Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பிரித்தானியாவில் அடித்துக் கொலை செய்யப்பட்ட தமிழர்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

[size=3][size=4]பிரித்தானியாவின் லெஸ்டர் பகுதியில் கடந்த பலவருடமாக வசித்து வந்த ஜேம்ஸ் பொண்ணுத்துரை நிமலராஜன் என்பவர், கடந்த 9ஆம்திகதி இனந்தெரியாதோரின் தாக்குதலுக்குள்ளாகி உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,

குறித்த நபர், கடந்த 9ஆம் திகதி அன்று இரவு 11 மணியளவில் கடையில் பணிபுரிந்து விட்டு வீடு செல்லும் பொழுது, வீதியில் வைத்து இனந்தெரியாத நபர்களால் தாக்கப்பட்டுள்ளார்.

பின்னர் இவர், லெஸ்டர் றோயல் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக நொட்டிங்காம் குயின்ஸ் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். அங்கும் சிகிச்சை பயனளிக்காத பட்சத்தில் நேற்றுக் காலை மரணமடந்துள்ளார்.

இச்சம்பவம் தொடர்பாக முதல்கட்ட விசாரணையின் போது 13, 14 மற்றும் 15 வயதுடைய சிறுவர்கள் பொலிசாரினால் கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமினில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

மேலும், கைது செய்யப்பட்ட சிறுவர்கள் ஆரம்பத்தில் தாக்கப்பட்ட குற்ற வழக்காக இருந்தபோதிலும், இப்பொழுது கொலை வழக்காக பதிவு செய்யப்பட்டு விசாரனைகள் மேலும் துரிதப்படுத்தப்பட்டுள்ளது.

மேலும் இச்சம்பவம் தொடர்பாக கிழக்கு மிட்லான்ட் சிறப்பு நடவடிக்கை பிரிவைச் சேர்ந்த தலைமை பொலிஸ் அதிகாரி, “இச்சம்பவம் தொடர்பாக பொலிஸ் பல நபர்களை சந்தேகத்தின் பேரில் கைது செய்து விசாரித்த போதிலும் எமக்கு மேலும் பல தகவல்கள் மற்றும் சாட்சியங்களை எதிர்பார்க்கின்றோம்” என தெரிவித்தார்.

இவ் வழக்கு தொடர்பான மேலதிக விசாரணைகளை பிரித்தானிய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.[/size][/size]

jems_ponnuthurai_001.jpg

jems_ponnuthurai.jpg

[size=4]http://www.eelampres.../80160/56/.aspx[/size]

  • கருத்துக்கள உறவுகள்

13, 14 வயதுச் சிறுவர்கள் என்றால்...

நிச்சயம் முற்பகை இருந்திராது.

தண்ணியடித்து விட்டு, தங்கள் வீரத்தை காட்டியிருக்கலாம்.

இறந்த ஜேம்ஸ் நிமலராஜனுக்கு, ஆழ்ந்த இரங்கல்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த இரங்கல்கள்..

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

[size=4]இறந்த ஜேம்ஸ் நிமலராஜனுக்கு, ஆழ்ந்த இரங்கல்கள் . [/size]

[size=4]இனவெறி தாக்குதல் போலுள்ளது.[/size]

[size=4]குடும்பத்தாருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்![/size]

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

குடும்பத்தாருக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள்.

சம்பந்தப் பட்டவர்களுக்குத் தகுந்த தண்டனை கிடைக்க வேண்டும்..

[size=3][size=4]ஜேம்ஸ் பொண்ணுத்துரை நிமலராஜ[/size][/size]ன் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த [size=4]அனுதாபங்கள்[/size]... அன்னாரின் ஆன்மா சாந்தியடையட்டும்!

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த அனுதாபங்கள்..:(

  • கருத்துக்கள உறவுகள்

பெடியன பார்க்க பாவமா இருக்கிறது. குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள். இரவு நீண்ட நேரம் வேலை செய்பவர்கள், அதுவும் வார விடுமுறை நாட்களில் டக்சி அல்லது சொந்த வாகனத்தைப் பாவிப்பது நல்லது. கொஞ்சம் செலவு எண்டாலும் பாதுகாப்பானது.

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த அனுதாபங்கள்

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த இரங்கல்கள்..

ஆழ்ந்த அனுதாபங்கள்.

ஆழ்ந்த அனுதாபங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த அனுதாபங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த இரங்கல்கள்!

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த இரங்கல்கள்!

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த அனுதாபங்கள்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

[size=4][size=5]7 சிறுவர்கள் சேர்ந்து அடித்ததில் இலங்கையர் பலி! பொலிஸார் தீவிர விசாரணை.பிரித்தானியாவில் சம்பவம் [/size][/size]

[size=4]deth_body_seithy260612.jpg[/size]

[size=4]பிரித்தானியாவில் இளைஞர்கள் சிலரின் தாக்குதலுக்கு இலக்காகி இலங்கை தமிழ் பிரஜை ஒருவர் உயிரிழந்துள்ளதாக பிரித்தானிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இலங்கையை சேர்ந்த பொன்னுதுரை நிமலராஜா என்ற 41 வயது நபரே இவ்வாறு தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்தவராவார்.[/size]

[size=4]இவர் இலங்கை இராணுவத்தால் கைது செய்யப்பட்டு தாக்கி விடுவிக்கப்பட்டதன் பின் 1993ம் ஆண்டு தஞ்சம் கோரி, ஜெர்மனியில் குடியேறினார். இவருடைய மனைவி மதனிகா. இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். தங்கள் குழந்தைகள் ஆங்கிலப் படிப்பு படிக்க வேண்டும் என்ற ஆசையால், பிரித்தானியாவில் குடியேறினர்.[/size]

[size=4]கடந்த 9 ஆம் திகதி லீசெஸ்டர் பகுதியில் ஏற்பட்ட மோதலில், 13 வயது முதல் 15 வயது வரையுள்ள ஆறு சிறுவர்களும், 14 வயதுள்ள ஒரு பெண்ணும் நிமலராஜாவை கடுமையாகத் தாக்கியுள்ளனர். இதில் தலையில் பலத்த காயமடைந்த நிமலராஜா சிகிச்சை பலனின்றி கடந்த வாரம் உயிரிழந்துள்ளார். இது தொடர்பாக லீசெஸ்டர் பகுதி பொலிஸார் கொலை வழக்குப் பதிவு செய்து ஏழு பேரை கைது செய்துள்ளனர்.[/size]

[size=4]இவர்கள் ஏழு பேரும் தற்போது பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். இந்த கொலைக்குப் பின்னணி குறித்து நிமலராஜாவின் மனைவி மற்றும் பெற்றோரிடம் பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.[/size]

[size=4]http://www.seithy.com/breifNews.php?newsID=62308&category=TamilNews&language=tamil[/size]

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.