Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நின்று கொல்லும் தெய்வம் வந்து விட்டது

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நல்லையா மாஸ்ரர் எங்கட வீட்டுக்கு பக்கத்தில தான்.    சன்னாவெட்டை( அமிக மைதானமாகிவிட்டது) என்னையும் வளர்த்திருந்தது.  

பயத்தைத் தந்த இடமாகத் தெரியவில்லை! ///  குடியும் வெறியும் கோபமும் அன்று அவர்களை நிலைகுலைய வைத்திருக்கும். 

 

சண்டையின் ஆரம்ப புள்ளியே ஒரு ஆடு உரித்த நிகழ்வில்  இருந்து என்று அம்மா சொல்லி இருந்தார்.    

 

நம்ம ஏரியாவுக்கே  ஏரியா செய்ய வந்திருந்தீங்களா ....  யாருடன் அண்ணா ...

 

நல்லையா மாஸ்ரர் மிகவும் சிறந்த ஒரு கணித ஆசிரியர் எனக் கேள்விப்பட்டுள்ளேன்.

அவருடைய மகன் ஒருவர் லண்டனில் தான் இருக்கின்றார்.

நேற்கொழுதாசன் நீங்கள் கம்பர்மலை என இன்று தான் தெரியும்.

நமக்குப் பக்கத்திலையும் ஒரு கறுப்பாடு இருக்கின்றது. :D

  • Replies 53
  • Views 5.4k
  • Created
  • Last Reply

 

நமக்குப் பக்கத்திலையும் ஒரு கறுப்பாடு இருக்கின்றது. :D

 

வாத்தியார் கறுத்த கண்ணாடியை கழட்டி விட்டுப்பாருங்கோ ...  :icon_idea:  ஆடு வெள்ளையாகவும் இருக்கும்.

வரலாறு முக்கியம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
கமலம் கொலைவழக்கு மிகவும் பிரபல்யமானது. பல பத்திரிகைகளில் கற்பழித்து கொலைசெய்யப்பட்டார் என்றுதான் செய்திகள் வந்திருந்தது.ஆனால் அது உண்மையில்லையென விபரமறிந்தவர்கள் கூறக்கேட்டிருக்கின்றேன்.
 
பாலியல் நோக்கத்துடன் ஏமாற்றி அழைத்துவரப்பட்ட கமலத்தை சம்மட்டியின் மகன் வல்லுறவுக்கு முனைந்த போது.......மிகுதி எழுத விருப்பமில்லை.
 
கமலம் சரியான வாய்க்காரி என சிலர் சொல்லக்கேள்விப்பட்டுள்ளேன்.

எனக்கு தெரிய இரண்டு கொலைகள் தான் வடக்கை உலுக்கியது .ஒன்று கமலம் கொலை ,மற்றது ஆனையறவு விடுதி கொலை.இரண்டும் பத்திரிகைகளில் வாசித்ததுதான் .

யாழில் இந்த பதிவை வாசித்துவிட்டு பொலிகண்டியை சேர்ந்த ஒருவருடன் பேசினேன் சிறிது கண் கலங்கி கமலம் தனது தூரத்து உறவினர் என்றார் .வீரப்பனுக்கு தண்டனை கொடுக்கும்போது தான் அங்கு நின்றதாக சொன்னார் .யாழ்பாணம் ஹோட்டேல் பரடைஸ் வைத்திருந்தவர்கள் இவர்கள் உறவினர்கள் என்ற உதிரி செய்தியும் தந்தார் .அந்த குடும்பம் இந்த கொலையுடன் சீரழிந்து விட்டதாக மனவருத்தப்பட்டார் .

கொலைக்கு காரணமானவன் உடனேயே நோர்வே சென்றதாக நம்புவதாக சொன்னார் .

  • கருத்துக்கள உறவுகள்

இங்க  ஒருவிடயத்தை கேட்கலாம்

 

மின்கம்ப மரணதண்டனையை  இங்கு அத்தனை  பேரும் வரவேற்றுள்ளீர்கள்

அல்லது கண்டும் காணாதது   போல  இருக்கின்றீர்கள்

இது தானே உண்மை.......

