Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஆண்மகனின் பேறுகாலம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஆண்மகனின் பேறுகாலம்

காலை அலுவலகம் செல்கையில்:
எனக்கு தேதி தள்ளி போகுது. Pregnancy Kit வாங்கிட்டு வாங்க. 

இரவு 2 மணி:
அவர்: ஒரு வேளை உண்டாயிருந்தா என்ன பண்றது?
அவள்: பெத்துகிற நானே கவலை படல.உங்களுக்கு என்ன? தூங்குங்க. 

விடியற்காலை 5 மணி:
அவர்: போய் பாத்துட்டு வாயேன். பயமா இருக்கு. 

5:10 மணி:
அவள்: இந்தாங்க நீங்களே பாத்துக்கோங்க.
அவர்: (கண்களில் கண்ணீருடன்) கவலைப்படாத, நான் உன்ன பத்திரமா பாத்துக்கிறேன். 
அவள்: பாத்துக்காம இருந்து தான் பாரேன். 1f603.png:D

2 ஆம் மாதம்:
அவள்: Doctor checkup க்கு appointment போட்டியா?
எனக்கு பயங்கரமா தலை சுத்துது.
எந்திரிக்கவே முடிய மாட்டேங்குது.
இடுப்பெல்லாம் வலிக்குது.
அவர்: நீ rest எடு. நான் பாத்துக்கிறேன். 

3 ஆம் மாதம்:
அவள்: மருத்துவமனைக்கு கூட வருவ தானே?
அந்த கோழியை தின்னுட்டு என் பக்கத்துல வராத. நாத்தம் தாங்கல.
அந்த folic acid மாத்திரை எல்லாம் என் பக்கம் நீட்டாதே. வாந்தி வருது.
நீ முன்ன பின்ன வாந்தி எடுத்திருக்கியா?
அவர்: இல்ல. நான் வாந்தி எடுக்காமலேயே 28 வயசு வரைக்கும் வளந்துட்டேன். எப்படி இருக்கும் சொல்லு?
அவள்: கர்ப்பம் ஆகி வாந்தி எடுத்திருக்கியா ? அப்டியே அடிவயிறுல இருந்து வலிக்குது. 1f641.png:(
அவர்: சரி. படுத்துக்கோ. ஒன்னும் சாப்பிட வேண்டாம். 
அவள்: அப்போ நா பட்டினியா இருந்தா பரவால்ல. நீ மட்டும் கோழி சாப்பிடுவ. 

4 ஆம் மாதம்:
இரவு 3 மணி:
அவள்: எனக்கு பசிக்குது. பிரட் எடுத்துட்டு வரியா?
அவர்: (தூக்க கலக்கத்தில்) போறேன். 
வருகையில்: Bread, Jam, Nutella, பழங்கள் , தண்ணீர் , பழச்சாறு .
அவள்: 1f62e.png:O

5 ஆம் மாதம்:
அவள்: கால் எல்லாம் எப்படி வலிக்குது தெரியுமா? கைல, கால்ல எல்லாம் நீர் போடுது. மோதிரம் கூட போட முடில.
அவர்: பாப்பா வளருது. அந்த எடைய தூக்க முடியாம தான் கால் வலிக்குது. நான் அமுத்தி விடறேன்.
அவள்: என்ன இப்படி அமுக்கற? நீ அமுக்கவே வேண்டாம். வலிக்குது. எங்க நல்லா அமுக்குனா, இவ சும்மா சும்மா நம்மள அமுக்க சொல்லிடுவாளோனு தானே, வேணும்னு இப்படி வலிக்கிற மாதிரி அமுக்குற? 

