Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கிறிபத்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வருடம் பிறந்தவுடன் உறவுகளுக்கு தொலைபேசி மூலமும்,  இணைய நண்பர்களுக்கு இணையத்தின் மூலமும்,மின்னஞ்சல் மூலம் பாடசாலை நண்பர்களுக்கும்,முகப்புத்தகத்தின் ஊடாக முகபுத்தக நண்பர்களுக்கும் புது வருட வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டேன்.பதிலுக்கு அவர்களும் நன்றிகள் உங்களுக்கும் எங்களது புத்தாண்டு வாழ்த்துக்கள் என்றனர்.சிலர் இது எங்கன்ட புத்தாண்டு இல்லை ஆரியரின்ட புத்தாண்டு என்றனர்.அப்படி சொன்னவரில் கந்தரும் ஒருத்தர்.இவர் உப்படிதான் சொல்லுவார் என்று தெரிந்து அவரை கண்டவுடன் அண்ணே ஆரிய புத்தாண்டு வாழ்த்துக்கள் என்றேன்..நன்றி ஆனால் நான் தமிழர் புத்தாண்டைதான் கொண்டாடுவேன் இவங்கன்ட புத்தாண்டை கொண்டாமாட்டேன் என்றார். நானும் ஒவ்வொரு முறையும்  சித்திரை புத்தாண்டு,தமிழ் புத்தாண்டு,சிங்கள புத்தாண்டு ,தமிழ்சிங்கள புத்தாண்டு எனஒவ்வோரு விதமாகசொல்லி பார்ப்பேன் ஆனால் மனுசன் அசையாது இது எங்கன்ட புத்தாண்டில்லை என அடம்பிடிப்பார்.அதுதான் இந்த முறை ஆரிய புத்தாண்டு என சும்மா சொல்லிப்பார்த்தேன்.அதுக்கும் மனுசன் அசையவில்லை.அவருக்கும் வயசு போய்கொண்டிருப்பதால் தொடர்ந்து அவருக்கு  தொல்லை கொடுப்பதில்லை என முடிவெடுத்தேன்.

வேலையால் வந்து மனிசி கோவிலில் எடுத்து வைத்திருந்த மருத்துநீரை சம்பூ போல தலையில் வைத்து தடவி ஒரு ல்ல முழுக்கு முழுகி போட்டு புது வேஸ்டியை அணிந்து எம் பெருமான் சிட்னிமுருகனிட்ட ஒரு விசிட் அடிக்க போனேன்,கோவிலுக்கு கிட்ட ஒரே போக்குவரத்து நெரிசலாக இருந்தது ,எனது கார் மெல்ல மெல்ல ஊர்ந்து சென்றது.போக்குவரத்து நெரிசலுக்கு காரணம் எம்பெருமானை புத்தாண்டு தினத்திற்கு தரிசிக்க வந்த பக்தர்களின் வாகனங்களால் தான் ஏற்பட்டது என்பது பின்புதான் புரிந்தது.கோவில் வாசலில் "கார் பார்க் வுள்" என ஆங்கிலத்தில் எழுதி போர்ட் வைத்திருந்தார்கள்..

இன்று நடைதான் முடிந்த முடிவு என நினைத்தபடி குடும்பத்தினரை கோவில் வாசலில் இறக்கிவிட்டு காரை மீண்டும் கோவிலுக்கு வெளியே கொண்டு வந்து, அருகில் உள்ள பாதையில் நிறுத்திவிட்டு   முருகனை தரிசிக்க ஒடிவந்தேன் .கோவிலில் அறிந்தோர் எல்லாம் புதுவருட வாழ்த்து சொல்ல பதிலுக்கு நானும் "தங்க்யூ செம் டு யூ" என்று தேவாரம் போல எல்லொருக்கும் சொல்லிபடியே  முருகனை  பார்த்து  கைகூப்பி  அரோகரா சொல்லுவதற்கு பதிலாக புத்தாண்டு வாழ்த்துகள் என வாய்தடுமாறி சொல்ல சுதாகரித்து  மீண்டும் "அரோகா சிட்னி முருகனுக்கு அரோகரா" சொல்லியபடியே சுற்றிவந்து ,பிரசாதம் வாங்குமிடத்துக்கு சென்றேன்.

