Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இந்திய இராணுவ முக்கிய அதிகாரிகள் பயணித்த கெலிக்கொப்டர் விபத்து : 7 பேர் உயிரிழப்பு ?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இந்திய இராணுவ முக்கிய அதிகாரிகள் பயணித்த கெலிக்கொப்டர் விபத்து : 7 பேர் உயிரிழப்பு ?

இந்திய இராணுவ முக்கிய அதிகாரிகள் பயணித்த கெலிக்கொப்டர் ஒன்று விபத்திற்குள்ளாகியுள்ளதாக இந்திய விமானப்படை தெரிவித்துள்ளது.

Image

குறித்த விபத்து இந்தியாவின் தமிழ்நாடு குன்னூர் நீலகிரி மாவட்டம் காட்டேரி பகுதியில் இடம்பெற்றுள்ளது.

இந்தி இராணுவ உயர் அதிகாரிகள் சென்றதாகக் கூறப்படும் இந்திய விமானப் படைக்குச் சொந்தமான கெலிக்கொப்டரே இவ்வாறு இன்று விபத்துக்குள்ளாகியுள்ளது.

வெலிங்டன் இராணுவ கல்லூரி ஆய்வுக்காக கோவையிலிருந்து இரு ஹெலிகொப்டர்கள் புறப்பட்டுச் சென்றன. இந்த கெலிகொப்டரில் ஒன்று குன்னூர் அருகே விபத்தில் சிக்கியது.

Image

விபத்தில் சிக்கிய இந்த ஹெலிகாப்டரில் முப்படைத் தலைமைத் தளபதி விபின் ராவத் சென்றதாகக் கூறப்படுகிறது. அவருக்கு என்ன நடந்தது என்பது பற்றி உறுதியாகத் தெரியவில்லை.

உடனடியாக உயிரிழப்புகள் பற்றி எதுவும் உறுதிசெய்யப்படாத போதிலும் 5 பேர் உயிரிழந்திருப்பதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.

Image

கெலிகொப்டர் விழுந்த இடத்தில் மீட்பு பணியில் இந்திய இராணுவத்தினர் மற்றும் பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.

நீலகிரியில் நிகழ்ந்த இராணுவ கெலிக்கொப்டர் விபத்தில் 5 பேர் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளதாகவும், 3 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டுள்ளதாகவும் இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன. 

Image

விபத்தில் சிக்கிய இராணுவ கெலிக்கொப்டரில் 14 பேர் வரை பயணம் செய்ததாகவும், அதில் பயணம் செய்த 4 இராணுவ உயரதிகாரிகளின் நிலை என்ன என்பது குறித்து இதுவரை தகவல்கள் வெளியாகவில்லை.

இறுதி நிலைவரப்படி,

முப்படைத் தலைமை தளபதி விபின் ராவத், அவருடன் இராணுவ அதிகாரிகள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் பயணித்த எம் ஐ-வகை இராணுவ கெலிக்கொப்டர் தமிழகத்தில் கோவை அருகே விபத்துக்குள்ளானதாகவும், விபத்து நடந்த இடத்தில், தேடுதல் மற்றும் மீட்புப் பணிகள் நடைபெற்று வருவதாகவும் தகவல்கள் தெரிவிப்பதாக ஏஎன்ஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
 

https://www.virakesari.lk/article/118650

  • Replies 105
  • Views 6.3k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

பிபின் ராவத்தும் அவருடைய மனைவியும் போய் சேர்ந்துவிட்டதாக பிந்திக்கிடைத்த தகவலொன்று தெரிவிக்கிறது. இதை வாசிக்கும் போது IPKF நினைவுக்கு வந்து போகிறது, கொஞ்சநாளாகவே கர்மாவின் ஆட்டம் தாங்க முடியவில்லை  

  • கருத்துக்கள உறவுகள்
39 minutes ago, அக்னியஷ்த்ரா said:

பிபின் ராவத்தும் அவருடைய மனைவியும் போய் சேர்ந்துவிட்டதாக பிந்திக்கிடைத்த தகவலொன்று தெரிவிக்கிறது. இதை வாசிக்கும் போது IPKF நினைவுக்கு வந்து போகிறது, கொஞ்சநாளாகவே கர்மாவின் ஆட்டம் தாங்க முடியவில்லை  

அவலச்சாவுகள் கவலைக்குரியனதான். ஆனால் உத்தரவிடுவோர் தப்பித்துவிட நிறைவேற்றுவோர் பலியாவதே நடைபெறுகிறது. மோடி+அமிர்சாவின் கூட்டுக்கர்மா(அவர்களது பாசாவில்) அவர்களது தளபதியை பலிவாங்கிவிட்டதுபோலும். 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, அக்னியஷ்த்ரா said:

பிபின் ராவத்தும் அவருடைய மனைவியும் போய் சேர்ந்துவிட்டதாக பிந்திக்கிடைத்த தகவலொன்று தெரிவிக்கிறது. இதை வாசிக்கும் போது IPKF நினைவுக்கு வந்து போகிறது, கொஞ்சநாளாகவே கர்மாவின் ஆட்டம் தாங்க முடியவில்லை  

கர்மா.... சும்மா இல்லை....

சோனியாம்மாவையும்...... மகன்காரரையும்..... ஓரமா ஒக்காத்தி வைச்சிருக்கு.....

இந்திராகாந்தி ஸ்ரைலில மகளை இறக்குவம் எண்டால்...... வேலைகாகுதில்லை.... மகன் அமேதியி்ல் இரானியால் தோற்கடிக்கப்படுவோம் என்று முதலே தெரிந்து கேரளாவிலும் நிண்டு வெல்ல வேண்டியிருந்தது.

