Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழரின் வாழ்வியல் கருவூலம் [கருத்துக்கள்]

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல முயற்சி

தொடருங்கள். வாழ்த்துக்கள். 1

  • Replies 179
  • Views 20.5k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நல்லதொரு திரி..

மிகவும் பாராட்டப்பட வேண்டிய ஒன்று. பேஸ்புக்கில் எல்லாம் இணைத்தால் அதிகம் இளையவர்களைக்கவரக்கூடும். தமிழ் என்றால் யாரும் எட்டிப்பார்க்க மாட்டாங்கள். ஆங்கிலம், ப்ரெஞ் சில் இருப்பதால் proverbs போல விரைவில் கவரக்கூடும். முயற்சி திருவினையாக்க வாழ்த்துக்கள் அண்ணா. :)

(கொலைவெறி போல பப்ளிசிட்டி பண்ணுங்கப்பா :icon_idea: )

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் கோமகன்

தூர நோக்கோடு நீங்கள் செய்யவிருக்கும் திரியை மிகவும் வரவேற்கிறேன்.

குறளையும் ஆங்கிலம் பிரஞ்சு மொழிகளில் எழுதினால் நன்று.

அடுத்து முக்கியமாக இதற்கென்று இன்னொரு திரி தொடங்க வேண்டும்.

இப்போது நீங்கள் தொடங்கிய திரியில் நீங்கள் மட்டும் தான் பதிய வேண்டும்.மறு திரியில் சக உறவுகள் கருத்தெழுதுவதை வைக்கலாம்.இல்லையென்றால் புதிதாக வாசிப்பவர்கள் எல்லோரது கருத்துக்களையும் வாசித்து கொண்டு போக கடைசியில் உங்கள் எண்ணம் நிறைவேறாமல் போகலாம். தொடக்கத்திலேயே இதற்கான கருத்துக்களை எழுத இங்கே அழுத்தவும் என்று ஒரு சுட்டியை தொடக்கவும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வணக்கம் கோமகன்

தூர நோக்கோடு நீங்கள் செய்யவிருக்கும் திரியை மிகவும் வரவேற்கிறேன்.

குறளையும் ஆங்கிலம் பிரஞ்சு மொழிகளில் எழுதினால் நன்று.

அடுத்து முக்கியமாக இதற்கென்று இன்னொரு திரி தொடங்க வேண்டும்.

இப்போது நீங்கள் தொடங்கிய திரியில் நீங்கள் மட்டும் தான் பதிய வேண்டும்.மறு திரியில் சக உறவுகள் கருத்தெழுதுவதை வைக்கலாம்.இல்லையென்றால் புதிதாக வாசிப்பவர்கள் எல்லோரது கருத்துக்களையும் வாசித்து கொண்டு போக கடைசியில் உங்கள் எண்ணம் நிறைவேறாமல் போகலாம். தொடக்கத்திலேயே இதற்கான கருத்துக்களை எழுத இங்கே அழுத்தவும் என்று ஒரு சுட்டியை தொடக்கவும்.

நல்ல கருத்து. :)

ஒரு பச்சை..

கருத்துக்களையும் ஆலோசனைகளையும் இதில் பதியுங்கள்

நேசமுடன் கோமகன்

தமிழரின் வாழ்வியல் கருவூலம்

உங்கள் முயற்சிக்கு நன்றி கோமகன்.

இதில் பிரெஞ்சு மொழியை google மூலம் மொழிபெயர்க்கிறீர்கள் என்று நினைக்கிறேன். நுண்ணிய பொருளடக்கத்துடன் உள்ள திருக்குறள் இப்படி மொழிபெயர்க்கும்போது தவறான அர்த்தத்தைத் தரலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

கோமகனின் முயற்சிக்குப் பாராட்டுக்கள்

இணையவனுக்கும் நன்றிகள்.

  • கருத்துக்கள உறவுகள்

கோமகன் வாழ்த்துகள், நல்ல முயற்ச்சி, கீழ் உள்ள இணைப்பில் ஆங்கில மொழி பெயர்ப்பு & கருத்துடன் உள்ளது, தேவையென்றால் பாவிக்கவும்

http://perthmurugan.org.au/uploads/Thirukkural_with_Meaning.pdf

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல ஒரு முயற்சி, கோமகன்!

