Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்த் தேசியப் பிரச்சினைக்கு ஆக்கபூர்வமான தீர்வு காண்பதற்கான முன் ஆயத்தமாக சில நடவடிக்கைகளை உடனடியாக எடுப்பதற்கு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பேச்சாளரும் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் நடத்திய சந்திப்பில் இணக்கம் காணப்பட்டுள்ளது.

ஜனாதிபதி செயலகத்தில் இந்தச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

இருவரும் பேசி இணக்கம் கண்ட ஏற்பாடுகளின்படி,

* மாகாண சபைத் தேர்தல் சட்டமூலம் உடனடியாக நாடாளுமன்றத்துக்குக் கொண்டு வந்து நிறைவேற்றப்படும். இது தொடர்பில் சுமந்திரன் தனிநபர் பிரேரணையாகச் சமர்ப்பித்துத் தயாராக இருக்கும் சட்டமூலம் வரும் ஓகஸ்ட் 22, 23ஆம் திகதிகளில் நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்பட்டு நிறைவேற்றப்படும்.

* சுமந்திரன் சமர்ப்பித்துள்ள தனிநபர் சட்டமூலம் ஏற்கனவே வர்த்தமானியில் பிரசரிக்கப்பட்டு, உயர் நீதிமன்றத்தால் பரிசீலிக்கப்பட்டு, நிறைவேற்றப்படுவதற்கு தயாரான நிலையில் உள்ளது. அந்தச் சட்டமூலம் தொடர்பில் உயர்நீதிமன்றம் சுட்டிக்காட்டி உள்ள சில திருத்தங்களுடன் அதனை உடனடியாக நடைமுறைக்குக் கொண்டு வந்து நிறைவேற்றினால் ஜனாதிபதித் தேர்தல் முடிந்த கையோடு மாகாண சபைத் தேர்தலை நடத்த முடியும் எனச் சுட்டிக்காட்டப்பட்டது.

மாகாண சபைகளில் இளைஞர், யுவதிகளுக்கு போதிய பிரதிநிதித்துவம் வழங்குவதை உறுதிப்படுத்தல், எம்.பிக்களும் அப்பதவியில் இருந்து கொண்டே மாகாண சபைத் தேர்தலில் போட்டியிட வகை செய்தல் ஆகிய திருத்தங்கள் இந்தச் சட்டமூலத்துக்குச் செய்யப்பட வேண்டும் என்று ஜனாதிபதி வலியுறுத்தினார். சட்டமூலத்தின் குழு நிலை விவாதத்தின்போது சட்டமா அதிபரின் இணக்கத்துடன் அந்த மாற்றங்களைக் கொண்டுவர முயற்சிக்கலாம் என சுமந்திரன் எம்.பி. கூறியமையை ஜனாதிபதி ரணில் ஏற்றுக்கொண்டார்.

தாம் சமர்ப்பித்துள்ள மாகாண சபைகள் தேர்தல் சட்டமூலத்தை வரும் 22, 23 ஆம் திகதிகளில் நாடாளுமன்றத்தில் எடுத்து விவாதிப்பதற்கு அதனை நாடாளுமன்ற நிகழ்ச்சிப் பத்திரத்தில் சேர்த்துக் கொள்ளுமாறு தாம் நாடாளுமன்ற செயலாளர் நாயகத்தை கடிதம் மூலம் கோரியுள்ளார் என்றும், அது இன்று நாடாளுமன்ற விவகாரங்களை ஆராயும் கட்சித் தலைவர்களின் கூட்டத்தில் எடுக்கப்பட இருப்பதாகவும், அதற்கு அரசுத் தரப்பில் ஆதரவு கிட்டினால் விடயத்தை அந்தத் திகதியில் எடுத்து சட்டமூலத்தை நிறைவேற்ற முடியும் என்றும் சுமந்திரன் சுட்டிக்காட்டினார்.

அதற்கான வழிகாட்டுதல்களை சபை முதல்வர் அமைச்சர் சுசில் பிரேமஜயந்தவுக்கும், அரசு தரப்பின் பிரதம கொறடா பிரசன்ன ரணதுங்கவுக்கும் தாம் வழங்குவார் என ஜனாதிபதி உறுதியளித்தார்.

அதன் பிரகாரம் மாகாண சபைத் தேர்தல்களை நடத்துவதற்கு வழி செய்யும் சுமந்திரனின் தனிநபர் சட்ட மூலம் எதிர்வரும் 22, 23ஆம் திகதிகளில் நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்படுமா என்பது குறித்து சபாநாயகர் தலைமையில் இன்று நடைபெறும் கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானிக்கப்படும்.

