Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

விசு அண்ணாவின் மகனை வாழ்த்துவோம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

விசுகு, தனது மகனை.... 22 வயதில், உயர்ந்த நிலைக்கு கொண்டு வர.....
அவர் பாவித்த, பெல்ட் தான் காரணம் என்று.... யாராவது இங்கு எழுதினால்,
நான்... சும்மா, இருக்க மாட்டன். :D

  • Replies 88
  • Views 8.6k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

எனது வாழ்த்துக்களும் உங்களுக்கும் உங்கள்மகனுக்கும் உரித்தாகட்டும்.

வாழ்த்துக்கள் விசுகு அண்ணா.....! உங்கள் மகனிடமும் எம் பாராட்டுக்களை தெரிவித்துவிடுங்கள்

  • கருத்துக்கள உறவுகள்

தாய் தந்தை.. தனயன் எல்லோருக்கும் வாழ்த்துக்கள். :)

 

ஒரு சந்தேகம்... உங்கள் மகன் பொறியலாளராக படிப்பதாக முன்னர் இங்கு யாழில் சொல்லி இருந்தீர்கள். இப்ப ஏன் வங்கியில் வேலை..???!

 

அவரவர் படித்த துறையில் வேலை செய்வது தான்.. உண்மையில்.. அவர்களுக்குப் பலமும்.. உயர்வும் தரும். அத்தோடு அந்தத் துறைக்கு ஏதேனும்.. விசேடம் நடக்கவும் உதவும். வங்கியில் வேலை செய்தும்.. முன்னுக்கு வரலாம்.. அதற்கு ஏன் பொறியியல் பட்டம்.. அதற்கு.. CIMA அப்படி இப்படி படிப்புகள்.. போதுமே..???! :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் விசுகு அண்ணாவுக்கும் மகனுக்கும்

  • கருத்துக்கள உறவுகள்

விசு அண்ணாவின் மகனை வாழ்த்துவோம்

தன்னுடைய 22 ஆவது வயதிலையே பட்டப்படிப்பை முடித்து பிரான்சின் முன்னணி வங்கி ஒன்றில் வேலைக்கு அமர்ந்திருக்கும்

அவருடைய அன்பு மகன் மேலும் மேலும் முன்னேறி தந்தைக்கும் தாயகத்துக்கும் தமிழர்களுக்கும் பெருமைதேடித்தர வேண்டும் என்று என்னுடைய வாழ்த்துக்களை கூறி இந்த யாழ் கள குடும்பத்தின் மூத்த உறவு ஒருவரின் இந்த சந்தோஷமான தருணத்தில் மகனை இந்தளவு தூரத்துக்கு வளர்த்து விட்ட விசு அண்ணாவையும் தந்தையின் ஆசை அறிந்து அதை பூர்த்தி செய்த அவருடைய மகனையும் வாழ்த்தலாம் வாங்க

 

 

நன்றி  சுண்டல்

 

அவன் 03 ஐப்பசி 1991 இல் பிறந்தான்

அதனால் 

18 வயதுக்கு முதலே  (யூன் 2009) யூனிக்கு  தெரிவானான்

20 வயசில் (3 வருடப்படிப்பு) 

எஞ்சினியர் பட்டம் பெற்றான் (யூன் 2012)

22 வயசில் MASTER ll  முடித்துவிட்டான்

 

எங்கும் நின்று  தங்கி

தள்ளாடாது தனது படிப்பை ஒரே பிடியில் முடித்துள்ளான்

இதுவும் ஒரு சாதனை  தான்

 

அத்துடன் நான் ஏழாவது பிள்ளை  எனது குடும்பத்தில்.

எனது

மற்றும் எனது மனைவி  குடும்பத்தின் முதலாவது எஞ்சினியர் என்ற  பெருமையையும் பெறுகின்றான்.

 

நன்றி  தம்பி சுண்டல்

நேரத்துக்கும் அன்புக்கும்

உங்கள் எல்லோரையும்  நான் என் பிள்ளைகள் போலத்தான் பார்த்து

ஊக்கவித்து வருகின்றேன்

வாழ்க  வளமுடன்...

