Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, goshan_che said:

நல்ல வேளையாக டய்பட்டிசுக்கு தமிழ் தெரியாது….

இல்லாட்டில் உதை வாசிப்போட்டு எனக்கு மேலே எல்லா ஏறி ஆடும்🤣

நாங்கள் வீரப்பரம்பரை. ஓணாடிகள் போல் வருமோ, வராதோ என்று பயப்படுவதில்லை.

வந்த ஆளை அமத்தி வச்சு, நம்ம control இல் வச்சிருக்கிறம். ஓவராகினால், ஊசியால வயித்துல ஒரே குத்து. அடங்கீடுவார்🤣.

அப்பாடா இப்பான் சந்தோசம்.. நிம்மதி..

  • Replies 364
  • Views 38k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • goshan_che
    goshan_che

    பாகம் II   ஒருவருக்கு நீண்ட கால்கள் இருப்பது சில அனுகூலங்களையும், சில பிரதிகூலங்களையும் தரவல்லது. விமானப்பயணத்தில் பிரதிகூலம் என்னவெனில், எக்கானாமி இருக்கைகள் இடையேயான  இடைவெளி போதாமையால், ம

  • Thumpalayan
    Thumpalayan

    எல்லார்ட வரவேற்புக்கும் நன்றி. ஒவொருநாளும் யாழப் பாக்காட்டிக்கு எனக்கு பத்தியப்படாது. எழுதத்தான் பஞ்சி, அதைவிட அநேகமான புலம்பெயர் உறவுகள் அடுத்த கட்டத்துக்கு நகர விரும்பாமையும் (moving on) ஒருவகை விரக

  • Kavi arunasalam
    Kavi arunasalam

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, பாலபத்ர ஓணாண்டி said:

அப்பாடா இப்பான் சந்தோசம்.. நிம்மதி..

நாம் வாழுவதில் கூட இல்லாத சந்தோசம் இன்னொருவன் வீழ்வதில் உள்ளது - என்பது தொன்று தொட்டு தமிழர் நம் வாழ்வியல்தானே🤣.

#சும்மா பகிடிக்கு🙏

8 hours ago, satan said:

மொத்தத்தில்,, ஏழைகள் புது உடுப்பு உடுத்தக்கூடாது, புது வருடம் கொண்டாடக்கூடாது, கந்தலும் கவலையும் கலைந்த தலையுமாய் திரிய வேண்டுமென எதிர்பார்க்கிறீர்கள்? வாழ்க உங்கள் நினைப்பு!

21 hours ago, goshan_che said:

இல்லை ஏழைகள் இந்த கடைகளில், இந்த படம் காட்டும் தோற்றத்தில் இருக்க மாட்டார்கள். 

அதே போல் அவர்கள் நாளுக்கு நல்ல உடுப்பு எடுத்தாலும், இப்படி பட்ட கடையில் இன்றி, நடைபாதை கடையிலோ அல்லது துணி வாங்கி தைத்தோதான் போடுவார்கள்.

நீங்கள் கனடா வந்த பின் ஏழ்மை, ஏழைகளை நூதனகாட்சி சாலையில்தான் பார்த்தீர்களோ? அப்படி இருக்கிறது உங்கள் ஏழ்மை பற்றிய புரிதல்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, satan said:

காசும் நேரமும் இருப்பவர்கள் வார, வருட கடைசிவரை கால்கடுக்க ஏன் நிற்க வேண்டும்?

என்ன ஜோக்கா, இரெண்டும் இருந்தாலும் ஆட்கள் கூட என்றால் வரிசையில்தான் நிற்க வேண்டும்.

போன மாசம் No Limit இல் ஒரு 20 நிமிடம் கியூவில் நிண்டுதான் வாங்கினேன். 

எங்கள் சிறி @தமிழ் சிறி அண்ணா கூட இலங்கை போன நேரம் நோ லிமிட்டின் முந்திய கடையான ஹவுஸ் ஆப் பேசனில் வரிசையில் நின்றுள்ளார், அது செய்தியாக யாழில் வந்தது.

அவர் போன்ற செல்வ சீமான்களே வரிசையில்தான்.

இங்கே நிற்பவர்கள் ஏழைகள் இல்லை. ஆனால் ஆட்களை அனுப்பி உடுப்பு வாங்க பெரும் முதலைகளமில்லை.

