Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வெள்ளைக் கடற்கரையில்...

Featured Replies

வெள்ளைக் கடற்கரையில்...

வெள்ளைப் புற்றடி விநாயகரை

வணங்கியே நாம் செல்ல

மண்கும்பான் கும்பி மணல்

மலையழகு காட்டும்.

மணலிடையே பனைமரங்கள்

நுங்குதாங்கி நிற்கும்

இதைப் பாhத்து நடக்கையிலே

சோமர் கிணறு தெரியும்

சுகமான குளிப்பென்று - அது

எம்மை அழைக்கும்.

தெங்குகள் இடையினிலே

பள்ளிவாசல் மிளிரும்

தெவிட்டாத நீர் இங்கேயென

சாட்டி வழி சொல்லும்.

மாதாவின் திருத்தலத்தின்

மணி ஓசை கேட்கும்;

மனத்திலே அதன் ஒலி

அருள் நினைவு சுரக்கும்

மேல் வானில் செங்கதிர்கள்

அழகுக் கோலம் தெளிக்கும்

அதன் கீழே பறவை இனம்

வரிக் கோலம் போடும்.

கீழ்வானம் தேடியெங்கும்

படகுகள் பாய் இழுக்கும்

அதைப் பாhர்த்துச் சிறையாக்கள்

பாய்ந் தழகு கொடுக்கும்

இதைப் பார்த்து நிற்கையிலே

கடல் அலைகள் அழைக்கும்

இருந்து பார் என்றெம்மை

வெள்ளை மணல் பாய் விரிக்கும்.

நிலம் மீது கடல் வந்து

அலை கொண்டு மோதும்

அலை போன பின்னாலே

நண்டு படம் கீறும்

இதைப் பார்த்த அலையொன்று

அதை அழித்துப் போகும்

அதனோடு அந் நண்டு

கடலுக்குள் செல்லும்.

இவை கண்டு என்னவளும் -தன்

கால் நனைத்து மகிழ்ந்தாள்.

அதன் பின் அவள்...

கரைமேலே குழி ஒன்று தோண்டி

கரத்தாலே நீர் கொஞ்சம் மொண்டு - என்

வாயுள்ளே அதைமெல்ல விட்டு

புள்ளிமான்போல துள்ளி அவள் நகர்ந்தாள்.

சுவையான நீர் என்று கூறி நானும்

மெதுவாக என் பக்கம் இழுத்தேன்.

கொடிபோலே என் கையில் துவண்டு

பூப்போலே மென்மண்மீது வீழ்ந்தாள்.

மயிலோடு நானும் விழ்ந்தேன்

மதிமுகம் பொத்தியே மடிமீது சாய்ந்தாள்.

இதைப் பார்த்த இரவியனும் வெட்கத்தால்

இறங்கினான் முகம் சிவக்க மேற்கினிலே.

இதைக் கண்ட முள்ளிப்பூ ஒன்று – அவள்

இடையினிலே குத்தியதால் எழுந்து

கடல் உள்ளே மெதுவாக இறங்க - நானும்

கைநீட்டி அவள் பின்னே சென்N;றன்.

என் வருகை கண்டு அவளோ

இறங்கினாள் ஆழ்கடல்pன் னுள்ளே

அலையிடை அவள் கண்கள் ஒளிக்க

இரு கயல்கள் நீந்துவதாய் நினைத்தேன்.

ஆவலாய் அங்கு நானும் போக

கோபமாய் அலை ஒன்று வந்து

வேகமாய் நீரினுள்ளே தள்ள

பாவமாய் என் கையைப் பிடித்தாள்.

கருநாகம் சுற்றியதுபோல் கூந்தல்

என் கையெல்லாம் சுற்றியதால் பயந்தேன்.

அலைமேலே முத்துக்கள்போலே

பல்வரிசை அழகுகாட்டச் சிரித்தாள்.

இதமான குளிரொன்று வரவே

இறங்கினோம் இருவரும் கரையே.