6 ஆம் மாதம்:
அவள்: முக்கி முனகி எந்திரிக்க முனைகையில் 
அவர்: என்னாச்சு? வலிக்குதா? விடிஞ்சிருச்சா? ambulance கூப்பிடவா? தண்ணி வேணுமா? கொஞ்சம் பொறுத்துக்கோ.
அவள்: யோவ், எதுக்கு இவ்ளோ சத்தம்? chu chu போகணும், எந்திரிக்க முடில. 
அவர்: இப்போ தானே போன? அதுக்குள்ளயா? நான் வேணும்னா Adult Diaper வாங்கி தரவா? இப்படி 10 தடவை எந்திரிக்க வேண்டாம்.
அவள்: (முறைத்தபடி) மூடிட்டு தூங்கிடு. இல்ல சாவடிச்சுடுவேன். 

7 ஆம் மாதம்:
அவர்: பக்கத்தில் அமர்ந்து பார்க்கிறார்.
அவள்: எதுக்கு என்ன பாக்குற? எதுக்கு சும்மா பாக்குற? வேற எங்கயாவது பாரு. நான் தான் கிடைச்சேனா பாக்க? 
அவர்: பாத்தது ஒரு குத்தமா? அதுக்கு ஏன் அழற?
அவள்: நான் அப்படி தான் அழுவேன். நீ ஏன் என்ன பாக்குற? நா அழுதா உனக்கு என்ன? இந்த வீட்ல அழ கூட உரிமை இல்லையா? நான் எங்க வீட்டுக்கு போறேன். எனக்கு எங்க அம்மா வேணும். 
அவர்: சரி. நான் போறேன். உன்ன பாக்கல.
அவள்: ஆமா. நான் தான் இப்போ குண்டாயிட்டேன். அசிங்கமா இருக்கேன். எப்படி என்ன எல்லாம் பாக்க தோணும். நீ மட்டும் நல்லா ஒல்லியா இருக்க . போ போ. என்ன பாக்காத. 

8 ஆம் மாதம்:
நடுஇரவில்:
அவள்: ஏன் தூங்குற?
அவர்: இப்போ நான் தூங்கிறது பிடிக்கலையா? இல்ல உனக்கு தூக்கம் வரலையா?
அவள்: ரெண்டுமே இல்ல. நீ ஏன் குப்புற படுத்து தூங்குற? நான் மட்டும் அப்படி தூங்க முடில. நீயும் தூங்காத. என் புள்ள மட்டும் இல்ல.உன் புள்ள கூட தான். 
அவர்: சரி. நான் திரும்பியே படுத்துகிறேன். 

9 ஆம் மாதம்:
அவள்: ரொம்ப வலிக்கும் தானே? எப்படி தாங்கிப்பேனோ? ரொம்ப பயமா இருக்கு.
அவர்: பயப்படாத. நான் பக்கத்துலயே இருப்பேன். நான் பாத்துக்கிறேன்.
அவள்: நீ பக்கத்துலயே இருப்ப. ஆனா உனக்கு வலிக்குமா? எனக்கு தான வலிக்கும். என் வலிய நீ வாங்கிப்பியா? இல்லேல. அப்போ பேசாத. வலில இருக்கும் போது, "push, push" னு கூவுனா, கொரவளைய கடிச்சு வெச்சுடுவேன். 
அவர்: சரி மா, நான் எதும் சொல்ல மாட்டேன்.
அவள்: ஒரு பாப்பா நான் பெத்துக்கிறேன். அடுத்தது, நீ தான் பெத்துக்கணும். என்னால முடியாது.
அவர்: கண்டிப்பா நானே பெத்துக்கிறேன். இந்த பாப்பா மட்டும் நீ பெத்துக்கோ. 

10 ஆம் மாதம்:
அவள்: என்னங்க, வலிக்குது. தாங்க முடில. ஏதாவது ஊசி போட்டு என்ன கொன்னுடு. இதுக்கு மேல முடியாது. 
அவர்: கவலைப்படாத மா. நான் பக்கத்துலயே இருக்கேன். எங்கயும் போகல. கொஞ்சம் நேரம் தான். 

