Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இன்னொரு கடிதம்: ஆனையிறவிலிருந்து ஆனையிறவு வரை... அங்கிருந்து தமிழீழம் வரை...

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இன்னொரு கடிதம்: ஆனையிறவிலிருந்து ஆனையிறவு வரை... அங்கிருந்து தமிழீழம் வரை...

18.01.09

அன்பானவர்களே!

அண்மையில் உங்களுக்கு 'இன்னொரு கடிதம்" எழுதியிருந்தேன். பதில்களுள் பல கேள்விகளாகவே வந்திருந்தன. முதன்மையாய் இருந்தது, 'இப்போது நாங்கள் என்ன செய்ய வேண்டும்?" என்ற சிந்தனைக் கேள்வி.

எம்மைச் சுற்றிப் பின்னப்பட்டிருக்கின்ற இந்தச் சர்வதேசச் சதி வலை எவ்வாறு படிப்படியாக ஜளலளவநஅயவiஉயடடலஸ பின்னப்பட்டது என்பதையும், நாம் எப்படி அதற்குள் சிக்கிக்கொண்டோம்; என்பதையும் தெளிவாக விளங்கிக்கொள்வதே எம் முதற் கடமை.

அந்தச் சதி வலையின் ஒவ்வொரு முடிச்சுக்களும் - ஒவ்வொரு நகர்வுகளாய் - எம்மைச் சுற்றி எப்படிப் போடப்பட்டன என்பதை விளங்கிக்கொண்டால் தான், அவற்றை அவிழ்த்துச் செல்வது எப்படி என்பது பற்றியும் நாம் சிந்திக்க முடியும்.

பெரும் இராணுவ சாதனையைப் படைத்து புலிகள் முன்னேறினாலும், அல்லது நிலைமை மேலும் சிக்கலாகி அவர்கள் பின்னடைந்தாலும் -

இதுவரை என்ன நடந்தது என்பதை உற்று நோக்குவது, இனிமேல் நாம் செயற்படும் போது என்ன முட்டுக்கட்டைகள் எம் வழியில் போடப்படும் என்பதை நாம் விளங்கவும் அவற்றை மேவிக்கடந்து முன்னே செல்வது எப்படி என்பது பற்றிச் சிந்திக்கவும் உதவும்.

நிகழ்வு:

தமிழர்களுக்கு எதிரான இந்தச் சதிவலையை இந்தியாவும், மீதி உலகமும் ஜசநளவ ழக வாந றழசடனஸ இரண்டு முனைகளினூடாகப் பின்னுகின்றன.

முதலாவது - தமிழீழப் போர்க்களம். அது நேரடியான இராணுவப் படையெடுப்பு.

அடுத்தது - பன்னாட்டுப் போhர்க்களம். அது இராஜதந்திர அரசியல் கபட நகர்வுகள்.

முதலாவது - பல கற்களை வீசியாவது ஒரே காயை வீழ்த்தும் நோக்கம்: இலக்கு விடுதலைப் புலிகள் இயக்கம்.

அடுத்தது - ஒரே கல்லில் பல காய்களை வீழ்த்தும் எண்ணம்: இலக்கு பன்னாட்டுத் தமிழ் சமூகம்.

முதலாவதின் நோக்கம் - புலிகள் இயக்கத்தின் மரபு வழிப் போர்த் திறனை அழித்து, பின்னர் அதனை அரசியல் ரீதியாகவும் ஒதுக்கி - தமிழர்களை நேர்த்தியான அரசியல் பிரதிநிதித்துவம் அற்றவர்களாக்கிச் சிதைப்பது.

அடுத்ததின் நோக்கம் - வெளிநாட்டுத் தமிழர்களைப் புலிகள் இயக்கத்திலிருந்து பிரித்து, அரசியல் சக்தியற்றவர்களாக்கி, பின்னர் தமிழர்களது தேசியத் தன்மையையே சிதைப்பது.

இந்தப் போரில் பல பங்காளிகள் இருக்கின்றார்கள்: முதன்மைப் பங்காளி - இந்தியா. முக்கிய பங்காளி - மேற்குலகம். உப-பங்காளி மீதமுள்ள உலகம்.

இந்த இரண்டு போர்க் களங்களுமே அவற்றிற்குள் பல உப-முனைகளைக் கொண்டுள்ளன. ஒவ்வொரு முனையும் ஒவ்வொரு உடனடி இலக்கு நோக்கி நகர்த்தப்படுகின்றது.

நோக்கம்:

இந்த இரண்டு போர்க் களங்களையம் சேர்ந்த ஒட்டுமொத்தமான போரின் இறுதி இலக்கு - தமிழ் தேசிய சுயநிர்ணய உரிமைக் கோட்பாட்டைச் சிதைத்து, தமிழீழக் கோரிக்கையை அடிப்படை அற்றது ஆக்குவதாகும்.

ஆனால் ஏன் இப்படி எல்லோரும் சேர்ந்து தமிழர்களுக்கு எதிரான போரை நடாத்துகின்றார்கள்?...

இந்தியா ஒரு காரணத்திற்காக, அமெரிக்கா தலைமையிலான மேற்குலகம் வேறொரு காரணத்திற்காக, மேற்குலகிற்கு எதிரான கிழக்குலகம் இன்னொரு காரணத்திற்காக, இஸ்லாமிய உலகம் வேறொரு காரணத்திற்காக நடாத்துகின்றார்கள்.

ஆனால் - சுருக்கமாக - எல்லோரும் சேர்ந்து, தம் சொந்த கேந்திர அரசியல் நலன்களிற்காக - சிங்கள இனத்தைப் பகடைக் காய்களாகப் பாவித்து, தமிழினத்திற்கு எதிராகப் படை எடுக்கின்றார்கள்.

இந்தப் போரை நடாத்துகின்றவர்கள் மிகத் தெளிவாக ஒழுங்கமைத்து - நன்கு திட்டமிட்ட வழிமுறைகளினூடாக - படிப்படியாக, நிதானமாக அதைச் செய்கின்றார்கள்.

அதனால் - இந்தப் போருக்கு உட்பட்டு இருக்கின்ற தமிழர்களாகிய நாங்கள் இந்தச் சர்வதேசச் சதியின் பரிமாணங்களைப் போதிய ஆழத்திற்கு விளங்கிக்கொள்ள வேண்டும்.

இதுவரை காய்கள் எப்படி நகர்த்தப்பட்டன, இப்போது எப்படி நகர்த்தப்படுகின்றன என்பதை மிகவும் நுணுக்கமாகவும், நெருக்கமாகவும் நோக்கி நாம் ஆராய வேண்டும்.

அப்போது தான் - இனிமேல் நாங்கள் என்ன செய்ய வேண்டும் என்பதைச் சரியாகச் சிந்தித்து செயலாற்ற முடியும்.

நகர்வு - 1:

2001 இன் சூழலைப் பற்றி எனது முதற் கடிதத்தில் குறிப்பிட்டிருந்தேன். ஆனையிறவை வீழ்த்தி, புலிகள் முகமாலை வரை முன்னேறியதிலிருந்து கதை ஆரம்பிக்கின்றது.

போர்க் களத்தில் விடுதலைப் புலிகளின் கை என்றுமில்லாத அளவிற்கு ஓங்கியிருந்தது இந்தியாவிற்குப் பிடிக்கவில்லை@ பொருளாதாரத்தில் சிறிலங்கா அரசங்கத்தின் கை என்றுமில்லாத அளவிற்குத் தாழ்ந்திருந்தது மேற்குலகத்திற்கு விருப்பமில்லை.

புலிகளின் போர் எழுச்சியைக் கட்டுப்படுத்தவும், சிறிலங்காவின் பொருளாதார வீழ்ச்சியைத் தடுத்து நிறுத்தவும் அப்போது அவர்களுக்கு இருந்த ஒரே உடனடி வழி - சண்டையை நிறுத்த வைத்துப் புலிகளைப் பேச்சு மேசைக்கு இழுத்து வருவது தான்.

2002 இல் - இந்தியாவின் மன நிறைவான ஆசீர்வாதத்துடனும், மேற்குலகத்தின் ஏகோபித்த ஆதரவுடனும் சமரச முயற்சிகள் ஆரம்பமாகின. அனுசரணையாளர் ஆகியது நோர்வே. இணைத் தலைமை நாடுகள் என அதனுடன் கூடிக் கொண்டன அமெரிக்காவும், யூரோப்பின் யூனியனும், ஜப்பானும்.

சிறிலங்கா அரசாங்கத்திற்கும், புலிகள் இயக்கத்திற்கும் இடையில் எழுதப்பட்ட இந்தப் புரிந்துணர்வு உடன்படிக்கையானது - எல்லைகளை வரையறுத்து, பிரதேசங்களை அங்கீகரித்து - விடுதலைப் புலிகளால் நிர்வகிக்கப்பட்டு வந்த பொது முகாமைத்துவக் கட்டமைப்பினை ஒரு நடைமுறை அரசாங்கமாகவே ஜனுந-கயஉவழ ளுவயவநஸ அங்கீகரித்தது.

இந்த வரலாற்றுப் புரிந்துணர்வு உடன்படிக்கையை வரைந்துருவாக்கிய பெருமை பாலா அண்ணையையே சேரும். இருந்தாலும், அவரது எண்ணங்களுக்கு இடமளித்து - கடல் சார் விவகாரங்கள்; தவிர வேறு எதற்கும் முட்டுக்கட்டைகள் போடாமல் - உடன்படிக்கை கையெழுத்தாவதற்கு அனுசரணைகள் செய்ததது மேற்குலகம்.

அதற்கு ஒரு மௌனப் புன்னகையோடு ஒப்புதல் கொடுத்தது இந்தியா.

போர்ச் செயற்பாடுகள் அனைத்தையும் இடைநிறுத்திவிட்டு தமிழ் தேசிய போராட்டத்திற்கு சமரச வழியில் அரசியல் தீர்வு காணும் முயற்சிகளில் இறங்கினர் விடுதலைப் புலிகள்.

மேற்குலகும், இந்தியாவும் நியாயத்துடன் செயற்படுவர் என்று நம்பினர் தமிழ் மக்கள்.

நகர்வு - 2:

ஆனால் - இந்தப் புரிந்துணர்வு உடன்படிக்கை எழுதப்படும் வரை நல்லவர்களாக நடித்து, ஆசீர்வாதங்கள் வழங்கி, அனுசரணைகள் செய்த இந்தியாவும், மீதி உலகமும், அது நடைமுறைக்கு வந்த பின்னர் தனது சுயரூபத்தைக் காட்ட ஆரம்பித்தன.

ஓன்றன் பின் ஒன்றாக - தமிழர்களுக்குப் பாதகமான விடயங்கள் அரங்கேற்றப்பட்டன. சிலவற்றை சிறிலங்கா அரசம், சிலவற்றை மீதி-உலகமும், சிலவற்றை இருதரப்பும் சேர்ந்தும் அரங்கேற்றினர்.

1) போர் நிறுத்து உடன்படிக்கையில் ஒப்புக்கொண்டபடி, சிறி லங்கா அரசு -

உயர் பாதுகாப்பு வலயங்களை நீக்கவில்லை.

