Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இயேசு அழைக்கிறாரும்,நானும்

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உண்மையைச் சொன்னாலும் சிக்கலாக இருக்கே.. இந்த வருடக் கலண்டரும் இருக்கு (சீருடையில்லாமல்).

வெளுத்ததெல்லாம் பால் என்று நம்பிய மானிடத்தில் நானுமிருந்து விட்டேன்....அதன் தாக்கம் தான் இதுவும் :( .உண்மையாக இருந்தால் மன்னிக்கவும். :)

  • Replies 67
  • Views 11k
  • Created
  • Last Reply

மற்றவர்களை மதிக்காத தீவீர மதவாதிகளுடன் தொடர்பு வைப்பதில்லை.

பொதுவாக மதங்கள் நல்லவற்ரைத்தான் சொல்ல வருகின்றன. இடையில் இருப்பவர்கள் விளையாடி விடுகிறார்கள். இப்படியானவர்களை நிறையச் சந்தித்திருக்கிறேன். கடவுளில் நம்பிக்கையுண்டு. நல்ல மதக் கோட்பாடுகளை கைப்பிடிக்க கூடிய குணநலம் இல்லையென்பதால் ஒதுங்கி இருக்கிறேன். இருந்து போட்டு மெதடிஸ்த சேர்ச்சுக்குப் போவேன். அங்கு சொல்லும் உபதேசங்கள் மனத்தைக் குத்துவதால், அங்கு செல்வதைத் தவிர்த்து வருகிறேன். நானும் கிறிஸ்தவன் எண்டு போட்டு இந்தத் திரிக்கு பதில் சொல்ல முடியாது.

பொதுவில், பகிரங்கமாக இயங்கும் எந்த அமைப்பின் தவறுகளும் பகிரங்கமாக விமர்சிக்கப்பட வேண்டும். தொடருங்கள்.

எனக்கும் உறவினர்கள் நண்பர்கள் என சிலர் வேதத்தில் குதித்துவிட்டார்கள் .எனது மதிப்பிற்குரிய யாழ் இந்து ஆசிரியர் ஒருவர் உட்பட .இதில் பலர் போவது ஒரே சேர்ச்த்தான்.அந்த சேர்ச் ஆறு மில்லியன் டொலரில் ஒரு தமிழ் பாஸ்டாரால் வாங்கி நிர்வகிக்கபடுகின்றது .அதற்குள் பெரிய மண்டபம் வேறு உண்டு .

ஒரு வேதக்கார உறவினரின் கல்யாண வீட்டிற்கு அங்கு போனால் அந்த சேர்ச் பாஸ்டர் யாழ் இந்துவில் எனது வகுப்பு படித்தவர் (சாவகச்சேரி) பெயர் எழுதவில்லை .என்னை கண்டுவிட்டு உடனே வந்து கதைத்து எல்லா இடமும் வேறு சுற்றிக்காட்டினார் .நேரமிருந்தால் பிள்ளைகளையும் கூட்டிக்கொண்டு வரச்சொன்னார் . வந்திருந்த உறவினர்களுக்கு அதிர்ச்சி ஏனெனில் பாஸ்டர் அவர்களுக்கு பெரிய ஒரு ஆள் .

இவர்களுடன் ஒரு முறை பீச்சுக்கு போனேன் .அங்கு அவர்கள் உதைபந்து விளையாட நானும் கலந்து கொண்டேன் .ஒருவரின் கையில் பந்து பட கான்ட் போலென்று ஒருவர் சொல்ல மற்றவர் மறுக்க ஒரே வாக்குவாதம் .நான் கேட்டேன் "என்னப்பா வேதத்திற்கு மாறி கடவுள் நம்பிக்கையுடன் பெரிய இலட்சியவாதிகளாக இருப்பீர்கள் என்று பார்த்தல் ஒரு கான்ட் போலுக்கு இந்த சண்டை பிடித்து ஆளை ஆள் பொய்யன் ஆக்குகின்றிர்கள் என்று " எல்லோர் முகமும் மாறிவிட்டது .

எந்த மதமானாலென்ன எல்லாரும் ஆசா பாசம் உள்ள மனிதர்கள் தான் .

திரிக்கு தொடர்பில்லாத ஒரு தகவல். 'டம்பிங் மூர்த்தி' பரங்கிமலையில் உள்ள ஒரு தேவாலயத்தில் பணிபுரிகிறாராம்.

பிரச்சனை இவர்கள் மற்ற மதங்கள் சரியில்லை, எம் மதம் தான் மிகச் சரியானது என்று சொல்லித்தான் மத மாற்றத்துக்கு தூண்டுகின்றவர்கள். இவர்களின் போதனைகளில் முக்கால்வாசி மூளைச் சலவை செய்வது தான். அதுவும் ஒருவர் அல்லது ஒரு குடும்பம் கஷ்டப்பட்டுக் கொண்டு இருக்கும் போது அதை அறிந்து விட்டார்கள் என்றால் அவ்வளவு தான். விட மாட்டார்கள்.

எல்லா மதங்களும் ஒன்றுதான், கடவுள் எல்லாம் ஒன்றுதான், எல்லா நம்பிக்கைகளும் மனிதனை வளப்படுத்துவன தான் என்று இவர்களிடம் சொல்லிப் பாருங்கள்...இல்லை தாங்கள் தான் உண்மையானவர்கள் என்றும் தன் நம்பிக்கை மாத்திரமே மானுட விடுதலையைத் தரும் என்றும் தொடங்கி விவாதிக்க ஆரம்பித்து விடுவார்கள்.

நீங்கள் கூறுவதும் உண்மையே.

  • கருத்துக்கள உறவுகள்

எங்களுக்கில்ல, வீணா அடிபடிறதை, விட்டிப்போட்டு, இந்த ஏசுநாதரும், கிருஷ்ணரும் பிறந்த கதையளை, ஒருக்காத் திருப்பிப் படிச்சுப் பாருங்கோவன்! கன, ஒற்றுமைகள் இருக்கு!

