Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

குறுக்கால போனவங்கள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

குறுக்கால போனவங்கள்

 

வேலை அவசரத்தில்
வீட்டை போற வழியிலை
நிக்கிறாங்கள் அறுவான்கள்
 

கறுத்த துணியோடை 
மரங்களுக்கை
உருவை மறைச்சு
நிக்கிறாங்கள் அறுவான்கள்
 

வண்டிகளை இளைகுழையாக்கி
இரக்கமில்லாமல் நீட்டிப்
பிடிச்சுக் கொண்டு
நிக்கிறாங்கள் அறுவான்கள்

 

சரி அந்தப் பக்கம் தானே
ஆர் பெத்த பிள்ளையோ
மாட்டக் கூடாதெண்டு
கைகாட்டி அவனை  
மட்டாப்போடாப்பா மரத்துக்குள்ளை
நிக்கிறாங்கள் அறுவான்கள்

 

ஐரோப்பா முழுதும்
அள்ளித் தெளிப்பான்கள்
மக்கள் கட்டும் வரிப்பணத்தை
கனவான்கள்
கிரீசுக்கு இன்னும் காணாதாம்
என்னத்தைச் செய்ய
கிறுக்கர் நாங்கள் தான்
இருக்கோமாம்
போத்துக்கல்லும் போதாதாம்
பொதுமகன் கையில்
வைக்கிறாங்கள் சுமையை
நிக்கிறாங்கள்அறுவான்கள்

 

ஆழ்ந்த சிந்தனையில்
அடியோடை மறந்திட்டன்

முப்பதா ஐம்பதா
அறுபதா எழுபதா
தெரியவில்லை குத்துமதிப்பா
நாப்பத்தைந்து

நாடு வீதியில் நாகரீகமாக ஒரு
கையில் சிவப்பு வட்டம்
நிக்கிறாங்கள் அறுவான்கள்

 

மற்றக்கையால் மறுக்கிறான்
பாதையை குறுக்கிறான்
சந்துக்குள்
பிச்சையெடுக்க வருகிறான்
அறுவான்  கனவானுக்காக

 

முப்பதுக்கு நாப்பத்தினாலாம்
பாவம் எண்டு மூண்டைக்
கழிக்கின்றானாம்
பதினொண்டு கூடியதால்
இருபத்தைஞ்சு பிச்சையாம்
நிக்கிறாங்கள் அறுவான்கள்

 

அதுவும் கையோடை காட்டைத் தரட்டாம்
இல்லாட்டால் கடிதமாம்
அதை மறந்தால் பத்துக்கூடவாம்
அறுவான்கள் தொல்லை
முடித்து அவசரமாய் வீடு நோக்கி
நிக்கிறாங்கள் அறுவான்கள் 

 

மாலை கறுக்கமுன் 
மனமில்லை வேலையில்
எட்டிப்பார்த்தால் கதவிடுக்கால்
நீட்டிக் கொண்டு
நிக்கிறாங்கள் அறுவான்கள்

 

கடைக்கு முன்னாலை
வாடிக்கையாளன் ஒருவன் 
மடக்கி விட்டான்கள் அறுவான்கள்
தீனி தேடி வந்தவன்
பிச்சையிட்டு  பிரிந்தான்
பசியுடன்
நிக்கிறாங்கள் அறுவான்கள்

 

அவன் அடிவயிற்றில்
கைவைத்த அந்த அறுவானே
இவன் மடியிலும் கைவைத்தான்
இப்போ இவன் உழைப்பிலும்
அறுவான்கள் அழிந்து 
போக சாபம் மட்டுமே என்வாயில் 
 நிக்கிறாங்கள் அறுவான்கள்

 

அரைமணித்துளிகள் நீட்டி
அறுபது முறை வேட்டை
அடங்கமுன் ஒரு அறுவான்
தனக்கு அவசரமாம்
கடைக்குள் வந்தான்
தலைப்பாகை எடுத்துத்
தாழ்வான குரலில்
பாவிக்கலாமா 

 

கண்ணை உற்றுப் பார்க்கையில்
அதே அறுவான் ஆம்
அதே அறுவான்
என் மனம் துடித்தது.
பக்கெண்டு மறுக்கத் துணிந்த
என்மனதை மக்கு என
மறுத்தது மனிதாபிமானம்

 

கனவான்களுக்குச் சேவை
செய்யும் இந்த அறுவான்களை
மனதால் நொந்தும் பயனில்லை
அமைதிகொண்டது மனம்

 

தம்பணி செய்து சென்றார்கள்
நிக்கவில்லை அறுவான்கள் :D :D  :lol:  
  
  

ஒரே அறுவாங்களாய்த் தான் கிடக்கு . அவங்கள் ஆரெண்டும் சொல்லேலை :lol: :lol: .