பாடசாலைகளிலும், வீடுகளிலும், கோவில்களிலும் குடியிருந்த தமது படையினரை அகற்றவில்லை.

போரினால் இடம்பெயர்ந்து அல்லற்பட்ட மக்கள் மீளக் குடியமர அனுமதிக்கவில்லை.

மீள்-கட்டுமான மற்றும் புனர்-வாழ்வுப் பணிகளுக்காக உருவாக்கப்பட்ட உப-குழுக்கள் செயற்பட இடமளிக்கவில்லை.

அந்த உப-குழுக்களால் கண்டறியப்பட்ட 75 வரையான வேலைத்திட்டங்களில் எதனையும் செய்ய உடன்படவில்லை.

2) விடுதலைப் புலிகளின் கடற்-கலங்கள் பல தடவைகள் தாக்கப்பட்டு போராளிகள் கொல்லப்பட்டனர்.

3) இவ்வளவும் நடந்துகொண்டிருந்த போது - நோர்வேயோ அல்லது இணைத் தலைமை நாடுகளோ, உடன்பட்ட விடயங்களைச் செய்து முடிக்கும் படி சிறி லங்கா அரசின் மீது அழுத்தங்கள் போடவில்லை.

எல்லாவற்றிற்கும் ஒரு மௌனப் புன்னகையோடு ஊக்கமளித்தது இந்தியா.

இந்த நேரத்தில் -

உடன்படிக்கையிலும், நடந்த பேச்சுக்களிலும் ஒப்புக்கொண்ட விடயங்கள் நடக்காதவரை, மீதிச் சுற்றுப் பேச்சுக்களுக்குப் போவதில் பயனேதும் இல்லை என முடிவுக்கு வந்தனர் புலிகள்.

இந்த இடத்தில் தான் - மேற்குலகம் அதிர்ச்சியடைந்தது.

சண்டை நிறுத்தத்தை முறித்துக்கொண்டு, புலிகள் மீண்டும் போருக்குப் போய் விடுவார்களோ என்று அது திகைப்புற்றது. புலிகள் திரும்பவும் போருக்குப் போனால், 2001 ஆம் ஆண்டின் கள நிலவரங்கள் தொடர்ந்தால், போர் வலுச் சமநிலையில் புலிகளின் கை இன்னும் ஓங்கினால், சிறிலங்காவின் 'சீர்நிலை" ஜளவயடிடைவைலஸ குலைக்கப்பட்டால், அதன் பொருளாதாரம் மேலும் வீழ்ச்சியுற்றால்...விளைவு என்னவாகிவிடுமோ என்று கவலையுற்றது மேற்குலகம்.

தமிழ் தேசியம் மீண்டும் பேரெழுச்சி பெற்றுவிடுமோ என்று அச்சமுற்றது இந்தியா.

ஆனால் - புரிந்துணர்வு உடன்படிக்கையை நடைமுறைப்படுத்தி, சொன்னவற்றைச் செய்யுமாறு சிறிலங்கா அரசின் மேல் அழுத்தங்களைப்; போடுவதற்குப் பதிலாக -

எது நடந்தாலும் அந்த உடன்படிக்கையில் இருந்து விலகாமல் இருக்கப் புலிகள் மீது மட்டும் அழுத்தங்களைப் பிரயோகிக்கும் வழிமுறையை இந்த உலகம் கையாண்டது.

அதை அது படிப்படியாகச் செய்தது.

நகர்வு - 3:

முதற் படியாக - அடிப்படையாக - தடைசெய்யப்பட்ட ஒர் அமைப்பாகப் புலிகள் இயக்கத்தின் மீது அனைத்துலக ரீதியாக சட்டங்களைக் கொண்டு வந்தது இந்த உலகம்.

இந்தப் போர் நிறுத்த உடன்படிக்கை எழுதப்படுவதற்கு முன்னர் இரண்டு நாடுகள் மட்டுமே புலிகள் இயக்கத்தைப் 'பயங்கரவாதிகள்" என்ற வரைமுறைக்குள் அடக்கியிருந்தன.

ஒன்று - இந்தியா. அடுத்தது - அமெரிக்கா.

இப்போது -

அரசியல் சமரச முயற்சிகளில் புலிகள் ஈடுபட்டிருந்த வேளையிலேயே, அவர்களை ஒரு 'பயங்கரவாத" இயக்கமாக ஏனைய மேற்கு நாடுகள் சட்டங்களைக் கொண்டு வந்தன.

பிரிட்டன், யூரோப்பியன் யூனியன், கனடா, ஓஸ்ரேலியா என ஒவ்வொரு நாடுகளாக, மேற்குலகம் புலிகள் இயக்கத்தைப் 'பயங்கரவாதிகள்"; ஆக்கியது.

போரை நிறுத்திவிட்டு, தமிழரது அரசியல் அபிலாசைகளை அடைவதற்கு சமரச முயற்சியில் ஈடுபட்டிருந்த ஒரு இயக்கத்தை, 'பயங்கரவாத" இயக்கமாகப் பட்டியலிடுவதற்கு நியாயமான எந்த ஒரு காரணமும் இந்த நாடுகளுக்கு இருக்கவில்லை. ஆனாலும், அவை அதைச் செய்தன.

தமக்கு எவ்வகையிலும் பயமுறுத்தலாக அமையாத - தமது நலன்களுக்கு எதிராக என்றும் செயற்படாத - ஒரு அமைப்பைப் 'பயங்கரவாத" இயக்கமாகப் பட்டியலிடுவதற்கு எந்தத் தேவையும் இந்த நாடுகளுக்கு இல்லை. ஆனாலும், அவை அதைச் செய்தன.

எல்லாவற்றுக்கும் ஒரு மௌனப் புன்னகையோடு ஊக்கமளித்தது இந்தியா.

புலிகள் இயக்கம் மீதான இந்தத் தடை ஒரு ஊடரளவநச-குண்டு போன்றது. ஒரே பெரிய குண்டு பலவாகப் பரிந்து பல முனைகளில் தாக்குவதைப் போல பல்பரிமாண நோக்கம் கொண்டது.

நகர்வு - 4:

இந்தத் தொடர் தடைகளின் தொடர்ச்சியாக -

'புரிந்துணர்வு உடன்படிக்கை"யின் ஒரு தரப்பை 'அரசாங்க"மாகவும், அடுத்த தரப்பைப் 'பயங்கரவாதிக"ளாகவும் தரம் பிரித்து நடாத்த ஆரம்பித்தது உலகு.

'யுத்த நிறுத்தம்" நடைமுறையில் இருந்த போதே கொண்டுவரப்பட்ட இந்தப் 'பயங்கரவாத"ப் பட்டியலிடுதல்களின் உடனடி நோக்கம் -

சமரச முயற்சியிலேயே ஈடுபட்டிருங்கள் என புலிகள் இயக்கத்தை அழுத்துவது.

பேச்சு மேசையில் கிடைப்பதை வாங்குங்கள் எனப் புலிகளை நிர்ப்பந்தம் செய்வது.

சிறிலங்கா அரசு உடன்பாட்டின்படி செய்யாது விடினும் சமரச முயற்சியிலிருந்து விலகாமலிருக்கப் புலிகளை எச்சரிக்கை செய்வது.

சமரச முயற்சிகளிலிருந்து விலகினால் எதிர்காலம் எல்லா வகையிலும் கடுமையானதாக அமையும் எனப் புலிகள் இயக்கத்தைப் பயமுறுத்தல் செய்வது.

அதே நேரத்தில் -

இந்தப் 'பயங்கரவாதப்" பெயர் சூட்டல்களின் பின்னாலிருந்த நீண்டகால உள்நோக்கம் -

மேற்சொல்லப்பட்ட எல்லாவற்றையும் மீறிப் புலிகள் புரிந்துணர்வு உடன்பாட்டிலிருந்து விலகினாலோ, அல்லது சிறிலங்கா அரசாங்கமே போரை ஆரம்பித்தாலோ -

ஒன்று - உள் நாட்டில் 'பயங்கரவாதத்திற்கு எதிரான போர்" நடாத்தும் சிறீலங்கா அரசுக்கு அனைத்து போர்-சார் உதவிகளையும் செய்வது.

இரண்டு - அனைத்துலக ரீதியாக தத்;தமது நாடுகளிலிருக்கும் தமிழ் செயற்பாட்டாளர்கள் மீது சட்ட நடவடிக்கைகளை எடுப்பதுடன், வெளிநாட்டுத் தமிழர்களிடமிருந்து புலிகளுக்கு எவ்வித உதவிகளும் போகாமல் தடுப்பது.

மூன்றாவதும், முக்கியமானதும் - வெளிநாட்டுத் தமிழர்கள் மீது அழுத்தங்கள் போட்டும், உள்நாட்டுத் தமிழர்கள் மீது செல்வாக்குச் செலுத்தியும் - அரசியல் ரீதியாகத் தமிழ் மக்களை விடுதலைப் புலிகளிடமிருந்து பிரிப்பது.

நகர்வு - 5:

விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கும் சிறிலங்கா அரசுக்கும் இடையில் செய்யப்பட்ட புரிந்துணர்வு உடன்படிக்கையானது, இரண்டு தரப்பையும் சம பங்காளிகளாக்கி, படைவலுச் சமநிலையைப் பேணுவதற்கு இரு தரப்பிற்கும் இடமளித்திருந்தது.

ஆனால் - புலிகள் இயக்கம்; தமது படை பலத்தைப் பேணுவதற்கு எல்லாவகையான முட்டுக்கட்டைகளையும், எல்லா வழிகளிலும் போட்டுக்கொண்டு, மறு புறத்தில் -

சிறிலங்காவின் பொருளாதாரத்தையும், அதன் இராணுவ இயந்திரத்தையும் முழுமையாகப் பலப்படுத்தும் காரியங்களை இந்தியாவும், மீதி உலகமும் மும்முரமாகச் செய்தன.

அதாவது - ஒரு பக்கத்தில், சீர்குலைந்து போயிருந்து சிறிலங்காவின் படைத்துறை, சமரச முயற்சிகள் நடந்து கொண்டிருந்த போதே முழுமையாகக் கட்டியெழுப்பப்பட, மறு பக்கத்தில், புலிகளின் ஆயுதக் கப்பல்கள் தாக்கப்பட்டு அவர்களுக்கு இடையூறுகள் போட்பட்டன.

போர்க் களம்:

முன்னரே போரை எதிர்பார்த்து - அதற்கு முன்னேற்பாடாக இவ்வளவு நகர்வுகளும் மிக நுணுக்கமாகத் திட்டமிடப்பட்டு, மிகத் துல்லியமாகச் செயலாக்கப்பட்ட பின்பு -

உள்நாட்டிலும் வெளிநாட்டிலுமாக - இரண்டு போர்;க் களங்களைத் தமிழர்களுக்கு எதிராகத் திறந்தன சிறிலங்காவும், மீதி உலகமும்.

ஏறக்குறைய 15 ஆண்டுகளுக்குப் பின்னர் - நல்ல தருணம் பார்த்துக் காத்திருந்த பின்னர் - ஓரளவுக்கு நேரடியான தலையீட்டை ஆரம்பித்தது இந்தியா.