எனது வாழ்த்துக்களும் உங்களுக்கும் உங்கள்மகனுக்கும் உரித்தாகட்டும். :D 

 

நன்றி  பாட்டி (படத்தை  பார்த்த பின் அவ்வாறு தோன்றாது விட்டாலும்  நீங்கள் என்னைப்பார்க்காதவரை  ... :D )

எல்லாம் உங்கள் ஆசிர்வாதம் தான்

அது தொடர்ந்து வேண்டும்...

மேலும் பல சாதனைகள படைத்திட விசுக்கு அண்ணனின் அண்ணா மகனுக்கு வாழ்த்துக்கள் 

 

நன்றி  சகோதரி

உங்கள் எல்லோரையும்  நான் என் பிள்ளைகள் போலத்தான் பார்த்து

ஊக்கவித்து வருகின்றேன்

வாழ்க  வளமுடன்

தந்தை மகற்காற்றும் உதவி அவையத்து முந்தி இருப்பச் செயல் மகனின் முன்னேற்றத்திற்கு எமது வாழ்த்துக்கள்

 

நன்றிகள் அக்கா

உங்கள் வாழ்த்துக்கிடைக்க  கொடுத்து  வைத்திருக்கணும்

இவை  என் பிள்ளையைக்காத்து நிற்கும்

 

யாழ் களம் எப்பொழுதும் ஊரார் பிள்ளையை  ஊட்டி  வளர்த்தே வந்திருக்கிறது

அதற்குள்  நானும் இருந்திருக்கின்றேன்

எனவே எனது பிள்ளை  வளரும்

இது தானே  தர்மம்

நன்றியக்கா

Edited by விசுகு

  • கருத்துக்கள உறவுகள்

எனது வாழ்த்துக்களும் உங்களுக்கும் உங்கள்மகனுக்கும் உரித்தாகட்டும்

 

நன்றி  சகோதரா

உங்கள் வாழ்த்துக்கும் அன்புக்கும் நேரத்திற்கும்..

 

தமிழருடைய தாகம் நிறைவேறவேண்டுமென்றால்

பொருளாதாரத்திலும்

அறிவாற்றலிலும் நாம் வளரணும்

 

 

வீதிவீதியாக

நின்று கத்திய  எனது குரலுக்கு மதிப்பிருக்கவில்லை

இந்த உலகம் எதற்கு தலை சாய்க்கிறதோ

அந்த  வழிகளை  நாம் தொடணும்

ஒரு தமிழனாக நான் அதைத்தொடுவேன்....

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள், ஜூனியர் விசு.

 

நன்றி  ஐயா

 

உங்கள் வாழ்த்துக்களை  பெற  தவம் செய்திருக்கணும்

முகம் காணாத உறவுகள் நாம்

எம்மை  இணைத்தது

ரத்த சம்பந்தமான இன உணர்வு மட்டுமே

அதற்குள் நின்று கொண்டு நாம் செய்யும் காரியங்கள் அத்தனையையும்  செய்கின்றோம்

மனப்பூர்வமாக ஒருவரை ஒருவர் அரவணைத்து

பாராட்டி  சீராட்டி வாழ்த்தி

கடினகாலங்களில் ஆறுதல் கூறி என நாம் இங்கு ஆற்றும் பணிகள் 

பெருமையடைய  வைப்பவை.

 

உங்கள் போன்றோர்

எம்முடன் நிற்பது என்பது பெரும் தோள் கிடைத்தது போன்றது எமக்கு....

 

நன்றிஐயா

வாழ்த்துக்கும்  அன்புக்கும்

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள்  செல்வன் விசுவுக்கு...! :D

 

மாதா பிதாவை மதித்து வாழ்ந்தால் மென்மேலும் சிறப்புக்கள் கிட்டும்...! :)

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள்  விசுகு அண்ணாவுக்கும் , மகனுக்கும். தந்தையின் கனவை நனவாக்கிய மகனுக்கு பாராட்டுக்கள். இதற்கு விசுகு அண்ணாவின்  பக்க பலம் நிச்சயம் கை கொடுத்து இருக்கும்.

 

 

நன்றி  நுணா

 

1983 ஆவணியில் உயர்தரப்பரீட்சைக்கு தயாராக  இருந்தேன்

யூலை 24 இல் சிங்களம் உடுத்த உடுப்புடன் அனுப்பி  வைத்தது

கனவு கலைந்து

என்ன  செய்வது என்று தெரியாது தவித்த என்னை

குடும்பநிலை பிரான்சுக்கு தள்ளியது

 

வந்து விழுந்த நான் 

1- தாயையோ

2- குடும்பத்தையோ

3- ஊரையோ

4- தாயகத்தையோ மறக்கவில்லை...