  • கருத்துக்கள உறவுகள்

தமிழீழ போக்குவரத்து காவல்துறை என நினைக்கிறேன்.. :rolleyes:

தமிழீழ போக்குவரத்து காவல்துறை என நினைக்கிறேன்.. :rolleyes:

சரியான பதிலை கூறிய இசைக்கு வாழ்த்துக்கள் .............. :D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கொஞ்சம் விட்டால் திரியை எங்கோ கொண்டு சென்று விடுவார்கள் இந்தப் பெருமான்கள் :)

 

அறுவான்கள் என்பது ஜேர்மனியக் காவற்துறை
கனவான்கள் ஜேர்மனிய  அரசாங்கம்

 

இந்த அறுவான்கள் அடிக்கடி வேகக் கட்டுப்பாட்டுக் கண்காணிப்பு

என்ற போர்வையில் மக்களிடம் தண்டப்பணம் அறவிடுவார்கள்
 

பாடசாலை கடைத்தெரு என  வாகன ஓட்டிகள் வேக விதிகளை மீறித் தாறுமாறாக வாகனகளை ஓட்டிச் செல்வார்கள்.கவனிப்பது குறைவு.

அரசிற்குப் பணம் தேவைப்பட்டால் மட்டும் தேவையில்லாத

இடங்களில் எல்லாம் வேக அளவுக் கருவிகளுடன்
காவற்துறையை நிறுத்தி நாடு தழுவிய வசூலில் இறங்குவார்கள்

 

அந்த மாதிரி இன்று என்னிடமும் 25 யூரோவை தண்டமாக வாங்கிவிட்டார்கள்.

அந்த ஆத்திரம் தான் இப்படிக் கழுதையாக வெளி வந்துட்டுது .... :lol:

 

விசர் என்னவென்றால் என்னிடம் தண்டப்பணம் வாங்கிய அதே
அதிகாரி என்கடைக்கு  முன்னாலும் கண்காணிப்பில் ஈடுபட்டார்.
 

பின்னர் தனக்கு ஒண்டுக்குப் போகவென்று என் கடைக்குள்ளேயே
வந்து தன் கடமைகளை முடித்துக் கொண்டு சென்றார்

அப்பா ஆத்திரம் வருமோ வராதோ
அவருக்கே மூ..... வரேக்க எனக்கு ஆத்திரம் வரும் தானே   :D  :lol:  :lol:

இப்ப தான் இந்த கவிதை விளங்கிச்சு  :icon_mrgreen:  முதல் தரம் வாசித்தபோது ரொம்ப அறுவையாக இருந்தமாதிரி

இருந்திச்சு ஆனால் இப்ப வாசிக்க முற்றாக விளங்குகின்றது.

வாத்தியார் ஐயாவையே கடுப்பாக்கிப்போட்டினம் என்றால் சும்மாவா :icon_idea:

 

இப்ப தான் இந்த கவிதை விளங்கிச்சு    முதல் தரம் வாசித்தபோது ரொம்ப அறுவையாக இருந்தமாதிரி

இருந்திச்சு ஆனால் இப்ப வாசிக்க முற்றாக விளங்குகின்றது.

வாத்தியார் ஐயாவையே கடுப்பாக்கிப்போட்டினம் என்றால் சும்மாவா ................ :D  :D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வருகைக்கு நன்றிகள் கோமகன், இசை, தமிழ்சூரியன், தமிழினி

 

போற பாதையில் நிண்டவங்கள் அப்பவும் கவனம் இல்லாமல் ஓடி
அடுத்த 500 மீற்றருக்குள்ளை வைச்சு  25 ஐக் கொண்டு போட்டாங்கள் அறுவான்கள் :D  :lol:

