Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கிளைகளை இறுக்கும் குருவிச்சைக் கொடிகள்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

[size=4]அட...போய்க் குளியனடா...............[/size]

[size=4]வழக்கமான, சனிக்கிழமைச் சத்தத்தில் , அந்தச் சிட்னியின் புறநகர்த் தெரு ஒரு முறை, புரண்டு படுத்தது![/size]

[size=4]அந்தத் தெருவுக்குப் புதிதாக வந்திருந்த அம்மா தான், தனது பேரனைக் கோவிலுக்கு அழைத்துப் போவதற்காக, குளிக்க வைக்க முயற்சிக்கிறாள்![/size]

[size=4]இந்தத் தெரு, அந்த அம்மா வர முந்திக் கொஞ்சம் அமைதியாகத் தான் இருந்தது! அந்தத் தெரு மட்டுமல்ல, சந்திரனின் குடும்பத்திலும், அமைதி சூழ்ந்திருந்தது![/size]

[size=4]தொண்ணூறுகளில், அகதியாக வந்தாலும், இரவு நேர வேலை ஒன்றில், சேர்ந்து, தனது மனைவியையும், இங்கு அழைத்து மூன்று குழந்தைகளுடனும், சந்தோசமாகத் தான் போய்க் கொண்டிருந்தது, வாழ்க்கை![/size]

[size=4]பிள்ளைகளுக்கும், தமிழ்ப் பள்ளிக்கூடம், பரத நாட்டியம், சங்கீதம் என்று, எல்லாத் தமிழ்க் குடும்பங்களையும், போலவே அவனும் அழைத்துக் கொண்டு போவான்! பரத நாட்டியம், தமிழ்க் கலாச்சாரம் தானா, எனச் சிந்திப்பதற்கு, அவனுக்கு நேரமும் இருக்கவில்லை. விருப்பமும் இருக்கவில்லை. ஏதோ எல்லோரும், செய்வது போலவே அவனும் செய்தான், தனது பிள்ளைகளும், தமது கலாசாரத்தை, மறக்காமல் வளர்ந்தால், ஒரு காலத்தில், ஈழம் மலர்ந்தால், தனது சொந்த ஊரில் போய் இருக்கவும், அவனிடம் திட்டங்கள் இருந்தன.[/size]

[size=4]அவனது மனுசியும், ஒரு தபால் கந்தோரில், பகுதி நேர வேலை செய்யத் துவங்கவும், அவனுக்கு மனுசியைப் பற்றி, உள்ளுக்குள் பெருமையாகவும் இருந்தது! தன்னைப் போலவே, மனுசிக்கும், வருங்காலத் திட்டங்கள் இருக்கும், என்பதை, அவன் நினைத்துப் பார்த்ததில்லை![/size]

[size=4]இஞ்சேருமப்பா! ஊரில,அம்மா தனிய தானே இருக்கிறா! இப்ப நானும் வேலை செய்யிற படியால், அம்மாவையும் கூப்பிட்டு வைச்சா, எங்களுக்கு வசதியா இருக்கும் தானே! அதோட, அம்மா சமைச்சுப் போட்டுப் பிள்ளையளையும், பாத்தா எண்டா, எங்களுக்கும் கொஞ்சம் 'ஓய்வு' கிடைக்கும் தானே![/size]

[size=4]முதலில், பாப்பம் என்று கூறி வைத்தவனுக்கு, நாட்கள் போகப் போகத் தாக்குதல் வியூகம் வேறு வடிவங்களில் வருவதை, உணரத் தொடங்கிய போது,கொஞ்சம் பயந்து தான் போனான்![/size]

[size=4]குசினியில், சட்டி பானைகள், காரணமில்லாமல், விழுந்தெழும்பின! மனுசிக்கும், அடிக்கடி தலையிடிக்கத் துவங்கப், பிள்ளையளும் புதுசா, 'அம்மம்மா' என்ற வார்த்தையை, அடிக்கடி உபயோகிக்கத் துவங்கின![/size]

[size=4]நிலைமை, கட்டுக்கடங்காமல் போகவே, சந்திரனும், வேறு வழியின்றி, அம்மம்மாவின் வருகைக்குச் சம்மதிக்க வேண்டி வந்தது![/size]