வசுதேவர்- ஜோசெப்

தேவகி- மேரி

கம்சன்- ஏரோது மன்னன்

பிருந்தாவன்- பெத்தலேகம்

நட்சத்திரங்கள் வழி காட்டுதல் - நட்சத்திரங்கள் வழி காட்டுதல்

குழந்தைகளை மறைத்தல் -குழந்தைகளை மறைத்தல்

மூன்று முனிவர்கள்- மூன்று தேவதூதர்கள்

ஆண்குழந்தையால் அரசனுக்கு அழிவு-ஆண்குழந்தையால் அரசனுக்கு அழிவு

ஆண் குழந்தைகளைத் தேடியழித்தல்-ஆண் குழந்தைகளைத் தேடியழித்தல்

அற்புதங்கள் - அற்புதங்கள்

மீண்டும் வருவேன்- மீண்டும் வருவேன்

ஒரே நாடகம் தான்! நடிகர்களும், மேடையும் தான் வித்தியாசம்.

எல்லாமே, ஒரே உண்மையைத்தான் பேசுகின்றன! ஆனால், அதைச் சொல்லும் விதங்கள், மாறுபடுகின்றன!

இந்த உண்மையைப் புரிந்தவனுக்கு, மதம் தேவையில்லை!

  • கருத்துக்கள உறவுகள்

புங்கை.. நீங்கள் ஒரு நடமாடும் அறிவுக் களஞ்சியம்.. :D

  • கருத்துக்கள உறவுகள்

பொறுமைக்கும்... எல்லை உண்டு, புங்கையூரான்.

இங்கு, மதம் மாறியர்கள் பலரும்... சைவ சமய‌த்திலிருந்து வந்தவர்கள்,

அவர், ஒருவரின் கையில்... "ஓம் முருகா" என்று பச்சையும், குத்தி வந்தவர்...

காலப் போக்கில்... அல்லி லூயா, ஜகவோ... போன்ற கோஸ்டிகளில், இணைந்த பின்...

ஊரிலை, கையிலை குத்திய, பச்சையை... எப்படி, அழிப்பீர்கள்...

என்று, கேட்ட போது...

அடுத்த நாள்...

அயன் பொக்சிலை, தன்ரை... கையை எரித்துப் போட்டு....

புண்ணோடும், சீழோடும்.... கையைக் காட்டிய.. பிறப்புகள‌டன் பழகியுள்ளேன்.

இவர்களுடன்... கதைக்க, வெளிக்கிட்டால், விசர் பிடிச்சுப் போகும்.

[size=2]நியானி: மேற்கோள் நீக்கப்பட்டுள்ளது[/size]

Edited by நியானி

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்சிறீ என்ன இப்படியே நின்று புலம்பிக் கொண்டு நின்றால் உங்களை தட்டின கேசு என்று சொல்லப் போகிறார்கள்.

ரதி உங்கள் அனுபவம்போன்று இங்கும் பல அனுபவங்கள் உண்டு.

சரியான கரைச்சல் கொடுத்து தங்கள் மார்க்கத்தைப்பின்பற்றச் சொல்லி அலுப்புக் கொடுப்பார்கள்

ஒரு சமயம் நான் நாட்டுக்குச் சென்று திரும்பியபோது எனக்கு வீட்டில் அதிர்ச்சி காத்திருந்தது. இந்த யேகோவாவைப் பின்பற்றுகிறவர்களாம் என்னுடைய துணைவரை தங்கள் பிரார்த்தனைக்கூட்டங்களுக்கு வாரம் இருமுறை கூட்டம் என்று அழைத்துச் செல்வார்கள் அத்தோடு மட்டுமல்ல என்னிடம் வந்து பேசினார்கள். எனக்கு இந்த மதம் என்று மதம்பிடிக்கும் பழக்கம் கிடையாது. சும்மாவே என்னுடைய உறவுகள் நண்பர்களுக்கு பட்டினத்தார் சொன்னதை மட்டுமே பயன்படுத்துவேன். மனமது லிங்கமாகும் நேசமே நெய்யும் பாலும் ஆகும் என்று என்னுடைய கொள்கையைக்காட்டிலும் கோயில் வழிபாடு என்பன முக்கியம் என்று என்னுடன் வாதாடுபவர்களே கடைசியில் வேண்டாம் ராசாத்தி நீ மட்டுமேன் உங்கள் வீட்டில் இப்படி இருக்கிறாய் என்று கேட்பார்கள். இப்படிப்பட்ட என்னை உங்கள் மதத்தில் கிடைக்காத அனைத்தையும் எங்களோடு இணைந்தால் பெறுவீர்கள் என்று எக்கச்சக்கமாய் வேப்பிலை அடித்தார்கள். தொடர்ந்து 4...5 வாரங்கள் வீட்டிற்கு வந்து என்னோடு பேசினார்கள் தாங்க முடியவில்லை..கடைசியில் களைத்துக் கைவிட்டுவிட்டார்கள்

  • கருத்துக்கள உறவுகள்

[size=4]நான் எல்லோருடனும் உரையாடுவேன்.........[/size][size=1]

[size=4]எனக்கு தேவையான கருத்துக்களை அவர்கள் சொன்னால் அதை கேட்பதில் என்ன தவறு இருக்கிறது?[/size][/size][size=1]

[size=4]நாட்டில் இருந்த நாள் முதலாய் (ஜெகோவாவின்) விழித்தெழு புத்தகம் வாசித்து வருகிறேன்.[/size][/size][size=1]

[size=4]ஒரு ஐரோப்பா நாட்டில் வாழ்ந்த காலத்தில் அதை ஆங்கிலத்திலும் தமிழிலும் பெற முடிந்தது ...[/size][/size][size=1]

[size=4]ஆங்கிலத்தில் இருப்பத்தை அவர்கள் தமிழில் மொழிபெயர்த்திருக்கும் விதம் எனக்கு மிகவும் பிடிக்கும்.[/size][/size][size=1]

