி

இன்னும் உன்வெறி அடங்காமல் எங்களை அடித்துவிரட்ட உன் மொழிச் சாட்டையை நீ நீட்டினால்

எங்கள் நாவுகளை நாங்கள் அறுத்தெறிகின்றோம் – இனியும் உன்மொழி பேசாதபடிக்கு

இழப்புகள் இரு தரப்பிலும் உண்டு.  

இரு தரப்பையும் தமிழர் என்ற அடைப்புக்குள் சேர்ப்பதும் இனி காலம் பிந்திய செயல்.

ஆனால் இருவருக்கும் ஒரே பொது வாழிடம்தான்.

தொடர்ந்தும் பழையதை  கிண்டாமல் - சிறுபான்மை stakeholders ஆக அரசியல் செய்வதே இரு தரப்புக்கும் நன்மை தரும். 

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, ஏராளன் said:

நியூசிலாந்து சூப்பர் மார்க்கெட்டில் 6 பேரை குத்திய இலங்கையர் காத்தான்குடியை சேர்ந்தவர்

  • யூ.எல். மப்றூக்
  • பிபிசி தமிழுக்காக
ஒரு மணி நேரத்துக்கு முன்னர்
கத்தியால் கொலை செய்தவர் - கோப்புப் படம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

நியூசிலாந்து ஒக்லான்ட் நகரிலுள்ள சூப்பர் மார்க்கட் ஒன்றில் பொதுமக்கள் ஆறு பேரை கத்தியால் குத்திய பின்னர் அந்த நாட்டு போலிசாரால் சுட்டுக் கொல்லப்பட்டதாக கூறப்பட்ட இலங்கையர், காத்தான்குடியைச் சேர்ந்தவர் எனத் தெரியவந்துள்ளது.

இலங்கை ஈஸ்டர் தொடர் குண்டுவெடிப்பின் மூளையாக செயல்பட்ட சஹரான் சொந்த ஊர் இது என்பது குறிப்பிடத்தக்கது.

நியூசிலாந்து கத்திக்குத்து சம்பவத்தில் குற்றம்சாட்டப்படும் இந்த நபர், 2011ஆம் ஆண்டு இலங்கையிலிருந்து நியூசிலாந்துக்கு மாணவர் விசா மூலம் சென்றவர் என இலங்கை போலீஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.

முகம்மது சம்சுதீன் அஹமட் ஆதில் என்பது அவர் பெயர் என்பதும் தெரியவந்துள்ளது. இவர் 1989ஆம் ஆண்டு பிறந்தவர் என, அவரது தயார் எம்.ஐ. பரீதா பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.

நியூசிலாந்தில் சுட்டுக் கொல்லப்பட்ட மேற்படி நபர், மட்டக்களப்பு புனித மெதடிஸ்த மத்திய கல்லூரி, அட்டுலுகம பிரதேசத்திலுள்ள பாடசாலை மற்றும், கொழும்பு இந்துக் கல்லூரி ஆகியவற்றில் கல்வி கற்றவர்.

இவருடைய தந்தை முகம்மட் சம்சுதீன் அரச பாடசாலைகளில் அதிபராகக் கடமையாற்றி ஓய்று பெற்ற பின்னர், தற்போது தனது மகளுடன் கனடாவில் வசித்து வருகிறார்.

முகம்மது சம்சுதீன் அஹமட் ஆதில்
 
படக்குறிப்பு,

முகம்மது சம்சுதீன் அஹமட் ஆதில்

ஆதிலுக்கு ஒரு சகோதரியும் இரண்டு ஆண் சகோதரர்களும் உள்ளனர். இவர்கள் அனைவரும் வெளிநாடுகளில் வசித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது. ஆதில் குடும்பத்தில் கடைசிப் பிள்ளையாவார்.

ஆதிலின் தாய் மட்டுமே தற்போது அவர் பிறந்த ஊரான காத்தான்குடியில் உள்ளார். இலங்கை போலீசார், குற்றப் புலனாய்வு பிரிவினர் உள்ளிட்ட பாதுகாப்பு தரப்பினர் ஆதிலின் தாயை தொடர்ச்சியாக விசாரித்து வருகின்றனர்.