முதலே ஒரு பாவம் நிரம்பி வழியும் குடும்பம்...... தகப்பன் பெரோஸ் காந்தி (கானை.... காந்தி ஆக்கினார்களாமே), சஞ்ஜய் காந்தி, இந்திராகாந்தி  அவல மரணம்.....

இந்திரா காந்திக்கு பொற்கோவில், ராஜிவ் காந்திக்கு ஈழம்...

அதே ஈழப் புதைகுழியில்..... சோனியா..... பிள்ளைகள்....

கர்மா நீளும்...

அங்கால ராஜபக்சேக்கள் அலங்கோலம்.....

சிலிண்டர் வியாபாரம்..... இஸ்லாமியர் கையில் என்று சொல்ல முடியாமல் போறதுதான் பிரச்சணை....

ஆட்டம் அருமை.....

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Nathamuni said:

கர்மா.... சும்மா இல்லை....

சோனியாம்மாவையும்...... மகன்காரரையும்..... ஓரமா ஒக்காத்தி வைச்சிருக்கு.....

இந்திராகாந்தி ஸ்ரைலில மகளை இறக்குவம் எண்டால்...... வேலைகாகுதில்லை.... மகன் அமேதியி்ல் இரானியால் தோற்கடிக்கப்படுவோம் என்று முதலே தெரிந்து கேரளாவிலும் நிண்டு வெல்ல வேண்டியிருந்தது.

முதலே ஒரு பாவம் நிரம்பி வழியும் குடும்பம்...... தகப்பன் பெரோஸ் காந்தி (கானை.... காந்தி ஆக்கினார்களாமே), சஞ்ஜய் காந்தி, இந்திராகாந்தி  அவல மரணம்.....

இந்திரா காந்திக்கு பொற்கோவில், ராஜிவ் காந்திக்கு ஈழம்...

அதே ஈழப் புதைகுழியில்..... சோனியா..... பிள்ளைகள்....

கர்மா நீளும்...

அங்கால ராஜபக்சேக்கள் அலங்கோலம்.....

சிலிண்டர் வியாபாரம்..... இஸ்லாமியர் கையில் என்று சொல்ல முடியாமல் போறதுதான் பிரச்சணை....

ஆட்டம் அருமை.....

தோழர் ஹெலி ரஷ்ய தயாரிப்பாம் .. மோசமான கால நிலையிலும் துல்லியமாக பயணிக்க கூடியதாம் ..👍

டிஸ்கி

அண்மையில் புடின் வந்து முக்கிய சரத்துக்களில் கையொப்பம் இட்டுள்ளமை குறிப்பிட்ட தக்கது..👌

  • கருத்துக்கள உறவுகள்

இந்த விபத்தைப் பார்க்கின்றபோது, இலங்கையில் புலிகளுக்கெதிரான போரில் இந்தியாவின் மறைகரம் இருந்ததையும், அதனாலேயே இலங்கையினால் போரில் வெற்றியீட்ட முடிந்ததாகவும் இந்தியன் டிபென்ஸ் வீக்லி எனும் ராணுவத்துறை சம்பந்தமான தகவல்களை வெளியிட்டு வரும் இணையத்தளப் பத்திரிக்கையொன்றில் கட்டுரைகளை வரையும் நிதின் கோக்ளே, இந்திய அதிகாரிகளை மேற்கோள் காட்டி கட்டுரை ஒன்றினை 2012 இல் வெளியிட்டிருந்தார். அக்கட்டுரையின் ஒரு பகுதியினை இங்கு தமிழில் இணைக்கிறேன்.

"இலங்கையில் புலிகளுக்கெதிரான போரில் கனரக ஆயுதங்களை இந்தியா வெளிப்படையாக தர மறுத்தாலும்கூட அப்பயங்கரவாத இயக்கத்தை அழிக்கும் போரில் இந்தியா திரைமறைவில் அதிகளவான ராணுவ உதவிகளைச் செய்திருப்பது அண்மையில் வெளிவந்துள்ள புத்தகம் ஒன்றில் தெளிவாகக் கூறப்பட்டிருக்கிறது".

"ஆரம்பத்தில் புலிகளுடன் பேச்சுவார்த்தை ஒன்றின்மூலமான தீர்வுக்கே இந்தியா ஆதரவினை நல்கி வந்தாலும் கூட, மகிந்த ராஜபக்ஷ அதிகாரத்திற்கு வந்தபின்னர் அவர் தொடர்ச்சியாகக் கூறிவந்த "புலிகள் பேச்சுவார்த்தையினை தம்மைப் பலப்படுத்தவே பாவிக்கின்றனர், தம்மைப் பலப்படுத்திக்கொண்டபின்னர் மீண்டும் போரிற்குள் இறங்கிவிடுவர்" என்னும் கூற்றினை ஏற்றுக்கொள்ளத் தொடங்கிய இந்தியா, அதன் பின்னர் மகிந்தவின் போருக்கான தனது ஆதரவினை வழங்க முடிவெடுத்தது என்று நிதின் கூறுகிறார்".

தந்திரோபாய வியூகங்கள் மற்றும் பாதுகாப்புத்துறை ஆசிரியராக என் டி டி வி சேவையில் பணியாற்றிய நிதின் சுமார் 33 மாதங்களாக இலங்கையில் நடைபெற்ற போரினை பிந்தொடர்ந்து வந்திருக்கிறார். 

