Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பிரபாகரனுக்கு படிப்பறிவு இல்லை – பாலசிங்கத்திற்கும் இருந்ததா என்பது சந்தேகமே என்கிறார் சரத் பொன்சேகா!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பிரபாகரனுக்கு படிப்பறிவு இல்லை – பாலசிங்கத்திற்கும் இருந்ததா என்பது சந்தேகமே என்கிறார் சரத் பொன்சேகா!

December 23, 2021
spacer.png

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் படிப்பறிவு இல்லாதவர் எனத் தெரிவித்த ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா, ”பயங்கரவாத அமைப்பில் ஆரம்பத்தில் இருந்தவர்கள் எவருக்கும் அவ்வளவாக படிப்பறிவு இல்லை.” எனவும் தெரிவித்தார்.

இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர், தமிழ் மக்களின் பிரதிநிதிகள், தனி இராஜ்ஜியம் உள்ளிட்ட வாக்குறுதிகளை வழங்கி நாடாளுமன்றத்துள் பிரவேசித்தனர். பின்னர் இந்த வாக்குறுதிகளை அவர்கள் நிறைவேற்றவில்லை. இதனாலேயே ஆயுதப் போராட்டம் ஏற்பட்டது எனக் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டை கைவிட்டு வெளிநாடுக்கு சென்றவரே அன்டன் பாலசிங்கம். அவர் இங்கிலாந்தில் ஒரு தாதியரையே திருமணம் செய்திருந்தார். பாலசிங்கம் கூட படிப்பறிவை கொண்டிருந்தாரா என்பது தனக்கு சந்தேகமே.

பாலசிங்கம் போன்று வெளிநாடுகளில் இருந்தவர்களுக்கு நாட்டில் இனப் பிரச்சினை ஒன்று இருந்தது பயனாக இருந்தது. இவரைப் போன்றவர்கள் வெளிநாடுகளில் குடியுரிமையை பெற்றுக்கொள்ள ஆயுதப் போராட்டங்களை தூண்டினர் எனவும் கூறியுள்ளார்.

இதேவேளை முன்னாள் னைாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்காவின் காலத்தில், யாழ் மாவட்ட இராணுவத் தளபதியாக சரத் பொன்சேகா இருந்தபோது, ” மண்டைக்குள் ஒன்றுமில்லாதவர் ” இராணுவம் தனது வேலையை செய்ய வேண்டும். அரசாங்கத்தின் வேலையை ராணுவம் செய்யக் கூடாது என சரத் பொன்செகா மீது கடுமையான விமர்சனத்தை சந்திரிக்கா முன்வைத்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

https://globaltamilnews.net/2021/170864

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

Bild

  • கருத்துக்கள உறவுகள்

இப்படித் தான் இந்தியாவும்

சாறம் கட்டிய பெடியள் என்று இறங்கி வைத்த காலை எடுக்க இயலாமல் இழப்புக்களுடன் போனார்கள்.

கடைசியாக ஊரைக் குட்டி முதுகில் குத்தி தான் 30 ஆண்டு கால போரை முடிவுக்கு கொண்டுவர முடிந்தது.

Just now, ஈழப்பிரியன் said:

 

கடைசியாக ஊரைக் குட்டி முதுகில் குத்தி தான் 30 ஆண்டு கால போரை முடிவுக்கு கொண்டுவர முடிந்தது.

முக்கியமாக இரசாயன ஆயுதங்களை பயன்படுத்தி பெரும் இனப்படுகொலை மூலம் போரை அவலத்தினூடாக (தற்காலிகமாக) நிறுத்தினார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, நிழலி said:

முக்கியமாக இரசாயன ஆயுதங்களை பயன்படுத்தி பெரும் இனப்படுகொலை மூலம் போரை அவலத்தினூடாக (தற்காலிகமாக) நிறுத்தினார்கள்.

அதுதானே முழுக்க தடை செய்யப்பட்ட ஆயதங்களை பயன்படுத்தியல்லவா வென்றார்கள்.

படித்தவர்கள் அத்துடன் விட்டார்களா.

உலக சட்டத்திற்கு முரணாக சரணடைந்தர்களையும் அல்லவா கொன்று குவித்தார்கள்.

