Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தீபாவளி கொண்டாடுவது தமிழர்களது தன்மானத்துக்கு இழுக்கு!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தீபாவளி கொண்டாடுவது தமிழர்களது தன்மானத்துக்கு இழுக்கு!

-நக்கீரன்

'தமிழ் மக்கள் எருமைகளைப் போல எப்போதும் ஈரத்திலேயே படுக்கிறார்கள்,

ஈரத்திலேயே சமையல், ஈரத்திலேயே உணவு, உலர்ந்த தமிழன் மருந்துக்கும் அகப்பட மாட்டான்' என்று மகாகவி பாரதியார் மனம் நொந்தும் வெந்தும் சொன்னது இற்றைவரை சரியாக இருக்கிறது.இன்று உலகம் 21 ஆம் நூற்றாண்டில் நடை போடுகிறது. இருந்தும் உலர்ந்த தமிழனை மருந்துக்கும் பார்க்க முடியாமல் இருக்கிறது.

'சந்திர மண்டலத்தியல் கண்டு தெளிவோம்' என பாரதி கண்ட கனவை அமெரிக்கர்கள் 1969 இல் நனவாக்கினார்கள்.

இன்று செவ்வாய் மண்டலத்தையும் சனி மண்டலத்தையும் அமெரிக்க விண்கலங்கள் ஆய்ந்து கொண்டிருக்கின்றன!

ஆனால் தமிழனோ அதே சந்திரன், சனி, செவ்வாய் கோள்களை கோயில்களில் சுற்றி வந்து கொண்டிருக்கிறான். சனி தோசம் நீங்க அகண்ட நாம அருச்சனை செய்கிறான்.

தமிழர்கள் எதையும் சிந்தித்து எது சரி, எது பிழை, எது நல்லது, எது கெட்டது என்று முடிவு செய்வதில்லை. அப்பன் வெட்டிய கிணறு உப்புத் தண்ணீர் என்றாலும் அதையே குடித்துக் கொண்டு உயிர் வாழ விரும்புகிறார்கள்.

தமிழர்கள் தீபாவளியை ஆண்டு தோறும் கொண்டாடி வருகிறார்கள். ஊடகங்கள் அதனைப் பெரிது படுத்துகின்றன. வணிகர்கள் விற்பனையை அதிகரிக்க தீபாவளியைப் பயன்படுத்துகிறார்கள்.

தீபாவளி என்றால் என்ன? (புராணம் கூறுவது)

ஒரு காலத்தில் ïரண்யாட்சதன் என்ற ஒரு அசுரன் உலகத்தைப் பாயாகச் சுருட்டிக் கொண்டு போய் கடலுக்குள் ஒளிந்து கொண்டான்.

நராகாசூரன் கதாபாணியாக இந்திராதி தேவர்கள் இருடிகள் முதலியோரை வருத்தினான்.

தேவர்கள் மகாவிட்டுணுவிடம் முறையிட்டனர். அவர்களின் அல்லல்களைத் தீர்க்க திருவுளம் கொண்ட மகாவிட்ணு பன்றி அவதாரம் (உரு) எடுத்து கடலுக்குள் புகுந்து டிகா«ãனா? நராகாசூரனது மார்பைப் பிளந்து கொன்று உலகத்தை மீட்டு வந்து விரித்தார்.

விரித்த உலகம் (ப+மி) அப் பன்றியுடன் கலவி செய்ய ஆசைப்பட்டது.

ஆசைக்கு இணங்கிய பன்றி (விட்ணு) ப+மியுடன் கலவி செய்தது.

அதன் பயனாய் ப+மி கர்ப்பமுற்று நரகாசூரன் என்ற பிள்ளையைப் பெற்றது.

அந்தப் பிள்ளை தேவர்களை வருத்தினான்.

தேவர்களுக்காக விட்ணு நரகாசூரனுடன் போர் துவங்கினார்.

விட்ணுவால் அவனை வெல்ல முடியவில்லை. காரணம் நரகாசூரன் தனது தாயின் கையால் அல்லாது வேறுயாராலும் கொல்ல முடியாதபடி ஏற்கனவே பிரமாவிடம் வரம் வாங்கி விட்டான்.

உடனே காத்தல் கடவுளான விட்ணு பெரிய சதித் திட்டம் தீட்டினார். தனது தேர்ச்சாரதியாக இரண்டாவது மனைவியான சத்தியபாமாவை (பூமாதேவியின் மறுஅவதாரம்) அமர்த்துகிறார். நரகாசூரனோடு நடக்கும் சண்டையின் நடுவில் அம்பு ஒன்று அவரைத் துளைக்கிறது. உடனே விட்டுணு மூர்ச்சை போட்டு விழுந்து விடுகிறார்.

உண்மையில் அவர் மூர்ச்சைபோட்டு விழவில்லை. அப்படி நடித்தார். இதனை விளங்கிக் கொள்ளாத சத்தியபாமா தனது கணவன் உண்மையிலேயே மூர்ச்சையாகி இறந்து விட்டார் என நினைத்து விட்டுணுவின் வில்லை எடுத்து நரகாசூரன் மீது அம்பு எய்தி அவனைக் கொன்று விடுகிறாள்.

இதனால் தேவர்கள் மகிழ்ச்சி அடைந்தார்கள்.