  • கருத்துக்கள உறவுகள்

வாத்தியார், நீங்களே இப்படிப் பேசலாமா? தண்டப் பணம் அறவிடுகிறார்களோ இல்லையோ, வேகக் கட்டுப் பாடு உட்பட எல்லா சாலை விதிகளையும் கடைப் பிடிக்க வேண்டியது உங்கள் பொறுபெல்லோ? விபத்து ஏற்படாத வரை எல்லாம் சரி தான். பிறகு வேகக் கட்டுப் பாட்டை மீறி விபத்து நடந்து உயிர் உடமை சேதம் வந்தாப் பிறகு  "இந்த அறுவான்கள் கண்டு கொள்ளாமல் விட்டுத் தான் இப்பிடி வந்தது" எண்டு சொல்லுவீங்கள். உங்கள் உயிரைக் காப்பாற்றியிருக்கிறார் அவர்.

பி.கு: ஆக 25 யூரோ வேக மீறலுக்கு? இங்க நூறு டொலருக்கு மேல எண்டு நினைக்கிறன். அதைக் கட்டாமல் கோட்டுக்கு அலையுற "வெங்கணாந்திகள்" தான் இங்க அதிகம்! :lol:

  • கருத்துக்கள உறவுகள்

எந்த அறுவாங்கள் எண்டு நீங்கள் சொல்லுமட்டும் விளங்கவே இல்லை. :lol:

 

நான் ஜெர்மனியில இருந்தவரைக்கும் ஒரு அறுவாங்களுக்கும் ஒரு சதமும் குடுக்கவில்லை :rolleyes:

Edited by மெசொபொத்தேமியா சுமேரியர்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வாத்தியார், நீங்களே இப்படிப் பேசலாமா? தண்டப் பணம் அறவிடுகிறார்களோ இல்லையோ, வேகக் கட்டுப் பாடு உட்பட எல்லா சாலை விதிகளையும் கடைப் பிடிக்க வேண்டியது உங்கள் பொறுபெல்லோ? விபத்து ஏற்படாத வரை எல்லாம் சரி தான். பிறகு வேகக் கட்டுப் பாட்டை மீறி விபத்து நடந்து உயிர் உடமை சேதம் வந்தாப் பிறகு  "இந்த அறுவான்கள் கண்டு கொள்ளாமல் விட்டுத் தான் இப்பிடி வந்தது" எண்டு சொல்லுவீங்கள். உங்கள் உயிரைக் காப்பாற்றியிருக்கிறார் அவர்.

பி.கு: ஆக 25 யூரோ வேக மீறலுக்கு? இங்க நூறு டொலருக்கு மேல எண்டு நினைக்கிறன். அதைக் கட்டாமல் கோட்டுக்கு அலையுற "வெங்கணாந்திகள்" தான் இங்க அதிகம்! :lol:

நீங்கள் சொல்வதெல்லாம் சரி ஜஸ்டின்

எங்கள் பாதுகாப்பிற்காகத் தான் அவர்கள் வேகக் கட்டுப்பாட்டை

கண்காணிகிண்றார்கள்.

 

ஆனால் நாடுமுழுவது அல்லது ஒரு மாநிலம் முழுவது ஒரே நாளில் ஒரே  நேரத்தில் இப்படிக் கண்காணிப்பது தான் எனக்கு உதைக்கின்றது. இது அரசாங்கம் பணத்திற்காக மக்களை ஏமாற்றும் வேலைகளில் ஒன்று எனத்தான் எனக்குப் படுகின்றது.  :D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

எந்த அறுவாங்கள் எண்டு நீங்கள் சொல்லுமட்டும் விளங்கவே இல்லை. :lol:

 

நான் ஜெர்மனியில இருந்தவரைக்கும் ஒரு அறுவாங்களுக்கும் ஒரு சதமும் குடுக்கவில்லை :rolleyes:

இசை காவற்துறை என உடனே கண்டுபிடித்து விட்டாலும்

தமிழீழக் காவற்துறை என அவர் நினைத்ததும்

என்னையும் பட்டியலில் :icon_mrgreen:  சேர்த்துவிடுவார்களோ என்று யோசித்தபடியால் தான் விளக்கம் தேவைப்பட்டது

 

