Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தலைவணங்குகிறேன் அண்ணை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

pirapa.jpg

அன்றைய காலத்தில்

அனைவரிற்கும் தம்பி

அடுத்து வந்தவர்களிற்கெல்லாம்

அண்ணன்.

அன்பான கணவன்

அற்புதமான தந்தை

அலையாய் எழுந்த தமிழினத்திற்கு

தலைவன்.

தன்மானத்தை விற்றவர்களின்

தலை வலி

எதிரிக்கு எட்டாத சூரியன்

சுற்றியிருந்த சுயநலக்கூட்டத்திற்கு

புகழ்பாடும் கடவுள்.

தமிழினத்தின்

குறியீடு

தலைவணங்குகிறேன்

அண்ணை

  • கருத்துக்கள உறவுகள்

கவிதைக்கு, நன்றிகள்! சாத்திரியார்!

ஒன்றே ஒன்று மட்டும், எனக்குப் புரியவில்லை!

பலர் பிரபாகரனை விமரிசனம் செய்கின்றார்கள்!

ஆனால், மற்றவர்கள் மாதிரி இருந்திருந்தால், ஒரு விழியசைவில், உலகத்தின் மாபெரும் கோடீஸ்வரனாக பிள்ளைகள், குட்டிகளுடன் பெரு வாழ்வு வாழ்ந்திருக்கலாம்!

ஆனால், அவர் அவ்வாறான வாழ்வை வாழ விரும்பவில்லை, என்பதே உண்மை!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அன்றைய காலத்தில்

அனைவரிற்கும் தம்பி

அடுத்து வந்தவர்களிற்கெல்லாம்

அண்ணன்.

அன்பான கணவன்

அற்புதமான தந்தை

அலையாய் எழுந்த தமிழினத்திற்கு

தலைவன்.

தன்மானத்தை விற்றவர்களின்

தலை வலி

எதிரிக்கு எட்டாத சூரியன்

சுற்றியிருந்த சுயநலக்கூட்டத்திற்கு

புகழ்பாடும் கடவுள்.

தமிழினத்தின்

குறியீடு

தலைவணங்குகிறேன்

அண்ணை

தமிழீழ மண்ணிற்காகவும், மக்களுக்காகவும் இறுதி வரை போராடி வீரமரணத்தைத் தழுவிக் கொண்ட எமது தலைவருக்கும், போராளிகளுக்கும், மக்களுக்கும் எமது வீரவணக்கங்கள்!

உள்ளதைச் சொல்வற்கு நன்றிகள் சாத்திரி . மனச்சாட்சியுடன் கதைப்பவர்கள் இந்தக்காலத்தில் ஏனோ குறைவுதான் . எனது மூன்றாவது பச்சை உங்களுக்கு.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கவிதைக்கு, நன்றிகள்! சாத்திரியார்!

ஒன்றே ஒன்று மட்டும், எனக்குப் புரியவில்லை!

பலர் பிரபாகரனை விமரிசனம் செய்கின்றார்கள்!

ஆனால், மற்றவர்கள் மாதிரி இருந்திருந்தால், ஒரு விழியசைவில், உலகத்தின் மாபெரும் கோடீஸ்வரனாக பிள்ளைகள், குட்டிகளுடன் பெரு வாழ்வு வாழ்ந்திருக்கலாம்!

ஆனால், அவர் அவ்வாறான வாழ்வை வாழ விரும்பவில்லை, என்பதே உண்மை!

உண்மைதான் கொண்ட கொள்கைக்காக குடும்பத்தையே கொடுத்தவர். அதனால்தான் தமிழினத்தின் குறியீடு அவர்.

சாத்ஸ் அண்ணை!

தங்களின் கவிவரிகளுக்கும்...... நான் தலை வணங்குகின்றேன்.

வெளிப்படையான உண்மைகளை வரிகளாய் வெளிப்படுத்தியிருக்கின்றீர்கள்.

நன்றி அண்ணா! :)

"பாவாம்.... அப்பிடி இப்பிடி" என்று எழுதினால் ஆயிரம் உரிமைக்குரலாய் தொடரும் ....... கருத்துக்கள்! ஆனால், உண்மையை உண்மையாய் எழுதும்போது அந்த உரிமைக்குரல்கள் எல்லாம் எங்கே போய்விட்டார்கள்?

