Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மஹா யாகம்

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் இப்படியான செயல்களில் ஈடுபடுவது அடிமுட்டாள்தனம்......யாகங்களை விடுத்து........எமது பிரச்சனைகள் சம்பந்தமாக நகரத்திற்கு நகரம் யாத்திரை செல்ல மக்களை திரட்டுங்கள்.

  • Replies 54
  • Views 8.7k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் ஜயா...!

நாடுகடந்த தமிழீழ அரசிற்க்கு எனது வாழ்த்துக்கள்....இதைத்தொடர்ந்து சாதி பார்த்தல்,சாத்திரம் பார்த்தல்,குறி சொல்லுதல்,பேய் விரட்டுதல் போன்ற நிகழ்ச்சிகளையும் செய்து நாடுகடந்து தமிழரின் பெருமைகளை பரப்பும்படி வேண்டிக்கொள்கிறேன்.....

இப்படிக்கு நாங்கள் புலம்பெயர்ந்த முட்டாள் இளைஞ்ஞர்கள்...

யாகத்தை பார்பதற்கு

எனக்கு ஒண்டு விளங்கவில்லை ? எல்லாரும் துள்ளுறியள். இறந்தவர்களுக்கு திதி குடுக்கிறது வழமைதானே !!!

  • கருத்துக்கள உறவுகள்

இனிமேல் நிறைய ஆலயங்களில் ஊhரைச் சாட்டி இது தான் நடக்கப்போகிறது...ஐயனுகளுக்கு வருமானமும் ஆகுது விளம்பரமும் ஆகுது...ஆனால் ஊரில் மக்கள் படும் பாட்டுக்கு இவர்களுக்கு இது ரொம்ப முக்கியம் தான்..தங்களுக்கு சனி மாறினது நல்லது இல்லை என்றால் அடக்காமாக ஏதாச்சும் செய்துட்டு போகலாமே.இதுக்கு கொட்டின காசை அனாதைப் பிள்ளைகளுக்கு,குடும்ப உறவுகளை இழந்து தவிக்கிற மக்களுக்கு குடுத்து இருந்தால் உண்மையாக புண்ணியம் தான்...இது பேருக்கு தான்....

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

யாகத்தை பார்பதற்கு

எனக்கு ஒண்டு விளங்கவில்லை ? எல்லாரும் துள்ளுறியள். இறந்தவர்களுக்கு திதி குடுக்கிறது வழமைதானே !!!

நான் அடிக்கடி பாவிக்கும் சொல்லுக்கு அர்த்தம் கற்பிக்கின்றார்கள்.

மிகவும் நன்றாக இருக்கிறது. நாடு கடந்த அரசிற்கு மிக மிக நன்றிகள். :)

ஐயப்பன் தரிசனம் காண சபரிமலை ஏறும் சடங்குகளையும் பதிவிட்டால் நன்றாக இருக்கும்.

உங்களுக்கோர் பச்சை.

  • கருத்துக்கள உறவுகள்

இங்கே லண்டனில் ஒரு அம்மன் கோயிலில் இந்த மாதம் 25.26,27 ம் திகதிகளில் 1009 தம்பதியினருக்கு தம்பதி பூசை நடக்கப் போகுதாம்...ஏற்கனவே 909 தம்பதியினர் ரெடியாம்...இன்னும் 100 தம்பதியினர் தேவையாம் யாராவது மாலை மாத்த விருப்பம் என்டால் மாத்திக் கொள்ளுங்கோ :D

  • கருத்துக்கள உறவுகள்

இங்கே லண்டனில் ஒரு அம்மன் கோயிலில் இந்த மாதம் 25.26,27 ம் திகதிகளில் 1009 தம்பதியினருக்கு தம்பதி பூசை நடக்கப் போகுதாம்...ஏற்கனவே 909 தம்பதியினர் ரெடியாம்...இன்னும் 100 தம்பதியினர் தேவையாம் யாராவது மாலை மாத்த விருப்பம் என்டால் மாத்திக் கொள்ளுங்கோ :D