இதேவேளை கனடாவிலுள்ள தனது மகளிடமும் அந்த நாட்டுப் போலீசார், ஆதில் தொடர்பில் விசாரணை நடத்தியதாகவும் அவரது தாய் பிபிசி தமிழிடம் மேலும் தெரிவித்தார்.

ஆதில் தொடர்பாக அவரது தாய் பிபிசி தமிழுக்கு வழங்கிய பிரத்யேக நேர்க்காணல் ஒன்று விரைவில் வெளியாகும்.

https://www.bbc.com/tamil/sri-lanka-58453628

கனடாவுக்கு நசல் இருக்கும் போல...🤭

அண்மையில் ஒரு வீடியோ.

ஒரு ஆப்கன் பெண்..... பத்து தலிபான்கள் வீதியோரத்தில் விசாரணை..... முழங்காலில் இருக்குமாறு சொல்லி..... அல்லாகு அக்பர் முழங்குகிறார்கள். தீடீரென பெண் சாய்கிறார். பின்னால் நின்ற ஒருவர் கைத்துப்பாக்கி புகை விடுகிறது.

இறை பேரை சொல்லியவாறே கொலைகள் செய்யும் மதம் இது ஒன்று தான் போலும் என்று நிணைக்க தோன்றியது.

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, colomban said:

எங்கள் நாவுகளை நாங்கள் அறுத்தெறிகின்றோம்

அதை செய்து இருந்தால் இலகுவாக குறிவைக்கப்படுவார்கள் என்று தெரிந்த படியால்தான் பிடிக்காத மொழியென்றாலும் அருவருப்பாய் கதைப்பதாலதான் தமிழ் அவர்கள் வாயில் செத்து பிழைக்குது .

அப்புதுல் கமீத் போன்ற வர்கள் மாறி பிறந்துவிட்டார்கள் அவர்களிடையே .

  • கருத்துக்கள உறவுகள்
On 3/9/2021 at 09:36, அக்னியஷ்த்ரா said:

அமைதி மார்க்க பேர்வழிகள் ஆரம்பிச்சுட்டானுவ ,பாவம் பிரதமர்  முக்காடு போட்டு முஸ்லிம்களுடன் குந்தியிருந்தும் இரக்கம் காட்டாமல் அவனுங்க வேலையை காட்டிவிட்டானுவ  

சம்மாந்தத்துறையில், சைவ கோயில் ஏதாவது அழிக்கப்பட்டு, அந்த  இடத்திலோ அல்லது அதற்கு அருகிலோ பள்ளிவாசலை எதாவது கட்டப்பட்டு இருக்கிறதா.


மட்டக்களப்பு பகுதியில் இருப்பவர்கள் இதை விபரமாக உறுதிப்படுத்த முடியுமா? 

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, goshan_che said:

நானும் அனுப்புகிறேன்.

நிறைய முறைப்பாடுகள் அனுப்பப்பட்டால் நடவடிக்கை எடுப்பார்கள் என்றே நினைக்கிறோம்.

பிபிசிக்கு அனுப்பப்பட்ட முறைப்பாட்டிற்கு தற்போது அவர்களால் ஒரு பதில் அனுப்பப்பட்டுள்ளது. அதன் கீழ்.. தமது செய்திப் பிரிவுக்கு இந்த முறைப்பாடு பாரப்படுத்தப்படும் என்றும்.. 24 மணி நேரத்துக்குள் இந்தச் செய்திக்கு எதிராக கிடைக்கும் முறைப்பாடுகளின் அடிப்படையில் அது நாளை காலையில் செய்தி மீளாய்வுப் பிரிவுக்குப் பாரப்படுத்தப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த முறைபாட்டிற்கான குறியீட்டு இலக்கமும் பதிவிடப்பட்டுள்ளது. 

வழமையான தமது முழுமையான வினைத்திறனாற்றலுக்கு 2 வாரங்கள் வரை அவகாசம் கோரப்பட்டுள்ளது. மேலும்.. கால அவகாசம் நீட்டிக்கப்படின்.. அது தெரியப்படுத்தப்படும் என்றும் சொல்லப்பட்டுள்ளது. 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.