பாகிஸ்தானின் மிரட்டல்களுக்கும், அதன் அணு குண்டுக்கும் பயந்ததைவிட, பிரபாகரனின் மனவுறுதிக்கும், அவரது தலைமையில் எழுச்சிகொண்ட தமிழ் தேசியத்திற்கும் பயந்தது இந்தியா.

இதுவரையும் மேற்குலகம் மேற்கொண்ட நகர்வுகளுக்கு - பின்னாலே இருந்து ஆசிகள் தந்த இந்தியா, இப்போது - மெல்ல மெல்ல - தானே தலைமை ஆட்டக்காரன் ஆகியது.

பூதாகரமாய் உருவெடுத்த சைனாவை எதிர்கொள்ள வழி தேடிய மேற்குலகம், இன்னொரு பூதமாய் வளர்ந்த இந்தியாவோடு - வேறு வழியின்றித் - தோள் சேர்ந்தது.

தமிழர்களுக்கு எதிரான போர்க் களங்கள் உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் திறக்கப்பட்ட போது, தென்னாசியாவில், இந்தியாவின் விருப்பமே மேற்குலகின் விருப்பம் ஆனது.

முதலாவது களம்:

தமிழீழப் போர்க் களம். அதன் அகன்ற பரிமாணங்கள் பற்றி எனது முதற் கடிதத்தில் குறிப்பிட்டிருந்தேன்.

அது நேரடி யுத்தம். மிக வெளிப்படையானது. முழுமையாக இராணுவ மயப்பட்டது. புலிகளின் மரபுவழிப் போர்வலுவை நிர்மூலம் செய்து, அவர்களது அரசியல் சக்தியையும் அழிக்கும் இலக்கைக் கொண்டது. மறைமுகக் காரணிகள் என பெரிதாக எதுவும் அற்றது.

புலிகளைப் 'பயங்கரவாதிகள" ஆக்கிவிட்டு, 'பயங்கரவாதத்திற்கு எதிரான" போர் என்ற பெயரில் - உலகமே பின்னாலே திரண்டு சிறிலங்கா படைகளை முன்னே தள்ளுகின்றனர்.

பணத்தை வழங்கி, ஆயுதங்களை வழங்கி, போரியல் ஆலோசனைகளை வழங்கி, போர்க் கருவிகளையும் அவற்றை இயக்குவதற்கு ஆட்களையும் வழங்கி, வானூர்தி ஒட்டிகளை வழங்கி, புலிகளின் ஆயுதக் கப்பல்கள் பற்றிய உளவுத் தகவல்களை வழங்கி, வெளிநாட்டுத் தமிழர்கள் மீது சட்ட அழுத்தங்களைப் போட்டு - எல்லோருமாகப் பின்னாலே திரண்டு சிறிலங்காவின் படைகளை முன்னாலே தள்ளுகின்றனர்.

அந்த நேரடிப் போர்க் களத்தைப் புலிகள் தான் வெல்ல வேண்டும். ஆனால், அந்தக் களத்தில் அவர்கள் வெல்லுவதற்குத் தேவையான எல்லா உதவிகளையும் எம்மாலான எல்லா வழிகளிலும் நாம் தான் செய்ய வேண்டும். அதனைத் தவிர, அதன் ஆழமான போரியல் விபரங்களில் நாம் கவனம் செலுத்துவதற்குப் பெரிதாக எதுவும் இல்லை.

அடுத்த களம்:

அனைத்துலகப் போர்க் களம். தமிழீழத்திற்கு வெளியே திறக்கப்பட்டிருக்கும் இந்தக் களத்தைத் தான் நாம் ஆழமாக - அலகு அலகாகப் பிரித்து - உற்று நோக்க வேண்டும்.

ஏனெனில் - இது தான் நமக்கான களம். நாம் போராட வேண்டிய களம். நாமே வெல்ல வேண்டிய களம். புலிகளை நம்பியிருக்கத் தேவையில்லாத களம்.

எமது தேசிய சுய நிர்ணய உரிமைக்கு ஜயேவழையெட ளுநடக-னுநவநசஅiயெவழைஸெ ஒரு சர்வதேச அங்கீகாரத்தைப் ஜஐவெநசயெவழையெட சுநஉழபnவைழைஸெ பெறுவதும், எமக்கெனத் தமிழீழத் தனியரசை அமைப்பதுமே எமது அரசியல் இலட்சியம்.

அN;த இலட்சியத்தை அடைவதற்காகவே விடுதலைப் புலிகள் இயக்கமும், எமது சார்பில், ஆயுதப் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றது.

தமிழர்கள் தமது தனியரசுக் கோரிக்கையை சர்வதேச அளவில் முன்னெடுப்பதற்கு முட்டுக்கட்டைகள் போடுவதற்கு நேரடியான எந்த வழியும் இல்லாத நிலையில், இந்த உலகு வேறு மார்க்கத்தைத் தேடியது.

அது கண்டுபிடித்த ஒரு வழி தான் - புலிகள் இயக்கத்தின் மீது உலகெங்கும் கொண்டுவரப்பட்ட அந்த ஊடரளவநச-குண்டு பாணியிலான தடை. அந்த தடையின் ஒரு இலக்கு - தமிழர்களால் உலகெங்கும் முன்னெடுக்கப்படும் 'தமிழீழம்" என்ற கோட்பாடு.

அதே தமிழீழக் கோரிக்கையை முன்வைத்துப் போராடும் விடுதலைப் புலிகளைப் 'பயங்கரவாத" இயக்கம் ஆக்கியதன் மூலமாக -

தனியரசைக் கோருவதும், சுய நிர்ணய உரிமையை வலியுறுத்துவதும் - அவை நியாயபூர்வமான அபிலாசைகளாக ஜடுநபவைiஅயவந யுளிசையவழைளெஸ இருந்தாலும் - அதே கோட்பாடுகளை ஒரு 'பயங்கரவாத" இயக்கமும் முன்வைப்பதால் -

அந்தக் கோட்பாடுகளை முன்னெடுப்பதே ஒரு பயங்கரவாத இயக்கத்தின் கருத்தை முன்வைப்பது போன்றதாகும் எனும் விதமான ஒரு அச்சச் சுழலை வெளிநாட்டுத் தமிழர்கள் மத்தியில் இந்த உலகு உருவாக்கியது.

அந்த வகையில் - தமிழீழத்தைக் கோருவதும், சுய நிர்ணய உரிமையை வலியுறுத்துவதும்;, இந்த உலகம் ஏற்றுக்கொள்ள மாட்டாத ஒரு கோட்பாடு என்ற ஒரு கருத்தையும் தமிழர்கள் மத்தியில் உருவாக்கி, அதனை நிராகரித்தது.

இதன் மூலமாக - தமிழீழம் பற்றிப் பேசினாலே 'பயங்கரவாத"ப் பட்டம் சூட்டப்பட்டு விடுவோம் என்ற பயத்தையும், அந்தப் பட்டம் சூட்டப்பட்டுவிட்டால் வேறு கருத்துக்கள் கூட சொல்ல முடியாமல் நாம் நிராகரிக்கப்பட்டுவிடுவோம் என்ற தயக்கத்தையும் தமது நாட்டுப் பிரஜைகளாக உள்ள தமிழர்கள் மத்தியிலேயே உருவாக்கியது.

இதன் விளைவாக - தமது சொந்த நாட்டுப் பிரஜைகளுக்கே, அவர்கள் தமது உணர்;வுகளையும், அபிலாசைகளையும் வெளிப்படுத்துவதற்கும், பேசுவதற்கும் உள்ள சுதந்திரத்திற்கு ஜகுசநநனழஅ ழக ளிநநஉh யனெ நஒpசநளளழைஸெ அந்தந்த நாட்டு அரசுகளே முட்டுக்கட்டைகளைப் போட்டன.

இவற்றின் முடிவாக - தமிழர்களுக்காக தமிழர்களுக்குள் நடாத்தப்படும் கூட்டங்களில் தமிழீழம் பற்றியும், புலிகள் இயக்கம் பற்றியும் வானுயரப் புகழும் நாங்கள், அதை உண்மையிலேயே சொல்ல வேண்டிய எங்களது நாட்டு அரசியல் தலைவர்களுடனான சந்திப்புக்களில், எதுவும் சொல்ல முடியாதவர்களாய் வாயடைக்கப்பட்டோம்.

இவ்வாறான சூழலில் தான் - தமிழீழம் பற்றிப் பேசினால் தமது பேச்ச எடுபடாது என்ற முடிவுக்கு வந்த எமது வெளிநாட்டுத் தமிழ் செயற்பாட்டாளர்கள் தத்தமது நாட்டு அரசுகளை அணுகுவதற்கு புதிய ஒரு தந்திரோபாயத்தைக் கையிலெடுத்தார்கள்.

அது என்னவெனில் - எமக்குத் தேவையானதாக இருந்தாலும், மேற்குலகத்திற்குப் பிடிக்காத விடயங்களைப் பற்றிப் பேசுவதைத் தவிர்த்துவிட்டு, எமக்கு முக்கியமற்றதாக இருந்தாலும் மேற்குலகத்திற்குப் பிடித்த விடயங்களை மட்டுமே மேற்குலகத்துடன் பேசுவது.

அதாவது - தமிழ் தேசிய இனப் போராட்டத்தின் நிரந்தர முடிவுக்கான எமது அடிப்படை அரசியல் இலட்சியம் பற்றிப் பேசுவதைத் தவிர்த்துவிட்டு, அந்தப் போராட்டத்தின் வழியில் நாம் சந்திக்கும் துன்பங்களைப் பற்றிய தற்காலிக மனிதாபிமானப் பிரச்சனைகளை ஜர்ரஅயnவையசயைn ஊசளைளைஸ பற்றி மட்டும் பேசுவது.

இந்த இடத்தில் தான் -

தனது ஆறு ஆண்டுகாலம் நீண்ட - பொறுமையான - நுட்பம் மிகுந்த - நகர்வுகளினதும், நடவடிக்கைகளினதும் துல்லியமான வெற்றியை மேற்குலகம் பெற்றது.

மனிதாபிமானப் பிரச்சனைகளுக்கு உதவி வேண்டி நாம் அதன் காலடியில் விழ வேண்டும் என அது காத்திருந்தது. அப்படி விழுந்து - நாங்கள் அவற்றைச் சார்ந்து இருக்க வேண்டும் என எதிர்பார்த்திருந்தது. அப்படிச் சார்ந்திருந்து - அது சொல்வதையே கேட்கும் ஒரு நிர்ப்பந்த சூழலுக்குள் எம்மைச் சிக்க வைக்க அது விரும்பியிருந்தது.

அப்படியாக - மனிதாபிமானப் பிரச்சனைகளை பற்றி மட்டும் பேசும் முடிவை நாம் எடுத்த போது, தனது விருப்பத்தில் வெற்றி கண்ட மேற்குலகு, எம் மீது ஒரு மாய வலையை விரித்தது.

