Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

காதலிக்கு ?????????

Featured Replies

இதமான முத்தம்

இம்சையாகப் போனதேன் ?

இனிமையான பொழுதுகள் இன்று

இம்சையாகப் போனதேன் ?

எத்தனை எதிர்ப்புகள் வந்தது

எம்மை நோக்கி

இலகுவாய் உடைத்தோமே

ஒன்றாக நானும் நீயும்

அப்போது இம்சை இல்லையே எம்மிடம்

எதெற்கும் துணிந்த என்னை

எண்ணையாக்கியவள் நீ

இன்று சொல்லால் இறுக வைத்தாயே

ஒருவேளை உன்னைக் கோர்க்க

நான் தகுதி இல்லாத நூலோ ??????????????

வலிகளின் உணர்வுகளை பிரதிபலிக்கும் ஒரு நல்ல கவிதை...

நான் உங்களின் எழுத்துக்கு ரசிகை... :) இன்னும் நிறைய கவிதைகள் எழுத வாழ்த்துகள்...

இன்று சொல்லால் இறுக வைத்தாயே

இங்கு காதலி கூறிய சொல் என்னவென்று தெரியவில்லை. இருந்தாலும் கூறுகிறேன். கருத்து முரண்பாடுகள் காலப்போக்கில் ஏற்படுவது வழமை.... இங்கு சிறு முரண்பாடுகளை பெரிதாக்கி சண்டை பிடிக்காது ஒருவரையொருவர் விட்டுக்கொடுத்தால் ஒருவரை மற்றவர் வஞ்சித்து பேசுவதை இயன்றவரை தவிர்க்கலாம். அதனால் வரும் இம்சையும் குறையும்...

ஒருவேளை உன்னைக் கோர்க்க

நான் தகுதி இல்லாத நூலோ ??????????????

ஒரு தோல்வி வரின் அதற்காக தம்மை தாழ்மைப்படுத்திக்கொள்வதை அனைவரும் தவிர்க்க வேண்டும். அதற்கு பதிலாக தம்மில் என்ன பிழையுள்ளது என்பதை தெரிந்து திருத்திக்கொள்வதும் காதலன்/காதலி விடும் பிழைகளையும் அன்புடன் சுட்டிக்காட்டி அவர்களை திருத்தவும் முயற்சிக்கலாம்...

Edited by காதல்

  • கருத்துக்கள உறவுகள்

இதமான முத்தம்

இம்சையாகப் போனதேன் ?

இனிமையான பொழுதுகள் இன்று

இம்சையாகப் போனதேன் ?

எத்தனை எதிர்ப்புகள் வந்தது

எம்மை நோக்கி

இலகுவாய் உடைத்தோமே

ஒன்றாக நானும் நீயும்

அப்போது இம்சை இல்லையே எம்மிடம்

எதெற்கும் துணிந்த என்னை

எண்ணையாக்கியவள் நீ

இன்று சொல்லால் இறுக வைத்தாயே

ஒருவேளை உன்னைக் கோர்க்க

நான் தகுதி இல்லாத நூலோ ??????????????

அழகு நூலில் கோர்த்த வரிகள்...

**திருத்தப்பட்டது...காரணம் எழுத்துப்பிழை...

Edited by சுபேஸ்

  • தொடங்கியவர்

வலிகளின் உணர்வுகளை பிரதிபலிக்கும் ஒரு நல்ல கவிதை...

நான் உங்களின் எழுத்துக்கு ரசிகை... :) இன்னும் நிறைய கவிதைகள் எழுத வாழ்த்துகள்...

இங்கு காதலி கூறிய சொல் என்னவென்று தெரியவில்லை. இருந்தாலும் கூறுகிறேன். கருத்து முரண்பாடுகள் காலப்போக்கில் ஏற்படுவது வழமை.... இங்கு சிறு முரண்பாடுகளை பெரிதாக்கி சண்டை பிடிக்காது ஒருவரையொருவர் விட்டுக்கொடுத்தால் ஒருவரை மற்றவர் வஞ்சித்து பேசுவதை இயன்றவரை தவிர்க்கலாம். அதனால் வரும் இம்சையும் குறையும்...

