Jump to content

மாவீரர் நாள் எழுச்சியுடன் நடைபெற உதவிடுக - சீமான் வலியுறுத்தல்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

உலகெங்கும் வாழும் தாய்த்தமிழ் உறவுகள் தங்களால் இயன்ற நிதி பங்களிப்பை அளித்து மாவீரர் நாள் எழுச்சியுடன் நடைபெற உதவிடுமாறு அன்புரிமையுடன் கேட்டுக்கொள்கிறேன் என்று  சீமான் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில், உலகம் முழுவதும் பரவி வாழ்கிற என் தாய்த்தமிழ் உறவுகளுக்கு வணக்கம்!

நிலமற்ற இனமும், நிர்வாண உடலும் அவமானகரமானது என என் உயிர் அண்ணன் நம் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் சொன்னது போல, ஒரு தேசிய இனம் தனக்கான எல்லாவித உரிமைகளுடன் கூடிய ஒரு தாயகத்தை என்று அடைகிறதோ, அன்றுதான் அதனை விடுதலை பெற்ற இனமாக கருத முடியும். அத்தகைய இலட்சிய இலக்கான, மண்ணின் விடுதலையை அடைய தலைவர் வழிநின்று தன்னிகரற்றபோர் புரிந்து வரலாறு படைத்தவர்கள் நம் மாவீரர்கள்.

தமிழ்த்தேசிய தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்கள் கனவு கண்ட தமிழீழ சோசலிசக் குடியரசு நாட்டினை உருவாக்கிட விதையாய் விழுந்த மாவீரர்கள் உலகம் இதுவரை கண்டிராத வீரத்திற்கும், அறத்திற்கும் சான்றாய் ஆனவர்கள். தமிழீழ நாடு என்பது வெறும் நிலப்பரப்பு அல்ல. அது ஒரு கனவு தேசம். சாதிய ஏற்றத்தாழ்வுகள் இல்லாத, அனைத்தும் தாய் மொழியில் அமைந்து, தற்சார்பு பொருளாதார வாழ்வோடு கூடிய பாதுகாப்பான வாழ்வு என தலைவர் காட்டிய வழியில் தழைத்த சுதந்திரப் பயிர். அதைக் கருக விடாமல், தன்னைக் கருக்கி காத்தவர்கள் நம் மாவீரர்கள்.

அத்தகைய மாவீரர் தெய்வங்களின் ஈகத்திருநாள் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 27 அன்று உலகெங்கும் பரவி வாழும் தமிழர்களால் உளம் நெகிழ்ந்து நினைவுகூரப்படுகிறது. ‘மாவீரர் நாள்’ என்பது அழுது புலம்பும் நாள் அல்ல; அது தமிழீழத் தாயகம் விடுதலைப்பெற, ஆர்ப்பரித்து எழுந்த ஆயிரமாயிரம் மாவீரர்களை நினைவு கூறும் புனித நாள். பகை முடிக்க, படை நடத்தி தாயக விடுதலை என்கின்ற ஒற்றை இலக்கிற்காக குருதி சிந்தி, உயிரை விலையாக கொடுத்து வீரத்தின் இலக்கணமான மாவீரர்கள் நம் நெஞ்சம் முழுக்க நிறைகின்ற உணர்ச்சி நாள். ஏகாதிபத்திய காரிருளை நீக்க, தங்களையே தந்த, நம் குலசாமிகளான மாவீரர்களை, இந்த கார்த்திகை மாதத்தில் நம் ஆன்மாவில் பொருத்தி எதிர்கால இலட்சிய பாதைக்கு வழிகாட்டுகிற திருவிளக்குகளாக அவர்களை நினைத்துப் போற்றி வணங்குகிற பொன்னாள்.

அத்தகைய புனிதத் திருநாளை தமிழர்கள் பெருமளவில் வாழும் தாய் தமிழ்நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் நாம் தொடர்ச்சியாக முன்னெடுத்து வருகிறோம். அந்த வகையில், இந்த ஆண்டு மாவீரர் நாளானது மலைக்கோட்டை மாநகராம் திருச்சியில் (ஜி கார்னர் திடல், டி. வி. எஸ். சுங்கச்சாவடி அருகில்) நாம் தமிழர் கட்சியால் பேரெழுச்சியாக முன்னெடுக்கப்படவிருக்கும் நிலையில், அப்பெருநிகழ்விற்கான ஏற்பாட்டிற்குப் பொருளாதார நெருக்கடி என்பது மிகப்பெரிய பெருந்தடையாக உள்ளது. எனவே நிகழ்வு ஏற்பாட்டிற்கான நிதி பற்றாக்குறையைப் போக்க மக்களிடம் திரள்நிதி (Crowd Funding) திரட்டுவது என்று தீர்மானிக்கப்பட்டுள்ளது.

ஆகவே உலகெங்கும் வாழும் தாய்த்தமிழ் உறவுகள் தங்களால் இயன்ற நிதி பங்களிப்பை அளித்து மாவீரர் நாள் எழுச்சியுடன் நடைபெற உதவிடுமாறு அன்புரிமையுடன் கேட்டுக்கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

https://www.toptamilnews.com/thamizhagam/maaveerar-day-naam-tamilar-katchi-seeman-statement/cid12778733.htm

Link to comment
Share on other sites

  • Replies 154
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

Sasi_varnam

நான் இந்த 3 வருடங்களில் பார்த்து கலந்து கொண்டு அனுபவித்த ஒன்று, தமிழகத்து இளைஞர்கள் எங்களவர்களை விடவும் மிக ஆழமாக, உணர்வுபூர்வாமாக எங்கள் போராட்ட ஞாயங்கள், சம்பவங்கள், போராட்ட வரலாறுகளை கற்று தெளிந்து

பாலபத்ர ஓணாண்டி

நான் நாம்தமிழருக்கு மட்டும் இல்லை திராவிடர் கழகமோ திமுகவோ அதிமுகவோ விசிகவோ மே17 ஓ யாராய் இருந்தாலும் அவர்களில்..   யார்  ஈழப்போராட்டத்தின் நியாயங்களையும் அதன் வரலாறையும் எம் வலிகளையும் எம் த

நிழலி

அடிச்ச காசும், சுருட்டின சொத்தும் காணாது என்று மேலும் கொள்ளை அடிக்க, தம் மக்களின் விடிவுக்காக தம் உயிரை தியாகம் செய்த தலைவரையும் அவர் குடும்பத்தினரையும் இன்னும் உயிருடன் இருக்கின்றார்கள் என்று கிளப்பி

  • கருத்துக்கள உறவுகள்

Crowd Funding திரட்டுவது என்று தீர்மானிக்கப்பட்டுள்ளது]

விளங்கிவிட்டது 🤣

  • Haha 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, விளங்க நினைப்பவன் said:

Crowd Funding திரட்டுவது என்று தீர்மானிக்கப்பட்டுள்ளது]

விளங்கிவிட்டது 🤣

அட, விளங்க நிணைப்பவருக்கு விளங்கிவிட்டது.