இந்திய விமானப்படையினரால் இலங்கை ராணுவத்திற்கு வழங்கப்பட்ட குறைந்தது 8 எம் ஐ  - 17 உலங்குவானூர்திகள் மற்றும் 2002 இற்குப் பின்னர் இந்திய கடற்படையினரால் சுகன்யா ரக ரோந்துக் கப்பல்கள் ஆகியன ராணுவத்தினரின் வெற்றியில் பெரும்பங்காற்றின என்று நிதின் குறிப்பிடுகிறார். குறிப்பாக இந்திய விமானப்படியினரால் இலங்கைக்கு வழங்கப்பட்ட 8 எம் ஐ  - 17 உலங்கு வானூர்திகள் இலங்கை ராணுவத்தின் விசேட படைப்பிரிவின் 8 பேர் அடங்கிய ஆள ஊடுருவும் படையணிகளை புலிகளின் பகுதிகளுக்குள் இறக்கிவிடவும், அவர்களின் தாக்குதல்கள் வெற்றிகரமாக முடிவடைந்ததன் பின்னர் பாதுகாப்பாக அக்குழுக்களை அங்கிருந்து வெளியே அழைத்துவரவும்  உதவியதாக இந்திய விமானப்படியினரை மேற்கோள் காட்டி நிதின் கூறுகிறார். 

"தமிழ்நாட்டிலிருந்து எழக்கூட்டிய எதிர்ப்பினைச் சமாளிக்க இலங்கைக்கு தாம் வழங்கிய கனரக ராணுவத் தளபாடங்கள் குறித்து மூச்சுவிட இந்தியா விரும்பவில்லை. அதனால் தற்காப்பு ஆயுதங்கள் என்று அழைக்கப்பட்ட தாழப்பறக்கும் விமானங்களைக் கண்டறியும் இந்திரா ராடர்களை மட்டுமே தாம் வழங்கியதாக இந்தியா அன்று சொல்லவேண்டியிருந்தது" என்று நிதின் கூறுகிறார். 

இலங்கைப் போர்பற்றிய செய்திகளைத் தொடர்ச்சியாக வெளியிட்டு வந்த என் டி டி வி, நிதின் மூலமாக இலங்கை ராணுவ அதிகாரிகளுடன் நெருக்கமான தொடர்புகளை ஏற்படுத்திக் கொண்டிருந்தது. இந்த ராணுவ அதிகாரிகளின் கூற்றுப்படி, இந்தியாவினால் வழங்கப்பட்ட எம் ஐ 17 உலங்குவானூர்திகளுக்காக தாம் பெரும் நன்றிக்கடன் பட்டிருப்பதாகக் கூறிய அதிகாரிகள், ஆழ ஊடுருவும் படையணியினருக்கு தாம் போர்க்களத்தில் இருந்து பாதுகாப்பாக வெளியேற தமக்கு இந்த உலங்கு வானூர்திகள் உற்றதுணையாக இருக்கும் என்கிற நம்பிக்கையே மீண்டும் மீண்டும் புலிகளின் பகுதிகளுக்குள் சென்று தாக்குதல்களை நடத்தும் உத்வேகத்தினைத் தந்ததாக தெரிகிறது. ஆகவே, புலிகளின் தளபதிகளின், முக்கியஸ்த்தர்களின் சுதந்திரமான போக்குவரத்தினை முடக்கி, பல தளபதிகளைக் கொன்று, ஈற்றில் அவர்களின் இயக்கத்தை முடக்கிய ராணுவத்தினரின் இந்த உத்தியின் வெற்றியில் இந்திய உலங்குவானூர்திகளே பெரும் பங்காற்றியிருந்தன என்று இலங்கை அதிகாரிகள் தன்னிடம் கூறியதாக நிதின் மேலும் கூறுகிறார்.

  • கருத்துக்கள உறவுகள்

பிபின் ராவத்: இந்தியாவின் முப்படை தலைமை தளபதி மரணம் - இந்திய விமானப்படை

நீலகிரி விமானப்படை ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கிய நிகழ்வில் இந்தியாவின் முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் உயிரிழந்துள்ளார் என்று இந்திய விமானப்படை அலுவல்பூர்வமாக அறிவித்துள்ளது.

பிபின் ராவத், அவரது மனைவி மதுலிகா ராவத் மற்றும் 11 பேர் இன்று குன்னூர் அருகே நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்துள்ளனர்.

க்ரூப் கேப்டன் வருண் சிங் எனும் விமானப்படை அதிகாரி இப்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

வெலிங்டனில் உள்ள பாதுகாப்பு படைகளின் ஊழியர்களுக்கான கல்லூரியில் நடக்க இருந்த ஒரு நிகழ்வுக்காக பிபின் ராவத் சென்று கொண்டிருந்தபோது இந்த விபத்து நடந்துள்ளது.

 

பிபின் ராவத் மற்றும் பிறரின் மரணத்துக்கு இந்திய பிரதமர் நரேந்திர மோதி, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்ட முக்கியத் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

யார் இந்த பிபின் ராவத்?

இந்தியாவின் முதல் முப்படை தலைமைத் தளபதியாக ஜெனரல் பிபின் ராவத் கடந்த 2019-ம் ஆண்டு டிசம்பர் மாதம் நியமிக்கப்பட்டார்.

ஜெனரல் பிபின் ராவத், சிம்லாவில் உள்ள செயிண்ட் எட்வர்ட் பள்ளியில் படித்தார். பின்னர் கடக்வாஸ்லாவில் உள்ள தேசிய பாதுகாப்பு அகாடமியில் படித்தார். அவர் 1978-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் டேராடூனில் உள்ள இந்திய ராணுவ பயிற்சி அகாடமியில் உள்ள பதினோராவது கூர்கா ரைஃபிள்ஸ் பிரிவின் ஐந்தாவது படையணியில் சேர்ந்தார். அவருடைய தந்தை இருந்த அதே பிரிவில் அவர் தன் ராணுவப் பயணத்தைத் தொடங்கினார்.

