Jump to content

கிறிஸ்துமஸ் பார்ட்டியும், உணவும் 


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

ஊரிலை சபை சடங்கு வைத்தால் விடிந்தால் அதிகாலை மட்டும் மற்றவர்களை குறை சொல்வதுவே முழு நேர வேலையாக உள்ள மாமிக்கு யாரும் அழைப்பு வைப்பது இல்லை ஆனாலும் ஏதோ ஒரு காரணத்தை சொல்லி அழையா விருந்தளியாக உள்ளே வந்து விடுவார்கள் உள்ளே வந்து முதல் நாள் அமைதியாக இருப்பா கல்யாணம் தாலி ஏறபோகும் நேரம் பெரிய கொள்ளுபாடே நடக்கும் யாரடா  இவ்வளவு கொள்ளு பாட்டுக்கும் காரணம் என்று தேடினால் அந்த நாரதர் மாமிதான்  கடைசியில் காரணமா  இருப்பா சிலருக்கு விளங்கினாலும் விளங்காத ஜென்மம் போல் திரிவினம் .

Link to comment
Share on other sites

  • Replies 69
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, பெருமாள் said:

ஊரிலை சபை சடங்கு வைத்தால் விடிந்தால் அதிகாலை மட்டும் மற்றவர்களை குறை சொல்வதுவே முழு நேர வேலையாக உள்ள மாமிக்கு யாரும் அழைப்பு வைப்பது இல்லை ஆனாலும் ஏதோ ஒரு காரணத்தை சொல்லி அழையா விருந்தளியாக உள்ளே வந்து விடுவார்கள் உள்ளே வந்து முதல் நாள் அமைதியாக இருப்பா கல்யாணம் தாலி ஏறபோகும் நேரம் பெரிய கொள்ளுபாடே நடக்கும் யாரடா  இவ்வளவு கொள்ளு பாட்டுக்கும் காரணம் என்று தேடினால் அந்த நாரதர் மாமிதான்  கடைசியில் காரணமா  இருப்பா சிலருக்கு விளங்கினாலும் விளங்காத ஜென்மம் போல் திரிவினம் .

 வழமையான எழுதியதும் விளங்காத, திரிக்கும் பொருந்தாத பெருமாள் பாணி எழுத்து?😂 களம் இதை மிஸ் பண்ணுகிறது! பம்பலும் தேவையல்லோ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, goshan_che said:

பந்தா பார்ட்டி vs சோத்து கோஸ்டி

சச்சரவில் நீங்க எந்த பக்கம் எண்டு சொல்லவே இல்லையே பாஸ்?


எந்த கோஸ்டி  ஆயினும், இயலுமானவரை அனுசரித்து போக வேண்டும்.

அனால், பெரும்பாலானோர் வெளிப்படையாக அருவருகிறார்கள், அவஸ்தைப்படுகிறார்கள் என்றால், விருந்தோம்பாளர்  அதை அகற்றுவதற்கு, குறைபதத்திற்கு விருந்தோம்பாளர் வலிந்து முயன்று இருக்க வேண்டும்,  ஏனெனில், உங்களுக்கு ஏற்கனவே நன்கு தெரிந்தவர்கள்.

 

 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, Kadancha said:


எந்த கோஸ்டி  ஆயினும், இயலுமானவரை அனுசரித்து போக வேண்டும்.

அனால், பெரும்பாலானோர் வெளிப்படையாக அருவருகிறார்கள், அவஸ்தைப்படுகிறார்கள் என்றால், விருந்தோம்பாளர்  அதை அகற்றுவதற்கு, குறைபதத்திற்கு விருந்தோம்பாளர் வலிந்து முயன்று இருக்க வேண்டும்,  ஏனெனில், உங்களுக்கு ஏற்கனவே நன்கு தெரிந்தவர்கள்.

 

 

 

 

நியாயமான கருத்து 👍🏿

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கிறிஸ்மஸ் பாட்டின்னு நூடில்ஸ் ரெஸ்ரோரட் போய் நூடில்ஸ் சாப்பிட வெள்ளையளும் உண்டு.. பாரம்பரிய உணவு சாப்பிடுபவர்கள் அநேகர்.

பொங்கல் அன்று எப்படி கூழ் குடிப்பது முறையாகாதோ.. ஆடிக் கூழ் அன்று பொங்கல் பொங்குவது முறையாகாதோ.. அந்தந்த தினத்தை அந்தந்த நாகரிகப் பின்னணியோடு கொண்டாடி மகிழ்வதுதான் சிறப்பு. தினமுமா.. கிறிஸ்மஸ் உணவு உண்கிறோம் இல்லை தானே. 