பொண்ணையும் பிறியாய்த்தருவாங்கள் எண்டால் நான் ரெடி ரதி அக்கா.... :icon_mrgreen:

இங்கே லண்டனில் ஒரு அம்மன் கோயிலில் இந்த மாதம் 25.26,27 ம் திகதிகளில் 1009 தம்பதியினருக்கு தம்பதி பூசை நடக்கப் போகுதாம்...ஏற்கனவே 909 தம்பதியினர் ரெடியாம்...இன்னும் 100 தம்பதியினர் தேவையாம் யாராவது மாலை மாத்த விருப்பம் என்டால் மாத்திக் கொள்ளுங்கோ :D

தம்பதிகளுடன் மாலை மாற்றி என்ன பிரயோசனம். :D

நான் அடிக்கடி பாவிக்கும் சொல்லுக்கு அர்த்தம் கற்பிக்கின்றார்கள்.

இந்த புண்ணாக்குத்தனத்தை 'மொக்குத்தனம்' என நினைப்பது கொஞ்சம் ஓவர். :D

  • கருத்துக்கள உறவுகள்

இந்த புண்ணாக்குத்தனத்தை 'மொக்குத்தனம்' என நினைப்பது கொஞ்சம் ஓவர். :D

:lol::D
  • கருத்துக்கள உறவுகள்

சனத்துக்கு, விசர் முத்திப் போச்சுது.

11rc4k5.jpg

ஒன்னுமே புரியலீங்க . எனக்கு தெரிஞ்சு ஏகாதசி திதீல சிவபெருமானை ( ருத்திரனை ) ஃப்ரீதி செய்ய இப்புடியான யாகங்களை முன்னாடி செஞ்சிருக்காங்கன்னு படிச்சிருக்கேங்க . ஏங்க ஐயப்பன் ஆயத்தில செய்றாங்க ? யாராச்சும் கொஞ்சம் புரியவைங்களேன் பிளீஸ்

:):unsure: :unsure: .

Edited by சொப்னா

  • கருத்துக்கள உறவுகள்

ஒன்னுமே புரியலீங்க . எனக்கு தெரிஞ்சு ஏகாதசி திதீல சிவபெருமானை ( ருத்திரனை ) ஃப்ரீதி செய்ய இப்புடியான யாகங்களை முன்னாடி செஞ்சிருக்காங்கன்னு படிச்சிருக்கேங்க . ஏங்க ஐயப்பன் ஆயத்தில செய்றாங்க ? யாராச்சும் கொஞ்சம் புரியவைங்களேன் பிளீஸ்

:) :unsure: :unsure: .

க்கும்...

ஏம்மா... நாம புரிஞ்சுகிட்டா எல்லாம் செய்யுறாக.

அவன் செயிறான்... நாம, ஃபிலிம் பாக்கிறம். மண்ணாங்கட்டி.

பிச்சை எடுப்பான் பெருமாளு, தட்டிப் பறிப்பான் அனுமாரு. எண்ட கதை தான்......

போங்கடா... போய், மாட்டுக்கு புண்ணாக்கை.. கரைச்சு ஊத்துங்கடா...

  • கருத்துக்கள உறவுகள்

க்கும்...

ஏம்மா... நாம புரிஞ்சுகிட்டா எல்லாம் செய்யுறாக.

அவன் செயிறான்... நாம, ஃபிலிம் பாக்கிறம். மண்ணாங்கட்டி.

பிச்சை எடுப்பான் பெருமாளு, தட்டிப் பறிப்பான் அனுமாரு. எண்ட கதை தான்......

போங்கடா... போய், மாட்டுக்கு புண்ணாக்கை.. கரைச்சு ஊத்துங்கடா...

கூல்,கூல் ......தமிழ்சிறி....

க்கும்...

ஏம்மா... நாம புரிஞ்சுகிட்டா எல்லாம் செய்யுறாக.

