Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கண்ணீரில் கரையும் கல்லறை தெய்வங்கள்

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கருக்கொள்ளும் போதே கல்லறைத்

தெய்வங்களாகக் கடவது என

காலன் சொன்னானோ என்னவோ

கனவுக்காக உயிர்கொடுக்கச் சென்ற

காலத்தின் புதல்வர்களே கார்த்திகை நாளில்

வணங்குகிறோம் உம் காலடித்தடம் பற்றி

கணப்பொழுதும் கண்துஞ்சாது காத்திருந்து

கந்தகம் சுமந்து காவியமான காவிய நாயகர்களை

காசுக்காக விற்றுவிட்டு உங்கள்

கல்லறைகளிலும் வைத்து சில்லறை பார்க்கும்

கார்த்திகை நாளில் வணங்குகிறோம் எம்

இதயத்தின் எங்கோ ஒரு மூலையில் இருக்கும்

சிறு கடுகளவேனும் கருணை கொண்டு

கார்த்திகைப் பூக்களை காலால் நசுக்குவது போல்

கல்லறை தெய்வங்களையும் சிறு

கணப் பொழுதுடன் மறந்துவிடுகிறோம் எம்

களியாட்டங்கள் தொடர்வதற்காய்

விளக்கிலே பட்டு வீழ்ந்துபோகும்

விட்டில்கள் போல உங்கள்

வீரம் விளைந்த விடுதலை வேட்கையும்

வீணர்களால் வீணாய்ப் போய்விட்டதே

உங்கள் பாதம் பட்டு சேதிகள் சொன்ன

பற்றைக்காடுகள் கூட பாசறைப் புலிகளின்

பரிதாபங்கண்டு இரங்கற்பா இசைக்கும்

இதயம் கனத்து...

எங்குபோய்த் தேடுவது எம் குலவிளக்குகளை

கார்த்திகை நாளில் காற்றுக் கூட

கானமிசைக்கும் எம் மாவீரர் நினைவைச் சுமந்து

ஆறுமணிக்கு ஒலிக்கும் ஆலய மணியின் ஓசையில்

உம் ஆன்மாக்களின் துடிப்பு நாதமாய் கேட்கும்

தாயகக்கனவுடன் சாவினைத் தழுவிய சந்தனப்

பேழைகளே பாடல் ஒலிக்கும் போது உயிரைப் பிழியும்

வலியை உணர்ந்தோம் உங்களுக்காய் ஏற்றப்படும்

ஒவ்வொரு தீபமும் எம் உள்ளத்தை உருக்கி

நெருப்பாக்கும் உண்மையை உணர்ந்தோம்

உங்கள் துயிலுமில்லத்தில் பொழியும் மழைகூட

உங்கள் கண்ணீராய் உணர்ந்தோம் அதுவே

எம்மை ஆசீர்வதிப்பதாய் நினைத்தோம் இன்று

அதே மழை நாங்கள் செய்த பாவத்திற்காய்

நீங்கள் வடிக்கும் அமிலமழை போல எம்மை

சாபமிடுவதாய் உணருகிறோம்

பலலட்சம் பேரின் கனவுகளை சிலஆயிரம் பேரில்

சுமத்திவிட்டு உம்மை அந்தரிக்க விட்டுவிட்டு

ஆறுதலாய் இருந்து விட்டோம் இப்போது

அடுத்த வேள்விக்குத் தயாராகிக் கொண்டிருக்கிறோம்

ஆடுகளைத் தேடி பலியிடுவதற்காக

jeeva

  • கருத்துக்கள உறவுகள்

...

கணப்பொழுதும் கண்துஞ்சாது காத்திருந்து

கந்தகம் சுமந்து காவியமான காவிய நாயகர்களை

காசுக்காக விற்றுவிட்டு உங்கள்

கல்லறைகளிலும் வைத்து சில்லறை பார்க்கும்

கார்த்திகை நாளில் வணங்குகிறோம் எம்

இதயத்தின் எங்கோ ஒரு மூலையில் இருக்கும்

சிறு கடுகளவேனும் கருணை கொண்டு

....