[size=4]அம்மம்மாவும், வந்து ஒரு இரண்டு வாரங்கள் ஓடி விட்டன. வீட்டுக்குப் புதிதாக வந்த, நாய்க் குட்டியைப் போலக் கொஞ்சம் மிரண்டு போனது மாதிரி, அவனுக்குத் தெரிந்தது. வீட்டில் கொஞ்சம் அம்மம்மாவின் சாப்பாடும், நல்லா இருக்கவே, சந்திரனுக்கும் அம்மம்மா மீது, ஒரு பிடிப்பு வந்து விட்டது.[/size]

[size=4]எனவே, அம்மம்மாவைக் கூட்டிக் கொண்டு ஒரு நாள், முருகன் கோவிலுக்குப் போனார்கள். தன்னுடைய வயதுள்ள, வேறு தமிழ் ஆக்களைக் கண்டதும், அம்மம்மாவிற்குப் புதிய ஒரு உற்சாகம் வந்து விட்டது போல இருந்தது., இவ்வளவு தமிழ் ஆக்கள், இங்க இருக்கினமா, என்று ஆச்சரியப் பட்டதுடன், அவவின் முகத்திலும், ஒரு புதிய களையொன்று ஏற்பட்டு விட்டதையும், சந்திரன் அவதானிக்கத் தவறவில்லை.[/size]

[size=4]ஒரு இரண்டு மாதங்கள் போகவும், அம்மம்மாவுக்கு, வெளிநாட்டு வாழ்க்கை கொஞ்சம் பிடி படத் துவங்கியது. அடிக்கடி, தனது குடும்பத்தைப் பற்றிச் சொல்லிக் கொள்வதில், அம்மம்மாவுக்கு, மிகவும் பெருமையாக இருக்கும். கனடாவில், இருக்கும் மகனைப் பற்றி,எல்லோருடனும் பேசிக் கொண்டேயிருப்பா. எவ்வளவு செல்லமாக, அவவின், மகள் ஊரில இருந்தவ என்பதைப் பற்றியும், இங்கு வந்து வேலை செய்ய வேண்டியிருக்கிறதே, என்று தனது ஆதங்கத்தையும், அடிக்கடி சொல்லிக் கொள்ளுவா. தனது மகளைக் கட்டின படியால் தான், சந்திரனுக்கு, இவ்வளவு, ஒரு நல்ல வாழ்க்கை அமைந்திருக்கிறது என்றும் அவனது காது படவே அம்மம்மா கூறுவதைக் கேட்க, அவனுக்கு ஒரு மாதிரியாக இருந்தாலும் அவன் அதை வித்தியாசமாக எடுத்துக் கொள்வதில்லை. ஆனால், தங்களின் குடும்பத்தில் கலியாணம் செய்வதற்குச், சந்திரனின் குடும்பம் கொடுத்து வைத்திருக்க வேண்டும் எனும் போது, அவனுக்கும் கொஞ்சம் கோபம் வரத்தான் செய்தது,. எல்லாத்துக்கும், மகளின்ர, 'பரணி' நட்சத்திரமே காரணம் என்பதில், அவவுக்கு அசையாத நம்பிக்கை.[/size]

[size=4]சில நாட்களாக.அம்மம்மாவின் போக்கில் கொஞ்சம் மாற்றம் ஏற்படத் தொடங்கியது. ஒரு நாள், மார்கற்றுக்குப் போய்ச் சாமான் வாங்கிக் கொண்டு வரும்போது, வழக்கம் போல, அவனது மனைவியும், ஒரு கரியர் பாக்கைத் தூக்கிக் கொண்டு வந்தது, அம்மம்மாவுக்குத் துப்புரவாகப் பிடிக்கவில்லை.[/size]