  • கருத்துக்கள உறவுகள்

தவறுக்கான தண்டனை எப்படியானதாக இருந்தால் என்ன அண்ணா. தண்டிக்கப்பட வேண்டியதுதானே முக்கியம்

  • கருத்துக்கள உறவுகள்

தவறுக்கான தண்டனை எப்படியானதாக இருந்தால் என்ன அண்ணா. தண்டிக்கப்பட வேண்டியதுதானே முக்கியம்

 

 

நான் மேலே பதிவு செய்த இந்த விசயத்தை யாருமே கவனிக்க வில்லையோ?

 

குற்றம் செய்பவர்களை சட்டம் தண்டிப்பதை ஏற்கும் உறவுகள், இயக்கங்கள் தண்டிக்கும் போது ஏற்க மாட்டார்கள். வன்மமும், பழிவாங்களும் அதிகரித்து, பழிவாங்கும் நோக்குடன், தண்டித்த இயக்கத்தின் எதிர் இயக்கத்துடன் சேர்வர்.

 

மேன்முறையீடு (அப்பில்) வழிமுறைகளும் இருக்கும் நிலையில், சட்டம் படித்து, பகுத்து ஆய்ந்து நீதி வழங்குபவர்களுக்கும், இவை எதுவும் இல்லாத, துவக்கு தூக்கியதால், நாட்டாமை ஆகி தண்டனை வழங்குபவர்களுக்கும் வித்தியாசம் உள்ளது என்பதை கவனிக்க மாட்டீர்களா ?
 
மேற்குலகில் வாழும் நீங்களே இப்படி கருத்து தெரிவித்தால் எப்படி?
 
அல்லது அந்த பியர் கள்வர் உங்களை கடுப்பாக்கி, 'இவனை கட்டி வைத்து சுடவேண்டும்' என்ற மன நிலைக்கு கொண்டு வந்து விட்டாரோ?
  • கருத்துக்கள உறவுகள்

தவறுக்கான தண்டனை எப்படியானதாக இருந்தால் என்ன அண்ணா. தண்டிக்கப்பட வேண்டியதுதானே முக்கியம்

 

இனி

திரி சூடுபிடிக்கும்.... :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

இங்க  ஒருவிடயத்தை கேட்கலாம்

 

மின்கம்ப மரணதண்டனையை  இங்கு அத்தனை  பேரும் வரவேற்றுள்ளீர்கள்

அல்லது கண்டும் காணாதது   போல  இருக்கின்றீர்கள்

இது தானே உண்மை.......

 

 

என்னைத் தவிர..... :o

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இங்க  ஒருவிடயத்தை கேட்கலாம்

 

மின்கம்ப மரணதண்டனையை  இங்கு அத்தனை  பேரும் வரவேற்றுள்ளீர்கள்

அல்லது கண்டும் காணாதது   போல  இருக்கின்றீர்கள்

இது தானே உண்மை.......

வெளியுலகம் தெரியாமல், ஜனநாயகம் என்றால் என்னவென்று தெரியாமல், பொலிஸ் நீதிமன்றங்களைக் காணாத காலத்தில், தண்டனை கொடுத்தவர்கள் எம்மினத்தை அடிமைத் தளையில் இருந்து மீட்டு சொர்க்க பூமியில் வாழ வைப்பார்கள் என்ற நம்பிக்கையில் அவர்களின் அதிகாரத்தை ஏற்று வாழ்வதைப் பெருமையாக எண்ணியிருந்தோம். ஆனால் அதன் பின்னர் வெளியுலகம் தெரிந்து, ஜனநாயகம் புரிந்து, அறிவு கொஞ்சம் வளர்ந்ததும் தடி எடுத்தவன் எல்லாம் தண்டல்காரனாக மாற முடியாது என்பதையும் புரிந்துகொண்டோம்.

நீங்கள் இப்போதும் அந்தக்காலத்திலேயே உறைந்து உள்ளீர்கள். ஆனால் பிரான்சில் இருக்கின்றீர்கள். சட்டம் புரிந்தமாதிரிச் சிலவேளை "சட்டப்படி குற்றம்" என்று வார்த்தைகளை அள்ளிவிடுவீர்கள்.

யார் வரவேற்றார்கள் ? விளங்கினால் சரி .

அதுவும் எய்தவனை விட்டு அம்பை கொண்டுவந்து தண்டனை கொடுத்தவர்களை நினைக்க சிரிப்புத்தான் வந்தது .