8 hours ago, satan said:

தலை நகரில் வேலை செய்வோர் தங்களுக்கு விடுமுறை கிடைத்ததும் தம் உறவுகளுக்கு வேண்டிய உடை, உணவுப்பண்டங்களை வாங்கிக்கொண்டு எதிர்பார்த்திருக்கும் உறவுகளை சென்றடைய நிரையில் கால் கடுக்க  நின்று, வாகனத்தின் மிதிப்பலகையில் பயணம் செய்து, தங்கள் விடுமுறையின் பாதி காலத்தை வரிசைகளில்

பாஸ் இவர்கள் ஏழைகள் இல்லை. உழைக்கும் வர்க்கம், கீழ் நடுத்தர வர்க்கம்.

போற போக்கில் இலங்கையில் கார் வைத்திராத எல்லாரும், பஸ் ரயிலில் போவோர் எல்லாரும் ஏழைகள் என அடிச்சி விடுவியள் போல🤣.

8 hours ago, satan said:

வாரம் முழுக்க வேலை செய்தாற்தான் வார இறுதியில் தங்களுக்கு தேவையானவற்றை கொள்வனவு செய்ய  முடியும்.

இது எல்லா நாட்டிலும் தானே?

கனடாவில் நீங்கள் எப்படி? வாரம் முழுக்க குப்புற படுத்து கிடந்து விட்டு, வார இறுதியில் மரத்தில் காசை புடுங்கியா பொருட்கள் வாங்குவது🤣?

  • கருத்துக்கள உறவுகள்

@goshan_che   இந்த விவாதத்தில் எதை நிரூபிக்க சிலர் முற்படுகின்றர்கள் என்றோ எதனால் விவாதம் நீண்டு செல்கிறது  என்பதோ  புரியவில்லை.  

ஆனால், ஏழையோ பணம்படைத்தவர்களோ இனம் மத வேறுபாடு இன்றி அனைவருக்கும் பணம் தேவை.    சமூகப்பார்வையில் மக்கள் என்று பார்ககும் போது தென்னிலங்கை மக்களுகளைப் பொறுத்தவரை நீண்ட காலமாகவே  தமது வாழ்க்கையை அனுபவித்து வாழ அவர்களுக்குப் பணம் தேவை. வடபகுதி மக்களை பொறுத்தவரை  சேர்தது வைத்து விட்டு சாக அவர்களுக்குப் பணம் தேவை.  

ஆகவே இரு பகுதி மக்களின் பொருட்கள், சேவைகள் கொள்வனவு,  சுற்றுலா போன்ற விடயங்களில்  பாரிய வேறுபாட்டை அவதானிக்க முடியும். அதனால் உழைக்கும் பணத்தை வைத்தோ நுகரும் பொருட்களை வைத்தோ அவர்கள்  ஏழையோ பணம் படைத்தவர்களோ என்பதை தீர்மானிப்பது கடினம். அது  அவரவர் வாழ்ககை விருப்பங்களை பொறுத்தது.  ஆனால் இன்றைய நிலையில் வடபகுதி மக்களிலும் மாற்றங்கள் ஏற்பட்டு வருவது கண்கூடு. 

Edited by island

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, island said:

@goshan_che   இந்த விவாதத்தில் எதை நிரூபிக்க சிலர் முற்படுகின்றர்கள் என்றோ எதனால் விவாதம் நீண்டு செல்கிறது  என்பதோ  புரியவில்லை.  

ஆனால், ஏழையோ பணம்படைத்தவர்களோ இனம் மத வேறுபாடு இன்றி அனைவருக்கும் பணம் தேவை.    சமூகப்பார்வையில் மக்கள் என்று பார்ககும் போது தென்னிலங்கை மக்களுகளைப் பொறுத்தவரை நீண்ட காலமாகவே  தமது வாழ்க்கையை அனுபவித்து வாழ அவர்களுக்குப் பணம் தேவை. வடபகுதி மக்களை பொறுத்தவரை  சேர்தது வைத்து விட்டு சாக அவர்களுக்குப் பணம் தேவை.  

ஆகவே இரு பகுதி மக்களின் பொருட்கள், சேவைகள் கொள்வனவு,  சுற்றுலா போன்ற விடயங்களில்  பாரிய வேறுபாட்டை அவதானிக்க முடியும். அதனால் உழைக்கும் பணத்தை வைத்தோ நுகரும் பொருட்களை வைத்தோ அவர்கள்  ஏழையோ பணம் படைத்தவர்களோ என்பதை தீர்மானிப்பது கடினம். அது  அவரவர் வாழ்ககை விருப்பங்களை பொறுத்தது.  ஆனால் இன்றைய நிலையில் வடபகுதி மக்களிலும் மாற்றங்கள் ஏற்பட்டு வருவது கண்கூடு. 

