Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கண்டுபிடியுங்கள் இந்த பாட(கி)லை(யை) ..

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

2003ம் ஆண்டு மாவீரர் நினைவாக வந்த பாடல் ஒன்று. ஏதேச்சையாக பழைய குறுந்தகட்டில் கிடைத்தது. இந்தப் பாடகி தற்போதைய யாழ் உறவும் கூட ..

கண்டுபிடியுங்கள் உறவுகளே..! இலைமறை காய்களாக இருக்கும் எம் உறவுகளையும் கௌரவிப்போமாக .. :)

 

Edited by ஜீவா

  • கருத்துக்கள உறவுகள்
வணக்கம் ஜீவா !
நாலுவிடை விடை தந்தால் உதவியாக இருக்கும் ..... அல்லது ஏதாவது குழு குடுங்கோ    :)
  • கருத்துக்கள உறவுகள்

சுமேரியர். :)

  • கருத்துக்கள உறவுகள்

ஆஆஆஆ.........

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆஆஆஆ.........

 

என்ன கறுப்பியின்ரை வருத்தம் தொத்த்தீட்டுதே??? :D

  • கருத்துக்கள உறவுகள்

செல்லப்பா ஜயாவின் மகளா இருக்குமோ  :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் சூரியன் தம்பி, என்ன பிராக்குப் பாத்துக்கொண்டு திரியிறீங்கள் போல கிடக்கு! :o

 

லபக்கெண்டு ஆளை அமத்திறதை விட்டுட்டு! :D

 

மொசப்பத்தேமியா சுமேரியர்..... :icon_idea:

Edited by புங்கையூரன்

  • கருத்துக்கள உறவுகள்

டிகே பட்டம்மாள் யாழ்கள உறவா? :unsure:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சு.மோ அக்கா என்று சரியான விடையைக் கண்டுபிடித்த தமிழ்சிறி அண்ணா, புங்கை அண்ணாக்கு வாழ்த்துக்கள். :)

 

 

  • கருத்துக்கள உறவுகள்

இந்தப்பாடகியைத் தெரியாத யாராவது இருந்தால் அவர்களுக்கு எதிராய் ஜீவாவை உண்ணாவிரதமிருக்குமாறு இத்தால் வேண்டுகிறோம். :lol:

சுமேயா.. அந்த இறுவட்டில் என்ன பெயர் போட்டிருக்கிறார்கள் என்று சொல்லுங்கோ! :D

வாழ்த்துக்கள் சுமேரியர் அக்கா ..............பெருமையும் ,மகிழ்ச்சியும் கொள்கிறேன் .உங்கள் இசைப்பயணம் தொடரட்டும் 

தமிழ் சூரியன் தம்பி, என்ன பிராக்குப் பாத்துக்கொண்டு திரியிறீங்கள் போல கிடக்கு! :o

 

லபக்கெண்டு ஆளை அமத்திறதை விட்டுட்டு! :D

 

மொசப்பத்தேமியா சுமேரியர்..... :icon_idea:

உண்மை புங்கை அண்ணா  சுமேரியர் அக்காவிடம்  அருமையான குரல் இருப்பது எனக்கு ஏற்கனவே  தெரியும் ............இந்த இசைத்தட்டுக்கு கூட பாட வைக்கும் ஒரு எண்ணம் எனக்கு இருந்தது .நடைமுறை சாத்தியமற்ற நிலையில் இன்னொரு முறை நிச்சயம் இந்த சூழலை உருவாக்க முயற்சிப்பேன் ...............இது சம்பந்தமாக தனிமடலில் சுமேரியர் அக்காவுடன் பேச இருந்தேன் .இந்த சந்தர்ப்பத்தில் இங்கே கூறி நிற்கிறேன் .................
 