அங்கு நீண்ட வரிசை இருந்தது.அதில் நின்றால் முழு பிரசாதமும் கிடைக்காது என்ற எண்ணத்தில் குறுக்கால போக முடிவேடுத்து ,வரிசையில் தெரிந்தவர்கள் யாராவது நிற்கிறார்களா என பார்த்தேன் .வரிசையின் நடுவில் கந்தர் நின்றார் ,அவருக்கு அருகில் சென்று "அண்ணே புது வருசம் எப்படி போகுது" என்று கேட்டபடியே உள்நுழைந்து கொண்டேன்.

"ல்லாய் போகுது நீ சூழியன் மெல்லமாய்வந்து உள்ளே புதுந்திட்டாய்"

"ஒம்மண்ணெ ஒரு அலுவலாய் அவசரம் போக வேணும் அதுதான்"

பிரசாதங்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்தபடியால் மெல்ல மெல்ல வரிசை ஊர்ந்து சென்றது. ஒரு மாதிரி பிரசாத மேசையருகே வந்து கையில் இருந்த கோப்பையை நீட்டினேன் பூரி,பொங்கல்,லட்டு,சதுரமாக வெட்டிய சோத்துக்கட்டி,இன்னும் பெயர் தெரியாத பல பொருட்களும் தந்தார்கள்.

"அண்ணே என்ன இது "கிறிபத்" மாதிரிகிடக்கு" என்று சதுர சோத்து கட் "என்ன அண்ணே இன்றைக்கு பிரசாதம் கொஞ்சம் தூக்கலா இருக்கு"

"வருசப்பிறப்பு என்று போட்டு சனம் அள்ளி கொண்டு வந்திருக்கு "

"உனக்கு தெரியுமே சிங்களவ‌ரும்  இப்ப சிட்னி முருகனை கும்பிட வருயினமல்லோ,அவையள் கொண்டுவந்ததுதான் உது அவையளின்ட புதுவருடமும் இன்றைக்கு தானே"

"அண்ணே உந்த வருசப்பிறப்பை தவிர எங்களுக்கும் அவங்களுக்கும் வேறு ஒன்றில்லையும் ஒற்றுமையில்லையே...அது எப்படி வருசப்பிறப்பு மட்டும் பொதுவா கிடக்கு?"

" நான் எத்தனை வருசமா சொல்லுறன் அது ஆரிய புத்தாண்டு என்று நீ தான் கேட்கிறாயில்லை"

"ஆரிய புத்தாண்டு என்றியள்,வட இந்தியன் ஒருத்தனும் கொண்டாடுறாங்களில்லை"

"ஏன் இல்லை ,ஞாயிற்றுக்கிழமை பங்காளி காரங்கள் ஒலிம்பிக் பார்க்கில கொண்டாடுகிறாங்கள் ,"

" என்ன அண்ணே பாங்காளி எல்லாம் முஸ்லிம்கள் அவங்கள் எப்படி இந்துக்களின் கொண்டாடுவினம்"

"இந்தியாவில மேற்கு வங்காளத்தில் இருக்கிறவையள்  இந்துக்கள் அவையள் தான் விமரிசையாக கொண்டாடினம், பங்காளிகளின்ட பாஷைக்கும்,சிங்களத்திற்கும் தொடர்பு இருக்கு,அதோட அவங்களும் காளியை கும்பிடுறவங்கள்,சிங்களவங்களும் காளியை கும்பிடுறாங்கள் நாங்களும் கும்பிடுறம்,உவன் விஜயனும் அந்த பக்கதிலைலிருந்துதான் அகதியாக கள்ளத்தோணியில் சிறிலங்காவுக்கு வந்திருக்க வேணும்,பாளி ,சிங்கம் ,காளி ,சித்திரை புதுவருடம் எல்லாம் பங்காளிகாரங்களுடன் தொடர்புடையைவை"

என்று ஒரு விரிவுரை நடத்திய கந்தர்  உவங்கள் கிறிபத் கொடுத்தவங்கள் கட்ட சம்பொல்லையும் கொடுத்திருந்தால் நல்லாய் இருந்திருக்கும் என கிறிபத்தை சாப்பிட்ட படியே சொன்னார்.

" அண்ணே கோவிலில் வைத்து உப்படி கதைக்க கூடாது ,அதுக்கு மாசி போடுறவையள் அல்லோ"

"மாசியை போடாமல் சம்பலை கொடுக்கலாம் தானே,பூரி,லட்டு இப்படி எத்தனையோ கொடுக்கினம் சம்பல் கொடுத்தா என்ன?"