* 13ஆம் திருத்தத்தில் இருக்கும் காணி அதிகாரப் பகிர்வை மாகாண சபைகள் உடனடியாக பிரயோகிப்பதற்குத் தேசிய காணி ஆணைக்குழு நிறுவப்பட வேண்டும். தேசிய காணி ஆணைக்குழுவுக்கான கட்டமைப்பு தயாராக இருப்பதாகவும், அது உடனடியாக வர்த்தமானியில் அறிவிக்கப்பட்டு, அங்கீகரிக்கப்படுவதற்கு காலதாமதம் இன்றி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இந்தச் சந்திப்பின்போது உறுதி கூறினார். தேசிய காணி ஆணைக்குழு நிறுவப்பட்டு காணிகள் தொடர்பான தேசிய கொள்கைகள் வகுக்கப்பட்டால், காணிகள் நேரடியாக மாகாண நிர்வாகத்தின் கீழ் வந்துவிடும் என்பது குறிப்பிடத்தக்கது.

* உண்மை நல்லிணக்க ஆணைக்குழுவும் உடனடியாக நிறுவப்படும் என்று ஜனாதிபதி தெரிவித்தார்.

* அரசமைப்பின் 13 ஆவது திருத்தம் மூலம் மாகாணங்களுக்குப் பகிரப்பட்ட பல அதிகாரங்கள் காலத்துக்குக் காலம் மீளப் பெறப்பட்டுள்ளன. அவை அனைத்தையும் ஒட்டுமொத்தமாக மாகாணங்களுக்கு மீளப் பகிரும் ஏற்பாடுகள் எந்தத் தாமதமுமின்றி உடனடியாகவே மேற்கொள்ளப்படும் என்று ஜனாதிபதி உறுதியளித்தார்.

* 13 ஆவது அரசமைப்புத் திருத்தத்தில் பொலிஸ் அதிகாரப் பகிர்வு உள்ளது. ஜனாதிபதித் தேர்தலின் பின்னர் எல்லாத் தரப்புகளுடனும் பேசி, இணக்கம் கண்டு, அதைச் சுமுகமாக முன்னெடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஜனாதிபதி கூறினார்.

https://thinakkural.lk/article/307273

  • Replies 140
  • Views 8.4k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • பிரபா
    பிரபா

    "தேர்தலுக்கு பின்னர்" ?? இன்னுமா தமிழ் மக்கள் இதை நம்புகிறார்கள்.

  • vanangaamudi
    vanangaamudi

    இது M.A. சுமந்திரனின் தனிப்பட்ட சந்திப்பு.  நீங்களே சந்தித்து நீங்களே இணக்கம் கண்டு ஏற்பாடுகளும் செய்தயிற்றா. சொல்லவேஇல்ல. சிரிலங்கா நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்பட்டு  நிறைவேற்றுவார்களா,

  • தமிழ் மக்களுக்கு இந்த அறிக்கை பழக்கப்பட்ட ஒன்று....நம்ப மாட்டார்கள் ,ஆனால் கருத்துஎழுதும் நாம் அந்த அறிக்கையை நம்பி சாதிப்பிர்ச்சனை வரை கருத்து சொல்லியிருக்கிறோமல்ல‌...

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல விடயம். 

  • கருத்துக்கள உறவுகள்

முதலில் காணி, பின்னர் காவல்துறை என இலங்கையின் சகல மாகாணங்களுக்கும் அதிகாரம் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும். 

இலங்கை மீண்டெழுவதற்கு இதுதான் உள்ள ஒரே வழ. 

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Kapithan said:

முதலில் காணி, பின்னர் காவல்துறை என இலங்கையின் சகல மாகாணங்களுக்கும் அதிகாரம் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும். 

இலங்கை மீண்டெழுவதற்கு இதுதான் உள்ள ஒரே வழ. 

உண்மை.. இதுதான் இப்போதைக்கு இருக்கு சாத்தியப்படக்கூடிய தீர்வு.. இது மட்டும் நிகழ்ந்தால் தமிழைனத்துக்கு கிடைக்ககூடிய மிகப்பெரிய வெற்றியாக இருக்கும்.. தமிழ் நாடு அளவுக்கு இல்லை என்றாலும் ஓரளவுக்கு ஆவது எமது, நாம் என்ற உரிமையுடன் வாழலாம்.. ஆனால் தேர்தல் முடிய காற்றில் பறக்கவிட்டால்..?