[size=4]அப்படி ஒரு மொழிபெயர்ப்பை வேறு எங்கும் பார்க்கவில்லை.... தமிழ்நெட் இணையத்தளம் கிட்டத்தட்ட அப்படி இருந்திருக்கும் என சொல்லலாம்.[/size][/size][size=1]

[size=4]நான் ஆங்கிலம் பயில மிகவும் அது உதவியாக இருந்தது.[/size][/size][size=1]

[size=4]அவர்கள் காவற்கோபுரம் என்றும் ஒரு புத்தகம் தருவார்கள் அது முழுதாய் அவர்களுடைய மதம் பற்றி இருக்கும் அந்தவயதில் எமக்கு எதுவும் விளங்காது. ( கழுத்துக்குள் நோ என்றால் வயிரவருக்கு வடை மாலை இரண்டாம் நாள் எல்லாம் சுகம் அதற்குள் எமது உலகம் இருந்தது) அதனால் அதை அப்போதிருந்தே வாசிப்பதில்லை இப்போதும் அதே தாக்கமோ என்னமோ அதை வாசிப்பதில்லை.[/size][/size]

[size=1]

[size=4]எனக்கு தெரிந்த உறவினர்கள் சிலரும் மேலே இருக்கும் சில கருத்துக்களைபோல்தான் அவர்களை திட்டுவார்கள். உங்களுடைய மதத்தில் உங்களுக்கு முழு நம்பிக்கை இருந்தால்? [/size][/size][size=1]

[size=4]எப்படி அவர்களால் உங்களை மதம் மாற்ற முடியும்?[/size][/size][size=1]

[size=4]ஏன் அவர்களுடைய மதம் என்ன சொல்கிறது என்பதை கேட்க அஞ்சுகிறீர்கள்?[/size][/size][size=1]

[size=4]உங்களுக்கும் அவர்களுக்கும் உள்ள அடிப்படை வித்தியாசம் என்ன? என்று அவர்களை பார்த்து கேட்க தோன்றும் உறவினர்களை காண்பதே அரிது அதற்குள் ஏன் முன்றாம் தர பிரச்சனை என்று விட்டு எதுவும் பேசுவதில்லை.[/size][/size]

நீங்கள் வாசித்த அதே நூல்களை நானும் இங்கு கனடாவுக்கு வந்தபின்னர் வாசித்துள்ளேன். 'உங்களுக்கு உங்கள் மதத்தில் முழு நம்பிக்கை காணப்பட்டால் மற்றவர்களுடைய மதம் என்ன சொல்கின்றது என்று கேட்க ஏன் அஞ்சுகின்றீர்கள்?' என்பது யதார்த்தமான ஒரு கேள்வியே.

நீங்கள் வாசித்த அதே நூல்களை நானும் இங்கு கனடாவுக்கு வந்தபின்னர் வாசித்துள்ளேன். 'உங்களுக்கு உங்கள் மதத்தில் முழு நம்பிக்கை காணப்பட்டால் மற்றவர்களுடைய மதம் என்ன சொல்கின்றது என்று கேட்க ஏன் அஞ்சுகின்றீர்கள்?' என்பது யதார்த்தமான ஒரு கேள்வியே.

அச்சமில்லை ..தேவையில்லாத டைம் வேஸ்ட்

என் வீட்டிலேயே பிரமாத விருந்திருக்கும்போது பக்கத்து வீட்டில் எட்டிப்பார்த்து ... என்ன சுகம்...

மற்றது இந்த "பேயோட்டு"வது போல இவை "அல்லேலூயா" என்று அலறும் போது வயிறு பகீர் என்கின்றது...

மற்றது , மருதங்கேணி உங்கள் வயிரவருடன் ஒரு அனுமன் கோவிலும் இருந்ததாக ஞாபகம் .இப்போதும் இருக்கின்றதா? சுனாமி அள்ளிச் செல்லவில்லையா?

Edited by எல்லாள மகாராஜா

  • கருத்துக்கள உறவுகள்

அச்சமில்லை ..தேவையில்லாத டைம் வேஸ்ட்

என் வீட்டிலேயே பிரமாத விருந்திருக்கும்போது பக்கத்து வீட்டில் எட்டிப்பார்த்து ... என்ன சுகம்...

மற்றது இந்த "பேயோட்டு"வது போல இவை "அல்லேலூயா" என்று அலறும் போது வயிறு பகீர் என்கின்றது...

மற்றது , மருதங்கேணி உங்கள் வயிரவருடன் ஒரு அனுமன் கோவிலும் இருந்ததாக ஞாபகம் .இப்போதும் இருக்கின்றதா? சுனாமி அள்ளிச் செல்லவில்லையா?

[size=4]நல்லவர்க்கு சோதனைதான் வாழ்வின் பாடம்![/size]

[size=4]போர் விட்டு வைத்த மிச்சத்தை சுனாமி வந்து அள்ளிக்கொண்டு போய்விட்டது![/size]

.

என் பிள்ளை போகும் பாடசாலையின் சப்ளின் - [size=4]chaplain -[/size] ஒரு நாள், தன் கணவர் என்னிடம் சில தொழில் சம்பந்தமான விசயங்களைப் பற்றிப் பேச வேண்டும் என் மோபைல் நம்பரைத் தரமுடியுமா என்றார். நானும் குடுத்தேன்.

அவரும் ஃபோன் பண்ணி சந்திப்பதற்கு நாள் நேரம் குறித்துக்கொண்டு அதன்படி வீட்டுக்கு வந்தார். அவர் ஓர் அமெரிக்கர்.

கொஞ்ச நேரம் தொழில் சம்பந்தமாக கதைத்து விட்டு..பைபிளைப் பற்றி கதைக்கத்தொடங்கினார்.

பைபிள் கதைகள், சம்பவங்கள் பற்றி ஏற்கனவே அறிந்திருந்தாலும், காட்டிக் கொள்ளாமல் புதிதாகக் கேட்பது போல் கேட்டுக் கொண்டிருந்தேன்.