ஒரு படைப்பில் சமூக வர்ணணையும் (social commentary) சேரும் போது அது இன்னொரு நிலையை அடைவதாக சொல்வார்கள். 

அந்தவகையில் நீங்கள் மேலே கொடுத்த வர்ணனை இந்த திரிக்கு சுவை கூட்டுகிறது, ஆனால் எதை எழுத தூண்டியது எதிர் மறை சமூக வர்ணனை அல்லவா?

(திரி பத்து பக்கம் நீளனும்மா எதுவும் ஓக்கேதான்🤣). 

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, goshan_che said:

ஒரு படைப்பில் சமூக வர்ணணையும் (social commentary) சேரும் போது அது இன்னொரு நிலையை அடைவதாக சொல்வார்கள். 

அந்தவகையில் நீங்கள் மேலே கொடுத்த வர்ணனை இந்த திரிக்கு சுவை கூட்டுகிறது, ஆனால் எதை எழுத தூண்டியது எதிர் மறை சமூக வர்ணனை அல்லவா?

(திரி பத்து பக்கம் நீளனும்மா எதுவும் ஓக்கேதான்🤣). 

ஏற்கனவே பத்துப் பக்கம் வந்து விட்டது. இனி வருவதெல்லாம் போனஸ். 👍

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்பாணத்தின் சுற்றுலா செய்ய வேண்டிய இடங்கள். 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, island said:

ஏற்கனவே பத்துப் பக்கம் வந்து விட்டது. இனி வருவதெல்லாம் போனஸ். 👍

11 வது தொடங்கும் வரை, 10 பக்கம் வந்து விட்டதென்று மார் தட்ட முடியாது!

@satan என்ன பம்மல்? ஏன் மௌனம்😎?  

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, Justin said:

11 வது தொடங்கும் வரை, 10 பக்கம் வந்து விட்டதென்று மார் தட்ட முடியாது!

@satan என்ன பம்மல்? ஏன் மௌனம்😎?  

இரண்டு மூன்று வீடியோவை இணைத்தாவது 11 ஆக்கிவிட்டா போச்சு. 😂

யாழ்பாணக்  கூழ். 

  • கருத்துக்கள உறவுகள்
On 8/4/2024 at 00:09, goshan_che said:

1. கடைகள் ஒவ்வொரு நாளும் திறக்கும். ஆனால் வேலை, வியாபாரத்தில் பிசி (பணம் அதானால் வார இறுதியில்தான் சொப்பிங் போகிறார்கள்.

 3.  காசும், நேரமும் இருந்து கூட்டம் அலைமோதும் அளவுக்கு - நாட்டு நிலமை

.4. சாப்பிடவே இல்லாதவன் எப்படி ஐயா நல்ல உடை உடுத்துவான்.

 

On 7/4/2024 at 20:15, goshan_che said:

அங்கே கூடி நிற்பவர்களை பாருங்கள் - வருடத்தில் ஒரு நாள் உடுப்பு எடுப்பவகள் போலவா அவர்கள் இப்போ போட்டிருக்கும் உடுப்பு உள்ளது?

வறுமையில் வாடுவோர் இப்படியான பெயர்போன கடைகளிலா வாங்குவாகள்?

அதனால்தான் வார இறுதிக்கு காத்திருந்து, பெரிய கடைகளில் துணி எடுப்போரை வறுமையில் உழழ்வதாக எழுத முடிகிறது உங்களால்.

19 hours ago, satan said:

மொத்தத்தில்,, ஏழைகள் புது உடுப்பு உடுத்தக்கூடாது, புது வருடம் கொண்டாடக்கூடாது, கந்தலும் கவலையும் கலைந்த தலையுமாய் திரிய வேண்டுமென எதிர்பார்க்கிறீர்கள்? வாழ்க உங்கள் நினைப்பு!

