Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

என்வலி

ஒரு பேப்பருக்காக கோமகன்

 

LONELY-GIRL-Poster-B12141197.jpeg

சொல்லிச் சொல்லி

சொல்லால் அடித்தாயே

அடியே

சொல்லால் அடித்தாயே

 

பொட்டுப் பொட்டாய்

உடைந்ததுவே என் இதயம்

சொட்டுச் சொட்டாய் வடிந்ததே

வலியாய் ரத்தம்

 

நீயும் நானும் கூடிய வாழ்க்கை

ஒருவரை ஒருவர்

உயர்த்திய வாழ்க்கை

தெளிந்த ஓடைபோல்

நகர்ந்த எம் வாழ்வில்

கல்லை எறிந்தது யார் சொல்

 

விழுந்த கல் தந்தது

அலையை மட்டுமா

எம் வாழ்வின் வேரையே

ஆட்டியதை நீ அறியாயோ

அடி கிளியே நீ அறியாயோ

 

என் மூச்சிருக்கும் வரை

உன் பேச்சு இருக்கும் 

என் இதயத்தின் ஓரத்தில்

உன் பேச்சு இருக்கும்

என்னதான் நீ என்னை

சொல்லால் சுட்டாலும்

என் இதயத்து சிம்மாசனத்தில்

நீதானே நித்திய கல்யாணியடி

 

நித்தம் நான் காணும்

உன் முகம் வாடவும் விடுவேனோ

அடியே வா

நாம் இருவரும் சேர்ந்தே நடப்போம்

கைகள் பிணையவே

நம் மனமும் இணையவே

 

கோமகன்

21/04 /2013

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் கோமகன் நீண்ட காலத்தின் பின்னர் உங்களை கண்டது மகிழ்ச்சி.சினிமாப் பாடல் ரைப்பில் :)  இருக்குது உங்கள் கவிதை.என் மனதிற்குப் பட்டதை சொன்னேன் குறை நினைக்க வேண்டாம்

 

  • கருத்துக்கள உறவுகள்

கோமகன், மீண்டும், ஒரு ஆக்கத்துடன் உங்களைக் களத்தில் கண்டதில், எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி! :D

 

உங்கள் கவிதையின் சாரம், ஓரளவுக்குப் புரிகின்றது! அதில், இழையோடியிருக்கும், ஆதங்கமும் புரிகின்றது!

 

என்னைப் பொறுத்த வரையில், உங்களைச் சுற்றி, உங்களுக்கென ஒரு வெளி இருக்கும். அதே போல, மற்றவர்களைச் சுற்றியும், அவர்களுக்கெனத் தனித்தனி வெளிகள் இருக்கும்! இவற்றை விடவும், எல்லோருக்கும் பொதுவான, பரந்த வெளியும் இருக்கும்! 

 

ஒவ்வொருவரும், அவரவர் தனி வெளிகளில், குறுக்கிடாமல், பரந்த பொது வெளிகளில் சஞ்சரித்தால், வலிகளுக்குக் காரணங்களே இல்லாமல் போய்விடும்!

 

தொடர்ந்து இணைந்து இருங்கள்! :D

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அழகான கவிதை. வாழ்த்துக்கள் கோமகன். அந்த பாம்பை ஒருக்கால் தட்டியெழுப்பினியளெண்டால் நல்லாயிருக்கும்...பொடியள் பாத்துக்கொண்டிருக்குதுகள். :)

 

http://www.yarl.com/forum3/index.php?showtopic=120186&page=4#entry890090

 

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் கவிதை அழகு. வாழ்த்துகள்.

 

என் மூச்சிருக்கும் வரை

உன் பேச்சு இருக்கும் 

என் இதயத்தின் ஓரத்தில்

உன் பேச்சு இருக்கும்

என்னதான் நீ என்னை

சொல்லால் சுட்டாலும்

என் இதயத்து சிம்மாசனத்தில்

நீதானே நித்திய கல்யாணியடி

 

 

உங்கள் பேச்சு,மூச்சில் அவா இருப்பா.

அவா பேச்சு, மூச்சில் நீங்கள் இருப்பிங்களா!

இப்போவெல்லாம் யாரையும் நம்பமுடியுறது இல்ல. குறிப்பா.....