டேராடூனில் உள்ள இந்திய ராணுவ பயிற்சி நிலையத்தில் இந்திய ராணுவ இயக்குநரகத்தின் தலைமை அதிகாரி உட்பட பயிற்சி அளிக்கும் பொறுப்பை அவர் வகித்தார். மத்திய பிராந்தியத்தில் தளவாடங்கள் பிரிவு அலுவலராக அவர் பணியாற்றினார். ராணுவ செயலர் பிரிவில், துணை ராணுவ செயலாளர் மற்றும் கர்னல் அந்தஸ்தில் ராணுவ செயலாளராக பிபின் ராவத் பணியாற்றினார்.

வெலிங்டனில் உள்ள பாதுகாப்பு சேவை உயரதிகாரிகளுக்கான பயிற்சிக் கல்லூரியில் பட்டப்படிப்பு முடித்த பிபின் ராவத், தேசிய பாதுகாப்பு கல்லூரியிலும் பல்வேறு பிரிவுகளில் தேர்ச்சி பெற்றார். அமெரிக்காவின் ஃபோர்ட்லீவன்வொர்த்தில் உள்ள ராணுவ தளபதிகளுக்கான பயிற்சி வகுப்புகளிலும் பிபின் ராவத் பங்கெடுத்துள்ளார்.

ஜெனரல் பிபின் ராவத், தேசிய பாதுகாப்பு மற்றும் தலைமைப் பண்பு குறித்து பல்வேறு கட்டுரைகளை எழுதியுள்ளார். அது பல பத்திரிக்கைகளில் வெளியாகியுள்ளது. சென்னை பல்கலைகழகத்தில் பாதுகாப்பு குறித்த படிப்பில் அவருக்கு எம்.ஃபில் பட்டம் வழங்கப்பட்டது. மேலாண்மை மற்றும் கணிணி அறிவியலில் பட்டயப்படிப்பை முடித்துள்ளார்.

அதி உயரத்தில் நிகழும் போர்முறைகளில் அதிக அனுபவம் கொண்டவர். யூரி, ஜம்மு & காஷ்மீர் ஆகிய பகுதிகளில் மேஜராகப் பணியாற்றியுள்ளார். ப்ரிகேடியராக பதவி உயர்வு பெற்றபிறகு, சர்வதேச படைப்பிரிவுக்குத் தலைமையேற்று காங்கோ குடியரசில் நடைபெற்ற ஆபரேஷன்களை (MONUSCO) நடத்தினார். அதற்காக இரண்டு முறை ஃபோர்ஸ் கமாண்டர் கமெண்டேஷன் விருது பெற்றார்.

அந்த ஆபரேஷனுக்காக காங்கோவிற்கு அனுப்பப்பட்ட இரண்டு வாரங்களிலேயே, அவருடைய படை கிழக்கிலிருந்து கடுமையான தாக்குதலை எதிர்கொண்டது. வடக்கு கிவு, கோமா ஆகிய பகுதிகள் அச்சுறுத்தலுக்கு உள்ளாகின.

அதில், தன்னுடைய ராணுவ தந்திரத்தின் மூலம் காங்கோ படைகளுக்கு உதவினார். அதோடு, உள்ளூர் மக்களோடு ஒருங்கிணைந்து செயல்பட்டதன் மூலம் அவர்களுடைய பாதுகாப்பையும் உறுதி செய்ததில் இவருடைய பங்கு குறிப்பிடத்தக்கது. நான்கு மாதங்களுக்கு நீண்ட இந்த ஆபரேஷனில், ராவத் மற்றும் அவருடைய படையின் முழு ஆற்றலும் வெளிப்பட்டது. அவருடைய தலைமைப்பண்பு, துணிச்சல், அனுபவம் ஆகியவை வெற்றிக்கும் அடிகோலியது.

ஜெனரல் பிபின் ராவத்

பட மூலாதாரம்,@ADGPI

31 டிசம்பர், 2016 அன்று ராணுவ தலைமைத் தளபதியாகப் பதவியேற்றார். இதன்மூலம், கூர்கா படையிலிருந்து ராணுவ தலைமைத் தளபதியாகப் பதவியேற்ற முதல்அதிகாரி என்ற பெருமையையும் பெற்றார். அதோடு, 2017-ம் ஆண்டிலிருந்து நேபாள ராணுவத்தின் கௌரவத் தளபதியாகவும் இருந்து வருகிறார்.

1987-ம் ஆண்டு பிபின் ராவத்தின் படை, சும்டொரோங் ச்சூ பள்ளத்தாக்கில் சீன ராணுவத்தை நேருக்கு நேராக எதிர்கொண்டது.

2015-ம் ஆண்டு ஜூன் மாதம், மணிப்பூரில் மேற்கு தென்கிழக்கு ஆசியாவின் ஐக்கிய விடுதலை முன்னணியின் (United National Liberation Front of Western South East Asia) படையினரால் நடத்தப்பட்ட தாக்குதலில் 18 இந்திய ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டார்கள். அதற்கான இந்திய ராணுவத்தின் எதிர்வினையில், பிபின் ராவத் தலைமையில், 21-வது படைப்பிரிவின் பாராசூட் படை ராணுவ ஆபரேஷனை மேற்கொண்டது.