பிரித்தானியாவில் வான்கோழி பிரதானம் என்றால்.. நோர்வேயில் பன்றி தான் பிரதானம்.. கிறிஸ்மஸுக்கு. அதேபோல்.. 25 டிசம்பர் தான் கிறிஸ்மஸ் என்றால்.. சில ஐரோப்பிய நாடுகளில் 24 இல் கொண்டாடுவார்கள். ஆக வான்கோழிக்கு பதில் கோழி அமைவது தவறல்ல. ஆனாலும் பாரம்பரிய கிறிஸ்மஸ் உணவுகள் சிலவாவது மேசையை அலங்கரிப்பது சிறப்பு. அதை ஏன் கெடுத்துக் கொள்வான். குறிப்பாக வளரும் தலைமுறைக்கு உள்ளதை உள்ளபடி அறிமுகம் செய்வதுதான் சிறப்பு. மாற்றம் அவசியமில்லாத இடத்தில் தேவையில்லா ஆணி புடுங்கிற வேலை எதுக்கு..??!

எனினும் உணவுத் தெரிவு அவரவர் உரிமை. 

Edited by nedukkalapoovan
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 26/12/2022 at 13:50, Nathamuni said:

தண்ணி, பச்சை தண்ணி, சுடுதண்ணி, குளிர் தண்ணி, தேத்தண்ணி, கோப்பித்தண்ணி, மல்லித்தண்ணி... 😎

இதுக்கு பேர் பாட்டி இல்லை.. பூட்டி…😂

Edited by பாலபத்ர ஓணாண்டி
  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாதம் சொல்லவருவது என்னவென்றால் இதில் விருந்துக்கு அழைத்தவரும் நம்மாளு டெமிலர் போனவங்களும் நம்மாளுங்க… ஆக நம்ம வட்டத்தில என்ன பெரும்பான்மை மக்கள் சாப்பிடுவினமோ அதைச்செய்து குடுப்பதுதானே நியாயம்.. நாலு வெள்ளயளுக்கு நடுவ நம்மளுக்கும் பாட்டி வச்சா ஓகே எண்டு வான்கோழிய மிண்டி விழுங்கலாம்.. ஆனா போனதும் சோறு கூப்பிட்டதும் சோறு அப்புறம் எதுக்கு எண்டதுதான் நாதத்தின்ர கேள்வி.. எனக்கு அது நியாயமான கேள்வியாத்தான் படுது..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
37 minutes ago, பாலபத்ர ஓணாண்டி said:

நாதம் சொல்லவருவது என்னவென்றால் இதில் விருந்துக்கு அழைத்தவரும் நம்மாளு டெமிலர் போனவங்களும் நம்மாளுங்க… ஆக நம்ம வட்டத்தில என்ன பெரும்பான்மை மக்கள் சாப்பிடுவினமோ அதைச்செய்து குடுப்பதுதானே நியாயம்.. நாலு வெள்ளயளுக்கு நடுவ நம்மளுக்கும் பாட்டி வச்சா ஓகே எண்டு வான்கோழிய மிண்டி விழுங்கலாம்.. ஆனா போனதும் சோறு கூப்பிட்டதும் சோறு அப்புறம் எதுக்கு எண்டதுதான் நாதத்தின்ர கேள்வி.. எனக்கு அது நியாயமான கேள்வியாத்தான் படுது..

சோற்றுக்கு பங்கம் என்றால் சங்காராம் நிஜமென்று சங்கே முழங்கு!

அப்டீன்னு பாரதிதாசனே பாடி இருக்காராமே?😂

54 minutes ago, பாலபத்ர ஓணாண்டி said:

இதுக்கு பேர் பாட்டி இல்லை.. பூட்டி…😂

நம்ம நாதம் போன பார்ட்டியில் லாகிரி வஸ்து இல்லாமலா? 

நீங்கள் @Nathamuniஐ புரிந்து கொண்டது இவ்வளவுதானா கோப்பால்….

தண்ணி, பச்சை தண்ணி இரெண்ட்டெல்லோ…ரெண்டும் வேறல்லோ…

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு வான்கோழி கண்ணிலையும் காட்டக்கூடாது.போன கிறிஸ்துமசுக்கு மகள் வான்கோழி சமைக்க வெளிக்கிட்டு அது வேகுறதுக்கே கனநேரம் எடுத்துட்டுது. இப்ப கரண்ட்காசு ஸ்மா;ட் மீற்றரில் பார்த்துக்கொண்டு இருக்க ஏறுது. இந்த முறை அது சரிவராது சாப்பிட்ட மாதிரியும் இருக்காது என்று கோழி மீன் என்று நம்ம சாப்பட்டைடையே செய்தம். நண்பர்களும் தங்கள் பங்குக்கு சமைத்து கொண்டு வந்ததனால். அளவுக்கு மீறி எல்பலாருக்கும் கட்டிக் கொடுததனால் அடுத்தநாளும் எல்லோர் வீட்டிலும் அதுதான் சாப்பாடு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, nedukkalapoovan said:

ஆக வான்கோழிக்கு பதில் கோழி அமைவது தவறல்ல.