உயிர் போகும் தருவாயில் நரகாசூனிடம் ‘உனது கடைசி ஆசை என்ன?’ என்று சத்தியபாமா கேட்கிறாள்.

'எனது மறைந்த நாளை மக்கள் எல்லோரும் கொண்டாட வேண்டும்" என்கிறான் நரகாசூரன்.

தனது எதிரியைக் கொல்வதற்கு குறுக்கு வழியில் சூழ்ச்சி செய்கின்ற ஒருவரை கடவுள் என்று அழைக்க முடியுமா? ஆனால் புராணிகர்கள் அப்படித்தான் 'பரம்பொருளை' சித்திரித்திருக்கிறார்கள்.

எந்தப் புராணத்தை எடுத்துப் பார்த்தாலும் இந்த அசுரர்கள் தேவர்களைக் கொடுமை செய்ததாகவும்;, தேவர்களை மீட்க கடவுள் அவதாரம் எடுத்து அசுரர்களைக் கொன்றதாகவும் சொல்கின்றன.

உண்மையில் இவையெல்லாம் அன்றைய ஆரிய திராவிட இனங்களுக்கு இடையிலான போரையே குறிக்கும்.

சுரர் என்றால் குடிப்பவர் என்று பொருள். அசுரர் என்றால் குடியாதவர் என்று பொருள். ஆரியர் சோமபானம் குடித்ததாக இருக்கு வேதம் சொல்கிறது. சோமச் செடியை தெய்வமாகமே கும்பிட்டார்கள். வேள்வி செய்து அதில் குதிரை, மாடு, ஆடு, பன்றி, முயல், உடும்பு இவற்றை வேக வைத்து அதனை ஆரியர்கள் 'அவிர்ப்பாகம்' என்று சொல்லி உண்டு மகிழ்ந்தார்கள்.

ஆனால் சோமபானம், சுரபானம் குடித்த ஆரியர் உயர்ந்தவர்களாகச் சித்திரிக்கப்பட்டார்கள். குதிரை, மாடு, ஆடு, முயல், உடும்பு இவற்றைக் கொன்று சாப்பிட்டவர்கள் தேவர்கள் என்று அழைக்கப்பட்டார்கள். அவற்றை அன்பு, அருள், காருண்யம், ஒழுக்கம் காரணமாக வெறுத்து ஒதுக்கியவர்கள் அசுரர்கள் என்று இழித்துரைக்கப் பட்டார்கள்.

மகாவிட்ணுவின் அவதாரங்களுள் பரசுராமன் அவதாரம் என்பது முழுக்க முழுக்க அசுரர்களைக் கொன்றொழித்த கதைதான். பூலோகத்தில் அசுரர்கள் செய்துவரும் கொடுமைகளினால் பூமாதேவி பாரம் தாங்க முடியாமல் தனது கணவன் விட்ணுவிடம் முறையிட்டாள். உடனே 'பூமியில் அவதாரம் செய்து பூமிபாரத்தைத் தீர்த்து வைப்பேன்' என்று கூறி தக்னி முனிவருக்கும் அவரது பத்தினி ரேணுகைக்கும் பரசுராமனாகப் பிறக்கிறார் விட்ணு.

தந்தை கட்டளைப்படி பரசுராமன் தனது தாயையும் உடன் பிறந்த சகோதரனையும் கொன்று பெரிய 'வீரன்" என்று பெயர் எடுக்கிறான். காமதேனு என்னும் பசுவை கார்த்தவீரியார்ச்சுனன் என்னும் அரசன் கவர்ந்து செல்கிறான். அதைச் சாக்கிட்டு அந்த அரசனையும் பூலோகத்தில் இருந்த சத்திரியர்களை; (அசுரர்களை)யும் ஒரு காலத்திலும் தலைதூக்காதபடி கோடரியால் வெட்டிக் கொன்று பூமி பாரத்தைத் தீர்த்தான்.

தாயைக் கொன்றவன், சகோதரனைக் கொன்றவன், அசுரர்களைக் கொன்றவன் எப்படி கடவுள் அவதாரமாக இருக்க முடியும்? இந்த அவதாரத்திடம் இருந்து பக்தர்கள் கற்றுக் கொள்ளும் பாடம் என்ன? யாரோ ஒரு அரசன் தவறு செய்தான் என்பதற்காக எல்லா அரசர்களையும் பூண்டோடு அழிப்பது எந்தவகை தர்மம்? பூலோகத்தில் அரசு ஆண்டவர்கள் எல்லாம் அசுரர்கள் என்பதுதான் இதற்குக் காரணமா?

இராம இராவண யுத்தம் ஆரிய திராவிடர் இருசாராருக்கும் இடையிலான மோதல்தான். இப்படி நேரு தான் எழுதிய னுளைஉழஎநசல ழக ஐனெயை என்ற நூலில் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார்.