" கோவில்காரர் விட மாட்டினம்"

"அவங்களை பற்றி கதைக்காதே ,எனக்கு கோபம் வரும்"என்றவர் மிகபெரிய ஏப்பம் ஒன்றை விட்டபடியே ,இரவு சாப்பாட்டு இன்றைக்கு தேவையில்லை வா போய் கையை கழுவுவோம் என என்னை அழைத்தார்

இருவரும் கையை கழுவி விட்டு வீடு செல்லத்தாயாரானோம்.

"நாளைக்கு சிட்னி கிறிஸ்தவ தேவாலயத்தில தமிழ் சிங்கள புதுவருடம் கொண்டாடினம் வாறீயோ போவம்"

"என்ன அண்ணே தேவாலத்திலயோ,சேர்ச்சுக்கும் சித்திரை வருசப்பிறப்புக்கு என்ன சம்பந்தம்?"

"சிட்னியில் இருக்கின்ற எங்கன்ட மேட்டுக்குடிகளும்,அவங்கன்ட மேட்டுக்குடிகளும் இப்ப நல்லிணக்கத்துக்கு ஓடி திரியினம் அந்த முயற்சியின் ஒரு செயல் வடிவம் தான் இது"

"சேர்ச் என்ற படியால் கேக் தான் கொடுப்பினம்"

"சீ சீ அங்க கிறிபத்தும் கட்ட சம்பலும் கொடுப்பினம் ,உனக்கு ஒருவிசயம் தெரியுமே அதிக எண்ணிக்கையிலான  தமிழர்களும் சிங்களவர்களும் ஒன்று கூடுமிடம் சேர்ச்சு தான் அவர்களை பெளத்த அடையாளமான கிறிபத் மூலம் ஒன்றி ணைக்கலாம்"

"உதுல உவ்வளவு விசயமிருக்கோ,நான் நல்லிணக்க விளையாட்டுக்கு வரவில்லை நீங்கள் போறதென்றால் போய்யிட்டுவாங்கோ" என சொல்லி அவரிடமிருந்து விடை பெற்றேன்.

காரில் வீடு செல்லும் பொழுது சம்சாரம் கேட்டார் ஞாயிற்றுக்கிழமை சாய் பஜனையில் தமிழ்சிங்கள புத்தாண்டு கொண்டாடினம் வார முடியுமோ என்று ,மூன்று மாதத்திற்கு முதல் தானே  கிறிமஸ்ஸும் ஆங்கில் புத்தாண்டும் கொண்டாடினீங்கள் பிறகென்ன இப்ப தமிழ் சிங்கள புத்தாண்டு என கேட்க,உங்களுக்கு விருப்பம்மென்றால் வாங்கோ சும்மா விசர் கதைகளை கதையாதையுங்கோ என்ற வர்

.நான் வரவில்லை என்று சொல்ல மெளனமாக வீடு வரை வந்தார்.

.ஞாயிற்றுகிழமை பத்து மணியளவில் முகம் கழுவிய பின்பு கோப்பியை குடிக்க குசினிக்குள் போனேன் .

"மில்க் ரைஸும் சம்பலுமிருக்கு  சாப்பிடுங்கோ"

"மில்க் ரைசோ"

"அது தான் சிங்கள ஆட்களின் பிரசாதம்,என்ன என்று சொல்லுறது"

" கிறிபத்தோ"

"எப்ப தொடக்கம் கிறிபத்தை பிரசாத லிஸ்ட்டில் சேர்த்தனீங்கள்"

"ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம் தொடங்கீட்டிங்களா உங்கன்ட அறுவையை,தயிர் ரைஸ் ,புளிரைஸ்,லெமன் ரைஸ் எல்லாம் பிரசாதமாக இருக்கும் பொழுது ஏன் மில்க் ரைஸ் இருக்கமுடியாது???,உங்களுக்கு சிங்களிஸ் மீது ஒரு கறள் அதுதான் உப்படி"

 

 

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, putthan said:

கோவிலில் அறிந்தோர் எல்லாம் புதுவருட வாழ்த்து சொல்ல பதிலுக்கு நானும் "தங்க்யூ செம் டு யூ" என்று தேவாரம் போல எல்லொருக்கும் சொல்லிபடியே  முருகனை  பார்த்து  கைகூப்பி  அரோகரா சொல்லுவதற்கு பதிலாக புத்தாண்டு வாழ்த்துகள் என வாய்தடுமாறி சொல்ல சுதாகரித்து  மீண்டும் "அரோகா சிட்னி முருகனுக்கு அரோகரா" சொல்லியபடியே சுற்றிவந்து ,பிரசாதம் வாங்குமிடத்துக்கு சென்றேன்.

