Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கோமாளிகளின் கோட்டை

Featured Replies

மையவாதச் சகதிக்குள் இருந்து எட்டிப்பார்க்கும் தலைகள்

அரிப்பெடுக்கும் முதுகை சொறிய எவன் வருவான் என தேடுகின்றது

உலகின் எந்த மூலைக்குள் போனாலும்

ஊர்க்காரனே சொறிந்துவிடவேண்டும்

நாலுபேராவது சொறிந்தால் தான்

வாழ்வுக்கு அர்த்தம்கிடைக்கின்றது

இருந்தும் நாற்பதுபேர் சாட்டையுடன் நிற்பதை

என்னும் உணர்ந்துகொள்ளவில்லை.

எதிர்பார்த்தபடி அரிப்பு வழமைபோல விரைவில் கூடிவிட்டது

தங்களுக்குள் சொறிய ஆரம்பித்துவிட்டார்கள்

இம்முறை உங்களுக்குள் சொறிந்து விழையாடும்

கோமாளி ஆட்டத்தில் மக்களுக்கு ஆர்வமில்லை

ஏனெனில்

துப்பாக்கிகளால் எமக்குள் சொறிந்துவிழையாடிய

ஆயிரமாயிரம் விழையாட்டை கண்டு சலித்தவர்கள்

கள்ளன் பொலீஸ் விழையாட்டு எமக்கு

உயிரை எடுத்து விழையாடும் துரோகி தியாகி விழையாட்டு

கடசியில் எல்லாம் விழையாட்டுப்போட்டியை விடக் கேவலமாக போனது !

அவை, பாராளுமன்றம், சபாநாயகர், சத்தியப்பிரமாணம்

எல்லாவற்றுக்கும் மேலாக ஜனநாயகம் ! !!

இவற்றை எல்லாம் உச்சரிக்கும் போது சற்றும் நா கூசவில்லை ?

சொறிவதற்கு வேறு வார்த்தைகள் கிடைக்கவில்லை?

ஒருவரை ஒருவர் ஏற்கமறுக்கும் மனநோயுடையவரிடமிருந்து

ரத்தவாந்தியே வருகின்றது

எப்படி உங்களால் அதை வெட்கமில்லாமல்

ஜனநாயக வாந்தி என்று சொல்ல முடிகின்றது?

சில நேரம் அமைதியாய் இருப்பது கூட போராட்டம்

சில நேரம் அமைதியாய் இருப்பது கூட திருத்தம்

எமது கழுத்தின் சுருக்குக் கயிறை

நாமே இறுக்குகின்றோம்

அதற்கு எதிரி என்று ஒருவனை

காரணம் காட்டுகின்றோம்.

பெருகும் கோமாளித்தனமும்

அடயாளப்போட்டிகளும்

அர்த்தமில்லாச் சொறிதல்களும் கூட

என்னும் சொற்பக் காலமே

ஏனெனில்

தோல்விகள் லட்சியத்தை அடைவதற்கான படிகள்

ஆனால்

இங்கே எமது இலட்சியங்கள்

தோல்விகளாக்கப்படுகின்றன

  • கருத்துக்கள உறவுகள்

ஆரம்பத்தில் இப்படியான குத்துவெட்டுக்குப் பின தான் ஒரு தலைமை உருவானது. அது மீண்டும் back to square one.

  • கருத்துக்கள உறவுகள்

மையவாதச் சகதிக்குள்

மையவாதம் என்றால் என்ன சுகன்?....தயவுசெய்து விளக்கம் அளிப்பீர்களா? :unsure:

  • கருத்துக்கள உறவுகள்

சில நேரம் அமைதியாய் இருப்பது கூட போராட்டம்

சில நேரம் அமைதியாய் இருப்பது கூட திருத்தம்

எமது கழுத்தின் சுருக்குக் கயிறை

நாமே இறுக்குகின்றோம்

அதற்கு எதிரி என்று ஒருவனை

காரணம் காட்டுகின்றோம்.

பெருகும் கோமாளித்தனமும்

அடயாளப்போட்டிகளும்

அர்த்தமில்லாச் சொறிதல்களும் கூட

என்னும் சொற்பக் காலமே

ஏனெனில்

தோல்விகள் லட்சியத்தை அடைவதற்கான படிகள்

ஆனால்

இங்கே எமது இலட்சியங்கள்

தோல்விகளாக்கப்படுகின்றன

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மையவாதம் என்றால் என்ன சுகன்?....தயவுசெய்து விளக்கம் அளிப்பீர்களா? :unsure:

நான் நினைக்கிறன், தேசியம் தாயகம் தன்னாட்சி, சுயநிர்ணய உரிமை மறுபக்கத்தில், தேசியம் ஒருமைப்பாடு, ஆட்புல எல்லை, இறைமை இப்படியான சததிற்க்கு உதவாத சொற்களின் வரிசையில் உள்ள சொல்.