இராமன் அரக்கர்களைக் கொல்லுவதற்கென்றே காட்டிற்கு வந்ததாகவும், அரக்கர்களைக் கொன்று ஒழிப்பதாக வாக்குக் கொடுத்து விட்டுக் காட்டிற்கு வந்ததாவும் சொல்கிறான். ( ஆரண்ய காண்டம், 10 ஆவது சருக்கம்)

‘இராமன் காலத்தில் தென் இந்தியா தஸ்ய+க்கள், இராட்சதர்களுக்குச் சொந்தமாயிருந்தது. இவர்கள் ஆரிய முனிவர்கள் செய்து வந்த யாகத்தை எதிர்த்தார்கள். இருந்தாலும் வட இந்தியாவிலிருந்து வந்த ஆரியர்களைப் போலவே இந்த இராட்சதர்கள் என்பவர்களும் நாகரிகமடைந்திருந்தார்கள்.’ (பி.டி.சி சீனிவாசய்யங்கார் "இந்திய சரித்திரம்’ முதற்பாகம் - பக்கம் - 19)

'தீபாவளிப் பண்டிகை தமிழர்க்கு உரியது அன்று, தீபாவளிப் பண்டிகை புராண மதத்தைச் சார்ந்தது. அசுரர் கொலைக்காக தமிழர் மகிழ்ச்சி அடைதல் நன்று அன்று" என்று தமிழ்ப் பெரும் புலவர், பேராசிரியர் சைவப் பெரியார் கா.சுப்பிரமணிய(ன்) பிள்ளை தாமெழுதிய 'தமிழர் சமயம்' என்ற நூலில் குறிப்பிடுகிறார்.

'தீபாவளி என்பது வடநாட்டு மார்வாரிகளும், குஜராத்திகளும் கொண்டாடும் புதுக்கணக்கு, புத்தாண்டுப் பிறப்பு விழா. தீபாவளிக்கும் தமிழர்க்கும், தீபாவளிக்கும் தமிழ் இலக்கியத்திற்கும் யாதொரு தொடர்பும் இல்லை' எனப் பேராசிரியர் சைவப்பெரியார் அ.கி. பரந்தாமனார் தாம் எழுதிய " மதுரை நாயக்கமன்னர் கால வரலாறு" என்னும் நூலில் மிகத் தெளிவாக விளக்கியிருக்கிறார்.

'தீபாவளி சமண சமயப் பண்டிகை. பாவாபுரி நகரிலே அறிவுரை வழங்கிக் கொண்டிருந்த வர்த்தமான மகாவீரர் இறந்த விடியற்கால நாளே தீபாவளியாகும். தீபாவளி பற்றிய வரலாற்றுக்கும் நரகாசுரன் புராணக் கதைக்கும் யாதொரு தொடர்பும் இல்லை. தீபாவளி என்பதன் பொருள் விளக்கு வரிசை' (தீபம் - விளக்கு, ஆவலி - வரிசை ) என்று அறிஞர் மயிலை சீனி வேங்கடசாமி எழுதிய "சமணமும் தமிழும்" என்ற நூலில் சொல்லியிருக்கிறார்.

'ஆரியப் பார்ப்பனர்கள் கட்டுவித்த கற்பனைக் கதையே தீபாவளி" என்று சைவத் தமிழ் பெரியார் மறைமலை அடிகள் தாம் எழுதிய "தமிழர் மதம்" என்ற நூலில் எழுதியுள்ளார்.

மேலும் அவர் -

"ஆரியரின் இத்தகைய வெறியாட்டு வேள்விகளை அழித்துவந்த சூரன், இராவணனன் முதலான நிகரற்ற தமிழ் வேந்தர்களே, ஆரியர்களால் அரக்கர் என்று இகழ்ந்து பேசப்படு வராயினர்.' (வேளாளர் நாகரிகம் - பக்கம் 60)

தீபாவளியின் உண்மை அறிந்தவர்கள் ஒரு சிலரே ஆவார்கள். பெரும்பாலோர் நரகாசுரனைக் கண்ணபிரான் சங்கரித்தார் அந்த அரக்கனை அழித்த நாளே தீபாவளி என்று கூறிக் கொண்டிருக்கிறார்கள். நரகாசுரனைக் கொன்ற காரணத்தால் கொண்டா டப்படுவது தீபாவளி என்பது பிழை. ஓர் அசுரனைக் கொன்றதற்காக ஒரு கொண்டாட்டம் இருக்க முடியாது. அப்படியானால் இரணியன், இராவணன், இடும்பன் மகன் சலந்தரன், அந்தகன் முதலிய அரக்கர்களைக் கொன்றதற்கு கொண்டாட்டம் இருக்கவேண்டும். ஆகவே நரகாசுரனைக் கொன்றதற்கும் தீபாவளிக்கும் தொடர்பு இல்லை என உணர்க. நரகாசுரனைக் கொன்றதற்காகத் தீபாவளி ஏற்பட்டது அன்று. (ஆசிரியர் திருமுருக கிருபானந்தவாரியார், நூல் ‘வாரியார் விரிவுரை விருந்து’ பக்கம் 95)

'மறைமலை அடிகள் தமிழர், அதிலும் தனித் தமிழ் வெறியர் அவர் அப்படித்தான் எழுதுவார்' என்று சிலர் சொல்லக் கூடும். அவர்களுக்காக இதோ இராமகிருஷ்ண பரமகம்சரின் சீடர் சுவாமி விவேகானந்தர் சொல்லியிருப்பதைத் தருகிறேன். படியுங்கள்.

