Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விடுதலைப் புலிகளுக்கான ஆயுதக் கொள்வனவு முயற்சி வழக்கிலிருந்து ரமணன் மயில்வாகனம் விடுதலை !

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Ramanan-news140512-150.jpg

தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆயுதம் வாங்க முற்பட்டதாக கனடாவில் கைதாகி, பின்னர் அமெரிக்காவுக்கு நாடுகடத்தப்பட்ட ரமணன் மயில்வாகனம் இன்று விடுதலைசெய்யப்பட்டார் . இவருடன் 4 பேர் கைதுசெய்யப்பட்டிருநடதனர். ஆனால் ரமணனை அமெரிக்க உளவுப் பிரிவினர் தமது நாட்டுக்கு நாடு கடத்துமாறு வேண்டி இருந்தனர். இவர்களின் கோரிக்கையை ஏற்று கனடா ரமணனை நாடு கடத்தியது. ஆனால் அமெரிக்காவில் நடாத்தப்பட்டுவந்த வழக்கில் நீதிபதி, அரச தரப்பு வக்கீல் கோரிய தண்டனையை வழங்க மறுத்துவிட்டார்.

கனடாவில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்காக நிதிசேகரித்தார் என்றும், இதனூடாக இவர் ஆயுதங்களை வாங்க திட்டமிட்டிருந்தார் எனவும் குற்றஞ்சுமத்தப்பட்டது. தடைசெய்யப்பட்ட விடுதலைப் புலிகள் இயக்கத்துக்காகச் செயல்படுவது சட்டப்படி குற்றமாகும். இதனால் ரமணனுக்கு ஜாமீன் வழங்கவும் மறுப்புத் தெரிவிக்கப்பட்டது. 2006ம் ஆண்டு முதல் சிறையில் இருக்கும் ரமணனுக்கு மேலதிக தண்டனை கொடுக்கப்படவேண்டும் என்பதனை நீதிபதி நிராகரித்து அவரை விடுதலைசெய்துள்ளார். புலிகளுக்காக தாம் பணம் சேர்த்தது உண்மை என்று, ரமணன் அவர்கள் நீதிமன்றில் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்க விடையம். இதனூடாக அவரே குற்றத்தை ஒப்புக்கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

http://www.seithy.co...&language=tamil

மகிழ்ச்சியான செய்தி.

சந்தோசம்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மிகவும் மகிழ்சியான செய்தி.

  • கருத்துக்கள உறவுகள்

மிகவும் மகிழ்சியான செய்தி.

  • கருத்துக்கள உறவுகள்

மற்றய உறவுகளும் விரைவில் விடுதலை ஆக வேண்டும்!!

மகிழ்ச்சியான விடயம் , நான் நினைக்கிறேன் ஒல்லாந்து நாட்டில் சிறைவாசம் அனுபவிக்கும் எம் மனிதாபிமான செயற்பாட்டாளர்கள் அனைவரும்

கூட இந்த வருடத்திற்குள் விடுதலையாவார்கள் என நாம் எதிர்பார்க்கின்றோம்.ஒரு சிலர் வார இறுதிகளில் தம் வீடுகளிற்கு சென்று வருவதற்கு

இங்கே அனுமதியளிக்கப்பட்டுள்ளது என்பதையும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்..........நன்றி

உண்மையுடன்

தமிழ்சூரியன் .

  • கருத்துக்கள உறவுகள்

பிரான்சிலும் அனைவரும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்

பிரான்சிலும் அனைவரும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்

மிக்க மகிழ்ச்சி

மகிழ்வான செய்தி. ஏனையவர்களும் விரைவில் விடுதலையடைய வேண்டும்.

ஆனா இலங்கையில் மட்டும் சாதாரண பொதுமக்கள் கூட விடுதலை ஆவது இல்லை

  • கருத்துக்கள உறவுகள்

மிகவும் மகிழ்ச்சியான ஒரு விடயம்.

இதேபோல இலங்கை இந்தியா மற்றும் ஏனைய மேற்குலக நாடுகளின்

சிறையில் வாடும் உறவுகளும் விடுதலை செய்யப்பட வேண்டும்.

மகிழ்சியான விடயம். ஆனாலும் நாம் கேஸ்பேக்கின் தத்துவங்களுடனான சமாந்தரங்களை இங்கே போட்டுப்பார்க்கலாம்.