 

அன்றிலிருந்து உழைத்தேன்

செய்ய முடிந்த அத்தனை  வேலைகளையும் செய்திருக்கின்றேன்

வந்ததிலிருந்து அதிகமாக 2 வேலைகள் செய்து வந்திருக்கின்றேன்

 

உழைத்ததை

எனது நேரத்தை

இந்த 4 பகுதிக்கும் கொடுத்தேன்

அதற்கான எனது குடும்பம் இன்று உள்ளநிலை

மற்றும் பிரான்சில் எனக்கிருக்கும் மதிப்புக்கள்   சாட்சி

 

 

அதேநேரம் எனக்காக வாழ்ந்ததில்லை

இதுவரை எனக்கென்று நிலையான  சொத்து எதையும் பிரான்சிலோ

உலகின் எந்த மூலையிலோ வாங்கியதில்லை

வீடு உட்பட...

காரணம்

எனக்கென்று ஒரு குறியுண்டு

அது தாயகம் நோக்கி  மட்டுமே இருந்தது

இருக்கிறது

அதை  அடைய நான் சொத்து சேர்ப்பது  இடைஞ்சலாகிவிடக்கூடாது என்பதில் கண்டிப்பாக இருந்தேன்.

தேசியத்துக்காக உழைப்பவர்கள் கச்சான் வாங்கி  சாப்பிடுவதே 

வாதத்துக்குரிய  பொருளாவதை  கண்டிருக்கின்றேன்.

 

அந்தவகையில் எனது முதலாவது சொத்து பாசாகி  வெளியில் வந்துள்ளது

இதுவே எனது முதல்ச்சொத்து

இதைக்கூட

2004 இல் அங்கிருந்து நான் அனுமதியுடன் வெளியே  வந்திருக்காது விடில்

செய்து முடித்திருக்கமுடியாது

இது தான் உண்மை.

 

நுணா  என்றவுடன் கொஞ்சம் உரிமையுடன் அதிகமாக எழுதுகின்றேன் என்று நினைக்கின்றேன்

காரணம்

யாழில் இன்னும் எவ்வளவு காலம் இருப்பேன் என்று தெரியவில்லை

இடம் மாறுவதற்கான முயற்சிகளில் உள்ளேன்

எந்த நேரமும் எழுதுவது தடைப்படலாம்

அதனால் விசுகு அண்ணா பற்றி தெரிந்து வைத்துக்கொள்ளுங்கள்

அவரது தேசியப்பற்று என்பது அப்பழுக்கற்றது

ஒரு சிலரது  நடவடிக்கைகளை  மட்டும் வைத்துக்கொண்டு

எல்லோரையும் ஒரே கூடைக்குள் போடுவதை அனுமதிக்காதீர்கள்

அதைத்தான் யாழில் நான் தொடர்ந்து காப்பாற்றிவருகின்றேன் ...

 

நன்றி  நுணா....

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் .ஆரோக்கியமான அடுத்த தலைமுறை ஒன்று உருவாகட்டும் .

 

நன்றியண்ணா

 

ஆரோக்கியம்

பயங்கரவாதம்

வன்முறை

இவை  பற்றி  எந்தவித வரையறைகளும் இவ்வுலகில் இதுவரை இல்லாததே

இன்றைய  எமது நிலைக்கு காரணம்

 

நீங்கள் நாம் மாறணும்  என்ற நிலையிலும்

நான்

நாம் எதற்கு மாறணும்

உலகம் மாறணும் என்றநிலையிலும் உள்ளோம்

காலம் தான் பதில் தரணும்

வாழ்த்துக்கள் விசுகு அண்ணா.....! உங்கள் மகனிடமும் எம் வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துவிடுங்கள்.

 

 

நன்றி  சகோதரி

 

நிச்சயம் தெரிவிப்பேன்

கனடா  வந்தால்

உங்கள் எல்லோரையும் அவன்  சந்திப்பான்..