  • கருத்துக்கள உறவுகள்

கோமகன் கவிதை தூள்...நல்லாயிருக்கு வாழ்த்துக்கள்

  • தொடங்கியவர்

வணக்கம் கோமகன் நீண்ட காலத்தின் பின்னர் உங்களை கண்டது மகிழ்ச்சி.சினிமாப் பாடல் ரைப்பில் :)  இருக்குது உங்கள் கவிதை.என் மனதிற்குப் பட்டதை சொன்னேன் குறை நினைக்க வேண்டாம்

 

உங்களுடன் கருத்தாடுவதில் மகிழ்ச்சியே அக்கை . நீங்கள் எனது ஆதர்ச விமர்சகர்களில் ஒருவர்.  ஆம் ..... உண்மைதான் . உங்கள் மொழியில் சொல்வதானால் " சப்பை மொக்கை கவிதைதான் " . ஒரு மாற்றத்துக்காக இப்படி எழுதினேன் .  இதில் எனது முத்திரை ஒன்றும் இல்லை . உங்கள் கருத்தை கவனத்தில் எடுத்து வருங்காலத்தில் எனதுபாணியில்  எழுதுகின்றேன் . உங்கள் வரவிற்கும் கருத்திற்கும் நன்றி அக்கை  :)  .

  • கருத்துக்கள உறவுகள்

ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டால்

பிரிவென்பது ஏதடி கண்ணே

 

அவள் நிழலில் ஆறுதல் கண்டு  

அணைத்தவுடன் ஆர்ப்பரிப்பு

அவசியமற்றதடி கண்ணே

 

எனக்கும் அவள்  தானடி என்றும்

உனக்கு மட்டும் இல்லையாடி கள்ளி  :) 

 

கவிதைக்கு நன்றி கோமகன்  

 

சமூகப்பிராணியாய் வாழ வேண்டிய கட்டாயத்தில் உள்ள நாம் தினம் தினம் தாங்க வேண்டிய வலிகள் அதிகம்தான். அதிலும் நாம் அதிகம் நேசிக்கின்ற ஒரு மனிதரோ அல்லது குழுமமோ  அல்லது ஒரு நிறுவனமோ காயப்படுத்தும் போது ஏற்படும் வலி மிக அதிகமே.

 

ஆனாலும் இந்த வலிகளைத் தாண்டி குறித்த உறவுடனோ குழுமத்துடனோ நிறுவனத்துடனோ இணைந்து இயங்க வேண்டிய கட்டாயம் இருக்கிறதே!

  • கருத்துக்கள உறவுகள்

அடி பலமா விழுந்திட்டுதோ?? :lol: அடிகள்தான் அடுத்த கட்டத்தை நகர்த்தும்  தொடர்ந்தும் அடியும் வலியும்  வாங்க வாழ்த்துக்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

அடுத்த கட்டம் எண்டா இன்னொரு பிகருக்கா அண்ணே?

மிஸ்டர் கோ ,

யாரும் அடிச்சா வலிச்சா வேண்டியதை விட பலமா திருப்பி கொடுக்கவேண்டும். (ஜீசஸ் தியரி எச்பயேர்ட் லோங் டைம் எகோ )

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உங்கடை அவா பேசுற அளவுக்கு நீங்கள் என்ன செய்தனிங்கள் ?? மனுசிமார் அப்பப்ப ரெண்டு சொட் புருசன்மாருக்கு குடுக்குறவைதானே ??  ஊருலகத்திலை நடக்காததே உங்களுக்கு நடந்து போச்சு ?? இதுக்கெல்லாம் ரென்சனாகி பொம்பிளையள் எல்லாம் கூடாதவை மாதிரி அடுக்குவசனத்திலை அடுக்கி இருக்குறிங்கள் . மத்தும்படி உங்கடை கவிதைக்கு பாராட்டத்தான் வேணும்  :)  . தொடருங்கோ பொம்பிளையளை குறைசொல்லாமல் :D  :D   .

 

 

  • கருத்துக்கள உறவுகள்

என்வலி

ஒரு பேப்பருக்காக கோமகன்

 

LONELY-GIRL-Poster-B12141197.jpeg

சொல்லிச் சொல்லி

சொல்லால் அடித்தாயே

அடியே

சொல்லால் அடித்தாயே

 

பொட்டுப் பொட்டாய்

உடைந்ததுவே என் இதயம்

சொட்டுச் சொட்டாய் வடிந்ததே

வலியாய் ரத்தம்

 

நீயும் நானும் கூடிய வாழ்க்கை

ஒருவரை ஒருவர்

உயர்த்திய வாழ்க்கை

தெளிந்த ஓடைபோல்

நகர்ந்த எம் வாழ்வில்

கல்லை எறிந்தது யார் சொல்

 

விழுந்த கல் தந்தது

அலையை மட்டுமா

எம் வாழ்வின் வேரையே

ஆட்டியதை நீ அறியாயோ

அடி கிளியே நீ அறியாயோ

 

என் மூச்சிருக்கும் வரை

உன் பேச்சு இருக்கும் 

என் இதயத்தின் ஓரத்தில்

உன் பேச்சு இருக்கும்

என்னதான் நீ என்னை

சொல்லால் சுட்டாலும்

என் இதயத்து சிம்மாசனத்தில்

நீதானே நித்திய கல்யாணியடி

 

நித்தம் நான் காணும்

உன் முகம் வாடவும் விடுவேனோ

அடியே வா

நாம் இருவரும் சேர்ந்தே நடப்போம்

கைகள் பிணையவே

நம் மனமும் இணையவே

 

கோமகன்

21/04 /2013

 

வலிகளின்றி வாழ்வு இல்லை. வலிதந்த கவிதைக்கு நன்றிகள் கோமகன். உளிகொண்டு செதுக்குங்கோ வலிகள் பஞ்சாகும்.