விமர்சனங்களுக்கும் வில்லங்கமான கருத்துக்களுக்கும் காட்டும் எதிர்ப்பாங்கான அதீத ஈடுபாட்டினை........ வாழ்த்துக்களும் யதார்த்தமான கருத்துக்களும் வரும்போது, வரவேற்பதில் காட்டுவதில்லை நம் உறவுகள்!!!!!!!!

எல்லோரும் "பிஸி" போல............ :)

கவிதைக்கு, நன்றிகள்! சாத்திரியார்!

ஒன்றே ஒன்று மட்டும், எனக்குப் புரியவில்லை!

பலர் பிரபாகரனை விமரிசனம் செய்கின்றார்கள்!

ஆனால், மற்றவர்கள் மாதிரி இருந்திருந்தால், ஒரு விழியசைவில், உலகத்தின் மாபெரும் கோடீஸ்வரனாக பிள்ளைகள், குட்டிகளுடன் பெரு வாழ்வு வாழ்ந்திருக்கலாம்!

ஆனால், அவர் அவ்வாறான வாழ்வை வாழ விரும்பவில்லை, என்பதே உண்மை!

எனக்கு இது விளங்கவில்லை புங்கையூரான்.எப்படி ஒரு சாதாரண ஆசிரியரின் மகன் உலகத்தின் மாபெரும் கோடிஸ்வரன் ஆகியிருக்கலாம் என்பது .

உண்மையான கவிதை சாத்திரியார் .ஒரு தலைவனாக ,போராளியாக பார்க்காமல் கடவுளாக்க முனைந்ததும் ஒரு வித அரசியலே.

Edited by arjun

தன்மானத்தை விற்றவர்களின்

தலை வலி

எதிரிக்கு எட்டாத சூரியன்

சுற்றியிருந்த சுயநலக்கூட்டத்திற்கு

புகழ்பாடும் கடவுள்.

கண்கண்ட சாட்சியங்களுக்கான வரிகள்.

நல்ல கவிதை சாத்திரி.

தனித்துவமாய் நின்றவன்

தனியாகவே போய் விட்டான்

இழி கூட்டத்தை விட்டு

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு இது விளங்கவில்லை புங்கையூரான்.எப்படி ஒரு சாதாரண ஆசிரியரின் மகன் உலகத்தின் மாபெரும் கோடிஸ்வரன் ஆகியிருக்கலாம் என்பது .

உண்மையான கவிதை சாத்திரியார் .ஒரு தலைவனாக ,போராளியாக பார்க்காமல் கடவுளாக்க முனைந்ததும் ஒரு வித அரசியலே.

காலத்தின் கரைவில், இருவரும் வேறு, வேறு தளங்களில் பயணிக்கிறோம்! இருவரது பார்வைகளும் வேறு, வேறானவை!

எதுவேனினும் இது பற்றி விவாதிக்கலாம்!ஆனால் இது தகுந்த தருணமல்ல!

இருவரும் தமிழால் இணைந்துள்ளோம்!

எனவே, ஒரு உன்னத நோக்கத்திற்காக உயிர் நீத்த உறவுகளுக்கு, மரியாதை செலுத்தும் வாரத்தில்,இந்த விரும்பாத விளைவுகளைத் தரும் விவாதங்களை இப்போதைக்கு, ஒத்தி வைப்போம்! நன்றிகள், அர்ஜுன்!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு இது விளங்கவில்லை புங்கையூரான்.எப்படி ஒரு சாதாரண ஆசிரியரின் மகன் உலகத்தின் மாபெரும் கோடிஸ்வரன் ஆகியிருக்கலாம் என்பது .

உண்மையான கவிதை சாத்திரியார் .ஒரு தலைவனாக ,போராளியாக பார்க்காமல் கடவுளாக்க முனைந்ததும் ஒரு வித அரசியலே.

அர்ஜீன் இதற்கான பதிலை நிச்சயமாக ஞாபகம்வைத்து இன்னொரு தடைவை கேழுங்கள் நிச்சயமாக நான் பதில் தருவேன். ஆனால் நிச்சயமாக மீண்டும் மீண்டும் சொல்வேன் பிரபாகரன் மீதான விமர்சனத்தை வைப்பதற்கு எவரிற்கும் அருகதையில்லை. மற்றும்படி போராட்டகாலங்கள் அதன் வழிமுறைகள். கட்டமைப்புக்கள் வழிநடத்திய முறைமைகள் பற்றி தாராளமாக விவாதியுங்கள் நானும் தயார்.