ஆனால் ஒருவேளை கிடைத்துவிட்டால் அதன் பிறகு பாருங்கள் சாதிய ஒடுக்குமுறையை தமிழர் பிரதேசங்களில்.. பொலிஸ் அதிகாரம் வைத்து பெரும்பான்மை சாதிக்காரர் ஒடுக்குமுறைகளை பெருமளவில் கட்டவிழ்த்துவிடுவார்கள்.. இதில் இருந்து மீள தாழ்த்தப்பட்ட மக்கள் தமக்காக பேசக்கூடிய அரசியல் கட்சிகள் நோக்கி நகர்வார்கள்.. தமிழ்நாடு போல திருமாளவன் போல் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு போராடும் அரசியல் தலைவர்கள் உருவாகுவார்கள்.. தமிழர் பிரதேசம் பலநூறு வருடம் பின்னோக்கி செல்லும்.. இதைவிட சிங்கள மக்களுடன் வாழலாம் என்னும் நிலைக்கு தாழ்த்தப்பட்ட மக்களை பெரும்பானமை உறுப்பினர்களை பெறும் தமிழர் கட்சிகள் எம்பிக்கள் தள்ளுவார்கள்..

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பாலபத்ர ஓணாண்டி said:

 தாழ்த்தப்பட்ட மக்கள் தமக்காக பேசக்கூடிய அரசியல் கட்சிகள் நோக்கி நகர்வார்கள்.. தமிழ்நாடு போல திருமாளவன் போல் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு போராடும் அரசியல் தலைவர்கள் உருவாகுவார்கள்.. தமிழர் பிரதேசம் பலநூறு வருடம் பின்னோக்கி செல்லும்.. இதைவிட சிங்கள மக்களுடன் வாழலாம் என்னும் நிலைக்கு தாழ்த்தப்பட்ட மக்களை பெரும்பானமை உறுப்பினர்களை பெறும் தமிழர் கட்சிகள் எம்பிக்கள் தள்ளுவார்கள்..

அது ஏற்கனவே ஆரம்பமாகிவிட்டது. 

  • கருத்துக்கள உறவுகள்

"தேர்தலுக்கு பின்னர்" ??
இன்னுமா தமிழ் மக்கள் இதை நம்புகிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

சில வாரங்களின் முன் சஜித் யாழ் வந்து, பதின்மூன்றை, காணி போலீஸ் அதிகாரமுள்ள, சட்டமாக்குவேன் என்று சொன்னார். கொழும்பில் அவர் வீட்டிற்கு கல் எறியாதது ஒன்று தான் குறை. ஜேவிபியினர் அவர் வீட்டு வாசலிலேயே நின்று தொண்டை நரம்புகள் தெறிக்க, வழமை போலவே, சஜித்துக்கு எதிராகப் போராடினார்கள். பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா இது போரில் இறந்த இராணுவத்திற்கு சஜித் செய்யும் துரோகம் என்றார். 

சஜித் ஆளையே இப்ப காணவில்லை.

ரணில் 'காணி போலீஸ் 2.0' உடன் இப்ப வந்திருக்கின்றார். பீல்ட் மார்ஷல் நாளைக்கு பீல்ட்டில் பிசியாக நிற்பார். ஜேவிபியினருக்கு எல்லா நாளும் ஒரே நாளே, என்னமா பேசுவார்கள்........... நமக்கும் எல்லா நாளும் ஒரே நாளே, ஒரு மரமும் வெட்டாத தச்சன் போல. 

இந்தக் கலவரங்களிற்கு மத்தியில், அமெரிக்காவிலிருந்து சமீபத்தில் ஒரு கண்டன அறிக்கையை நாங்கள் விட்டிருந்தோம். 'சமஷ்டி எல்லாம் ஏத்துக்க முடியாது, தனிநாடு தான் எங்களுக்கான ஒரே தீர்வு ............', சுருக்கமாக அந்த அறிக்கையில் இருந்தது இது தான்............   

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, பிரபா said:

"தேர்தலுக்கு பின்னர்" ??
இன்னுமா தமிழ் மக்கள் இதை நம்புகிறார்கள்.