ஓம். பலருக்கு பிரச்சனையாக உள்ளது.

5 hours ago, புலவர் said:

எனக்கு வான்கோழி கண்ணிலையும் காட்டக்கூடாது

😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 26/12/2022 at 17:32, Justin said:

#முன்னோர் என்ன மூடர்களா என்ற பெயரில் இந்த சோற்றுச் சாபம் தேவையா எங்களுக்கு? 

புது வருட கொண்டாட்டத்திற்கு  எம்மவர்களிடம் நல்ல வரவேற்புடன் சக்கரை பொங்கலும், புக்கையும் சம்பலும் உலாவந்தன.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அப்ப வாண்கோழிப் பண்ணை வேலைக்கு ஆகாதா.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆரம்பத்தில் உணவகத்தில் சமையல்காரனாக வேலை செய்துள்ளேன் (சமைப்பது பிடிக்காத விடயம்).

கிட்டதட்ட 130 உணவுப்பதார்த்தங்கள் செய்யப்படும் ஆனால் ஒன்றைகூட சுவை பார்த்தது கிடையாது காரணம் 90% உணவு வகைகள் மேலைத்தேய உணவுவகைகள்.

எம்மவர்கல் மட்டும் பந்தா காட்டுவதில்லை, சில மேற்கத்தையவர்களும் அதற்கு விதிவிலக்கில்லை.

தமது இறைச்சியினை எவ்வாறு சமைக்க வேண்டும் என ஒன்றை தெரிவு செய்வார்கள் அவ்வாறே சமைத்து கொடுத்தாலும் இறைச்சியினை வெட்டிபார்த்துவிட்டு சண்டை பிடிப்பார்கள், தமது தவறு என காட்டாமல் மற்றவர்கள் மேல்தான் தவறு என்று நிற்பார்கள், சில சமையல்காரர்கல் பதிலுக்கு சண்டை பிடிப்பார்கள்.

காரனம் அவர்கள் நிலை சரி என்பதுடன் நேரம் வரையறுக்கபட்டதாக இருக்கும், ஒரு மேசையில் 2 நிமிடத்தில் தயாராகும் உணவும் இருக்கும் 20 நிமிடத்தில் தயாராகும் உணவும் இருக்கும் அனைத்து ஒரே நேரத்தில் வழங்கப்பட வேண்டும் இல்லாவிட்டால் ஒரு உணவு ஆறிவிடும்.

என்னுடன் வேலை செய்த சில சமையல்காரர்கள் இறைச்சியினை கத்தியால் மெல்லிய அளவில் கீறி சரிபார்ப்பார்கள் ஆனால் அது அவசியாமாக இருக்காது எனென்றால் தொடர்ச்சியாக வேலை செய்யும் போது இறைச்சியினை கரண்டியினால் பிடிக்கும்போதே உணர முடியும் சரியாக சமைக்கப்பட்டுள்ளதா என.

தற்போது அந்த உணர்திறன் போய்விட்டது.

வேகமாக சமைக்க சில விடயங்களை கையாளுவார்கள், அந்த இறைச்சி சுவையில்லாமல் வெறும் இறப்பர் மாதிரி இருக்கும்.

சமையல் கூடம் எப்போதும் ஒரு போர்க்களம் போல இருக்கும், இதில் இப்படி தேவையில்லாமல் நேரம் விரயம் ஆக்கும் குழப்பகாரர்களை கண்டால் சமையல்காரர் பெரும்பாலும் விரும்பமாட்டார்கள்.

பல மேசைகளுக்கான உணவு பதார்த்தங்களுக்குள் ஒற்றுமையாக உள்ள பதார்த்தினை சேர்த்தே சமைப்பார்கள் (நேரத்தினை சேமிக்க) இப்படி பல விடயங்களையும் அதே நேரம் நேரத்தினையும் கணக்கில் கொள்ளவேண்டும், ஒரு பதார்த்தத்தினை மறந்தாலும்  கடினமாகி விடும்.

பொதுவாக ஒரு தடவை ஓடர் இரசீதினை பார்த்தால்  திரும்ப திரும்ப பார்க்க விரும்ப  மாட்டார்கல் நேரம் விரையமாக்கப்படும் என்பதால்.

இந்த வேலையில் சேருவதற்கு முன்னர் எனது நினைவாற்றல் படுமோசமாக இருந்தது.

எனது குழந்தைகள் (சிறுவயதுதான்) சில சமயம் உணவகத்தில் அது வேண்டாம் இது வேண்டாம் என கூறியிருப்பார்கள் ஆனால் தவறுதலாக அவர்கள் அதனை தவறவிட்டிருப்பார்கள், உணவினை மீண்டும் சமைத்து எடுத்து வருவதாக கூறினாலும் பரவாயில்லை என கூறி, சாப்பிடமாட்டேன் என அடம்பிடிக்கும் குழந்தைகளை சமாதான படுத்தி விடுவதற்கான காரணம் அவர்களது கஸ்டம் புரிந்தமையால்.