எமது கஸ்டங்களைச் சொல்லி நாம் அழும் போது அக்கறையோடு கேட்பது போல நாடகமாடியது. தனக்கு ஏற்கெனவே தெரிந்த விடயங்களையே - நாம் சொல்லும் போது - ஏதோ புதிதாகக் கேட்பது போலப் பாசாங்கு செய்தது.

நாமும் - "மேற்குலகிற்குப் பிடித்த விடயங்களைப் பேசும் போது அது அக்கறையோடு கேட்கின்றதே" என்று, அதற்குத் தெரிந்த விடயங்களையே பேசிப் பேசி, கடைசியில் தமிழர்களுக்கு என்ன தேவை என்பதைச் சொல்லுவதை விடுத்துவிட்டு, மேற்குலகத்திற்கு என்ன பிடித்ததோ அதை மட்டுமே பேசப் பழகிக்கொண்டோம்.

இப்பொழுது -

முப்பது ஆண்டு காலம் போராடியதன் பின்பு, நூராயிரம் மக்களை உயிர்ப்பலி கொடுத்த பின்பு, இருபத்தி மூவாயிரம் பேராளிகளது கல்லறையின் மேல் நின்று கொண்டு -

'தமிழீழத் தனியரசு" பற்றிப் பேசுவதை நாங்கள் தவிர்க்கின்றோம். தமிழரின் சுய நிர்ணய உரிமை பற்றிப் பேசுவதற்கு நாங்கள் தயங்குகின்றோம். 'தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கமே எமது ஏக அரசியல் பிரதிநிதிகள்" என்று வெளிப்படையாகச் சொல்லுவதற்குப் பின்னடிக்கின்றோம்.

சொல்லப்பட வேண்டிய இவற்றைச் சொல்லி, எமக்கான அங்கீகாரத்தைத் தலைநிமிர்ந்து கோருவதைத் தவிர்த்துவிட்டு - உணவும், உடையும், மருந்தும், போர் நிறுத்தமும் வேண்டி - பிச்சைக்காரர்கள் போல - உலகத்தின் முற்றத்தில் கையேந்தி நிற்கின்றோம்.

வன்னித் தமிழர்கள் அழிகின்றார்கள், கிழக்குத் தமிழர்கள் படுகொலையாகின்றார்கள், வடக்குத் தமிழர்கள் கடத்தப்படுகின்றார்கள், கொழும்புத் தமிழர்கள் காணாமல் போகின்றார்கள், மலையகத் தமிழர்கள் கைதாகின்றார்கள் என்று நாம் புலம்புகின்றோம்.

இந்த உலகத்திற்கு ஏற்கெனவே தெரிந்திருக்கும் எங்கள் துயரங்களைத் திரும்பவும் சொல்லுவதற்காக ஊர்வலங்கள் வைத்து, மட்டைகள் பிடித்து, கோசங்கள் எழுப்பி, கடிதங்கள் எழுதி, மனுக்கள் அனுப்பி - எம்மையே நாம் ஏமாற்றுகின்றோம்.

போராட்டத்துக்கு அடிப்படையான 'தமிழீழம்" என்ற தீர்வை வலியுறுத்துவதை விட்டுவிட்டு, போரை நிறுத்தும்படி மன்றாடுகின்றோம்.

பிரபாகரனும் அவருடைய போர் வீரர்களும் தலை குனியாது நிகழ்த்தும் கம்பீர யுத்தத்தின் தார்ப்பரியங்களை நாம் கேவலப்படுத்துகின்றோம்.

ஆனால் - இந்த நாளுக்காகத்தான் இந்த உலகமும், இந்தியாவும் காத்திருந்தன, தமது கடைசி நகர்வை மேற்கொள்வதற்காக.

அந்தக் கடைசி நகர்வு தான் - புலிகள் இயக்கத்தின் மீது கொண்டுவரப்பட்ட அந்த ஊடரளவநச-குண்டு பாணியிலான உலகத்-தடையின் கடைசி இலக்கு.

அது - வெளிநாடுகளில் வாழும் தமிழர்களைப் புலிகளிடமிருந்து பிரிப்பது. உள்நாட்டில் வாழும் தமிழர்களின் மீது போலித் தீர்வு ஒன்றைத் திணிப்பது.

ஒரு புறம் - மனிதாபிமானப் பிரச்சனைகளைச் சொல்லித் தம்மைத் தேடி வந்த வெளிநாட்டுத் தமிழர்களை, மானிட நேய முகத்தைக் காட்டி மயக்கியது இந்த உலகம்.

மறு புறம் - 'ஈழத்தமிழர்களைக் காப்பாற்று!” என்று பொங்கியெழுந்த தமிழகத் தமிழர்களை, 'இதோ முகர்ஜியை அனுப்புகின்றோம், மேனன் போயிருக்கின்றார்" என்று கூறி அடக்கியது இந்தியா.

இப்போது -

தமிழர்களின் அவலங்களைத் தீர்ப்பதாகச் சொல்லிக்கொண்டு மேற்குலகும், அவர்களை அழிவிலிருந்து காப்பதாகக் கூறிக்கொண்டு இந்தியாவும் காலத்தை இழுத்தடிக்கின்றன.

கிளிநொச்சியின் வீழ்ச்சிக்காய் காத்திருந்து, ஆனையிறவின் வீழ்ச்சிக்காய் காத்திருந்து - இப்போது, முல்லைத்தீவினதும், புதுக்குடியிருப்பினதும் வீழ்ச்சிக்காய் காத்திருக்கின்றன.

முப்படைகளையும், நெடுந்தூரப் பீரங்கிகளையும் வைத்திருக்கும் புலிகளின் மரபுவழிப் போர்வலுவை உடைத்து, மீண்டும் அவர்களை ஒரு கெரில்லாப் படையாக காட்டிற்குள் பதுங்க வைக்கும் நம்பிக்கையோடு, சிறிலங்காவுக்கு காலத்தை எடுத்துக் கொடுக்கின்றன.

அதே நேரத்தில் - இன்னொரு பக்கத்தில் - விடுதலைப் புலிகளோடு; இருக்கும் வரை தமிழர்களது துன்பங்கள் எதுவும் நீங்கப் போவதில்லை என்ற சமிக்ஞையை கொடுத்து -

'புலிகள் அழிந்து போவதைப் பற்றி கவலைப்படாதீர்கள். உங்கள் பிரச்சனைக்கு நாங்கள் நல்ல தீர்வைப் பெற்றுத் தருகின்றோம், நீங்கள் புலிகளை விட்டு விலகுங்கள்" என்று தமிழர்களுக்குச் சொல்லாமல் சொல்லுகின்றன.

இந்த அணுகுமுறையோடு -

முதலாவது, அது சரிவராமல் போனால் அடுத்தது என இரண்டு நோக்கங்களோடு இந்தியாவும் இந்த உலகமும் செயற்படுகின்றன:

புலிகளிடமிருந்து தமிழர்களையும், தமிழர்களிடமிருந்து புலிகளையும் பிரித்து, விடுதலைப் புலிகளுக்கு உதவிகள் செல்வதைத் தடுப்பது. உதவிகள் போகாமல் நிர்க்கதியாகி நிற்கும் புலிகளை இராணுவ ரீதியில் அழிப்பது. புலிகள் அழிந்த பின் - கேட்பதற்கு யாருமற்ற நிலையில் தமிழர்கள் இருக்கும் போது, பிச்சை போல, தீர்வே இல்லாத ஒரு தீர்வை அவர்கள் மீது திணிப்பது.

வெளிநாட்டுத் தமிழர்களது நிதியுதவியில் தான் புலிகள் இயக்கம் தங்கியிருக்கின்றது என்பதால், வெளிநாட்டுத் தமிழர்களைக் கபடமாய்க் கவர்ந்து, அவர்கள் மூலமாக புலிகள் இயக்கத்தின் மீது அழுத்தங்களைப் போடுவது. அந்த அழுத்தத்தின் மூலமாக – விடுதலைப் புலிகளை தமது வழிக்குக் கொண்டு வந்து, பிச்சை போல, தீர்வே இல்லாத ஒரு தீர்வை ஏற்க வைப்பது.

இந்த இரண்டு நோக்கங்களில், ஏதாவது ஒன்றை அடையும் எண்ணத்தோடு தான் இந்தியாவும் இந்த உலகமும் செயற்படுகின்றன.

இப்போது -

உடனடியாக நாம் செய்ய வேண்டியது என்ன என்ற அந்த மிக முக்கியமான கேள்வியை எம்மைப் பார்த்தே நாம் கேட்போம்.

இந்தியாவில் காங்கிறஸ் ஆட்சி இறங்கினால் என்ன நடக்கும் எனக் காத்திருக்கவோ, அமெரிக்காவில் ஒபாமாவின் ஆட்சி ஏறினால் என்ன நடக்கும் எனக் காத்திருக்கவோ எமக்கு இப்போது நேரம் இல்லை.

விடுதலைப் புலிகளின் இராணுவ வெற்றிக்காகக் காத்திருக்கவும் எமக்கு இனி நேரம் இல்லை.

போராட்டத்தை உடனடியாக நாமே கையில் எடுப்போம்.

சரியான நகர்வுகளை நாம் தெளிவாக மேற்கொண்டால், புலிகளி;ன் போர் வெற்றிக்கே நாம் வழியமைக்கலாம்.

அல்லது - நாம் காத்திருப்பதைப்போல, புலிகள் இயக்கம் ஒரு மாபெரும் இராணுவ வெற்றியைச் சாதித்தால், அதற்கெதிராக இந்த உலகமும், இந்தியாவும் முன்னரைப் போல குறுக்கே வர முடியாத ஒரு சூழலை உருவாக்கலாம்.

எப்படி?

எம் முன்னால் இரண்டு பணிகள் உள்ளன. ஒன்று உடனடியாகச் செய்யப்பட வேண்டியது. அடுத்தது, மிக உடனடியாகச் செய்யப்பட வேண்டியது.

உடனடியாகச் செய்யப்பட வேண்டியவை என்ன என்ன என்பதை நீங்களும் சிந்தித்து எமக்கு எழுதுங்கள், நானும் சிந்திக்கின்றேன்.

அவற்றைச் சிந்திக்கின்ற அதே வேளையில், பெரிதாகச் சிந்தனை எதுவும் தேவைப்படாத - மிக உடனடியாகச் செய்;யப்பட வேண்டிய பணியை இப்போதே சொல்லிவிடுகின்றேன்.

சுருக்கமாகச் செல்வதானால் - உலகெங்கும் இருக்கும் இந்தியத் தூதுவரகங்களைத் தமிழர்கள் உடனடியாக 'முற்றுகை" இட வேண்டும்.

இங்கே நான் 'முற்றுகை" என்று குறிப்பிடுவது மனிதர்கள் கூடி வளைப்பதை மட்டுமல்ல. எம் எண்ணங்களால், கருத்துக்களால், ஆக்கபூர்வமான செயல்களால் முற்றுகை இட வேண்டும்.