சிங்களவன் திருந்தி விட்டான் போலை இருக்கு. 😂

தேர்தலுக்கு முன்னர் செய்தால்… குடியா முழுகிப் போகும். 🤣

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, பிரபா said:

"தேர்தலுக்கு பின்னர்" ??
இன்னுமா தமிழ் மக்கள் இதை நம்புகிறார்கள்.

ஆமா....இதற்கு உதவியாக யாழில் பிரச்சாரப் பீரங்கிகள்.....

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, alvayan said:

ஆமா....இதற்கு உதவியாக யாழில் பிரச்சாரப் பீரங்கிகள்.....

வந்தால் மலை?? போனால் உரோமம் என்பதே எனது நிலைப்பாடு. 

மீண்டும் சுமந்திரன் ஊடாக தமிழ் மக்கள் ஏமாற்றப் படுவதால் ஒன்றும் குறைந்து விடப்போவதில்லை. ஆனால் சில வாய்கள் அடைக்கப்படும். இங்கும்.....

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, விசுகு said:

வந்தால் மலை?? போனால் உரோமம் என்பதே எனது நிலைப்பாடு. 

மீண்டும் சுமந்திரன் ஊடாக தமிழ் மக்கள் ஏமாற்றப் படுவதால் ஒன்றும் குறைந்து விடப்போவதில்லை. ஆனால் சில வாய்கள் அடைக்கப்படும். இங்கும்.....

நானும் நடுக்கடலில் தத்தளிக்கிற ஆள்தான்...சும்மா இந்த சுமாவை நம்புகிற ஆளில்லை

Edited by alvayan

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பாலபத்ர ஓணாண்டி said:

ஆனால் ஒருவேளை கிடைத்துவிட்டால் அதன் பிறகு பாருங்கள் சாதிய ஒடுக்குமுறையை தமிழர் பிரதேசங்களில்.. பொலிஸ் அதிகாரம் வைத்து பெரும்பான்மை சாதிக்காரர் ஒடுக்குமுறைகளை பெருமளவில் கட்டவிழ்த்துவிடுவார்கள்.

நான் புலம்பெயர்ந்து எங்கள் ஈழத்தமிழர்கள் வாழும் சில நாடுகளுக்குச் சென்றுள்ளேன். அங்கு  சில பெற்றோர்கள் பிள்ளைகளுக்குப் பேசிச் செய்யும் திருமணத்தின்போது மட்டும் சாதிபார்ப்பது அறிந்துள்ளேன், மற்றும்படி சாதி வேறுபாடு பார்ப்பது அருகி வந்துவிட்டது உண்மை. இவர்கள் தாய்நாடு திரும்பி வாழும் சாத்தியம் ஏற்பட்டால் அங்கு சாதி வேறுபாட்டின் வேர்கள் ஓரளவு அறுபடும் என நம்பலாம்.😌

 

  • கருத்துக்கள உறவுகள்

சும்மா, வாய்புளிக்குது என்று சுமந்திரனும், ரணிலும் கதைக்க, செய்தியாகிவிட்டது. 

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, தமிழ் சிறி said:

சிங்களவன் திருந்தி விட்டான் போலை இருக்கு. 😂

தேர்தலுக்கு முன்னர் செய்தால்… குடியா முழுகிப் போகும். 🤣

செய்ய மாட்டேன் என்பதை அழகிய தமிழில்    தேர்தலுக்குப் பின்னர் என்று சொல்லியிருக்காங்கள்.   அவ்வளவு தான்     

  • கருத்துக்கள உறவுகள்

தேர்தலுக்கு பின்னர் காணி, பொலிஸ் அதிகாரத்துடன் 13 அமுலாகும்; ஜனாதிபதி-சுமந்திரன் சந்திப்பில் இணக்கம்

 

 

அதாவது தேர்தலில் ரணிலுக்கும் வாக்கு போடோணும், சுமந்திரனுக்கும் வாக்கு போடோணும் எண்டு சுருக்கமா சொல்ல வர்றீங்க?

சிறுவயசில் என்னோட வெறிகுட்டி மாமா ஒருத்தர்கூட கொழும்புக்கு அம்மா அப்பா அனுப்பி வைத்தார்கள் கையில நூறூரூபா காசும் தந்து, வவுனியா கடந்ததும் அந்தாள்  என்ர காசை வாங்கி என்னமோ செலவு பண்ணிப்போட்டு கொழும்பு வரேக்க தருவன் எண்டு சொன்னார் சிறுவனா இருந்தபடியா அந்த காசு...காசு எண்டு வடிவேலு ஸ்டைல்ல திரும்ப திரும்ப கேட்க இதைவிட கனக்க தருவன் கொழும்பு வந்ததும் ஜோசிப்பாய் மாமா எவ்வளவு நல்லவர் எண்டு ஆசைகாட்டி கொழும்பு வந்ததும் சொந்தகாரர்கிட்ட கொண்டுபோய் விட்டிட்டு அப்படியே ஓடிட்டான்.