[size=4]' இதை ஏன் நீங்கள் காவக் கூடாதோ? எங்கட பிள்ளையளை, நாங்க இப்பிடிப் பழக்கேல்ல, எண்டு சொல்லத் துவங்கச் சந்திரனும் பேசாமல், ஏற்கெனவே வைத்திருந்த மூன்று பைகளுடன், நாலாவதாக, அதையும் வாங்கிக் கொண்டான். அவனது மனுசியும், திருப்பி ஒன்றும் சொல்லாதது, அவனுக்கு, ஒரு மாதிரியாய் இருந்தது. வீட்டுக்குப் பக்கத்தில், மின்சாரப் புகையிரத நிலையம் இருந்தாலும், முன்பு வேலை முடிந்து, நடந்து வரும் மனுசியை, இப்போது அவன் காரில் போய்க் கூட்டிக் கொண்டு வர வேண்டிய வேலையும் புதிதாக, அவனுக்கு வந்து சேர்ந்தது. அது மட்டுமன்றி,புகையிரதம் வருவதற்குப் பத்து நிமிடங்களுக்கு முன்பே, ' அவள், வரப்போறாள்! பாவம், பிள்ளை பாத்தெண்டேல்லோ நிக்கப் போகுது' என அம்மம்மாவின் புலம்பல், தொடங்கி விடுவதும், அவனுக்குக் கொஞ்சம் கோபத்தை வரவழைத்தாலும், பேசாமலிருந்தான். அம்மம்மாவும், ஒவ்வொரு முறை, கோவிலுக்குப் போய், வரும்போதும், ஒரு வித்தியாசமான, அம்மம்மாவாய் வரத் துவங்கவும், சந்திரனும் சிறிது கலவரமடையத் தொடங்கினான்.[/size]

[size=4]'அம்மாவுக்கு, மூன்று மாசம் முடியப்போகுதெல்லே! ஆரையும் பிடிச்சுக் கிடிச்சு, அசைலம் அடிக்கிற வழியைப் பாக்கயில்லையே,எண்டு மனுசி துவங்கியபோது தான், அவனுக்கு, அம்மம்மா தன்னுடன், நிரந்தரமாகத் தங்கப் போகின்ற விசயம் விளங்கியது. அம்மம்மாவும், கோயிலில ஆக்கள் சொன்னவையாம். யாழ்ப்பாண ஆக்களுக்கு, ஒரு பிரச்சனையும் இல்லையாம் என்று, தன்ர பக்கத்து நியாயத்தையும் சொல்லத் துவங்கினா.[/size]

[size=4]சந்திரனும், ஒரு நாள் வேலை முடிந்து, மனுசியை ஏத்திக் கொண்டு வரும்போது, ' இஞ்சை பாரப்பா, லோயர் அது இது, எண்டு, கன செலவெல்லே வரப் போகுது. உங்கட அண்ணனிட்டக் கொஞ்சம் காசை அனுப்பச் சொல்லிக் கேட்டுப் பாருமன், என்று சொல்லிப்பார்த்தான். மனுசியும், ஏன், உங்களுக்குத் தந்த சீதனம் காணாதே? இதுக்கும் மேலே, அவையிட்டை நான் என்னண்டு கேட்கிறது? என்றதுடன் நிறுத்திக் கொள்ளாமல், எங்களைப் பற்றி, அவை என்ன நினைப்பினம், என்று முடித்ததும், தனது குடும்பக் கவுரவம் கொஞ்சம் பெரிதாகி விட்டதையும் அறிந்து கொண்டான். ஒரு மாதிரிக் கடனட்டையை நிரப்பி, இருந்த சின்னச் சேமிப்பையும் கரைச்சு, அம்மம்மாவுக்கு அகதி விசாவும் எடுத்துக் குடுத்து முடிச்ச பிறகு தான், வீட்டில் ஒரு மாதிரி நிம்மதிப் பெருமூச்சு விடக் கூடியதாக இருந்தது.[/size]

[size=4]ஒருநாள், விடியக்காலமை, 'சுப்பிர பாதம்; கேட்டு,விழித்துக் கொண்ட சந்திரன், மனுசி வேலைக்குப் போகாமல் இருந்ததைக் கண்டு, என்ன, இண்டைக்கு லீவோ, என்று கேட்டான்.[/size]

[size=4]இல்லை, நான் வேலையை விட்டுட்டன், என்று மனுசி சொல்ல, ஏன், உமக்கு விசர் கிசர் பிடிச்சிட்டுதோ, எனக் கேட்டான்.[/size]

[size=4]அதற்கு, அம்மம்மா தான், பதில் சொன்னா!.[/size]

[size=4]வேலையில கன நேரம், நிக்கிறது, பிள்ளைக்குக் காலுக்க நோகுதாம், அதோட இப்ப, அகதிக் காசும் தாறாங்கள் தானே! நான் தான் நிப்பாட்டிப் போட்டன்.[/size]

