Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பிணையில் வந்தார் ஜெயலலிதா!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

 பிணையில் வந்தார் ஜெயலலிதா!

 

jeya%2096589ef.jpg

 

கடும் வாதப் பிரதிவாதங்களுக்கு பின்னர் நிபந்தனைகளுடன் பிணையில் செல்ல தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு கர்நாடக உயர் நீதிமன்று இன்று பிற்பகல் உத்தரவிட்டது. சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு பெங்களூர் தனி நீதிமன்றம் 4 ஆண்டுகள் சிறை தண்டனையும், 100 கோடி ரூபா அபராதமும் விதித்து கடந்த மாதம் 27ஆம் திகதி தீர்ப்பளித்தது. இதைத்தொடர்ந்து, ஜெயலலிதா அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதேபோல் இந்த வழக்கில் தலா 4 ஆண்டுகள் சிறை தண்டனையும், தலா ரூ.10 கோடி அபராதமும் விதிக்கப்பட்ட அவரது தோழி சசிகலா, அவரது உறவினர்கள் இளவரசி, சுதாகரன் ஆகியோரும் அந்த சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த தீர்ப்பை எதிர்த்து ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேர் சார்பிலும் கடந்த மாதம் 29ஆம் திகதி கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. சொத்து குவிப்பு வழக்கு தீர்ப்பை நிறுத்தி வைக்க வேண்டும், பிணை வழங்க வேண்டும், தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என்று கோரியே இந்த மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அந்த மனுக்களை கடந்த 30ஆம் திகதி விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட விடுமுறை கால நீதிபதி ரத்தினகலா 6 ஆம் திகதிக்கு ஒத்திவைத்தார். இதற்கிடையே ஜெயலலிதாவின் வழக்கறிஞர்கள் விடுத்த கோரிக்கையை ஏற்று உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி டி.எச்.வகேலா பிறப்பித்த உத்தரவின் பேரில், மறுநாள் அதாவது கடந்த 1 ஆம் திகதி அதே நீதிபதி ரத்தினகலா முன்னிலையில் ஜெயலலிதாவின் பிணை மனு விசாரணைக்கு வந்தது. அப்போது அந்த மனுவை விசாரிக்க மறுத்துவிட்ட நீதிபதி ரத்தினகலா, அதை உயர் நீதிமன்றத்தின் வழக்கமான அமர்வுக்கு மாற்றி உத்தரவிட்டதோடு, 7 ஆம் திகதி (அதாவது இன்று செவ்வாய்க்கிழமை) மனு மீதான விசாரணை நடைபெறும் என்றும் அறிவித்தார். இந்த நிலையில் கர்நாடக உயர் நீதிமன்றில் இன்று ஜெயலலிதாவின் பிணை மனு நீதிபதி சந்திரசேகரய்யா முன்னிலையில் காலை விசாரணைக்கு வந்தது. ஜெயலலிதா சார்பில் ராம்ஜெத்மலானியும், அரசு தரப்பில் பவானிசிங்கும் முன்னிலையாகி வாதிட்டனர். முதலில் வாதிட்ட ராம் ஜெத்மலானி, "லில்லிதாமஸ், ரவி பாட்டீல் வழக்குகள், தண்டனையை நிறுத்தி பிணை வழங்கிய உதாரணங்களாக இருக்கிறன. அவைபோல இந்த வழக்கிலும் ஜெயலலிதாவுக்கு பிணைவழங்க வேண்டும். மேலும், அவரது உடல் நிலையையும் கருத்தில் கொள்ள வேண்டும். அவர் எங்கேயும் போய்விட மாட்டார். நீதிமன்றத்தில் முன்னிலையாக உத்தரவிடும்போது தவறாமல் வருவார். ஜெயலலிதா