Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இளையராஜா எங்களின் சொத்து

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இவரைப்போல் இசையமைக்க தன்னாலும்முடியும என நினைத்தாலே இனிக்கும என்றொரு படத்துக்கு இசையமைத்து வெற்றி பெற்றுத்தான் ஒதுங்கினார்.

அதற்காக இளையராசா எமது சொத்தல்ல என்று நான் சொல்லவில்லை.

இளையராசா எமது சொத்து என்று முதன் முதலில் இங்கு எழுதியதே நான் தான்.

ஆனால் சபேசனின் இந்த முடிச்சு சரியல்ல என்பதற்காகவே வேறு ஒருவரை உதாரணம காட்டினேன்.

எங்களாலும் இப்படிடி முடிச்சு போட்டு எழுதிக்கொண்டிருக்க முடியும்...........?

புரிந்தால் சரி :(

இளைய ராசா தங்கள் சொத்து என்று முதன் முதலாக விசுகு உரிமை கோரி விட்டதால் சபேசன் இளையராசாவை உரிமை கோர முடியாது இதனை நான் மென்மையாக கண்டிக்கிறேன்

  • கருத்துக்கள உறவுகள்

இளையராஜாவின் அரசியல் நிலைப்பாடு எனக்குத் தெரியாது. அவர் அரசியல் பேசி நான் கேள்விப்பட்டதில்லை. ஆனால் அவரது பாடல்கள் எனக்குப் பிடிக்கும். மற்றும்படி கார்த்திகை மாதத்தில் அவரது நிகழ்ச்சிபற்றி தமிழ் மக்கள் முடிவெடுக்கட்டும், நாம் திணிக்கத் தேவையில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

ஒருக்கா சொல்லுவினம் தேசியத்துக்காக குரல் கொடு என்று பிறகு சொல்லுவினம் தேசியத்திற்காக குரல் கொடுக்காதே என்று......

ஐயோ தாங்கமுடியல்ல.....

இளையராஜா இந்தியாவின் சொத்து...இளையராஜவை தமிழரின் சொத்து என்று சொல்லி அவரை குறுந்தேசியவாததிற்குள் வைத்திருக்க வேண்டாம் .....

Edited by putthan

இளையராஜா சரியான திமிர் பிடிச்சவர் சக கலைஞர்களை மதிக்க தெரியாதவர்

Ar ரஹ்மான் தான் தமிழரின் சொத்து இளையராஜா இசை யானி என்ற பட்டதிக்கு மட்டும் தான் தகுதி உடையவர்

சுண்டல் ஒஸ்கார் விருது மேடையிலும் தமிழுக்காய் தமிழிலே வணக்கம் சொல்லி தமிழுக்கு பெருமை தேடித்தந்த ஏ.ஆர.ரகுமான் எங்கே இசைதொழிலதிபரான இவர் எங்கே.

  • கருத்துக்கள உறவுகள்

அதே தான் சபேசன் அண்ணா போன்றவர்கள் தங்களை ஒத்த வயதுடையவர்கள் தலையில் வேண்டும் என்றால் மிளகாய் அரைக்கலாம் இளையராஜா சொத்தேண்டு சொல்லி நம்பவைக்கலாம் இளையராஜா ஒரு இசையமைப்பாளர் அவளவு தான் ar ரஹ்மான் ஒரு தமிழ் பற்றாளன் Hollywood வரை சென்ற மேதை அவன் அவன் தான் தமிழரின் சொத்து...... இளையராஜா சொத்து என்று சொல்லுனவர்கள் எல்லாம் வெறும் பித்து.....இல்லை அவர் தான் சொத்து என்று இன்னும் சொல்லி அடம்பிடித்தால் ஓங்கி குத்து :D

  • கருத்துக்கள உறவுகள்

:D :D :D

நான் இங்கு எழுதி கேள்வியைக்காணவில்லை

ஆனால் அதற்கு சபேசன் எழுதிய பதில் அதன் கீழே இருக்கிறது :( :(

கேள்வி மீண்டும்

இந்த மாதத்தில் தொடர்ந்து இளையராசா பற்றியே சபேசன் திரிகளைத்திறப்பது ஏன்??? :(

Edited by விசுகு

இந்த திரியின் மூலம் இளையராசாவை சொத்தாக்கி வித்தாலும் வித்துப்போடுவாங்க ............உண்மையில் இளைய ராசாவிற்கு கௌரவம் கொடுக்கும் திரியா

அல்லது அவரை அவமதிக்கும் திரியா ................. :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

தாழ்த்தப்பட்ட மக்களின் மத்தியிலே இருந்து வந்தான். ஆயினும் அவர்களுக்காக அவன் தெருவில் இறங்கிப் போராடியது இல்லை. அவர்களின் வாயில் மலம் திணிக்கப்பட்ட போதும், வல்லுறவுக்கு உட்பட்ட போதும் அவன் கொதித்து எழவில்லை.