எமது பிரச்சனையில் இந்தியாவே இப்போது முதன்மையானதும் முக்கியமானதுமான ஆட்டக்காரர்: தமிழர் போராட்டத்தை இந்தியா எதிர்த்தால், முழு மேற்குலகமும் எதிர்க்கும். இந்தியா அங்கீகரித்தால், முழு மேற்குலகமும் ஆதரிக்கும்.

தென்னாசியாவில் இன்று இந்தியாவே எல்லாம்;: இந்தியாவை மீறி இந்து சமுத்திரத்தின் அலை கூட அசையப் போவதில்லை.

பாகிஸ்தானோடு பரவசப்பட்டு, சைனாவோடு சல்லாபித்துக் கொண்டிருக்கும் சிறிலங்காவுக்கு, தனது நாட்டின் ஏழு கோடி மக்களினது விருப்பமின்மையையும் மீறி இந்தியா உதவி செய்வது இரண்டு காரணங்களுக்காக -

ஒன்று - 'எங்கள் நாட்டுப் பிரதமரைக் கொன்றவர்களை நாம் சும்மாவிடுவதா?" என்ற அர்த்தமற்ற வரட்டுக் கௌரவம்.

அடுத்தது - தமிழீழத் தனிநாடு தென்னிந்தியாவில் தனியரசுக் கிளர்ச்சிகளை உருவாக்கும் என்ற அடிப்படையற்ற பயம்.

தனது தென் கோடியில் ஒரு பெரும் காப்பரனாகவும், என்றும் தளம்பல் அற்ற ஒரு வரலாற்று நண்பனாகவும் இருக்கக்கூடிய ஒரு மக்கள் இனத்தை அழிக்க இந்தியா முன்னின்று உதவுவதற்கு வேறு எந்த உருப்படியான காரணமும் இல்லை.

செய்தி:

முக்கியமான மூன்றே மூன்று விடயங்களை இந்தியாவிடம் நாம் - மீண்டும் மீண்டும் - எல்லா வழிகளிலும் வலியுறுத்த வேண்டும்.

அந்த மூன்று விடயங்களையும் செய்யுமாறு - கடுமையான அழுத்தங்களைத் தொடர்ச்சியாகப் பிரயோகிக்க வேண்டும்.

தமிழீழப் போராட்டத்தை அங்கீகரித்து, தனியரசு உருவாக உதவுங்கள்.

அது தான் இந்தியாவின் பாதுகாப்புக்கும் நிபந்தனையற்ற உத்தரவாதம்.

தமிழீழ விடுதலைப் புலிகளே தமிழீழ மக்களின் ஏக அரசியல் பிரதிநிதிகள்:

வேறு எவரையும் எம் பிரதிநிதிகளாக நாம் எற்றுக்கொள்ள மாட்டோம்.

இந்திய தேசிய நலன்களுக்கு எதிராகப் புலிகள் எப்போதும் செயற்படவில்லை.

புலிகள் மீதான தடையை நீக்கி இராஜதந்திரத் தொடர்புகளை எற்படுத்துங்கள்.

சிறிலங்காவுக்கான அனைத்து போர்-சார் உதவிகளையும் உடன் நிறுத்துங்கள்.

அது உங்களின் நம்பிக்கையான நண்பனாக எப்போதுமே இருந்ததில்லை.

செயல் - 1:

உலகிலுள்ள ஒவ்வொரு இந்தியத் தூதுவரகத்தையும் நாம் அணுக வேண்டும். ஒவ்வொரு நாடுகளிலும் உள்ள தமிழ் செயற்பாட்டாளர்கள், தேர்ந்த பிரதிநிதிகள் குழக்களை ஜனுநடநபயவழைஸெ உருவாக்கி அந்தந்த நாடுகளிலுள்ள இந்தியத் தூதுவர்களைச்; சந்தித்து இந்த மூன்று விடயங்களையும் சொல்ல வேண்டும். இன்றே இதற்கான பணிகளைத் தொடங்க வேண்டும்.

ஒரு தடவையோ, இரு தடவையோ, மூன்று தடவையோ போய்விட்டு விட்டுவிடக் கூடாது. தொடர்ச்சியாக ஒவ்வொரு வாரமும் செல்ல வேண்டும். அவர்கள் மீது அழுத்தங்களை இடைவிடாது போட வேண்டும். எங்கள் கோரிக்கைகள் நிறைவேறும் வரை நாமும் ஓயப் போவதில்லை என்ற தெளிவை அவர்களுக்கு ஊட்ட வேண்டும்.

தற்போதைய போரை நிறுத்துவது பற்றியும், வன்னி மக்கள் எதிர்கொண்டு நிற்கும் மனிதப் பேரவலத்தைப் பற்றியும், அவர்கள் எதிர்நோக்கியிருக்கும் பெரும் இனப் படுகொலை ஆபத்தைப் பற்றியும் சொல்லுகின்ற அதே வேளையில் -

இந்த ஒவ்வொரு சந்திப்பினதும் கடைசி 40 வீதமான நேரம், இந்த மூன்று விடயங்களையும் வலியுறுத்துவதற்கு ஒதுக்கப்பட வேண்டும்.

இந்த விடயங்களை நாம் முன்வைக்கும் போது - பல மழுப்பல் கதைகளை இந்திய தூதுவர்களும், அங்குள்ள அதிகாரிகளும் எமக்குச் சொல்லுவார்கள்.

'சோனியா காந்தி இருக்கும் வரை இவை எதையும் செய்ய முடியாது," 'அவர் பழைய கோபத்தில் இருக்கின்றார்," 'டெல்லியிலுள்ள காங்கிறஸ் தலைவர்கள் இவற்றுக்கு ஒத்துக்கொள்ள மாட்டார்கள்," 'பிரபாகரன் மீது எல்லோரும் கோபத்தில் இருக்கின்றார்கள்," என்ற விதமாக ஆயிரத்தெட்டுக் கதைகளை அடுக்குவார்கள்.

'பிரபாகரன் இல்லாமல் போனால் அடுத்ததாக யார் வருவினம்?," 'அடுத்த இடத்தில யார் இருக்கினம் என்று?" என்று கேள்விகள் கேட்பார்கள். ஏதோ, பிரபாகரன் இல்லாமல் போனால் தமிழருக்கு விடிவு கிடைத்துவிடும் என்ற எண்ணத்தை எமக்கு ஊட்டுவது போல நடிப்பார்கள்.

ஆனால், நாங்கள் திடமாகவும், ஒரே சீராகவும் இருந்து, தொடர்ச்சியாக எமது அந்த மூன்று கோரிக்கைகளையும் திரும்பத் திரும்ப வலியுறுத்த வேண்டும்.

செயல் - 2:

இந்தியத் தூதுவரகங்களின் முன்னால், இந்த மூன்று விடயங்களையும் வலியுறுத்தி பேரணிகளை தொடர்ந்து நிகழ்த்த ஆரம்பிக்க வேண்டும். இந்த முயற்சியை ஒவ்வொரு நாடுகளிலும் உள்ள தமிழ் செயற்பாட்டாள்கள் மிக உடனடியாக ஒழுங்கமைக்க வேண்டும்.

ஆகக் குறைந்தது ஆயிரம் பேராவது ஒவ்வொரு தடவையும் அங்கு திரள வேண்டும். பேரணிகளின் முடிவில், தூதுவரையும், தூதுவரக அதிகாரிகளையும் வெளியில் அழைத்து எமது கோரிக்கைகளைக் கையளிக்க வேண்டும். எமது கோரிக்கைகள் நிறைவேறாது விட்டால், நாம் அடங்கிப் போக மாட்டோம் என்பதையும் உணர்த்த வேண்டும்.

ஆனால், இவையல்ல இங்கே முக்கியம்.

முக்கியமானது என்னவெனில் - பேரணிகள் ஒழுங்கு செய்வதற்கு ஒதுக்கப்படும் சக்தியின் அதே அளவு, அல்லது அதைவிட அதிகமான அளவு சக்தி ஊடகங்களை அந்த நிகழ்வுக்கு வரவைப்பதில் செலவிடப்படவேண்டும். நான் இங்கே தமிழ் ஊடகங்களைக் குறிப்பிடவில்லை.

பேரணிகளை வைத்துவிட்டு, சும்மா 'புதினத்"திலும், 'தமிழ்நெற்"றிலும் மட்டும் 'சங்கதி"களைப் 'பதிவு" செய்து, படங்களைப் போடுவதில் எந்தப் பலனும் இல்லை.

அந்தந்த நாடுகளிலுள்ள தமிழர்களது-அல்லாத ஊடகங்களை அங்கு வரவழைக்க வேண்டும். இந்த மூன்று கோரிக்கைகளையும் அவர்களுக்கு விளக்கி - வலியுறுத்தி - அந்த ஊடகங்களை நாம் தெளிவுபடுத்த வேண்டும்.

பன்னாட்டு ஊடகச் செய்திகள் தான் இந்தியாவின் மீதும், இந்தியத் தூதுவர்கள் மீதும் அழுத்தங்களை அதிகரிக்கும். அதே வெளிநாட்டு ஊடகச் செய்திகள் தான் அந்தந்த நாட்டு அரசுகளின் கவனத்தையும் ஈர்க்கும். ஏதாவது செய்தாக வேண்டிய நிர்ப்பந்தத்தை இந்தியாவுக்கும், அந்தந்த நாடுகளுக்கும் ஏற்படுத்தும்.

எந்த ஒரு மாபெரும் பேரணியின் பலனும் - அதற்குப் பன்னாட்டு ஊடகங்களில் கிடைக்கும் இடத்தில் தான் தங்கியுள்ளது.

செயல் - 3:

கும்பல் கும்பலாக மின்னஞ்சல்களை ஜநு-ஆயடைஸ அனுப்புவது எந்தப் பலனையும் தராது. அவற்றைத் திறந்து பார்க்கவே மாட்டார்கள். திறக்காமலேயே 'குப்பைத் தொட்டிக்குள்" போட்டுவிடுவார்கள்.

தாள்களில் கடிதங்களை எழுதி இந்தியத் தூதுவரகங்களுக்கு இலட்சக் கணக்கில் நாம் அனுப்ப வேண்டும். இந்த முயற்சியை ஒவ்வொரு நாடுகளிலும் தமிழ் செயற்பாட்டாள்கள் மிக உடனடியாக ஒழுங்கமைக்க வேண்டும்.

சோனியா காந்தி அம்மையாருக்கும், மன்மோகன் சிங் ஐயாவுக்கும், அந்தந்த நாடுகளிலுள்ள இந்தியத் தூதுவர்களுக்கும் - சுருக்கமான ஒரு பக்கக் கடிதங்களைத் தனித்தனியாக எழுதி, உறைகளில் இட்டு இலட்சக் கணக்கில் அனுப்ப வேண்டும்.

அவ்வளவு பிரமாண்டமான தொகையில் வந்து குவியும் கடிதங்களை அவர்கள் திறந்து பார்த்தே ஆவார்கள்.