  • தொடங்கியவர்

மையவாதம் என்றால் என்ன சுகன்?....தயவுசெய்து விளக்கம் அளிப்பீர்களா?

மையவாதம் ஒரு நச்சுக் கரு. இந்தக் கருவைச் சுற்றியே எமது தேசியம் முதலான அனைத்தும் கட்டமைக்கப்பட்டது. இந்தக் கருவின் உருவாக்கம் தமிழர் என்ற ஒருமைப்பாட்டுக்கு எதிரானது. சமூக ஒற்றுமைக்கு எதிரானது. முன்பு இந்தக் கரு சாதிவாரியாக தமிழர்களை ஒடுக்கியது. பிரதேசவாரியக தமிழர்களை ஒடுக்கியது. மதவாரியாக தமிழர்களை ஒடுக்கியது. வர்க்கம் புத்திஜீவித மமதை என்ற அலகுகளால் தமிழர்களை ஒடுக்கியது. இந்தக் கருவுக்குள் ஜனநாயகம் என்ற சொல்லுக்கே இடமில்லை. ஒருவனை ஒருவன் ஏற்க மறுத்தலே இந்தக் கருவின் இயக்கம். ஒரு காலத்தில் கடவுள் சமயம் தேவாரம் என்பதை இந்தக் கரு கையில் எடுத்தது. பிரதேசவாதத்தை கையில் எடுத்தது. அந்நிய ஆக்கிரமிப்புக் காலங்களில் கல்வி கற்றலை உத்தியோகம் பார்த்தலை வரக்க மேம்பாட்டை கையில் எடுத்தது. அவ்வாறே தொடர்ச்சியாக தமிழ்த்தேசியவாதத்தை கையில் எடுத்தது.

ஒவ்வொரு விசயங்களிலும் மக்கள் ஒடுக்கப்படுவதை காணமுடியும் கடவுள் சமயம் என்ற காலத்தில் தாழ்த்தப்பட்டவர்களும் பிறமதத்தவர்களும் ஒடுக்கப்பட்டார்கள். உள் நுழைய அனுமதிக்கவில்லை. ஏற்றுக்கொள்ள மறுத்தல். இதே கல்வி கற்றல் போட்டிக்காலத்திலும் நடந்தது. தமிழ்த்தேசியக்காலத்தில் நடந்த உட்குத்துப்பாடுகள் ஏற்றுக்கொள்ள மறுத்தல். பிரதேசவாரியப் பிழவுகள். மத அடிப்படையிலான நடவடிக்கைகள் அனைத்தும் இந்தக் கருவின் விழைவுகளே. இன்றய நாடுகடந்த அரசிலும் முள்ளிவாய்க்காலுக்குப் பின் எஞ்சிய தேசிய எச்சத்திலும் இந்தக் கருவின் செயற்பாடே கோலோச்சுகின்றது. இந்தக் கருவின் செயற்பாடானது ஈழத்தமிழன் என்ற ஒரு பொது அடயாளத்தை முற்றாக எரித்துச் சாம்பலாக்கும் வரை நிற்காது. புலி பசித்தாலும் புல்லைத் தின்னாது என்ற பழமொழிபோல் இந்தக் கரு தன்னினத்துக்குள் இரைதேடுமே ஒளிய வெளியே தேடாது. ஒருவனை ஒருவன் தின்று தம்மை மாய்த்துக்கொள்ளும். இது சமூகக் கூறு மட்டுமல்ல மாபெரும் உளவியல் நோயாக ஒவ்வொரு தனிமனிதனிடத்திலும் வியாப்பித்துள்ள ஒன்று. இந்த யாழ்களத்தின் கருத்து முறண்பாடுகளில் இதை கவனிக்கலாம். எந்த ஒரு தீர்வையும் எட்டாமல் ஒரு விடயம் முடிவிலியாகப் போகும். ஒரு கல்லை சிற்பமாக்க முடியாது மாறாக கல்லை உருவமற்றதாக இல்லாமல் செய்துவிடுவோம். இதுதான் இந்த உளவியல் நோயின் எல்லை.