 

அங்கு நீண்ட வரிசை இருந்தது.அதில் நின்றால் முழு பிரசாதமும் கிடைக்காது என்ற எண்ணத்தில் குறுக்கால போக முடிவேடுத்து ,வரிசையில் தெரிந்தவர்கள் யாராவது நிற்கிறார்களா என பார்த்தேன் .வரிசையின் நடுவில் கந்தர் நின்றார் ,அவருக்கு அருகில் சென்று "அண்ணே புது வருசம் எப்படி போகுது" என்று கேட்டபடியே உள்நுழைந்து கொண்டேன்.

 

"ல்லாய் போகுது நீ சூழியன் மெல்லமாய்வந்து உள்ளே புதுந்திட்டாய்"

அருமை புத்தன், நன்றாக உள்ளது.tw_blush:

  • கருத்துக்கள உறவுகள்

கதை அந்தமாதிரி புத்தன்....! ஏனோ தெரியாது மனிசிமாரிட்ட மட்டும் ஜம்பம் பலிப்பதில்லை....!  tw_blush:

1 hour ago, putthan said:

 

பேஷ் பேஷ் ரொம்ப நன்னா இருக்குது 

வாழ்த்துக்கள்

On 4/24/2016 at 10:16 AM, ஜீவன் சிவா said:

பேஷ் பேஷ் ரொம்ப நன்னா இருக்குது 

வாழ்த்துக்கள்

உண்மைதான். சிட்னி கோசிப்பில் கிறுக்கத்தொடங்கிய புத்தனின் கதைசொல்லும் ஆர்வம் (அதற்கு முன்னே ஆரம்பித்து இருக்கலாம், ஆனால் சிட்னி கோசிப்தான் ஆரம்பபுள்ளியாக இலகுவில் இனங்காண உதவுகின்றது) இப்போது பல படிமுறைகளில் வளர்ச்சியடைந்து திறமையான சிறுகதையாசிரியரின் நிலைக்கு வந்துள்ளது. நான் ஆரம்பத்திலிருந்து புத்தனின் எழுத்துக்களை வாசித்து வந்துள்ளேன் என்றவகையில் இந்த வளர்ச்சி எனக்கு கண்கூடாக தெரிகின்றது. நிறுத்தற்குறிகள் தட்டச்சு செய்யும்போது முன்பின் நகர்வது தவிர வேறு குறைகளை நான் இப்போது காணவில்லை. 

புத்தன் கதைகள் எழுதும்போது ஐபாட் பயன்படுத்துகின்றீர்களா? அல்லது மேசைக்கணணியா?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

காய் புத்தன்! கிரிபத் அந்தமாதிரி tw_thumbsup: ....ஐ லைக் யூ :cool:

  • கருத்துக்கள உறவுகள்

உங்களுக்கு ஆரிய புத்தாண்டு வாழ்த்துகள் புத்தன் அண்ணா 

கதையும் கிரிபத்தும் ஆஹா ஓகோ??

  • கருத்துக்கள உறவுகள்
On 24/4/2016 at 2:33 PM, putthan said:

"ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம் தொடங்கீட்டிங்களா உங்கன்ட அறுவையை,தயிர் ரைஸ் ,புளிரைஸ்,லெமன் ரைஸ் எல்லாம் பிரசாதமாக இருக்கும் பொழுது ஏன் மில்க் ரைஸ் இருக்கமுடியாது???,உங்களுக்கு சிங்களிஸ் மீது ஒரு கறள் அதுதான் உப்படி"

ஒரு கறள் இல்லை

ஒட்டமுடியாத 

மனதுக்கு புலப்படாத பல கறள்கள் கிடக்கு...

இங்கயும் கடைக்கு வந்தா

அவையும் ஒரு மாதிரி பார்ப்பினம்

நானும் தான்...

நன்றி  கிறுக்கலுக்கு சீ

கிரிபத்துக்கு புத்தர்

தொடர்ந்து தாங்கோ...

சிலவேளை ருசி பட்டு நாங்களும் மாறலாம்..