படித்தவர்களால் எப்படிப்பா பாலகன் பாலச்சந்திரனையும் போட்டுத் தள்ள மனம் வந்தது.

  • கருத்துக்கள உறவுகள்

தலைவரைப்பற்றி பொன்சேகா சொல்வது எனக்கு வலிக்கவில்லை

எம்மவரே  சொல்லும்போது எமக்கு வலிக்காதபோது?????

இன்றும்  ஒரு கூட்டம் இங்கும்  சுத்துதே....😭

  • கருத்துக்கள உறவுகள்

 

  • கருத்துக்கள உறவுகள்

பல்கழைக்கழகம் எண்டால் என்ன என்று தெரியாத ராஜபக்சேக்கள், எண்டு எழிதினதுக்கு வெடி விழுந்தது லசந்தாவுக்கு....

அவயின்ற ஆட்சிலஇருந்து கதைக்கிறார்.....

நெளியப் போகினம்....

இவரின்ற வாயால தான் வெலிகட உள்ள இரண்டு வருசம்....இருந்தவர்....

  • கருத்துக்கள உறவுகள்

இந்தப் பொன்னருக்கு வாக்குப் போடச் சொன்ன கூட்டமைப்புக்கும் வாக்குப் போட்ட மக்களுக்கும் சமர்ப்பணம்.

3 minutes ago, புலவர் said:

இந்தப் பொன்னருக்கு வாக்குப் போடச் சொன்ன கூட்டமைப்புக்கும் வாக்குப் போட்ட மக்களுக்கும் சமர்ப்பணம்.

இதை மட்டும் கூறுவீர்களா?  மகிந்த கொடுத்த முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையையும் மகிந்தவை  வெற்றி பெற வைக்கும் நோக்குடன் மக்களை 2005 ல் வாக்கு போட விடாது தடுத்து, அதன் மூலம்  அவரை வெற்றி பெறவைத்தவர்களுக்கு சமர்பணம் என்று கூறுவீர்களா? 

  • கருத்துக்கள உறவுகள்

 

@tulpen எதிரி என்றால் என்ன என்று உங்களுக்கு விளங்கவில்லை

கோசான் எழுதியுள்ளார் பொன்னரின் படிப்பு எவ்வளவு என்று.

  • கருத்துக்கள உறவுகள்

பிரபாகரனை படிப்பறிவு இல்லாதவர் என்கிறார்கள், அப்புறம் எதுக்கு படிப்பறிவில்லாத பிரபாகரன் தலைமை தாங்கும் புலிகள் இயக்கத்துடன் பேச்சு வார்த்தை நடந்த போதெல்லாம் அரச மட்டத்தில் சட்ட வல்லுனர்கள், பேராசிரியர்கள் அரசியல் நிபுணர்கள் உதவியை இலங்கை அரசினர் நாடினார்கள்?

புலிகள் தரப்பில் பேசியவர்கள் படிப்பறிவானவர்கள் என்று சொல்லி தப்பிக்க முடியாது, அவர்கள் பிரபாகரன் பேச சொன்னதை பேசியவர்களேயன்றி அவர்கள் புலிகளின் தலைமை அல்ல.

படிப்பறிவேயில்லாத அன்ரன்பாலசிங்கம் தலைமை தாங்கும் பேச்சு வார்த்தை குழுவை எதிர்கொள்ள இலங்கை அரச குழுவுக்கு எதற்கு பயிற்சி பட்டறை எல்லாம் கொடுத்து ஜெனிவா அனுப்பினார்கள்? காலம் வேகமானது எல்லாவற்றையும் மறந்து பேச சொல்லும்.

அது ஒரு பக்கம் நிற்க, அவன் எதிரி அப்படித்தான் எம்மையும் எமது போராட்ட சக்தியையும் தலைமையையும் ஏளனம் செய்வான்.அது சிங்களவன் மட்டுமல்ல உலகில் எந்த எதிரியும் தனது எதிரியை அப்படித்தான் கிண்டலும் கேலியும் செய்வான்.