இனி எமது தேசியம் தாயகத்தில் தமது சொந்த நிலங்களில் தத்தமது பொருளாதாரம் வாழ்வாதரங்களை கொண்டிருப்பவர்களால் உருவாக்கப்படும். அதற்கு மட்டுமே ஆதரவு. அந்த மக்களுக்கு ஆதரவாக இருப்பது ஒன்றே தெரிவு. மற்ற அனைத்துவித அடயாளப்போட்டிகளும் நிராகரிக்கப்படுவது அவசியமானது. மையவாதக் கருவில் இருந்து இனி ஒரு தலமை அல்லது தேதசிய உச்சாடனம் உருவாகமுடியாது. அவ்வாறு உருவாக முற்படும் சக்திகளும் அதற்கு ஆதரவளிப்பவர்களுமே இனம் என்ற பொதுக் கூற்றுக்கு எதிரானவர்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

நன்றிகள் விளக்கமளித்தமைக்கு....அப்ப இந்த மையவாத வியாதி எங்களுக்கு மட்டும்தான் இருக்கோ?அல்லது சகல சமுகத்தினரிடையிலும் இருக்கோ.இந்த மையவாத நச்சில் இருந்து தப்பி முன்னேறிய சமுகங்கள் உண்டோ?இந்த வியாதி உலகத்தில் உள்ள எல்லா மனிதருக்கும் பொதுவானதா?

Edited by putthan

அரபுக் காரன் தனக்குள் ஆயிரம் பிரச்சனைகள் இருந்தாலும் அமெரிக்காவுடம் மோதும்போது கடவுள் என்ற மையக் கருத்தை முன்வைக்கிறான். அவனது கருத்தின்படி அக் கடவுளைப் பின்பற்றுகிறவர்களை ஒரே குடையின்கீழ் கொண்டுவரப்படுகின்றனர்.

எமக்குள் எல்லோரையும் பொதுமைப் படுத்தக் கூடிய மையவாதம் இருக்குமானால் ஒற்றுமையாக வாய்ப்புள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்

அரபுக் காரன் தனக்குள் ஆயிரம் பிரச்சனைகள் இருந்தாலும் அமெரிக்காவுடம் மோதும்போது கடவுள் என்ற மையக் கருத்தை முன்வைக்கிறான். அவனது கருத்தின்படி அக் கடவுளைப் பின்பற்றுகிறவர்களை ஒரே குடையின்கீழ் கொண்டுவரப்படுகின்றனர்.

எமக்குள் எல்லோரையும் பொதுமைப் படுத்தக் கூடிய மையவாதம் இருக்குமானால் ஒற்றுமையாக வாய்ப்புள்ளது.

கடாபியுடன் சண்டை பிடிக்கும் லிபியாகாரர்(அரபியர்) கடவுளைத்தான்(அல்லாகு அக்பர்) அழைக்கிறான்..ஆகவே அங்கும் அந்த மையவாத எடுபடவில்லை

கடாபியுடன் சண்டை பிடிக்கும் லிபியாகாரர்(அரபியர்) கடவுளைத்தான்(அல்லாகு அக்பர்) அழைக்கிறான்..ஆகவே அங்கும் அந்த மையவாத எடுபடவில்லை

கடவுளைத் தவிர வேறொரு மையக் கருத்தை முன்வைத்திருந்தால் கடாபிக்கு எதிரானவர்களை ஒன்றிணைத்திருக்க முடியாது. அவர்களின் போராட்டத்தின் நோக்கம் வேறாக இருந்தாலும் போடும் கோஷம் அல்லாகு அக்பர் தான்.

கவிதைக்கும் அதை எழுதிய நேர்த்திக்கும் நன்றி.

மே 19 உடன் எதுவுமே நடக்காதமாதிரி புலம்பெயர்ந்தவன் எல்லாவற்றையும் திசை திருப்பினான் பாருங்கோ அதுதான் தமிழனின் உண்மைமுகம்.எதிலும் ஒரு உண்மைத்தன்மையோ,நேர்மையோ,விசுவாசமோ இல்லாத ஒரு தன்மை.

தோல்வியை ஒப்புக்கொண்டு அடுத்தபடி என்னவென ஆராய்ந்திருக்கவேண்டும்.முள்ளிவாய்க்கால் அழிவே வெற்றியின் ஒருபடிதான் என தன்னை தானே ஏமாற்ற தமிழ்நாட்டிலும் கேவலாமாக ஒரு கூட்டம் இன்னமும் அவர்கள் பின்னால்.

எமாற்றுபவனில் பிழை இல்லை ஏமாற ஒரு கூட்டம் எப்போதும் தயாராக இருக்கும் போது.