முக்கியமாக - அந்தக் கடிதங்கள் எமது இந்த மூன்று கோரிக்கைகளையும் உறுதியாக வலியுறுத்த வேண்டும். இந்திய அரசின் வேறு எந்த நடவடிக்கையையும் நாம் ஏற்றுக்கொள்ள மாட்டோம் எனத் தெளிவாகச் சொல்ல வேண்டும். தமிழீழத்தின் பிறப்பே இந்தியாவின் நலன்களையும் பாதுகாக்கக்கூடியது என்பதை ஆதரபூர்வமாக வலியுறுத்த வேண்டும்.

இந்தியாவை நோக்கி - ஒரு பக்கத்தில் - மிக உடனடியாகச் செய்ய வேண்டிய இந்த மூன்று பணிகளையும் செய்து கொண்டே, நாம் உடனடியாகச் செய்ய வேண்டிய வேறு பணிகளைப் பற்றிச் சிந்திக்க வேண்டும். நீங்களும் சிந்தித்து எழுதுங்கள்@ நானும் சிந்திக்கின்றேன்.

தி. வழுதி

http://www.tamilnaatham.com/articles/2009/...er_20090117.htm

  • கருத்துக்கள உறவுகள்

சிந்தித்து துரிதகெதியில் செயலில் இறங்கவேண்டிய விடயம்.

இணைப்புக்கு நன்றி!

சிறந்த ஒரு கடிதம்...கண்டிப்பாக செய்ய வேண்டியன எனச் சொல்லப்பட்டுள்ளவற்றை நான் இன்றே ஆரம்பித்தல் வேண்டும்

  • கருத்துக்கள உறவுகள்

இணைப்புக்கு நன்றி.எல்லோரும் இதை வாசித்தால் இன்னும் நல்லம்.

ஏன் இப்படி எல்லோரும் சேர்ந்து தமிழர்களுக்கு எதிரான போரை நடாத்துகின்றார்கள்?...

இந்தியா ஒரு காரணத்திற்காக, அமெரிக்கா தலைமையிலான மேற்குலகம் வேறொரு காரணத்திற்காக, மேற்குலகிற்கு எதிரான கிழக்குலகம் இன்னொரு காரணத்திற்காக, இஸ்லாமிய உலகம் வேறொரு காரணத்திற்காக நடாத்துகின்றார்கள்.

சிறி லங்காவில் தேசிய இனங்களிற்கான போரை அடக்கி ,நாகரிகங்களிற்கிடையே ஆன (மேற்குலக கிறிஸ்தவ நகரிகம், இஸ்லாமிய நாகரிகம் ,பெளத்த நாகரிகம் ,இந்து நகரிகம்)போரை உருவாக்குவதற்க்கு பிள்ளையார் சுழி போடுகிறார்கள்

Edited by putthan

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி இணைப்புக்கு. எனது சிறிய பங்களிப்பு நிச்சயம் உண்டு.

எம்மை சுற்றி எதிரிகள் தான் உள்ளார்கள் போல் உள்ளது.

இதில் கூறப்பட்ட விடயங்கள் யதார்த்தமானவை

நாம்தான் காலத்தை எமக்கு சாதகமாய் மாற்றவேண்டும். அதுக்கு அடியேனுடைய பங்களிப்பும் முடிந்தளாவுக்கு உண்டு.

திரு வழூதி அவர்களின் மிகப்பெரிய உண்மையை விளக்கமாக சொல்லியுள்ளார்.. மிக்க நன்றி..

எமது மக்கள் எல்லோரின் பார்வைக்கும் போய் எவ்வளவு நாம் ஏமாற்றப்பட்டுள்ளேம் என்பதை உணர்ந்து விழிப்புணர்வு பெற்று அடுத்த நடவடிக்கைக்கு தயாராகவேண்டும்.. இந்தியாவில் மத்திய அரசினுள் தமிழ்மக்களுக்கு எதிரான நாட்டின் கொள்கைகள் மேற்கொள்ளும் அதிகாரிகளில் (ரோ உட்பட) மாற்றங்களை ஏற்படுத்தாத வரையில் இந்தியாவில் திருமாவளவின் பிரதமர் ஆனால் கூட ஒன்றும் நடவாது என்பது எனது தனிப்பட்ட முடிவு..

எனவே முதலில் தமிழகத்தின் செல்வாக்கு மத்தியரசில் நிலைனாட்டப்பட்டு அதிகாரிகள் மாற்றப்படவேண்டும், அத்துடன் இலங்கை ஊடுறுவாமல் பார்கவேண்டும்..

வழூதி சொல்லியமாதிரி வெளினாட்டு பத்திரிகைகளுக்கு சரியான விளக்கங்கள் கொடுக்கப்பட்டு இந்திய தூதரங்களுக்கு தொடர்ச்சியான முற்றுகைப்போரட்டங்கள், விளக்கங்களை செய்து கொண்டு கடிதங்களை தொடர்ந்து அனுப்பி பார்ப்போம்... சிலவேளை அடிக்கு மேல் அடி அடித்தால் அம்மியும் நகரலாம்...

முயற்சி செய்து பார்ப்போம்...உங்கள் கருத்துக்களையும் முன்வையுங்கள்....

:)

இணைப்புகு நன்றி வழுதி அவர்களே...

எம்மால் இயன்றவற்றைச் செய்வோம்.

  • கருத்துக்கள உறவுகள்

வழுதியின் இக்கடிதத்தில் பல உண்மைகள் இனங்காட்டப்பட்டுள்ளன. எத்தகைய திட்டமிடலூடாக மற்றவர்கள் தம்மை ஒழுங்கமைத்து செயற்பட்டிருக்கிறார்கள். ஆக தமிழீழம் என்ற தனியரசை வேரோடு பிடுங்க எடுக்கப்பட்டதாகவே அத்தனை நகர்வுகளும் அமைக்கப்பட்டிருக்கின்றன. தமிழீழத் தனியரசின் அரசயந்திரத்தின் செயற்பாடுகளை ஒடுக்குவதற்காகவே ஏழு நாடுகளின் இராணுவ வல்லுனர்களின் கூட்டுமுயற்சி பயன்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கிறது. எம் மக்களின் கண்கொண்டு பார்க்கமுடியா அவலச் சாவுகளைக் கண்ணுற்றும் தெரியாதது போல் பாசாங்கிடும் போக்கிற்குப் பின்னால் எவ்வளவு சதிகள் அரங்கேறிக் கொண்டிருக்கின்றன. காலம் அறிந்து தெளிவை உருவாக்கும் ஆழமான நோக்கு. ஒவ்வொரு தமிழரும் அறிய வேண்டிய உண்மைகள் இவை

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பகிர்வுக்கு நன்றிகள். நம் உறவுகள் அனைவரும் படிக்கவேண்டியது...

(இடையிடையே வரும் ஆங்கிலப்பதங்கள் தமிழில் தெரிவதால் படிக்க இயலவில்லை. முடிந்தால் மாற்றி உதவுங்கள்.)

  • கருத்துக்கள உறவுகள்

புலம்பெயர் தாயக உறவுகளே உங்களின் கைகளில்தான் எங்கள் அடிமை வாழ்க்கை உடைத்தெறியப்படும்...... தலைவனின் காலத்தில் வீர வரலாறு படைப்போம்!

"உலக அரங்கிற் பல்வேறு நாடுகளின் தலைநகரங்களில் அரங்கேற்றப்பட்ட இந்த அமைதிப் பேச்சுக்கள், தமிழ் மக்களின் அன்றாட அவசர வாழ்க்கைப் பிரச்சினைகளையோ இனப்பிரச்சினையின் மூலாதாரப் பிரச்சினைகளையோ தீர்ப்பவையாக அமையவில்லை. புலிகள் இயக்கத்தைப் பலவீனப்படுத்தி, தமிழர் தேசத்தையும் சர்வதேச சமூகத்தையும் ஏமாற்றுவதற்கே சிறீலங்கா அரசு இப்பேச்சுவார்த்தைகளைப் பயன்படுத்தியது. பேச்சு என்ற போர்வையில், சிங்கள அரசு தமிழர் தேசம் மீது ஒரு பெரும் படையெடுப்பிற்கான ஆயத்தங்களைச் செய்தது. போர் ஓய்வையும் சமாதானச் சூழலையும் பயன்படுத்தி, தனது நலிந்துபோன பொருளாதாரத்தை மீளக்கட்டி, தனது சிதைந்துபோன இராணுவப் பூதத்தை மீளவும் தட்டியெழுப்பியது.

பெருந்தொகையில் ஆட்சேர்ப்பு நிகழ்த்தி, ஆயுதங்களைத் தருவித்து, படையணிகளைப் பலப்படுத்தி, போர் ஒத்திகைகளைச் செய்தது. தமிழர் தேசம் சமாதான முயற்சியில் ஈடுபட்டிருக்க, சிங்களத்தேசம் போர்த் தயாரிப்பு வேலைகளிலேயே தன்னை முழுமையாக அர்ப்பணித்தது.

இதேநேரம், சமாதான முயற்சிகளின் காவலர்கள் எனத் தம்மை அடையாளப்படுத்திய உலக நாடுகளில் ஒரு பகுதியினர் அவசரப்பட்டு அதிரடி நடவடிக்கையில் இறங்கியமை, சமாதான முயற்சிகளுக்கே ஊறுவிளைவிப்பதாக அமைந்தது. எமது சுதந்திர இயக்கத்தை இந்நாடுகள் ஒரு பயங்கரவாதக் குழுவாகச் சிறுமைப்படுத்திச் சித்திரித்தன் தடைசெய்யப்பட்ட இயக்கங்களின் வரிசையில் பட்டியலிட்டு, எம்மை வேண்டத்தகாதோராக, தீண்டத்தகாதோராக ஒதுக்கி ஓரங்கட்டின் புலம்பெயர்ந்து வாழும் எம்மக்கள் மீது வரம்புமீறிய வரையறைகளை விதித்து, கட்டுப்பாடுகளைப் போட்டு, எமது விடுதலைப் போராட்டத்திற்கு ஆதரவாக அவர்கள் முன்னெடுத்த அரசியற் செயற்பாடுகளுக்கு முட்டுக்கட்டைகள் போட்டன் தாம் வாழும் நாடுகளின் அரசியற்சட்டவிதிகளுக்கு அமைவாக, நீதிநெறி வழுவாது எம்மக்கள் மேற்கொண்ட மனிதாபிமானப் பணிகளைக் கொச்சைப்படுத்தின் சிங்கள அரசின் இனஅழிப்புக்கு ஆளாகி, மனிதப் பேரவலத்திற்கு முகம்கொடுத்து நின்ற தமது தாயக உறவுகளைக் காக்க எமது மக்கள் முன்னெடுத்த மனிதநேய உதவிப்பணிகளைப் பெரும் குற்றவியற்செயல்களாக அடையாளப்படுத்தின் தமிழ் மக்களின் பிரதிநிதிகளையும் தமிழின உணர்வாளர்களையும் கைதுசெய்து, சிறைகளிலே அடைத்து, அவமதித்தன.