விசுகருக்கும் அவர் மகனுக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

 

 

நன்றியண்ணா

 

உங்கள் வாழ்த்துக்கிடைக்க  கொடுத்து வைத்திருக்கணும்

 

உடம்பைக்கவனியுங்கள் அண்ணா

எங்கள் சொத்தண்ணா  நீங்கள்...

  • கருத்துக்கள உறவுகள்

பிள்ளையை... பெற்று, வளர்த்து, கல்வி கற்பித்து, நல்ல மனிதனாக உருவாக்க பெற்றோர் எத்தனை பாடுபட்டிருப்பார்கள்.

அவர்களின் கனவை, நனவாக்கிய.... ஜூனியர் விசுகுக்கு பாராட்டுக்கள். :)

 

 

நன்றி  சிறி

 

அவன் பிறப்பாலேயே  ஒரு நல்ல பிள்ளை....

இதுவரை

எனக்கு பிடிக்காத எதையும் செய்யமாட்டான்

உண்மையில் இவ்வாறு பிள்ளைகள் அமைவது   தெய்வ  வரம்

அதை நான் பெற்றிருக்கின்றேன் என்று தான் சொல்வேன்

இதுவரை கடின  காலப்பகுதிகளைத்தாண்டியாயிற்று 

இனி 

கொஞ்சம் அவிட்டு விடலாம் :icon_idea:

மேலும் பல சாதனைகள படைத்திட விசுகு மகனுக்கு வாழ்த்துக்கள் 

 

நன்றி  தம்பி  கறுப்பி

நேரத்துக்கும்  வாழ்த்துக்கும்

  • கருத்துக்கள உறவுகள்

விசுகு அண்ணாவின் மகனுக்கும் பெற்றோர்க்கும் எமது வாழ்த்துகள்!

 

 

நன்றி  தம்பி  மகம்

நேரத்துக்கும் வாழ்த்துக்கும்

 

உங்கள் சேவை  யாழுக்கு பெரும் பணி  செய்கிறது

தொடருங்கள்

வாழ்க  வளமுடன்

வாழ்த்துக்கள் விசுகு அண்ணாவுக்கும், அவரது இளவலுக்கும்.. :D

 

நன்றி  தம்பி

இளவலை

எனது இளவலிடம் (உங்களிடம் :icon_idea: ) ஒருக்கா அனுப்பி  எடுக்கணும்

பார்க்கலாம்

நன்றி  தம்பி  

நேரத்துக்கும் வாழ்த்துக்கும்

வாழ்க  வளமுடன்

 

வாழ்த்துக்கள் !
சுவர் இருந்தால்தானாம் சித்திரம் வரையலாம். சுவர்களை நல்ல அத்திவாரம் போட்டு கட்டவேண்டும்.

 

 

நன்றி  தம்பி

 

அத்திவாரம் என்று நான் நினைப்பவை

அடைந்தவை

 

நான் இறந்தால் 3 கொடிகள் என்மீது விழும் என்று  என் மக்களுக்கு நான் சொல்வதுண்டு

ஒன்று எனது குடும்பக்கொடி

இரண்டு ஊர்க்கொடி

மூன்று தாயகக்கொடி

(நாலாவதாக பிரெஞ்சுக்கொடியும் விழும். ஆனால்  நேரம் தான் இல்லை)

இது தான் எனது அத்திவாரம்

அந்த வழியில் நிச்சயம் என் பிள்ளைகள்

அததிவாரத்தைக்காப்பாற்றும்

நன்றி  தம்பி  

நேரத்துக்கும் வாழ்த்துக்கும்

வாழ்க  வளமுடன்

வாழ்த்துக்களும்  பாராட்டுக்களும்

 

 

நன்றி  சகோதரா

நேரத்துக்கும் வாழ்த்துக்கும்

வாழ்த்துகள்!!

 

 

நன்றி  ஐயா

 

எமது சொத்து ஒன்று  நீங்கள்

உடம்பைக்கவனியுங்கள்......

 

வாழ்த்துக்கள் விசுகு.!

உங்கள் மகனிடமும் எம் வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துவிடுங்கள்.

 

 

நன்றி  சகோதரா

நேரத்துக்கும் வாழ்த்துக்கும்

வாழ்க  வளமுடன்

Edited by விசுகு

  • கருத்துக்கள உறவுகள்

விசுகருக்கும், மகனுக்கும் நல் வாழ்த்துக்கள்!