"Herzberg's theory of motivators and hygiene factors"

நமக்கு தீர்வுதான் இறுதி மகிழ்ச்சியை தரும். அந்த நோக்கில் பார்த்தால் நாமும் இரண்டு நிலைமைகளை காணலாம். ஒன்று வேதனைகளில் இருந்து விடுபடுவது. மற்றயது முன்னேற்றம் காண்பது.

1.தற்போதைய முதல் தேவை தாயகத்திலும் வெளியிலும் வாடிக்கொண்டிருக்கும் உயிர்கள் வேதனகளில் இருந்து விடுபடுவது. இதை நாம் மகிழ்சியாக கொள்ள முடியாது. ஆனால் அவசரம் பெற்றுக்கொண்டால்த்தான் நம்மை நாம் தமிழர் என்று அடையாளைப்படுத்திக் கொள்ள முடியும்.

2. இரண்டாவது, பிரதானமாக உலக நாடுகளை ஊக்குவித்து நமக்கு என்று ஒரு தீர்வை நோக்கி செல்ல வேண்டும். அதில் கிடைக்கும் வெற்றிகளை மகிழ்சிகரமானதாக கொள்ளலாம். இப்படியான வேதனைகளில் இருந்து விடுவித்து கொள்ள்வதை மகிழ்சியோ சந்தோசமோ இல்லாத ஒரு கவலை ஒழிந்த நிலையாகத்தான் கொள்ளலாம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மகிழ்ச்சியான விடயம்......இவர்களிடம் எப்படியான உறுதிமொழிகளை வாங்கிவிட்டு விடுதலை செய்திருப்பார்கள்? அல்லது எப்படியான கட்டளைகளுடன் இவர்களை விடுதலையாக்கியிருப்பார்கள்?

  • கருத்துக்கள உறவுகள்

மகிழ்வான செய்தி

  • கருத்துக்கள உறவுகள்

மகிழ்வான விடயம். அவுஸ்திரெலியா தான் முதலில் எல்லாரையும் விடுதலை செய்தது.

சர்வதேச அரசியலிலும் மாற்றங்கள் ஏற்படுகின்றன என்பதை இது காட்டுகின்றது.

எமது மக்களும் நாடும் விடுதலை காணட்டும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

காலமும் நேரமும் எப்போதும் ஒரே மாதிரி இருப்பதில்லை ....... இனிவரும் காலம் எங்களுக்கானது என்பதற்கான சில சர்வதேச நகர்வுகளின் வெளிப்பாடுகள்

மகிழ்வான விடயம். அவுஸ்திரெலியா தான் முதலில் எல்லாரையும் விடுதலை செய்தது.

அதேபோன்று தமிழீழத்தை அங்கிகரிப்பதையும் அஸ்ரேலியா செய்தால் மகிழ்சியாக இருக்கும் :)

சர்வதேச அரசியலிலும் மாற்றங்கள் ஏற்படுகின்றன என்பதை இது காட்டுகின்றது.

எமது மக்களும் நாடும் விடுதலை காணட்டும்.

நின்சயமாக எமது மக்களுக்கு ஒரு நாடு வேண்டும் :)

இதன் அடுத்த கட்டமாக, புலிகள் மீதான தடையை அகற்ற முயற்சிகள் மேற்கொள்ளுதல் வேண்டும். இதனை உடனடியாக செய்ய முடியாது போயினும் எம் ஒவ்வொரு நடவடிக்கையும் இதனை நோக்கி நகர்ந்தால் எதிர்காலத்தில் சாத்தியப் படும்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இதன் அடுத்த கட்டமாக, புலிகள் மீதான தடையை அகற்ற முயற்சிகள் மேற்கொள்ளுதல் வேண்டும். இதனை உடனடியாக செய்ய முடியாது போயினும் எம் ஒவ்வொரு நடவடிக்கையும் இதனை நோக்கி நகர்ந்தால் எதிர்காலத்தில் சாத்தியப் படும்

நிச்சயமாக புலிகளின் தடை நீக்கப்படவேண்டும் அப்படி நீக்கப்படும்போது பல இன்றைய பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும்

தனிநபர்கள் விடுதலை செய்யப்படுவதையும் புலிகளின் தடையையும் ஒன்றாக பார்க்க கூடாது,முதலில் சிறையில் இருப்பவர்கள் அனைவரும் வெளியில் வரட்டும் பின்னர் புலிகளின் தடைநீக்குவதை பற்றி பேசுங்கள்.