கூடவே இருந்து, முதல் மாதத்திலுருந்து , பத்தாம் மாதம் வரை, நாம் செய்யும் அலப்பறைகளை பொறுத்து, நமக்கு வேண்டியவற்றினை செய்து , நம்மிடம் திட்டும் வாங்கி, ஏன் திட்டுகிறாள், அழுகிறாள் என தெரியாமல் பேந்த பேந்த முழித்து , அதற்கும் நம்மிடம் வாங்கி கட்டிக்கொண்டு , எந்த நேரத்தில் வலி வருமோ என நாம் எண்ணுவதைக் காட்டிலும், எப்போதும் பாதி தூக்கத்தில் இருந்து, இயற்க்கை அழைப்புக்கு அழைத்துச் செல்வதிலிருந்து சகலமும் செய்து, " கொசு கடித்தாலே கூவுவாள், பேறுகாலத்தை எப்படி தாங்கி கொள்வாளோ " என பயந்து, வலி வந்தவுடன் , தாயும் சேயும் பத்திரமாக இருக்க வேண்டுமே எனப் பிரார்த்தித்து, எங்கே பயத்தை முகத்தில் காண்பித்தால் அவளும் பயந்து விடுவாளோ என மனதிற்குள்ளே வைத்து, வெளியே சிறு புன்னகையுடன், அவளுக்கு தைரியம் சொல்லி, தாயுடன் சேர்ந்து , மனதளவில் இரண்டு மடங்காய் சோர்ந்து, கடைசியில் குழந்தை பிறந்தவுடன் , தன் இரு உயிர்களையும் முத்தமிட்டு, கண்களினோரம் கண்ணீருடன், வெளியே வந்து, உறவினர்களுக்கு நா தழுதழுக்க செய்தியை சொல்லுமிடத்தில் இருக்கிறது "ஆண்களின் பேறுகாலம்" . 

பெண்கள் தரும் இன்னல்களை முகஞ்சுளிக்காமல் பொறுத்துக்கொள்ளும் ஒவ்வொரு ஆணும் ஒரு தாய் தான். 

பெண்கள் பேறுகாலம் என்னமோ பத்து மாதம் தான். ஆனால் ஆண்களுக்கு வாழ்நாளெல்லாம்.. 1f49d.png?1f49d.png?1f49d.png?

உபயம் - முகநூல்

மு

Edited by MEERA

  • கருத்துக்கள உறவுகள்

அப்படியே நெஞ்சைத் தொட்டுட்டீங்கள்  மீரா....!  tw_blush:

  • கருத்துக்கள உறவுகள்

மீரா....  இணைத்த  கட்டுரை, கற்பனை  இல்லை. உண்மை என்பதற்கு.... 
உலகின் முதல் குழந்தை பெற்று எடுத்த... ஆண் இவர்தான். :)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நான் பட்ட பாடு இருக்கெல்லே....

சொல்லி வேலையில்லை....பேசாமல் நானே பத்து பிள்ளையை பெத்துப்போட்டு சிம்பிளாய் இருக்கலாம் போலைகிடக்கு....:(

  • கருத்துக்கள உறவுகள்

இதெல்லாம் இயற்கயின் நியதி என்று எண்ணுகிறேன் .....

எபோதுமேபார்த்திருக்காத இருவர் ....
ஒரு 25-30 வயதில் சந்தித்து ..... மீதி வாழ்க்கை முழுவதையும் 
இவர் அவருக்காகவும் ...... அவர் இவருக்கு ஆகவும் 
வாழுதல் என்பது ... அவ்வளவு எளிதில்லை.
அதற்கு ஒரு ஆழமான அன்பு வேண்டும் .......

அன்பு ஆழமாக போக வேண்டும் என்றால் புரிந்துணர்வு என்பது 
அதைவிட ஆழமாக முன்னதாக போக வேண்டும் 
இப்படி ஒரு அந்நிய உன்னியத்தை .... இப்படியான தருணங்கள்தான் தோற்றுவிக்கின்றன.