 

நல்லதொரு குடும்பம், ஒரு பல்கலைக்கழகம்!

 

நன்றி  அண்ணா

 

உங்களது வாழ்த்து

எனக்கு இரட்டிப்பு மகிழ்வு தரக்கூடியது

நல்லதொரு குடும்பம், ஒரு பல்கலைக்கழகம்!

நிச்சயமாக

முன்னோர் செய்த புண்ணியங்கள்

கிராஞ்சியம்பதி கந்தன் கருணை

வாழ்த்துக்கள்  விசுகு அண்ணாவுக்கும் , மகனுக்கும். தந்தையின் கனவை நனவாக்கிய மகனுக்கு பாராட்டுக்கள். இதற்கு விசுகு அண்ணாவின்  பக்க பலம் நிச்சயம் கை கொடுத்து இருக்கும்.

 

நன்றி  தம்பி  

நேரத்துக்கும் வாழ்த்துக்கும்

 

உங்கள் சேவை  தாயகத்துக்கு பெரும் பணி  செய்கிறது

தொடருங்கள்

வாழ்க  வளமுடன்

வாழ்த்துக்கள் அண்ணா மகனுக்கு

 

நன்றி  சுமே

நேரத்துக்கும் வாழ்த்துக்கும்

 

உங்கள்   முயற்சிகளுக்கு  வெற்றி  கிடைக்கட்டும்

தொடருங்கள்

வாழ்க  வளமுடன்

ஜூனியர் விசுகருக்கு வாழ்த்துக்கள்

 

நன்றி  தம்பி  

நேரத்துக்கும் வாழ்த்துக்கும்

 

வாழ்க  வளமுடன்

எனது வாழ்த்துக்களும் உங்களுக்கும் உங்கள்மகனுக்கும் உரித்தாகட்டும்

 

நன்றி  தம்பி  

நேரத்துக்கும் வாழ்த்துக்கும்

 

உங்கள் சேவை  யாழுக்கு பெரும் பணி  செய்கிறது

தொடருங்கள்

வாழ்க  வளமுடன்

மேலும் பல சாதனைகள படைத்திட விசுகு மகனுக்கு வாழ்த்துக்கள்

 

நன்றி  தம்பி  உடையார்

நேரத்துக்கும் வாழ்த்துக்கும்

 

அடிக்கடி காணக்கிடைக்குதில்லை?

வாழ்க  வளமுடன்

விசுகு, தனது மகனை.... 22 வயதில், உயர்ந்த நிலைக்கு கொண்டு வர.....

அவர் பாவித்த, பெல்ட் தான் காரணம் என்று.... யாராவது இங்கு எழுதினால்,

நான்... சும்மா, இருக்க மாட்டன். :D

 

 

அண்மையில்

ஒரு பிள்ளை  குழப்படி செய்தபோது

அந்தப்பிள்ளையை  எனது அப்பாவிடம் சில  நாட்கள் விட்டு எடுக்கவேண்டும் என அவன் சொன்னான்

அதன்படி

பெல்ட்டினால்

தான் ஒழுங்காக வளர்க்கப்பட்டிருப்பதாக அவன் உணர்ந்துள்ளான்

எனவே அதுவும் ஒரு காரணம்

கண்டிப்புடனான வளர்ப்பு என்பது ஒரு தகப்பனின் கடமை.

எனது வாழ்த்துக்களும் உங்களுக்கும் உங்கள்மகனுக்கும் உரித்தாகட்டும்.

 

 

நன்றி  சகோதரா

நேரத்துக்கும் வாழ்த்துக்கும்

 

உங்கள் மீது எனக்கு தனிப்பட  ஒரு பிரியம் உண்டு

அது எதனால் எனத்தெரியவில்லை

ஆனால் நீங்கள் புதியவர் அல்ல என்று மட்டும் எனது மனம் சொல்கிறது

அதற்காக நீங்கள் முகம் காட்டவேண்டாம்

வாழ்த்துக்கள் விசுகு அண்ணா.....! உங்கள் மகனிடமும் எம் பாராட்டுக்களை தெரிவித்துவிடுங்கள்

 

நன்றி  தம்பி  

நேரத்துக்கும் வாழ்த்துக்கும்

 