பைபிளை நிராகரிப்பதற்குப் போதுமான தரவுகள் என்னிடம் இருந்தன. ஆனால் நான் எதனையும் எடுத்து விடவில்லை. காரணம் அவரை நான் புண்படுத்த விரும்பவில்லை.

முக்கால் மணித்தியாளம் அறுத்த பின் மீண்டும் எப்போது சந்திக்கலாம் என்றார். அடுத்த ஞாயிறு என்றேன்.

வந்தார். அதே பல்லவி. முக்கால் மணித்தியாளத்தின் பின், பைபிள் சொல்லும் விசயம் உனக்குப் பிடித்திருக்கிறதா ? என்றார்.

ம்ம்ம்... பிடித்திருக்கிறது. ஆனால் சில டவுட்டுகள் இருக்கின்றன என்றேன்.

இப்படிச் சொன்னதன் காரணம் சிங்கன் இன்னும் பல விசிட் அடிக்கிற நோக்கம் இருப்பதாகத் தெரிந்தது. இதற்கு மேல் தாங்க முடியாது. புண் படுத்தாமல் ஆளை நிப்பாட்ட வேண்டும்.

ஆகவே.. கேள்விகளைக் கேட்போம். ஆளைப் பலவீனப் படுத்துவோம்.

மென்மையான கேள்விகளில் ஆரம்பித்து பாரதூரமான கேள்விகள் கடைசியில்..

"நீங்க.. ஆபிரிக்கா போறீங்க.. அங்க... "ஜிங்பா" அப்பிடீன்னு ஒரு கடவுளை அவங்க கும்பிடுரானுங்க... ஓ.கே.."

" ஜிங்பாவ கும்பிடாதவங்க நரகத்துக்கு போவாங்கலாம்.. "

" ஜிங்பா தான் ரட்சகராம் "

" ஜிங்பா பத்தின ஃபுல் டீடெயில்ஸ்ஸும் ஒரு புக்ல் இருக்காம் "

" அந்த புக் றொம்ப பழமையானதாம் "

" அந்த புக்ல உலகம் அழியிறத பத்தியெல்லாம் இருக்காம் "

" சரி... நீங்க ஜிங்பாவ உங்க கடவுளா ஏத்துக்குவீங்களா ?? "

" ஏத்துக்காவிட்டா நீங்க சாத்தானின் பார்ட்டி ஆய்டுவீங்களே !!"

அவர் முகம் மாறியது. அடுத்த முறை வரும் போது இந்தக் கேள்விகளுக்கு பதில் சொல்கிறேன் என்றார். மறுபடியும் எப்ப சந்திக்கலாம் என்றார். ஞாயிறு.

வந்தார். கேள்விகளைப் பற்றி மூச்சுப் பேச்சு இல்லாமல் பைபிள் வண்டிய விடத்தொடங்கினார். கொஞ்ச நேரம் போக கேள்விகள் என்று அருட்டினேன். அந்தக் கேள்விகளுக்கு என்னிடம் விடை இல்லை என்றார். கொஞ்சம் பொறுமை இழந்த மாதிரி இருந்தார். என்னை [size=4]Override [/size]பண்னுகிற மாதிரியும் இருந்தது.

மெல்லமாகத் தொடங்கினேன்.

" என்ன பிரச்சனை என்றால்...எனக்கு கடவுள் நம்பிக்கை மிகவும் குறைவு. என்னுடைய இந்த அடிப்படை டவுட்டுகளை நீங்கள் தீர்த்து வைக்காமல் எனக்கு கடவுள் நம்பிக்கை ஏற்படுவது நேரத்தை வீணாக்கும் செயல் "

என்றேன்.

கொஞ்ச நேரம் யோசித்தார். இந்த இக்கட்டான சூழ்நிலையில் இருந்து ஆளை வெளியே எடுக்க வேண்டும் என்று யோசித்தேன்.

"பிள்ளைகள் அமெரிக்காவில் யூனி முடித்து விட்டார்கள் ? "

" ஓம். விடுமுறைக்கு வாரார்கள். "

கொஞ்ச நேரத்தில் தனக்கு இன்னுமொரு இடத்திற்கு போவேண்டும். மறந்தே போய்விட்டேன் என்று சொல்லிக் கொண்டு ஆள் எஸ்கேப்.

ரோட்டில் எப்பவாவது கண்டால் " ஹலோ".

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு நாள் வீட்டுக்கு பக்கத்தில் கண்டு கதைத்தபோது இதில் எனக்கு நாட்டமில்லை என வெறுப்புடன் சொல்லி அனுப்பிவைத்தேன்.

நான் இருந்தது முதலாம் மாடியில்.

அதன் பின் ஒவ்வொரு சனிக்கிழமை 3 மணியானால் ஒரு தமிழ்க்குடும்பம்??? வந்து கீழே நிற்பார்கள்.

நாம் கீழ் கதவைத்திறந்தால் தான் உள்ளே வரமுடியும். பல மாதங்களாக வருடமாக என்று கூட சொல்லலாம்.

நான் இரண்டு நேர வேலை செய்தபடியால் பின்னேரம் சிறிது தூக்கம் போடுவேன்.

ஒரு நாள் எனது மக்கள் ஐன்னலால் எட்டிப்பார்த்து விட்டார்கள்.

அப்பா இருக்கிறாரா?

ஆம் ஆனால் அவர் நித்திரையில் உள்ளார்.

எழுப்ப முடியுமா?

இல்லை அவர்பேசுவார்

அப்பா கோபக்காறனா?

ஆம்

அவரிடம் தான் நல்ல குணமிருக்கும் எழுப்புங்கள்.

சரி என்னிடம் சொன்னார்கள்.

அவர்கள் வந்து தொடர்ந்து நிற்பது எனக்குள்ளும் ஒரு குற்ற உணர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது

சரி வரச்சொல்லுங்கள்.

வந்தார்கள்.

ஆரம்பிக்க முன்

என்ன குடிக்கின்றீர்கள். சாப்பிட்டீர்களா?