  • கருத்துக்கள உறவுகள்

கூட்டிக் குடுத்தது மாத்திரமா வீரப்பன் செய்தது.அதற்கு தூக்குத் தண்டனையா?...எப்படி உண்மையான கொலைகாரனை தப்ப விட்டார்கள்?...சம்மட்டியாரின் மகன் யாரைக் கல்யாணம் முடித்து எங்கே சந்தோசமாய் இருக்கிறாரோ? :rolleyes: யாருக்குத் தெரியும்.இதில் எங்கே தெய்வம் நின்று கொண்டது?

  • கருத்துக்கள உறவுகள்

வெளியுலகம் தெரியாமல், ஜனநாயகம் என்றால் என்னவென்று தெரியாமல், பொலிஸ் நீதிமன்றங்களைக் காணாத காலத்தில், தண்டனை கொடுத்தவர்கள் எம்மினத்தை அடிமைத் தளையில் இருந்து மீட்டு சொர்க்க பூமியில் வாழ வைப்பார்கள் என்ற நம்பிக்கையில் அவர்களின் அதிகாரத்தை ஏற்று வாழ்வதைப் பெருமையாக எண்ணியிருந்தோம்.

 

நாங்கள்  இந்த திரியில் அந்தக்காலம் சம்பந்தமாகத்தான் பேசுகின்றோம்

அதை ஆதரித்தீர்களா? இல்லையா என்பதே கேள்வி.

 

ஆனால் அதன் பின்னர் வெளியுலகம் தெரிந்து, ஜனநாயகம் புரிந்து, அறிவு கொஞ்சம் வளர்ந்ததும் தடி எடுத்தவன் எல்லாம் தண்டல்காரனாக மாற முடியாது என்பதையும் புரிந்துகொண்டோம்.

நீங்கள் இப்போதும் அந்தக்காலத்திலேயே உறைந்து உள்ளீர்கள். ஆனால் பிரான்சில் இருக்கின்றீர்கள். சட்டம் புரிந்தமாதிரிச் சிலவேளை "சட்டப்படி குற்றம்" என்று வார்த்தைகளை அள்ளிவிடுவீர்கள்.

 

எங்கு சென்றாலும்

என்ன படித்தாலும் அன்று நாமும் சேர்ந்து எடுத்த முடிவுகளை  அல்லது ஆதரித்த முடிவுகளை  மறுக்கமுடியாது

அதை நாம் ஏற்கின்றோம்

என்றும் ஏற்போம்

நாம் சுற்றவாளி என கரணமடிக்கும் குணத்தை வெளியில் வந்து தொற்றிக்கொள்ளவிரும்பவில்லை

 

மற்றும்படி

சட்டம் ஒரு இருட்டறை

அதற்குள் பல வேளைகளில் வெளிச்சம் வருவதேயில்லை

நாலு பேருக்கு நன்மை வரும் என்றால்

வெளிச்சத்தை நாமே கொடுப்போம்

இன்றும்...........

 

Edited by விசுகு

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நாங்கள் இந்த திரியில் அந்தக்காலம் சம்பந்தமாகத்தான் பேசுகின்றோம்

அதை ஆதரித்தீர்களா? இல்லையா என்பதே கேள்வி.

எங்கு சென்றாலும்

என்ன படித்தாலும் அன்று நாமும் சேர்ந்து எடுத்த முடிவுகளை அல்லது ஆதரித்த முடிவுகளை மறுக்கமுடியாது

அதை நாம் ஏற்கின்றோம்

என்றும் ஏற்போம்

நாம் சுற்றவாளி என கரணமடிக்கும் குணத்தை வெளியில் வந்து தொற்றிக்கொள்ளவிரும்பவில்லை

பொலிஸ், நீதித்துறை செயற்படாத காலங்களில் மின்கம்பங்களில் மண்டையில் போட்டுக் குற்றச் செயல்களைத் தண்டித்தை அந்தக் காலத்தில் ஏற்றுக்கொண்டுதான் இருந்தோம். ஆனாலும் சில குற்றமற்றவர்கள் அல்லது மிகப்பெரிய குற்றங்களைப் புரியாதவர்கள் கொல்லப்பட்டபோது விமர்சனங்களை வைக்கத் தவறவில்லை. மேலும் அந்தக் காலத்தில் சிறுவர்களாக இருந்ததால் உலகம் பிடிபடவில்லை. அதனால் எல்லாமே சரியாகத் தெரிந்தது.