தலைவர் இறந்த உடலை சிங்களம் காட்டிய போது கூட, அது சும்மா, தலைவர் அவசரமா பணம் வேணுமாம் என்று திரட்டி ஆட்டையப் போட்ட கோஸ்டிகளுள், பணத்தை கேட்டாலும், கொடுப்பதற்கு அமைய சிறப்பா செய்து காட்டுவது பரவாயில்லை தானே 😎

Edited by Nathamuni
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிண்டு முடிவதற்காகவே இந்தச் செய்தியை கொழும்பான் இங்கே இணைத்துள்ளதாகத் தெரிகிறது. 

ஆதலால் இந்தத் திரியில் இனிக் கருத்தெழுதப்போவதில்லை என முடிவெடுத்துள்ளேன். 

Edited by Kapithan
  • Like 2
  • Thanks 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
51 minutes ago, Kapithan said:

சிண்டு முடிவதற்காகவே இந்தச் செய்தியை கொழும்பான் இங்கே இணைத்துள்ளதாகத் தெரிகிறது. 

ஆதலால் இந்தத் திரியில் இனிக் கருத்தெழுதப்போவதில்லை என மிடிவெடுத்துள்ளேன். 

நிச்சயமாக அல்ல. இப்படி நீங்களே நினைத்து மற்றவர்களையும் தவறாக வழிந‌டத்தாதீர்கள்.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பத்து இலட்சம் நிதி சேகரிப்பு திட்டம். தமிழகத்தினுள் மட்டும் இன்று வரை 93% திரண்டுள்ளது.

எப்படியும் 100% இலக்கை அடைந்துவுடும் என மகிழ்ச்சியடைகிறார்கள்.

வழக்கமாக50 - 52% தான் தமிழகத்தினுள்.

இது மாவீரர் நாள் உணர்வு, தமிழகம் எங்கும் பரவி முக்கியத்துவம் உணரப்பட்டதாலா அல்லது நாம் தமிழர் மக்கள் நம்பிக்கை பெறுவதாலா என சிறு விவாதம் போகிறது.

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
30 minutes ago, Nathamuni said:

பத்து இலட்சம் நிதி சேகரிப்பு திட்டம். தமிழகத்தினுள் மட்டும் இன்று வரை 93% திரண்டுள்ளது.

எப்படியும் 100% இலக்கை அடைந்துவுடும் என மகிழ்ச்சியடைகிறார்கள்.

வழக்கமாக50 - 52% தான் தமிழகத்தினுள்.

இது மாவீரர் நாள் உணர்வு, தமிழகம் எங்கும் பரவி முக்கியத்துவம் உணரப்பட்டதாலா அல்லது நாம் தமிழர் மக்கள் நம்பிக்கை பெறுவதாலா என சிறு விவாதம் போகிறது.

நாதா இது உங்க‌ளுக்கு தெரியுமோ தெரியாது.............இந்திய நாட்டு குடியுரிமை வைத்து இருப்ப‌வ‌ர்க‌ள் தான் நாம் த‌மிழ‌ர் க‌ட்சிக்கு காசு அனுப்ப‌ முடியும்..........இந்திய‌ குடியுரிமை வைத்து இருப்ப‌வ‌ர்க‌ள் ஜ‌ரோப்பா அமெரிக்கா க‌ன‌டா என்று ப‌ல‌ நாட்டில் வாழ்கிறார்க‌ள் அவ‌ர்க‌ளுக்கு இந்திய‌ன் வ‌ங்கி எக்க‌வுன்ட் இருக்கு அத‌ன் மூல‌ம் அனுப்ப‌லாம்.........க‌ட்டார் ம‌ற்றும் அர‌பு நாடுக‌ளில் வேலைக்கு போன‌ த‌மிழ் நாட்டு உற‌வுக‌ள் அவையும் அனுப்ப‌லாம்.........நாங்க‌ள் நாம் த‌மிழ‌ர் வ‌ங்கிக்கு அனுப்ப‌ முடியாது.............மாவீர‌ நாளுக்கு வ‌ரும் ம‌க்க‌ளே த‌ங்க‌ட‌ பார்க்கேட்டில் இருப்ப‌தை க‌ட்சி உண்டிய‌லுக்கை போடுவின‌ம் அதே பெரிய‌ காசாய் வ‌ந்து விடும்...............அது தான் அண்ண‌ன் சீமான் பொதுவாய் உல‌க‌ த‌மிழ‌ர் என்று சொல்லி இருக்கிறார்............இதுக்காக‌ தாங்க‌ள் பிடிச்ச‌ முய‌லுக்கு ஜ‌ந்து கால் என்று அட‌ம் பிடிப்ப‌வ‌ர்க‌ளுட‌ன் விவாத‌ம் செய்ய‌ போக‌ கூடாது...............க‌ட்சியில் இருக்கும் பிள்ளைக‌ள் த‌மிழீழ‌ ப‌ற்றுக் கொண்ட‌ புல‌ம்பெய‌ர் நாட்டு உற‌வுக‌ளுட‌ன் தொட‌ர்வில் இருக்கின‌ம் தேர்த‌ல் நேர‌ம் அதிக‌ ப‌ண‌ம் தேவைப் ப‌டும் அப்பேக்க‌ அவ‌ர்க‌ள் மூல‌ம் 100 அல்ல‌து 150 ப‌வுன்ஸ் குடுக்க‌ கூடும்🥰🙏...............

Link to comment
Share on other sites

அடிச்ச காசும், சுருட்டின சொத்தும் காணாது என்று மேலும் கொள்ளை அடிக்க, தம் மக்களின் விடிவுக்காக தம் உயிரை தியாகம் செய்த தலைவரையும் அவர் குடும்பத்தினரையும் இன்னும் உயிருடன் இருக்கின்றார்கள் என்று கிளப்பி விடும் கயவர் கூட்டத்துடன் ஒப்பிடும் போது, மாவீரர் நாள் நிகழ்வை செய்ய காசு தாருங்கள் என்று சீமான் கேட்பது தவறு அல்ல.