தெய்வப் புலவனின் கருத்துக்கள், இந்து மதத்தின் கருத்துக்களில் இருந்து முற்றாக வித்தியாசமான பார்வையுடயவை!

இவர் ஒரு இந்துவாக, சிந்திக்காத படியினால் தான், காலத்தால் அழியாத கருத்துக்களை இவரால் எழுத முடிந்தது!

இவரது முற்போக்கான கருத்துக்களைச் சகிக்க முடியாத, இந்து தத்துவவாதிகள், இவரைப் புலையன் என்று கூட அழைத்துள்ளார்கள்!

இவரது முற்போக்கான கருத்துக்களுக்கு, ஒரே ஒரு உதாரணம்! இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்பே இவர் எழுதிய குறள் ஒன்று, இன்னும் என்னை ஆச்சரியத்தில் ஆழ்த்துகின்றது!

'சிறை காக்கும் காப்பு எவண் செய்யும்,

மகளிர் நிறை காக்கும் காப்பே தலை!

ஒரு பெண்ணைச் சிறையில் வைத்துப் பாதுகாப்பதிலும் பார்க்க, அவள் தனது மனத்தால் தன்னைப் பாதுகாப்பதே தலை சிறந்தது!

முயற்சிகளுக்கு பாராட்டுகள்.

முறையான அரங்கேற்றத்தில் சோதிக்கபடாத கருணாநிதியின் கோமாளித்தனங்களை, காலம் சோதித்த மணிரத்தினங்களான பரிமேழளகர், ஜி.யு. போப் போன்றவர்களுடையதுடன் இணைப்பது அழகல்ல.

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல முயற்ச்சி தொடரட்டும் தங்கள் பணி!!!!!!!

நல்லதொரு முயற்ச்சி கோ அண்ணா. வாழ்த்துக்கள்....!

பாராட்டுக்கள் கோமகன்... யாழில் நல்லதொரு முயற்சி.

தொடருங்கள். :)6

http://www.tamilvu.org/courses/diploma/c031/c0313/html/c0313102.htm

நல்ல முயற்சி

தொடருங்கள். வாழ்த்துக்கள். 1

மிக்க நன்றிகள் விசுகு உங்கள் கருத்துப்பகிர்வுகளுக்கு . முதன் முதலாக உங்கள் கையால் குட்டு வாங்கித் தொடங்குகின்றேன் :) :) :icon_idea:.

நல்லதொரு திரி..

மிகவும் பாராட்டப்பட வேண்டிய ஒன்று. பேஸ்புக்கில் எல்லாம் இணைத்தால் அதிகம் இளையவர்களைக்கவரக்கூடும். தமிழ் என்றால் யாரும் எட்டிப்பார்க்க மாட்டாங்கள். ஆங்கிலம், ப்ரெஞ் சில் இருப்பதால் proverbs போல விரைவில் கவரக்கூடும். முயற்சி திருவினையாக்க வாழ்த்துக்கள் அண்ணா.

(கொலைவெறி போல பப்ளிசிட்டி பண்ணுங்கப்பா )

மிக்க நன்றிகள் ஜீவா உங்கள் கருத்துப்பகிர்வுகளுக்கு . மேலும் , உங்களைப் போன்ற இளையவர்கள் இதில் ஆர்வம் காட்டுவது உண்மையிலேயே பாராட்டப்படவேண்டிய விடையம் . நீங்கள் சொல்லியவாறே முகநூலிலும் தினமும் பதிகின்றேன் :) :) :) .

வணக்கம் கோமகன்

தூர நோக்கோடு நீங்கள் செய்யவிருக்கும் திரியை மிகவும் வரவேற்கிறேன்.

குறளையும் ஆங்கிலம் பிரஞ்சு மொழிகளில் எழுதினால் நன்று.

அடுத்து முக்கியமாக இதற்கென்று இன்னொரு திரி தொடங்க வேண்டும்.