காசும் நேரமும் இருப்பவர்கள் வார, வருட கடைசிவரை கால்கடுக்க ஏன் நிற்க வேண்டும்? தலை நகரில் வேலை செய்வோர் தங்களுக்கு விடுமுறை கிடைத்ததும் தம் உறவுகளுக்கு வேண்டிய உடை, உணவுப்பண்டங்களை வாங்கிக்கொண்டு எதிர்பார்த்திருக்கும் உறவுகளை சென்றடைய நிரையில் கால் கடுக்க  நின்று, வாகனத்தின் மிதிப்பலகையில் பயணம் செய்து, தங்கள் விடுமுறையின் பாதி காலத்தை வரிசைகளில் தொலைப்பது உங்களுக்கு எங்கே புரியப்போகிறது? 

வாரம் முழுக்க வேலை செய்தாற்தான் வார இறுதியில் தங்களுக்கு தேவையானவற்றை கொள்வனவு செய்ய  முடியும்.

 

11 hours ago, goshan_che said:

இல்லை ஏழைகள் இந்த கடைகளில், இந்த படம் காட்டும் தோற்றத்தில் இருக்க மாட்டார்கள். 

அதே போல் அவர்கள் நாளுக்கு நல்ல உடுப்பு எடுத்தாலும், இப்படி பட்ட கடையில் இன்றி, நடைபாதை கடையிலோ அல்லது துணி வாங்கி தைத்தோதான் போடுவார்கள்.

ஏழைகள்; இப்படிதான் இருக்க வேண்டும், இப்படித்தான் உடுத்தவேண்டும், இந்தக்கடைகளிற்தான் உடை வாங்கவேண்டும், ஏழைகள் ஏழைகளாகவே இருக்க வேண்டும் எனும் உங்கள் எதிர்பார்ப்பு விளங்குகிறது. ஏழைகள்; நல்ல நாளும் அதுவுமா வருடத்தில் ஒரு நாள் நல்ல உடை, பெரிய கடைகளில் விலை கொடுத்து வாங்கி உடுத்தினா போதுமே, உங்கள் மனது பொறுக்காது, அதை படம் போட்டு ஏழைகள் எப்படி இந்தப்பெரிய கடைகளில் உடை எடுக்கலாம்? என்று புலம்ப ஆரம்பித்து விடுவீர்களே! நீங்கள் எப்போதும் செய்பவையை அவர்கள் வருடத்தில் ஒருநாள் அனுபவிக்கட்டுமேன்?

11 hours ago, goshan_che said:

இரெண்டும் இருந்தாலும் ஆட்கள் கூட என்றால் வரிசையில்தான் நிற்க வேண்டும்.

அங்கே, வார இறுதியில்  வரிசையில் காத்திருந்து பணம் செலுத்துவோரை பணக்காரர் என்கிறீர்கள். அதை நான் கேட்டா, இரண்டும் இருந்தாலும் வார இறுதியில் பொருட்களை கொள்வனவு செய்யும் கடையில் ஆட்கள் கூடினா வரிசையிலேதான்  நிற்கவேணும் என்று குதர்க்கம் பண்ணுகிறீர்கள். உங்கள் வாதம் எனக்கு புரியவில்லை......

11 hours ago, goshan_che said:

நீங்கள் கனடா வந்த பின் ஏழ்மை, ஏழைகளை நூதனகாட்சி சாலையில்தான் பார்த்தீர்களோ?

 

11 hours ago, goshan_che said:

கனடாவில் நீங்கள் எப்படி?

எப்படி இந்த புலனாய்வு வேலையெல்லாம் செய்ய உங்களால் மட்டும் முடிகிறது? அந்த ரகசியத்தை எங்களுக்கும் சொல்லித்தரலாமே?  அப்படி நானிருந்தால்; ஏழைகளைப்பற்றிய என் எண்ணங்களும், எதிர்பார்ப்புகளும் உங்களுடையதை போல் இருந்திருக்குமோ என்னமோ?

சரி, பத்து பக்கங்கள் வந்து விட்டன. வாசக உறவுகளுக்கு எரிச்சலையும், வசிக்கு மன அழுத்தத்தையும் கொடுக்காமல் நீண்ட உரையாடலுடன் முடிவுக்கு வரலாமென நினைக்கிறன். உரையாடலுக்கு நன்றி.   

எங்கே சிறியர் சுவியரை காணோம்? பக்கங்கள் நிறைவு செய்ய கங்கணம் கட்டி என்னை அழைத்து விட்டு, அவர்கள் காணாமற் போய் விட்டார்கள்.....