[size=4]சந்திரனுக்கு, நின்ற இடத்தில், இருந்த நிலம் சுழல்வது போல இருந்தது.[/size]

[size=4]அவனைப் பற்றிப் பொருட்படுத்தாமல், அம்மம்மாவும் மனுசியும் , 'கோலங்கள்' பார்ப்பதில், கவனமாக இருந்தது, அவனுக்கு, இன்னும் கோபத்தை அதிகரித்தது.[/size]

(இன்னும் கொஞ்சம் வரும்)

  • கருத்துக்கள உறவுகள்

காலங்கார்த்தாலையே பிரசர் ஏறுதே.. :lol:

கதைக்கு நன்றிகள் புங்கை.. :D

  • கருத்துக்கள உறவுகள்

கதையின் ஆரம்பமே நன்றாக உள்ளது. மாமிமாருடன் மாப்பிள்ளைகளுக்கு ஒத்துவராதது எல்லா இனத்தினருக்கும் பொதுவானது. என்றாலும் மாப்பிள்ளை வீட்டில் வந்து மாமி அதிகாரம் காட்டுவது கொஞ்சம் யோசிக்கவைக்கின்றது.

  • கருத்துக்கள உறவுகள்

சீதனம் வாங்கினால் இப்படித்தான் ஆகும்.. :D

  • கருத்துக்கள உறவுகள்

சீதனம் வாங்கினால் இப்படித்தான் ஆகும்.. :D

சீதனம் வாங்கிக் கட்டினால் இப்படியும் ஆகும் :icon_mrgreen:

எதையும் விட்டு பிடிப்பம் என்று இருக்க கூடாது லான்ட் பண்ணும் போதே தாக்குதலை தொடுக்கவேண்டும் .

நன்றாக இருக்கு தொடருங்கள் .

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

[size=4]நன்றாக இருக்கு தொடருங்கள்[/size]

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி கதைக்கு புங்கை

தொடருங்கோ

எதையும் விட்டு பிடிப்பம் என்று இருக்க கூடாது லான்ட் பண்ணும் போதே தாக்குதலை தொடுக்கவேண்டும் .

நன்றாக இருக்கு தொடருங்கள் .

:lol::D :D

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல கதை ரோமியோ தொடருங்கள் வாசிக்க ஆவலாக உள்ளோம்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

காலங்கார்த்தாலையே பிரசர் ஏறுதே.. :lol:

கதைக்கு நன்றிகள் புங்கை.. :D

மிச்சத்தையும். வாசித்து முடியப் 'பிரசர்' தானாக இறங்கும்! :icon_idea:

நன்றிகள், இசை!

கதையின் ஆரம்பமே நன்றாக உள்ளது. மாமிமாருடன் மாப்பிள்ளைகளுக்கு ஒத்துவராதது எல்லா இனத்தினருக்கும் பொதுவானது. என்றாலும் மாப்பிள்ளை வீட்டில் வந்து மாமி அதிகாரம் காட்டுவது கொஞ்சம் யோசிக்கவைக்கின்றது.

மாமிக்குப் பின்னால். ஒரு பெரிய,'ஆலோசகர் படையே' இருக்கின்றது!

பின்பு சொல்கிறேன்!

கருத்துக்கு நன்றிகள், கிருபன்!

ஒரு இரண்டு மாதங்கள் போகவும், அம்மம்மாவுக்கு, வெளிநாட்டு வாழ்க்கை கொஞ்சம் பிடி படத் துவங்கியது. அடிக்கடி, தனது குடும்பத்தைப் பற்றிச் சொல்லிக் கொள்வதில், அம்மம்மாவுக்கு, மிகவும் பெருமையாக இருக்கும். கனடாவில், இருக்கும் மகனைப் பற்றி,எல்லோருடனும் பேசிக் கொண்டேயிருப்பா. எவ்வளவு செல்லமாக, அவவின், மகள் ஊரில இருந்தவ என்பதைப் பற்றியும், இங்கு வந்து வேலை செய்ய வேண்டியிருக்கிறதே, என்று தனது ஆதங்கத்தையும், அடிக்கடி சொல்லிக் கொள்ளுவா. தனது மகளைக் கட்டின படியால் தான், சந்திரனுக்கு, இவ்வளவு, ஒரு நல்ல வாழ்க்கை அமைந்திருக்கிறது என்றும் அவனது காது படவே அம்மம்மா கூறுவதைக் கேட்க, அவனுக்கு ஒரு மாதிரியாக இருந்தாலும் அவன் அதை வித்தியாசமாக எடுத்துக் கொள்வதில்லை.