இப்போது நீங்கள் தொடங்கிய திரியில் நீங்கள் மட்டும் தான் பதிய வேண்டும்.மறு திரியில் சக உறவுகள் கருத்தெழுதுவதை வைக்கலாம்.இல்லையென்றால் புதிதாக வாசிப்பவர்கள் எல்லோரது கருத்துக்களையும் வாசித்து கொண்டு போக கடைசியில் உங்கள் எண்ணம் நிறைவேறாமல் போகலாம். தொடக்கத்திலேயே இதற்கான கருத்துக்களை எழுத இங்கே அழுத்தவும் என்று ஒரு சுட்டியை தொடக்கவும்.

மிக்க நன்றிகள் ஈழப்பிரியன் உங்கள் கருத்துப்பகிர்வுகளுக்கு . மேலும் , உங்கள் ஆலோசனைகளின்படியே இரண்டு பதிவுகளை மட்டுக்களின் அனுமதியின்பேரில் தொடங்கியுள்ளேன் . குறளை நேரடியாக ஆங்கில பிரென்ஞ் மொழிபெயர்பு செய்தால் , அதன் உயிர்ப்பு குறைந்து விடும் என நினைக்கின்றேன் . ஆனால் பொழிப்புரையை மொழிபெயர்ப்புச் செய்துள்ளேன் :) :) :) .

தமிழரின் வாழ்வியல் கருவூலம்

உங்கள் முயற்சிக்கு நன்றி கோமகன்.

இதில் பிரெஞ்சு மொழியை google மூலம் மொழிபெயர்க்கிறீர்கள் என்று நினைக்கிறேன். நுண்ணிய பொருளடக்கத்துடன் உள்ள திருக்குறள் இப்படி மொழிபெயர்க்கும்போது தவறான அர்த்தத்தைத் தரலாம்.

மிக்க நன்றிகள் இணையவன் உங்கள் கருத்துப்பகிர்வுகளுக்கு . மேலும் , எனக்கு ஓர் இலக்கியத்தை அதன் அழகு கெடாது மொழிபெயர்க்கும் மேலதிக மொழிப்புலமை என்னிடம் இல்லை . எனவே எனது குலதெய்வமான < கூகிழானந்தாவிடமே > வரம் பெற்றேன் . நீங்கள் கூறுகின்ற கருத்தும் நூறுவீதம் ஏற்றுக்கொள்ளக் கூடியதே :):):) .

  • கருத்துக்கள உறவுகள்

ஆங்கில மொழிபெயர்ப்பு : http://kural.in/Kural/books.asp

மேலும் கருத்துக்களையும் , ஆலோசனைகளையும் , வழங்கிய வாத்தியார் , உடையார் , புங்கையூரான் , அலைமகள் , மல்லையூரான் , புலவர் , கவிதை , தமிழினிக்கு , என்றுமே நான் கடமைப்பட்டவன் :):):) .

கள உறவுகளே ,

குறளின் பொழிப்புரையை , எமது இளையவர்கள் அதிகம் செறிந்து வாழும் ஜேர்மன் , இத்தாலியானோ , டெனிக்ஷ் , மற்றும் நொஸ்க் , மொழிகளிலும் மொழிபெயர்ப்பை செய்யலாம் என்று யோசிக்கின்றேன் . உங்கள் கருத்துக்களையும் அறிய ஆவலாக இருக்கின்றேன் :) :) :) .