அவருடைய 40 ஆண்டுகளுக்கும் மேலான ராணுவப் பணியில், பரம் விஷிஸ்ட் சேவா, உத்தம் யுத் சேவா, அதி விஷிஸ்ட் சேவா, யுத் சேவா, சேனா, விஷிஸ்ட் சேவா, சிறப்புச் சேவை விருது, ஆபரேஷன் பராக்ரம், சைன்ய சேவா உட்படப் பல பதக்கங்களைப் பெற்றுள்ளார்.

1978-ம் ஆண்டு டிசம்பர் 31-ம் தேதியன்று அவருடைய தந்தை பணியாற்றிய படையிலேயே இரண்டாவது லெப்டினென்ட்டாகப் பதவியேற்றவர், லெப்டினென்ட் (1980), கேப்டன் (1984), மேஜர் (1989), லெப்டினென்ட் காலனெல் (1998), காலனெல் (2003), ப்ரிகேடியர் (2007), மேஜர் ஜெனரல் (2010), லெப்டினென்ட் ஜெனரல் (2014), தலைமைத் தளபதி (2017), என்று பல்வேறு படிநிலைகளில் உயர்ந்து, 2019-ம் ஆண்டு முப்படைகளுக்குமான தளபதியாகப் பதிவி ஏற்றார் பிபின் ராவத்.

பிபின் ராவத்: இந்தியாவின் முப்படை தலைமை தளபதி மரணம் - இந்திய விமானப்படை - BBC News தமிழ்

பிபின் ராவத் பயணித்த இந்திய விமானப்படை ஹெலிகாப்டர் நீலகிரி மாவட்டம் வெலிங்கடன் அருகே விபத்து - 13 பேர் பலி

நீலகிரி மாவட்டம் வெலிங்கடன் அருகே ராணுவ ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியுள்ளது. இதில் இந்தியாவின் முப்படை தலைமை தளபதி, அவரது மனைவி மதுலிகா ராவத் மற்றும் 11 பேர் உயிரிழந்துள்ளனர்.

இன்று காலை 11.00 - 11.30 மணியளவில் இந்த நிகழ்வு நடந்துள்ளது. இந்த ஹெலிகாப்டரில் 14 பேர் பயணித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த விபத்தில் இதுவரை 13 பேர் இறந்துள்ளனர் என்பது உறுதியாகியுள்ளது.

க்ரூப் கேப்டன் வருண் சிங் எனும் விமானப்படை அதிகாரி இப்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

பிபின் ராவத்

இந்த ஹெலிகாப்டர் சூலூர் விமானப்படை தளத்தில் இருந்து வெலிங்கடன் ராணுவ பயிற்சி மையத்துக்கு சென்றபோது குன்னூர் காட்டேரி பார்க் அருகே விழுந்து நொறுங்கியுள்ளது.

பிபின் ராவத் பயணித்த IAF Mi-17V5 ஹெலிகாப்டர் விமானம் விபத்துக்குள்ளானதை இந்திய விமானப் படையும் உறுதிசெய்துள்ளது.

இந்த விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தப்படும் என்று இந்திய விமானப்படை தெரிவித்துள்ளது. தமது அலுவல்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.

விமானம் விழுந்து நொறுங்கிய இடம் வெலிங்டனில் இருந்து சுமார் 3.85 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.

நீலகிரியில் பிபின் ராவத் பயணித்த ராணுவ ஹெலிக்காப்டர் விபத்துக்குள்ளானது

.

பிபின் ராவத் ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளான இடத்துக்கு இந்திய விமானப் படையின் தலைமைத் தளபதி ஏர் சீஃப் மார்ஷல் வி.ஆர். சவுத்தரி விரைகிறார். தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலினும் இன்று மாலை அங்கு செல்லவுள்ளார்.

பிபின் ராவத் பயணித்த இந்திய விமானப்படை ஹெலிகாப்டர் நீலகிரி மாவட்டம் வெலிங்கடன் அருகே விபத்து - 13 பேர் பலி - BBC News தமிழ்

  • கருத்துக்கள உறவுகள்

எம்மை அழிக்க எம் ஐ - 17 ரக உலங்கு வானூர்திகளை வழங்கியது இந்தியா. இன்று அதே உலங்கு வானூர்தியில் தனது தளபதியை இழந்திருக்கிறது. தமிழர்கள் நிச்சயமாக மகிழ்ந்து கொண்டாட வேண்டிய தருணம் இது. எம்மை அழிக்கத் துணைபோன தி மு க வினர் ஆட்சியில் இருக்கும்போதே இந்த விபத்து நடந்ததில் இரட்டிப்புச் சந்தோசம் !!!

இந்திய இலங்கை கொலையாளிகளால் கொல்லப்பட்ட எமது மக்களினதும், மாவீரர்களினது ஆத்மாக்கள் சாந்தியடையட்டும் !

  • கருத்துக்கள உறவுகள்

எம்.ஐ.17வி-5 ரக ஹெலிகாப்டர்கள் இதுவரை சந்தித்த விபத்துகள்

இந்திய முப்படைகளின் தலைமைத் தளபதி பிபின் ராவத் உள்ளிட்டவர்கள் சென்ற Mi-17v5 ஹெலிகாப்டர் நொறுங்கி விழுந்துள்ளது . இதற்கு முன் எம்.ஐ.17வி-5 ரக ஹெலிகாப்டர்கள் விபத்துக்கு உள்ளான நிகழ்வுகள் என்னென்ன?