இல்லை சாப்பிட்டுவிட்டோம்

தேனனீர் வேண்டாம்

சரி

தமிழர்களிடம் ஒரு பழக்கமுண்டு.

வீட்டுக்கு யாரும் வந்தால் அவர்களை நன்றாக மனம் கோணாமல் உபசரிப்பது.

அதை நீங்கள் தவறாக பயன்படுத்தக்கூடாது.

எனது தாய் தகப்பன் ஊடாக வந்த மதத்தை மாற்ற வேண்டிய எந்த அவசியமும் எனக்கு கிடையாது. மாற்றவும் மாட்டேன்.

இனி நீங்கள் இங்கு வரவேண்டாம். நன்றி வணக்கம் என்றேன். இந்த புத்தகத்தை படியுங்கள் என்று தந்தார்கள். வாங்கிக்கொண்டு கதவைச்சாத்திக்கொண்டேன். அதன் பின்னர் வருவதில்லை. வழியில் கண்டால் ஒரு ஹலோவுடன் சரி.

(புலிகளுக்காக வேலை செய்த காலத்தில் நாங்கள் கண்டால் தவிர்த்த ஒரே ஆட்கள் இவர்கள் தான். நேரம் போகுமே தவிர எத்தனை மணி நேரமாக இருந்தாலும் மீண்டும் திரும்ப திரும்ப அந்த இடத்திலேயே வந்து நிற்கும்)

Edited by விசுகு

  • கருத்துக்கள உறவுகள்

.நானும் பார்த்தேன் அண்மையில் எனக்கு ஏற்பட்ட மன அழுத்தம் கார‌ணமாக ஒரு சேன்ஞ் தேவைப்பட்டுது போய்ப் பார்ப்போம் அப்படி என்ன தான் செய்கிறார்கள் என்று பார்க்கப் போனேன்.

[size=5]கடவுளை தேடி செல்லவேண்டிய அளவிற்கு மனவருத்தம் இருந்தும்.....[/size]

[size=5]உரிய நேரத்தில் ஒரு ஆறுதல் வார்த்தையை கூட கூறாமல் விட்டு விட்டோமே [/size]

[size=5]என்ற குற்ற உணர்வுடன்......[/size]

[size=5] [/size]

[size=5]............................................................... மருதங்கேணி [/size]

  • கருத்துக்கள உறவுகள்

[size=4]சமயங்களில் நான் கண்ட சில ஒற்றுமைகளால் எனக்கு நானே சமயங்கள், சமய நம்பிக்கைகள் மேல் ஒரு முடிவுக்கு வரமுடிந்தது. முடிவு என்ன என்பதை பிறகு கடைசியில் காண்போம்; இப்போதைக்கு நான் கண்ட ஒற்றுமைகளைப் பார்க்கலாம்.[/size]

[size=4]1.) carrot & donkey, carrot & stick principles பற்றிக் கேள்விப்பட்டிருப்பீர்கள் ; முதலாவதற்கு ஒரு கதை சொல்வதுண்டு. கழுதை மேல் ஏறி உட்கார்ந்தவன் கழுதை அவனைத் தூக்கிச் செல்ல தயங்கியதும், ஒரு குச்சியின் முனையில் ஒரு காரட்டைக் கட்டி, அந்தக் குச்சியைக் கழுதைக்கு முன்பாகப் பிடித்துக் கொண்டானாம். முட்டாள் கழுதை இன்னும் ஓரடி நடந்தால் காரட் கிடைக்கும் என்று எண்ணி ஒவ்வொரு அடியாக நடந்து போய்க்கிட்டே இருந்ததாம்! இரண்டாவது, நல்லது செய்தால் காரட், தவறு செய்தால் குச்சி என்ற தத்துவம்.[/size]

[size=4]எல்லா மதங்களுமே தீவினை செய்தால் கடவுளால் தண்டிக்கப்படுவாய்; நல்லவனாக இருந்தால் கடவுள் உனக்கு வெகுமதி தருவார் என்ற கோட்பாட்டை கொண்டிருக்கின்றன. இந்து மதம் கர்மவினைக்கேற்ப பிறவி பல எடுத்து, இறுதியில் ஸ்வர்க்கம் / முக்தி பெறவேண்டுமெனக் கூறுகிறது. கிறித்துவம் - பாவம், மோட்சம், நரகம் எனவும், இஸ்லாம் இஸ்முர், அல்-ஜன்னத், ஜன்னத் என்று முற்கூறிய அதே கோட்பாடுகளைக் கொண்டுள்ளன. ஜைனம், புத்தம், தாவோயிஸம் என்ற சமயங்கள் இறுதி நிலையை 'நிர்வாண நிலை' என்றழைக்கின்றன. அதுவும் இந்நிலை உயிருள்ளபோதே எய்யும் நிலையாம்.[/size]

[size=4]2.)"இரண்டாம் வருகை", "அந்தி நாள்", "தீர்ப்பின் நாள்" - போன்ற பல பெயர்களில் உள்ள கோட்பாடுகளும் பல சமயங்களில் காணப்படுகின்றன. தீர்ப்பின் நாள் - judgment day - கிறித்துவத்திற்கும், இஸ்லாத்திற்கும் ஒன்றே. இந்து சமயத்தில் கடவுளின் பத்தாவது அவதாரமாக எதிர் பார்க்கப்படுவதும், இறுதிக் காலமான கலியுகத்தில் அழிக்கும் 'கல்கி' அவதாரமாக கடவுள் வருவாரென்பதும் உள்ளது. 'இறுதி எச்சரிக்கை' என்று ஏன் ஒன்று - கல்விச்சாலைகளில் நம்மைக் கலங்க வைக்கும் final exam மாதிரி - இருக்கவேண்டும்? யோசிப்போம்.[/size]