அவன் செயிறான்... நாம, ஃபிலிம் பாக்கிறம். மண்ணாங்கட்டி.

பிச்சை எடுப்பான் பெருமாளு, தட்டிப் பறிப்பான் அனுமாரு. எண்ட கதை தான்......

போங்கடா... போய், மாட்டுக்கு புண்ணாக்கை.. கரைச்சு ஊத்துங்கடா...

ஏனுங்க டமிழ் உப்பிடி புறுபுறுக்கிறீங்க? சகோதரிங்க கேட்டதிங்கத சொல்லுங்க பிளீஸ்!

இந்தத் திரியில் கருத்தெழுதியவர்களுக்கான ஒர் கருத்துக் கணிப்பு:

1. நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் ஏற்பாடு செய்த முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வுகளுக்குச் சென்றிருக்கிறேன் அல்லது பங்களித்திருக்கிறேன்

2. நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் இதுவரை நடத்திய கருத்தரங்குகள், கூட்டங்களில் பங்குபற்றியிருக்கிறேன்

3. நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்திற்கு நிதிப் பங்களிப்பு செய்திருக்கிறேன்

4. நான் வாழும் பிரதேசத்தைச் சேர்ந்த நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் அமைச்சர்கள், உறுப்பினர்களை அறிந்து வைத்திருக்கிறேன்

4. நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அமைச்சர்கள், உறுப்பினர்கள் ஆகியோரோடு கடந்த காலங்களில் தொடர்பு கொண்டிருக்கிறேன்

5. நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு உறுதுணையாக நின்றிருக்கிறேன்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பலே பலே தமிழச்சி- விழிக்குமா எம் இனம் இனியாவது

Edited by பாகன்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழிச்சி உங்கள் கேள்விகள் நியமானவைதான், நான் இதில் ஒன்றைத்தான் செய்துள்ளேன். இன்னுமொன்றும் செய்துள்ளேன்- வாக்கு போட்டேன் :),, மற்றவை ஒன்றும் செய்யாதபடியால் அவர்களை பற்றி கதைக்க கூடாது என்றால் கதைக்காமல் விடுகிறேன். ஆனால் முள்ளி வாய்க்கால் நினைவாக பிராத்தனை நடத்துவது வேறு, அது தொடர்பாக யாகம் செய்வது வேறு; சிலவேளைகளில் பிராமணர்கள்தான் இரண்டும் ஒன்று என்று சொன்னார்களோ தெரியவில்லை. அவர்கள்தான் தெளிவுபடுத்த வேண்டும்.

இந்தத் திரியில் கருத்தெழுதியவர்களுக்கான ஒர் கருத்துக் கணிப்பு:

1. நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் ஏற்பாடு செய்த முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வுகளுக்குச் சென்றிருக்கிறேன் அல்லது பங்களித்திருக்கிறேன்

2. நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் இதுவரை நடத்திய கருத்தரங்குகள், கூட்டங்களில் பங்குபற்றியிருக்கிறேன்

3. நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்திற்கு நிதிப் பங்களிப்பு செய்திருக்கிறேன்

4. நான் வாழும் பிரதேசத்தைச் சேர்ந்த நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் அமைச்சர்கள், உறுப்பினர்களை அறிந்து வைத்திருக்கிறேன்

4. நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அமைச்சர்கள், உறுப்பினர்கள் ஆகியோரோடு கடந்த காலங்களில் தொடர்பு கொண்டிருக்கிறேன்

5. நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு உறுதுணையாக நின்றிருக்கிறேன்

முழங்காலுக்கும் மொட்டைக்கும் முடிச்சுப் போடுவது என்பது இதுதானா தமிழச்சி?