ஒரு தோல்வி வரின் அதற்காக தம்மை தாழ்மைப்படுத்திக்கொள்வதை அனைவரும் தவிர்க்க வேண்டும். அதற்கு பதிலாக தம்மில் என்ன பிழையுள்ளது என்பதை தெரிந்து திருத்திக்கொள்வதும் காதலன்/காதலி விடும் பிழைகளையும் அன்புடன் சுட்டிக்காட்டி அவர்களை திருத்தவும் முயற்சிக்கலாம்...

மிக்க நன்றிகள் உங்கள் கருத்துக்களுக்கு காதல் . உங்கள் எதிர்பார்ப்புகள் வீண்போகாது . மேலும் , என்னை நன்கு அறிந்தவர்களுக்கு என்னையிட்டுத் தெரியும் . அதேவேளை நான் காதல் என்ற உணர்வைக் கடக்காதவன் என்று பொய் சொல்லவும் விரும்பவில்லை .

Edited by கோமகன்

  • தொடங்கியவர்

அழுக்கு நூலில் கோர்த்த வரிகள்...

மேலதிக விளக்கங்கள் தேள்வை ராசா

எத்தனை எதிர்ப்புகள் வந்தது

எம்மை நோக்கி

இலகுவாய் உடைத்தோமே

ஒன்றாக நானும் நீயும்

அப்போது இம்சை இல்லையே எம்மிடம்

எதெற்கும் துணிந்த என்னை

எண்ணையாக்கியவள் நீ

இன்று சொல்லால் இறுக வைத்தாயே

ஒருவேளை உன்னைக் கோர்க்க

நான் தகுதி இல்லாத நூலோ ??????????????

கோ... ! முத்தான வார்த்தைகளில் கொத்தான கருத்தினைக் கோர்த்திருக்கின்றீர்கள்!

அருமையான கவிதை! நூல் எனும் நூலெடுக்கும் கோவே! எமைக் கட்டிப்போட வாள் வேண்டாம். "வாழிய தமிழ்" என்ற வார்த்தை போதும்...! தொடர்க! :)

வார்த்தைகளை கோர்த்த விதம் அருமை! பாராட்டுக்கள்! :)

  • கருத்துக்கள உறவுகள்

நேசியுங்கள் நேசிக்க படுவீர்கள்.

புரிதலும் விட்டுக் கொடுப்பும்தான் வாழ்க்கை .....

உணர்சிகளின் வேகத்தால் வார்த்தைகள் கொட்டபடுகின்றன .

நிதானிக்கும் போது உண்மை புரியும் .

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இதமான முத்தம்

இம்சையாகப் போனதேன் ?

இனிமையான பொழுதுகள் இன்று

இம்சையாகப் போனதேன் ?

எத்தனை எதிர்ப்புகள் வந்தது

எம்மை நோக்கி

இலகுவாய் உடைத்தோமே

ஒன்றாக நானும் நீயும்

அப்போது இம்சை இல்லையே எம்மிடம்

எதெற்கும் துணிந்த என்னை

எண்ணையாக்கியவள் நீ

இன்று சொல்லால் இறுக வைத்தாயே

ஒருவேளை உன்னைக் கோர்க்க

நான் தகுதி இல்லாத நூலோ ??????????????

இதைத்தான் சொல்லுவதோ நாலுவரியில் நச் சுனு எழுதுவது என்று.. :)

ஏன் இவ்வளவு கனதியான வார்த்தைகள்? :unsure: ஆத்துக்கரி அக்காவோடு கதைக்க வேணும் போல இருக்கு :rolleyes: :rolleyes:

அழுக்கு நூலில் கோர்த்த வரிகள்...

மேலதிக விளக்கங்கள் தேள்வை ராசா

அதே தான்..