நடை முறை சாத்தியமற்றது என்று நான் இங்கே குறிப்பிட்டது ,நான் இங்கு இருந்துன் கொண்டு இன்னொரு நாட்டில் உள்ளவர்களின் குரலை ஒளிப்பதிவு செய்யும் நிலை [கருவிகள் ]. [பொருளாதாரநிலை ] ...............எதிர்காலத்தில் நிச்சயம் இவை எல்லாம் மாறும் .அப்போது நிச்சயம் .நான் இங்கு சொன்ன விடயத்தை செயல்படுத்தி காட்டுவேன் .நன்றிகள் . :)
  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் சுமே ! :D   இணைத்த ஜீவாவுக்கும் நன்றிகள் !! :D  :D

 

உங்களுக்கு நல்ல குரல் வளமுள்ளது !! :D

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்தப்பாடகியைத் தெரியாத யாராவது இருந்தால் அவர்களுக்கு எதிராய் ஜீவாவை உண்ணாவிரதமிருக்குமாறு இத்தால் வேண்டுகிறோம். :lol:

 

வணக்கம். :D

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம். :D

 

அந்தப்பயம் இருக்கட்டும். :lol:

 

ஆஆஆஆ.........

 

என்ன நடந்தது நண்டு??????????????? :blink:

 

  • கருத்துக்கள உறவுகள்

அந்தப்பயம் இருக்கட்டும். :lol:

என்ன நடந்தது நண்டு??????????????? :blink:

அதிர்ச்சியில் இருந்து இன்னமும் மீளவில்லை
  • கருத்துக்கள உறவுகள்

என் பாடலை திரியில் பதிந்த ஜீவாவுக்கு நன்றி. என்னைக் கண்டுபிடித்துக் கருத்துக் கூறிய உறவுகளுக்கும் நன்றி. 2003 ம் ஆண்டு ஈழத்துக்குச் சென்றிருந்தபோது எனது ஊருக்குப் பக்கத்தில்தான் தமிழீழம் கலை பண்பாட்டுக் குழுவினரின் பொறுப்பாளராக இருந்த புதுவை அண்ணனைப் பார்க்கச் சென்றிருந்தேன்.

அவரின் கவிதைகள் பற்றி எல்லாம் கதைத்துக்கொண்டு இருந்தபோது யேர்மனியின் இசைக்குழு பற்றிய கதை வந்தது. கண்ணன் எல்லொருக்கும் பாடுவதற்கு சந்தர்ப்பம் கொடுப்பதில்லை என்ற குற்றச்சாட்டை நான் முன்வைத்தபோது, எனக்கு இதுவரை யாரும் கூறவில்லையே என்றார். குயில் போல் இனிமையான குரல் இருப்பவர்கள் மட்டுமே பாடலாம் என்று என்னை ஒதுக்கிவிட்டார் என்றேன். உடனேயே இந்தா இண்டைக்கே போய் தமிழீழ இசைக்குழுவின் கண்ணன் அண்ணையைச் சந்தி என்று இருப்பிடத்தைக் கூறினார். அங்கிருந்தே நாச்சிமார் கோவிலடியில் உள்ள அவர்கள் வீட்டைக் கண்டுபிடித்து அங்கு சென்றபோது அந்த மாபெரும் இசையமைப்பாளர் எந்தவித பந்தாவும் இல்லாமல் அன்பாக வரவேற்றார்.

என்னைப் பாடச் சொன்ன போது ஒரு அடிவானம் கடலோடு என்னும் பாடலைப் பாடினேன். உடனேயே அவரின் மகன் முரளியை அழைத்து என்னிடம் பாடல்களைக் காட்டும்படி கூற பத்துக் கவிதைகளைக் காட்டி உங்களுக்கு எது பிடிச்சிருக்கோ அதைத் தெரிவு செய்யுங்கோ என்று கூறியதை இன்றும் மறக்க முடியாது.

நான் இந்தப் பாடலைத் தெரிவுசெய்தேன். ஏனெனில் அப்போது சமாதான காலம் எண்கள் தேசம் பார்ப்பதற்கே எத்தனை அழகாகவும் கம்பீரத்துடனும் காட்சியளித்தது. நான் தெரிவு செய்த கவிதையை வாங்கிப் பார்த்துவிட்டு இதை பிரான்சிலிருந்து ஒருவர் அனுப்பினார் என்று கூறினார் முரளி.