  • Like 4
  • Thanks 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, நிழலி said:

அடிச்ச காசும், சுருட்டின சொத்தும் காணாது என்று மேலும் கொள்ளை அடிக்க, தம் மக்களின் விடிவுக்காக தம் உயிரை தியாகம் செய்த தலைவரையும் அவர் குடும்பத்தினரையும் இன்னும் உயிருடன் இருக்கின்றார்கள் என்று கிளப்பி விடும் கயவர் கூட்டத்துடன் ஒப்பிடும் போது, மாவீரர் நாள் நிகழ்வை செய்ய காசு தாருங்கள் என்று சீமான் கேட்பது தவறு அல்ல.

அந்த கயவர் கூட்டமே, சீமானை திட்டுகிறது என்பதனையும் கவனிக்க வேண்டும். 

எனக்கு, கோடி தந்தாலும், கைது பயம் இருக்கும் கொழும்பில் அல்லது யாழ்ப்பாணத்தில், மாவீரர் நிகழ்வு நடத்த போக மாட்டேன் என்னும் போது, அதே பயம் இருந்தும், வருவது வரட்டும் என்று தொடங்கி,இன்று பல ஆயிரம் மக்களை திரட்டி மாவீரர் தினம் நடாத்தும் சீமான், எனக்கு மதிப்புக்குரியவராக தெரிகிறார். 

(உடான்ஸ் சுவாமியார் ஸ்டைலில்: பி.கு)

நான் சீமான் நடாத்தும் மாவீரர் குறித்து மட்டுமே பேசுகிறேன். நாதக அரசியல் குறித்தல்ல. 

Edited by Nathamuni
  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, விளங்க நினைப்பவன் said:

Crowd Funding திரட்டுவது என்று தீர்மானிக்கப்பட்டுள்ளது]

விளங்கிவிட்டது 🤣

1,.2009 ஆம். ஆண்டு  இந்த சீமான்  என்ன செய்து கொண்டிருந்தார்???  போராடி இருக்கலாம்   

2,.ஜேர்மன்காரனுக்கு  புலிகள் பற்றியும் இலங்கை தமிழர்கள் பற்றியும் தெரிந்து இருக்கிறது    ஆனால் பக்கத்தில் இருக்கும் தமிழ் மொழி பேசும் தமிழருக்கு சீமான் முலை முடுக்கு எல்லாம் சென்று வீடு வீடாக  இலங்கையில் தமிழர்கள் இருக்கிறார்கள் என்று சொல்ல வேண்டி இருக்கிறது   🤣😂😂

3,.தமிழ்நாட்டில் ஆயிரம் பிரச்சனைகள் உண்டு”  ஏதாகினும் ஒரு பிரச்சனையைப் போராடி வென்றது உண்டா ?? இல்லையே??  ஏன்   பயம் ...மத்திய அரசுக்கு மிகுந்த பயம்   தமிழ் நாட்டில் வேலை வெட்டி இல்லாத இளைஞர்கள் நிறையவே உண்டு”   எங்கே போகலாம்”?? என்ன செய்யலாம்?? என்னும் கேள்விகள் உடன்  இப்படியானவர்கள். எங்கே கூட்டம் நடந்தாலும் சேர்ந்து விடுவார்கள்   சிறந்த பொழுதுபோக்கு 🤣

4   இவரால் இலங்கையில் தமிழருக்கு தமிழ் ஈழம்  ஒருபோதும் அமைக்க முடியாது  ..இந்தியா மத்திய அரசு விரும்பும் பட்சத்தில் மட்டுமே  இலங்கையில் தமிழ் ஈழம் அமையும்   தமிழ் நாட்டின் எந்தவொரு அரசியல் கட்சியும்  இந்தியா மத்திய அரசை கொண்டு இலங்கையில் எந்தவொரு செயலையும் இலங்கை தமிழரின்  விருபத்துக்கு அமைய செய்யப்போவதில்லை 

5,.இலங்கைக்கு சீமானை அனுப்பி வைத்தால்  இலங்கை பிரதமருடன் கை குலுக்கி   பிரதமரின். நகைச்சுவையை ரசித்து சிரித்து படங்கள் எல்லாம்  எடுத்து கொண்டு வருவரா?? இல்லையா ?? 

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, Kandiah57 said:

1,.2009 ஆம். ஆண்டு  இந்த சீமான்  என்ன செய்து கொண்டிருந்தார்???  போராடி இருக்கலாம்   

2,.ஜேர்மன்காரனுக்கு  புலிகள் பற்றியும் இலங்கை தமிழர்கள் பற்றியும் தெரிந்து இருக்கிறது    ஆனால் பக்கத்தில் இருக்கும் தமிழ் மொழி பேசும் தமிழருக்கு சீமான் முலை முடுக்கு எல்லாம் சென்று வீடு வீடாக  இலங்கையில் தமிழர்கள் இருக்கிறார்கள் என்று சொல்ல வேண்டி இருக்கிறது   🤣😂😂

3,.தமிழ்நாட்டில் ஆயிரம் பிரச்சனைகள் உண்டு”  ஏதாகினும் ஒரு பிரச்சனையைப் போராடி வென்றது உண்டா ?? இல்லையே??  ஏன்   பயம் ...மத்திய அரசுக்கு மிகுந்த பயம்   தமிழ் நாட்டில் வேலை வெட்டி இல்லாத இளைஞர்கள் நிறையவே உண்டு”   எங்கே போகலாம்”?? என்ன செய்யலாம்?? என்னும் கேள்விகள் உடன்  இப்படியானவர்கள். எங்கே கூட்டம் நடந்தாலும் சேர்ந்து விடுவார்கள்   சிறந்த பொழுதுபோக்கு 🤣

4   இவரால் இலங்கையில் தமிழருக்கு தமிழ் ஈழம்  ஒருபோதும் அமைக்க முடியாது  ..இந்தியா மத்திய அரசு விரும்பும் பட்சத்தில் மட்டுமே  இலங்கையில் தமிழ் ஈழம் அமையும்   தமிழ் நாட்டின் எந்தவொரு அரசியல் கட்சியும்  இந்தியா மத்திய அரசை கொண்டு இலங்கையில் எந்தவொரு செயலையும் இலங்கை தமிழரின்  விருபத்துக்கு அமைய செய்யப்போவதில்லை 

5,.இலங்கைக்கு சீமானை அனுப்பி வைத்தால்  இலங்கை பிரதமருடன் கை குலுக்கி   பிரதமரின். நகைச்சுவையை ரசித்து சிரித்து படங்கள் எல்லாம்  எடுத்து கொண்டு வருவரா?? இல்லையா ?? 