'தென்னிந்தியாவில் இருந்த மக்களே இராமாயாணத்தில் குரங்குகள் என்றும், அரக்கர்கள் என்றும் அழைக்கப்பட்டிருக்கிறார்கள்

  • கருத்துக்கள உறவுகள்

Friday, October 20, 2006

தீபாவளி என்னும் முட்டாள்தனம்

தீபாவளிப் பண்டிகையைக் கொண்டாடுவது தமிழனுக்கு மானக்கேடும், முட்டாள்தனமுமான காரியம்

தீபாவளி என்றால் என்ன? (புராணம் கூறுவது)

ஒரு காலத்தில் ஒரு அசுரன் உலகத்தைப் பாயாகச் சுருட்டிக் கொண்டு போய் கடலுக்குள் ஒளிந்து கொண்டான்

தேவர்களின் முறையீட்டின் மீது மகாவிஷ்ணு பன்றி அவதாரம் (உரு) எடுத்து கடலுக்குள் புகுந்து அவனைக் கொன்று உலகத்தை மீட்டு வந்து விரித்தார்

விரித்த உலகம் (பூமி) அப்பன்றியுடன் கலவி செய்ய ஆசைப்பட்டது

ஆசைக்கு இணங்கிப் பன்றி (விஷ்ணு) பூமியுடன் கலவி செய்தது

அதன் பயனாய் பூமி கர்ப்பமுற்று நரகாசூரன் என்ற பிள்ளையைப் பெற்றது

அந்தப் பிள்ளை தேவர்களை வருத்தினான்

தேவர்களுக்காக விஷ்ணு நரகாசூரடனுடன் போர் துவங்கினார்

விஷ்ணுவால் அவனை வெல்ல முடியவில்லை விஷ்ணு வின் மனைவி நரகாசூரனுடன் போர்தொடுத்து அவனைக் கொன்றாள்

இதனால் தேவர்கள் மகிழ்ச்சி அடைந்தார்கள்

இந்த மகிழ்ச்சியை (நரகாசூரன் இறந்ததற்காக) நரகாசூரனின் இனத்தாரான திராவிட மக்கள் கொண்டாட வேண்டும்

இதுதானே தீபாவளிப் பண்டிகையின் தத்துவம்!

இந்த 10 விடயங்கள்தான் தமிழரை தீபாவளி கொண்டாடும் படி செய்கிறதே அல்லாமல், வேறு என்ன என்று யாருக்குத் தெரியும்? யாராவது சொன்னார்களா?

இக்கதை எழுதிய ஆரியர்களுக்குப் நிலநூல்கூடத் தெரியவில்லை என்றுதானே கருத வேண்டியிருக்கிறது? பூமி தட்டையா? உருண்டையா?

தட்டையாகவே இருந்தபோதிலும் ஒருவனால் அதைப் பாயாகச் சுருட்ட முடியுமா? எங்கு நின்றுகொண்டு சுருட்டுவது? சுருட்டினால் தூக்கிக் கட்கத்திலோ தலைமீதோ எடுத்து போக முடியுமா? எங்கிருந்து தூக்குவது?

கடலில் ஒளிந்து கொள்வதாயின், கடல் அப்போது எதன்மீது இருந்திருக்கும்?

விஷ்ணு மலம் தின்னும் பன்றி உருவம் எடுக்க வேண்டிய அவசியம் என்ன?

அரக்கனைக் கொன்று பூமியை விரித்ததால் பூமிக்கு பன்றிமீது காதல் ஏற்படுவானேன்?

பூமி மனித உருவமா? மிருக உருவமா?

மனித உருவுக்கும் மிருக உருவுக்கும் கலவியில் மனிதப் பிள்ளை உண்டாகுமா?

பிறகு சண்டை ஏன்? கொல்லுவது ஏன்?

இதற்காக நாம் ஏன் மகிழ்ச்சி அடைய வேண்டும்?

நரகாசூரன் ஊர் மாகிஷ்மகி என்ற நகரம் இது நர்மதை ஆற்றின் கரையில் இருக்கிறது. மற்றொரு ஊர் பிரகத்ஜோதிஷா என்று சொல்லப்படுகிறது. இது வங்காளத்தில் விசாம் மாகாணத்துக்கு அருகில் இருக்கிறது.

இதை திராவிட அரசர்களே ஆண்டு வந்திருக்கிறார்கள். வங்காளத்தில் தேவர்களும் அசுரர்களும் யாராக இருந்திருக்க முடியும்?

இவைகள் ஒன்றையும் யோசிக்காமல் பார்ப்பனன் எழுதி வைத்தான் என்பதற்காகவும், சொல்கிறான் என்பதற்காகவும், நடுஜாமத்தில் எழுந்து கொண்டு குளிப்பதும், புதுத்துணி உடுத்துவதும், பட்டாசு சுடுவதும், அந்தப் பார்ப்பனர்கள் வந்து பார்த்து, கங்காஸ்நானம் ஆயிற்றா? என்று கேட்பதும், நாம் 'ஆமாம்” என்று சொல்லிக் கும்பிட்டுக் காசு கொடுப்பதும், அவன் காசை வாங்கி இடுப்பில் சொருகிக் கொண்டு போவதும் என்றால், இதை என்னவென்று சொல்வது?

சிந்தியுங்கள்! சிந்தியுங்கள்!!

மாணவர்களே! உங்கள் ஆசிரியர்களுக்கு மானம், புத்தி இல்லாவிட்டாலும் நீங்களாவது சிந்தியுங்கள் எதற்காக இவ்வளவு சொல்லுகிறேன் என்றால் இக்கதை எழுதின காலத்தில் (ஆரியர்) பார்ப்பனர்கள் எவ்வளவு காட்டு மிராண்டிகளாக இருந்திருக்க வேண்டும்? அந்தக் காலத்தில் நாம் மோசம் போய்விட்டோம். அறிவியல் பெருகிவிட்ட இந்தக் காலத்திலும் மோசம் போகலாமா?