உங்கள் துயிலுமில்லத்தில் பொழியும் மழைகூட

உங்கள் கண்ணீராய் உணர்ந்தோம் அதுவே

எம்மை ஆசீர்வதிப்பதாய் நினைத்தோம் இன்று

அதே மழை நாங்கள் செய்த பாவத்திற்காய்

நீங்கள் வடிக்கும் அமிலமழை போல எம்மை

சாபமிடுவதாய் உணருகிறோம்.

jeeva

யதார்த்தமான உணர்வுப்பூர்வமான வரிகள்...வலிகள்...

  • கருத்துக்கள உறவுகள்

ஜீPவா....

முற்றிலும் உண்மையான வரிகள்.நன்றி உங்கள் கவிதைக்கு.

கருக்கொள்ளும் போதே கல்லறைத்

தெய்வங்களாகக் கடவது என

காலன் சொன்னானோ என்னவோ

கனவுக்காக உயிர்கொடுக்கச் சென்ற

காலத்தின் புதல்வர்களே கார்த்திகை நாளில்

வணங்குகிறோம் உம் காலடித்தடம் பற்றி

கணப்பொழுதும் கண்துஞ்சாது காத்திருந்து

கந்தகம் சுமந்து காவியமான காவிய நாயகர்களை

காசுக்காக விற்றுவிட்டு உங்கள்

கல்லறைகளிலும் வைத்து சில்லறை பார்க்கும்

கார்த்திகை நாளில் வணங்குகிறோம் எம்

இதயத்தின் எங்கோ ஒரு மூலையில் இருக்கும்

சிறு கடுகளவேனும் கருணை கொண்டு

உங்கள் துயிலுமில்லத்தில் பொழியும் மழைகூட

உங்கள் கண்ணீராய் உணர்ந்தோம் அதுவே

எம்மை ஆசீர்வதிப்பதாய் நினைத்தோம் இன்று

அதே மழை நாங்கள் செய்த பாவத்திற்காய்

நீங்கள் வடிக்கும் அமிலமழை போல எம்மை

சாபமிடுவதாய் உணருகிறோம்

பலலட்சம் பேரின் கனவுகளை சிலஆயிரம் பேரில்

சுமத்திவிட்டு உம்மை அந்தரிக்க விட்டுவிட்டு

ஆறுதலாய் இருந்து விட்டோம் இப்போது

அடுத்த வேள்விக்குத் தயாராகிக் கொண்டிருக்கிறோம்

ஆடுகளைத் தேடி பலியிடுவதற்காக

jeeva

இன்றைய அரசியல் நிலவரங்களை யதார்த்த பூர்வமாக உணர்ந்து கவிதையில் கொண்டுவந்துள்ளீர்கள். மனசு கனக்கின்றது தோழா

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

யதார்த்தமான உணர்வுப்பூர்வமான வரிகள்...வலிகள்...

நன்றி ராஜவன்னியன் அண்ணா.

இது எமக்கு நிரந்தரமாக ஜபிக்கப்பட்ட வலிகள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஜீவா

மனதை உருக்கிய வரிகளுக்கு மிக்க நன்றி...

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஜீPவா....

முற்றிலும் உண்மையான வரிகள்.நன்றி உங்கள் கவிதைக்கு.

கருக்கொள்ளும் போதே கல்லறைத்

தெய்வங்களாகக் கடவது என

காலன் சொன்னானோ என்னவோ

கனவுக்காக உயிர்கொடுக்கச் சென்ற

காலத்தின் புதல்வர்களே கார்த்திகை நாளில்

வணங்குகிறோம் உம் காலடித்தடம் பற்றி

நன்றி அக்கா.

இன்றைய அரசியல் நிலவரங்களை யதார்த்த பூர்வமாக உணர்ந்து கவிதையில் கொண்டுவந்துள்ளீர்கள். மனசு கனக்கின்றது தோழா

நன்றி நிழலி அண்ணா

ஜீவா

மனதை உருக்கிய வரிகளுக்கு மிக்க நன்றி...