உங்கள் சேவை  யாழுக்கு பெரும் பணி  செய்கிறது

தொடருங்கள்

வாழ்க  வளமுடன்

வாழ்த்துக்கள் விசுகு

 

நன்றி  தம்பி  

நேரத்துக்கும் வாழ்த்துக்கும்

 

தொழில் எப்படி போகிறது

வருகின்ற  மாதக்கடைசியில் ஒரு கிழமை அங்கு நிற்பேன்

முடிந்தால் சந்திக்கலாம் (மகனுடன்)

வாழ்க  வளமுடன்

  • கருத்துக்கள உறவுகள்

தாய் தந்தை.. தனயன் எல்லோருக்கும் வாழ்த்துக்கள். :)

 

ஒரு சந்தேகம்... உங்கள் மகன் பொறியலாளராக படிப்பதாக முன்னர் இங்கு யாழில் சொல்லி இருந்தீர்கள். இப்ப ஏன் வங்கியில் வேலை..???!

 

அவரவர் படித்த துறையில் வேலை செய்வது தான்.. உண்மையில்.. அவர்களுக்குப் பலமும்.. உயர்வும் தரும். அத்தோடு அந்தத் துறைக்கு ஏதேனும்.. விசேடம் நடக்கவும் உதவும். வங்கியில் வேலை செய்தும்.. முன்னுக்கு வரலாம்.. அதற்கு ஏன் பொறியியல் பட்டம்.. அதற்கு.. CIMA அப்படி இப்படி படிப்புகள்.. போதுமே..???! :rolleyes:

 

 

அவன் பொறியியலாளர் தான்

வங்கியில் பொறியியலாளர்

(தற்பொழுது பொருளாதாரச்சிக்கலுக்குப்பின் கணக்காளர்களைக்குறைத்து பொறியியலாளர்களையே அதிகம் வங்கிகள் பயன்படுத்துகின்றன. இங்குள்ள வங்கியில் (Société Générale)  மட்டும் 12 தமிழ் பொறியியலாளர்கள் வேலை செய்வதாக ஒரு தகவலை முன்னர் ஒரு இடத்தில் நான் எழுதியதாக ஞாபகம்)

 

அவனது படிப்பு

Diplôme de Licence sciences et technologies (2012)

Majeure Architecte des Systèmes d’Informations (2014)

 

இது படிப்பின் கடைசி  வருடம் என்பதால் 6 மாதம் பரீட்சார்த்துக்காகவே வங்கிக்குள் போனான்

அவர்கள் 4 பதவிகளை  அவனுக்கு பரிந்துரைத்து

ஏதாவது ஒன்றை  நீயே தெரிவு  செய்யலாம் என சொல்ல

அவன் ஒரு 50 வயசுள்ள

வேலை

வங்கி

அரசியல்

விளையாட்டு என நல்ல அனுபவம் உள்ள  ஒருவரின் கீழ்  வேலை செய்யலாம் என்று என்னிடம் கேட்டான்

உன்  விருப்பம் என நானும் தலையாட்ட அதையே  தெரிவு செய்தான்.

 

நன்றி  தம்பி  

நேரத்துக்கும் வாழ்த்துக்கும்

 

வாழ்க  வளமுடன்

Edited by விசுகு

விசுகு, உங்கள் மகனுக்கு என் இனிய வாழ்த்துக்கள். மேலும் மேலும் உயரம் எட்டி சிகரம் தொடட்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

மகனுக்கு வாழ்த்துக்கள் ஐயா, 

 
நீங்கள் பட்ட கஷ்டங்களை பிள்ளைகள் அனுபவிக்ககூடாது என அவர்களுக்காக பல விடயயங்களை தியாகம் செய்துள்ளீர்கள். உங்களுக்கும் பாராட்டுக்கள்
  • கருத்துக்கள உறவுகள்

விசுகு ஐயாவின் மகனுக்கு மென்மேலும் உயரங்களை விரைவாகத் தொட வாழ்த்துக்கள்.