[size=4]3.) "திரித்துவம்" - கடவுளின் மூன்று நிலைகள், அல்லது கடவுளர்களே மூன்றாக இருப்பது என்பதும் பல சமயங்களில் பரவிக்கிடக்கும் ஒரு கோட்பாடு. கிறித்துவத்தில் - பிதா, மகன், ஆவி என மூவர்; ஆனாலும் ஒரே கடவுள். இந்து சமயத்தில் - பிரம்மா (ஆக்கல்), விஷ்ணு (காத்தல்), சிவன் (அழித்தல்) என முக்கடவுள்கள். தாவோயிஸத்தில் 'the three pure ones'.[/size]

[size=4]4.) ஆத்மா, ஆன்மா என ஏறத்தாழ எல்லா மதங்களுமே ஒரே மாதிரியாகவே பேசுகின்றன. இந்த ஆத்மா /ஆன்மா அழியாத ஒன்று என்ற நிலைப்பாடும் எல்லாரிடமும் உண்டு. ஆனால், ஆபிரஹாமிய மதங்கள், கடவுள் மனிதனைத் தன் சாயலாகப் படைத்தார் என்ற நம்பிக்கையால், மனிதனுக்கு மட்டுமே ஆன்மா உண்டென்கிறார்கள். இந்து சமயமோ எல்லா உயிர்க்கும் ஆன்மா உண்டென்கிறது. மனிதன் இறந்த பிறகு அவனுக்குக் கிடைக்கும் (காரட்டோ, குச்சியோ) வெகுமதியோ, தண்டனையோ அந்த ஆத்மாவினால், ('நித்தியத்திற்கும்') அழிவின்றி காலா காலத்துக்கும் அனுபவிக்கப்பட வேண்டுமென கூறப்படுகிறது.[/size]

[size=4]5.) ஓஷோ சொகிறார்: "All religions are very oppressive." உண்மைதானே. கடவுள் பெயரால் மக்கள்தான் எப்படியெல்லாம் தங்கள் உடலை வருத்திக் கொள்கிறார்கள். பாத யாத்திரை, விரதம், உருளல், பிறழல், உடம்பெல்லாம் அலகு - இப்படி ஒரு பக்கம். தங்கள் கைகளில் ஆணிகளை அடித்துக் கொள்ளும் கூட்டம் இன்னொரு புறம். தங்களைத் தாங்களே அடித்துக் கொண்டு உடம்பெல்லாம் ரத்த விளாராக ஆக்கிக்கொள்ளும் மதத்தினர் இன்னொரு புறம். எந்தக் கடவுளும் இப்படியெல்லாம் பண்ணிக்கொள் என்று கூறியதாகத் தெரியவில்லை.[/size]

[size=4]அதேபோல, எல்லா மதங்களுமே ஏழ்மையை பெருமைக்குரிய விதயமாகவே பார்க்கின்றன. எதற்காக ஏழ்மை உயர்த்தப் படவேண்டும்? மக்களில் பலரும் ஏழைகளாக இருப்பதால் அவர்களைக் 'குழுமை'ப் படுத்தவா?[/size]

[size=4]செக்ஸ் ஒரு தகாத விதயமாக, மறைக்கப் படவேண்டிய ஒரு விதயமாக, ஒடுக்கப்படவேண்டிய காரியமாக ஏன் கருதப்பட வேண்டும். பசி போல அதுவும் ஒரு அடிப்படை உணர்வு. பசி என்பதால் எதை வேண்டுமானாலும், எப்போது வேண்டுமானாலும், எங்கே வேண்டுமானாலும் சாப்பிட்டு விடுகிறோமா? அதே போல் செக்ஸ் சிந்தனைகளும் இருந்தால் போதுமே. celibacy ஏன் மதங்களால் தீவிரத் தன்மையோடு உயர்த்தப் படுகின்றன?[/size]

[size=4]6.) நம்பிக்கையாளர்களிடம் அதிகமாகக் காணக் கிடைக்கும் இன்னொன்று - கடவுளர்கள் நடத்தும் அதிசயங்கள் மேலுள்ள நம்பிக்கைகள். எண்ணெயும், தண்ணீரும், தீச்சட்டிகளும், தாயத்தும்,விபூதியும், மந்திரித்தலும் - எல்லாம் எவ்வளவு நம்பிக்கைகளைத்தான் வளர்க்கின்றன! Miracles எனப்படும் சமய அதிசயங்கள் எந்த மதத்தில்தான் இல்லை. ஆனால், அதில் ஒரு வேடிக்கை: ஒரு மதத்தினரின் அதிசயம் மாற்று மதத்தினருக்கு வேடிக்கையாக இருப்பதுதான். நானே இதைச் சோதித்திருக்கிறேன். கிறித்தவர்களிடம் கர்ணன் குந்தவிக்கு சூரிய பகவானால் பிறந்த முறையைச் சொன்னால் 'ஐயோ, என்ன இவ்வளவு அசிங்கமாக இருக்கிறது' என்று சொல்வது வழக்கம். அவர்கள் மறந்து போகும் விதயம், ஏசு மரியாளுக்குப் பிறந்ததற்கும், அந்த இந்துக் கதைக்கும் என்ன பெரிய வித்தியாசம்? எல்லாமே நம்பிக்கையைப் பொருத்த விதயங்களே.ஏசு பலரைக் குணமாக்கினாரென்றால், பாண்டிய மன்னனுக்கு சிவனடியார் விபூதி கொடுத்து குணமாக்கினார்; கண்ணில் மண்ணை வைத்து குருடனுக்குக் கண் கொடுத்தாரென்றால், திருநாவுக்கரசருக்கு பேச்சு வந்தகதை நினைவுக்கு வருகிறதே. ஏசு துர்ஆவிகளை பன்றிக்குள் செலுத்தி கடலுக்குள் விரட்டினாரென்றால், இங்கே இந்து சமயத்தில், மதுரையில் நரிகள் பரிகளாயினவே. போதும்; சொல்லிக்கொண்டே போகலாம்.[/size]

[size=4]அடுத்து,பக்தர்களுக்கு கடவுளர்கள் 'காட்சி'தருவது (apparitions). “ Many mystics have visions, and the envisioned objects almost inevitably reflect the cultural background of the mystic. Protestants never envision the Virgin Mary, but Catholics do; Jews never envision the resurrected Jesus, but Christians do; Buddhists and Hindus envision divine messengers quite different from those encountered by Western mystics'(Reason and religion” An introduction to the Philosophy of Religion by Rem B. Edwards pp306 ). இவர் சொல்வது போல, அந்தந்த சமயத்தினருக்கு மட்டும் அந்தந்தக் கடவுள்கள் காட்சி [/size]

[size=4]மேலும் வாசிக்க....[/size]

[size=4]http://newindian.activeboard.com/forum.spark?aBID=134804&p=3&topicID=48934159[/size]

உங்கள் பகிர்விற்கு நன்றி ரதி!