இந்நாடுகளின் ஒருபக்கச்சார்பான இந்த நடவடிக்கைகள்;, பேச்சுக்களில் நாம் வகித்த சமநிலை உறவையும் சமபங்காளி என்ற தகைமையையும் வெகுவாகப் பாதித்தன. இது சிங்களத்தேசத்தின் இனவாதப்போக்கை மேலும் தூண்டிவிட்டது. சிங்கள இனவாத சக்திகள் உசாரடைந்து, எமக்கு எதிராகப் போர்க்கொடி உயர்த்தின. இது சிங்கள தேசத்தை மேலும் இராணுவப் பாதையிலே தள்ளிவிட்டது.

சிங்களத்தேசம் சமாதானக் கதவுகளை இறுகச் சாத்திவிட்டுத் தமிழர்தேசத்தின்மீது போர் தொடுத்தது. சர்வதேசத்தின் அனுசரணையோடு கைச்சாத்தான போர்நிறுத்த ஒப்பந்தத்தையும் ஒருதலைப்பட்சமாகக் கிழித்தெறிந்தது. அப்போது சமாதானம் பேசிய உலகநாடுகள் ஒப்புக்குத்தானும் இதனைக் கண்டிக்கவில்லை; கவலைகூடத் தெரிவிக்கவில்லை. மாறாக, சில உலகநாடுகள் சிங்கள தேசத்திற்கு அழிவாயுதங்களை அள்ளிக்கொடுத்து, இராணுவப் பயிற்சிகளையும் இராணுவ ஆலோசனைகளையும் இலவசமாக வழங்கிவருகின்றன. இதனால்தான் சிங்கள அரசு தமிழருக்கு எதிரான இனஅழிப்புப் போரைத் துணிவுடனும் திமிருடனும் ஈவிரக்கமின்றியும் தொடர்ந்துவருகிறது.

இன்று சிங்களத்தேசம் என்றுமில்லாதவாறு இராணுவ பலத்திலும் இராணுவ அணுகுமுறையிலும் இராணுவவழித் தீர்விலும் நம்பிக்கைகொண்டு செயற்படுகிறது. தமிழர் தாயகத்தில் இராணுவ மேலாதிக்கத்தை நிலைநாட்டி, ஆயுத அடக்குமுறையின் கீழ்த்; தமிழர்களை ஆட்சிபுரியவேண்டும் என்ற அதன் ஆசை அதிகரித்திருக்கிறது. இதனாற் போர் தீவிரம்பெற்று, விரிவுபெற்று நிற்கிறது. இந்தப் போர் உண்மையில் சிங்கள அரசு கூறுவது போல, புலிகளுக்கு எதிரான போரன்று. இது தமிழருக்கு எதிரான போர்; தமிழினத்திற்கு எதிரான போர்; தமிழின அழிப்பை இலக்காகக் கொண்ட போர்; மொத்தத்தில் இது ஓர் இனஅழிப்புப் போர்.

இந்தப் போர் எமது மக்களைத்தான் பெரிதும் பாதித்திருக்கிறது.

போரின் கொடூரத்தை மக்களுக்கு எதிராகத் திருப்பிவிட்டு, மக்கள் மீது தாங்கொணாத் துன்பப்பளுவைச் சுமத்தி, மக்களைப் புலிகள் இயக்கத்திற்கு எதிராகத் திருப்பிவிடலாம் என்ற நப்பாசையிற் சிங்கள அரசு செயற்பட்டுவருகிறது. பாதைகளை மூடி, உணவையும் மருந்தையும் தடுத்து, எமது மக்களை இறுக்கமான இராணுவ முற்றுகைக்குள் வைத்துக்கொண்டு, கண்மூடித்தனமான குண்டுவீச்சுக்களையும் எறிகணைவீச்சுக்களையும் நடாத்திவருகிறது. சொந்த நிலத்தை இழந்து, அந்த நிலத்தில் அமைந்த வாழ்வை இழந்து, அகதிகளாக அலையும் அவலம் எம்மக்களுக்குச் சம்பவித்திருக்கிறது.

பிறப்பிலிருந்து இறப்புவரை சதா துன்பச்சிலுவையைச் சுமக்கின்ற மக்களாக எம்மக்கள் ஆக்கப்பட்டிருக்கிறார்கள். நோயும் பிணியும் உடல்நலிந்த முதுமையும் சாவுமாக எம்மக்களது வாழ்வு சோகத்தில் தோய்ந்து கிடக்கிறது. எமது மக்களின் உறுதிப்பாட்டை உடைத்துவிடவேண்டும் என்ற ஒரே நோக்கத்தோடு எமது எதிரியான சிங்கள அரசு இன்று எம்மக்கள் மீது எண்ணற்ற கொடுமைகளைப் புரிந்துவருகிறது. பெரும் அநீதிகளை இழைத்துவருகிறது.

உலகில் எங்குமே நிகழாத கொடூரமான அடக்குமுறைகளைப் பிரயோகிக்கிறது. எமது தேசத்தின் மீது ஒரு பெரும் பொருண்மியப்போரை தொடுத்து எம்மக்களின் பொருளாதார வாழ்வைச் சிதைத்து அவர்களது நாளாந்தச்சீவியத்தைச் சீர்குலைக்கின்ற செயலிலே இறங்கியிருக்கிறது.

சிறீலங்காப்படைகளின் கட்டுப்பாட்டிலுள்ள தமிழீழ நிலப்பரப்பில் மாதந்தோறும் நூற்றுக்கணக்கானோர் காணாமற்போகின்றனர்; கொல்லப்படுகின்றனர். சிங்களப்பகுதிகளில் தமிழர் காணாமற் போவதும் கொல்லப்படுவதும் வழமையான நிகழ்ச்சியாகிவிட்டது.

இராணுவ ஆக்கிரமிப்பில் உள்ள தமிழர் பகுதிகளிலே ஒரு மறைமுகமான இனஅழிப்புக் கொள்கை இன்று வேகமாகச் செயற்படுத்தப்படுகிறது. சாவும் அழிவும் இராணுவ அட்டூழியங்களும் சொந்த மண்ணிலேயே சிறைப்பட்ட வாழ்வுமாக எம்மக்கள் நாளாந்தம் அனுபவிக்கும் துயரம் மிகக்கொடியது.

கைதுகளும் சிறைவைப்புக்களும் சித்திரவதைகளும் பாலியல் வல்லுறவுகளும் கொலைகளும் காணாமல்போதல்களும் புதைகுழிகளுக்குள் புதைக்கப்படுவதுமாக ஒரு நச்சுவட்டத்திற்குள் எமது மக்களது வாழ்வு சுழல்கிறது. இருந்தபோதும், எமது மக்கள் நம்பிக்கை இழக்கவில்லை.

சுதந்திர தாகம் கொண்டு, எழுச்சிகொண்ட எம்மக்களை எந்தத் தடைகளாலும் எதுவும் செய்துவிடமுடியாது. ஆகாயத்திலிருந்து வீழும் குண்டுகளாலும் அவர்களது விடுதலை வேட்கையை அழித்துவிடமுடியாது. எம்மக்கள் துன்பச்சிலுவையைச் சதா சுமந்து பழகியவர்கள்.

அழிவுகளையும் இழப்புக்களையும் நித்தம் சந்தித்து வாழ்பவர்கள். இதனால் அவர்களது இலட்சிய உறுதி மேலும் உரமாகியிருக்கிறது. விடுதலைக்கான வேகம் மேலும் வீச்சாகியிருக்கிறது.

பெரும் போருக்கு முகம்கொடுத்தவாறு, நாம் இத்தனை காலமாக இத்தனை தியாகங்களைப் புரிந்து போராடி வருவது எமது மக்களின் சுதந்திரமான, கௌரவமான, நிம்மதியான வாழ்விற்கேயன்றி வேறெதற்காகவுமன்று. உலகத் தமிழினத்தின் ஒட்டுமொத்தப் பேராதரவோடு நாம் இந்தப் போராட்டத்தை நடாத்திவருகிறோம். அதுமட்டுமன்று, எமது போராட்டம் எந்தவொரு நாட்டினதும் தேசிய நலன்களுக்கோ அவற்றின் புவிசார் நலன்களுக்கோ பொருளாதார நலன்களுக்கோ குறுக்காக நிற்கவில்லை.

எமது மக்களது ஆழமான அபிலாசைகளும் எந்தவொரு தேசத்தினதும் எந்தமக்களினதும் தேசிய நலன்களுக்குப் பங்கமாக அமையவில்லை. அத்தோடு இந்த நீண்ட போராட்ட வரலாற்றில், நாம் திட்டமிட்டு எந்தவொரு தேசத்திற்கு எதிராகவும் நடந்துகொண்டதுமில்லை."

மாவீரர் தின உரையிலிருந்து

அனைத்து நகர்வுகளையும் தேசியத் தலைமை ஏற்கெனவே அறிந்திருக்கிறது. அதன் தெளிவுதான் மாவீரர் உரையின் வெளிப்பாடு. எமது கரங்களை நாமே பலப்படுத்திக்கொண்டு தேசியத் தலைமையின் வழி செல்வோம்.

  • கருத்துக்கள உறவுகள்

கனவுலகில் மிதந்து கொன்டிருந்த நம்மவரை நியத்துக்கு கொன்டு வந்த இந்த கடிதத்துக்கு கோடி நன்றி.இனியாவது காலம் தாழத்தாமல் நமது பணியை தொடங்குவோம்.

Edited by sagevan

இணைப்புகு நன்றி வழுதி அவர்களே...

எம்மால் இயன்றவற்றைச் செய்வோம்

  • கருத்துக்கள உறவுகள்

இணைப்புகு நன்றி வழுதி அவர்களே...

எம்மால் இயன்றவற்றைச் செய்வோம்

உண்மையில் எங்களில் சிலர் எம்மால் இயன்ற அளவைவிட கூடுதலாக செய்கின்றோம்

அதனைத்தொடர்ந்து செய்வதோடு புதிதாக ஆளுக்கு 10பேரை என்றாலும் இணைப்போம்

அதுதான் இன்று தேவை

அதுதான் எமது பலத்தை கூட்டும்

நாம் மட்டும் செய்தால் இப்படியேதான் பிடிப்பதும் விடுவதுமாக இருக்குமே ஒழிய தங்கவைக்க இன்னும் கைகள் சேரவேண்டும்

தயவுசெய்து இன்று எல்லோரும் உண்மையை உணர்ந்து எமது பலம் தங்கவைக்கப்படவேண்டும் என சிந்திக்கவெளிப்படும் நேரம்

ஒன்றிணைப்போம் எல்லோரையும்

தயவு செய்து ஆளுக்கு 10பேரையாவது இணைப்போம்

சேர்வீர்களா???????????????????

உறவுகளே... உங்களைத்தேடி உதவிக்கரம் வரமுன் உங்கள் உதவியை கொடுங்கள்....

மானமென்றவுடன் எப்படி எங்கள் கை உதவுகிறதோ அதைப்போலவே எங்கள் இனமென்றவுடன் அதுவும் இறயகாலகட்டத்தில் எங்கள் உதவியை நல்கவேண்டும்.

யுத்தத்தின் மீது நம்பிக்கை அற்றவனாக இருந்தாலும் தலைவர் மீது அசைக்கமுடியாது நம்பிக்கை கொள்ளுங்கள். அவரின் கரத்தை பலப்படுத்துங்கள்...