பௌர்ணமி நிலா முகம் காட்ட

பசியுடன் கரையைச் சேர்ந்தோம்.

அந்தியேட்டி மடத்தி னுள்ளே

ஆடையை மாற்றிய பின்னே

மடுவார்கேணி தாண்டி மயானக்கரை இறங்கி;

ஐயனாரை வணங்கி அமைதியாகச் சென்றோம்.

  • கருத்துக்கள உறவுகள்

ஆவலாய் அங்கு நானும் போக

கோபமாய் அலை ஒன்று வந்து

வேகமாய் நீரினுள்ளே தள்ள

பாவமாய் என் கையைப் பிடித்தாள்.

கருநாகம் சுற்றியதுபோல் கூந்தல்

என் கையெல்லாம் சுற்றியதால் பயந்தேன்.

அலைமேலே முத்துக்கள்போலே

பல்வரிசை அழகுகாட்டச் சிரித்தாள்.

நல்ல ஒரு கவிதைக்கு நன்றிகள், செண்பகன்!

சாட்டியின் நினைவுகளை மீண்டும் கண் முன்பு கொண்டு வந்ததுக்கு நன்றிகள்! >

நல்ல கவிவரிகள் செண்பகன்!

  • கருத்துக்கள உறவுகள்

மூச்சு விடாமல் எழுதியிருக்கிறிர்கள்...நானும் மூச்சுவிடாமல் படித்து முடித்தேன்...நீங்கள் நடந்துபோன அந்த வெள்ளை மணல்க் கடற்க்கரையில் நடந்தது போலிருக்கு...என்ன துணைக்குத்தான் யாருமில்லை...தனிய நடந்தேன்... :D

  • தொடங்கியவர்

கருத்துரை வழங்கிய புங்கையூரான், நிகேக, சுபேஸ் ஆகியோருக்கு எனது மனமார்ந்த நன்றிகள்.

செம்பகன்...! இப்பதான் பார்த்தேன்! அருமையான கவிதை.

தங்களின் கவி வரிகளில் என் மனமும் நனைந்தது அந்த கடலலைகளில். :)

வார்த்தைக் கோர்ப்பும் அதனாலான சப்த ரிதமும் நன்றாகவே அமைந்திருக்கின்றது.

பாராட்டுக்கள்! :)4

Edited by கவிதை

அழகான கவிதை செண்பகன்!!!

"இதைப் பார்த்த இரவியனும் வெட்கத்தால்

இறங்கினான் முகம் சிவக்க மேற்கினிலே."

அருமையான வரிகள்!!

  • கருத்துக்கள உறவுகள்

என் தாயக மண் மணம் வீசும் கவிதை .....

.என் வருகை கண்டு அவளோ

இறங்கினாள் ஆழ்கடல்pன் னுள்ளே

அலையிடை அவள் கண்கள் ஒளிக்க

இரு கயல்கள் நீந்துவதாய் நினைத்தேன்........

கண்கள் ஒளிர ...கயல்கள் நீந்த

கவிஞ்சன் தோற்றான் போங்கள் :D ...........பாராட்டுக்கள் .

.

  • கருத்துக்கள உறவுகள்

பாராட்டுக்கள் தொடருங்கள் :)

  • தொடங்கியவர்

கவிதை வரிகளை பாராட்டிய கவிதை, அறிவன், நிலாமதி அக்கா, சாத்திரி ஆகியோருக்கு மகிழ்ச்சியுடன் நன்றிகள்.

ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன் மகனைச்

சான்றோன் எனக் கேட்ட தாய்

  • கருத்துக்கள உறவுகள்

வெள்ளைக் கடற்கரை நினைவுகளை மீண்டும் மீட்டியதற்கு நன்றி.வாழ்த்துக்கள்.தொடரட்டும் தங்கள் பணி!!!!!!!!!!!!!