முதலில் நாடு கடந்த அரசாங்கம் தன் மீதான நம்பிக்கைகளை வளர்த்தெடுக்கட்டும், பின் மக்களின் பங்களிப்பு பற்றி கதைக்கலாம். நீங்கள் மேற் கூறிய விடயங்களைச் செய்வதற்கு முதலில் மக்களுக்கு நம்பிக்கைகள் வரட்டும். இந்த அரசாங்கத்தின் அமைச்சர்களுடனும், உறுப்பினர்களுடனும் தொடர்புகளை நா.க. அ. இன் எந்த அமைப்புகளுடனும் தொடர்பில்லாத சாதாரண மக்கள் வைத்திருப்பதற்கு, அவர்களது செயற்பாடுகள் மீதான நம்பிக்கைகள் அவசியம். இங்கு மகா யாகம் போன்ற மக்களை ஏமாற்றும் நிகழ்வுகளைச் செய்யும் அமைப்பு மீதும், அதனை ஆதரிப்பவர்கள் மீதும் எந்த அடிப்படையில் நம்பிக்கை வைப்பது?

உங்கள் கேள்விகள அனைத்தும், இந்த திரியில் சொல்லப்பட்ட எந்த அடிப்படைக் கருத்துகு பதில் தரவில்லை, மாறாக எம்முடன் இணைந்திருந்தால் மட்டுமே எம்மை கேள்வி கேட்க முடியும் என்ற திமிர்த்தனமாக மேட்டுக்குடி மனப்பாங்கு தான் தெரிகின்றது.

உந்த வண்டி கரை சேராதென்று நாங்கள் சொல்லுகின்றோம்,நீங்கள் என்னடா என்றால் ஒருக்கா ஏறிப்பாருங்கோ என்கின்றீர்கள்.

ஈ பி டி பி யில் இருக்கும் ஒருவரும் உதே மாதிரி சொல்லலாம் .எங்களோடு முதலில் வந்து சேர்ந்து பாருங்கள் என்று .

  • கருத்துக்கள உறவுகள்

தமிழிச்சியின் அத்தனை கேள்விகளுக்கும் எனது பதில் ஆம்.

(அவர்களால் நடாத்தப்பட்ட மாவீரர் நாள் உட்பட)

(முள்ளிவாய்க்கால் நினைவு நாளை மட்டும் புறக்கணித்திருந்தேன்.)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பலே பலே! தமிழச்சி உங்களை நினைத்தால் பாவமாக இருக்கிறது - நீங்கள் என்ன நாடு கடந்த அரசாங்க உறுப்பினரா?

நிற்க, எழுதியிருக்கும் மற்றவர்களை நினைத்தால் வேதனையாக இருக்கிறது.

தந்தை செல்வாவிற்கு இருக்கவில்லை ஜி.ஜி ல் நம்பிக்கை

ஜி.ஜி க்கு இருக்கவில்லை செல்வாவில் நம்பிக்கை

இவர்கள் வழி வந்த அமிருக்கிருக்கவில்லை பிரபாவில் நம்பிக்கை

பிரபாவிற்கு இருக்கவில்லை அமிரிலும் உமாவிலும் நம்பிக்கை

இவ்வாறு இந்த நம்பிக்கையீன டி.என்.ஏ. பரம்பரை பரம்பரையாக தொடர்ந்து இதில் எழுதும் மற்றவர்களிடமும் வந்துவிட்டதா?

அல்லது இவர்களிடம் தன்னம்பிக்கையே இல்லையா? - ஏங் கேக்கிறேன்னா தன்னம்பிக்கை என்னு ஒண்ணு இருந்தாத்தாங்க மத்தவங்க மேலயும் அவங்க பண்ற காரியங்க மேலயும் நம்பிக்கை வரும்

ஒருவர ஒருவர் சீண்டிறத உட்டிட்டு இனியாவது கொஞ்சம் புரிஞ்சுக்க பாருங்க ஜனங்களே! புரிஞ்சுக்குவீங்களா? - அப்படி புரிஞ்சுப்பீங்கன்னா நம்ம இனம் உருப்படும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.