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, satan said:

ழைகள்; இப்படிதான் இருக்க வேண்டும், இப்படித்தான் உடுத்தவேண்டும், இந்தக்கடைகளிற்தான் உடை வாங்கவேண்டும், ஏழைகள் ஏழைகளாகவே இருக்க வேண்டும் எனும் உங்கள் எதிர்பார்ப்பு விளங்குகிறது. ஏழைகள்; நல்ல நாளும் அதுவுமா வருடத்தில் ஒரு நாள் நல்ல உடை, பெரிய கடைகளில் விலை கொடுத்து வாங்கி உடுத்தினா போதுமே, உங்கள் மனது பொறுக்காது, அதை படம் போட்டு ஏழைகள் எப்படி இந்தப்பெரிய கடைகளில் உடை எடுக்கலாம்? என்று புலம்ப ஆரம்பித்து விடுவீர்களே! நீங்கள் எப்போதும் செய்பவையை அவர்கள் வருடத்தில் ஒருநாள் அனுபவிக்கட்டுமேன்?

நீங்கள் முண்ணணி கடைகளில் துணி மணி பர்ச்சேஸ் செய்யும் அரிய வகை ஏழைகளை கண்டு பிடித்து விட்டு என்னை குறை சொல்ல கூடாது.

4 minutes ago, satan said:

அங்கே, வார இறுதியில்  வரிசையில் காத்திருந்து பணம் செலுத்துவோரை பணக்காரர் என்கிறீர்கள். அதை நான் கேட்டா, இரண்டும் இருந்தாலும் வார இறுதியில் பொருட்களை கொள்வனவு செய்யும் கடையில் ஆட்கள் கூடினா வரிசையிலேதான்  நிற்கவேணும் என்று குதர்க்கம் பண்ணுகிறீர்கள். உங்கள் வாதம் எனக்கு புரியவில்லை......

இவர்கள் பணக்காரரும் இல்லை, ஏழைகளும் இல்லை. வெளிமாகாண நடுத்தர வர்க்கம். Provincial middle classes. 

6 minutes ago, satan said:

சரி, பத்து பக்கங்கள் வந்து விட்டன. வாசக உறவுகளுக்கு எரிச்சலையும், வசிக்கு மன அழுத்தத்தையும் கொடுக்காமல் நீண்ட உரையாடலுடன் முடிவுக்கு வரலாமென நினைக்கிறன். உரையாடலுக்கு நன்றி.

பத்தில் மூன்று உங்களது🤣. அதுக்கும் சேர்த்தே 🙏.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

காங்கேசந்துறை-கொழும்பு தொடருந்து. இப்போ தற்காலிகமாக அனுராத புரம் வரை ஓடுகிறது. குளிரூட்டிய பெட்டி. 

large.IMG_6004.jpeg.3161ee5ee32304b6870a889c63b37850.jpeg

 

யாழ்ப்பாணம் தனியார் பேருந்து நிலையம்

large.IMG_5896.jpeg.713972b3bec5563d238f757e0ce2c61a.jpeglarge.IMG_5895.jpeg.7613b4db4613d7ff77ae46123110b9c2.jpeg

துட்ட காமினி,  எல்லாளனின் நாற்பதாண்டு கால ஆட்சியை போரில் வென்ற பின் அமைத்த ருவான் வலிசாயா.

large.IMG_6033.jpeg.b2fc24ae7fc6d0eb1ef4bb496b2b24b9.jpeg

சங்கமித்தை கொண்டு வந்த வெள்ளரசு மரம்

large.IMG_6048.jpeg.66e5c24df04e900f09d26dcbf0a7b6c8.jpeg

பல ஆயிரம் ஆண்டுகளாக எல்லாளன் சமாதி என நம்பப்பட்டு, இப்போ விகாரை என புதுக்கரடி விடப்படும் தலம்.

நான் ஒரு வீரவணக்கம் போட்டு வந்தேன்.

large.IMG_6052.jpeg.e4d74cacd54b3c80142d082b4f711f43.jpeg

இசுறுமுனி காதலர்கள். 

இதை பார்க்க போகும் வெளி நாட்டுக்காரர் 10 டொலர் அழுகிறார்கள்.

