Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எனக்கும் கவிதை எழுத ஆசையாய்க்கிடக்கு.

Featured Replies

குமரசாமி அண்ணா கவிதை எழுத தெரியாதவர் போலவே இல்லையே இதைப்பார்க்க.... :lol:

Edited by சுஜி

  • Replies 54
  • Views 5.7k
  • Created
  • Last Reply

வாழ்த்துக்கள் குமாரசாமி.

ஒன்று மட்டும் மனதில் தோன்றுகிறது, பரிமளம் கொடுத்துவைத்தவரென்று.

  • கருத்துக்கள உறவுகள்

உங்க கவிதை வாசித்து சிரிப்புக்கு டொனிக் கிடைத்த மாதிரி இருந்தது. வாழ்த்துகள்

உனக்கு இப்போது பத்து பிள்ளைகள்

இருப்பதையும் மறந்து

என் உடம்பு சூடாகுதே

ஏனடி என் பரிமளமே?

ஏனுங்கோ பரிமளத்திட்ட போறிங்கள்.

டொக்டரிடம் போங்க பண்டிக்காய்ச்சலாய் இருக்கப்போகுது. :lol:

  • கருத்துக்கள உறவுகள்

உங்க கவிதை வாசித்து சிரிப்புக்கு டொனிக் கிடைத்த மாதிரி இருந்தது. வாழ்த்துகள்

உனக்கு இப்போது பத்து பிள்ளைகள்

இருப்பதையும் மறந்து

என் உடம்பு சூடாகுதே

ஏனடி என் பரிமளமே?

ஏனுங்கோ பரிமளத்திட்ட போறிங்கள்.

டொக்டரிடம் போங்க பண்டிக்காய்ச்சலாய் இருக்கப்போகுது. :lol:

அட கறுப்பி அக்கா இது கூட தெரியாதா இவர் பதினொராவதுக்கு அடிப்போட நினைத்திருப்பார் அதுதான் பரிமளம் சூடு வச்சிருக்கு எங்கவென்று கேட்காதீர்கள் :):D

இல்லை சுடு தண்ணியை ஊற்றி இருக்கும் அதுதான் அந்தாளுக்கு உடம்பு சூடாகிறது :)

அண்ணர், உங்கள் கவிதை உண்மையிலேயே மிகவும் நன்றாக இருக்கிறது. பாராட்டுக்கள். அன்பே! ஆருயிரே! மானே! தேனே! செல்லமே! உயிரே! கற்கண்டே! என பல வகைகளில் பரிமளத்தை வர்ணித்து விளித்திருப்பது அபாரம். அற்புதம். அதிசயம். அருமை. அந்த ஆள்காட்டிக் குருவி ஒரு கெட்ட குருவி! நீங்கள் பரிமளம் அக்காவின்ட மடியில படுத்து இருக்கேக்க அது கத்திக் காட்டிக் குடுத்தபடியா தான் நீங்கள் ரெண்டுபேரும் பிரிஞ்சனீங்களோ? ஓடேக்க இரண்டு பேரும் என்ன பாடுபட்டு இருப்பியளோ? பாவம் அந்தரிச்சுப்போய் இருப்பீங்கள். உந்தக் குருவியள் எல்லாத்தையும் அந்தக் காலத்திலேயே சுட்டுப் பொசுக்கி இருக்கோணும். அதுகள் அப்ப மட்டுமில்ல இப்பவும் தானே காட்டுக் குடுக்குதுகள்.

அண்ணை உங்கட கவிதை திறமாயிருக்கு, ஆனா அந்தக் கவிதையில வாற உங்கட சோகத்த நினைக்கேக்க கவலையாயிருக்கு. கலைந்து போன உங்கள் (காதல்) கவிதைக்கு என் இருதுளி கண்ணீரைக் காணிக்கையாக்குகிறேன். :lol:

வீட்டில் இல்லையேனும்

பொது இடங்களிலாவது

என்னை கணவனாக

மதிக்கச்சொல் :)

அப்படியே வாசிக்க எனக்குக் கண்ணைக் கட்டிட்டுது. :D உதைத் தான் சொல்லுறவை வீட்டுக்கு வீடு வாசல்படி எணடு. :lol:

  • கருத்துக்கள உறவுகள்

அப்படியே வாசிக்க எனக்குக் கண்ணைக் கட்டிட்டுது. :) உதைத் தான் சொல்லுறவை வீட்டுக்கு வீடு வாசல்படி எணடு. :D

மனிசன் கவிதை எழுத போக உள்வீட்டு விவகாரங்கள் வெளில வருது போல் :lol::)