அந்தநிலைதான் இதுவும்.

தமிழர் பகுதிக்கு காணி பொலிஸ் அதிகாரங்கள் வழங்கப்பட்டால்  தீ குளிப்பேன் என்று ஒரு தேரர் சொன்னதும்  சிங்கள மக்களை திரட்டி மிக பெரும் போராட்டமே நடத்துவோம் என்று ஜேவிபி சொன்னதும்,காணி பொலிஸ் அதிகாரங்கள் வழங்கப்பட்டால் தனிநாடு கொடுத்ததுக்கு சமம் என்று அப்பப்போ  மஹிந்த ஆட்களுட்பட பல சிங்கள கட்சிகளும் தலைவர்களும்  தேரர்களும் அறிக்கைவிடுவது ஊரறிஞ்ச விஷயம்.

ஒரு சில சிங்களவர்கள் என்னுடன் பேசும்போது போர் காலத்தில் நீங்கள் தனி தீர்வு கேட்டது நியாயம், இப்போதான் எந்த பிரச்சனையும் இல்லையே வடக்கிலிருந்து தெற்குவரை அனைத்து மக்களும் எங்கும்போய் எங்கும் வரலாம் அப்புறம் எதுக்கு தனியாக உங்கள் பகுதிக்கு மட்டும் தீர்வு என்று கேட்கிறார்கள். அப்படியிருக்கிறது அவர்கள் தற்போதைய மனநிலை.

தாமதிக்கப்பட்ட நீதி  மறுக்கப்பட்ட நீதிக்கு சமம் என்பதுபோல் தமது அரசியல் இருப்பை உறுதிப்படுத்த சிங்களத்துடன் இணைந்து மாஜஜால வார்த்தைகள் பேசி தமிழர் பிரச்சனைகளை இழுத்தடிப்பது காலப்போகில் உங்களுக்கு என்ன பிரச்சனை என்று எவனும் கேட்க வைத்திடும்.

காணி காவல்துறை அதிகாரம் கிடைத்தால் மகிழ்ச்சி , அதேநேரம் காணி பொலிஸ் அதிகாரம் தமிழருக்கு கொடுத்த ரணில் பதவியிலிருப்பாரா  சிங்கள தேசம் பதவியில் விட்டு வைக்குமா என்பதையும் பார்க்க சுமந்திரனும் ரணிலும் சேர்ந்து அரசியல் தீர்வு தருவார்களென்று நம்பும்   அனைவரும் ஆவலுடன் காத்துள்ளோம்.

  • கருத்துக்கள உறவுகள்

பொங்கல் வந்தது, டும்.. டும் ...
பொங்கல் போய் வரியம் வந்தது,  டும் .. டும் ...
வரியம் போய் தீபாவளி வந்தது, டும் ,, டும் ...
தீபாவளி போய் கிரிஸ்மஸ்  வந்தது,  டும் .. டும் ...
கிரிஸ்மஸ் போய் நியூ இயர் வந்தது, டும் ,, டும் ..

இப்ப தேர்தல் வந்திருக்கு  டுமக்கு டும் டும் ..

நிறம் மாறாத பூக்கள் 
தேடியலைகின்றன காதுகளை ..

டுமக்கு டுமக்கு டும் டும் டும்மோவ் ....... 

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, பிரபா said:

"தேர்தலுக்கு பின்னர்" ??
இன்னுமா தமிழ் மக்கள் இதை நம்புகிறார்கள்.

வேறு வழி? 

4 hours ago, ரசோதரன் said:

சில வாரங்களின் முன் சஜித் யாழ் வந்து, பதின்மூன்றை, காணி போலீஸ் அதிகாரமுள்ள, சட்டமாக்குவேன் என்று சொன்னார். கொழும்பில் அவர் வீட்டிற்கு கல் எறியாதது ஒன்று தான் குறை. ஜேவிபியினர் அவர் வீட்டு வாசலிலேயே நின்று தொண்டை நரம்புகள் தெறிக்க, வழமை போலவே, சஜித்துக்கு எதிராகப் போராடினார்கள். பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா இது போரில் இறந்த இராணுவத்திற்கு சஜித் செய்யும் துரோகம் என்றார். 