Edited by விசுகு

  • கருத்துக்கள உறவுகள்

"சிட்னியில் இருக்கின்ற எங்கன்ட மேட்டுக்குடிகளும்,அவங்கன்ட மேட்டுக்குடிகளும்":unsure: 

இப்படி அவுசிஸிலும் உள்ளதா?

  • கருத்துக்கள உறவுகள்

கதை வழக்கம் போல,,,,அந்த மாதிரி!

ஆனால் இந்தக் கதையில் வரும் 'கந்தரை' ஒருக்காச் சந்திக்க வேண்டும் போல உள்ளது!

நம்ம 'கந்தப்பு' இல்லைத் தானே?

தொடர்ந்து எழுதுங்கள் புத்தன்!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
On 24/04/2016 at 10:45 PM, தமிழ் சிறி said:

அருமை புத்தன், நன்றாக உள்ளது.tw_blush:

நன்றிகள் சிறி 

On 24/04/2016 at 11:52 PM, suvy said:

கதை அந்தமாதிரி புத்தன்....! ஏனோ தெரியாது மனிசிமாரிட்ட மட்டும் ஜம்பம் பலிப்பதில்லை....!  tw_blush:

நன்றிகள் suvy...24/7 அவையளோட தான் இருப்பு .....அதுதான்tw_tounge_wink:

On 24/04/2016 at 0:16 AM, ஜீவன் சிவா said:

பேஷ் பேஷ் ரொம்ப நன்னா இருக்குது 

வாழ்த்துக்கள்

நன்றிகள் ஜீவன்

On 25/04/2016 at 7:14 AM, கலைஞன் said:

உண்மைதான். சிட்னி கோசிப்பில் கிறுக்கத்தொடங்கிய புத்தனின் கதைசொல்லும் ஆர்வம் (அதற்கு முன்னே ஆரம்பித்து இருக்கலாம், ஆனால் சிட்னி கோசிப்தான் ஆரம்பபுள்ளியாக இலகுவில் இனங்காண உதவுகின்றது) இப்போது பல படிமுறைகளில் வளர்ச்சியடைந்து திறமையான சிறுகதையாசிரியரின் நிலைக்கு வந்துள்ளது. நான் ஆரம்பத்திலிருந்து புத்தனின் எழுத்துக்களை வாசித்து வந்துள்ளேன் என்றவகையில் இந்த வளர்ச்சி எனக்கு கண்கூடாக தெரிகின்றது. நிறுத்தற்குறிகள் தட்டச்சு செய்யும்போது முன்பின் நகர்வது தவிர வேறு குறைகளை நான் இப்போது காணவில்லை. 

புத்தன் கதைகள் எழுதும்போது ஐபாட் பயன்படுத்துகின்றீர்களா? அல்லது மேசைக்கணணியா?

நன்றிகள் கலைஞன் ..வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும்...சிறுகதை எழுத்தாளர் என்று சொல்லிப்போட்டியள் ...இனி எழுத்தாளர் விழாக்களில் துணிந்து பங்குபற்றலாம்....மடிக்கணனியைதான் பாவிக்கிறேன்.....:rolleyes:

On 26/04/2016 at 11:21 AM, குமாரசாமி said:

காய் புத்தன்! கிரிபத் அந்தமாதிரி tw_thumbsup: ....ஐ லைக் யூ :cool:

நன்றிகள் குமாரசாமி .....வ‌ருகைக்கும் விருப்பத்திற்க்கும்

On 26/04/2016 at 0:16 PM, முனிவர் ஜீ said:

உங்களுக்கு ஆரிய புத்தாண்டு வாழ்த்துகள் புத்தன் அண்ணா 

கதையும் கிரிபத்தும் ஆஹா ஓகோ??

நன்றிகள் முனீவர் ஜீ....உங்களுக்கும் எனது ஆரிய புத்தாண்டு வாழ்த்துக்கள் ..

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
On 26/04/2016 at 8:13 PM, விசுகு said:

ஒரு கறள் இல்லை

ஒட்டமுடியாத 

மனதுக்கு புலப்படாத பல கறள்கள் கிடக்கு...

இங்கயும் கடைக்கு வந்தா

அவையும் ஒரு மாதிரி பார்ப்பினம்

நானும் தான்...

நன்றி  கிறுக்கலுக்கு சீ

கிரிபத்துக்கு புத்தர்

தொடர்ந்து தாங்கோ...

சிலவேளை ருசி பட்டு நாங்களும் மாறலாம்..