  • கருத்துக்கள உறவுகள்

:

வீட்டில் இல்லையேனும்

பொது இடங்களிலாவது

என்னை கணவனாக

மதிக்கச்சொல் :lol:

கு.சா எடுத்த எடுப்பிலேயே இப்படி எல்லாம் ஆசைப்படக்கூடாது.முதலில

மனிசனா மதிக்கச்சொல்லி கேழுங்கோ.அப்புறம் மிச்சத்தை பாக்கலாம். :)

  • கருத்துக்கள உறவுகள்

வீட்டில் இல்லையேனும்

பொது இடங்களிலாவது

என்னை கணவனாக

மதிக்கச்சொல் :(

கொஞ்சம் அதிகமான எதிர் பார்ப்புத்தான்..எதுக்கும் நான் பரிமளத்திட்டை ரெக்கமன்ரேசன் குடுக்கிறன் கவனிக்கச்சொல்லி. :lol:

குமராசாமி அண்ணா நீங்க ஒரு பொண்ணை பார்த்து காதலியுங்கோ அவா உங்களை விட்டு போன தானா கவிதை பிறக்கும் என் அனுபவத்தில் சொல்கிறேன் அதனால்தான் சுமாராக நானும் எழுதுகிறேன் என்று நினைக்கிறேன்.

Edited by ரகசியாசுகி

  • கருத்துக்கள உறவுகள்

உனக்கு இப்போது பத்து பிள்ளைகள்

இருப்பதையும் மறந்து

என் உடம்பு சூடாகுதே

ஏனடி என் பரிமளமே?

:D:lol::lol:

உனக்கு இப்போது பத்து பிள்ளைகள்

இருப்பதையும் மறந்து

என் உடம்பு சூடாகுதே

ஏனடி என் பரிமளமே?

ம்ம்ம்.... நானும் கு.சா வும் ஒரே அச்சுப் போலக்கிடக்கு :D

ம்ம்ம்.... நானும் கு.சா வும் ஒரே அச்சுப் போலக்கிடக்கு :unsure:

:Dஎங்கேயோ தப்பு நடந்திட்டுதோ?? :lol::lol:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்த பகுதியை சிறப்புற முன்னெடுத்து செல்ல ஊக்கமளித்தவர்களுக்கு என் நன்றிகள் :D

  • கருத்துக்கள உறவுகள்

இந்த பகுதியை சிறப்புற முன்னெடுத்து செல்ல ஊக்கமளித்தவர்களுக்கு என் நன்றிகள் :D

கவிஞரின் அடுத்த கவிதைத் தொகுப்பு எப்போ வெளிவரும் என்று ஆவலுடன் பார்த்துக் கொண்டிருக்கின்றோம்.

  • கருத்துக்கள உறவுகள்

அன்பே! ஆருயிரே!

என் பரிமளமே?

உன் தங்கையுடன்

வாழ்கைப்பட்டுப்போன என்னை

ஒரு கணம் சிந்திப்பாயா?

என் குலமென்ன,கோத்திரமென்ன?

தட்டென்ன தட்டுமுடுக்கென்ன?

பட்டு வேட்டியென்ன? பளிங்கு மோதிரமென்ன?

அன்பே பரிமளம்?

எதற்காக என் வாழ்க்கையை

உன் தங்கைக்கு பரிசளித்தேன்?

எல்லாம் உனக்காகத்தானே!

மானே பரிமளம்!

பல வருடங்களுக்கு முன்

கந்தரின் வயல் வரம்பில்

உன்மடியில் நான் படுக்க

என்மடியில் நீ படுக்க

எங்கள் நிலமை தெரியாமல்

ஆட்காட்டி குருவி கத்த

எந்தப்பக்கம் யார் ஓடுவது என

நாம் இருவரும் திகைக்க

தேனே பரிமளம்!

அனைத்தையும் மறந்து விட்டாயா?

என் செல்லம்பரிமளமே :lol:

இன்றும் எமக்கு பிடித்த

"அந்திமழை பொழிகிறது

ஒவ்வொரு துளியிலும்

உன் முகம் தெரிகிறது"

பாடல் காதோரம் ஒலிக்கிறது

உனக்கு இப்போது பத்து பிள்ளைகள்

இருப்பதையும் மறந்து

என் உடம்பு சூடாகுதே

ஏனடி என் பரிமளமே?