நன்றி இளங்கவி அண்ணா

  • கருத்துக்கள உறவுகள்

கருக்கொள்ளும் போதே கல்லறைத்

தெய்வங்களாகக் கடவது என

காலன் சொன்னானோ என்னவோ

கனவுக்காக உயிர்கொடுக்கச் சென்ற

காலத்தின் புதல்வர்களே கார்த்திகை நாளில்

வணங்குகிறோம் உம் காலடித்தடம் பற்றி

கணப்பொழுதும் கண்துஞ்சாது காத்திருந்து

கந்தகம் சுமந்து காவியமான காவிய நாயகர்களை

காசுக்காக விற்றுவிட்டு உங்கள்

கல்லறைகளிலும் வைத்து சில்லறை பார்க்கும்

கார்த்திகை நாளில் வணங்குகிறோம் எம்

இதயத்தின் எங்கோ ஒரு மூலையில் இருக்கும்

சிறு கடுகளவேனும் கருணை கொண்டு

கார்த்திகைப் பூக்களை காலால் நசுக்குவது போல்

கல்லறை தெய்வங்களையும் சிறு

கணப் பொழுதுடன் மறந்துவிடுகிறோம் எம்

களியாட்டங்கள் தொடர்வதற்காய்

எங்குபோய்த் தேடுவது எம் குலவிளக்குகளை

கார்த்திகை நாளில் காற்றுக் கூட

கானமிசைக்கும் எம் மாவீரர் நினைவைச் சுமந்து

ஆறுமணிக்கு ஒலிக்கும் ஆலய மணியின் ஓசையில்

உம் ஆன்மாக்களின் துடிப்பு நாதமாய் கேட்கும்

தாயகக்கனவுடன் சாவினைத் தழுவிய சந்தனப்

பேழைகளே பாடல் ஒலிக்கும் போது உயிரைப் பிழியும்

வலியை உணர்ந்தோம் உங்களுக்காய் ஏற்றப்படும்

ஒவ்வொரு தீபமும் எம் உள்ளத்தை உருக்கி

நெருப்பாக்கும் உண்மையை உணர்ந்தோம்

உங்கள் துயிலுமில்லத்தில் பொழியும் மழைகூட

உங்கள் கண்ணீராய் உணர்ந்தோம் அதுவே

எம்மை ஆசீர்வதிப்பதாய் நினைத்தோம் இன்று

அதே மழை நாங்கள் செய்த பாவத்திற்காய்

நீங்கள் வடிக்கும் அமிலமழை போல எம்மை

சாபமிடுவதாய் உணருகிறோம்

பலலட்சம் பேரின் கனவுகளை சிலஆயிரம் பேரில்

சுமத்திவிட்டு உம்மை அந்தரிக்க விட்டுவிட்டு

ஆறுதலாய் இருந்து விட்டோம் இப்போது

அடுத்த வேள்விக்குத் தயாராகிக் கொண்டிருக்கிறோம்

ஆடுகளைத் தேடி பலியிடுவதற்காக

jeeva

மாவீரர் நினைவு சொன்ன வரிகளில்லை ஜீவா இந்த வரிகள். ஓரினத்தின் வாழ்வுக்காக எல்லாமுமாகி இல்லாது போன எங்கள் கடவுளர்களின் கனவுகள் மீது நிகழும் யதார்த்தக் கதைகளையும் சொல்லியுள்ளீர்கள்.

பலலட்சம் பேரின் கனவுகளை சிலஆயிரம் பேரில்

சுமத்திவிட்டு உம்மை அந்தரிக்க விட்டுவிட்டு

ஆறுதலாய் இருந்து விட்டோம் இப்போது

அடுத்த வேள்விக்குத் தயாராகிக் கொண்டிருக்கிறோம்

ஆடுகளைத் தேடி பலியிடுவதற்காக

உண்மைதான் லட்சம் பேரின் கனவுகளை இலட்சியத்தைச் சுமந்து புறப்பட்டவர்கள் மீது சுமத்திவிட்டுச் சுகமாய் விசிலடித்த வீரங்கள் மீது ஆணியாய் விழுகிறது இந்த மேற்கோடிட்ட வரிகள்.

அந்தரிப்பு மட்டுமில்லை ஆயிரமாயிரம் பேரின் அடையாளங்களையும் மறந்துவிட்டு இன்னும் வீரமுடன் விரிவுரைகள்தான் மிஞ்சிக்கிடக்கிறது. பலியிடுவதற்கும் சொந்த ஆடுகளையல்ல அயலானின் அடுத்தவீட்டானின் ஆடுகளைத்தான் தேடுகிறோம்.

  • 11 months later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நன்றி சாந்தி அக்கா.