எம்மவர்கள் நடாத்தும் ஒன்றுகூடலில் இறைச்சியினை தேவைக்கதிமாக எரிந்து காய்ந்து போகுமாறு சமைப்பார்கள், ஆனாலும் அதனை வேண்டும் என்று செய்வதில்லை, அவர்களது குறிக்கோள் சுவையான உணவினை வழங்கவேண்டும் என்பதாகவே இருக்கும்.

அதே போல்தான் சம்பளத்திற்கு வேலை செய்யும் சமையல்காரன் கூட எந்த வகையான அழுத்தத்திலும் சுவையான உணவினை வழங்கவே முழு மூச்சாக முயற்சிப்பான்.

  • Like 5
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வரும்

On 9/1/2023 at 06:00, vasee said:

எம்மவர்கள் நடாத்தும் ஒன்றுகூடலில் இறைச்சியினை தேவைக்கதிமாக எரிந்து காய்ந்து போகுமாறு சமைப்பார்கள், ஆனாலும் அதனை வேண்டும் என்று செய்வதில்லை, அவர்களது குறிக்கோள் சுவையான உணவினை வழங்கவேண்டும் என்பதாகவே இருக்கும்.

👍

எனக்கும் மிகவும் அதிகமாக  எரிந்து வரும்   பதம் தான் பிடிக்கும் 😋

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, விளங்க நினைப்பவன் said:

வரும்

👍

எனக்கும் மிகவும் அதிகமாக  எரிந்து வரும்   பதம் தான் பிடிக்கும் 😋

இறைச்சியில் மட்டுமல்ல சாதாரண வெறும் முட்டை பொரியலில் கூட ஒவ்வொரு பதமும் அதற்கு என சம்பந்தமில்லாத பெயரும் வைத்திருப்பார்கள், ஆனால் அந்த பெயர்கள் மெனுவில் இருக்காது, பரிமாற்பவர்கள் உங்களது உண்வினை ஓடர் எடுக்கும் போது கேட்பார்கள், தெரியாவிட்டால் அது பற்றி சிறிய விளக்கம் கொடுப்பார்கள்.

எவ்வாறு ஒரு உணவினை சமைப்பது என்பது தெரியாத போது நன்றாக சமைக்க கூறுவது (Well done) பாதுகாப்பானது.

 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, vasee said:

இறைச்சியில் மட்டுமல்ல சாதாரண வெறும் முட்டை பொரியலில் கூட ஒவ்வொரு பதமும் அதற்கு என சம்பந்தமில்லாத பெயரும் வைத்திருப்பார்கள், ஆனால் அந்த பெயர்கள் மெனுவில் இருக்காது, பரிமாற்பவர்கள் உங்களது உண்வினை ஓடர் எடுக்கும் போது கேட்பார்கள், தெரியாவிட்டால் அது பற்றி சிறிய விளக்கம் கொடுப்பார்கள்.

எவ்வாறு ஒரு உணவினை சமைப்பது என்பது தெரியாத போது நன்றாக சமைக்க கூறுவது (Well done) பாதுகாப்பானது.

 

ஒரு சாப்பாடு இப்படித்தான் இருக்க வேண்டும் என வரையறை வைக்க முடியாது. எவரவருக்கு எப்படி சாப்பிட விருப்பமோ அப்படி சாப்பிடலாம் என நினைக்கின்றேன்.😊

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, குமாரசாமி said:

ஒரு சாப்பாடு இப்படித்தான் இருக்க வேண்டும் என வரையறை வைக்க முடியாது. எவரவருக்கு எப்படி சாப்பிட விருப்பமோ அப்படி சாப்பிடலாம் என நினைக்கின்றேன்.😊

 

21 hours ago, விளங்க நினைப்பவன் said:

வரும்

👍

எனக்கும் மிகவும் அதிகமாக  எரிந்து வரும்   பதம் தான் பிடிக்கும் 😋

அதனைதான் விளங்கநினைப்பவனும் கூறுகிறார்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 9/1/2023 at 05:00, vasee said:

எனது குழந்தைகள் (சிறுவயதுதான்) சில சமயம் உணவகத்தில் அது வேண்டாம் இது வேண்டாம் என கூறியிருப்பார்கள் ஆனால் தவறுதலாக அவர்கள் அதனை தவறவிட்டிருப்பார்கள், உணவினை மீண்டும் சமைத்து எடுத்து வருவதாக கூறினாலும் பரவாயில்லை என கூறி, சாப்பிடமாட்டேன் என அடம்பிடிக்கும் குழந்தைகளை சமாதான படுத்தி விடுவதற்கான காரணம் அவர்களது கஸ்டம் புரிந்தமையால்.