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் கருத்துக்களத்தோழர்களே, கோமகனின் "தமிழரின் வாழ்வியல் கருவூலம்" பதிவிற்கு கருத்துப்பதிந்து வரவேற்பு கொடுப்பதை மிகவும் பாராட்டவேண்டும். ஆனால் அதே சமயம் அந்த முயற்சியாளனின் பதிவில் இருக்கக்கூடிய சிறிய தவறுகளை நீங்கள் காணவில்லையா? அல்லது அந்தபதிவரின் பதிவு மற்றவர்களின் நகைப்பிற்கு இடமானால் நமக்கென்ன என்று நினைத்து விட்டீர்களா? மன்னிக்கவும் தோழர்களே உங்களிடம் காட்டமாக பேசுகின்றேன் என்று நினைக்கவேண்டாம். இலகுவாக கருத்தை மாற்றக்கூடிய ஓரெழுத்துத் தவறுகள் சுட்டிக்காட்டுவதில் தவறு இல்லை. இனிவரும் காலங்களில் என்னுடைய தவறாக இருந்தாலும் நேரடியாக இந்தக்கருத்துக்களத்தில் சுட்டிக்காட்டுங்கள். கொஞ்சம் வெட்கம், கொஞ்சம் கோபம் எனக்கும் ஏற்படும் ஆனால் நாங்கள் எவரும் பண்டிதர் அல்லவே.. ஆதலால் நாங்கள் மன்னிக்கப்படவேண்டியவர்கள். முடிந்தவரை எழுத்துப்பிழைகளைத் திருத்தப்பழகுவதால் நாம் எந்த ஒரு நிறைவான நிலையிலிருந்தும் குறையப்போவதில்லை.

கோமகன் நீங்கள் எழுத எத்தனித்தவிடயம் பொய்யாமொழிப்புலவனுடைய இருவரிக் குறளமுதம். தமிழுக்குச்சிறப்புச் சேர்ப்பவைகளில் முன்னணியில் நிற்கும் ஒரு நூல். அவ்விடத்தில் ஆரம்பப்பந்தியில் இருக்கக்கூடிய எழுத்துப்பிழைகளை நீங்கள் அவதானிக்கவில்லையா? உலக மொழிகளில் ஏற்றுக்கொள்ளப்பட்டு இன்று அநேகமாக எல்லா மொழிகளிலும் மொழி பெயர்ப்புச் செய்யப்பட்டிருக்கும் தூயதமிழ் குறளமுதத்தினை உங்கள் பாணியில் மொழிபெயர்ப்பது வரவேற்பிற்குரியது. பாராட்டுக்கள்.., இருப்பினும் உங்கள் பதிவில் இடம்பெற்றிருக்கக்கூடிய ளகர,ழகர தவறுகளை திருத்தம் செய்தால் நன்றாக இருக்கும். இதுகூட நீங்கள் விரும்பினால் மாத்திரமே திருத்துங்கள். உங்கள் மீதான நிர்ப்பந்தம் அல்ல. என்ன முகநூலில் எல்லாம் இணைத்திருக்கிறீர்கள் என்னதான் எழுதியிருக்கிறார் என்று பலரும் எட்டிப்பார்க்கக்கூடும் அல்லவா..

தெளிவாக கருத்தைச் சொல்லவரும் தமிழ் பார்க்கும்போது கடுமையானதாக தோற்றம் தரும். பழகிய தோழியின் கருத்தை மனம் சலிக்காத தோழன் புரிந்து கொள்வான் என்று நம்புகின்றேன்.

வணக்கம் அன்பான கள உறவுகளே ,

ஓர் நீண்ட புதியதொடர் மூலம் சந்திப்பதில் மகிழ்சி அடைகின்றேன் . பல வருடங்களுக்கு முன் எமது மூதாதையர்கள் தூரநோக்குடன் விதைத்த விதைகளின் விளைச்சலை இன்று நாம் அறுவடை செய்கின்றோம் . ஒப்பீட்டளவில் அவர்களுடைய செயற்பாடுகளுடன் நாம் எமது வருங்கால சந்ததிக்குச் செய்வது குறைவாகவே உள்ளது . யாழ் கருத்துக்களத்தினூடாக ஒரு சிறிய நகர்வாக , எமது ஐயன் வள்ளுவனார் ஏறத்தாள இரண்டாயிரம் வருடங்களுக்கு முன் எமக்கு விதைத்த விதையின் விளைச்சலைக் குறிப்பாக இளயசமூகத்திற்கு , உலகின் பெருமளவு வளக்கில் உள்ள ஆங்கில பிரென்ஞ் மொழிபயர்ப்புடன் நகர்த்துகின்றேன் . மொழிபெயர்புக்கு அறிவுசால் பெரியார்களின் ஒத்துளைப்பையும் நாடுகின்றேன் . தமிழ் மொழியின் ஆழ அகலம் பார்க்க விரும்புபவர்கள் முதலில் படிக்கவேண்டிய பாலபாடம் திருக்குறளும் , சிவபுராணமும் ஆகும் . மனித வாழ்வின் பல்வேறு நடப்புகளைத் தெள்ளு தமிழில் இவை தொட்டுச் செல்கின்றன என்பது எனது தாழ்மையான கருத்தாகும் . எனதருமை நண்பர் அகோதா வேறு ஒரு பதிவில் இதைத் தொடங்கினாலும் , அவரது முன் அனுமதி பெற்று அவரின் பதிவையும் பூரணப்படுத்தி இந்த முயற்சியைத் தொடருகின்றேன் . என்னைப்பொறுத்தவரையில் இத் தொடரின் வெற்றியானது ,உங்களின் ஒத்துளைப்பாலும் , இளைய சமூகமானது எமது மொழியின் ஆழுமைகளைத் தமது வேற்றுமொழி நண்பர்களுக்கு சொல்லும் பொழுதிலேயே பூரணப்படுத்தப்படும் .