இதுக்கெல்லாம் ஒரேயொரு பதில் செந்தமிழன் சீமான் அண்ணவை முதல்வராக்கிக் காட்டுங்கள் அவர் செய்கிறாரா இல்லையா என்று பார்ப்பம். எனக்கு இப்ப அந்தம்மா புது வீடியோ ஒண்டை போடப்போறா எண்ட பயமாக் கிடக்கு!

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, Kandiah57 said:

1,.2009 ஆம். ஆண்டு  இந்த சீமான்  என்ன செய்து கொண்டிருந்தார்???  போராடி இருக்கலாம்   

2,.ஜேர்மன்காரனுக்கு  புலிகள் பற்றியும் இலங்கை தமிழர்கள் பற்றியும் தெரிந்து இருக்கிறது    ஆனால் பக்கத்தில் இருக்கும் தமிழ் மொழி பேசும் தமிழருக்கு சீமான் முலை முடுக்கு எல்லாம் சென்று வீடு வீடாக  இலங்கையில் தமிழர்கள் இருக்கிறார்கள் என்று சொல்ல வேண்டி இருக்கிறது   🤣😂😂

3,.தமிழ்நாட்டில் ஆயிரம் பிரச்சனைகள் உண்டு”  ஏதாகினும் ஒரு பிரச்சனையைப் போராடி வென்றது உண்டா ?? இல்லையே??  ஏன்   பயம் ...மத்திய அரசுக்கு மிகுந்த பயம்   தமிழ் நாட்டில் வேலை வெட்டி இல்லாத இளைஞர்கள் நிறையவே உண்டு”   எங்கே போகலாம்”?? என்ன செய்யலாம்?? என்னும் கேள்விகள் உடன்  இப்படியானவர்கள். எங்கே கூட்டம் நடந்தாலும் சேர்ந்து விடுவார்கள்   சிறந்த பொழுதுபோக்கு 🤣

4   இவரால் இலங்கையில் தமிழருக்கு தமிழ் ஈழம்  ஒருபோதும் அமைக்க முடியாது  ..இந்தியா மத்திய அரசு விரும்பும் பட்சத்தில் மட்டுமே  இலங்கையில் தமிழ் ஈழம் அமையும்   தமிழ் நாட்டின் எந்தவொரு அரசியல் கட்சியும்  இந்தியா மத்திய அரசை கொண்டு இலங்கையில் எந்தவொரு செயலையும் இலங்கை தமிழரின்  விருபத்துக்கு அமைய செய்யப்போவதில்லை 

5,.இலங்கைக்கு சீமானை அனுப்பி வைத்தால்  இலங்கை பிரதமருடன் கை குலுக்கி   பிரதமரின். நகைச்சுவையை ரசித்து சிரித்து படங்கள் எல்லாம்  எடுத்து கொண்டு வருவரா?? இல்லையா ?? 

சரிதான், சீமான் பேச்சினை கேட்க்காமல், அவர் குறித்து வாசிக்காமல், பேசுகிறீர்கள் என்று சொன்னதை, மீண்டும், மீண்டும் எழுத்திலும் உறுதிப்படுத்துகிறீர்கள்.

நீங்கள் எழுதியதன் அர்த்தம் ஏதாவது, உங்களுக்கு, புரிந்தால், தயவுடன் விளக்கம் தரவும்.   🤣🤦‍♂️😁

1 minute ago, வாலி said:

எனக்கு இப்ப அந்தம்மா புது வீடியோ ஒண்டை போடப்போறா எண்ட பயமாக் கிடக்கு!

போடுவிட்டுது மனிசி. தனியா இல்லை. இரண்டு லட்சுமிகளும் ஆளுக்கொன்று.

நம்ம அண்ணி, திரிசா வுக்கு கொதிச்சு பொங்கி எழுந்த குஸ்பு, எனக்கு ஏன் பொங்கி எழவில்லையாம்.... 😁🤣
 

  • Haha 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மாவீரர்களை வைத்து எவர் பணம் சேர்த்தாலும் தவறு தான். அதேவேளை மாவீரர் நாள் செலவை சிலர் பொறுப்பு எடுக்க வேண்டும். இல்லை என்றால் நாளடைவில் அவை நிறுத்தப் பட்டு விடக்கூடிய ஆபத்து உள்ளது. அதற்கான வரவு செலவு பகிரங்கமாக அறிவிக்கப்படவேண்டும். 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கந்தையா அண்ணா சொன்ன ஐந்து காரணங்களும் யதார்த்தங்கள் உண்மை. 

32 minutes ago, Kandiah57 said:

இலங்கைக்கு சீமானை அனுப்பி வைத்தால்  இலங்கை பிரதமருடன் கை குலுக்கி   பிரதமரின். நகைச்சுவையை ரசித்து சிரித்து படங்கள் எல்லாம்  எடுத்து கொண்டு வருவரா?? இல்லையா ?? 

அது தான் நடைபெறும். அதற்கு ஒரு காரணம் சொல்லி அவர் செயல் யாழ்களத்தில் நியாயபடுத்தபடும்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, விசுகு said:

மாவீரர்களை வைத்து எவர் பணம் சேர்த்தாலும் தவறு தான். அதேவேளை மாவீரர் நாள் செலவை சிலர் பொறுப்பு எடுக்க வேண்டும். இல்லை என்றால் நாளடைவில் அவை நிறுத்தப் பட்டு விடக்கூடிய ஆபத்து உள்ளது. அதற்கான வரவு செலவு பகிரங்கமாக அறிவிக்கப்படவேண்டும். 

மாவீரர் நாள் கொண்டாட்டத்தை நிறுத்தினாலும் மக்கள் மனங்களில் இருந்து மாவீரர் நினைவு போகாது என நம்புகிறேன்.