மற்றைய மதங்களைப் பற்றி அறிந்து கொள்வதில் எந்த ஒரு கெடுதலும் இல்லை, ஆனால் தனது மதத்தில் நம்பிக்கை இல்லாமல் மற்றைய மதத்தில் மாறுவது பிழை! (இது எனது தனிப்பட்ட கருத்து) ஒவ்வொரு மத்தத்திலும் நன்மை தீமை என்று உள்ளது, அதனை ஆழமாக அறியாமல் இக்கரைக்கு அக்கரைப் பச்சை என்று நினைத்துப் போறது புத்திசாலித்தனம் இல்லை.. இருப்பினும், எந்த மதத்தில் இருக்க வேணும் என்று முடிவெடுப்பது முற்றிலும் தனிநபர் சார்ந்த முடிவு என்றே நினைக்கிறேன்.. (எனக்குத் தெரிந்த கோஷ்டி உதுக்குள்ள இருக்குதுகள்...) மூளைச்சலவை செய்வதற்கு உவர்களைக் கேட்டுத்தான்...

அந்தக் கோஷ்டி, எனது கைத்தொலைபேசி இலக்கத்தைத் தங்கட இந்தியன் பாஸ்டரிடம் கொடுத்து என்னையும் தங்கள் சபையில் சேரும் படி கேட்டதால், வேறு வழியில்லாமல், அந்தப் பாஸ்டரின் தொலைபேசி இலக்கமும் தடை செய்யவேண்டியதாயிற்று..

6 மாதங்களுக்கு முன்பு என்று நினைக்கிறேன், வேலை முடிந்து பஸ்சிற்கு காத்திருக்கும் போது 4 பேர் ரவுண்டப் பண்ணி துண்டுப் பிரசுரம் போல் ஆளுக்கொண்டு கையில் திணித்தார்கள்.. தமிழில், ஆங்கிலத்தில் அச்சிடப்பட்டிருந்தது.. வேறு கதை இல்லாமல் வாங்கி பஸ்ஸிற்குள் வாசித்துவிட்டு அங்கேயே வைத்துவிட்டு இறங்கிவிட்டேன்..

  • கருத்துக்கள உறவுகள்

நாம் எதற்காகப் பயப்பட வேண்டும் குட்டி .இவர்களுக்கு முகத்தில் அடிப்பதுபோல் வேண்டாம் என்றால் மற்றவரிடமும் கொடுக்க யோசிப்பர்.

  • கருத்துக்கள உறவுகள்

லண்டனில் முக்கிமாக தமிழர்கள் கூடுதலாக இருக்கும் இடங்களில் வணக்கம் நீங்க தமிழோ எண்டு கேட்டு யாராவது வந்தால் ,இவர்கள் அவர்களே :(

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மதம் மாறுவது அவரவர் தனிப்பட்ட விடயம்...எங்கே மன அமைதி வருகின்றதோ அங்கே சென்று சாந்தியடைவது அவரவர் நலன்கள் சம்பத்தப்பட்டது.....ஆனால் இவர்கள் மதம் மாறிய பின் தாங்கள்பிறந்து வளர்ந்த மதத்தை தூற்றுவதுதான் வேதனைக்குரிய விடயம்.

இப்போதும் நான் சிலவேளைகளில் இவர்களை சந்திப்பேன்

இப்படி எத்தனை பேரை சந்தித்து விட்டோம் .இவர்கள் எம்மாத்திரம் .

  • கருத்துக்கள உறவுகள்

நோபல் பரிசு பெற்றவர் டெஸ்மண்ட் டுட்டு. இவர் மிகச் சிறந்த நகைச் சுவை, உணர்வுள்ளவர்!

இவர் ஒரு முறை கூறியது!

நீங்கள் வரும்போது எங்கள் கையில் நாடு இருந்தது. உங்கள் கையில் ;பைபிள்' இருந்தது!

கண்களை மூடுங்கள் என்றீர்கள்! மூடினோம்!

நாங்கள் கண்களைத் திறந்த போது,

உங்கள் கையில் நாடு இருந்தது. எங்கள் கையில் 'பைபிள்' இருந்தது! :D

Edited by புங்கையூரன்

நாம் எதற்காகப் பயப்பட வேண்டும் குட்டி .இவர்களுக்கு முகத்தில் அடிப்பதுபோல் வேண்டாம் என்றால் மற்றவரிடமும் கொடுக்க யோசிப்பர்.

போது இடத்தில் ஒரே நாட்டவர்கள் முரண்பட்டால் பார்க்க நன்றாக இருக்காது.. அது இருவருக்கும் மனச் சங்கடமாக அமைந்துவிடும்...

  • கருத்துக்கள உறவுகள்

பணக்கார இயக்கம்.

ஓடு மீன் ஓடி உறு மீன் வரும் வரை வாடி இருக்குமாம் கொக்கு என்பது போல் இருந்து

யார்யாருக்கு எங்கு எங்கு அடித்தால் வலிக்கும் என்பதை துல்லியமாக தெரிந்து அடிப்பார்கள்.