வருகைக்கு நன்றி சுமேரியர் :D

  • கருத்துக்கள உறவுகள்

இன்று 24மணிநேரம் யேர்மனியில் 15ஆயிரம் காவல்துறையினர் கமரா கண்காணிப்பு பணியில் இருக்கிறார்கள். வாகன வேக விதிகளை மீறும் சாரதிகள் மீது இந்த 24மணிநேர கண்காணிப்பு பற்றி கடந்த ஒருவாரமாக செய்திகளில் சொல்லப்பட்டது. எனினும் இன்று காலை வேலைக்கு வெளிக்கட மகன் ஞாபகப்படுத்தினான். அம்மா கவனம் மெல்லமாக காரோடுங்கோ என எச்சரித்தான்.இந்த அறிவிப்பு வாத்தியாருக்கும் பிள்ளைகளாகவது ஞாபகப்படுத்தியிருப்பினம்.நீங்கள் கவனிக்காமல் போயிட்டீங்கள் போல.

ஒரேயொருமுறை கமரா அடித்து தண்டப்பணம் 25€ கட்டிய பின் இதுவரையும் வலு அவதானம் அடியேன்.

 

குறுக்காலை போவாரின் இறுக்கமான விதி இல்லாவிட்டால் எங்களது வாகன ஓட்டம் பலரது வாழ்வை முடித்துவிடும். குறுக்காலை போவாருக்காகவெண்டாலும் நாங்கள் ஆறுதலாக ஓடுகிறோமே அது எத்தனை நம்மை வாத்தியார்.

 

 

இங்கின திரியாமல் நேரகாலத்துக்கு நித்தா கொண்டு வேளைக்கு எழும்பி மெதுவா போனா எதுக்கு அறுவாங்களை கண்டு பயப்பிட வேணும் :lol:

  • கருத்துக்கள உறவுகள்

இங்கின திரியாமல் நேரகாலத்துக்கு நித்தா கொண்டு வேளைக்கு எழும்பி மெதுவா போனா எதுக்கு அறுவாங்களை கண்டு பயப்பிட வேணும் :lol:

 

அதுதானே அறுவாங்களுக்கு முன்னாலை என்ன பார்வையெண்டு ஒரு பார்வை  பாத்திட்டு போயிருக்கலாமெல்லோ ? :lol:

 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
இரண்டு மூண்டு நாளாய் பேப்பரிலையும் ரேடியோவிலையும் கமராவோடை நிக்கப்போறாங்கள் எண்டு அலார்ம் அடிச்சவங்கள்! வாத்திக்கு கேக்கேல்லை போலை கிடக்கு?
:D
கமரா அடிச்சுப்போட்டுது எண்டதுக்காக கிறீஸ்காரனையும் மற்றவங்களையும் இதுக்கை இழுக்கக்கூடாது கண்டியளோ. :o
 

 

முதலிலை ஜேர்மனியின்ரை கட்டுக்கோப்புக்கும் சீரமைப்புக்கும் உலகத்தவர் இவங்களிட்டை பாடம் படிக்கவேணும். :icon_idea:

 

தம்பணி செய்து சென்றார்கள்
நிக்கவில்லை அறுவான்கள்  :D  :D   :lol:

 

 

:wub:  :)

 

  • கருத்துக்கள உறவுகள்

 

இரண்டு மூண்டு நாளாய் பேப்பரிலையும் ரேடியோவிலையும் கமராவோடை நிக்கப்போறாங்கள் எண்டு அலார்ம் அடிச்சவங்கள்! வாத்திக்கு கேக்கேல்லை போலை கிடக்கு?
:D
கமரா அடிச்சுப்போட்டுது எண்டதுக்காக கிறீஸ்காரனையும் மற்றவங்களையும் இதுக்கை இழுக்கக்கூடாது கண்டியளோ. :o
 

 

முதலிலை ஜேர்மனியின்ரை கட்டுக்கோப்புக்கும் சீரமைப்புக்கும் உலகத்தவர் இவங்களிட்டை பாடம் படிக்கவேணும். :icon_idea:

 

 

:wub:  :)

 

தமிழ் படிப்பிக்கிற அவதியில வாத்தியார் கொஞ்சம் நிதானம் தவறீட்டார். :lol: யாழ் களத்தில் தமிழ் படிக்கும் மாணவர்களாலைதான் வாத்தியாருக்கு 25€ தண்டம் வந்தது. முன்வாங்கில இருந்து வாத்தியாரை தொல்லை பண்ணிய சுமேயக்கா பாஞ்ச் இருவரும் பங்கு போட்டு வாத்தியாரின் தண்டுப்பணத்தை கட்டிவிடுமாறு வாத்தியார் ஆதரவாளர் சங்கம் மூலம் வேண்டுகோள் விடுக்கிறோம். :unsure:

 

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் ஆத்திரத்தைக் கொட்டித் தீர்த்து விட்டீர்கள், வாத்தியார்!