புலிகள் உட்பட்ட இயக்கங்கள் படிப்பறிவில்லாதவர்கள் ஆயுதம் ஏந்த மட்டுமே தெரியும் அரசியல் செய்ய நாங்கள்தான் வேண்டுமென்று முதன் முதலில் சொன்னவர்கள் சாட்சாத் தமிழ் அரசியல் கட்சி தலைவர்களும் தமிழ் பெரிசுகளும்தான்,.

அதுவும் புலிகள் கட்டுப்பாட்டில் இருந்த காலத்திலேயே தலைவரை சாதி சொல்லி திட்டிய பெரிசுகளும் உண்டு, படிப்பறிவில்லாதவர் என்று விமர்சனம் செய்து பச்சை மிளகாய் ஒருகிலோ தின்ன வைக்கப்பட்டவர்களும், பச்சை மட்டை அடி வாங்கியவர்களும் உண்டு.

சொந்த இனத்திலிருந்தபடியே இனமான போராளிகளை அதன் தலைமையை  தரக்குறைவாக விமர்சனம் செய்யும் வித்தையை ஆரம்பித்து வைத்தவர்கள் நாங்கள், இன்று எதிரி கேலி செய்கிறான் என்று சினம் கொள்வதில் எந்த அர்த்தமும் இல்லை.

 

  • கருத்துக்கள உறவுகள்

சரத் பொன்சேகா புலிகள் இருந்த நேரம் இக்கருத்தை சொல்லவில்லை என்பதில் இருந்து எவ்வளவு பயம் புலிகள் மேல் இருந்து இருக்கிறது என்று. 
அமெரிக்காவில் இருந்து இராணுவ (மேற்கத்தையவர்கள்) விற்பன்னர்கள் அழைக்கப்பட்டு ஆனையிறவு முகாமை புலிகளால் அடிக்க முடியாது என அறிக்கை கொடுத்து விட்டு போனார்கள். தங்களில் நம்பிக்கை இல்லாமல் வேற்று நாட்டவனை நம்பிய கோழைகள் சறத்தோடு நின்ற போராளிகள் தான் ஓட ஓட ஆனையிறவில் இருந்து விரட்டி அடித்தார்கள் என்பதும் சரத்தின் இராணுவ கல்லூரி படிப்பால் (சரத் போன்றவர்களதும்) எதுவும் புலிகளை நிறுத்த முடியவில்லை என்பதையும் அறிய வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

பெலயீனமானவனை அடித்து, அடக்கி ஆட்சி செய்த அநியாயத்தை தட்டிக்கேட்க படிப்பும், பட்டமும் தேவையில்லை என்பதற்கு தலைவர் உதாரணம்.  படித்தவர்கள், புத்தியீவிகளின் பேராசையே அவரை கொதித்தெழ வைத்தது. நம்ம படித்த, சட்ட வல்லுநர்கள் கேட்க நாதியற்று தலையாட்டிக்கொண்டு இருந்தபோது  அவர் தேவைப்பட்டார். படித்தவர்கள் ஒரு இனத்தை திட்டமிட்டு அழித்தார்கள், வெக்கமில்லாமல், மனச்சாட்சியில்லாமல் இன்றும் பொய் சொல்லி அழிப்பை நிஞாயப்படுத்துகிறார்கள். படித்தவர்கள் போர் தர்மம் மீறி,  ஊழியாட்டம் போட்டபோதும் நீதிவழி நின்று போரிட்டவர். மனிதாபிமான போர் என்று சொல்லிக்கொண்டு படித்த இரத்த காட்டேரிகள் மனிதர்களை தமிழன் என்ற ஒரே காரணத்திற்காக சரணடைந்தவர்களை  கொன்று குவித்தவர்கள் மத்தியில், போர்தர்மத்தை காத்தவர்களை புகழ முடியாவிடில், ஒழுக்கத்தில் குறை காண முடியாவிடில்  படிப்பை தூக்குவது கோழைகளின், ஆத்தாதவன் செயல். படித்தவர்கள் இறந்த வீரர்களின் உடலை முக்கியமாக பெண் போராளிகளின் உடலை என்ன செய்தார்கள்? அதே நேரம் இறந்த இராணுவ வீரர்களின் உடலையும் படித்த  சிங்களம்  தட்டிக்கழித்தபோது இறந்தாலும், அவர்களின்  உடலுக்கும்,  உறவுகளின் உணர்வுகளுக்கும் உரிய  மரியாதையை செலுத்த தவறாதவர் இந்த படிக்காத என்று சொல்லப்படுகிற என் தலைவர் தான்! பாவம் அவரும் அரசியல் ஏறி ராஜபக்ச குடும்பத்தை பழிதீர்க்க வழமைபோல்  தவறான நேரத்தில்  புலிகளை ஆயுதமாக்கி ஆதாயம் தேட முனைகிறார். ஆனால் மக்கள் விழிப்பாக இருக்கிறார்கள். இனிமேல் புலியை சொல்லி அரசியல் செய்பவனை சிங்கள மக்கள் வீட்டுக்கு அனுப்புவார்கள். புலிகளை உருவாக்கியதும், அவர்களை வைத்து வயிறு கழுவுபவர்களும், தம்மை ஏமாற்றுபவர்களும் அரசியல்வாதிகளும், பிக்குகளும் என்று அவர்கள் பட்டுத் தெளிந்துளார்கள் என்பது அண்மைய செயற்பாடுகள் தெரிவிகின்றன.