மாவிலாறில் யுத்தம் தொடங்கி கிழக்கு,மன்னார் ,கிளிநோச்சி என்று பறிபோகையில் பொதுமக்கள் தொகையாக அழியப்போகின்றார்கள் யுத்தத்தை நிறுத்தச்சொல்லி உலகிடம் மன்றாடினால் அது நடக்கு சாத்தியம் என்ற போது,

இல்லை உலகம் இப்போ எங்களை உன்னிப்பாக அவதானிகின்றது இப்போதே புலிகளின் தடையும்

நீக்கப்பண்ணி,அங்கீகாரத்தையும் பெற்று,பிரபாகரனையும் தலைவராக ஏற்று கொள்ள பண்ணி விடவேண்டும் என்று புலிக்கொடியையும் பிரபாகரனின் படத்துடனும் தான் சனம் சந்தியில் நின்றது ,அதனால் தான் எந்த ஒரு அரசியல்வாதியும் அந்த பக்கமே தலை வைத்து படுக்கவில்லை .அவ்வளவு பொதுமக்களின் அழிவும் முள்ளிவாய்காலில் நடைப்பெற அதுவும் ஒருகாரணம் .

இப்போ விடுதளையானவர் கூட தான் செய்தது பிழை என்றே வெளியில் வருகின்றார் ,முதலில் அவர்களை வெளியில் வரவிடுங்கள் .

இல்லை உலகம் இப்போ எங்களை உன்னிப்பாக அவதானிகின்றது இப்போதே புலிகளின் தடையும்

நீக்கப்பண்ணி,அங்கீகாரத்தையும் பெற்று,பிரபாகரனையும் தலைவராக ஏற்று கொள்ள பண்ணி விடவேண்டும் என்று புலிக்கொடியையும் பிரபாகரனின் படத்துடனும் தான் சனம் சந்தியில் நின்றது

இந்த வரலாற்றுக்கடமையை செய்த அனைத்து மக்களும் முட்டாள்கள் ....இந்த மா..............பெரும் உண்மையை

இவ்வளவு தாமதித்து தாங்கள் கூறியதையிட்டு மனம் கொதிக்கின்றது................முடியல..............

இப்போ விடுதளையானவர் கூட தான் செய்தது பிழை என்றே வெளியில் வருகின்றார் ,முதலில் அவர்களை வெளியில் வரவிடுங்கள்

அருமையான கற்பனை ஒவ்வொருவரது கற்பனைகளிலும் அவர்களது சொந்த விருப்பு,வெறுப்பு,உள் தோற்றம் தெரியும்

என்பதை எங்கோ வாசித்த நினைவு.........

Edited by tamilsooriyan

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல செய்தி. தமிழர்கள் உலகப் பயங்கரவாதிகள் அல்லர் என்பது தெளிவாகும்.

இல்லை உலகம் இப்போ எங்களை உன்னிப்பாக அவதானிகின்றது இப்போதே புலிகளின் தடையும்

நீக்கப்பண்ணி,அங்கீகாரத்தையும் பெற்று,பிரபாகரனையும் தலைவராக ஏற்று கொள்ள பண்ணி விடவேண்டும் என்று புலிக்கொடியையும் பிரபாகரனின் படத்துடனும் தான் சனம் சந்தியில் நின்றது

இந்த வரலாற்றுக்கடமையை செய்த அனைத்து மக்களும் முட்டாள்கள் ....இந்த மா..............பெரும் உண்மையை

இவ்வளவு தாமதித்து தாங்கள் கூறியதையிட்டு மனம் கொதிக்கின்றது................முடியல..............

இப்போ விடுதளையானவர் கூட தான் செய்தது பிழை என்றே வெளியில் வருகின்றார் ,முதலில் அவர்களை வெளியில் வரவிடுங்கள்

அருமையான கற்பனை ஒவ்வொருவரது கற்பனைகளிலும் அவர்களது சொந்த விருப்பு,வெறுப்பு,உள் தோற்றம் தெரியும்

என்பதை எங்கோ வாசித்த நினைவு.........