நான் நினக்கிறேன் இது அவரை அவமதிக்கும் திரி என்று....

இவ்வளவு நாளும் எனக்கு இளையராஜா ஒரு தமிழ் இசைஅமைப்பாளர் என்றுமட்டும்தான் தெரியும் அவருடைய குலம் கோத்திரம் ஒன்றும்தெரியாது எவ்வளவோ பாடல் கேட்டிருக்கிறேன் எவ்வளவோ பேட்டிகள் வாசித்திருக்கிறேன் ஆனால் எதிலும் அவருடைய சாதியைபற்றி அறியக்கூடியதாக இருக்கவில்லை ......இங்கு சிலர் சாதி ஒழிக்கவேணும் என்று குரல் கொடுத்துகொண்டு சாதி பேசினம் போல கிடக்கு...

  • தொடங்கியவர்

புத்தன்,

இளையராஜாவின் சாதியின் காரணத்தினாலேயே அவர் பல முறை ஆரம்ப காலகட்டங்களில் அவமதிக்கப்பட்டிருக்கிறார்.

உச்சக்கட்டமாக பத்மாசுப்ரமணியம் என்கின்ற பார்ப்பனப் பெண் தன்னிடம் இருந்துதான் இளையராஜா பாடல்களை திருடி இசை அமைக்கிறார் என்று பகிரங்கமாக குற்றம் கூடச் சாட்டினார்.

அவரை வீழ்த்துவதற்கு நடந்த அனைத்து முயற்சிகளிலும் சாதியம் பின்னாலே ஒளிந்து கொண்டுதான் எப்பொழுதும் இருந்திருக்கிறது.

இவை ஒன்றும் ரகசியம் அல்ல, சொல்லமால் விடுவதற்கு. இளையராஜாவின் வரலாற்றில் அவர் பட்ட அவமானங்களுக்கும் நிறைய இடம் இருக்கிறது.

ஆயினும் பாதிக்கப்பட்ட அவரே இவற்றை எதிர்த்து ஒரு குரல் தன்னும் எழுப்பினார் இல்லை. பல முறை அடக்குபவர்களுடன் சேர்ந்து ஒன்றாய் பயணித்தும் இருக்கிறார்.

ஆகவே இளையராஜாவிடம் போய் அதை செய், இதை செய் என்று கேட்டுக் கொண்டிருப்பது பயன் அற்றது.

நீங்கள் சொன்னது போன்று அவரை ஒரு இசையமைப்பாளர் என்பதாய் மட்டுமே பார்க்க வேண்டும். இசையின் ஊடாக அவர் தமிழ் சமூகத்திற்கு வழங்கிய பங்களிப்பை வைத்தே அவரை மதிப்பிட வேண்டும். அவருக்கு எல்லைகள் போடாது அவரை தொடர்ச்சியான பங்களிப்பை வழங்கச் சொல்லி நாம் உற்சாகப்படுத்த வேண்டும்.

அதைப் பற்றி மட்டுமே நான் பேசுகிறேன்.

  • தொடங்கியவர்

http://pamaran.wordpress.com/2008/03/06/%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%87/

நேரம் கிடைத்தால் இதையும் படிக்கவும். பாமரன் 1997 இல் இளையராஜாவை அடக்குமுறைக்கு எதிராக பாடு என்று வேண்டுகோள் விடுத்து எழுதிய மடல். இளையராஜா அதை எல்லாம் செய்யவில்லை.

ஆயினும் பாமரன் சொல்வது போன்று எங்களின் அடையாளத்தை மீட்டுத் தந்தவர் இளையராஜா. அவர் மீட்டுத் தந்த அடையாளத்தை வைத்துக் கொண்டு நாம்தான் போராட வேண்டும். அதையும் அவரையே செய்யச் சொல்லிக் கேட்பது அதிகம் அல்லவா?

குறிப்பு : நாம் என்பது தனியே ஈழத் தமிழர்களை மட்டும் குறிப்பது அல்ல

  • கருத்துக்கள உறவுகள்

:D :D :D

நான் இங்கு எழுதி கேள்வியைக்காணவில்லை

ஆனால் அதற்கு சபேசன் எழுதிய பதில் அதன் கீழே இருக்கிறது :( :(

கேள்வி மீண்டும்

இந்த மாதத்தில் தொடர்ந்து இளையராசா பற்றியே சபேசன் திரிகளைத்திறப்பது ஏன்??? :(

காற்றுள்ள போதே தூற்றிக் கொள்கிறாராம்.