அதன்பின் இரண்டாம் நாள் அங்கு சென்றிருந்தபோது இசைக்குழுவில் இருக்கும் பலர் அங்கு இருந்தனர். என்னுடன் எல்லோரும் சகசமாக உரையாடியது மறக்க முடியாதது. இன்னும் மூன்று நாட்களில் நெடுந்தீவில் ஒரு இசை நிகழ்வு நடை பெற இருக்கிறது விரும்பினால் நீங்களும் கலந்து கொள்ளலாம் என்று என்னையும் அழைத்தனர். எனக்கு மகிழ்ச்சி பிடிபடவில்லை.ஆனால் நாம் அடுத்த நாள் வன்னிக்குக் கிளம்பவேண்டி இருந்ததால் என் கணவர் வேண்டாம் என்றுவிட்டார்.

பாடல் ஒலிப்பதிவு முடிந்து வன்னிக்கும் போய் வந்த பின்னர் ஒலிவட்டை என்னிடம் தந்தார் முரளி. அப்பொழுது கண்ணன் ஐயா, அடுத்த வருடம் வந்தீர்கள் என்றால் ஒரு முழு ஒளிவட்டிலே பாடி அடித்துக்கொண்டு போகலாம் என்றார். அதன்பின் ஒருமாதம் செல்ல முரளியுடன் கதைத்தபோது தமிழீழத்தில் என்பாடல் ஒலிபரப்பப்படுவதாகக்  கூறினார். தகுந்த ஒலிவட்டில் என்பாடலையும் இணைக்க இருப்பதாகவும் கூறி முடிய மீண்டும் போர் தொடங்கிவிட்டது.

என் பாடல் இத்தனை நாட்கள் கிடப்பில் கிடந்தது. சரி யாழில் போடுவோம் என்று ஜீவாவிடம் கேட்டேன். அவர்தான் இணைத்தார்.

  • கருத்துக்கள உறவுகள்

பாடகிக்கு என் பாராட்டுக்கள் . பகிர்வுக்கு நன்றி.

  • கருத்துக்கள உறவுகள்

நான் ஆரம்பத்தில் நினைத்தேன் செல்லப்பா ஜயாவின் மகள் என்று.....நல்லா பாடி இருக்கிறீங்கள் வாழ்த்துக்கள்.. ...அது சரி இதுக்கை கருத்து எழுதின ஆட்களில் எத்தனை பேர் தாயகப் பாடலை விரும்பி கேட்பிங்கள்...

  • கருத்துக்கள உறவுகள்

சுமே அக்காவிற்கு எனது வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்.! :)

  • கருத்துக்கள உறவுகள்

பாடகி சுமோவுக்கும் இணைத்த ஜீவாவுக்கும் நன்றிகள்.தமிழ் சூரியன் சுமோவை வைத்து பாடல் ஒன்றை(அல்லது பலவை) இசையமையுங்கள். யாழ்களம் கலைஞர்களால் குவிந்து போய் கிடக்கப்பா. அடுத்தது யார்??

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வாழ்த்துக்கள் சுமே

  • கருத்துக்கள உறவுகள்

பாடகி சுமேரியருக்கும் பாடலை இணைத்த தம்பி ஜீவாவிற்கும் வாழ்த்துக்கள்.
 

90 களில் வந்த பாடல் என ஜீவாவும் 2003 களில் தான் பாடிய பாடல் எனச் சுமேரியரும் கூறுவது சரியாகப்படவில்லை. யாராவது ஒருவர் திருத்திவிடுங்கள்

  • கருத்துக்கள உறவுகள்

பாடகி சுமேரியருக்கும் பாடலை இணைத்த தம்பி ஜீவாவிற்கும் வாழ்த்துக்கள்.

 

90 களில் வந்த பாடல் என ஜீவாவும் 2003 களில் தான் பாடிய பாடல் எனச் சுமேரியரும் கூறுவது சரியாகப்படவில்லை. யாராவது ஒருவர் திருத்திவிடுங்கள்

 

பாடல் 2003 இல் தான் பாடியது. ஜீவா தூக்கக் கலக்கத்தில் போட்டதால் ஆண்டை மாறிப் போட்டுவிட்டார்.

வாழ்த்திய அனைவருக்கும் நன்றி.

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.