மற்றும்படி அண்ணையை சிறந்த இராணுவல்லுனராய் நிருவாகியாய் விலைபோகாத தலைவனாய் பார்ப்பதை விட்டு விட்டு முருகன் கோபுரம் என்று புகழ்பாடியதில் கடவுளாக்கியதில் எனக்கும் உடன்பாடில்லை

  • கருத்துக்கள உறவுகள்

நான் கண்ணால் கண்ட தெய்வம்.

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி அண்ணா பகிர்வுக்கு, தலைவர் நாம் நேரில் கண்ட தெய்வம், அவரின் காலத்தில் வாழ கிடைத்தது மிகப் பெரிய பாக்கியம் எமக்கு.

நக்குகிற நாய்க்கு செக்கென்ன சிவலிங்கமென்ன என்ற பழமொழிதான் ஞாபகம் வருகிறது சிலரை நினைத்தால்

காலத்தின் கரைவில், இருவரும் வேறு, வேறு தளங்களில் பயணிக்கிறோம்! இருவரது பார்வைகளும் வேறு, வேறானவை!

எதுவேனினும் இது பற்றி விவாதிக்கலாம்!ஆனால் இது தகுந்த தருணமல்ல!

இருவரும் தமிழால் இணைந்துள்ளோம்!

எனவே, ஒரு உன்னத நோக்கத்திற்காக உயிர் நீத்த உறவுகளுக்கு, மரியாதை செலுத்தும் வாரத்தில்,இந்த விரும்பாத விளைவுகளைத் தரும் விவாதங்களை இப்போதைக்கு, ஒத்தி வைப்போம்! நன்றிகள், அர்ஜுன்!

பக்குவமான பதிலுக்கு நன்றி.

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு இது விளங்கவில்லை புங்கையூரான்.எப்படி ஒரு சாதாரண ஆசிரியரின் மகன் உலகத்தின் மாபெரும் கோடிஸ்வரன் ஆகியிருக்கலாம் என்பது .

உண்மையான கவிதை சாத்திரியார் .ஒரு தலைவனாக ,போராளியாக பார்க்காமல் கடவுளாக்க முனைந்ததும் ஒரு வித அரசியலே.

சிர்தார்தனின் சுவிஸ் வங்கி கணக்கில் பல கோடி..............

டாக் லேஸ் தேவா கணக்கில் பல கோடி இருக்கு...... இவர்களுடைய தாத்தா பாட்டி மார் முதலீடு செய்த பணமா அது?

இந்திய சிறிலங்கா ஒப்பந்தம் கைச்சான போது ராஜீவ் காந்தி தலைவரை கேட்டது என்ன என்று தெரியுமா?

பிரேமதாசா கேட்டது................ சேனாதிபதி பதவியை விட இலங்கையில் என்ன வேண்டும்?

புலிகளை வந்து இராணுவத்துடன் சேரும் படிக்கு.

என்ன அண்ணே விட்ட சர்வதேச அரசியல் பேசுறீங்கள். கேள்விய பார்த்தால் அரிவரி தேறவில்லைபோல இருக்கு.

  • கருத்துக்கள உறவுகள்

அர்ஜீன் இதற்கான பதிலை நிச்சயமாக ஞாபகம்வைத்து இன்னொரு தடைவை கேழுங்கள் நிச்சயமாக நான் பதில் தருவேன். ஆனால் நிச்சயமாக மீண்டும் மீண்டும் சொல்வேன் பிரபாகரன் மீதான விமர்சனத்தை வைப்பதற்கு எவரிற்கும் அருகதையில்லை. மற்றும்படி போராட்டகாலங்கள் அதன் வழிமுறைகள். கட்டமைப்புக்கள் வழிநடத்திய முறைமைகள் பற்றி தாராளமாக விவாதியுங்கள் நானும் தயார்.