(எங்கோ படித்தது .... ஓரூ மனிதனால் ஒரு குறிப்பிட்ட அளவு வலியையே தங்க முடியும் 
அந்த எல்லை தாண்டும்போது மூளை போதிய அளவு ஓட்ஸிசனை பெற்றுக்கொள்ளாது   என்றும் மரணம் 
நிகழும் என்று. ஆனால் பிரவச வலி அதை விட பெரியதென்றே மருத்துவர்கள் கூறுகிறார்கள். ஆக உங்களுடைய மனைவி மார் என்னமோ செத்து பிழைக்கிறார்கள் என்பது உண்மையே. அந்த வலிக்காக என்ன வேண்டுமானாலும் செய்யாலாம் என்றுதான் எண்ணுகிறேன்) 

இருவருக்கிடையில் அழமான அன்பு வந்துவிட்டால் ....
உலகில் ஒவொன்றும் அழகுதான் அதன் பின்பு. அவர்கள் இன்னொருவருக்கு 
எப்போதும் தீங்கு இழைப்பதை நான் பார்ப்பது அரிது. 
அவர்கள் அழகா வாழ்கிறார்கள் என்பதை விட பெரிய விடயம் ...
இந்த உலகையும் அழகாக பார்த்து கொள்கிறார்கள் என்பதுதான். 

கார்ல் மார்கஸின் கதைகள் படிக்கும்போது எல்லாம் ....
அவருடைய மனைவி எவ்வளவு தியாகம் செய்து இருக்கிறாள் என்பது 
மூளைக்கு வந்து வந்து போகும் ......... அந்த காதலை மட்டும் அவள் தியாகம் செய்திருப்பின் 
அவளது வாழ்க்கை ராணி போன்றது ..... அவள் ராணியாகத்தானே இருந்தாள். 
ஆனால் தோற்று போனாலும் ..... ஒரு மார்க்கத்தை உலகிற்கு கொடுத்த வரலாறில் வாழ்கிறார். 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

நான் பட்ட பாடு இருக்கெல்லே....

சொல்லி வேலையில்லை....பேசாமல் நானே பத்து பிள்ளையை பெத்துப்போட்டு சிம்பிளாய் இருக்கலாம் போலைகிடக்கு....:(

குசா உட்பட யாழ்கள உறுப்பினர்கள் எல்லோரும் தமது அனுபவங்களை எழுதலாமே

  • கருத்துக்கள உறவுகள்

ஆணென்ற திமிரில், செருக்கில் முதலிரவிலிருந்து, ஆணின் கட்டை சுடுகாட்டில் வேகும் வரை குடும்பத்தில் இத்தடியன்கள் செய்யும் வீட்டு வன்முறைகளை,இன்னல்களை கணக்கெடுத்தால் பெண் ஜென்மாய் ஏன் பூமில் பிறந்தோமென ஒவ்வொரு பெண்ணும் அவள் வாழ்க்கையில், இல்லற வாழ்வில் பல நேரங்களில் நிச்சயம் நினைத்திருப்பாள்..! (சில விதிவிலக்குகள் இருக்கலாம்)

ஆனால் உலகில் 99% ஆணாதிக்கம் தான்..!

எந்த ஆண், பத்துமாதம் வரை தன் மனைவியை கண்ணும் கருத்துமாய் பார்த்துக்கொள்கிறான்? மனைவி கருவை சுமக்க ஆரம்பித்தவுடன் அடுத்த பெண்ணை நோக்கி வலை வீசுவதும், ஆறு மாதத்தில் மனைவியை அவளின் பெற்றோரிடம் அனுப்பிவிட்டு கூத்தடிக்கும் பெரும்பான்மையான ஆணுலகம் பிரசவத்தின்போது மனைவியின் அருகிலா இருந்து கவனித்துக்கொள்கிறது?