உனை நினைத்து காலத்தை ஒட்டும்

இவனுக்காக

ஓர் உதவி செய்யமாட்டாயா என் உயிரே

நீதான் என்னவள் இல்லை

இருந்தும்

உன் தங்கைக்கு எனக்காக

இந்த ஒரு புத்திமதியாவது

சொல் என் கற்கண்டே!

வீட்டில் இல்லையேனும்

பொது இடங்களிலாவது

என்னை கணவனாக

மதிக்கச்சொல் :lol:

உற்சாகம் கொடுத்த அனைவருக்கும் கோடானுகோடி நன்றிகள். :unsure:

அழகான எளிமையான கவிதை. உங்கள் ஏக்கம் பரிமளத்துக்கும் இருக்கும் கு.சா.

அவ இப்பவும் உங்கள் இடம் தேடி ஓடி வருவா.. என்ன.. 10 பிள்ளையளோட வருவா ஏத்துப்பீங்களோ..???! அதில 5 க்குத்தான் அரசாங்கப் பணம் எடுக்கலாம். மிச்சம் அந்த வயசைக் கடந்திருக்குங்கள்..! :D

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

அன்பே! ஆருயிரே!

என் பரிமளமே?

உன் தங்கையுடன்

வாழ்கைப்பட்டுப்போன என்னை

ஒரு கணம் சிந்திப்பாயா?

என் குலமென்ன,கோத்திரமென்ன?

தட்டென்ன தட்டுமுடுக்கென்ன?

பட்டு வேட்டியென்ன? பளிங்கு மோதிரமென்ன?

அன்பே பரிமளம்?

எதற்காக என் வாழ்க்கையை

உன் தங்கைக்கு பரிசளித்தேன்?

எல்லாம் உனக்காகத்தானே!

மானே பரிமளம்!

பல வருடங்களுக்கு முன்

கந்தரின் வயல் வரம்பில்

உன்மடியில் நான் படுக்க

என்மடியில் நீ படுக்க

எங்கள் நிலமை தெரியாமல்

ஆட்காட்டி குருவி கத்த

எந்தப்பக்கம் யார் ஓடுவது என

நாம் இருவரும் திகைக்க

தேனே பரிமளம்!

அனைத்தையும் மறந்து விட்டாயா?

என் செல்லம்பரிமளமே :lol:

இன்றும் எமக்கு பிடித்த

"அந்திமழை பொழிகிறது

ஒவ்வொரு துளியிலும்

உன் முகம் தெரிகிறது"

பாடல் காதோரம் ஒலிக்கிறது

உனக்கு இப்போது பத்து பிள்ளைகள்

இருப்பதையும் மறந்து

என் உடம்பு சூடாகுதே

ஏனடி என் பரிமளமே?

உனை நினைத்து காலத்தை ஒட்டும்

இவனுக்காக

ஓர் உதவி செய்யமாட்டாயா என் உயிரே

நீதான் என்னவள் இல்லை

இருந்தும்

உன் தங்கைக்கு எனக்காக

இந்த ஒரு புத்திமதியாவது

சொல் என் கற்கண்டே!

வீட்டில் இல்லையேனும்

பொது இடங்களிலாவது

என்னை கணவனாக

மதிக்கச்சொல் :lol:

உற்சாகம் கொடுத்த அனைவருக்கும் கோடானுகோடி நன்றிகள். :unsure:

உற்சாகமாக கவிதையோடு குமாரசாமி வந்திருக்கிறீங்கள். உங்களுக்கு நன்றாக நகைச்சுவையும் வருகிறது. கவிதயைில் பல சங்கதிகள் நகைச்சுவையோடு சொல்லியிருக்கிறீர்கள். பாராட்டுக்கள்.

நானும் கவிதை எழுதப்போறனெண்டு நீங்கள் முதல் சுழி போடேக்க குணா கமல் மாதிரி 'கண்மணி அன்போடை காதலன்' அப்பிடித்தான் ஏதோ துவங்கப்போறீங்களெண்டு நினைச்சேன். பரிமளமக்காவை நினைவுபடுத்தி அசத்திவிட்டீங்கள். :unsure:

முடியல.....சத்தியமா முடியல....நான் கணணிக்கு முன் இருந்து சிரிப்பதைபார்த்து, மனிசி "முத்திட்டுது" என சொல்லுறது கேட்டாலும் சிரிப்பை அடக்க முடியல

அவ்வ்வ்வ்வ்

உங்கடை மனிசி முத்தீட்டுதெண்டு சொன்னா பறவாயில்லை. என்ரை வீட்டிலை மண்டை பிழைச்சாக்கள் மாதிரி ஏனடியப்பா நெடுகலும் மொனி்ட்டரைப் பாத்துச் சிரிக்கிறாயெண்டு வவுனியன் கேக்கிறார். :D