எம் ஐ-17 வி5 ரக ஹெலிகாப்டர்கள் உலகம் முழுக்க பல நாட்டு ராணுவத்தால் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இது உலகின் நவீன ராணுவ போக்குவரத்து ஹெலிகாப்டர்களில் ஒன்றாக கருதப்படுகிறது என்றாலும், எம் ஐ-17 வி5 ரக ஹெலிகாப்டர் கடந்த காலங்களில் பல்வேறு விபத்துகளில் சிக்கி ராணுவ அதிகாரிகள், பொதுமக்கள், காவல்துறை என பல தரப்பினர் பலியாகி உள்ளனர்.

2017, ஆகஸ்ட் 23 உத்தராகண்ட் மாநிலத்தில் பத்ரிநாத்தில் ஒரு ஹெலிபேட் தளத்திலிருந்து புறப்பட்ட இந்திய விமானப்படையின் எம் ஐ-17 வி5 ஹெலிகாப்டர் அடுத்த சில நிமிடங்களில் விழுந்து நொறுங்கியது. ஏ என் ஐ தகவல்கள் படி ஹெலிகாப்டரில் பயணித்த யாரும் உயிரிழக்கவில்லை.

2017, அக்டோபர் 6 அருணாச்சலப் பிரதேச மாநிலத்தின், சீனாவுக்கு அருகில் உள்ள தவாங் பகுதியில் பராமரிப்பு பணிகளில் ஈடுபட்டிருந்த எம் ஐ-17 வி5 ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியது. இந்த விபத்தில் விமானப் படையைச் சேர்ந்த ஐந்து பேரும், இந்திய ராணுவத்தைச் சேர்ந்த இருவரும் உயிரிழந்தனர்.

2019, பிப்ரவரி 27 காஷ்மீரில் ஸ்ரீநகர் விமானப்படைத் தளத்திலிருந்து காலை 10 மணிக்கு புறப்பட்ட எம் ஐ 17 வி5 ரக ஹெலிகாப்டர், அடுத்த சில நிமிடங்களில் தரையில் விழுந்து நொறுங்கியது. வழக்கமான ரோந்துப் பணிக்குப் புறப்பட்ட விமானத்தில் இருந்த ஆறு விமானப்படை அதிகாரிகள் மற்றும் ஒரு சிவிலியன் இந்த விபத்தில் பலியாயினர்.

 

2013 ஜூன் 25 உத்தராகண்ட் மாநிலத்தில் ஏற்பட்ட வெள்ளப் பேரிடர் காலத்தில் மீட்புப் பணியில் ஈடுபட்டிருந்த எம் ஐ 17 வி5 ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கி 20 பேர் உயிரிழந்தனர்.

இந்தியா மட்டுமின்றி வெளிநாடுகளிலும் எம் ஐ 17 வி 5 ரக ஹெலிகாப்டர் விபத்துகள் நிகழ்ந்துள்ளன.

2014 ஜூலை 11 மாசிடோனியா காவல்துறை எம் ஐ 17 வி5 ரக ஹெலிகாப்டர்களை பயன்படுத்தி வந்தது. ஸ்ட்ரோமிகா நகரத்தில் இரவுப் பயிற்சியில் ஈடுபட்டிருந்த இந்த ரக விமானம் விழுந்து நொறுங்கியதில் நான்கு விமானிகள் பலியாயினர்.

வி 5 ரக ஹெலிகாப்டர்கள் மட்டுமே இத்தனை விபத்துகளை எதிர்கொண்டுள்ளது, உலகம் முழுக்க பல்வேறு எம் ஐ 17 ரக ஹெலிகாப்டர்கள் பல்வேறு விபத்துகள் பதிவாகியுள்ளதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

பிபின் ராவத்: எம்.ஐ.17வி-5 ரக ஹெலிகாப்டர்கள் இதுவரை சந்தித்த விபத்துகள் - BBC News தமிழ்

  • கருத்துக்கள உறவுகள்
38 minutes ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

தோழர் ஹெலி ரஷ்ய தயாரிப்பாம் .. மோசமான கால நிலையிலும் துல்லியமாக பயணிக்க கூடியதாம் ..👍

டிஸ்கி

அண்மையில் புடின் வந்து முக்கிய சரத்துக்களில் கையொப்பம் இட்டுள்ளமை குறிப்பிட்ட தக்கது..👌

புடின் வருகை, S400 கொள்வனவு, மேலும் இரஸ்யாவுடன் பல்வேறு ஒப்பந்தங்கள்....

இந்த மரணங்கள் இந்தியாவுக்கு சொல்லப்பட்ட செய்தியாகக் கொள்ள முடியுமா ? 

  • கருத்துக்கள உறவுகள்
44 minutes ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

தோழர் ஹெலி ரஷ்ய தயாரிப்பாம் .. மோசமான கால நிலையிலும் துல்லியமாக பயணிக்க கூடியதாம் ..👍

டிஸ்கி

அண்மையில் புடின் வந்து முக்கிய சரத்துக்களில் கையொப்பம் இட்டுள்ளமை குறிப்பிட்ட தக்கது..👌

எனக்கென்னவோ தோழர்... சிலோன் பக்கத்தில இருந்து சீனாக்காரன் ஏதோ.... விளையாட்டைக் காட்டியிருக்கிறான் போலை கிடக்குது....

முந்தி நாகலாந்தில டிரை பண்ணி.... இப்ப இங்க இருந்து நடத்தின மாதிரி தெரியுது....

முக்கியமான சம்பவம் என்பதால.... ஸ்ராலின் ஸ்ப்பாட்டுக்கு போறார்...... 😎

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்+

எங்கட நாட்டுச் சண்டையிலேயே கிட்டத்தட்ட 10 எம்.ஐ.-17 வீழ்ந்தது/வீழ்த்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

Edited by நன்னிச் சோழன்

3 hours ago, Nathamuni said:

கர்மா.... சும்மா இல்லை....