90 களில் தமிழகத்தில் உள்ள அகதிமுகாமில் தங்கியிருந்த இலங்கை தமிழர்கள் அக்காலகட்டத்தில் மாவீரர் நினைவினை வெளிப்படையாக காட்ட முடியாது ஆனால் குறித்த நாளில் அவரர் தத்தமது மத ஆலயங்களுக்கு சென்று நினைவு கொண்டார்கள்.

 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Kandiah57 said:

1,.2009 ஆம். ஆண்டு  இந்த சீமான்  என்ன செய்து கொண்டிருந்தார்???  போராடி இருக்கலாம்   

2,.ஜேர்மன்காரனுக்கு  புலிகள் பற்றியும் இலங்கை தமிழர்கள் பற்றியும் தெரிந்து இருக்கிறது    ஆனால் பக்கத்தில் இருக்கும் தமிழ் மொழி பேசும் தமிழருக்கு சீமான் முலை முடுக்கு எல்லாம் சென்று வீடு வீடாக  இலங்கையில் தமிழர்கள் இருக்கிறார்கள் என்று சொல்ல வேண்டி இருக்கிறது   🤣😂😂

3,.தமிழ்நாட்டில் ஆயிரம் பிரச்சனைகள் உண்டு”  ஏதாகினும் ஒரு பிரச்சனையைப் போராடி வென்றது உண்டா ?? இல்லையே??  ஏன்   பயம் ...மத்திய அரசுக்கு மிகுந்த பயம்   தமிழ் நாட்டில் வேலை வெட்டி இல்லாத இளைஞர்கள் நிறையவே உண்டு”   எங்கே போகலாம்”?? என்ன செய்யலாம்?? என்னும் கேள்விகள் உடன்  இப்படியானவர்கள். எங்கே கூட்டம் நடந்தாலும் சேர்ந்து விடுவார்கள்   சிறந்த பொழுதுபோக்கு 🤣

4   இவரால் இலங்கையில் தமிழருக்கு தமிழ் ஈழம்  ஒருபோதும் அமைக்க முடியாது  ..இந்தியா மத்திய அரசு விரும்பும் பட்சத்தில் மட்டுமே  இலங்கையில் தமிழ் ஈழம் அமையும்   தமிழ் நாட்டின் எந்தவொரு அரசியல் கட்சியும்  இந்தியா மத்திய அரசை கொண்டு இலங்கையில் எந்தவொரு செயலையும் இலங்கை தமிழரின்  விருபத்துக்கு அமைய செய்யப்போவதில்லை 

5,.இலங்கைக்கு சீமானை அனுப்பி வைத்தால்  இலங்கை பிரதமருடன் கை குலுக்கி   பிரதமரின். நகைச்சுவையை ரசித்து சிரித்து படங்கள் எல்லாம்  எடுத்து கொண்டு வருவரா?? இல்லையா ?? 

சீமான் ப‌ற்றிய‌ உங்க‌ட‌ புரித‌ல் இம்ம‌ட்டும் தான்............2009க‌ளில் சீமான் ஈழ‌ த‌மிழ‌ர்க‌ளுக்காக‌ எத்த‌னை த‌ட‌வை சிறையில் அடைக்க‌ப் ப‌ட்டார் தெரியுமா...........உதவி செய்யாட்டியும் உபத்திரம் செய்யக்கூடாது...............நீங்க‌ள் ட‌ங்கிள‌ஸ் ஆன‌ந்த‌ ச‌ங்க‌ரி போன்ற‌வைக்கு xxxxxxxx என்ப‌து என‌க்கு தெரிந்த‌ ஒன்று...........2009க்கு முத‌ல் ட‌க்கிள‌ஸ்சும் ச‌ரி ஆன‌ந்த‌ ச‌ங்க‌ரிக்கும் ஈழ‌ ம‌ண்ணில் ம‌க்க‌ள் ஆத‌ர‌வு துப்ப‌ர‌வாய் இல்லை............சீமானின் க‌ட்சி த‌மிழ‌க‌த்தின் மூன்றாவ‌து பெரிய‌ க‌ட்சி என்று தேர்தல் ஆணையம் அறிவித்த‌து............இந்த‌ திரியில் உங்க‌ட‌ ம‌ன‌சில் இருக்கும் வ‌ன்ம‌த்தை ந‌க்க‌லோடு கொட்டி இருக்கிறீங்க‌ள்.............புல‌ம் பெய‌ர் நாட்டு எலிக‌ளை விட‌ சீமான் 2009க‌ளில் ந‌ட‌ந்த‌ இன‌ப் ப‌டுகொலைய‌ த‌மிழ‌க‌ம் எங்கும்  எடுத்து சொல்லி விட்டார்...........இர‌வு ப‌க‌ல் பாராம.............

இன‌த்தை காட்டி கொடுத்து கூட்டி கொடுத்த‌வ‌ர்க‌ள் பின்னால் போகாம‌ 😡 அடுத்த‌ த‌லைமுறைக்கு ந‌ல்ல‌தை எடுத்து சொல்லும் ந‌ப‌ர்க‌ள் பின்னால் போவ‌து சிற‌ப்பு🙏............சிறு வ‌ய‌து முத‌லே ட‌க்கிள‌ஸ் ம‌ற்றும் ஆன‌ந்த‌ ச‌ங்க‌ரி துரோகிய‌ல் என்று முன்னோர்க‌ள் சொல்லி கேட்டு வ‌ள‌ந்த‌வ‌ன்...............எதிரிய‌ விட‌ துரோகியே ஆவ‌த்தான‌வ‌ர்க‌ள்...........இது த‌மிழீழ‌ தேசிய‌ த‌லைவ‌ர் சொன்ன‌து🙏🙏🙏🙏🙏🙏.............
வாழ்க்க‌ பிர‌பாக‌ர‌ன் புக‌ழ்🙏🙏🙏
வாழ்க‌ வ‌ள‌ர்க‌ நாம் த‌மிழ‌ர் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

Edited by நிழலி
அநாகரீகமாக எழுதிய சொற்கள் நீக்கப்பட்டன
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, விசுகு said:

மாவீரர்களை வைத்து எவர் பணம் சேர்த்தாலும் தவறு தான். அதேவேளை மாவீரர் நாள் செலவை சிலர் பொறுப்பு எடுக்க வேண்டும். இல்லை என்றால் நாளடைவில் அவை நிறுத்தப் பட்டு விடக்கூடிய ஆபத்து உள்ளது. அதற்கான வரவு செலவு பகிரங்கமாக அறிவிக்கப்படவேண்டும். 