  • கருத்துக்கள உறவுகள்

ஆஹா ஊர் வாச‌னை தூக்குது...பாராட்டுக்கள்...தொட‌ர்ந்தும் எழுதுங்கள்

ஊரை வர்ணித்த விதம், கூடவே பெண்ணை வர்ணித்த விதம் மிக அருமை. உண்மையில் மூச்சு விடாமல் தான் படிக்கமுடிந்தாலும் மிக நன்றாக இருக்கிறது.

வாழ்த்துக்கள் . தொடருங்கள்.......

  • கருத்துக்கள உறவுகள்

செண்பகன் வர்ணனை அருமை, தொடர்ந்து பகிருங்கள்

Edited by உடையார்

  • கருத்துக்கள உறவுகள்

அழகிய கவிதை வரிகள் செம்பகன்.

வெள்ளைக்கடற்கரை சில கிலோ மீட்டர் தூரமே... இருந்தும், சில வருடங்களுக்கு முன்... ஒருமுறையே அங்கு குளிக்க சந்தர்ப்பம் ஏற்பட்டது.

  • கருத்துக்கள உறவுகள்

இதுவரை அந்தக் கடற்கரைக்கு நான் செல்லவில்லை.

செம்பகனின் கவிதை அங்கே கூட்டிச் சென்றுவிட்டது.

அழகான ஆழமான கடலைப் போல உங்கள் கவிதையும் இருக்கின்றது

வாழ்த்துகள்

  • தொடங்கியவர்

வெள்ளைக் கடற்கரைக்கு வந்து கால் நனைத்துச் சென்றவர்களுக்கும் கருத்தெழுதியவர்களுக்கும் எனது மனப்பூர்வமான நன்றிகள். வெள்ளைக் கடற்கரையில் இருந்து சுமார் ஒரு மைலுக்கு அப்பால் சில கற்பாறைகள் உண்டு. இதற்கு சட்டிவைத்தபார் எனப் பெயர். குளிக்கும்போது இப்பகுதிக்கு நண்பர்களுடன் நீந்திச் சென்றதுண்டு, அங்கே அழகான முருகைக் கற்கள் பல வர்ணங்களில் காட்சி அளிக்கும். சென்றால் பார்க்க முயற்சி செய்யுங்கள். நன்றி.

  • 7 months later...
  • கருத்துக்கள உறவுகள்

கவிதையை வாசிக்க முன்னர் மற்றவர்கள் எழுதியதை வாசிக்க நேர்ந்தது. என்னடா மூச்சுவிடாமல் வாசித்தோம் என இருவர் எழுதியிருக்கின்றனரே என எண்ணியபடி கவிதையை வாசிக்கத்தொடங்கினால் மூச்சு முட்டித்தான் போய்விட்டது. நல்ல கவிதை.

  • கருத்துக்கள உறவுகள்

கவிதையை வாசிக்க முன்னர் மற்றவர்கள் எழுதியதை வாசிக்க நேர்ந்தது. என்னடா மூச்சுவிடாமல் வாசித்தோம் என இருவர் எழுதியிருக்கின்றனரே என எண்ணியபடி கவிதையை வாசிக்கத்தொடங்கினால் மூச்சு முட்டித்தான் போய்விட்டது. நல்ல கவிதை.

கவிதையை... பற்றி கருத்து சொன்னீர்கள் சகோதரி.

ஒகே...., மற்றவர்களின் கருத்தைப் பற்றி, உங்களின் கருத்தையும்... தெரிவிக்கலாம் தானே... :D

பிற்குறிப்பு: உங்களது பெயர் மிக நீண்டதாக உள்ளது.

சுருக்கமாய்... அழைக்க, ஏதாவது வழி உள்ளதா? :rolleyes:

மீண்டும் சாட்டி கடற்கரைக்கு அழைத்துச்சென்ற நல்லதொரு கவிக்கு நன்றிகள் செண்பகன்.

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி சென்பகன் .மீண்டும் சாட்டி கடற்கரையை நினைவுபடுத்தியதற்கு

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.