சோனியாம்மாவையும்...... மகன்காரரையும்..... ஓரமா ஒக்காத்தி வைச்சிருக்கு.....

இந்திராகாந்தி ஸ்ரைலில மகளை இறக்குவம் எண்டால்...... வேலைகாகுதில்லை.... மகன் அமேதியி்ல் இரானியால் தோற்கடிக்கப்படுவோம் என்று முதலே தெரிந்து கேரளாவிலும் நிண்டு வெல்ல வேண்டியிருந்தது.

முதலே ஒரு பாவம் நிரம்பி வழியும் குடும்பம்...... தகப்பன் பெரோஸ் காந்தி (கானை.... காந்தி ஆக்கினார்களாமே), சஞ்ஜய் காந்தி, இந்திராகாந்தி  அவல மரணம்.....

இந்திரா காந்திக்கு பொற்கோவில், ராஜிவ் காந்திக்கு ஈழம்...

அதே ஈழப் புதைகுழியில்..... சோனியா..... பிள்ளைகள்....

கர்மா நீளும்...

அங்கால ராஜபக்சேக்கள் அலங்கோலம்.....

சிலிண்டர் வியாபாரம்..... இஸ்லாமியர் கையில் என்று சொல்ல முடியாமல் போறதுதான் பிரச்சணை....

ஆட்டம் அருமை.....

நாத முனி, இது எல்லாம் கர்மா என்றால் ஈழப்போரில் இறந்தவர்களும் முள்ளிவாய்காலில் பலியானவர்களுக்கும் அவர்களது கர்மாதான் காரணம் என்று கூறுவீர்கள் போலிருக்கிறது.  

கர்மாவும் இல்லை ஒரு மண்ணும்இல்லை.  இது Just accidents. இது யாருக்கும் நடக்கலாம். நாளை எனக்கும் நடக்கலாம், உங்களுக்கும் நடக்கலாம். இது இயல்பானது. 

  • கருத்துக்கள உறவுகள்
35 minutes ago, Nathamuni said:

எனக்கென்னவோ தோழர்... சிலோன் பக்கத்தில இருந்து சீனாக்காரன் ஏதோ.... விளையாட்டைக் காட்டியிருக்கிறான் போலை கிடக்குது....

முந்தி நாகலாந்தில டிரை பண்ணி.... இப்ப இங்க இருந்து நடத்தின மாதிரி தெரியுது....

முக்கியமான சம்பவம் என்பதால.... ஸ்ராலின் ஸ்ப்பாட்டுக்கு போறார்...... 😎

👍..

IMG-20211208-201201.jpg

சூனா பாணாவின் முழுமையான பேட்டி ..

https://tamil.oneindia.com/news/delhi/subramanian-swamy-reacts-on-cds-bipin-rawat-iaf-mi-17v5-helicopter-crash-in-tamil-nadu-441689.html

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, அக்னியஷ்த்ரா said:

பிபின் ராவத்தும் அவருடைய மனைவியும் போய் சேர்ந்துவிட்டதாக பிந்திக்கிடைத்த தகவலொன்று தெரிவிக்கிறது. இதை வாசிக்கும் போது IPKF நினைவுக்கு வந்து போகிறது, கொஞ்சநாளாகவே கர்மாவின் ஆட்டம் தாங்க முடியவில்லை  

தக்கன பிழைக்கும்.

 

????????????????

  • கருத்துக்கள உறவுகள்

கர்மாவும் கடவுளும் ஏன் இவ்வளவு காலமெடுத்துக் கொள்கிறார்கள்?😂

முள்ளிவாய்க்காலில் ஆயிரக்கணக்கான அப்பாவிகள் கொல்லப் பட்டுக் கொண்டிருந்த போது இது போல ஒரு திருப்பு முனை விபத்து நடந்திருந்தாலாவது கடவுள்/கர்மா காப்பாற்றினார் எனலாம்! இப்படி லேட்டாக வரும் கர்மாக் கடவுளருக்கும் தேர்தல் நேரங்களில் மட்டும் மக்களைப் பார்க்க வரும் அரசியல்வாதிகளுக்கும் என்ன வித்தியாசம்? இதை வைத்துக் கொண்டு கர்மாக் கடவுளின் முகவர்கள் கல்லாவை நிரப்புவர்- அவ்வளவு தான் விளைவு!

மேலே ருல்பென் சுட்டிக் காடியது போல சும்மா விபத்தையெல்லாம் பார்த்துக் குதூகலிக்காமல் முதிர்ச்சியுடன் எங்கள் வேலையைப் பார்ப்போம்! 

  • கருத்துக்கள உறவுகள்
59 minutes ago, நன்னிச் சோழன் said:

எங்கட நாட்டுச் சண்டையிலேயே கிட்டத்தட்ட 10 எம்.ஐ.-17 வீழ்ந்தது/வீழ்த்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

 

44 minutes ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

👍..

IMG-20211208-201201.jpg

சூனா பாணாவின் முழுமையான பேட்டி ..

https://tamil.oneindia.com/news/delhi/subramanian-swamy-reacts-on-cds-bipin-rawat-iaf-mi-17v5-helicopter-crash-in-tamil-nadu-441689.html

நன்னி,

என்ன, உங்கடை ஆக்கள் இப்ப சீனனோடையோ? கே.பி. காலத்து கொனெக்சன் வேலை செய்யுது போல….