பாட்டா செருப்பும், பரட்டை தலையுமாய் அலையும் என்னை எதுவும் கேட்காமல் இலவசமாக உள்ளே விட்டார்கள் 🤣.

large.IMG_6067.jpeg.8aa2fc20ec69f791903093bd304d6846.jpeg

Edited by goshan_che

  • கருத்துக்கள உறவுகள்

large.IMG_6004.jpeg.3161ee5ee32304b6870a

இந்தப் புகையிரதத்தில் ஏறுவதற்கு எத்தனையோ முறை முயன்றும் இடம் கிடைக்கவில்லை.

விடுமுறையில் போய்வரும் படையினர் முன்பதிவுகளை மேற்கொள்வதால் பொதுமக்களுக்கு இடம் கிடைப்பது கஸ்டம் என்றார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, goshan_che said:

இதை பார்க்க போகும் வெளி நாட்டுக்காரர் 10 டொலர் அழுகிறார்கள்.

பாட்டா செருப்பும், பரட்டை தலையுமாய் அலையும் என்னை எதுவும் கேட்காமல் இலவசமாக உள்ளே விட்டார்கள்

இவ்வாறு  வெளிநாட்டவர்களுக்கும் உள்நாட்டவர்களுக்கும் கட்டண முறையில் இருக்கும் மிகவும் பாரிய வேறுபாடு சரியானதா?    

  • கருத்துக்கள உறவுகள்

சிறப்பான அலட்டல்கள் அற்ற Executive Summary நன்றி அண்ணை.  நானும் 2019 மார்கழி/2020 தை போய் வந்த பின்னர் போகவில்லை. அடிக்கடி நினைப்பதுண்டுஇ எப்பிடி இந்த விலைகளிலேயும் தாக்குப் பிடிக்கிறார்கள் எண்டு. 

மத்திய வர்க்கப் பொருளாதாரம் பரந்து செல்லுகிறது. இலங்கை பணக்கார மேட்டுக்குடிகளின் life style வெளிநாட்டு பணக்காரர்களின் வாழ்க்கைத் தரத்துடன் ஒப்பிட முடியாததுஇ அது ஒரு தனி உலகம். அவர்கள் பலருக்கு அவுஸ் போன்ற நாடுகளின் PR இருக்கு. பிள்ளைகள் இந்த நாடுகளில் படிப்பார்கள். 2019 கறுவாத்தோட்டத்திலிருந்த இப்படியான ஒரு குடும்பத்தின் விருந்திற்குப் போயிருந்தேன். 

பலாலியில் ஏறி சென்னை போய் ஷொப்பிங் செய்து படம் பாத்திட்டு வந்த நண்பர்களும் நெல்லியடியில் தான் இருக்கிறாங்கள். என்னத்த சொல்ல. 

எனது தாய் மாமா போன கிழமைதான் ஊரிலிருந்து ஜெர்மனி திரும்பியிருக்கிறார். கிட்டத்தட்ட முப்பத்தஞ்சு வருசங்களுக்கு பிறகு போய்  மூண்டுக்கிழமை நின்றவர்.ஆள் தனிக்கட்டைஇ இப்பத்தான் ஓய்வூதியம் எடுத்திருக்கிறார். இறால்இ கணவாய்இ நண்டு எண்டு மனிசன் பிரிச்சு மேஞ்சிருக்கிறார். ஊரோட வந்து இருக்கப்போறன் எண்டு சொல்லிப்போட்டுத்தானாம் ஆள் வெளிக்கிட்டது.

Edited by Thumpalayan
எழுத்துப் பிழை

  • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, Thumpalayan said:

பலாலியில் ஏறி சென்னை போய் ஷொப்பிங் செய்து படம் பாத்திட்டு வந்த நண்பர்களும் நெல்லியடியில் தான் இருக்கிறாங்கள். என்னத்த சொல்ல. 

தும்பளையானைக் கண்டது சந்தோஷம்😀

முந்தி வல்வெட்டித்துறையில் இருந்து நேரே வடக்காய் படகைப் பிடித்தால் வேதாரானியம் என்று போய் படம் பார்த்து வருவார்கள் என்று கேள்விப்பட்டிருக்கின்றேன். இப்போது பிளேனில் ஏறிப்போகின்றார்கள். எல்லாம் முன்னேற்றத்தைத்தானே காட்டுது. இதுக்கேன் பெருமூச்சு?