வழுதி அவர்களால் சிலதுகளை இதை விட வெளிப்படுத்தமுடியாது. மீத்தை நீங்களே ஊணர்து உதவவேண்டும்.... உங்களுகு தெரிந்த உறவுகளுக்கும் இதை தெரியப்படுத்துங்கள்.

என்னுன்டன் தொடர்புகளில் உள்ள வேற்றுநாட்டு நல்லுள்ளங்களையும் என்னால் வெல்ல முடிந்தது நீங்களும் முயற்ச்சிகலாமே.!

  • கருத்துக்கள உறவுகள்

சில கேள்விகள்...

1) இந்தப் போரில் இந்தியாவின் பங்கு என்னவென்பது தெள்ளத் தெளிவு. அதே நேரத்தில், பயங்கரவாதத்துக்கு எதிரான போரில் மேற்குலகின் நலன்கள் எதிலுமே சம்பந்தப்படாத தமிழரின் தாயகப் போராட்டம் சிக்குண்ட காரணம் என்ன?

2) ராஜீவின் மரணத்தின் பின் ஒதுங்கியிருந்த இந்தியா மறுபடி மூக்கை நுழைத்தது ஏன்? இதே காங்கிரஸ் கட்சி 1991 மூதல் 96 வரை ஆட்சியில் இருந்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

3) தன் குழந்தைகள் பிச்சையெடுப்பதைப் பார்த்தாலும் பார்ப்பேனே ஒழிய அரசியலில் ஈடுபட மாட்டேன் என்று ஒரு காலத்தில் கூறிய சோனியா காந்தி 1997 இல் அதே அரசியலுக்குள் நுழைந்தது ஏன்? அவரது இந்தப் பாரிய மனமாற்றத்துக்கு காங்கிரஸ் கட்சி பலமிழந்து போய்க்கொண்டிருந்தது மட்டும்தான் காரணமா?

4) மே 2004 தேர்தல் நேரத்தில் கடைசி நிமிடத்தில் அரசியலில் உள்நுழைந்து தேர்தலிலும் போட்டியிட்ட ராகுல் காந்தியின் நோக்கங்கள் எவை? அவரின் தேர்தல் வெற்றியுடன் கூடவே வந்த ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சி இலங்கை விவகாரத்தைக் கையில் எடுத்த மாயம் என்ன?

5) பாகிஸ்தான், சீனா போன்ற இந்திய வைரிகள் சம்பந்தப்பட்டிருந்தும், தானும் தன் பங்குக்கு இலங்கைக்கு முண்டு கொடுக்க வேண்டிய அவசியம் இந்தியாவுக்கு என்ன?

6) எதிலுமே அதிகம் சம்பந்தப்படாமல் இருந்த பிரியங்கா திடீரென சிறையிலிருக்கும் நளினியைச் சந்தித்தது ஏன்?

7) தற்போதைய காங்கிரஸ் கட்சி தமிழ்நாட்டில் அதன் அரசியல் எதிர்காலத்தையே கிடப்பில் போட்டுவிட்டு இலங்கை அரசின் இன ஒழிப்பு முயற்சிக்குத் துணை போவது ஏன்?

8) ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் முக்கிய கட்சிகளில் ஒன்றான திமுகவின் தலைவர் கலைஞர் கருணாநிதியின் கையாலாகாதநிலை ஏன்?

9) தோழர் திருமாவின் உண்ணாநோன்பு குறித்து மத்தியிலும், மாநிலத்திலும் ஆள்பவர்கள் பெரிதும் அலட்டிக் கொள்ளாதது ஏன்?

10) போரில் இவ்வளவு நடந்த பின்னும், புலிகள் இன்னும் நல்லெண்ண சமிக்கைகளை மட்டுமே இந்தியாவை நோக்கி அனுப்பிக் கொண்டிருப்பதன் தார்ப்பரியம்தான் என்ன?

ம்ம்ம்ம்... கன்றுக்குட்டி நியாயம் கேட்கிறதோ? :unsure::huh::unsure:

  • கருத்துக்கள உறவுகள்

இனைப்புக்கு நன்றி கருப்பி.

சில கேள்விகள்...

1) இந்தப் போரில் இந்தியாவின் பங்கு என்னவென்பது தெள்ளத் தெளிவு. அதே நேரத்தில், பயங்கரவாதத்துக்கு எதிரான போரில் மேற்குலகின் நலன்கள் எதிலுமே சம்பந்தப்படாத தமிழரின் தாயகப் போராட்டம் சிக்குண்ட காரணம் என்ன?

2) ராஜீவின் மரணத்தின் பின் ஒதுங்கியிருந்த இந்தியா மறுபடி மூக்கை நுழைத்தது ஏன்? இதே காங்கிரஸ் கட்சி 1991 மூதல் 96 வரை ஆட்சியில் இருந்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

3) தன் குழந்தைகள் பிச்சையெடுப்பதைப் பார்த்தாலும் பார்ப்பேனே ஒழிய அரசியலில் ஈடுபட மாட்டேன் என்று ஒரு காலத்தில் கூறிய சோனியா காந்தி 1997 இல் அதே அரசியலுக்குள் நுழைந்தது ஏன்? அவரது இந்தப் பாரிய மனமாற்றத்துக்கு காங்கிரஸ் கட்சி பலமிழந்து போய்க்கொண்டிருந்தது மட்டும்தான் காரணமா?

4) மே 2004 தேர்தல் நேரத்தில் கடைசி நிமிடத்தில் அரசியலில் உள்நுழைந்து தேர்தலிலும் போட்டியிட்ட ராகுல் காந்தியின் நோக்கங்கள் எவை? அவரின் தேர்தல் வெற்றியுடன் கூடவே வந்த ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சி இலங்கை விவகாரத்தைக் கையில் எடுத்த மாயம் என்ன?

5) பாகிஸ்தான், சீனா போன்ற இந்திய வைரிகள் சம்பந்தப்பட்டிருந்தும், தானும் தன் பங்குக்கு இலங்கைக்கு முண்டு கொடுக்க வேண்டிய அவசியம் இந்தியாவுக்கு என்ன?

6) எதிலுமே அதிகம் சம்பந்தப்படாமல் இருந்த பிரியங்கா திடீரென சிறையிலிருக்கும் நளினியைச் சந்தித்தது ஏன்?

7) தற்போதைய காங்கிரஸ் கட்சி தமிழ்நாட்டில் அதன் அரசியல் எதிர்காலத்தையே கிடப்பில் போட்டுவிட்டு இலங்கை அரசின் இன ஒழிப்பு முயற்சிக்குத் துணை போவது ஏன்?

8) ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் முக்கிய கட்சிகளில் ஒன்றான திமுகவின் தலைவர் கலைஞர் கருணாநிதியின் கையாலாகாதநிலை ஏன்?

9) தோழர் திருமாவின் உண்ணாநோன்பு குறித்து மத்தியிலும், மாநிலத்திலும் ஆள்பவர்கள் பெரிதும் அலட்டிக் கொள்ளாதது ஏன்?

10) போரில் இவ்வளவு நடந்த பின்னும், புலிகள் இன்னும் நல்லெண்ண சமிக்கைகளை மட்டுமே இந்தியாவை நோக்கி அனுப்பிக் கொண்டிருப்பதன் தார்ப்பரியம்தான் என்ன?

ம்ம்ம்ம்... கன்றுக்குட்டி நியாயம் கேட்கிறதோ? :unsure::huh::unsure:

நாங்கள் என்னத்தை சொல்ல?

நிறைய சோலியிருக்கு வாறியலா?

  • கருத்துக்கள உறவுகள்

நாங்கள் என்னத்தை சொல்ல?

நிறைய சோலியிருக்கு வாறியலா?

  • கருத்துக்கள உறவுகள்

நாங்கள் என்னத்தை சொல்ல?

நிறைய சோலியிருக்கு வாறியலா?

வாறன் சூறாவளி.. அதுக்கு முன்னால...

குருடன் கம்பு சுத்துற மாதிரி எல்லாப் பக்கமும் வீசாமல், ஏதாவது குறித்த சில இலக்குகளை வைத்து எமது செயல்திட்டங்களை முன்னெடுக்க வேணுமல்லோ...! அதுதானே வெற்றியை நோக்கி நம்மைச் செலுத்தும்? அப்படி சிந்தித்தபோது எனக்குள் எழுந்த கேள்விகள்தான் இவை.

தமிழருக்கெதிரான இந்த சர்வதேச அடக்குமுறை, பயங்கர வாதத்துக்கு எதிரான போரின் விளைவு என்பதை ஏற்க முடியவில்லை. இந்தியாவில் 2004 க்குப் பின்னர் ஏற்பட்ட மாற்றமே காரணம் என்பது எனது எண்ணம். இது உண்மையாயின் அந்தச் சதியின் பின்னணி என்ன? அதை முறியடிப்பது எப்படி என்பதில்தானே எங்கள் நடவடிக்கைகள் தங்கியிருக்கின்றன...? :unsure:

  • கருத்துக்கள உறவுகள்

ஆய்வுகள் அல்ல நமது இன்றைய தேவை

ஆவன செய்தலே உடனடி நிவாரணம் தயவுசெய்து தயவுசெய்து

அதற்கும் இதற்கும் முடிச்சுபோடுவதைவிட்டுவிட்ட

Edited by விசுகு

  • கருத்துக்கள உறவுகள்

தயவுசெய்து வேண்டுகோளை திசைதிருப்பாதீர்கள்

தற்கொலையாளிகளை உருவாக்கியவர்கள் என்பதால் இருக்குமோ......???

தமிழருக்கெதிரான இந்த சர்வதேச அடக்குமுறைஇ பயங்கர வாதத்துக்கு எதிரான போரின் விளைவு என்பதை ஏற்க முடியவில்லை.

164tj2.gif

நான் ஒண்டும் சொல்லேல்ல..! இந்த விளையாட்டுக்கும் நான் வரேல்ல..! :unsure::unsure:

  • கருத்துக்கள உறவுகள்

உடனடியாகச் செய்ய வேண்டிய வேலைகளை வழுதியின் கடிதம் எடுத்தியம்பி இருக்கிறது.ஆனால் ஒன்றை மறந்து விட்டாரோ என எண்ணத் தோன்றுகிறது.ஏனெனில் தமிழகத்தின் எழுச்சியைத் தக்க வைத்தலும் தொடர்வதும் மிக மிக முக்கியமானது.தமிழகத்தின் எழுச்சியே இந்திய மத்திய அரசின் போக்கை மாற்றும்.நாங்கள் ஒவ்வொரு நிகழ்வுகளிலும் தமிழீழமே எமக்கான தீர்வு என்பதை வலியுறுத்த வேண்டும்.இது தமிழீழ மக்களால் 1977 தேர்தல் மூலம் உலகத்திற்கு அறிவிக்கப்பட்டதாகும்.அந்தக் கொள்கையை புலிகள் தொடர்ந்து முன்னெடுத்து வருகிறார்கள் என்பதே உண்மை.ஆகவே புலிகளைத் தடை செய்துள்ள நாடுகளிலும் தமிழீழம் பற்றிப் பேசுவது தவறாகாது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.