தந்தை பெரியார் தீபாவளி என்ற பண்டிகை பற்றி கூறியதன் சிறு தொகுப்பு

http://veeravanniyan.blogspot.com/2006/10/blog-post_20.html

நன்றி

ஐயோ... தீபாவளி கொண்டாடாட்டி எப்படியாம் தமிழ் சினிமாப் படம் பார்க்கிறது?

தீபாவளிக்கு தானே விஜையும், அஜித்தும், சிம்புவும்... எல்லாரும் புதுப்படம் ரிலீஸ் பண்ணுவீனம்.

தீபாவளி அன்று ஆட்டிறைச்சி கறியை முழுங்கிவிட்டு, பியரும் அடித்துவிட்டு ரெண்டு புதுப்படமும் பார்த்தால் சொல்லி வேலை இல்லை..

[இப்படி நான் சொல்லவில்லை. பலர் செய்கின்றார்கள்..]

தீபாவளி வியாழகிழமை அல்லோ வருது பிறகு எங்கே நேரம் இருக்கு கொண்டாட :lol: ஆனாலும் இலங்கையில இருக்கும் போது ஜெனரல் சொல்லுற மாதிரி புது படம் எல்லாம் ரிலிஸ் ஆகும் காலம கோயிலிற்கு போய் அங்கே சைட் அடித்து போட்டு ஒவ்வொரு தியேட்டரிலையும் ஒவ்வொரு படம் பார்கிற சுகம் இருக்கே தனிசுகம் :lol: இதற்காக தான் தீபாவளியை நாம கொண்டாடுறதே :D !!அக்சுவலா சிட்னியில கூட "அழகிய திருமகன்" ரிலீஸ் பட் நேக்கு டைம் இல்லை படம் பார்க்க அது தான் பிரச்சினை ஆகவே நான் கொண்டாடமாட்டேன் சோ உங்கள் கூட்டத்தில் நானும் சேர்ந்துட்டேன்!! :lol:

அப்ப நான் வரட்டா!!

ஜம்மு பேபி பஞ்-

Edited by இணையவன்
தணிக்கை செய்யப்பட்டுள்ளது

  • கருத்துக்கள உறவுகள்

தீபாவளி வரேக்க இதுகளும் வரும். நாம அதை மறந்தாலும்.. கொண்டாடாத கொண்டாடாத என்று நம்மள ஞாபகம் ஊட்டி கொண்டாட தூண்டுறாங்க. :lol:

கொண்டாடுறவங்க அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துக்கள். சன் ரிவில நல்ல புரோகிராம் போடப் போறாங்க. அதில் உலகமே காறித்துப்ப நடந்து கொண்டு அப்புறம் கைபிடிச்சு.. உலகை அசத்திய நடிகர் சிறீகாந் தம்பதிகள் தலைத்தீபாவளி கொண்டாடிறாங்க மறக்காமப் பாருங்க. :lol:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

தீபாவளி வரேக்க இதுகளும் வரும். நாம அதை மறந்தாலும்.. கொண்டாடாத கொண்டாடாத என்று நம்மள ஞாபகம் ஊட்டி கொண்டாட தூண்டுறாங்க. :lol:

கொண்டாடுறவங்க அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துக்கள். சன் ரிவில நல்ல புரோகிராம் போடப் போறாங்க. அதில் உலகமே காறித்துப்ப நடந்து கொண்டு அப்புறம் கைபிடிச்சு.. உலகை அசத்திய நடிகர் சிறீகாந் தம்பதிகள் தலைத்தீபாவளி கொண்டாடிறாங்க மறக்காமப் பாருங்க. :lol:

அருமையான வரிகள் தலை தீபாவளி கொண்டாடும் சிறிகாந் தம்பதியர்களை கட்டாயம் பார்க்க வேண்டும் ஆனால் சன் டீவியை புறகணிக்க வேண்டும் கலைஞர் டீவியில் காட்டினா போய் பார்பேன்.

இந்த கந்தப்பு தீபாவளியை பகிஷ்கரிக்க தொடங்கி எனி மனிசி வருசத்தில ஒருக்கா தீபாவளிக்கு வாங்கி தாற உடுப்பு கூட கிடைக்காம போகபோகுது. :lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இப்பா தீபாவளி தமிழனுக்கு இழுக்கோ, தன்மானப்பிரச்சினையோ என்றதில் தான் பொரிய பிரச்சினை இங்கு. சன் ரீ.வியில யாரின்ர எதை போட்டா என்ன, கலைஞர் ரீ.வில எதை போட்டா நமக்கென்ன.

ஈழத்தமிழருக்கு இழுக்க பல விடையங்கள் இருக்கு இன்றை காலத்தில் கூட ஒற்றுமைப்படாத ஜென்மங்கள் இருக்கு அது தான் எங்களுக்கு இழுக்கு அவர்களை திருத்த முயற்ச்சி செய்யுங்கள்.!