 

எனக்கும் வீட்டுக்குக் கிட்டவா ஒரு வேகக்கட்டுப்பாட்டுக் கமரா ஒண்டு வைச்சிருக்கிறாங்கள்!

 

அறுபது கிலோ மீட்டருக்கு, ஒரு சென்ரி மீட்டர் அதிகமெண்டாலும், படம் பிடிச்சுப் போடும்!  :o

 

நானும் 'வாடகை' மாதிரி நினைச்சுக் கட்டிக்கொண்டு வாறன்! :wub:

உன் சட்ட கலர் எனக்கு பிடிக்கல எடு ஐநூறு.

என்னத்த சொல்ல....

இருநூறு அழுதுவிட்டு வந்தேன் :D

வாகனம் ஓட்டும் விடயத்தில் எங்கள் பக்கத்தில் தப்பு இருந்தால் சோகத்தில் கவிதை எழுதலாம்... ஆனால் கோபத்தில் எழுதக்கூடாது. அது நியாயமில்லை... ஏனெனில் அது மற்றவர்களின் உயிர் சம்மந்தப்பட்டது! :)

  • கருத்துக்கள உறவுகள்

சட்டத்தையும்  ஒழுங்கையும் 

மற்றவர்கள் மீதான கரிசனையும்.........

சொல்லித்தரவேண்டிய  வாத்தியாருக்கே

நாம் சொல்லிக்கொடுக்கவேண்டியுள்ளது.

 

அதிக வேகம் வேண்டாம்

அதிக பணமும் வேண்டாம்

அதிக   சொத்தும் வேண்டாம்

அளவோடு இருந்தால்

அறுவார் வரார்

வந்தாலும் அறார்........... :lol:  :D  

கவிதைக்கு நன்றி வாத்தியார்  ,

நானும் இப்போ வலு கவனம் ஆனால் இது எப்படி நடந்தது என்று விளங்கவில்லை .போன வாரம் ஒரு கோட்டில் இருந்து ஒரு கடிதம் வந்திருந்தது .உடைத்தால் அந்த மாதிரி படங்கள் போட்டு சிவப்பு விளக்கில் போனதென்று கடிதம் .இப்படி ஒரு சமாச்சாரம் இருப்பதே தெரியாது .மகனை இறக்கிவிட்டு ஒரு புது வீதி(warden and arkona)  காலை எட்டுமணிக்கு எடுத்திருந்தேன் .fine $260.00.surcharge and costs $325.00.

இடி இறங்கிவிட்டது .option-2 (கோட்டில போய் விளக்கம் சொல்லலாம் )எழுதி போட்டிருக்கு என்ன நடக்குதென்று பார்ப்பம்

வாத்தியாரே இப்பிடி எண்டால் .............................

  • கருத்துக்கள உறவுகள்

வாத்தியாரே இப்பிடி எண்டால் .............................

ஏன் வாத்தியாருக்கு வலிக்காதோ.. :D ? அண்ணா உங்கள் ஆத்திரத்தை கவிதையில் சொல்லிய விதம் அருமை..

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் கருத்துக்களைப் பதிந்த அனைவருக்கும் நன்றிகள் :D
 

இது தான் ஜேர்மனி நாட்டின் வரலாற்றிலேயே ஒரு நாளில் ஒரேமுறையில்

24 மணிநேரம் தொடர்ச்சியாகச் செய்யப்பட்ட வேகக் கட்டுப்பாட்டுக் கண்காணிப்பு
ஒரு மில்லியனுக்கு மேற்பட்ட வாகன ஓட்டிகள் சோதனைக்குட்படுத்தப்பட்டுள்ளார்கள்
 

எத்தனை மில்லியன் தண்டப்பணம் அறவிடப்பட்டதென விபரம் தெரியவில்லை.  :D

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.