இதைதான் சொல்லுறது சும்மா கிடைக்கிற மாட்டை பல்லை பிளந்து பதம் பார்கிறதென்று.

அவர்கள் தேவையானதை அங்கேயே திரட்டி விட்டார்கள்.

நாங்கள் வாயை மூடுவது நல்லது. இல்லையோ?

  • Haha 1
  • Sad 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
23 minutes ago, Nathamuni said:

இதைதான் சொல்லுறது சும்மா கிடைக்கிற மாட்டை பல்லை பிளந்து பதம் பார்கிறதென்று.

அவர்கள் தேவையானதை அங்கேயே திரட்டி விட்டார்கள்.

நாங்கள் வாயை மூடுவது நல்லது. இல்லையோ?

நான் க‌வ‌ணித்த‌ ம‌ட்டில் இந்த‌ திரியில் ஆர‌ம்ப‌ம் முத‌ல் என்ன‌ எழுத‌ப் ப‌ட்ட‌து ஏது எழுத‌ப் ப‌ட்ட‌து என்று வாசிக்காம‌ உப்புக்கு ச‌ப்பில்லாம‌ எழுதி போட்டு ம‌ற்ற‌வ‌ர்க‌ளை குழ‌ப்பி விடுவ‌து...........நாங்க‌ள் இர‌ண்டு பேரும் புரியும் ப‌டி எழுதியும் புரிய‌ வில்லை என்றால் என்ன‌ செய்வ‌து நாதா................

2 hours ago, வாலி said:

இதுக்கெல்லாம் ஒரேயொரு பதில் செந்தமிழன் சீமான் அண்ணவை முதல்வராக்கிக் காட்டுங்கள் அவர் செய்கிறாரா இல்லையா என்று பார்ப்பம். எனக்கு இப்ப அந்தம்மா புது வீடியோ ஒண்டை போடப்போறா எண்ட பயமாக் கிடக்கு!

மன நோயாளிக்கு நல்லா டிரீட்மென்ட் கொடுத்தாச்சு இனி அவா அப்படி வீடியோ போட மாட்டா ஆன‌ ப‌டியால் நீங்க‌ள் அதை ப‌ற்றி க‌வ‌லைப் ப‌ட‌ தேவை இல்லை.............

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, நிழலி said:

அடிச்ச காசும், சுருட்டின சொத்தும் காணாது என்று மேலும் கொள்ளை அடிக்க, தம் மக்களின் விடிவுக்காக தம் உயிரை தியாகம் செய்த தலைவரையும் அவர் குடும்பத்தினரையும் இன்னும் உயிருடன் இருக்கின்றார்கள் என்று கிளப்பி விடும் கயவர் கூட்டத்துடன் ஒப்பிடும் போது, மாவீரர் நாள் நிகழ்வை செய்ய காசு தாருங்கள் என்று சீமான் கேட்பது தவறு அல்ல.

நீங்கள் குறிப்பிடுவதுபோல நிறைய பேர் பணம் , தங்க நகைகளுடன் இயக்கங்களை விட்டு ஓடிப்போய் வெளிநாடுகளில் வசதியாக வாழ்கிறார்கள் என்று நானும் கேள்விப்பட்டிருக்கிறேன். அப்பாவி மக்கள் இங்கு பணத்தையும் , நகையையும், சொத்துக்களையும்,உயிரையும்   இழந்ததுதான் மிச்சம்.

அது சரி, சீமானுக்கு வெளிநாட்டு தமிழர்கள் மாதா மாதம் பணம் வழங்குவதா பேசிக்கொள்வார்கள். அப்படி இல்லையா? 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, Nathamuni said:

இதைதான் சொல்லுறது சும்மா கிடைக்கிற மாட்டை பல்லை பிளந்து பதம் பார்கிறதென்று.

அவர்கள் தேவையானதை அங்கேயே திரட்டி விட்டார்கள்.

நாங்கள் வாயை மூடுவது நல்லது. இல்லையோ?

நான் நினைக்கிறேன் நீங்கள் செய்தியை புரிந்து வாசிப்பதில் லை எழுதுவது இல்லை என்று.

செய்தியும் வேண்டுகோளூம் வெளிநாட்டு தமிழர்களுக்கு. நன்றி 

உலகெங்கும் வாழும் தாய்த்தமிழ் உறவுகள் தங்களால் இயன்ற நிதி பங்களிப்பை அளித்து மாவீரர் நாள் எழுச்சியுடன் நடைபெற உதவிடுமாறு அன்புரிமையுடன் கேட்டுக்கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, விசுகு said:

நான் நினைக்கிறேன் நீங்கள் செய்தியை புரிந்து வாசிப்பதில் லை எழுதுவது இல்லை என்று.

செய்தியும் வேண்டுகோளூம் வெளிநாட்டு தமிழர்களுக்கு. நன்றி 

உலகெங்கும் வாழும் தாய்த்தமிழ் உறவுகள் தங்களால் இயன்ற நிதி பங்களிப்பை அளித்து மாவீரர் நாள் எழுச்சியுடன் நடைபெற உதவிடுமாறு அன்புரிமையுடன் கேட்டுக்கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

நீங்களும் வாசிக்காமல் பதில் போடுகிறீர்கள் என்று தோன்றுகிறது.

தேவையான நிதி 93% நேற்றுவரை உள்ளூரிலேயே கிடைத்திருக்கிறது. 100% இம்முறை அங்கேயே கிடைத்து விடுமளவுக்கு ஒன்று மாவீரர் புகழ் பரவியுள்ளது அல்லது நாதக வளர்ந்துள்ளது.

இந்த நிலையில், கணக்கு வேணும் என்று நாம் கேட்க முடியுமா என்ன?

வந்த நிதி, செலவு விபரம் சமர்ப்பிக்க வெண்டும் என, தேர்தல் ஆணையம் விதியாக வைத்துள்ளதே.

Edited by Nathamuni
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, Cruso said:

அது சரி, சீமானுக்கு வெளிநாட்டு தமிழர்கள் மாதா மாதம் பணம் வழங்குவதா பேசிக்கொள்வார்கள். அப்படி இல்லையா? 

கொடுத்தார்கள்வளரும் வரை.

இனி அங்கேயே பார்த்துக் கொள்ளும் அளவுக்கு வளர்ந்து விட்டார்கள்.