பி . கு : தயவு செய்து உங்கள் கருத்துக்களையும் , ஆலோசனைகளையும் பின்வரும் சுட்டியை சொடுக்குங்கள் .

  • கருத்துக்கள உறவுகள்

Thirukkural has been translated in how many languages around the world?

In following 37 languages:

Arabic

Bangla

Burmese

Chinese

Czech

Dutch

English

Fiji

Finnish

French

German

Gujarati

Hindi

Hungarian

Italian

Japanese

Kannada

Konkani

Korean

Latin

Malay

Malayalam

Marathi

Nederlands

Norwegian

Oriya

Polish

Punjabi

Rajasthani

Russian

Sanskrit

Saurashtra

Sinhalese

Spanish

Swedish

Telugu

Urdu

அநேகமாக அந்தந்த மொழிக்குரிய கூகுலாண்டவரிடம் கேட்டால் அதிகம் பயன் உண்டு கோமகன்.

Edited by வல்வை சகாறா

வணக்கம் கருத்துக்களத்தோழர்களே, கோமகனின் "தமிழரின் வாழ்வியல் கருவூலம்" பதிவிற்கு கருத்துப்பதிந்து வரவேற்பு கொடுப்பதை மிகவும் பாராட்டவேண்டும். ஆனால் அதே சமயம் அந்த முயற்சியாளனின் பதிவில் இருக்கக்கூடிய சிறிய தவறுகளை நீங்கள் காணவில்லையா? அல்லது அந்தபதிவரின் பதிவு மற்றவர்களின் நகைப்பிற்கு இடமானால் நமக்கென்ன என்று நினைத்து விட்டீர்களா? மன்னிக்கவும் தோழர்களே உங்களிடம் காட்டமாக பேசுகின்றேன் என்று நினைக்கவேண்டாம். இலகுவாக கருத்தை மாற்றக்கூடிய ஓரெழுத்துத் தவறுகள் சுட்டிக்காட்டுவதில் தவறு இல்லை. இனிவரும் காலங்களில் என்னுடைய தவறாக இருந்தாலும் நேரடியாக இந்தக்கருத்துக்களத்தில் சுட்டிக்காட்டுங்கள். கொஞ்சம் வெட்கம், கொஞ்சம் கோபம் எனக்கும் ஏற்படும் ஆனால் நாங்கள் எவரும் பண்டிதர் அல்லவே.. ஆதலால் நாங்கள் மன்னிக்கப்படவேண்டியவர்கள். முடிந்தவரை எழுத்துப்பிழைகளைத் திருத்தப்பழகுவதால் நாம் எந்த ஒரு நிறைவான நிலையிலிருந்தும் குறையப்போவதில்லை.