தீபாவளியை மக்கள் கொண்டாடும் மன நிலையில இருக்கினம் என்றால் அதுதான் எங்களுக்கு இழுக்கு. எங்கள் நாட்டில் நெடுகத்தான் பிரச்சினை அதற்hக நாங்கள் சந்தோசமாக, களிப்பாக இருக்க கூடாதா என்று கேட்டாள் உங்களை போல சுயநலவாதிகள் இருக்க மாட்டார்.! ஏனெனில் நாங்கள் பிரச்சினைகளைக் கண்டு பயந்து ஓடியவர்கள் அவர்கள் பிரச்சினைகளை எதிர்த்தவர்கள்..!

எல்லாவற்றுக்குள்ளும் அரசியல், நாட்டுப்பிரச்சினை கதைப்பதாய் சிலர் குளறலாம் ஆனால் அதை தவிர எமக்கு (ஈழத்தமிழருக்கு) இன்று பேச வேறு விடையங்கள் இல்லை. அதுவே முக்கியமானதும், அவசரமானதுமாகும்.

  • கருத்துக்கள உறவுகள்

*******

தமிழ்செல்வன் அண்ணா மறைந்த சோகத்தில் இருக்கின்றபோது இந்த வருடம் தீபாவளிப் பண்டிகை அவசியமற்ற ஒன்று.

****** தணிக்கை - யாழ்பாடி

Edited by yarlpaadi

தீபங்களை வரிசையாக வைத்தல் என்பதை தீப ஆவளி எண்று சொல்கிறார்கள்... (ஆவளி என்பது வரிசை என்பதை குறிக்கும்) இருள்கால ஆரம்பத்தில் தீபங்களை ஏற்றி விளாவாக செய்வது கார்த்திகை தீபம்... அதை ஒட்டி வட இந்தியர்கள் செய்வது க்கு பெயர் திவாளி (dewali)

ஈழ தமிழருக்கு அது கார்த்திகை கடைசியில் வரும் தீபம் ஏற்றும் மாவீரர் நாள்... அதையே தீபா(ஆ)வளி யாக கொண்டாடலாம்...!

"தீபாவளி தமிழர் திருநாள் அல்ல" என்ற தலைப்போடு ஒரு இறுவட்டு (CD) தயாரித்துள்ளேன். தீபாவளி பற்றி என்னுடைய கருத்துக்களை சொல்லி உள்ளேன்.

நவம்பர் 1ஆம் திகதியே என்னுடைய உரையை முடித்து பதிவு செய்து விட்டேன். 500 இறுவட்டுக்களாவது வினியோகிக்கும் திட்டத்தில் உற்சாகத்தோடு இருந்தேன்.

ஆனால் தமிழ்செல்வன் அவர்களின் வீரச்சாவு பெரும் அதிர்ச்சியையும் வேதனையையும் தந்துவிட்டது. எங்கும் போகாமல் மூன்று நாட்கள் வீட்டுக்குள்ளேயே இருந்தேன்.

தற்பொழுது என்னை சற்று தேற்றிக்கொண்டு 200 வரையிலான இறுவட்டுக்களை வினியோகித்துள்ளேன். என்னுடைய தளத்திலும் அந்த உரை உள்ளது.

இந்த உரை 55 நிமிடங்கள் நீழ்கிறது. சற்றுப் பொறுமையோடு கேளுங்கள்.

அதன் இணைப்பு:

http://www.webeelam.com/deepavali.mp3

நாட்டுக்கு தேவையான தலைப்பு.. :)

Edited by vasisutha

ஒவ்வொரு வருடமும் தீபாவளி வரும்போது இப்படி எழுதுவதை விட

அதை நிரந்தரமாக முன் பக்கத்தில் இணைத்தால் அடுத்த வருடம்

கஸ்டப்பட்டு எழுத தேவையில்லை... :)

வசி சொல்வது எனக்கு நல்ல யோசனையாகப் படுது. :wub:

கொண்டாட்டம் என்பது மனமகிழ்வுக்கும், மக்கள் ஒன்றுகூடலுக்கும், அன்பு பகிர்வுக்கும் தான்.

ஆனால், கொண்டாட்டங்களுக்கு பொதுப்புத்தியை அவமதிக்கும் காரணங்களைக் கற்பிப்பதுதான்

முட்டாள்தனம். இன்றைய காலகட்டத்தில், தமிழர் வாழ்வியலை பிரதிபலிக்கக்கூடிய கொண்டாட்டங்களே

அவசியமானது. தயா குறிப்பிட்டது போல வீர மறவர்களை நினைவுகூருகிற கார்த்திகை மாதத்து

திருநாளான மாவீரர் நாள் இந்தவகையில் முக்கியத்துவம் பெறுகிறது.

  • கருத்துக்கள உறவுகள்

தீபாவளி வருகிதே என்னடா தீபாவளி தமிழருடையதா இல்லாட்டி வாடைகைக்கு எடுத்ததா எண்டு ஒரு விவாதத்தையும் காணேல்லையே எண்டு நினைச்சனான். வந்திட்டுது :wub::lol:^_^

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சபேசன் சாரின் குரலை எங்கேயோ கேட்டமாதிரி இருக்கின்றது :wub: ஐயா நீங்கள் ஏதும் தொலைக்காட்சி அல்லது வானொலிகளில் மதப்பிரச்சாரம் செய்பவரா? :lol:

  • கருத்துக்கள உறவுகள்

பேய்விழா என்பது கனடாக்காரனுக்குச் சொந்தமானதல்ல என்பதைத் தாங்கள் முதலில் அறியவேண்டும். மேலைத்தேசத்தைச் சார்ந்த அனைவரும் கொண்டாடுவது.