சட்டத்திற்கு கட்டுப்பட்டு நடப்பவர். எனவே அவருக்கு பிணை வழங்க வேண்டும்" என்று கோரிக்கை வைத்தார். அப்போது, 100 கோடி ரூபா அபராதம் கட்டிவிட்டீர்களாக என்று நீதிபதி கேட்டார். இதற்கு பதில் அளித்த ராம்ஜெத்மலானி, பிணை கிடைக்கும் பட்சத்தில் அபராதத் தொகையை உடனே கட்ட தயாராக இருக்கிறோம் என்றும், அரசு தரப்பு கேட்காமலேயே பிணை வழங்கலாம் என்றும், லாலு பிரசாத்துக்கு ஜாமீன் வழங்கியதுபோல் ஜெயலலிதாவுக்கும் ஜாமீன் வழங்க வேண்டும் என்று கூறி தனது முதல்கட்ட வாதத்தை நிறைவு செய்தார். தொடர்ந்து அரசு தரப்பு வழக்கறிஞர் பவானி சிங் வாதிட்டார். அப்போது, ஜெயலலிதா வெளியே வந்தால் வழக்கை திசை திருப்புவார். எனவே அவருக்கு பிணை வழங்கக் கூடாது என்றார். இதைத் தொடர்ந்து, சசிகலா மற்றும் இளவரசி தரப்பு வழக்கறிஞர் அமீத் தேசாய் வாதி்ட்டார். அப்போது, "சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவின் பினாமி சசிகலா என்பதற்கு எந்த ஆதாரமும் பெங்களூர் தனி நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படவில்லை. சொத்து சேர்க்க சசிகலா உடந்தையாக இருந்தார் என்பதை ஏற்க முடியாது. சொத்துக்கள் சந்தை மதிப்பீட்டின் படி கணக்கிடப்பட்டுள்ளது. நமது எம்.ஜி.ஆர் நாளிதழ் மூலம் சசிகலாவுக்கு வந்த வருமானம் கணக்கில் சேர்க்கப்படவில்லை என்று தெரிவித்தார். மேலும், தனது கட்சிக்காரர்களின் உடல் நிலையை முதன்மையாக நீதிமன்றம் கருத்தில் கொள்ள வேண்டும். பிணை கேட்பதற்கு அவர்களுக்கு முழு உரிமை உள்ளது. ஏனென்றால் வழக்கில் மேல்முறையீடு செய்யவும் மனு செய்துள்ளோம் என்று தேசாய் வாதிட்டார். அதனைத் தொடர்ந்து சுதாகரன் தரப்பு வழக்கறிஞர் தனது வாதத்தை தொடங்கினார். அப்போது அவர், ஜெயலலிதாவின் பினாமிகள் என்பதற்கு தெளிவான ஆதாரங்கள் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவில்லை என்று வாதிட்டார். உணவு இடைவேளைக்காக ஒத்திவைப்பு இதையடுத்து, உணவு இடைவேளைக்காக விசாரணையை ஒத்திவைத்த நீதிபதி, பிற்பகல் 2.30 மணிக்கு விசாரணை நடைபெறும் என்று அறிவித்தார். மீண்டும் 2.35 மணிக்கு விசாரணை தொடங்கியது. மீண்டும் இருதரப்பு சட்டத்தரணிகளும் தமது வாதத்தை முன்வைத்தனர். இதன்போது ஜெயலலிதாவுக்கு நிபந்தனை பிணை வழங்க ஆட்சேபணை இல்லை என்று அரசதரப்பு வழக்கறிஞர் பவானி சிங் தெரிவித்தார். இதனையடுத்து ஜெயலலிதாவை பிணையில் செல்ல நீதிபதி அனுமதித்து, அதற்கான நிபந்தனைகளையும் பட்டியலிட்டார். அத்துடன் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கும் பிணை வழங்கப்பட்டது. - See more at: http://malarum.com/article/tam/2014/10/07/6059/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9C%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE-.html#sthash.ol9fHtfM.dpuf
 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஜெ.க்கு பிணை : மகிழ்ச்சியில் தமிழகம்


தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு கர்நாடக நீதிமன்றம் நிபந்தனையுடன்  பிணை வழங்கப்பட்டுள்ளது.

ஜெயலலிதா மற்றும் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு பிணை  வழங்க தான் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்று அரசு சிறப்பு வழக்கறிஞர் பவானி சிங் திடீரென பல்டி அடித்து விட்டதால் நான்கு பேருக்கும் நிபந்தனையுடன் கூடிய பிணை வழங்கி உத்தரவிட்டது கர்நாடக உயர்நீதிமன்றம்.

இந்த தீர்ப்பிற்கு ஜெயலலிதாவுக்கு சாதகமாக சில சட்டப் பிரிவுகள் இருந்த காரணத்தாலும், அவருக்காக ஆஜரான ராம்ஜேத்மலானி பல உயர் நீதிமன்ற வழக்கின் தீர்ப்புகளை முன்வைத்து ஆணித்தரமாக வாதாடியதாலும்தான் அரசுத் தரப்பு எதிர்ப்பை, நிபந்தனை ஜாமீன் என்ற நிலைக்கு பவானி சிங் மாற்றி விட்டதாக கூறப்படுகிறது.

இதன் காரணமாகவே காலையில் எதிர்ப்பு தெரிவித்த பவானி சிங் பிற்பகலில் தனது நிலையை மாற்றிக் கொள்ளக் காரணம் என்று கூறப்படுகிறது.

இரண்டாம் இணைப்பு

ஜெயலலிதாவுக்கு கர்நாடக உயர்நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் அளித்து உத்தரவிட்டதைத் தொடர்ந்து அதிமுகவினர் கொண்டாட்டங்களில் குதித்துள்ளனர்.

 

07-admk-celebration-60.jpg

சென்னை முதல் செங்கோட்டை வரை பட்டாசுகள் வெடித்தும், இனிப்புகளை வழங்கியும் கொண்டாட்டங்களில் குதித்துள்ளனர்.
- See more at: http://onlineuthayan.com/News_More.php?id=712813523107731312#sthash.ks1LiFUS.dpuf

ஜாமீன் நிராகரிப்பு .... :D  :icon_idea:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்


சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டிக்கப்பட்டு சிறையில் இருக்கும் ஜெயலலிதாவுக்கு ஜாமீன் மறுக்கப்பட்டுள்ளது.


சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டிக்கப்பட்டு பெங்களூர் பரப்பன அக்ரஹாரச் சிறையில் இருக்கும் தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா, அவரது தோழி சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோரின் ஜாமீன் மனுக்கள் மீதான விசாரணை இந்த உத்தரவு அளிக்கப்பட்டுள்ளது.

18 ஆண்டுகளாக நடந்துவந்த இந்த வழக்கில் செப்டம்பர் 27ஆம் தேதியன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. குற்றம்சாட்டப்பட்டவர்கள் நான்கு பேருக்கும் தலா நான்காண்டு சிறை தண்டனையும் ஜெயலலிதா தவிர்த்த பிறருக்கு தலா பத்து கோடி ரூபாய் அபராதமும் ஜெயலலிதாவுக்கு 100 கோடி ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது.

சிறப்பு நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்ட இவர்கள், கர்நாடக உயர் நீதிமன்றத்தில் ஜாமீன் கோரியும் தண்டனையை நிறுத்திவைக்கக் கோரியும் மனுத்தாக்கல் செய்திருந்தனர்.

கர்நாடக நீதிமன்றங்கள் தசரா விடுமுறையில் இருந்ததால், இவர்களது மனுக்கள் கடந்த வாரம் விடுமுறைக் கால நீதிபதி ரத்னகலா முன்பாக விசாரணைக்கு வந்தபோது, அவர் இதனை வழக்கமாக விசாரிக்கும் அமர்வுக்கு மாற்றி உத்தரவிட்டார். இதையடுத்து, தசரா விடுமுறை முடிந்து நீதிமன்றம் மீண்டும் இயங்க ஆரம்பித்ததும் செவ்வாய்க்கிழமையன்று, 73வது வழக்காக நீதிபதி சந்திரசேகர ராவ் முன்பாக விசாரணைக்குவந்தது.

 

அரசு தரப்பு வாதம்

அரசுத் தரப்பின் சார்பில் சிறப்பு நீதிமன்றத்தில் வாதாடிய பவானி சிங்கே மீண்டும் ஆஜரானார். ஜெயல்லிதா சார்பாக ராம் ஜெத்மலானி ஆஜராகி வாதிட்டார்.