வேலையில கன நேரம், நிக்கிறது, பிள்ளைக்குக் காலுக்க நோகுதாம், அதோட இப்ப, அகதிக் காசும் தாறாங்கள் தானே! நான் தான் நிப்பாட்டிப் போட்டன்.

சந்திரனுக்கு, நின்ற இடத்தில், இருந்த நிலம் சுழல்வது போல இருந்தது.

இதைத்தான் சொல்லுறது " வேலீலபோற ஓணானைத் தூக்கி சேர்ட்டுக் கொலருக்குள்ளை விடிகிறது எண்டு :lol::D:icon_idea:" . அற்பவிடையங்களுக்காக ஒரு குடும்பத்தின் அன்னியோன்யமும் நின்மதியும் கெடுவதை தொட்டுச் சென்ற உங்கள் கதைக்கு மிக்க நன்றிகள் புங்கை :) .

  • கருத்துக்கள உறவுகள்

கேட்கிறேன் என குறை நினைக்காதீங்கோ புங்கை இது உங்கட கதையே :unsure:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கேட்கிறேன் என குறை நினைக்காதீங்கோ புங்கை இது உங்கட கதையே :unsure:

எதைக் கேட்கிறீங்கள், ரதி?

ஓம், இது நான் எழுதுகிற கதை தான்! :D

ஏன், யாவும் கற்பனை, என்று போட வேணுமோ, ரதி? :o

  • கருத்துக்கள உறவுகள்

கேட்கிறேன் என குறை நினைக்காதீங்கோ புங்கை இது உங்கட கதையே :unsure:

வெந்த புண்ணில் வேலை பாச்சலாமா?

நல்லா இருக்கு தொடருங்கள்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தொடருங்கள் ஆவலாக உள்ளோம்

சீதனம் முறையாக மாறுவது என்பது அரிதாகத்தான் நடக்கிறது என்றாலும்...சில நேரங்களில் சரியாவும் நடப்பதுண்டு :)

  • கருத்துக்கள உறவுகள்

புங்கை கலக்கிட்டியள் ....சீதனம் வாங்கி போட்டு சண்டித்தனத்துடன் குடும்பம் நடத்தவேண்டும்.. .. :D :D தொடருங்கோ...

  • கருத்துக்கள உறவுகள்

சந்திரன் ஏற்கெனவே... மனிசிக்கு, பயந்தவர் போலை கிடக்குது....

அதுக்குள்ளை, அம்மம்மாவும்... வந்து இறங்கியது, சந்திரனுக்கு.... சனி ஆரம்பிஞ்சுட்டுது என்று நினைக்கவேண்டி உள்ளது.

நல்லதொரு குடும்பக் கதை, தொடருங்கோ... புங்கையூரான். :)

புங்கையூரன் நல்ல கதை, சிட்னியில் இப்படி பல கதைகள் நடக்குதோ.

நானும் இப்பதான் மனிசன அரிக்க தொடங்கியுள்ளேன். ஸ்பொன்சர் பண்ணேலாது, எதோ 5 வருட விசா கொடுக்கப்போறார்களாம் அதில கூப்பிடுவமோ என்று. இந்தக்கதையை வாசித்தால் மனிசன் ஒரு முறைக்கு பல முறை யோசிக்கப்போகுது.

  • கருத்துக்கள உறவுகள்

சந்திரனுக்கு இனி எல்லாத்துக்கும் இடைஞ்சலாய்தான் இருக்க போகுது. :lol: :lol:

  • கருத்துக்கள உறவுகள்

கதையில் சந்திரனின் மென்மையான போக்கையும், களத்தில் புங்கையின் மென்மையான எழுத்துக்களையும் ஒப்புநோக்கும்போது, இருவரும் ஒருவரே என்கிற முடிவுக்கு வரவேண்டியுள்ளது..! :D

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எப்படியெல்லாம் யோசிக்கிறாங்கப்பா.. :(

  • கருத்துக்கள உறவுகள்

கிளையில் குருவிச்சை படரத் தொடங்கீட்டுது போல ! :unsure:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.