இப்போது அந்தக் காலத்தில் செய்தவை எல்லாம் சரியல்ல என்று உணரும்போது சுயவிமர்சனம் தேவைப்படுகின்றது. ஆனால் அந்தக் காலத்தில் ஆதரித்ததால் இப்போதும் அவற்றினைத் தவறு என்று ஏற்றுக்கொள்ளாமல் சரி என்று நிறுவித் தூய்மைவாதியாகக் காட்டிக்கொள்வது ஒரு பயனையும் தராது. அனுபவத்தில் இருந்து பாடம் கற்காமல் அழுங்குப்பிடியோடு இருந்தால் நாசம்தான் உருவாகும் என்பதை கண்முன்னே பார்த்தும் திருந்தாவிட்டால் ஒன்றும் செய்யமுடியாது!

  • கருத்துக்கள உறவுகள்

நான் தொடாந்து பத்திரிகை வாசிக்க வைத்த வழக்கு இது.

  • கருத்துக்கள உறவுகள்

இதே கதையை யாழ் உறவு சின்னக்குட்டி  அல்லது நாகேஷ்   பலவருடங்களுக்கு முன்னர் யாழில் எழுதியிருந்தார் .. வீரப்பன் போடப்பட்டது பற்றி  ஒரு பதிவு எழுதுவதாக அன்று எழுதியிருந்தேன்  இன்றுவரை எழுதவில்லை...  யாழை உலுக்கிய கொலைகளில் இதுவும் கோகிலா ம்பாள் வழக்கும் முக்கியமானது ..

 

  • கருத்துக்கள உறவுகள்

இதே கதையை யாழ் உறவு சின்னக்குட்டி  அல்லது நாகேஷ்   பலவருடங்களுக்கு முன்னர் யாழில் எழுதியிருந்தார் .. வீரப்பன் போடப்பட்டது பற்றி  ஒரு பதிவு எழுதுவதாக அன்று எழுதியிருந்தேன்  இன்றுவரை எழுதவில்லை...  யாழை உலுக்கிய கொலைகளில் இதுவும் கோகிலா ம்பாள் வழக்கும் முக்கியமானது ..

 

இதே கதையை யாழ் உறவு சின்னக்குட்டி  அல்லது நாகேஷ்   பலவருடங்களுக்கு முன்னர் யாழில் எழுதியிருந்தார் .. வீரப்பன் போடப்பட்டது பற்றி  ஒரு பதிவு எழுதுவதாக அன்று எழுதியிருந்தேன்  இன்றுவரை எழுதவில்லை...  யாழை உலுக்கிய கொலைகளில் இதுவும் கோகிலா ம்பாள் வழக்கும் முக்கியமானது ..

 

கமலம் கொலைவழக்கு குறித்து சிறு வயதில் அறிந்துள்ளேன். அதேவேளை  கோகிலாம்பாள் வழக்குபற்றியும் கேள்விபட்டேன். தனது கள்ள காதலனுடன் சேர்ந்து தனது கணவனை வெட்டி புதைத்த கோகிலாம்பாளுக்காக திரு அமிர்தலிங்கம்  ஆஜராகி வழக்கறிஞராக வாதாடியதாக கேள்விபட்டேன். மேலதிக விபரங்கள் தெரிந்தால் எழுதுங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

இந்த சம்பவம் நடந்தது என்று சிறு வயதில் கேள்விப்பட்டிருந்தேன். ஆனால் விபரங்களை அறிந்துகொள்ளும் வயதில் இருக்கவில்லை. கமலம் பொலிகண்டியைச் சேர்ந்தவர் என்பது மட்டும் தெரியும். இந்திய இராணுவம் நிலைகொண்டிருந்த காலத்தில்தான் வீரப்பனுக்கு நெற்றியில் பொட்டு வைத்தார்கள் என்று நினைக்கின்றேன். சகாறா அக்காதான் சரியா இல்லையா என்று சொல்லவேண்டும்.