நெடுக்ஸின் கேள்வி சிறு ஆச்சரியத்தை உண்டுபண்ணியது. மருத்துவத்துறையை அல்லது சட்டத்துறையைத் தேர்ந்தெடுப்பவர் அத்துறையிலேயே தொடர்ந்து வேலை செய்து இளைப்பாறுவர். எனினும் பொறியியல் துறை என்பது அடிப்படையில் கணிதவியலாகவே இருக்கும் என்பதால் எந்தத்துறையிலும் இலகுவாக நுழைந்து வேலை செய்யக்கூடியதாக இருக்கும். விசுகு ஐயாவின் மகன் பொறியியலையும் அதன் பின்னர் information system இல் master உம் செய்துள்ளார். High frequency trading மூலம் அதிக பணத்தை உழைப்பதற்கும், risk modelling, investment modelling போன்றவைக்கும் கணிதமும், கணணி அறிவும் தேவையான பொறியியலாளர்களே வங்கிகளுக்குத் தேவை. இத்தகைய வேலைகளுக்கு CIMA சரிவராது.

பெயர்போன பல்கலைக் கழகங்களில் படித்தவர்கள் பலர் பொறியியல் துறைக்குள் நுழையாது நேரடியாகவே investment banking, consultancies என்று போய் இன்று president, vice president என்று இருக்கின்றார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

விசுகு ஐயாவின் மகனுக்கு மென்மேலும் உயரங்களை விரைவாகத் தொட வாழ்த்துக்கள்.

நெடுக்ஸின் கேள்வி சிறு ஆச்சரியத்தை உண்டுபண்ணியது. மருத்துவத்துறையை அல்லது சட்டத்துறையைத் தேர்ந்தெடுப்பவர் அத்துறையிலேயே தொடர்ந்து வேலை செய்து இளைப்பாறுவர். எனினும் பொறியியல் துறை என்பது அடிப்படையில் கணிதவியலாகவே இருக்கும் என்பதால் எந்தத்துறையிலும் இலகுவாக நுழைந்து வேலை செய்யக்கூடியதாக இருக்கும். விசுகு ஐயாவின் மகன் பொறியியலையும் அதன் பின்னர் information system இல் master உம் செய்துள்ளார். High frequency trading மூலம் அதிக பணத்தை உழைப்பதற்கும், risk modelling, investment modelling போன்றவைக்கும் கணிதமும், கணணி அறிவும் தேவையான பொறியியலாளர்களே வங்கிகளுக்குத் தேவை. இத்தகைய வேலைகளுக்கு CIMA சரிவராது.

பெயர்போன பல்கலைக் கழகங்களில் படித்தவர்கள் பலர் பொறியியல் துறைக்குள் நுழையாது நேரடியாகவே investment banking, consultancies என்று போய் இன்று president, vice president என்று இருக்கின்றார்கள்.

 

பல முன்னணி முகாமைத்துவ மேதைகள்.. பொறியிலாளர்கள் என்பதையும்.. பெரிய வணிக.. முகாமைத்துவ தத்துவங்களை வகுத்தவர்கள் என்பதையும்.. முகாமைத்துவம் கற்றவன் என்ற வகையில் தெரியும். குறிப்பாக.. போட்டர் (Michael Porter) போன்றவர்கள். இன்று IT மற்றும் வியாபார முகாமைத்துவம் என்பது எல்லா நிறுவனங்களிலும் எல்லாத் துறைகளுக்கும் அவசியம் என்றாகிவிட்டது. மருத்துவத்துறை சார்ந்த கல்விகளில் கூட.. இப்போது..IT மற்றும் முகாமைத்துவக் கல்விகள் புகுத்தப்பட்டு வருகின்றன.

 

விசுகு அண்ணாவைப் பொறித்த வரை.. மகன் பொறியியலில் சிறந்து விளங்கனும் என்று ஆசைப்பட்ட ஒருவர். மற்றும் அவர் மகனின் பொறியல் படிப்புத் துறை பற்றி இப்போது தான் அறிந்து கொள்ள முடிகிறது.