..தோல்விகள் லட்சியத்தை அடைவதற்கான படிகள்

ஆனால்

இங்கே எமது இலட்சியங்கள்

தோல்விகளாக்கப்படுகின்றன

எமக்கு எம்மை விட மோசமான எதிரிகள் இல்லை என்பதை உணர்ந்தமையால் வந்த ஆத்திரம், இயலாமை போன்ற உணர்வுகள் பீறிட எழுந்த கவிதை இது

நன்றி சுகன்

சுகன்,

உங்களின் மைய வாத வரைவிலக்கணம், குறும் மையவாதம் பற்றித் தான் சொல்கின்றது என கருதுகின்றேன். தமிழர்களை பொதுவான ஈழத் தமிழன் என்ற மையத்துள் இழுக்காமல், அதனுள் அனைவரையும் அரவணைக்காமல், குறும் மையவாதங்கள் (சாதி ரீதியான, பிரதேசவாதம் ரீதியான, வர்க்க ரீதியான ) தோன்றியமையால் தான் அவை முதன்மையான மையத்துள் இருந்து முரண்பட்டு, அவற்றை நிராகரித்து, வெளிக் கிளம்பி 'ஈழத் தமிழன்' என்ற பொது அடையாளத்தை சிதைத்தது/ சிதைகின்றது

.இந்த மையவாத நச்சில் இருந்து தப்பி முன்னேறிய சமுகங்கள் உண்டோ?

உண்டு, சிங்கள சமூகம் இந்த குறும் மையவாத சிக்கலில் இருந்து தப்பி சிங்களவன் என்ற பொது அடையாளத்தை, மையத்தை நோக்கி ஒருங்கிணைக்கப் பட்டமையால் தான் அவர்களால் தம் இலக்குகளை எந்த விலை கொடுத்தும் அடைய முடிகின்றது

Edited by நிழலி

  • கருத்துக்கள உறவுகள்

உண்டு, சிங்கள சமூகம் இந்த குறும் மையவாத சிக்கலில் இருந்து தப்பி சிங்களவன் என்ற பொது அடையாளத்தை, மையத்தை நோக்கி ஒருங்கிணைக்கப் பட்டமையால் தான் அவர்களால் தம் இலக்குகளை எந்த விலை கொடுத்தும் அடைய முடிகின்றது

சிங்கள சமுகத்திலும் நிறையவே குறும்மையவாதம் உண்டு...ஆனால் தமிழன் என்ற ஒரு இனம் அங்கு இருப்பதால் சகல மையவாதமும் அவன் பக்கம் திருப்பி விட்டு சிங்களம் குளிர் காயுது....

சிங்களவனும் ,தமிழனும்தான் உலகத்தில் மையவாதத்துடன் வாழ்கிறான் என்றில்லை.....மனிதன் என்றால் மையவாதம் இருக்கத்தான் செய்யும்

  • கருத்துக்கள உறவுகள்

கவிதைக்கும், விளக்கத்திற்கும் நன்றி சுகன்! :)

உண்டு, சிங்கள சமூகம் இந்த குறும் மையவாத சிக்கலில் இருந்து தப்பி சிங்களவன் என்ற பொது அடையாளத்தை, மையத்தை நோக்கி ஒருங்கிணைக்கப் பட்டமையால் தான் அவர்களால் தம் இலக்குகளை எந்த விலை கொடுத்தும் அடைய முடிகின்றது

சிறு திருத்தம். சிங்கள சமூகம் முற்று முழுதாக இந்த குறும்மையவாத போக்கிலிருந்து விடுபட்ட இனமல்ல.

தங்களுக்குள்ளேயே போட்டி ஒற்றுமையின்மை, எரிச்சல், பொறாமை, சுயநலம், தற்பெருமை, இராஜதந்திரமற்ற வெறும் புத்தகப் புழு கூட்டத்துடன் மோதி வென்றார்கள். ஒப்பீட்டளவில் மாத்திரமே சிங்கள சமூகத்தின் வெற்றி மிகப் பெரிதாக இருக்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

மீண்டும் யாழ் களத்தில் வந்து காத்திரமான கவிதையைத் தந்த சுகனுக்கு நன்றி :)

இவற்றை எல்லாம் உச்சரிக்கும் போது சற்றும் நா கூசவில்லை ?

சொறிவதற்கு வேறு வார்த்தைகள் கிடைக்கவில்லை?

தற்போது நாம் கையில் எடுத்துக்கொண்டுள்ள மனிதாபிமானம், மனித சுதந்திரம், பன்மைத்துவம் போன்றவற்றை உச்சரிக்கும் போதும் நா கூசுவதில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

விவாதம் அல்லது கருத்தாடல் என்ற பதங்களின் ஊடாக எல்லோரையும்ஒரு கூடையில் போட்டு நடக்கும் நல்ல காரியங்களைக்கூட அதுவும் இப்படித்தான் என்பது போன்ற நிலையை உருவாக்க உழைக்கும் எந்த எழுத்தும் மல்லாந்து படுத்து துப்பும் குப்பை வேலையே. :(

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.