 

 

இந்திய இராணுவம் வருவதற்கு முன்னரே இச்சம்பவம் நடந்தது. 84 இன் பிற்பகுதி அல்லது 85 ஆக இருக்கவேண்டும்

 

  • கருத்துக்கள உறவுகள்

இந்திய இராணுவம் வருவதற்கு முன்னரே இச்சம்பவம் நடந்தது. 84 இன் பிற்பகுதி அல்லது 85 ஆக இருக்கவேண்டும்

 

 

கமலம் கொலை 78 - 79 காலப் பகுதியில் நடந்தது. வீரப்பன் கொலைதான் நீங்கள் சொல்லும் காலம்..

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
கூகிள்,விக்கிபீடியா மற்றும் இதர இணையத்தளங்களின் ஆதாரங்களை வைத்து வாதாடுவதை இனிமேற்காலங்களில் தவிருங்கள். தெரியாவிட்டால் அந்த திரியிலிருந்து  ஒதுங்கியிருங்கள்.
 
 எனக்கு ஒண்டும் தெரியாது..... நான் அப்ப சின்னனாயிருந்தனான் எண்டு சொல்லிப்போட்டு....எல்லாம் தெரிஞ்சமாதிரி கதை விடப்படாது. :icon_idea:  :icon_idea:  :icon_idea:
  • கருத்துக்கள உறவுகள்

 

கூகிள்,விக்கிபீடியா மற்றும் இதர இணையத்தளங்களின் ஆதாரங்களை வைத்து வாதாடுவதை இனிமேற்காலங்களில் தவிருங்கள். தெரியாவிட்டால் அந்த திரியிலிருந்து  ஒதுங்கியிருங்கள்.
 
 எனக்கு ஒண்டும் தெரியாது..... நான் அப்ப சின்னனாயிருந்தனான் எண்டு சொல்லிப்போட்டு....எல்லாம் தெரிஞ்சமாதிரி கதை விடப்படாது. :icon_idea:  :icon_idea:  :icon_idea:

 

 

சாமியார்  சும்மா பதறக் கூடாது.....
 
நான் இந்த விடயங்கள் அண்ண சொல்லக் கேட்டு பின் அது குறித்து வாசித்து இருந்தேன். சுமோ அக்காவுக்கு, அவரின் நகைச்சுவையான கேள்விக்கான பதிலில் இருந்து நீங்கள் வேற ட்ரக்கில போனால் எப்படி? 
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

 

சாமியார்  சும்மா பதறக் கூடாது.....
 
நான் இந்த விடயங்கள் அண்ண சொல்லக் கேட்டு பின் அது குறித்து வாசித்து இருந்தேன். சுமோ அக்காவுக்கு, அவரின் நகைச்சுவையான கேள்விக்கான பதிலில் இருந்து நீங்கள் வேற ட்ரக்கில போனால் எப்படி? 

 

 

முனியர்! தொப்பியை நீங்களே எடுத்து போட்டதிற்கு நான் பொறுப்பல்ல.....

நான் எழுதியது பொதுப்படையாக.... 

  • கருத்துக்கள உறவுகள்

முனியர்! தொப்பியை நீங்களே எடுத்து போட்டதிற்கு நான் பொறுப்பல்ல.....

நான் எழுதியது பொதுப்படையாக.... 

 

அப்ப அந்த தொப்பி எனக்கு இல்லையோ? சா... :o  :icon_idea:

 

ஆ, அதானே... என்னெண்டு சொன்னியல் அண்ண.. :icon_mrgreen:
 
அதெல்லாம் இருக்கட்டும், உந்த விசயங்கள் எல்லாம் இன்டர்நெட் ல இருக்குதோ??
 
இருந்தால், வாசிச்சுப்போட்டு இன்னும் கொஞ்சம் விலாவாரியாப் போட்டுத் தாக்கலாம்.... அதுதான்  :lol:  :D

Edited by Nathamuni

இந்திய இராணுவம் வருவதற்கு முன்னரே இச்சம்பவம் நடந்தது. 84 இன் பிற்பகுதி அல்லது 85 ஆக இருக்கவேண்டும்

சகாரா இச்சம்பவம் நடைபெற்றது 1976 ம் ஆண்டு என்று எனது தாயார் மூலம் அறிந்தேன். நிச்சயமாக 80 களில் இல்லை.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.