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, கிருபன் said:

தும்பளையானைக் கண்டது சந்தோஷம்😀

முந்தி வல்வெட்டித்துறையில் இருந்து நேரே வடக்காய் படகைப் பிடித்தால் வேதாரானியம் என்று போய் படம் பார்த்து வருவார்கள் என்று கேள்விப்பட்டிருக்கின்றேன். இப்போது பிளேனில் ஏறிப்போகின்றார்கள். எல்லாம் முன்னேற்றத்தைத்தானே காட்டுது. இதுக்கேன் பெருமூச்சு?

 

வணக்கம் அண்ணை, பெரு மூச்செண்டு இல்லை ஆனா பெடியலின் மைண்ட் செட் விளங்குது இல்லை.

நீங்க சொன்ன மாதிரி வள்ளத்தில போய் படம்பாத்திட்டு சாமான் ஏத்திக்கொண்டு வந்த ஆக்கள் இருக்கினம். இதை விட ஒருபடி மேலே போய் இக்கரையிலும் அக்கரையிலும் மனிசி பிள்ளைகள் என்று குடும்பம் நடத்தியவர்களும் இருந்தார்கள்  

Edited by Thumpalayan

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, goshan_che said:

சங்கமித்தை கொண்டு வந்த வெள்ளரசு மரம்

large.IMG_6048.jpeg.66e5c24df04e900f09d26dcbf0a7b6c8.jpeg

ஒரு அரச மரத்தின் ஆயுட்காலம் எவ்வளவு?
2000 வருசமாய் ஒரு அரசமரம் படாமல் நிக்குது என்றால்... 
எட்டாவது  உலக அதிசயத்தில் சேர்க்கப் பட வேண்டிய விடயம். 😋
இது சம்பந்தமாக ஐ.நா.வில் யாரும் பேச மாட்டாங்களா. animiertes-gefuehl-smilies-bild-0415.gif

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, goshan_che said:

பாட்டா செருப்பும், பரட்டை தலையுமாய் அலையும் என்னை எதுவும் கேட்காமல் இலவசமாக உள்ளே விட்டார்கள் 🤣.

இந்த ரெக்னிக்கை நானும் பாவிக்கவேணும். ஒருநாள் குளிக்காமல், தலையிழுக்காமல், ஷேவ் எடுக்காமல் விட்டால்கூட ஆடுஜீவிதம் பிரித்விராஜின் மூன்றாவது கோலத்தில் வந்துவிடலாம்😆

spacer.png

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, satan said:

 

எங்கே சிறியர் சுவியரை காணோம்? பக்கங்கள் நிறைவு செய்ய கங்கணம் கட்டி என்னை அழைத்து விட்டு, அவர்கள் காணாமற் போய் விட்டார்கள்.....

நாங்களும் இங்குதான் நிக்கிறம் சாத்தன்....... இந்தத் திரி "கோம்பைக்குள் கை விட்ட குரங்கு"மாதிரி கையில் இருக்கும் வழுக்களையும் விட முடியுதில்லை, கோம்பையும் கையை விடுகுதில்லை.......!  😂

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, island said:

இவ்வாறு  வெளிநாட்டவர்களுக்கும் உள்நாட்டவர்களுக்கும் கட்டண முறையில் இருக்கும் மிகவும் பாரிய வேறுபாடு சரியானதா?    

https://sigiriyafortress.com/sigiriya-opening-hours-sigiriya-ticket-prices/

இதுவே சிகிரியா போனால் இலங்கையர்களுக்கு 120 ரூபாவும்

வெளிநாட்டினருக்கு 36 டாலர்களும் அறவிடப்படுகின்றன.

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, Thumpalayan said:

 

வணக்கம் தும்பளையான் நீண்ட காலத்திற்குப் பின் கண்டது மிக்க மகிழ்ச்சி.

தொடர்ந்தும் இணைந்திருங்கள்.

துடுப்பாட்டப் போட்டியில் பங்கு கொண்டு போட்டியை சிறப்பிக்கலாம்.

 

7 hours ago, Thumpalayan said:

சிறப்பான அலட்டல்கள் அற்ற Executive Summary நன்றி அண்ணை.  நானும் 2019 மார்கழி/2020 தை போய் வந்த பின்னர் போகவில்லை. அடிக்கடி நினைப்பதுண்டுஇ எப்பிடி இந்த விலைகளிலேயும் தாக்குப் பிடிக்கிறார்கள் எண்டு. 