கோமகன் நீங்கள் எழுத எத்தனித்தவிடயம் பொய்யாமொழிப்புலவனுடைய இருவரிக் குறளமுதம். தமிழுக்குச்சிறப்புச் சேர்ப்பவைகளில் முன்னணியில் நிற்கும் ஒரு நூல். அவ்விடத்தில் ஆரம்பப்பந்தியில் இருக்கக்கூடிய எழுத்துப்பிழைகளை நீங்கள் அவதானிக்கவில்லையா? உலக மொழிகளில் ஏற்றுக்கொள்ளப்பட்டு இன்று அநேகமாக எல்லா மொழிகளிலும் மொழி பெயர்ப்புச் செய்யப்பட்டிருக்கும் தூயதமிழ் குறளமுதத்தினை உங்கள் பாணியில் மொழிபெயர்ப்பது வரவேற்பிற்குரியது. பாராட்டுக்கள்.., இருப்பினும் உங்கள் பதிவில் இடம்பெற்றிருக்கக்கூடிய ளகர,ழகர தவறுகளை திருத்தம் செய்தால் நன்றாக இருக்கும். இதுகூட நீங்கள் விரும்பினால் மாத்திரமே திருத்துங்கள். உங்கள் மீதான நிர்ப்பந்தம் அல்ல. என்ன முகநூலில் எல்லாம் இணைத்திருக்கிறீர்கள் என்னதான் எழுதியிருக்கிறார் என்று பலரும் எட்டிப்பார்க்கக்கூடும் அல்லவா..

தெளிவாக கருத்தைச் சொல்லவரும் தமிழ் பார்க்கும்போது கடுமையானதாக தோற்றம் தரும். பழகிய தோழியின் கருத்தை மனம் சலிக்காத தோழன் புரிந்து கொள்வான் என்று நம்புகின்றேன்.

மிக்க நன்றிகள் சகாறா அக்கா உங்கள் தெளிவான விமர்சனத்திற்கு . நீங்கள் சுட்டிக்காட்டிய தவறுகளை எனது அறிவுக்கு எட்டியவகையில் திருத்தியுள்ளேன் . மேலும் , எனக்கு எப்பொழுதும் " ழ " கர " ள " கர வில் மயக்கம் வருவதுண்டு . அது நான் வேண்டுமென்று அந்தத் தவறுகளை விடுவதில்லை . மேலும் , இலக்கிய ரீதியாக நான் விமர்சனம் , சுயவிமர்சனம் , இரண்டுக்குமே கட்டுப்பட்டவன் . எனவே நீங்கள் என்னைத் தாராளமாக விமர்சனம் செய்யலாம் . மேலும் , இதில் தவறுகள் இருந்தால் உரிமையுடன் சுட்டிக்காட்டுங்கள் :) :) :) .

Edited by komagan

  • கருத்துக்கள உறவுகள்
உலகின் பெருமளவு வக்கில் உள்ள ஆங்கில பிரென்ஞ் மொழிபெயர்ப்புடன் நகர்த்துகின்றேன் . மொழிபெயர்புக்கு அறிவுசால் பெரியார்களின் ஒத்துளைழைப்பையும் நாடுகின்றேன் . தமிழ் மொழியின் ஆழ அகலம் பார்க்க விரும்புபவர்கள் முதலில் படிக்கவேண்டிய பாலபாடம் திருக்குறளும் , சிவபுராணமும் ஆகும் . மனித வாழ்வின் பல்வேறு நடப்புகளைத் தெள்ளு தமிழில் இவை தொட்டுச் செல்கின்றன என்பது எனது தாழ்மையான கருத்தாகும் . எனதருமை நண்பர் அகோதா வேறு ஒரு பதிவில் இதைத் தொடங்கினாலும் , அவரது முன் அனுமதி பெற்று அவரின் பதிவையும் பூரணப்படுத்தி இந்த முயற்சியைத் தொடருகின்றேன் . என்னைப்பொறுத்தவரையில் இத் தொடரின் வெற்றியானது ,உங்களின் ஒத்துளைழைப்பாலும் , இளைய சமூகமானது எமது மொழியின் ஆழுளுமைகளைத் தமது வேற்றுமொழி நண்பர்களுக்குச் சொல்லும் பொழுதிலேயே பூரணப்படுத்தப்படும் .

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.