இதிலை பல உள்குத்து இருக்கு போல.. :rolleyes: :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

மேலதிக விளக்கங்கள் தேள்வை ராசா

ஜயோ...அது அழகு நுலில் கோர்த்த வரிகள் என்று வரவேண்டும் அண்ணா...முன்னர் யாழில் ஒரு தீம் இருந்தது அதைப் பயன்படுத்தி அழகாக தமிழில் எழுதக் குடியதாக இருந்தது...இப்ப அதைக் காணல... :( அதால கூகிள் மொழிபெயர்ப்பில் இருந்து எடுத்து வந்து போடுறனான் அண்ணா...ஜயய்யோ...எவ்வளவு பெரிய கருத்து தவறை கொடுத்து விட்டத்து ஒரு எழுத்துப் பிழை.. :( :( மன்னித்து விடுங்கள் அண்ணா.... :( :(

கோமகன் அண்ணா...ப்ளீஸ் புரிந்து கொள்வீர்கள் என்று நினைக்கிறான்....மன்னித்து விடுங்கள் அண்ணா..நான் அவசரத்தில் எழுதி விட்டுப் போய்விட்டேன்..பிழை நடந்ததை பார்க்கவில்லை... :( :( :(

Edited by சுபேஸ்

  • கருத்துக்கள உறவுகள்

என்ன இன்று அமைதியாக இருக்கு என்று நினைத்தேன். இங்க தொடங்குதா???

தொடரட்டும் தொடரட்டும் :lol::D :D

என்றாலும் subes இப்படி நீங்கள் எழுதி இருக்க குடாது தோழா .................................

என்னால் ஸ்மைல் போடா முடியவில்லை என்னில் இந்த கணனியின் மகிமை அப்படி.................

அருமையான கவிதை கோமகன் .எனக்கும் இப்படியெல்லாம் எழுத ஆசைதான் ஆனால் ..........................

வாழ்த்துக்கள் .உங்கள் பணி எம் தமிழை மேலும் உயர்த்தவேண்டும் என்பதே எம் எல்லோரதும் அவாவும்.

  • கருத்துக்கள உறவுகள்

இதமான முத்தம்

இம்சையாகப் போனதேன் ?

இனிமையான பொழுதுகள் இன்று

இம்சையாகப் போனதேன் ?

எத்தனை எதிர்ப்புகள் வந்தது

எம்மை நோக்கி

இலகுவாய் உடைத்தோமே

ஒன்றாக நானும் நீயும்

அப்போது இம்சை இல்லையே எம்மிடம்

எதெற்கும் துணிந்த என்னை

எண்ணையாக்கியவள் நீ

இன்று சொல்லால் இறுக வைத்தாயே

ஒருவேளை உன்னைக் கோர்க்க

நான் தகுதி இல்லாத நூலோ ??????????????

கவிதையில இப்ப கோ கலக்கிறீங்கள். காதலில் வீழாத குடிமக்கள் யாருமிலர் இப்பூமியிலே என்ற உண்மையை கோமகனும் சொல்லீட்டியள் இனி அசத்துங்கோ காதல் கவிதைகளை.

  • கருத்துக்கள உறவுகள்

வார்த்தை முத்துக்கள் கவிதையாகக் கோர்க்கப் பட்டிருக்கும் திரியல் தயவு செய்து யாரும் வசைகளையும்,வஞ்சகத்தையும் குஞ்சமாக்கி அழகு பார்க்க நினைக்காதீர்கள்....கவிதைகளுக்கும்,கருத்துக்களுக்கும் அப்பால் கோமகன் அண்ணாவுடன் பழகியவர்களுக்கு தெரியும் அவர் எவ்வளவு இனிய மனிதர் என்று....

வார்த்தை முத்துக்கள் கவிதையாகக் கோர்க்கப் பட்டிருக்கும் திரியல் தயவு செய்து யாரும் வசைகளையும்,வஞ்சகத்தையும் குஞ்சமாக்கி அழகு பார்க்க நினைக்காதீர்கள்....கவிதைகளுக்கும்,கருத்துக்களுக்கும் அப்பால் கோமகன் அண்ணாவுடன் பழகியவர்களுக்கு தெரியும் அவர் எவ்வளவு இனிய மனிதர் என்று....

நன்றாக இருக்கிறது. தொடருங்கள்

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல மனதை தொட்ட வரிகள், தொடருங்கள் கோமகன்

  • கருத்துக்கள உறவுகள்

அன்புடன் கலந்த முத்தத்தில்,

ஆயிரம் அர்த்தங்கள் தெரியும்!

ஆசைகளின் கலவியில் கனியும்,,

ஓசைகளின் விளைவான முத்தம்!