அட, அங்குள்ள தமிழர் பணத்தில் தான், சிங்களத்து அம்பாந்தோட்டையில் ஒரு பில்லியன் டாலர் முதலிட வந்தார் ஜெகதரட்சகன்.

அப்புறம்??

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, Nathamuni said:

நீங்களும் வாசிக்காமல் பதில் போடுகிறீர்கள் என்று தோன்றுகிறது.

தேவையான நிதி 93% நேற்றுவரை உள்ளூரிலேயே கிடைத்திருக்கிறது. 100% இம்முறை அங்கேயே கிடைத்து விடுமளவுக்கு ஒன்று மாவீரர் புகழ் பரவியுள்ளது அல்லது நாதக வளர்ந்துள்ளது.

இந்த நிலையில், கணக்கு வேணும் என்று நாம் கேட்க முடியுமா என்ன?

வந்த நிதி, செலவு விபரம் சமர்ப்பிக்க வெண்டும் என, தேர்தல் ஆணையம் விதியாக வைத்துள்ளதே.

பணம் சேர்ந்தது பற்றி அல்ல எனது பார்வை. பணம் யாரிடம் சேர்க்கப் பட்டது அல்லது கேட்கப்பட்டது??

உங்களுக்கு புரியாது விட்டால் இதற்கு மேல் விளக்கப் படுத்தமுடியாது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, விசுகு said:

பணம் சேர்ந்தது பற்றி அல்ல எனது பார்வை. பணம் யாரிடம் சேர்க்கப் பட்டது அல்லது கேட்கப்பட்டது??

உங்களுக்கு புரியாது விட்டால் இதற்கு மேல் விளக்கப் படுத்தமுடியாது

நான் கொடுக்கவில்லை. ஆகவே கணக்கு கேட்கும் தார்மீக உரிமை இல்லை.

நீங்கள் கொடுத்திருந்தால், அதற்கு என்ன வேலை நடந்தது என்று தாராளமாக கேட்கலாம் விசுகண்ணை!

இதில் என்ன குழப்பம்??

Edited by Nathamuni
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, நிழலி said:

அடிச்ச காசும், சுருட்டின சொத்தும் காணாது என்று மேலும் கொள்ளை அடிக்க, தம் மக்களின் விடிவுக்காக தம் உயிரை தியாகம் செய்த தலைவரையும் அவர் குடும்பத்தினரையும் இன்னும் உயிருடன் இருக்கின்றார்கள் என்று கிளப்பி விடும் கயவர் கூட்டத்துடன் ஒப்பிடும் போது, மாவீரர் நாள் நிகழ்வை செய்ய காசு தாருங்கள் என்று சீமான் கேட்பது தவறு அல்ல.

முற்றிலும் உண்மை.

எதற்கும் வரும் 27ம் திகதி நம்மவர்களின் நுண்ணறிவு தொழில் நுட்பம் எப்படி வேலை செய்கின்றது என பார்க்கலாம். 😄

Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • மட்டக்களப்பு எல்லையில் புதிதாக விகாரை அமைப்பு – திட்டமிட்ட சிங்கள மயமாக்கல் தீவிரம் May 23, 2024   மட்டக்களப்பை சிங்கள மயமாக்கலின் அடிப்படையில் எல்லைக் கிராமமான கிரான் பிரதேச செயலகப் பிரிவிலுள்ள வடமுனை கிராம சேவகர்பிரில் உள்ள நெலுகல் மலை எனப்படுகின்ற மலையில் எமது மாவட்டத்தின் இரு இராஜாங்க அமைச்சர்களின் ஆசீர்வாதத்துடன் நெலுகல்மலை கிறீன் விகாரை எனும் பெயரில் புதிதாக விகாரை கட்டும் பணி திருகோணமலை சோமவதி விகாரை விகாராதிபதி தலைமையில் இடம்பெற்று வருகின்றது என தமிழ் தேசிய மக்கள் முன்னணி கட்சி தேசிய அமைப்பாளா் தர்மலிங்கம் சுரேஸ் தெரிவித்தார். மட்டக்களப்பில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி காரியாலத்தில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாள் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்தார். திட்டமிட்ட அடிப்படையிலே கிழக்கு சிங்கள தேசத்துக்குள் படிப் படியாக கரைந்து கொண்டிருக்கின்றது அம்பாறை. திருகோணமலை மாவட்டம் முழுவதுமாக சிங்கள தேசத்தின் திட்டமிட்ட அபகரிப்பு உட்பட்டு தமிழ் மக்கள் கையில் இருந்து விடுவிக்கப்படுகின்ற மிகப் பெரிய ஆபத்தான நிலைக்கு போயிருக்கின்றது. அதன் அடுத்த கட்டமாக மட்டக்களப்பு மாவட்டம் இதில் எல்லைப்புற கிராமங்கள் சிங்கள தேசத்தினாலும் பெரும்பான்மை இனத்தவர்களால் குறிவைக்கப்பட்டு எல்லைக் கிராமங்கள் அபகரிக்கும் செயற்பாடுகள் படிபடியாக நடந்தேறிவருகின்றது. அதனடிப்படையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் கிரான் பிரதேச செயலகத்தின் கீழ் உள்ள வடமுனை கிராமசேவகர் பிரிவிலுள்ள நெலுகல் மலையில் எனப்படுகின்ற குடும்பி மலையின் பின்பகுதியான இந்த மலையில் நெலுகல்மலை கிறீன் விகாரை எனும் பெயரில் விகாரை கட்டும் பணியை திருகோணமலை சோமவதி விகாரை விகாராதிபதி தலைமையில் இடம்பெற்று வருகின்றது. இந்த பகுதியில் பாரிய கட்டிடம் அமைக்கப்பட்டு அதில் இருந்துகொண்டு கட்டுமானப்பணியில் இராணுவத்தைச் சேர்ந்தவர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இதன்நோக்கம் கிழக்கு மாகாணத்தை முற்றுமுழுதாக சிங்கள பௌத்த தேசத்துக்குள் கரைப்பதற்கான நடவடிக்கையபக பார்க்கின்றோம் வடக்கில் குருந்தூர்மலை வெடுக்குநாறி மலை, கையகப்படுத்தப்பட்டுள்ள இந்த வேளையிலே கிழக்கு மண் சத்தம் இல்லாமல் பறிபோய் கொண்டிருக்கின்றது. மயிலத்தமடு மேச்சல்தரையில் ரவுண்டப் எனும் புல்லுக்கு அடிக்கும் மருந்தையடித்து மேச்சல் புல்தரைகள் அழிக்கப்பட்டு 8 ஆயிரத்துக்கு மேற்பட்ட மேச்சல் தரை காணிகள் கையகப்படுத்தப்பட்டுள்ளது அதேவேளை மகாவலி ஏ வலயத்துக்குரிய வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டு பெரும்பான்மை இனத்தவர்களை குடியேற்றும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. அந்தப் பண்ணையாளா்கள் தொடர்ந்து அச்சுறுத்தி அங்கிருந்து அவர்களை வெளியேற்றுகின்ற நடவடிக்கைகள் கச்சிதமாக மேற்கொள்ளப்பட்டுவருகின்றது இந்த நடவடிக்கைகளுக்கு யார் காரணம் என்பதை மக்கள் மிகத் தெளிவாக விளங்கிகொள்ள வேண்டும். இந்த மாவட்டத்தில் 2 இராஜாங்க அமைச்சர்கள் இருக்கின்றனர். இவர்களுடைய பணி சிங்கள தேசத்தினுடைய நிகழ்சி நிரலை அமுல்படுத்துவதுதான் இவர்களது நோக்கமாக இருக்கின்றதே தவிர மட்டக்களப்பு மாவட்ட மக்களை பாதுகாக்க எந்தவொரு முன்னேற்றகரவமான செயற்பாடுகளையும் செய்யவில்லை. குறிப்பாக மேச்சல்தரை பகுதிக்கு பாராளுமன்ற உறுப்பினர்கள் போக முடியாத சூழ்நிலை காணப்பட்டது அதனை எமது கட்சி தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அந்த இடத்துக்கு சென்று அந்த பகுதிக்கு பாராளுமன்ற உறுப்பினர் கூட செல்லமுடியாது என்பதை சர்வதேசத்துக்கு அம்பலப்படுயிருந்தார். இந்த நிலையில் கஜேந்திரகுமார் ஏன் இங்கு வரவேண்டும் என பிள்ளையான் நேற்ரூ முன்தினம் கூட்டத்தில் கேட்டிருந்தார். எனவே கஜேந்திரகுமார் இந்த இடத்துக்கு வரவேண்டியதாக இருந்தது. நீங்கள் ஒரு காட்டிக் கொடுப்பை செய்து தமிழ் மக்களை அழிக்கின்ற செயற்பாட்டில் நின்றதனால் அந்த மக்கள் யாழ் மாவட்டத்தைச் சேர்ந்த மக்கள் பிரதிநிதிகளை கூப்பிடவேண்டிய அபாய நிலைக்கு இட்டுச் சென்றீர்கள் எனவே அது ஒரு வெக்க கேடான விடயம். இவரின் செயற்பாடுகளை பார்த்தால் தெரியும் தங்களது பக்கற்றுக்களை நிரப்புகின்ற விதமாக தங்களின் அமைச்சுக்கு ஊடாககிடைக்கின்ற வீதிகளை அமைத்து அதில் 15 வீதம் தரகு பணம் பெற்றுக் கொண்டு அதற்கு வக்காளத்து வாங்குகின்ற ஒப்பந்தகாரர்களை பின்னால் வைத்துக்கொண்டு பேச ஒப்பந்தகாரர்கள் கையடிக்கின்ற செயற்பாட்டை மிகக் கச்சிதமாக பிள்ளையான் செய்துவருகின்றாா் என்றும் சுரேஷ் தெரிவித்தாா்.   https://www.ilakku.org/மட்டக்களப்பு-எல்லையில்-ப/
    • ஈரான் ஜனாதிபதியின் ஜனாசா நல்லடக்கம் இன்று sachinthaMay 23, 2024 ஹெலிகொப்டர் விபத்தில் கொல்லப்பட்ட ஈரான் ஜனாதிபதி, வெளியுறவு அமைச்சர் மற்றும் ஏனையவர்களுக்காக அந்நாட்டு உயர்மட்டத் தலைவர் ஆயதொல்லா அலி காமெய்னி நேற்று தொழுகை நடத்தினார். ஈரானிய கொடி போர்த்திய இறந்தவர்களின் உடல்கள் அடங்கிய பேழைகள் டெஹ்ரான் பல்கலைக்கழகத்தில் வைக்கப்பட்டு பெரும் எண்ணிக்கையான மக்களுக்கு முன் உயர்மட்டத் தலைவர் ஜனாஸா தொழுகையை நடத்தினார். ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி மற்றும் வெளியுறவு அமைச்சர் ஹொசைன் அமிர் அப்துல்லாஹியன் மற்றும் மேலும் ஆறு பேர் சென்ற ஹெலி கடந்த ஞாயிற்றுக்கிழமை அசர்பைஜான் நாட்டு எல்லைக்கு அருகில் விபத்துக்குள்ளாகியதில் ஒருவரும் உயிர் தப்பவில்லை. ‘இறைவனே நாம் அவரிடம் நன்மையைத் தவிர வேறு எதனையும் பார்க்கவில்லை’ என்று உயர்மட்டத் தலைவர் பிரார்த்தனையின்போது தெரிவித்தார். தொடர்ந்து அந்த பேழைகள் மக்களால் சுமந்து செல்லப்பட்டதோடு வெளியே ‘அமெரிக்கா ஒழிக’ என்ற கோசமும் எழுப்பப்பட்டது. இந்த இறுதிக் கிரியையில் பல வெளிநாட்டு தலைவர்களும் பங்கேற்றனர். ஈரான் ஜனாதிபதியின் இறுதிக் கிரியை கடந்த செவ்வாய்க்கிழமை ஆரம்பிக்கப்பட்ட நிலையில் அவரது உடல் தெற்கு கொராசன் மாகாணத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு பின்னர் அவரது சொந்த ஊரான மஷாத்துக்கு எடுத்து வரப்படவுள்ளது. இன்று (23) மாலை இறுதிச் சடங்குகளுக்குப் பின்னர் அவரது உடல் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.   https://www.thinakaran.lk/2024/05/23/world/62483/ஈரான்-ஜனாதிபதியின்-ஜனாச/
    • இதெல்லாம் ரணிலுக்கு வாக்கு போட சொல்லும் ஒரு யுக்தி , மொக்கு சிங்களவனுக்கு சொல்லும் செய்தி 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.