 

எங்களுக்குத் தெரிய சிலர் பொறியியல் படித்துவிட்டு.. வங்கியில்.. காசாளராக கூட வேலை செய்கிறார்கள். வங்கிகளின் பெயர்.. செல்வாக்குக்காக.. அப்படி இணைந்து கொள்கிறார்கள். சம்பளம்.. வெகு கம்மி. அப்படி ஒரு நிலையோ என்று தான்.. சந்தேகத்தை வெளிப்படுத்தி இருந்தோம். அதற்கு அவர் நல்ல விளக்கம் அளித்திருக்கிறார் தானே கிருபண்ணா. :):icon_idea:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்
ஒருவனுக்கு அழிவில்லாத சிறந்த செல்வம் கல்வியே ஆகும் என்பது திருவள்ளுவரின் கூற்றுகளில் ஒன்றாகும். அத்தகைய செல்வத்தை தன்மகன் பெறுவதற்கு உதவிய விசு அவர்களுக்கும் அவர் குடும்பத்துக்கும் மனம் கனிந்த வாழ்த்துக்கள்!!
 
"அவன் பிறப்பாலேயே  ஒரு நல்ல பிள்ளை....
இதுவரை
எனக்கு பிடிக்காத எதையும் செய்யமாட்டான்
உண்மையில் இவ்வாறு பிள்ளைகள் அமைவது   தெய்வ  வரம்
அதை நான் பெற்றிருக்கின்றேன் என்று தான் சொல்வேன்
 
உழைத்ததை
எனது நேரத்தை
இந்த 4 பகுதிக்கும் கொடுத்தேன்
 
எனக்காக வாழ்ந்ததில்லை
இதுவரை எனக்கென்று நிலையான  சொத்து எதையும் பிரான்சிலோ
உலகின் எந்த மூலையிலோ வாங்கியதில்லை
வீடு உட்பட...
காரணம்
எனக்கென்று ஒரு குறியுண்டு
அது தாயகம் நோக்கி  மட்டுமே இருந்தது
இருக்கிறது
அதை  அடைய நான் சொத்து சேர்ப்பது  இடைஞ்சலாகிவிடக்கூடாது என்பதில் கண்டிப்பாக இருந்தேன்.
தேசியத்துக்காக உழைப்பவர்கள் கச்சான் வாங்கி  சாப்பிடுவதே 
வாதத்துக்குரிய  பொருளாவதை  கண்டிருக்கின்றேன்."
 
மேற்சொல்லப்பட்டுள்ள ஊட்டங்களைப் பின்பற்றும் மனிதர்களில் மனிதத்தைக் காணலாம். விசு அவர்களில் மனிதத்தைக் காண்கிறேன்.
 

விசுகு அண்ணாவுக்கும் அவர் மகனுக்கும் வாழ்த்துக்கள்...!!

வாழ்த்துக்கள் பல .....

 

 

விசுகு ஐயாவின் மகனுக்கு மென்மேலும் உயரங்களை விரைவாகத் தொட வாழ்த்துக்கள்.

நெடுக்ஸின் கேள்வி சிறு ஆச்சரியத்தை உண்டுபண்ணியது. மருத்துவத்துறையை அல்லது சட்டத்துறையைத் தேர்ந்தெடுப்பவர் அத்துறையிலேயே தொடர்ந்து வேலை செய்து இளைப்பாறுவர். எனினும் பொறியியல் துறை என்பது அடிப்படையில் கணிதவியலாகவே இருக்கும் என்பதால் எந்தத்துறையிலும் இலகுவாக நுழைந்து வேலை செய்யக்கூடியதாக இருக்கும். விசுகு ஐயாவின் மகன் பொறியியலையும் அதன் பின்னர் information system இல் master உம் செய்துள்ளார். High frequency trading மூலம் அதிக பணத்தை உழைப்பதற்கும், risk modelling, investment modelling போன்றவைக்கும் கணிதமும், கணணி அறிவும் தேவையான பொறியியலாளர்களே வங்கிகளுக்குத் தேவை. இத்தகைய வேலைகளுக்கு CIMA சரிவராது.

பெயர்போன பல்கலைக் கழகங்களில் படித்தவர்கள் பலர் பொறியியல் துறைக்குள் நுழையாது நேரடியாகவே investment banking, consultancies என்று போய் இன்று president, vice president என்று இருக்கின்றார்கள்.

 

எனது அனுபவமும் அதுவே .....பொறியியல் படிப்பது பல துறைகளில் உட்புக இலகுவாக இருக்கும் ........

  • கருத்துக்கள உறவுகள்

விசுகு அண்ணா உங்கள் மகனுக்கு வாழ்த்துக்கள்.
வாழ்க்கையில் இன்னும் முன்னேறி வெற்றி நடைபோட வாழ்த்துகின்றேன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.