மற்றும்படி அண்ணையை சிறந்த இராணுவல்லுனராய் நிருவாகியாய் விலைபோகாத தலைவனாய் பார்ப்பதை விட்டு விட்டு முருகன் கோபுரம் என்று புகழ்பாடியதில் கடவுளாக்கியதில் எனக்கும் உடன்பாடில்லை

முருகன் வாழ்ந்த காலத்தில் அவன் பிரபாகரன்.

பிரபாகரன் காலத்தில் இவன்தான் முருகன்.

இருவருடைய உழைப்பும் வாழ்க்கையும் ஒன்றுதான்.

தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் ...........................!

தேச நலன் அவர்களுடைய கடன்.

தேன் தமிழ்தான் அவர்களின் திடன்.

கடவுள் எப்படி இருக்க வேண்டும் என்று எதிர்பார்கிறீர்கள்?

நாங்கள் பிரபகரன்போல் இருக்கவேண்டும் என்று ஆசைபடுகிறோம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சாத்திரி அண்ணா, கவிதை அருமை. நன்றி.

நாங்கள் என்ன அண்ணனை, நீல வண்ண மாய வர்ணா, தமிழை உருவாக்கிய பிரம்மா, தமிழர்களின் ஜீசஸ் என்றா புகழ்கிறோம்?

தமிழ் போர் கடவுள் முருகன் பெயரை தானே பாவிக்கிறோம்? அவரை முருக்கன் என்று அழைக்காமல்?

நல்லூர் ஆதீனத்தார் மட்டும் தன்னை கடவுளாக சித்தரித்து திரு நீறு வீசலாம்.

கண்ட செப்பையும், கருங்கல்லையும் கடவுளென்று அழைக்கலாம்.. அதுக்கு பாலூத்தி வீணடிக்கலாம்... ஆனால் நிஜக் கடவுளை சாதாரண மனிதனாக பார்க்கவேண்டுமா?

மற்றும் இங்கே முருக கடவுளின் ஆறாயிரம் வருட ஆதாரம்.

http://www.harappa.com/script/maha12.html

http://www.harappa.com/arrow/stone_celt_indus_signs.html

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எனக்கு இது விளங்கவில்லை புங்கையூரான்.எப்படி ஒரு சாதாரண ஆசிரியரின் மகன் உலகத்தின் மாபெரும் கோடிஸ்வரன் ஆகியிருக்கலாம் என்பது .

உண்மையான கவிதை சாத்திரியார் .ஒரு தலைவனாக ,போராளியாக பார்க்காமல் கடவுளாக்க முனைந்ததும் ஒரு வித அரசியலே.

ஒரு சாதாரண ஆசிரியனின் மகன், உலக வல்லரசை அடித்து துரத்தவில்லையா? அது சாத்தியம் என்றால் அவருக்கு காசு பார்பதா பிரச்சினை?

சும்மா காவியை கட்டிக்கொண்டு ஐம்பதாயிரம் கோடி குந்தின இடத்தில இருந்து பார்க்கலாம் என்றால் பதினாறு வயதில் எங்களுக்கு சுதந்திரம் வாங்க சிந்தித்த மூளை எவ்வளவை யோசித்து காசு பார்த்திருக்கலாம்.

வாத்தியார் பிள்ளை என்றால் அவர் டியூசன் மட்டுமே வைச்சு காசு பார்க்கலாம்?

மற்றும் அரசியல் இல்லாத ஒரு துறை காட்டமுடியுமா? எங்கட வீடுகளில் நடக்காத அரசியலா அர்ஜுன்?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

முருகன் வாழ்ந்த காலத்தில் அவன் பிரபாகரன்.

பிரபாகரன் காலத்தில் இவன்தான் முருகன்.

இருவருடைய உழைப்பும் வாழ்க்கையும் ஒன்றுதான்.

தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் ...........................!

தேச நலன் அவர்களுடைய கடன்.

தேன் தமிழ்தான் அவர்களின் திடன்.

கடவுள் எப்படி இருக்க வேண்டும் என்று எதிர்பார்கிறீர்கள்?

நாங்கள் பிரபகரன்போல் இருக்கவேண்டும் என்று ஆசைபடுகிறோம்.

மருது, கலக்கிட்டீங்கள்.

சும்மா... கமெரா முன்னால விரலை சுத்துறவன் எல்லாம் கடவுள் என்று பால் குடம் எடுக்குறாங்கள்.