ஜெயலலிதா தரப்பில் ஆஜரான ஜெத்மலானி, “ஜெயலலிதா சட்டத்திற்குக் கட்டுப்பட்டு நடக்கக்கூடியவர். நீதிமன்றம் அழைக்கும்போது அவர் ஆஜராகத் தவறியதில்லை. இந்த வழக்கில் மேல் முறையீட்டு விசாரணை நடந்து முடிய பெரும் கால தாமதம் ஏற்படும். ஆகவே, அவருக்கு ஜாமீன் வழங்க வேண்டுமென” வாதிட்டார்.

சுமார் ஒரு மணி நேரம் ஜெத்மலானி வாதிட்டார். அதற்குப் பிறகு சசிகலா சார்பில் வழக்கறிஞர் அமித் தேசாய் வாதிட்டார். ஜெயலலிதாவின் பினாமியாக சசிகலா செயல்பட்டார் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை என்று அவர் வாதிட்டார். அதற்குப் பிறகு மதிய உணவிற்காக நீதிமன்றம் ஒத்திவைக்கப்பட்டது.

உணவு இடைவேளைக்குப் பிறகு நீதிமன்றம் மீண்டும் கூடியதும், ஜெயலலிதா தரப்பு வழக்கறிஞர் ராம் ஜெத்மலானி சில விளக்கங்களை அளித்தார். அதற்குப் பிறகு இளவரசி தரப்பு வழக்கறிஞர் அஷ்மத் பாஷா வாதாடினார்.

இதற்குப் பிறகு வாதாடிய அரசுத் தரப்பு வழக்கறிஞர் ஜெயல்லிதாவுக்கு நிபந்தனையுடன் கூடிய ஜாமீன் வழங்கலாம் எனத் தெரிவித்தார்.

இதையடுத்து நீதிபதி ஜெயலலிதா, சசிகலா உள்ளிட்ட நான்கு பேருக்கும் நிபந்தனை ஜாமீன் வழங்கி கர்நாடக உயர் நீதிமன்றம் உத்தரவிட்டதாக எமது இணையதளம் உட்பட பல்வேறு ஊடகங்களிலும் செய்திகள் முதலில் வெளியிடப்பட்டிருந்தது.

ஆனால் நீதிபதியின் உத்தரவானது, ஜெயலலிதாவுக்கு தற்போதைக்கு ஜாமீன் மறுக்கப்படுவதாகவும், அவரது மனு சம்பந்தமான அடுத்த விசாரணை 21ஆம் தேதி எடுத்துக்கொள்ளப்படும் என்றும் நீதிமன்றம் அறிவித்துள்ளது.
 

BBC tamil

  • கருத்துக்கள உறவுகள்

அம்மா லட்டு தின்ன ஆசையா?:D

அம்மா லட்டு தின்ன ஆசையா? :D

வடை போச்சே  :D

  • கருத்துக்கள உறவுகள்
ஜெயலலிதா சிறையில் இருந்து வெளிவருவது எப்போது? பரபரப்பு தகவல்கள்
 
பெங்களூர்: நீதிபதியின் ஜாமீன் ஆர்டர் பெங்களூர் மத்திய சிறைச்சாலைக்கு சென்றடைந்ததும் ஜெயலலிதா விடுதலையாவார். இன்று மாலை 5.30 மணிக்குள் அந்த ஆர்டர் சிறை சென்று சேர வேண்டும் என்பதே தற்போதுள்ள பரபரப்பு. ஜெயலலிதா உள்ளிட்ட நால்வர் ஜாமீன் மனு விசாரணையை நடத்திய கர்நாடக ஹைகோர்ட் நீதிபதி சந்திரசேகரா, நிபந்தனை ஜாமீன் அளித்து மதியம் 3.45 மணியளவில் உத்தரவிட்டார்.
 