ஆசைகள் அறுந்து தெறிக்கையில்,

வேசிகளின் வெற்று முத்தமாக,

வெறுமையின் வேதனையாய் வலிக்கும்!

உங்கள் கவிதை அழகு, கோமகன்!

  • கருத்துக்கள உறவுகள்

இதமான முத்தம்

இம்சையாகப் போனதேன் ?

இனிமையான பொழுதுகள் இன்று

இம்சையாகப் போனதேன் ?

எத்தனை எதிர்ப்புகள் வந்தது

எம்மை நோக்கி

இலகுவாய் உடைத்தோமே

ஒன்றாக நானும் நீயும்

அப்போது இம்சை இல்லையே எம்மிடம்

எதெற்கும் துணிந்த என்னை

எண்ணையாக்கியவள் நீ

இன்று சொல்லால் இறுக வைத்தாயே

ஒருவேளை உன்னைக் கோர்க்க

நான் தகுதி இல்லாத நூலோ ??????????????

அருமை கோம்ஸ் அண்ணா. எனக்கும் இதே எண்ணங்கள் வந்திருக்கு. திருமணத்துக்கு முன், பின் காலங்களில் எல்லாருக்கும் இந்த மாதிரியான பீலிங் வரும் போல.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நல்ல கவிதை. எளிமையான நடை. வாழ்த்துக்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

எதெற்கும் துணிந்த என்னை

எண்ணையாக்கியவள் நீ

றெம்பத்தான் போட்டு மிதிச்சிட்டாங்களோ :lol: :lol:

  • கருத்துக்கள உறவுகள்

இதுதான் எல்லா இடமும் நடக்குது.என்றாலும் உங்கள் கவிதைக்கு பாராட்டுக்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

இதமாக இருந்தாலும் முத்தங்கள்

அனலாகும் போது இம்சைதான்

இனிமையான பொழுதுகள் இப்போதும்

காத்திருக்கின்றது ஒன்றாக அல்ல

காதலியுடன்  ஒற்றுமையாக இருந்தால்

இப்படியான காதலியுடன் இனிமையாக

முத்தங்களைப் பகிராமல் எதற்கு ம்

ஏன் துணிந்தாய் என் சகோதரா

மட்டுப்படுத்தப்பட்ட உன்  முத்தங்கள்

இப்போது மெட்டுக்களுடன்

காதலியைத் தேடுகின்றதே

காதலி என்பவள் பொழுது

போக்குக் கருவி அல்ல

பொன்னாக முத்தங்களை இட்டு

பொக்கிசமாகக் காக்கப்பட வேண்டியவள்

  • தொடங்கியவர்

கோ... ! முத்தான வார்த்தைகளில் கொத்தான கருத்தினைக் கோர்த்திருக்கின்றீர்கள்!

அருமையான கவிதை! நூல் எனும் நூலெடுக்கும் கோவே! எமைக் கட்டிப்போட வாள் வேண்டாம். "வாழிய தமிழ்" என்ற வார்த்தை போதும்...! தொடர்க! :)

வார்த்தைகளை கோர்த்த விதம் அருமை! பாராட்டுக்கள்! :)

நீங்கள் எழுதினாலே" கவிதை ". நான் எழுதியதைச் சொன்னால்த் தான் "கவிதை " . மிக்க நன்றிகள் உங்கள் கருத்திற்கு . உங்கள் ஆசையையும் கவனத்தில் கொள்கின்றேன்.

  • கருத்துக்கள உறவுகள்

உங்களுக்கு நல்ல எழுத்துத் திறமை இருக்குது கோமகன் வேற சோலி,சொரட்டுக்குப் போகாமல் உங்கள் எழுத்துத் திறமையை வளர்த்துக் கொள்ளுங்கோ

  • தொடங்கியவர்

நேசியுங்கள் நேசிக்க படுவீர்கள்.

புரிதலும் விட்டுக் கொடுப்பும்தான் வாழ்க்கை .....

உணர்சிகளின் வேகத்தால் வார்த்தைகள் கொட்டபடுகின்றன .

நிதானிக்கும் போது உண்மை புரியும் .

மிக்க நன்றிகள் நிலாமதி அக்கா உங்கள் கருத்துக்களுக்கு .

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.