:

கு.சா எடுத்த எடுப்பிலேயே இப்படி எல்லாம் ஆசைப்படக்கூடாது.முதலில

மனிசனா மதிக்கச்சொல்லி கேழுங்கோ.அப்புறம் மிச்சத்தை பாக்கலாம். :lol:

:lol::) :) :D

கொஞ்சம் அதிகமான எதிர் பார்ப்புத்தான்..எதுக்கும் நான் பரிமளத்திட்டை ரெக்கமன்ரேசன் குடுக்கிறன் கவனிக்கச்சொல்லி.

இதில என்ன சாத்திரி அதிக எதிர்பார்ப்பு. குறைந்த பட்ச விருப்பத்தை பரிமளமக்கா மூலமாக குமாரசாமி கேட்டிருக்கிறார்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

:lol:எங்கேயோ தப்பு நடந்திட்டுதோ?? :lol::D

உலகத்தில் ஒரேமாதிரி ஏழுபிறப்புகள் இருக்குமாம் :D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்த பகுதிக்கு வந்தவர்களுக்கும் வந்து வாழ்த்து சொன்னவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

கு. சா. கவிதை தூக்குது. பரிமளத்தை நல்லாக்காதலிச்சிருக்கியல் தான். தொடரட்டும் உங்கள் கவிதை வார்ப்புகள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வணக்கம் குமாரசாமி அவர்களே

உங்களது பெயரைக் கொண்டே கவிதை எழுதலாம் என்று தோன்றியது அதுதான் எழுதிப் பார்த்தேன் கவிதைக்கு கவிதை எழுதியது போன்று உணர்ந்தேன் இந்த ஆக்கம் எப்படியிருக்கிறது?

கு தூகலம் பொங்கிட‌

மா லைகள் குவிந்திட‌

ர த்தமும் சிலிர்த்திட‌

சா கசங்ககள் புரிந்திட‌

மி கச் சாதாரண்மாக

வந்தவன் யாரது

அவன் தான் குமாரசாமி (முருகன்)

வணக்கம் குமாரசாமி அவர்களே

உங்களது பெயரைக் கொண்டே கவிதை எழுதலாம் என்று தோன்றியது அதுதான் எழுதிப் பார்த்தேன் கவிதைக்கு கவிதை எழுதியது போன்று உணர்ந்தேன் இந்த ஆக்கம் எப்படியிருக்கிறது?

கு தூகலம் பொங்கிட‌

மா லைகள் குவிந்திட‌

த்தமும் சிலிர்த்திட‌

சா கசங்ககள் புரிந்திட‌

மி கச் சாதாரண்மாக

வந்தவன் யாரது

அவன் தான் குமாரசாமி (முருகன்)

வீட்டில் இல்லையேனும்

பொது இடங்களிலாவது

என்னை கணவனாக

மதிக்கச்சொல்

குமாராசமி தாத்தா இதுதான் உங்களுடைய முதல் கவிதையா.... ? ரொம்ப நல்லா எழுதியிருக்குறீங்க ....... அதுவும் இந்த கடைசி வரிகள் வாசிக்க வாசிக்க சிரிப்பாயிருந்தது.... :D

பாராட்டுக்கள்...! தொடர்ந்து எழுதுங்கள்...! :lol:

Edited by அனிதா

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

குமாரசாமி மாமா...... நல்லா கலக்கிறியள் கலக்குங்கோ கலக்குங்கோ வாழ்த்துக்கள்

  • கருத்துக்கள உறவுகள்

இந்த பகுதிக்கு வந்தவர்களுக்கும் வந்து வாழ்த்து சொன்னவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

உங்களின் அடுத்த கவிதையையும் எதிர்பார்ததபடியே........................காத்திருக்கிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்

ஆகா.. இந்த 2009 ஆண்டின் சிறந்த திரியை இவ்வளவு நாளும் கவனிக்காமல் விட்டுட்டனே.. :o திண்ணையில கு.சா கவிதை எண்டு சொல்லேக்குள்ளையே யோசிச்சிருக்கோணும்.. பத்தி எழுதி இடையில என்ரர் அடிச்ச கவிதைகளால இந்தப்பக்கம் வர பயமா இருந்தது..! அதான் கவனிக்கேல்ல.. :o

எது எப்பிடியெண்டாலும் அசத்தல் கவிதை கு.சா.. பதிவுக்கு நன்றிகள்..! :D

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.