  • கருத்துக்கள உறவுகள்

ஜீவாவுக்கு எனது சார்பாக ஒர் பச்சை...உங்கள் கவிதையின் கருப் பொருள் பற்றி பேசும் அருகதை கூட எமக்கு இல்லை...மாவீரர்களின் தியாகம் வீண் போகாது.

  • கருத்துக்கள உறவுகள்

விளக்கிலே பட்டு வீழ்ந்துபோகும்

விட்டில்கள் போல உங்கள்

வீரம் விளைந்த விடுதலை வேட்கையும்

வீணர்களால் வீணாய்ப் போய்விட்டதே

இதுதான் வேதனை யீவா! அருமையான வரிகள் .

  • கருத்துக்கள உறவுகள்

பல லட்சம் பேரின் கனவுகளை சிலஆயிரம் பேரில்

சுமத்திவிட்டு உம்மை அந்தரிக்க விட்டுவிட்டு

ஆறுதலாய் இருந்து விட்டோம் இப்போது

அடுத்த வேள்விக்குத் தயாராகிக் கொண்டிருக்கிறோம்

ஆடுகளைத் தேடி பலியிடுவதற்காக

எம் சுமையை சுமக்க நாம் தயாராகாதவரை......

இவர் இனி பிறக்கவேண்டாம்

இவர் செய்த வேள்வி

இவரால் மட்டுமே முடிந்தது

முடியும்

நன்றி ஜீவா கவிதைக்கும் நேரத்திற்கும்

இப்போது

அடுத்த வேள்விக்குத் தயாராகிக் கொண்டிருக்கிறோம்

ஆடுகளைத் தேடி பலியிடுவதற்காக-- .ஜீவா

கவிதைக்கு அழகு உண்மைபேசுதல்.பொய்மையின் வார்த்தையாலம் அல்ல. நன்றி உண்மைக் கவிஞரே.

நாங்கள் நாலு பேர் நல்லாக வாழ புலத்தில் 40 ஆயிரம் பிஞ்சுகளின் வாழ்வை அழித்தோம்,இன்று அதையே புலம் பெயர் தேசத்தில் தொடங்குகின்றோம்.

  • கருத்துக்கள உறவுகள்

கணப்பொழுதும் கண்துஞ்சாது காத்திருந்து

கந்தகம் சுமந்து காவியமான காவிய நாயகர்களை

காசுக்காக விற்றுவிட்டு உங்கள்

கல்லறைகளிலும் வைத்து சில்லறை பார்க்கும்

கார்த்திகை நாளில் வணங்குகிறோம் எம்

இதயத்தின் எங்கோ ஒரு மூலையில் இருக்கும்

சிறு கடுகளவேனும் கருணை கொண்டு

கார்த்திகைப் பூக்களை காலால் நசுக்குவது போல்

கல்லறை தெய்வங்களையும் சிறு

கணப் பொழுதுடன் மறந்துவிடுகிறோம் எம்

களியாட்டங்கள் தொடர்வதற்காய்

யதார்த்த வரிகள்.

எங்குபோய்த் தேடுவது எம் குலவிளக்குகளை

கார்த்திகை நாளில் காற்றுக் கூட

கானமிசைக்கும் எம் மாவீரர் நினைவைச் சுமந்து தேடுகிறோம் தேடுகிறோம்.

  • கருத்துக்கள உறவுகள்

இப்போது

அடுத்த வேள்விக்குத் தயாராகிக் கொண்டிருக்கிறோம்

ஆடுகளைத் தேடி பலியிடுவதற்காக-- .ஜீவா

கவிதைக்கு அழகு உண்மைபேசுதல். பொய்மையின் வார்த்தையாலம் அல்ல. நன்றி உண்மைக் கவிஞரே.

நாங்கள் நாலு பேர் நல்லாக வாழ புலத்தில் 40 ஆயிரம் பிஞ்சுகளின் வாழ்வை அழித்தோம், இன்று அதையே புலம் பெயர் தேசத்தில் தொடங்குகின்றோம்.

தாங்கள் நினைக்கும் கோணத்தில் எழுதப்பட்டதல்ல இது

எம்மை நாமே நொந்து கொள்ளுதல் மட்டுமே.