  • கருத்துக்கள உறவுகள்
On 23/12/2021 at 07:06, கிருபன் said:

பாலசிங்கம் கூட படிப்பறிவை கொண்டிருந்தாரா என்பது தனக்கு சந்தேகமே.

Balasingham’s MA dissertation at the South Bank London Polytechnic was on the psychology of Marxism. Later he began reading for his PhD on alienation under John Taylor. He never completed his PhD. But the media generally referred to him as Dr. Balasingham. Why did he not complete his PhD? Adele Balasingham says in her book The Will to Freedom, “But the demands of the revolutionary politics of the national liberation struggle of his (Balasingham’s) people constantly intervened in his research and teaching. A time came when he was compelled to choose between an academic life and revolutionary politics. He chose the latter for he viewed the cause of his people as just and to serve that cause was meaningful.”  
 

https://www.dailymirror.lk/article/LTTE-Political-Adviser-Balasingham-knew-the-world-was-going-to-clobber-the-tigers-120497.html

மார்க்சிசத்தில் ஆய்வு எம் ஏ முடித்து பி எச்டி படிப்பின் இடையில் தாயக அரசியல் சுமையால் படிப்பை கைவிட்டார் பாலா அண்ணை.

அவரை பார்த்து பொன்னர் படிப்பறிவில்லாதவர் என்பது, பழைய கவுண்டர் கொமெடி.

நான் எட்டாம் கிளாஸ் பாஸ், நீ எஸ் எஸ் எல் சி பெயில் 🤣.

 

  • கருத்துக்கள உறவுகள்

படிப்பறிவில்லாத பிரபாகரன் தான்... இவர் பிரதிநிதிப்படுத்தும் சிங்கள பெளத்த பேரினவாத..ஆக்கிரமிப்பு இராணுவத்தை எதிர்த்துப் போராடி.. தமிழருக்கான.. ஒரு நிழல் அரசை கட்டியமைத்தார்.

சிங்கள சனாதிபதிகளில்.. 6 சனாதிபதிகளை கடந்தும்.. ஹிந்தியாவில் 6-7 பிரதமர்களை கடந்தும்.. 25 நாடுகள் (அனைத்து உலக வல்லரசுகளும் உள்ளடங்க) எதிர்த்து சமர் செய்தார் தமிழர்களுக்காக.

இறுதி யுத்தத்தில் கூட இந்தப் பொன்சேகா களத்தில் இருக்கவில்லை. சீனாவில் பதுங்கிக் கிடந்தவர்.  

  • கருத்துக்கள உறவுகள்

அவ்வளவும் ஏன்? இலங்கை அரசியலில் இவர்களால் சேர்த்துக்கொள்ளபட்ட வி. முரளிதரன், சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களின் கல்வித்தகமையையும் வெளியிட்டு இவர் கருத்து பரிமாறலாமே?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.