[size=5]மிகவும் ஆழமான பார்வை முக்கியமானதும் கூட...........[/size]

[size=1]

[size=5]இவர்கள் மிகவும் கொளுத்த பண காரர்கள். இவர்களுக்கு இவளவு பணம் எங்கிருந்து வருகிறது என்பதை நீங்கள் தேடி சென்றால். சில நாடுகளின் உளவு நிறுவனங்களின் தலைமையகங்களில் போய் நிற்பீர்கள்.[/size][/size][size=1]

[size=5]பாரிய அளவில் காசை கொட்டி இதை இயக்குகிறார்கள். காரணம் எந்த சந்தேகமும் இன்றி இலகுவாக மற்றைய நாடுகளுக்குள் ஊடுருவ சிறந்த வழி இதை விட வேறொன்றும் இருக்க முடியாது. தொண்டு நிறுவனங்கள் கூட இதற்கு இரண்டாம் நிலைதான்.[/size][/size][size=1]

[size=5]புலிகளை பற்றிய உண்மை நிலவரங்கள் தகவல்கள் தமிழருடைய உண்மை தகமை என்பதையெல்லாம். அமெரிக்க சி ஐ ஏ இந்த வழியாகவே பெற்றிருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. [/size][/size][size=1]

[size=5]இதில் எந்த பொய்யுமுமில்லை காரணம் கதைகளை சொல்லுபவர் ஜேசுவை நாளையோ மறுநாளோ காண ஏங்கி கொண்டிருக்கும் இதயம். கேட்பவர் பாஸ்டர் அவர்மேல் சந்தேகம் கொள்ள எந்த தடயமும் இல்லை. தேவையான தகவலை திரட்டிக்கொண்டு ஆசீர்வாதம் கொடுத்து விட்டு பாஸ்டர் போய்விடுவார். அவளவு பெரிய பாஸ்டரை நேரில் பார்த்த பூரிப்பில் இவர்கள் ஜேசுவுக்கு ஆனந்த பூசை செய்துவிட்டு படுத்திடுவார்கள்.[/size][/size][size=1]

[size=5]ஜேசு தான் வாழவே வழியில்லாமல் காட்டி கொடுப்பில் மாட்டுபட்டு உயிர் துறந்தார். உயிர் துறக்கும் வரை கொண்ட கொள்கையில் சிறிது தளர்ச்சியும் இன்றி நின்றார். சிலுவையை சுமந்து தனது கொள்ளகைக்காகவே உயிர் துறந்தார். அவர் இறுதிவரை அடுத்தவர்களுக்கு சொன்னது அனைவர் இடத்திலும் அன்பாய் இருங்கள் என்பது. நேற்று ஜேசுவையையும் பைபிளையும் கண்டதுகளுக்கு ஜேசு என்ன சொன்னார் என்பது தெரிந்திருக்க வாய்ப்பில்லை. எங்களை சாத்தான் என்கிறார்கள். [/size][/size][size=1]

[size=5]சாத்தானே செய்ய தயங்கும் மக்கள் கொலைகளுக்கு மறைமுகமாக சாத்தானின் பிள்ளைகளாக இருப்பதை இவர்கள் எப்போது உணர்வார்களோ .................. கடவுள் இருந்தால் அவருக்கே வெளிச்சம்.[/size][/size]

அச்சமில்லை ..தேவையில்லாத டைம் வேஸ்ட்

விடயத்தை உள்ளே சென்று அறியாமல் டைம் வேஸ்ட் என்று எப்படி மொட்டையாகக்கூறுவது? ஒன்றை பரீட்சித்துப்பார்த்து அனுபவப்படாது அவதூறு செய்வதும் தவறானதுதானே.

நான் இந்துசமயம், கிறிஸ்தவம், பெளத்தம், இஸ்லாம் மற்றும் பல ஏனைய மத, தத்துவ போதனைகளிலும் உள்ள பயனுள்ள, நல்ல விடயங்களைக்காதுகொடுத்து கேட்பதோடு மட்டுமல்லாது அவற்றை எனது வாழ்விலும் பிரயோகம் செய்கின்றேன். இதனால் மதம் என்று எனக்குள் பயமோ, தயக்கமோ ஏற்படுவது இல்லை. கூறப்படுவன எல்லாவற்றையும் நாம் நம்பவேண்டும், கடைப்பிடிக்கவேண்டும் என்று இல்லைத்தானே.

நாங்கள் எங்களைச்சுற்றி ஓர் முட்கம்பி வேலியைப்போட்டுக்கொண்டு பழகும்போது மற்றவனை எப்படி அரவணைப்பது?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கருத்துக்களை பகிர்ந்து கொண்ட‌ அனைவருக்கும் மிக்க நன்றிகள்.

நான் ஊரில் இருக்கும் போது மட்டக்களப்பில் பெயர் பெற்ற பாஸ்ட‌ர் அவர்.அவர‌து சகோதர‌ர் இந்தியாவின் மிகச் சிறந்த திரைப்பட‌ இயக்குநர்களில் ஒருவர்...அவர‌து சபையின் முக்கியமானது விலையுயர்ந்த ஆட‌ம்பட‌ ஆடைகள்,நகைகள் அணியக் கூடாது என்பது தான்...சபைக்கு வரும் மக்கள் அதைக் கடைப் பிடித்தார்கள்.தங்கட‌ வயலில்,தோட்டத்தில் விளைகிறது எல்லாம் சபைக்கு எனச் சொல்லி பாஸ்ட‌ருக்கு கொடுத்தார்கள்[கோயிலுக்கு என்டு குடுக்கிறதை நிர்வாகம் அடிக்கிற மாதிரி :lol: ] ...அவர‌து மகளுக்கு கனடாவோ,அமெரிக்காவோ சரியாக ஞாபகம் கல்யாணம் நட‌ந்தது மாப்பிள்ளை கத்தோலிக்கர் நிறைய சீதனம் கொடுத்து,நிறைய நகை போட்டுத் தான் கல்யாணம் நட‌ந்தது.உருவ வழிபாடு கூட‌வே கூடாது என்று சபைக்கு வரும் அப்பாவி மக்களுக்கு போதிப்பவர் தனது மகளது திருமணத்தை புலம் பெயர் நாட்டில் கத்தோலிக்க தேவாலயத்தில் நட‌த்தினார் :(

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.