மிகச் சரியாக கூறியுள்ளீர்கள் - இதே எண்ணம் எனது மனதிலும் வந்தது.

தமிழை உருப்படியாக வாசித்து, அதை விளங்கி கருத்தெழுத முடியாதவர்கள் எல்லாம் - இலக்கியவாதிகள், பேச்சாளர்கள், ஆலோசகர்கள், ஊடகவியலாளர்கள், கவிஞர்கள் என்று தம்பட்டம் அடிப்பதோடு, பெருந்தோரனையில் ஆலோசனை வழங்க வெளிக்கிடுவது தொடர் கதையாக உள்ளது.

இங்கு ரமணன் மயில்வாகனம் தான் ஒடுக்கப்பட்டு, அழிக்கப்படுக் கொண்டிருக்கும் தமிழ் இனத்தின் அடிப்படை உரிமைகளை வெல்லப் போராடும் ஒரு விடுதலை இயக்கத்துக்கு நிதி சேகரித்ததையே ஒப்புக்கொண்டுள்ளார். அவர் "பிழை" செய்ததாக ஒப்புக் கொள்ளவில்லை.

எப்பவுமே சிவப்புக் கண்ணாடி போட்டுக்கொண்டு பார்ப்பவர்களுக்கு எல்லாமே சிவப்பாக தெரியும். இது உண்மையில் அவர்களது மனம் எவ்வளவு அழுக்கானது, விகாரமானது, கோணலானது என்பதை அப்படியே எடுத்துக் காட்டுகிறது.

-------------

தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடைகளை மேற்குலகில் அகற்ற வேண்டியது மிக முக்கியமான ஒரு விடயம். புலம் பெயர் அமைப்புக்கள், சிங்கள அரச போர்குற்றவாளிகளை நீதியின் முன் நிறுத்தும் முயற்சியில் கைவிடாமல், இதையும் தொடர்ச்சியாக செய்யவேண்டும்.

Edited by ஆராவமுதன்

  • கருத்துக்கள உறவுகள்

தனிநபர்கள் விடுதலை செய்யப்படுவதையும் புலிகளின் தடையையும் ஒன்றாக பார்க்க கூடாது,முதலில் சிறையில் இருப்பவர்கள் அனைவரும் வெளியில் வரட்டும் பின்னர் புலிகளின் தடைநீக்குவதை பற்றி பேசுங்கள்.

மாவிலாறில் யுத்தம் தொடங்கி கிழக்கு,மன்னார் ,கிளிநோச்சி என்று பறிபோகையில் பொதுமக்கள் தொகையாக அழியப்போகின்றார்கள் யுத்தத்தை நிறுத்தச்சொல்லி உலகிடம் மன்றாடினால் அது நடக்கு சாத்தியம் என்ற போது,

இல்லை உலகம் இப்போ எங்களை உன்னிப்பாக அவதானிகின்றது இப்போதே புலிகளின் தடையும்

நீக்கப்பண்ணி,அங்கீகாரத்தையும் பெற்று,பிரபாகரனையும் தலைவராக ஏற்று கொள்ள பண்ணி விடவேண்டும் என்று புலிக்கொடியையும் பிரபாகரனின் படத்துடனும் தான் சனம் சந்தியில் நின்றது ,அதனால் தான் எந்த ஒரு அரசியல்வாதியும் அந்த பக்கமே தலை வைத்து படுக்கவில்லை .அவ்வளவு பொதுமக்களின் அழிவும் முள்ளிவாய்காலில் நடைப்பெற அதுவும் ஒருகாரணம் .

இப்போ விடுதளையானவர் கூட தான் செய்தது பிழை என்றே வெளியில் வருகின்றார் ,முதலில் அவர்களை வெளியில் வரவிடுங்கள் .

ஈழ விடுதலைப் போராட்டத்துக்கு, ஒரு துரும்பையும் .... கிள்ளிப் போடாது, முட்டுக்கை கொடுத்த உங்களுக்கு இங்கு கருத்து சொல்ல வெட்கமாயில்லை?

இரும்படிக்கும் இடத்தில்.... இலையானுக்கு என்ன வேலை?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.