இதையடுத்து தீர்ப்பு விவரத்தை முழுமையாக நீதிபதி வாசித்தார். பிறகு தீர்ப்பை டைப் செய்து, நீதிபதியின் ஆர்டரை வழங்கியதும், அந்த ஆர்டர் ஜெயலலிதா அடைக்கப்பட்டுள்ள பெங்களூர் மத்திய சிறைச்சாலைக்கு செல்ல வேண்டும். அங்கு சிறை அதிகாரிகள் ஆர்டரை பரிசீலித்து ஜெயலலிதா உள்ளிட்ட நால்வரையும் வெளியேவிடுவார்கள். ஆனால் இந்த நடவடிக்கைகள் அனைத்தும் இன்று மாலை 5.30 மணிக்குள் நடைபெற்றாக வேண்டும். ஏனெனில் அதுவரைதான் சிறை பணி நேரம். குறிப்பிட்ட நேரத்திற்குள் மத்திய சிறைச்சாலை அதிகாரிகளுக்கு ஆர்டர் சென்றடையாவிட்டால் ஜெ.விடுதலையில் தாமதம் ஏற்படும். நாளை கர்நாடகாவில் வால்மீகி ஜெயந்தியை முன்னிட்டு அரசு விடுமுறையாகும். எனவே, காலதாமதமாக ஆர்டர் சென்றடைந்தால், நாளை மறுநாள்தான் ஜெயலலிதாவை விடுதலை செய்யும் நிலை உருவாகும். எனவே தீர்ப்பு எப்போது சென்று சேரும் என்ற பரபரப்பு தொற்றிக்கொண்டுள்ளது.
 

 

  • கருத்துக்கள உறவுகள்

10592983_1481597918790248_68327600831140

  • கருத்துக்கள உறவுகள்

B :) 

  • கருத்துக்கள உறவுகள்
G - கலைஞர் :lol::D
  • கருத்துக்கள உறவுகள்

http://www.youtube.com/watch?v=8LfG-OBPLJM

 

சில நிமிடங்களில்...மறைந்த, மகிழ்ச்சி.

 

இன்னொரு காந்தை விட்டிட்டீங்களே!

  • கருத்துக்கள உறவுகள்

B+E+F :icon_idea: 

A

Z

  • கருத்துக்கள உறவுகள்

B =  Y . கோபாலசாமி..! :rolleyes::)

  • கருத்துக்கள உறவுகள்
எனக்கும்  A தான் பிடிச்சிருக்கு ........
ஓசியில தண்ணி அடிக்கலாம்.

C  இனிமேல் கொள்ளையடிக்கவும் மாட்டார் அதற்கான தேவையும் இல்லை

இதில் எவருக்கும் தகுதி இருந்தாலும் செல்வாக்கு இல்லை  :rolleyes:

07-1412653566-11copy.jpg

 

தட்ஸ்தமிழில் கண்டது....(அவங்கள் எங்கே சுட்டாங்களோ!!)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்தியா என்றால் ஊழல் தானே நினைவுக்கு வரும்! :icon_idea:

ஏன் தான் ஜெயலலிதாவின் ஊழலை தூக்கி பிடிக்கிறார்களோ தெரியவில்லை?

என்னால்  ஏதோ ஒரு அரசியல் நடவடிக்கையாகவே இதை பார்க்க முடிகின்றது. :rolleyes:

இந்தியா என்றால் ஊழல் தானே நினைவுக்கு வரும்! :icon_idea:

ஏன் தான் ஜெயலலிதாவின் ஊழலை தூக்கி பிடிக்கிறார்களோ தெரியவில்லை?

என்னால்  ஏதோ ஒரு அரசியல் நடவடிக்கையாகவே இதை பார்க்க முடிகின்றது. :rolleyes:

 

எல்லாம் 37 MP களின் எபக்டோ தெரியாது......மற்றது அம்மா (அல்லது மன்னார்குடி மாபியா) முற்பகல் செய்தது பிற்பகல் விழைந்திருகிறது...கருணாநிதி/காங்கிரஸ் காரர்கள் செய்யும் ஊழல் அரசுக்கு போகவிருக்கும் பணத்தை ஆட்டயை போடுவது ..லாபகரமான தொழிழ்களை தங்களுக்குள் அமுக்குவது (அழகிரியின் மனைவியோ..மகனின் மீதும் சொத்து புடுங்கியது தொடர்பாக வழக்குள்ளது).......அம்மா & கோ போட்டது மற்றவர்களின் சொத்துகளை அடிமாட்டு விலைக்கு புடுங்கியது....

 

நீங்கள் சொல்லுவதை பார்த்தால் இந்தியாவுக்கு போலிஸ்,கோடு ஒன்றும் தேவையில்லை....

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.