ஊரில விளக்கீடு (நெருப்பு பந்தங்களை காணி மற்றும் முக்கிய இடங்களில் நாட்டுதல். கோவிகளிலும் பெரிதாக உருவம் செய்து இரவில் எரிப்பார்கள், பேர் மறந்திட்டேன்) எண்டு ஒரு நாள் கொண்டாடுவோம். அதுவும் இதுவும் ஒரே கொண்டாட்டமா?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஊரில விளக்கீடு (நெருப்பு பந்தங்களை காணி மற்றும் முக்கிய இடங்களில் நாட்டுதல். கோவிகளிலும் பெரிதாக உருவம் செய்து இரவில் எரிப்பார்கள், பேர் மறந்திட்டேன்) எண்டு ஒரு நாள் கொண்டாடுவோம். அதுவும் இதுவும் ஒரே கொண்டாட்டமா?

அது கார்த்திகை விளக்கீடு. சொக்கப்பனை எரிப்பார்கள். அது வேறு. இது வேறு.

  • கருத்துக்கள உறவுகள்

இந்தக் கட்டுரைப் பிதற்றலைத் தணிக்கை செய்யாத யாழ்பாடி கட்டுரையாளரின் செயலில் உள்ள குறைபாட்டை எழுதியவுடன் தணிக்கை செய்கின்றார். இதனால் நான் எழுதிய கருத்தின் அர்த்தம் மாறுகின்றது.

********

கந்தப்பு தமிழர் பற்றிய கட்டுரை என்றவுடன் பாய்ந்தடித்து இணைத்து விட்டார் போல.

ஊரில விளக்கீடு (நெருப்பு பந்தங்களை காணி மற்றும் முக்கிய இடங்களில் நாட்டுதல். கோவிகளிலும் பெரிதாக உருவம் செய்து இரவில் எரிப்பார்கள், பேர் மறந்திட்டேன்) எண்டு ஒரு நாள் கொண்டாடுவோம். அதுவும் இதுவும் ஒரே கொண்டாட்டமா?

அதை விட, இறந்து போனவர்களுக்குத் திதி செய்யாது விட்டால், இந்தக் ஐப்பசி மாதத்தில் தான் ஒட்டுமொத்தத்திற்கும் மகவமோ, மகதம் என்று ஏதோ செய்வார்கள்.

அது போன்ற ஒன்றாக இதையெடுக்கலாம்.

ஆனால் ஒன்று. கறுத்தப்பூனை, பேயிற்குக் கால் இல்லை, பேய் வெள்ளை நிறத்தி;ல் இருக்கும் என்ற கருத்துக்களை எல்லாம் எம்மை ஆக்கிரமித்து ஆண்ட மேலைத்தேசத்தைச் சார்ந்தவர்களிடம் இருந்து தான் நாங்கள் பிடித்துக் கொண்டிருக்கின்றோம் போல.

---------நீங்கள் மறந்தது என்று சொல்வது சொக்கப்பனையா?

***** தணிக்கை -யாழ்பாடி

Edited by yarlpaadi

  • கருத்துக்கள உறவுகள்

---------நீங்கள் மறந்தது என்று சொல்வது சொக்கப்பனையா?

ஓம் தூயவன். சொக்கபனைத்தான். கந்தப்புவும் நினைவு படுத்தினார். நன்றி.

நான் கிட்டத்தட்ட இப்படி தான் மாப் பண்ணி பார்தேன்.

கார்த்திகை விளக்கீடு = கலோவீன்

தைப்பொங்கல் = தாங்ஸ் கிவ்விங்

மாவீரர் நாள் = றிமெம்பறன்ஸ் டே

சித்திரை வருடபிறப்பு நியூ இயர்

ஆடி அமாவாசை (தந்தை இறந்த பின்) = பாதெர்ஸ் டே (தந்தை இருக்கும் போது)

ஏதோ ஒரு பறுவம் (தாய் இறந்த பின்) = மதெர்ஸ் டே (தாய் இருக்கும் போது)

சபேஸ், றிமெம்பரன்ஸ் டே உம் மாவீரர் தினமும் சம்பந்தப்பட்டது என்றதை வைத்து ஒரு படம் - poster செய்யுங்கோவன் .

கார்த்திகை பூ மற்றும் பொப்பி பூ ஒன்று சேர்த்து?

குமாரசாமி!

நான் மதப் பிரச்சாரம் செய்வேனா? என்ன நக்கலா? :lol::o

நான் சில மாதங்களுக்கு முன்பு தொடர்ச்சியாக ஐரோப்பிய தமிழ் வானொலியில் மதங்களிற்கு எதிரான கருத்துக்களை கூறி வந்தேன். அதை நீங்கள் கேட்டிருக்கக் கூடும்.

சபேசன் உங்கள் முயற்சிக்கு வாழ்த்துகள்!

உங்கள் முயற்சி வெற்றிபெற திராவிடர்கள் முதலில் போரில் வெல்ல வேண்டும். ஆனாலும் சமாந்தரமாக உங்கள் முயற்சியை கொண்டு செல்லும் உங்கள் திடசங்ற்பத்திற்கு பாராட்டுகள்.

என்னாலான உதவியாக உங்கள் உரையினை இன்று வீட்டில் அனைவருக்கும் போட்டு கேட்கும்படி செய்தேன்.