  • கருத்துக்கள உறவுகள்

காற்றுள்ள போதே தூற்றிக் கொள்கிறாராம்.

ம்ம்ம்

தூற்றுதல் தான் நடக்கு. :(

நமக்குத்தான் ஒன்றும் புரியல.

புரியும் மாதிரியும் எழுதுகிறார்களில்லை. :(

  • தொடங்கியவர்

நான் தேசியத்தை போற்றுதலை மட்டுமே செய்கிறேன்.

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

இளையராஜாவின் இசைகள் பிடிக்கும் -இளையராஜா எங்களின் சொத்து

கண்ணதாசனின் கவிதைகள் பிடிக்கும் -கண்ணதாசன் எங்களின் சொத்து

கலைஞரின் எழுத்து நடை பிடிக்கும் -கலைஞர் எங்களின் சொத்து

புத்தன்,சாத்திரியின் கதைகள் பிடிக்கும் - புத்தன், சாத்திரி எங்களின் சொத்து

[size=3]இறப்பதை விட கொடுமையான தனிமையை யாரவது அனுபவித்து உண்டா? இதை கேட்பதற்கு சில பேருக்கு சாதாரணமாக தெரியலாம். அதை அனுபவித்தவர்களுக்குத்தான் அதன் வலி புரியும். உற்றார் உறவினர் இன்றி, நண்பர்கள் இன்றி, எண்ணங்களை பகிர ஏற்ற மனிதர்கள் என்றி நான்கு சுவருக்குள் அடங்கி கிடக்கும் நிலைமை என்பது மரணத்தை விட கொடுமையானது. உயிரில்லாமல் உனது ஜீவன் வாடியதுண்டா? [/size]

[size=3]"இன்னிசை இல்லை என்றோ இறந்திருப்பேன்" என்ற வரிகள்தான் ஞாபகத்திற்கு வருகிறது. இளையராஜாவின் இன்னிசை இல்லை என்றால் நான் இந்நேரம் இறந்திருப்பேன். அவனின் இசை என்னை துன்பத்தில் இருந்து மீட்டு எடுத்திருக்கிறது. எனது இன்பத்திலும் துன்பத்திலும் நான் அவனின் இசையை காண்கின்றேன்.அவனுடைய தனிப்பட்ட வாழ்க்கை எதுவாகினும் நான் சோர்ந்திருக்கிற வேளையில் என் உயிரை மீட்டு எடுத்திருக்கிறான் அதற்காகவேனும் அவனை நான் வாழ்த்துவேன். நீ நீடுடி வாழ்க [/size]

Edited by ஆதித்ய இளம்பிறையன்

  • கருத்துக்கள உறவுகள்

இளையராஜாவின் இசைகள் பிடிக்கும் -இளையராஜா எங்களின் சொத்து

கண்ணதாசனின் கவிதைகள் பிடிக்கும் -கண்ணதாசன் எங்களின் சொத்து

கலைஞரின் எழுத்து நடை பிடிக்கும் -கலைஞர் எங்களின் சொத்து

புத்தன்,சாத்திரியின் கதைகள் பிடிக்கும் - புத்தன், சாத்திரி எங்களின் சொத்து

இது கொஞ்சம் அதிகம் வேண்டாம் சொல்லிட்டன் :(

  • கருத்துக்கள உறவுகள்

இது கொஞ்சம் அதிகம் வேண்டாம் சொல்லிட்டன் :(

இளையராஜாவின் இசையைப்பிடிப்பவர்கள் இளையராஜா தங்களின் சொத்து என்று சொல்கிறார்கள். நீங்களும் எழுதும் கதைகளை விரும்பி வாசிப்பவர்கள் ஏன் சாத்திரி எங்களின் சொத்து என்று சொல்ல முடியாது???

  • கருத்துக்கள உறவுகள்

இளையராஜாவின் இசையைப்பிடிப்பவர்கள் இளையராஜா தங்களின் சொத்து என்று சொல்கிறார்கள். நீங்களும் எழுதும் கதைகளை விரும்பி வாசிப்பவர்கள் ஏன் சாத்திரி எங்களின் சொத்து என்று சொல்ல முடியாது???

அதுதானே சாத்திரி எங்கள் சொத்து

அதுதானே சாத்திரி எங்கள் சொத்து

'சாத்திரியார் எங்கள் சொத்து'

நல்ல விலைக்கு படியுமென்றால் விற்போம். :D

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.