8 hours ago, Maruthankerny said:

(எங்கோ படித்தது .... ஓரு மனிதனால் ஒரு குறிப்பிட்ட அளவு வலியையே தங்க முடியும் அந்த எல்லை தாண்டும்போது மூளை போதிய அளவு ஓட்ஸிசனை பெற்றுக்கொள்ளாது என்றும் மரணம் நிகழும் என்று. ஆனால் பிரவச வலி அதை விட பெரியதென்றே மருத்துவர்கள் கூறுகிறார்கள். ஆக உங்களுடைய மனைவிமார் என்னமோ செத்து பிழைக்கிறார்கள் என்பது உண்மையே. அந்த வலிக்காக என்ன வேண்டுமானாலும் செய்யாலாம் என்றுதான் எண்ணுகிறேன்)

இதுதான் உண்மை! 

நன்றி மருது..:)

 

 

Edited by ராசவன்னியன்

  • கருத்துக்கள உறவுகள்

இப்படி ஒவ்வொரு கணவனும் வாழ்வானா?

ரொம்பவும் வெகுளித்தனம் நிறைந்த குடும்பமாகவும் பல இடங்களில் சம்பாசணைகள் சிரிப்புமாக இருந்தது.

பிரசவம் என்றது ஏறத்தாள கண்ணி வெடியில் அகப்பட்ட ஜீப் மாதிரி தான்.ஒவ்வொரு பெண்ணும் புதிய பிறவி எடுக்கிறார்கள்.

பாராட்டுக்கள் மீரா.

  • கருத்துக்கள உறவுகள்

என்னைப் பொறுத்தவரையில் என்னை ஒரு பெண்ணிய வாதியாகவோ அல்லது ஒரு ஆணிய வாதியாகவோ கருதுவதில்லை!
எனினும், பிரசவம என்பது கடுமையானது என்றும்....அந்த வலி மிகவும் தாங்கவியலாதது என்றும் எனது சமூகத்தால் எனக்குக் கூறப்பட்டது!
நாற்பது நாட்கள் வரை....பாய்த் தடுக்குகளால் மூடப்பட்ட கூட்டுக்குள் ஒரு பெண் முடங்குவதும், ஊரிலுள்ள வேப்ப மரங்கள் அவ்வளவும் துகிலுரியப் பட்டு நிர்வாணமாக நிற்பதுவும், சீரகம் தான் ஒரு சர்வரோக நிவாரணியாகக் கருதப்பட்டு உபயோகிக்கப் படுவதும் சரியென்று என்னால் ஏற்றுகொள்ள முடியவில்லை!
ஒட்டகச் சிவிங்கி அல்லது காட்டு விலங்குகள் குட்டி போடும் போது.. சில மணி நேரங்களுக்குள் அவை நடக்க வேண்டும். இல்லாவிடின் அவை வேறு விலங்குகளின் உணவாகும் சந்தர்ப்பங்களே அதிகம்!
ஆபிரிக்க தேசமொன்றில்...சில மாணவிகள் படிக்கும் காலங்களில் குழந்தைகள் பெற்றுக்கொள்வது மிகவும் சாதாரணமானது! அத்துடன் அந்தக் குழந்தைகள்..அந்த மாணவியின் தந்தையாரின் குடும்பப் பெயரில்,, பதியப் படவும் அவர்களது சட்டத்தில் இடமுண்டு! ஒரு குழந்தை  பிறந்து மூன்றாவது நாளன்றே ..அந்த மாணவியால் வழக்கம் போல பாடசாலைக்கு வந்து தொடர்ந்து கல்வியைத் தடற முடிகின்றது!
பிரான்சில் ஒரு அரசியல் வாதியான பெண்மணியோருவர் ..குழந்தை பிறந்து மூன்றாவது நாளே பாராளுமன்றத்துக்குச் சமூகமளிக்க முடிந்தது!
ஒரு காரணத்துக்காகத் தான் பொருளாதார நிலையில் இரு துருவங்களான இரண்டு தேசங்களிலிருந்து உதாரணங்களை எடுத்தேன்!
சில சிக்கலான பிரசவங்களைத் தவிர்த்து.....நாம் எதற்காக...பெண்களின் பிரசவங்களை...அதி உன்னத தியாகங்களாகவும் ....மிகப் பெரிய சாதனைகளாகவும் கருதுகின்றோம்?
ஒரு ஆணும் பெண்ணும்...சரி பாதியாக இணைந்து சேர்வதே குடும்பம் என்பது! அது இயற்கையானது!
நாங்கள் எமது பெண்களுக்கு மற்றைய சமூகங்களை விடவும் அதிக சலுகைகள் கொடுப்பதால் தான்...அவர்கள் மேலும்...மேலும் தங்கள் கணவர்களிடம் எதிர்பார்க்கின்றார்கள் போல உள்ளது!
இந்தக் கருத்து ஒரு விவாதத்துக்காக மட்டுமே!
எல்லோரும் தடி தண்டுகளைத் தூக்கிக் கொண்டு அடிக்க வரக் கூடாது!
பி.கு: நானும் இந்த விசயத்தில நல்லா நொந்து நூலாகிப் போனவன்!