சஜித் ஆளையே இப்ப காணவில்லை.

ரணில் 'காணி போலீஸ் 2.0' உடன் இப்ப வந்திருக்கின்றார். பீல்ட் மார்ஷல் நாளைக்கு பீல்ட்டில் பிசியாக நிற்பார். ஜேவிபியினருக்கு எல்லா நாளும் ஒரே நாளே, என்னமா பேசுவார்கள்........... நமக்கும் எல்லா நாளும் ஒரே நாளே, ஒரு மரமும் வெட்டாத தச்சன் போல. 

இந்தக் கலவரங்களிற்கு மத்தியில், அமெரிக்காவிலிருந்து சமீபத்தில் ஒரு கண்டன அறிக்கையை நாங்கள் விட்டிருந்தோம். 'சமஷ்டி எல்லாம் ஏத்துக்க முடியாது, தனிநாடு தான் எங்களுக்கான ஒரே தீர்வு ............', சுருக்கமாக அந்த அறிக்கையில் இருந்தது இது தான்............   

பீல்ட் மார்ஸலை US கூப்பிட்டிருக்குது போல கிடக்கு. அவர் சிலவேளை அடக்கி வாசிக்கலாம் . 

4 hours ago, விசுகு said:

வந்தால் மலை?? போனால் உரோமம் என்பதே எனது நிலைப்பாடு. 

மீண்டும் சுமந்திரன் ஊடாக தமிழ் மக்கள் ஏமாற்றப் படுவதால் ஒன்றும் குறைந்து விடப்போவதில்லை. ஆனால் சில வாய்கள் அடைக்கப்படும். இங்கும்.....

எப்படி? 

தமிழுக்கு வந்த அழுத்தத்திற்கு எதிராக ஆறுமுக நாவலர் போராடியது போலவா? 

😁

3 hours ago, Paanch said:

நான் புலம்பெயர்ந்து எங்கள் ஈழத்தமிழர்கள் வாழும் சில நாடுகளுக்குச் சென்றுள்ளேன். அங்கு  சில பெற்றோர்கள் பிள்ளைகளுக்குப் பேசிச் செய்யும் திருமணத்தின்போது மட்டும் சாதிபார்ப்பது அறிந்துள்ளேன், மற்றும்படி சாதி வேறுபாடு பார்ப்பது அருகி வந்துவிட்டது உண்மை. இவர்கள் தாய்நாடு திரும்பி வாழும் சாத்தியம் ஏற்பட்டால் அங்கு சாதி வேறுபாட்டின் வேர்கள் ஓரளவு அறுபடும் என நம்பலாம்.😌

 

பகல் கனவு 😁

வெளிநாடுகளில் ஓய்வூதியம் பெறுவோர் இலங்கையில் காணி வாங்கும்போது, தற்போதும் குறிச்சி, வட்டாரம் பார்த்துத்தான் வாங்குகிறார்கள். 

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, பிரபா said:

"தேர்தலுக்கு பின்னர்" ??
 

வென்ற பின் வழக்கம்போல் மொட்டைகளிடம் ஆசிர்வாதம் வழக்கம்போல் இனவாத பேச்சுக்கள் இந்த கேனை சுமத்திரன் வீராவேசமாக அறிக்கை விடுவார் அதை கேட்டு சுமத்திரன் வாலுகள் துல்லி கிலாகிக்கும் புதிய பிரபாகரன் வந்து விட்டார் என்று.

யாதார்த்தம் அவர்கள் பேசி வைத்து கொண்டே பிளே பண்ணுகிறார்கள்  சுமத்திரன் கூட்டம் அதை அடி  முட்டாள் கூட்டமும் அதை இன்னும் நம்புவதுதுதான் வினோதம் .

இங்கு சிலதுகளுக்கு விளங்காது இப்படி பல ஆசைகளை காட்டி 15 தடவை மோசம் போனோம் அப்படி போவதுக்கு சம்பந்தர் என்ற அரசியல்வாதி உடந்தையாக இருந்தார் தற்போது அந்த வேலையை சுமத்திரன் செய்ய வெளிகிடுறார் அதற்காக ஸ்ரீதரன் ஒன்றும் உத்தமர் அல்ல அவர் பற்றி பிறிதொரு திரியில் சொல்கிறேன் .