 

 

  • தொடங்கியவர்

கோமகன், மீண்டும், ஒரு ஆக்கத்துடன் உங்களைக் களத்தில் கண்டதில், எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி! :D

 

உங்கள் கவிதையின் சாரம், ஓரளவுக்குப் புரிகின்றது! அதில், இழையோடியிருக்கும், ஆதங்கமும் புரிகின்றது!

 

என்னைப் பொறுத்த வரையில், உங்களைச் சுற்றி, உங்களுக்கென ஒரு வெளி இருக்கும். அதே போல, மற்றவர்களைச் சுற்றியும், அவர்களுக்கெனத் தனித்தனி வெளிகள் இருக்கும்! இவற்றை விடவும், எல்லோருக்கும் பொதுவான, பரந்த வெளியும் இருக்கும்! 

 

ஒவ்வொருவரும், அவரவர் தனி வெளிகளில், குறுக்கிடாமல், பரந்த பொது வெளிகளில் சஞ்சரித்தால், வலிகளுக்குக் காரணங்களே இல்லாமல் போய்விடும்!

 

தொடர்ந்து இணைந்து இருங்கள்! :D

 

மாற்றங்கள் என்பதனை மாறும் களங்கள் தானே தீர்மானிக்கின்றன புங்கையூரான் ??? உங்கள் வரவிற்கும் கருத்திற்கும் மிக்க நன்றிகள் :) :) .

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

 

 

என் மூச்சிருக்கும் வரை

உன் பேச்சு இருக்கும் 

என் இதயத்தின் ஓரத்தில்

உன் பேச்சு இருக்கும்

என்னதான் நீ என்னை

சொல்லால் சுட்டாலும்

என் இதயத்து சிம்மாசனத்தில்

நீதானே நித்திய கல்யாணியடி

 

 

 

நேற்று வரை உன்மைக்காதலால்  நான் தனிமரம் என்றே எண்ணினேன்  இன்று  என்னைப்போல் ஒருவன் உலகில் உள்ளானே என்று மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.

 

 

 
 

 

எதை விதைத்தாயோ அதைதான் அறுவடை செய்யலாம்

 

  • கருத்துக்கள உறவுகள்

கவிதை நன்றாக உள்ளது கோமகன்.

 

  • கருத்துக்கள உறவுகள்

கவிதைக்கு நன்றி  கோ........

 

எனக்கு கோவில் பிடிக்காத ஒன்று இது தான்

சுத்தி  வளைத்து மூக்கைத்தொடுவது...................???

 

சொல்லணும் என்று மனசில்   சுட்டால்

அப்படியே தூக்கிப்போடணும்

 

அப்பொழுதுதான் பாதை தெரியும்

துலங்கும்...

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்வலி

ஒரு பேப்பருக்காக கோமகன்

 

LONELY-GIRL-Poster-B12141197.jpeg

 

 

நீயும் நானும் கூடிய வாழ்க்கை

ஒருவரை ஒருவர்

உயர்த்திய வாழ்க்கை

தெளிந்த ஓடைபோல்

நகர்ந்த எம் வாழ்வில்

கல்லை எறிந்தது யார் சொல்

 

விழுந்த கல் தந்தது

அலையை மட்டுமா

எம் வாழ்வின் வேரையே

ஆட்டியதை நீ அறியாயோ

அடி கிளியே நீ அறியாயோ

 

 

கோமகன்

21/04 /2013

 

அண்ணே நல்ல கவிதை..

ஏதோ விடுபடுவதோ போல இருக்கிறது..கனகாலம் கவிதைகள் வாசிக்கத படியால் ரசிக்க தெரியவில்லையோ தெரியவில்லை.

இங்கே நான் குறிப்பிடும் இடத்தில் ..வாழ்வை தெளிந்த நீரோடைக்கு ஒப்பிடுகிறீர்கள், பிறகு அதில் விழுந்த கல்லை சொல்லுகிறீர்கள்...பிறகு வாழ்வை / வாழ்க்கையை மரத்திர்ற்கு ஒப்பிடுகிறீர்கள்...எதோ முறிகிறது போல தெரிகிறது...அப்படி வாறதுதான் கவிதையோ தெரியாது..மனதில் பட்டத்தை சொன்னேன்

வாழ்த்துக்கள்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.