 

1 hour ago, நன்னிச் சோழன் said:

எங்கட நாட்டுச் சண்டையிலேயே கிட்டத்தட்ட 10 எம்.ஐ.-17 வீழ்ந்தது/வீழ்த்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

எங்கள் நாட்டு சண்டையில் ஒரு தலைமுறை மக்களின் உயிர், உடமை, கல்வி, காதல்,  அன்புக்குரிய பல ஆயிரம் உறவுகள் எந்த பலனும் இன்றி  வீழ்ததப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

  • கருத்துக்கள உறவுகள்

விபத்தில் கொல்லப்பட்டவர்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள். தான் ஆடாவிட்டாலும் தன் தசை ஆடும். மேற்கண்ட செய்தியை வாசிக்கும்போது இந்திய அமைதிப்படையின் மூஞ்சூறு வானில் நின்று மக்கள் குடியிருப்பு மீது, பொது மக்கள் வாழ்விடங்களில் வான் தாக்குதல் செய்யும் காட்சிகளையும் மறக்க முடியவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

சும்மாவே யாழ்கள சின்னராசுகளை பிடிக்க முடியாது.

இப்ப இது வேறையா?

சீனா, ரஸ்யா, அமெரிக்கா, ஏலியன் எண்டு தேள், சிலந்தி, கரப்பொத்தான், நட்டுவாக்காலி வடிவ வியூகங்களை அலசி, ஆராய்ந்து, அல்லு சில்லு படுத்த போறாங்ய்களே சாமீ🤣.

4 minutes ago, நியாயத்தை கதைப்போம் said:

விபத்தில் கொல்லப்பட்டவர்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள். தான் ஆடாவிட்டாலும் தன் தசை ஆடும். மேற்கண்ட செய்தியை வாசிக்கும்போது இந்திய அமைதிப்படையின் மூஞ்சூறு வானில் நின்று மக்கள் குடியிருப்பு மீது, பொது மக்கள் வாழ்விடங்களில் வான் தாக்குதல் செய்யும் காட்சிகளையும் மறக்க முடியவில்லை.

மூஞ்சூறா, முதலையா?

  • கருத்துக்கள உறவுகள்+
1 minute ago, goshan_che said:

மூஞ்சூறா, முதலையா?

முதலை(MI-24?), நானறிந்த வரை 

1 hour ago, கற்பகதரு said:

 

நன்னி,

என்ன, உங்கடை ஆக்கள் இப்ப சீனனோடையோ? கே.பி. காலத்து கொனெக்சன் வேலை செய்யுது போல….

 

ஓமோம், 

 

 

45 minutes ago, tulpen said:

எங்கள் நாட்டு சண்டையில் ஒரு தலைமுறை மக்களின் உயிர், உடமை, கல்வி, காதல்,  அன்புக்குரிய பல ஆயிரம் உறவுகள் எந்த பலனும் இன்றி  வீழ்ததப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

ஓமோம், வீழ்த்தப்பட்டது.

Edited by நன்னிச் சோழன்

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, tulpen said:

நாத முனி, இது எல்லாம் கர்மா என்றால் ஈழப்போரில் இறந்தவர்களும் முள்ளிவாய்காலில் பலியானவர்களுக்கும் அவர்களது கர்மாதான் காரணம் என்று கூறுவீர்கள் போலிருக்கிறது.  

கர்மாவும் இல்லை ஒரு மண்ணும்இல்லை.  இது Just accidents. இது யாருக்கும் நடக்கலாம். நாளை எனக்கும் நடக்கலாம், உங்களுக்கும் நடக்கலாம். இது இயல்பானது. 

நீங்கள் என்ன காரணம் சொன்னாலும்..... அதே முள்ளிவாய்காலில் நானோ.... நீங்களோ இருக்காமல் போனதன் காரணம் கர்மா.....

போராட்டத்தை தேர்த்தெடுத்த, தலைவருக்கு, வாழ்க்கைப்பட்ட பெண்ணுக்கும், பிள்ளைகளுக்கும்..... அப்படி ஒரு முடிவு.... கர்மா.....

இந்திரா காந்திக்கும்....... இரண்டு மகன்மாருக்கும் நடந்த அகால முடிவும் கர்மா தானே.

இராணியம்மாவின் பெரியப்பா, ராசாவாகிய பின்.... இரண்டு தரம் விவாகரத்து பெற்ற வேலைக்கார பெண்ணை விரும்பி..... முடி துறந்ததால்....தம்பி அரசராகி.....தம்பி மகள் அரசியாகியதும் கர்மா.....

ஆக..... கர்மா வேறு..... just an accident வேறு.

பின்னது.... நடக்க... கர்மா.... காரணமாக இருக்கும்....

நாம... எமுதிப் பதியிற கருமங்களை எல்லாம் வாசித்து.... பெருமூச்சுடன் கத்தியை போட வேண்டிய இடத்திலை ஓங்கிப் போடுற...... நிழலி..... செய்யும்.... உதவிகள் கர்மாவா....just an accident ஆ

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்

எல்லா புகழும் இறைவனுக்கே.

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

👍..

IMG-20211208-201201.jpg

சூனா பாணாவின் முழுமையான பேட்டி ..

https://tamil.oneindia.com/news/delhi/subramanian-swamy-reacts-on-cds-bipin-rawat-iaf-mi-17v5-helicopter-crash-in-tamil-nadu-441689.html

அட பாவியளே...... நான் பகிடிக்கு தானே போட்டேன்....

உண்மையா அதுதான் கதையா?🤔

  • கருத்துக்கள உறவுகள்

 

நன்றி - யூரூப்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.