 

முழு பகிர்வுமே அருமை. அதிலும் இந்த பகுதி 👏🏾.

உங்களை போல் பெரிய உணவகம் இல்லை ஆனால் பலவருடம் ஒரு துரித உணவு கடையில் ஆல்-இன்-ஆல் ஆக வேலை செய்தேன். 

என்னோடு கூட வரும் பலர் எகிறும் போது நானும் தலையிட்டு சமாதானம் செய்துள்ளேன். சில அனுபவங்கள் வாழ்க்கை பாடங்கள். 

 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, goshan_che said:

முழு பகிர்வுமே அருமை. அதிலும் இந்த பகுதி 👏🏾.

உங்களை போல் பெரிய உணவகம் இல்லை ஆனால் பலவருடம் ஒரு துரித உணவு கடையில் ஆல்-இன்-ஆல் ஆக வேலை செய்தேன். 

என்னோடு கூட வரும் பலர் எகிறும் போது நானும் தலையிட்டு சமாதானம் செய்துள்ளேன். சில அனுபவங்கள் வாழ்க்கை பாடங்கள். 

 

சில நேரங்களின் இந்த பொறுமையினை அடுத்தவர்கள் சாதகமாக எடுத்து விடுவார்கள், இப்படியும் பல நிகழ்வுகள் நடந்துள்ளது.

அண்மையில் ஒரு சம்பவம் எனது காரில் பின்னால் வந்த கார் காரர் மோதிவிட்டார்,

இரண்டு காருக்கும் சேதம், காரினை ஓரமாக நிறுத்திவிட்டு அவரிடம் சென்றேன்.

சில நிமிடங்களாக வெளியே வராமையால் அவருக்கு ஏதாவது ஆகியிருக்குமோ என நினைத்தேன் அதனால் உங்களுக்கு ஏதுவும் பிரச்சினை இல்லைதானே என கேட்டேன், இல்லை என்றார் ஆனால் பதட்டமாக காணப்பட்டார், அதனால் அவரிடம் சொன்னேன் விபத்து நடந்துவிட்டது உங்களுக்கோ எனக்கோ பிரச்சினையில்லை; உங்களிடம் காப்புறுதி உள்ளதுதானே அதனால் பிரச்சினையில்லை என சொன்னேன்.

அதுவரை பதட்டமாக இருந்தவர் திடீரரென என் மேல் பிழை என்பது போல ஆரம்பித்தார்,நீண்டநேர வேலை, நித்திரை கொள்ளவும் இல்லை. எனது தகவல்களை அவரிடம் கொடுத்துவிட்டு அவரது தகவலை பெற்றுவிட்டு ஒரு மாதிரி காரை எடுத்துகொண்டு சென்றுவிட்டேன் அதற்கு மேல் அவரிடம் பேசவேண்டிய தேவையில்லை அந்தளவிற்கு அவர் சாதாரணமாகிவிட்டார். 

Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • The Top 25 Safest Airlines For 2024   Air New Zealand Qantas Virgin Australia Etihad Airways Qatar Airways Emirates All Nippon Airways Finnair Cathay Pacific Airways Alaska Airlines SAS Korean Air Singapore Airlines EVA Air British Airways Turkish Airlines TAP Air Portugal Lufthansa/Swiss Group KLM Japan Airlines Hawaiian Airlines American Airlines Air France Air Canada Group United Airlines   Jetstar has been named the world's safest low-cost carrier. GETTY The 20 Safest Low-Cost Airlines For 2024   Jetstar easyJet Ryanair Wizz Norwegian Frontier Vueling Vietjet Southwest Volaris flydubai AirAsia Group Cebu Pacific Sun Country Spirit Westjet JetBlue Air Arabia Indigo Eurowings   இனியும்  ஏர் லங்காவில் பயணித்து  உங்கள் இனிய உயிர்களை பாதுகாப்பற்று ஆக்க  வேண்டாம். https://www.forbes.com/sites/laurabegleybloom/2024/01/03/ranked-the-25-safest-airlines-in-the-world-according-to-airlineratingscom/?sh=fe651ac4c03c ஸ்டார்ட் மியூசிக் .........😀   
    • பேச்சுக்களுக்கெதிராகப் போராடிய யாழ்ப்பாண மக்களும், அவர்களின் உணர்வுகளை புறக்கணித்த இந்தியாவும்   போராளிகளின் தலைவர்கள் நிபந்தனைகளின்றி பேச்சுவார்த்தைகளுக்குச் செல்லப்போகிறார்கள் என்கிற செய்தி பர‌வியபோது யாழ்ப்பாணத்தில் போராட்டங்கள் வெடித்தன. குறிப்பாக, போராளிகளை அழுத்தம் கொடுத்து, திம்புவிற்கு இழுத்துச் சென்றமைக்காக இந்தியாவின் மீது மக்களின் கோபம் திரும்பியிருந்தது. ஆர்ப்பாட்ட ஊர்வலங்கள், பொதுக்கூட்டங்கள், வீதி நாடகங்கள் என்பன இளைஞர்களால் யாழ்ப்பாணத்தில் நடத்தப்பட்டன. யாழ்ப்பாணத்தின் சுவர்களிலும், வீதிகளுக்குக் குறுக்கே தொங்கவிடப்பட்ட பதாதைகளிலும் கூறப்பட்ட செய்தி ஒன்றுதான், "எங்களுக்குத் தமிழீழமே வேண்டும்". இந்த ஒருமித்த மக்களின் மனவெழுச்சி அப்பிரதேசமெங்கிலும் பரவிக் கிடந்தது.  ஜெயவர்த்தனவின் இராணுவத்தினர் புரிந்துவரும் படுகொலைகளுக்கெதிரான கண்டனங்கள், இந்தியா தனது நலன்களைக் காத்துக்கொள்ள ஈழத்தமிழர் மீது பலவந்தமாகத் திணித்துவரும் அழுத்தங்கள் என்பனவும் இப்போராட்டங்களில் தமிழ் இளைஞர்களால் வெளிப்படுத்தப்பட்டது. பொதுக்கூட்டங்களிலும், மேடை நாடகங்களிலும் இரு முக்கிய செய்திகளை பேச்சாளர்கள் முன்வைத்தனர். முதலாவது தமிழர்கள் ஜெயவர்த்தனவை ஒருபோதும் நம்பத் தயாரில்லை என்பது. இரண்டாவது, ஜெயவர்த்தனவுடன் சமரசம் செய்ய முன்வந்திருந்த தமிழர் ஐக்கிய விடுதலை கூட்டணியினரைத் தாம் முற்றாக நிராகரிக்கிறோம் என்பது.  யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்களும், பாடசாலை மாணவர்களும் ஆர்ப்பாட்டப் பேரணிகளை ஒழுங்குசெய்வதில் முன்னின்றார்கள். போராளிகளின் தலைவர்கள் தில்லிக்கு அழைத்துச் செல்லப்பட்ட நாளான ஆடி 3 ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் ஆர்ப்பாட்டங்கள் ஆரம்பமாகியிருந்தன. அன்றுமட்டுமே யாழ்ப்பாணக் குடாநாட்டில் பல பேரணிகள் ஒழுங்குசெய்யப்பட்டன. தெல்லிப்பழையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்கள் அமிர்தலிங்கத்தின் உருவ பொம்மை ஒன்றினை வீதிகளில் இழுத்துவந்தனர். ஒப்பாரி வைப்பதுபோல பாசாங்கு செய்த இன்னும் சில இளைஞர்கள் அமிர்தலிங்கத்தின் உருவப்பொம்மையினைப் பார்த்து, "ஜெயவர்த்தனவுடன் சமரசம் செய்துகொண்டதன் மூலம் அரசியல்த் தற்கொலையினை நீ செய்திருக்கிறாய், முட்டாளே, அது உனக்குத் தெரியாமல் போனதெப்படி?" என்று கேட்டார்கள்.   யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் "மாயமான்" எனும் பெயரில் மேடை நாடகம் ஒன்றினை அரங்கேற்றினார்கள். இராமாயணத்தில் வரும் காட்சியொன்றில், இராமனினதும், இலட்சுமணனினதும்  கவனத்தைத் திசைதிருப்பி, சீதையைக் கவர்ந்துசெல்ல இராவணன் மாய மானின் உருவத்தில் வந்ததற்கு ஒப்ப, தமிழர்களை தமக்குக் கீழ் நிரந்தரமாகவே அடிமைப்படுத்திவிட ஜெயார் போடும் மாயமான் வேடமே இந்தப் பேச்சுவார்த்தைகள் என்று அந்தநாடகம் கூறியது. ஜெயார் மறைத்துவைத்திருக்கும் வலையில் தமிழர்களை வீழ்த்துவதற்கு இந்தியாவே அழுத்தம் கொடுக்கிறது என்கிற குற்றச்சாட்டு இந்தியாவை நோக்கி முன்வைக்கப்பட்டது. ஜெயார் விரித்து வைத்திருக்கும் வலை நோக்கி இந்தியா முன்னாலே செல்ல, ஈழத்தேசிய முன்னணியின் நான்கு போராளித் தலைவர்களும், வெளியில் இருந்த புளொட் அமைப்பும் இந்தியாவின் சொல்கேட்டு ஜெயாரின் வலையில் தம்மையறியாமலேயே வீழ்வதற்காகப் பிந்தொடர்கின்றன என்று அவர்கள் கூறினார்கள். இந்தியா போராளிகளைப் பார்த்து  நடவுங்கள் என்று சொல்ல, நடப்பதும், நில்லுங்கள் என்று சொல்ல நிற்பதும், பாயுங்கள் என்று சொல்லப் பாய்வதும் நடக்கிறது  என்று அவர்கள் இந்தியாவை விமர்சித்தார்கள். இந்தியாவின் கட்டுப்பாட்டிலிருந்து போராளிகள் வெளியே வர எத்தனித்த ஒவ்வொரு கணமும் இந்தியா அவர்களை மிரட்டி பலவந்தமாக மீண்டும் தமது நிகழ்ச்சி நிரலுக்குள் கொண்டுவந்தது. இந்தச் சாராம்சத்தினை முன்வைத்து யாழ்ப் பல்கலைக்கழக மாணவர்கள் நடத்திய 35 நிமிட நகைச்சுவை கலந்த மேடை நாடகம் யாழ்க்குடாநாட்டில் ஒருவாரத்தில் மட்டுமே 125 தடவைகள் மேடையேற்றப்பட்டது.  பேச்சுவார்த்தையின் முதலாவது நாளான 1985, ஆடி 8 ஆம் திகதி முழு யாழ்க்குடாநாடுமே பொது வேலை நிறுத்தத்தினால் முற்றாக ஸ்த்தம்பித்துப் போனது. பலகலைக்கழக மாணவர்களும், பாடசாலை மாணவர்களும் வகுப்புக்களைப் பகிஸ்க்கரிப்புச் செய்தனர். கடைகள் இழுத்து மூடப்பட்டதோடு, வீதிகளும் வெறிச்சோடிப்போக, மக்கள் வீடுகளுக்குள் முடங்கிப் போனார்கள். வீதிகளெங்கும் பதாதைகள் தொங்கவிடப்பட்டன. "எமக்கு ஈழமே வேண்டும்", " யுத்தநிறுத்தத்தை எதிர்க்கிறோம்", "எமக்குப் பேச்சுவார்த்தை வேண்டாம்", "இந்தியாவே, புலிகளை திம்புவிற்கு ஏன் அழைத்துச் சென்றாய், அவர்களைப் புல்லை உண்ணவைக்கவா?" என்று அவை பேசின.  யாழ்ப்பாணத்தில் முன்னெடுக்கப்பட்டு வந்த மக்கள் எழுச்சிப் போராட்டங்களை தமது நிலைப்பாட்டினை இந்தியாவுக்குத் தெளிவாக உணரவைக்கும் சந்தர்ப்பமாகப் பாவிக்க நினைத்தனர் போராளிகள். "பாருங்கள், நீங்கள எங்களை ஜெயவர்த்தனவுடன் பேசவைக்க பலவந்தப்படுத்தி அழைத்து வந்திருக்கிறீர்கள். ஆனால், எமது மக்களோ அதற்கு முற்றான எதிர்ப்பினைக் காட்டி வருகிறார்கள்" என்று இந்திய அதிகாரிகளிடம் அவர்கள் கூறினார்கள். ஆனால், போராளிகளின் கருத்தினைக் கேட்கும் நிலையில் இந்திய அதிகாரிகள் இருக்கவில்லை. அவர்களைப்பொறுத்தவரை, தமிழ் மக்களின் உணர்வுகளைவிட பேச்சுக்களை எப்படியாவது நடத்திவிடவேண்டும் என்பது முக்கியமானதாகத் தெரிந்தது. இந்தியாவை இந்துசமுத்திரப் பிராந்தியத்தின் வல்லரசாகக் காட்டுவதற்கு இப்பேச்சுவார்த்தைகளை எப்படியாவது பாவித்துவிட கங்கணம் கட்டியிருந்த இந்திய அதிகாரிகள், தமிழர்களின் உணர்வுகளை முற்றாகப் புறக்கணித்திருந்தனர்.