அத்துடன் முடிந்தால் இந்த சாதகம் என்னும் அடுத்த சனியனை ஒழிக்க முயற்சிகள் மேற்கொண்டால் நல்லது. இதனால் பொருட் செலவும், நேரமும் மட்டுமின்றி பலர் முயற்சிகள் இன்றி வாழ்வில் சோர்வடைகின்றனர்.

  • கருத்துக்கள உறவுகள்

சபேசன் உங்கள் முயற்சிக்கு வாழ்த்துகள்!

உங்கள் முயற்சி வெற்றிபெற திராவிடர்கள் முதலில் போரில் வெல்ல வேண்டும். ஆனாலும் சமாந்தரமாக உங்கள் முயற்சியை கொண்டு செல்லும் உங்கள் திடசங்ற்பத்திற்கு பாராட்டுகள்.

என்னாலான உதவியாக உங்கள் உரையினை இன்று வீட்டில் அனைவருக்கும் போட்டு கேட்கும்படி செய்தேன்.

அத்துடன் முடிந்தால் இந்த சாதகம் என்னும் அடுத்த சனியனை ஒழிக்க முயற்சிகள் மேற்கொண்டால் நல்லது. இதனால் பொருட் செலவும், நேரமும் மட்டுமின்றி பலர் முயற்சிகள் இன்றி வாழ்வில் சோர்வடைகின்றனர்.

சாணக்கியன் நானும் உங்களை சாணக்கியமானவர் என்றுதான் இவ்வளவு நாளும் நினைச்சிருந்தன்.

யாரோ ஒருவர் தனது கற்பனைகளை அவிழ்கிறதை.. நீங்கள் சமுதாயத்துக்கு எடுகோளா ஆக்கிறத நினைக்கிற போது...???! அதற்குள் பொதிந்திருக்கிற இயலாமையை என்னென்பது..???!

திராவிடர்கள் போர் புரியவில்லை. தமிழர்கள் தான் சிறீலங்கா அரசின் அடக்குமுறைக்கு எதிராக விடுதலைப் போர் புரிகின்றனர் என்பதை தெளிவாக உணர்ந்து கொள்ளுங்கள்..! தயவுசெய்து தமிழர்களை திராவிடத்துக்குள் கலந்து ஆட்டுக்குள் மாட்டை கலந்தடிக்கும் வேலையைச் செய்யாதேங்கோ. ஆடு ஆடா இருக்கட்டும் மாடு மாடா இருக்கட்டும். இரண்டையும் ஒரே பட்டியில் சேர்க்கிறதால ஆட்டுக்கு உள்ள தனித்துவம் இல்லாமல் போயிடுது..! :lol::o

Edited by nedukkalapoovan

அத நீங்க இப்படி சுருக்கமா சொன்னா எனக்கு ஏறாது பாருங்கோ! அவரை மாதிரி இறுவட்டு போட்டு சொல்லுங்கோ ஏறுதா என்று பாப்பம்?

சரி இப்ப நீங்க சொல்லுறீங்க தமிழர் வேற திராவிடர் வேற என்றா?

(எனக்கு இது தேவைதான்! இதுதான் சொல்லுறது தெரியாத விசயத்துக்குள்ள மூக்க நுளைக்கக் கூடாது என்று, கேட்டத சொன்னது பிரச்சனையா போச்சு)

பிற்குறிப்பு:

சாணக்கியன் பெயரளவில் என்று தானே போட்டிருக்கு, வேணுமென்டால் நீங்கள் என்னை சாமானியன் என்றும் கூப்பிடலாம்!

Edited by சாணக்கியன்

  • கருத்துக்கள உறவுகள்

அத நீங்க இப்படி சுருக்கமா சொன்னா எனக்கு ஏறாது பாருங்கோ!

அவரை மாதிரி இறுவட்டு போட்டு சொல்லுங்கோ ஏறுதா என்று பாப்பம்?

இறுவெட்டு.. பைத்தியம் இப்பதான் தமிழர்களிட்டத் தொத்தி இருக்கு. இப்பதான் அவை 80களின் பிற்பகுதியில நிற்கினம். புலம்பெயர்ந்து கூட...???! ஏன்னா இப்பதான் ஒரு சிடி 0.05 யோரோக்கு இறங்கி இருக்குதாம்..! :lol:

சிலரின் நோக்கம் சமுதாய நலன் என்பதிலும் சமூகத்துக்க எப்படியாவது ஒன்றை வித்தியாசமா சொல்லிக்கொண்டு தங்களை நிலைநிறுத்தனும் என்பதுதான். அவை சொல்லுறதை ஆராய மக்கள் கூட்டம் தயாரில்லை என்பதற்கு இந்தச் சீடிக்களும்.. ஓசிப்பேப்பர்கள் போல தெருவோரக் குப்பைகளாக உள்ளதைக் காணலாம்.

சமூகம் என்பது ஒரு அறிவியல் மயப்படுத்தப்பட்ட குழுமம் ஒன்றிடமிருந்து எதிர்பார்க்கும் விடயங்களுக்கும் சில விளம்பர நோக்கம் கொண்ட மனிதர்களின் பிதட்டல்களில் இருந்து அது அடையாளம் கண்டு கொள்ளும் விடயங்களுக்கும் இடையில் பலத்த வேறுபாடு உண்டு. :o

Edited by nedukkalapoovan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.