ஹீரோ ஓடிவந்து காதலியின் இடுப்பை பிடித்து நசிக்க, "தெய்வமே" என்று படம் பாக்க விடாமல் முன்னுக்கு எழும்பி நிண்டு கத்தலாம்.

எங்கட தலைவனை முருகன் என்று அழைக்க கூடாது.

எங்கட தலைவனை சாதாரண போராளியாக பார்க்க வேண்டும்.

நாங்கள் தலைவனுக்கு கோவில் தொடக்கி அருச்சனை காசை பிரிச்சு போடுவம் என்று பயமோ என்னவோ.

வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வான்உறையும் தெய்வத்துள் வைக்கப் படும்-திருக்குறள்

ஐயனே சொல்லிவிட்டான் , இனிஎன்ன மயக்கம் .

Edited by kssson

  • கருத்துக்கள உறவுகள்

சுற்றியிருந்த சுயநலக்கூட்டத்திற்கு

புகழ்பாடும் கடவுள்.

சுற்றியிருந்தவர்கள் எல்லாம் சுயநலமிகள் இல்லை. சுயநலமிகள் உள்வட்டத்திற்குள் இருந்திருக்கமாட்டார்கள்..

தமிழர்களிலே தனித்துவமானவர் நான் கண்ட ஒரேமனிதன் அவர்தான் எங்கள் தேசியத்தலைவர்.

கடவுள் எப்படி இருக்க வேண்டும் என்று எதிர்பார்கிறீர்கள்?

நாங்கள் பிரபகரன்போல் இருக்கவேண்டும் என்று ஆசைபடுகிறோம்.

இதுதான்.................. பலருடைய எண்ணத்தில் இருக்கு!

நன்றி மருதங்கேணி :)

  • கருத்துக்கள உறவுகள்

நானும் தலைவரையும்,மாவீரர்களையும் தலை வணங்கி,பொருத்தமான தருணத்தில்,பொருத்தமான கவிதை படைத்த சாஸ்திரிக்கு நன்றி.

சாத்ஸ் அண்ணை!

தங்களின் கவிவரிகளுக்கும்...... நான் தலை வணங்குகின்றேன்.

வெளிப்படையான உண்மைகளை வரிகளாய் வெளிப்படுத்தியிருக்கின்றீர்கள்.

நன்றி அண்ணா! :)

"பாவாம்.... அப்பிடி இப்பிடி" என்று எழுதினால் ஆயிரம் உரிமைக்குரலாய் தொடரும் ....... கருத்துக்கள்! ஆனால், உண்மையை உண்மையாய் எழுதும்போது அந்த உரிமைக்குரல்கள் எல்லாம் எங்கே போய்விட்டார்கள்?

விமர்சனங்களுக்கும் வில்லங்கமான கருத்துக்களுக்கும் காட்டும் எதிர்ப்பாங்கான அதீத ஈடுபாட்டினை........ வாழ்த்துக்களும் யதார்த்தமான கருத்துக்களும் வரும்போது, வரவேற்பதில் காட்டுவதில்லை நம் உறவுகள்!!!!!!!!

எல்லோரும் "பிஸி" போல............ :)

கவிதை ஒரு நாளைக்கு எத்தனை பேர் தங்கள் கவிதை,கட்டுரைகளை கொண்டு வந்து இணைக்கிறார்கள் சொல்லுங்கள் பார்ப்போம்! அத்தனை பேருடைய ஆக்கங்களையும் படித்து விட்டு கருத்து எழுத எல்லோருக்கும் நேரம் இருக்குதா?...நான் கூட உங்கள் பல கவிதைகளை படித்து விட்டு ஒன்றும் எழுதாமல் பச்சையை மட்டும் குத்தி விட்டு போயிருக்கிறேன்...நீங்கள் சொல்வதைப் பார்த்தால் கதைக்கோ,கவிதைக்கோ ஒருவரும் விமர்சனம் வைக்க கூடாது அப்படி வைத்தாலும் விமர்சனம் மாற்றுக் கருத்தாக இருக்க கூடாது என நினைக்கிறீங்கள் போல இருக்குது...மெளனமாக இருந்தால் பல நேரம் ஏற்றுக் கொள்கிறோம் என அர்த்தம் சில நேரம் விவாதித்துப் பயனில்லை என அர்த்தம்...நன்றி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.