மத்திய வர்க்கப் பொருளாதாரம் பரந்து செல்லுகிறது. இலங்கை பணக்கார மேட்டுக்குடிகளின் life style வெளிநாட்டு பணக்காரர்களின் வாழ்க்கைத் தரத்துடன் ஒப்பிட முடியாததுஇ அது ஒரு தனி உலகம். அவர்கள் பலருக்கு அவுஸ் போன்ற நாடுகளின் PR இருக்கு. பிள்ளைகள் இந்த நாடுகளில் படிப்பார்கள். 2019 கறுவாத்தோட்டத்திலிருந்த இப்படியான ஒரு குடும்பத்தின் விருந்திற்குப் போயிருந்தேன். 

பலாலியில் ஏறி சென்னை போய் ஷொப்பிங் செய்து படம் பாத்திட்டு வந்த நண்பர்களும் நெல்லியடியில் தான் இருக்கிறாங்கள். என்னத்த சொல்ல. 

எனது தாய் மாமா போன கிழமைதான் ஊரிலிருந்து ஜெர்மனி திரும்பியிருக்கிறார். கிட்டத்தட்ட முப்பத்தஞ்சு வருசங்களுக்கு பிறகு போய்  மூண்டுக்கிழமை நின்றவர்.ஆள் தனிக்கட்டைஇ இப்பத்தான் ஓய்வூதியம் எடுத்திருக்கிறார். இறால்இ கணவாய்இ நண்டு எண்டு மனிசன் பிரிச்சு மேஞ்சிருக்கிறார். ஊரோட வந்து இருக்கப்போறன் எண்டு சொல்லிப்போட்டுத்தானாம் ஆள் வெளிக்கிட்டது.

தும்ஸ், நீண்ட காலத்துக்கு பின் மீண்டும் கண்டது சந்தோசம்!

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, Thumpalayan said:

சிறப்பான அலட்டல்கள் அற்ற Executive Summary நன்றி அண்ணை.  நானும் 2019 மார்கழி/2020 தை போய் வந்த பின்னர் போகவில்லை. அடிக்கடி நினைப்பதுண்டுஇ எப்பிடி இந்த விலைகளிலேயும் தாக்குப் பிடிக்கிறார்கள் எண்டு. 

மத்திய வர்க்கப் பொருளாதாரம் பரந்து செல்லுகிறது. இலங்கை பணக்கார மேட்டுக்குடிகளின் life style வெளிநாட்டு பணக்காரர்களின் வாழ்க்கைத் தரத்துடன் ஒப்பிட முடியாததுஇ அது ஒரு தனி உலகம். அவர்கள் பலருக்கு அவுஸ் போன்ற நாடுகளின் PR இருக்கு. பிள்ளைகள் இந்த நாடுகளில் படிப்பார்கள். 2019 கறுவாத்தோட்டத்திலிருந்த இப்படியான ஒரு குடும்பத்தின் விருந்திற்குப் போயிருந்தேன். 

பலாலியில் ஏறி சென்னை போய் ஷொப்பிங் செய்து படம் பாத்திட்டு வந்த நண்பர்களும் நெல்லியடியில் தான் இருக்கிறாங்கள். என்னத்த சொல்ல. 

எனது தாய் மாமா போன கிழமைதான் ஊரிலிருந்து ஜெர்மனி திரும்பியிருக்கிறார். கிட்டத்தட்ட முப்பத்தஞ்சு வருசங்களுக்கு பிறகு போய்  மூண்டுக்கிழமை நின்றவர்.ஆள் தனிக்கட்டைஇ இப்பத்தான் ஓய்வூதியம் எடுத்திருக்கிறார். இறால்இ கணவாய்இ நண்டு எண்டு மனிசன் பிரிச்சு மேஞ்சிருக்கிறார். ஊரோட வந்து இருக்கப்போறன் எண்டு சொல்லிப்போட்டுத்தானாம் ஆள் வெளிக்கிட்டது.

தும்பளையானைக் கண்டது சந்தோஷம்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, island said:

யாழ்பாணத்தின் சுற்றுலா செய்ய வேண்டிய இடங்கள். 

பார்த்து விட்டு, பார்க்காத இடம் ஏதும் இருந்தா சொல்கிறேன்🤣.

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...



இங்கு எழுதப்படும் விடயம் பிரதிசெய்யப்பட்டு (copy)மேலுள்ள கட்டத்தில் ஒட்டப்பட வேண்டும். Copy செய்த பின்னர் மேலுள்ள கட்டத்தில் ctrl + v இனை அழுத்தி ஒட்டிக் (paste) கொள்ள முடியும்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.