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, Kapithan said:

வேறு வழி? 

ரணில் தற்பொழுதும். ஐனதிபதி தான்  ... பல வருடங்களாக ஐனதிபதியாக இருக்கிறார் ....எதுவும் செய்யவில்லை    இனி செய்கிறேன் ஐனதிபதி   பதவியை தாருங்கள்” எனக் கேட்க முடியாது     கேட்கவும் கூடாது   

மற்றவர்கள் கேட்க முடியும்,..அதாவது சஜித்  அனுகுமார.........போன்றோர் கேட்கலாம் ஆனால் எப்போதும் தமிழர்கள் தான் சிங்களவனுக்கு   வாக்கு போட வேண்டும்    சிங்களவர்கள்.  தமிழனுக்கு வாக்கு போட்டால் என்ன??  வெளிநாடுகளில் தமிழனுக்கு    வெள்ளைக்காரன் வாக்கு போட்டு பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆக தெரிவு செய்கிறார்கள்  ......இலங்கையில் வாழும் மக்கள் ஏன். இதை பின்பற்றுவதில்லை  

மேலும் சுமத்திரன். ஏன் தனியாக சந்தித்து பூட்டிய அறைக்குள் கதைத்தவர்   எத்தனை கோடிக்கணக்கில் பணம் வேண்டினார்??   கட்சியை கூட்டி. அனுமதி பெற்றுக்கொள்ளவில்லை.  .   .. தமிழர்களின் கட்சியை உடைத்து விட்டு   ....இரண்டு ஐக்கிய தேசிய கட்சிக்காரர்கள்.   தமிழர்களின் வாக்கை எப்படி பெற்றுக் கொள்ளலாம் என்று தனியாக ரகசியமாக சந்தித்து உரையாடி உள்ளார்கள்   

  • கருத்துக்கள உறவுகள்
23 minutes ago, Kapithan said:

பீல்ட் மார்ஸலை US கூப்பிட்டிருக்குது போல கிடக்கு. அவர் சிலவேளை அடக்கி வாசிக்கலாம் . 

👍..........

செய்திகளில் இருந்தது.  அமெரிக்காவிற்கும் ரணில் தான் தேவையாக இருக்குது போல.......

ரணில் தமிழ் எழுத்தாளர்கள் போல........ எழுத்தாளரின் பக்கத்து வீட்டுக்காரருக்கே அடுத்தவர் ஒரு எழுத்தாளர், கொஞ்சம் பிரபலமானவர் என்றெல்லாம் தெரியாது.

ரணிலையும் உள்ளூரில் எவரும் மதிப்பது இல்லை........ஆனால் உலகத்தில் ரணிலை பலருக்கும் தெரிந்திருக்குது.......... 

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, பிரபா said:

"தேர்தலுக்கு பின்னர்" ??
இன்னுமா தமிழ் மக்கள் இதை நம்புகிறார்கள்.

தமிழ் மக்களுக்கு இந்த அறிக்கை பழக்கப்பட்ட ஒன்று....நம்ப மாட்டார்கள் ,ஆனால் கருத்துஎழுதும் நாம் அந்த அறிக்கையை நம்பி சாதிப்பிர்ச்சனை வரை கருத்து சொல்லியிருக்கிறோமல்ல‌...

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பெருமாள் said:

சுமத்திரன் வாலுகள் துல்லி கிலாகிக்கும் புதிய பிரபாகரன் வந்து விட்டார் என்று.

யாதார்த்தம் அவர்கள் பேசி வைத்து கொண்டே பிளே பண்ணுகிறார்கள்  சுமத்திரன் கூட்டம் அதை அடி  முட்டாள் கூட்டமும் அதை இன்னும் நம்புவதுதுதான் வினோதம் .

இங்கு சிலதுகளுக்கு விளங்காது இப்படி பல ஆசைகளை காட்டி 15 தடவை மோசம் போனோம் அப்படி போவதுக்கு சம்பந்தர் என்ற அரசியல்வாதி உடந்தையாக இருந்தார் தற்போது அந்த வேலையை சுமத்திரன் செய்ய வெளிகிடுறார் அதற்காக ஸ்ரீதரன் ஒன்றும் உத்தமர் அல்ல அவர் பற்றி பிறிதொரு திரியில் சொல்கிறேன் .