தயவு செய்து திசை திருப்பாதீர் திரியை கவியை...நன்றி

  • கருத்துக்கள உறவுகள்

ஜீவா, கவிதை அருமை.நாம் எங்கு நிற்கிறோம் என்பதை புடம் போட்டுள்ளது கவிதை.இனி என்ன செய்யப்போகிறோம் என்பதையும் நாமே தான் முடிவு எடுக்க வேண்டும். பலருக்காக சிலர் சிலுவை இனியும் சுமக்க முடியாது.

  • கருத்துக்கள உறவுகள்

நெஞ்சு கனக்கும் உண்மைகள்!!!!!!!!!!!!!!!!மாவீரர் தியாகம் வீண்போகாது!!!!!!!!!!!!!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கருக்கொள்ளும் போதே கல்லறைத்

தெய்வங்களாகக் கடவது என

காலன் சொன்னானோ என்னவோ

கனவுக்காக உயிர்கொடுக்கச் சென்ற

காலத்தின் புதல்வர்களே கார்த்திகை நாளில்

வணங்குகிறோம் உம் காலடித்தடம் பற்றி

கணப்பொழுதும் கண்துஞ்சாது காத்திருந்து

கந்தகம் சுமந்து காவியமான காவிய நாயகர்களை

காசுக்காக விற்றுவிட்டு உங்கள்

கல்லறைகளிலும் வைத்து சில்லறை பார்க்கும்

கார்த்திகை நாளில் வணங்குகிறோம் எம்

இதயத்தின் எங்கோ ஒரு மூலையில் இருக்கும்

சிறு கடுகளவேனும் கருணை கொண்டு

கார்த்திகைப் பூக்களை காலால் நசுக்குவது போல்

கல்லறை தெய்வங்களையும் சிறு

கணப் பொழுதுடன் மறந்துவிடுகிறோம் எம்

களியாட்டங்கள் தொடர்வதற்காய்

விளக்கிலே பட்டு வீழ்ந்துபோகும்

விட்டில்கள் போல உங்கள்

வீரம் விளைந்த விடுதலை வேட்கையும்

வீணர்களால் வீணாய்ப் போய்விட்டதே

உங்கள் பாதம் பட்டு சேதிகள் சொன்ன

பற்றைக்காடுகள் கூட பாசறைப் புலிகளின்

பரிதாபங்கண்டு இரங்கற்பா இசைக்கும்

இதயம் கனத்து...

எங்குபோய்த் தேடுவது எம் குலவிளக்குகளை

கார்த்திகை நாளில் காற்றுக் கூட

கானமிசைக்கும் எம் மாவீரர் நினைவைச் சுமந்து

ஆறுமணிக்கு ஒலிக்கும் ஆலய மணியின் ஓசையில்

உம் ஆன்மாக்களின் துடிப்பு நாதமாய் கேட்கும்

தாயகக்கனவுடன் சாவினைத் தழுவிய சந்தனப்

பேழைகளே பாடல் ஒலிக்கும் போது உயிரைப் பிழியும்

வலியை உணர்ந்தோம் உங்களுக்காய் ஏற்றப்படும்

ஒவ்வொரு தீபமும் எம் உள்ளத்தை உருக்கி

நெருப்பாக்கும் உண்மையை உணர்ந்தோம்

உங்கள் துயிலுமில்லத்தில் பொழியும் மழைகூட

உங்கள் கண்ணீராய் உணர்ந்தோம் அதுவே

எம்மை ஆசீர்வதிப்பதாய் நினைத்தோம் இன்று

அதே மழை நாங்கள் செய்த பாவத்திற்காய்

நீங்கள் வடிக்கும் அமிலமழை போல எம்மை

சாபமிடுவதாய் உணருகிறோம்

பலலட்சம் பேரின் கனவுகளை சிலஆயிரம் பேரில்

சுமத்திவிட்டு உம்மை அந்தரிக்க விட்டுவிட்டு

ஆறுதலாய் இருந்து விட்டோம் இப்போது

அடுத்த வேள்விக்குத் தயாராகிக் கொண்டிருக்கிறோம்

ஆடுகளைத் தேடி பலியிடுவதற்காக

jeeva

ஜீவாவுக்கு

வலிகளின் வெளிப்பாடும் விரக்தியின் உச்சமும் வரிகளில் தெரிகிறது.....

கவிதைக்கு நன்றிகள்....

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.