    • நாடு முழுவதும் வேகமாக பரவி வரும் காய்ச்சல் ஒரு வைரஸ் என்பதால் மக்கள் குழுவாக கூடுவதை தவிர்க்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. குழுவாக இருக்கும் இடங்களில் முகக்கவசங்களை அணிந்து கொள்ளுமாறு அனுராதபுரம் போதனா வைத்தியசாலையின் வெளிநோயாளர் பிரிவின் பிரதம வைத்திய அதிகாரி ஹேமா வீரகோன் கேட்டுக்கொண்டுள்ளார். இந்த வைரஸ் சுவாசக் குழாயால் ஏற்படுவதனால் இருமல், சளி, காய்ச்சல் மற்றும் உடல்வலி ஆகியவை முக்கிய அறிகுறிகள் என அவர் கூறினார். சுவாச நோய்கள் இரண்டு அல்லது மூன்று நாட்களில் வைரஸ் நிலைமை தணிந்தாலும், சில நோயாளிகளுக்கு ஓரிரு மாதங்களுக்கு இருமல் மற்றும் சளி சுவாச நோய்கள் இருப்பதாகவும் வைத்திய அதிகாரி சுட்டிக்காட்டினார்.   இந்த வைரஸும் இன்புளுவென்சாவின் மாறுபாடு என்பதால், நோயால் பாதிக்கப்பட்டவர்களிடம் இருந்து முடிந்தவரை விலகி இருப்பதன் மூலமும், குழுவாகவும் கூடும் இடங்களில் முகக் கவசம் அணிவதும் நோய் வராமல் இருக்க அதிக வாய்ப்புகள் உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். அனுராதபுரத்தில் மாத்திரமன்றி நாடு முழுவதிலும் இந்த காய்ச்சல் வைரஸ் என்பதால் வேகமாகப் பரவி வரும் நிலையில், சிகிச்சையின்றி குணமாகும் என்று நினைக்காமல் சிகிச்சை பெறுமாறும் கடுமையான சுவாசக் கோளாறுகளை ஏற்படுத்தும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். மருத்துவ ஆலோசனை சிகிச்சை அளிக்கப்படாவிட்டால், சமூகத்தில் பரவல் அதிகரித்து வருகிறது என்று மருத்துவர் வலியுறுத்துகிறார்.   மேலும், குறிப்பாக மற்ற நோய்களுக்கு, காய்ச்சல், சளி போன்றவை ஏற்படும் என்பதால், மருத்துவ ஆலோசனைப்படி சிகிச்சை பெற வேண்டும் என மேலும் தெரிவித்துள்ளார். https://tamilwin.com/article/new-influenza-virus-in-sri-lanka-1714703659
    • ரஷ்ய - உக்ரைன் போருக்கு சென்ற இலங்கையர்கள் தொடர்பில் வெளியான அதிர்ச்சி தகவல் ரஷ்ய -  உக்ரைன்(Russia - Ukraine) போருக்கு சென்ற பல இலங்கைப் படையினர் தற்பொழுது உயிருடன் இல்லை என நாடாளுமன்ற உறுப்பினர் காமினி வெலேபொட(Gamini Waleboda ) தெரிவித்துள்ளார். நேற்றைய தினம்(2) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார். ரஷ்ய வாடகை படையில் இணைந்து கொண்ட 40 இலங்கை படையினரின் அதிக எண்ணிக்கையிலானவர்கள் உயிரிழந்துள்ளனர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.   ரஷ்ய - உக்ரைன் போர் இராணுவம் மற்றும் பொலிஸ் என்பனவற்றிலிருந்து ஓய்வு பெற்றுக்கொண்டவர்கள் இவ்வாறு ரஷ்ய உக்ரைன் போரில் இணைந்து கொண்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். இருபது லட்சம் ரூபா மாதச் சம்பளம் வழங்குவதாக கூறி குடிவரவு குடியகழ்வுத் திணைக்களத்திற்கு லஞ்சம் வழங்கி இவ்வாறு இலங்கைப் படையினர் ரஷ்யா, உக்ரைனுக்கு அனுப்பி வைக்கப்படுவதாகத் தெரிவித்துள்ளார்.   இராணுவ பின்வரிசை சேவைக்கு என அழைத்துச் செல்லப்பட்ட படையினர் முன்னரங்கப் போரில் ஈடுபடுத்தப்படுவதாக தெரிவித்துள்ளார். ரஷ்யாவின் வெக்னர் கூலிப் படைக்கு விற்பனை செய்யப்பட்ட இலங்கையின் முன்னாள் படை அதிகாரி ஒருவரின் குரல் பதிவு கிடைக்கப் பெற்றுள்ளதாகத் தெரிவித்துள்ளார். அங்கிருந்து தப்பியவர்கள் ரஷ்யாவிற்கு செல்ல வேண்டாம் என கோருவதாகக் குறிப்பிட்டுள்ளார். ரஷ்யாவிற்கு வேலைக்காக அனுப்பி வைப்பதாக கூறினால் அந்த மோசடியில் சிக்க வேண்டாம் என மக்களிடம் கோருவதாக காமினி வெலேபொட தெரிவித்துள்ளார்.  https://tamilwin.com/article/sl-forces-who-joined-ukrain-war-many-died-1714640425?itm_source=parsely-api
    • கொரோனா ஊசி போட்டவர்கள் எல்லாம் வாழ்க்கை முழுக்க சாவை நிமிசத்துக்கு நிமிசம் நினைச்சு வாழவேண்டியது தான். கொரோனா ஊசி போடுங்கோ என வக்காளத்து வாங்கியவர்கள் இனி என்ன பதில் சொல்லப்போகின்றார்களோ என்பது கொரோனா ஊசியை விட பயங்கரமானதாய் இருக்கும் 🤣
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.