15 தடவைகளும் சுமந்திரன்தானா தலைமை தாங்கினார்? 😁😁😁😁

சுமந்திரனது இடத்தில் தகுதியுள்ளவர்கள் யாரையேனும் அமர்த்தலாமே,.... அதை ஏன்  இன்னும் செய்ய வில்லை ? ......என்ன,....யார் இருக்கினம் என்று தேடுகிறீர்களா? ....

முதலில் கூரையேறிக் கோழியைப் பிடியுங்கள். பின்னர், வானம் ஏறி வைகுண்டம் போவதைப் பற்றி யோசிக்கலாம். 

 

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Kapithan said:

15 தடவைகளும் சுமந்திரன்தானா தலைமை தாங்கினார்? 😁😁😁😁

சுமந்திரனது இடத்தில் தகுதியுள்ளவர்கள் யாரையேனும் அமர்த்தலாமே,.... அதை ஏன்  இன்னும் செய்ய வில்லை ? ......என்ன,....யார் இருக்கினம் என்று தேடுகிறீர்களா? ....

முதலில் கூரையேறிக் கோழியைப் பிடியுங்கள். பின்னர், வானம் ஏறி வைகுண்டம் போவதைப் பற்றி யோசிக்கலாம். 

 

மாற்று கனடாவில் இருக்கிறார்  அண்ணா  ..  அவரைப் போடுவ்து... நீங்கள்தான் ஒரு வழி சொல்லவேணும்..🙃

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Quote

தேர்தலுக்கு பின்னர் காணி, பொலிஸ் அதிகாரத்துடன் 13 அமுலாகும்; ஜனாதிபதி-சுமந்திரன் சந்திப்பில் இணக்கம்

அதென்ன தேர்தலுக்கு பின்......?
இப்படியான அறிக்கைகளை விடுபவர்கள் இப்போதும் பதவிகளுடன் இருக்கின்றார்கள்.இப்போது செய்யவில்லை என்றால் இனியும் இவர்கள் ஏதும் நடைமுறைப்படுத்தப்போவதில்லை.
இப்படியான வாக்குறுதிகள் எல்லாம் அன்று தொடக்கம் நடக்கும் வழமையான பேய்ப்பட்டம் கட்டும் அரசியல்தான்.

  • கருத்துக்கள உறவுகள்

காற்றுள்ள போது தூற்றி கொள் என்ற சாமான்ய மக்கள் கூட விளங்கி கொள்ளும் தமிழ் பழமொழியையே புரிந்து கொள்ள தெரியாத முட்டாள்   தலைமைகளை தொடர்சியாக கொண்டிருந்த  தமிழர்களுக்கான தீர்வானது இனிக் கிடைக்காது  என்பது 2009 இலேயே ஏறத்தாளமுடிவு செய்யப்பட்டு விட்டது.  தமிழரின் பலம் முழுவதும் விழலுக்கு இறைத்த நீரை போல பயன்றறு போனபின்னர் எந்த கொம்பனாலும் அதை மாற்ற முடியாது என்பதே யதார்ததம்.   ரணில் இங்கு ஒப்பு கொண்டதாக கூறப்படுவது 1987 இலேயே தமிழர்களால் எள்ளி நகையாடி  எட்டி உதைத்து தள்ளப்பட்ட தீர்வேயாகும்.

இப்போதைய நிலையில் தமிழர்களில் உள்ள அனைத்து தரப்புகளும்(புலம்பெயர் வாய்சொல்வீர அமைப்புகள் உட்பட)  ஒரே குரலில் இதை அமுல் படுத்துமாறு  கேட்பது  ஒன்றே  ஜதார்தத பூர்வமானது.  எமது உடனடித் தேவையானதுஇப்போதைய சூழ்நிலையில்  இலங்கை தமிழர் பிரதேசங்களில் தமிழ் மக்களின் இன பரம்பலை காப்பாற்றுவதும்  அவர்களின் கலவி பொருளாதாரம் ஆகியவறை உயர்துவதும் மிக அவசியமான தேவை.  இப்போது இதை செய்ய தவறினால்,  முன்னரை போல் ஜதார்ததத்துக்கு புறம்பான கனவுலகில் எம்மவர் சஞ்சரிப்பாரிது கொண்டிருந்தால் இப்போதையதை விட  மோசமான நிலையே ஏற்பட்டும். அதன் பின்னர் கனவுலகையும் உண்மை நிலையையும் நினைத்து நினைத்து புலம்பி பொழுது போக்கவேண்டியது தான். 

 

 

Edited by island

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.