நன்றிகள் விசுகு வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும்.....கிறிபத்தை ருசிக்க‌லாம் தப்பில்லை அதற்காக எங்கன்ட புக்கையை கை விடமுடியாது:rolleyes:

On 26/04/2016 at 8:23 PM, colomban said:

"சிட்னியில் இருக்கின்ற எங்கன்ட மேட்டுக்குடிகளும்,அவங்கன்ட மேட்டுக்குடிகளும்":unsure: 

இப்படி அவுசிஸிலும் உள்ளதா?

நன்றிகள் கொழும்பான்....ஏன் இல்லை.....இருக்கு

3 hours ago, சுவைப்பிரியன் said:

கதை அந்தமாதிரி :)

நன்றிகள் சுவைப்பிரியன்

2 hours ago, புங்கையூரன் said:

கதை வழக்கம் போல,,,,அந்த மாதிரி!

ஆனால் இந்தக் கதையில் வரும் 'கந்தரை' ஒருக்காச் சந்திக்க வேண்டும் போல உள்ளது!

நம்ம 'கந்தப்பு' இல்லைத் தானே?

தொடர்ந்து எழுதுங்கள் புத்தன்!

நன்றிகள் புங்கையுரன்.....கந்தப்பு சின்ன பெடியன்....கந்தரை நீங்கள் அதிகம் கண்டிருக்கமாட்டியள்... 

  • கருத்துக்கள உறவுகள்

புத்து கிரிபத்தை விட 25 வருடத்திற்கு மேல் தேடிக் கொண்டிருக்கும்

மருத்து நீர் ரொம்பவும் பிடித்திருக்கு.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
23 hours ago, ஈழப்பிரியன் said:

புத்து கிரிபத்தை விட 25 வருடத்திற்கு மேல் தேடிக் கொண்டிருக்கும்

மருத்து நீர் ரொம்பவும் பிடித்திருக்கு.

நன்றிகள் ஈழப்பிரியன்,வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும்....சிட்னி முருகன் புண்ணியத்தில் மருத்து நீர் எங்களுக்கு ஓவ்வோரு வருட‌மும் கிடைக்குது

  • கருத்துக்கள உறவுகள்

புத்தா கதை நன்று, தொடருங்கள், உங்களுக்கு துரும்பு கிடைச்சா காணும், கதையாக்கிவிடுகின்றீர்கள்

  • கருத்துக்கள உறவுகள்

கதை அந்தமாதிரித்தான் இருக்கின்றது. சிங்களவர்களுடன் நல்லிணக்கமாகப் போவது எல்லா இடங்களிலும் எல்லா மட்டங்களிலும் நடக்கின்றது. மேற்குலகோடு நல்லுறவைப் பேணும் ஐதேக இப்படியான விடயங்களை ஊக்குவிக்கின்றது போலுள்ளது. சிட்னி முருகனும் சிங்களவர்களின் தெய்யோவாக வந்துவிட்டாராக்கும். இனி புலம்பெயர் மேட்டுக்குடி தமிழர்களும் கறுவாக்காட்டுப் பக்கம் போய் நல்லிணகத்தைக் உறுதியாக்கி 1955 க்கு முந்தைய இலங்கையை உருவாக்கவேண்டியதுதான் மிச்சமாய் உள்ளது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, கிருபன் said:

கதை அந்தமாதிரித்தான் இருக்கின்றது. சிங்களவர்களுடன் நல்லிணக்கமாகப் போவது எல்லா இடங்களிலும் எல்லா மட்டங்களிலும் நடக்கின்றது. மேற்குலகோடு நல்லுறவைப் பேணும் ஐதேக இப்படியான விடயங்களை ஊக்குவிக்கின்றது போலுள்ளது. சிட்னி முருகனும் சிங்களவர்களின் தெய்யோவாக வந்துவிட்டாராக்கும். இனி புலம்பெயர் மேட்டுக்குடி தமிழர்களும் கறுவாக்காட்டுப் பக்கம் போய் நல்லிணகத்தைக் உறுதியாக்கி 1955 க்கு முந்தைய இலங்கையை உருவாக்கவேண்டியதுதான் மிச்சமாய் உள்ளது.

நல்லிண‌க்கமோ சொல்லி வேலையில்லை...மேட்டுக்குடிகளும் இனிமேல் மேட்டுக்குடியாக வருவதற்கு முயற்சி செய்வோரும் நல்லிண‌க்கத்திற்காக "தீயா" வேலை செய்கின்றார்கள்... 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.