Edited by புங்கையூரன்
கூகிள் தட்டச்சு

3 hours ago, புங்கையூரன் said:

எல்லோரும் தடி தண்டுகளைத் தூக்கிக் கொண்டு அடிக்க வரக் கூடாது!
பி.கு: நானும் இந்த விசயத்தில நல்லா நொந்து நூலாகிப் போனவன்!

எனது முதற்பிள்ளைக்கும் ரொம்ப கஷ்ட்டப்பட்டு அடிவாங்கி + பேச்சு வாங்கி இரவு முழுவதும் முழித்திருந்து, பிறந்ததும் கதிரையில் அணைத்தபடியே பல மணி நேரம் தூக்கம். திடீரென முழிச்சு பாத்தால் கையில் மகன் - வந்த நேர்ஸிடம் கேட்டேன், பிள்ளை விழுந்திருந்தா என்னவாகியிருக்கும் என்று.  அவளும் சிரித்தபடியே  "FATHER'S INSTINCT " என்றாள்.

மகனை மனைவிக்கு அருகே படுக்க வைத்துவிட்டு ஒரு தம் அடிக்க வெளியே போக - அங்கு சில மணி நேரத்துக்கு முன்னர் பிள்ளை பிரசவித்த ஒரு பெண் வந்திருந்தார். கற்பத்தின்போது தம் அடிக்கவில்லை - 7 மாதத்தின் பின்னர் முதலாவது என்று அளவளாவினார்.

எது  சரி எது பிழை எனக்கு தெரியாது.

ஆனால் எனது மகளும் தான் பூப்பெய்தியதற்காக ஒரு நாளும் பாடசாலைக்கு போகாமல் விட்டதில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

நான் கொஞ்சம் புதுனம் பார்க்கிறன் சரியோ  tw_blush:

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, புங்கையூரன் said:

என்னைப் பொறுத்தவரையில் என்னை ஒரு பெண்ணிய வாதியாகவோ அல்லது ஒரு ஆணிய வாதியாகவோ கருதுவதில்லை!
எனினும், பிரசவம என்பது கடுமையானது என்றும்....அந்த வலி மிகவும் தாங்கவியலாதது என்றும் எனது சமூகத்தால் எனக்குக் கூறப்பட்டது!
நாற்பது நாட்கள் வரை....பாய்த் தடுக்குகளால் மூடப்பட்ட கூட்டுக்குள் ஒரு பெண் முடங்குவதும், ஊரிலுள்ள வேப்ப மரங்கள் அவ்வளவும் துகிலுரியப் பட்டு நிர்வாணமாக நிற்பதுவும், சீரகம் தான் ஒரு சர்வரோக நிவாரணியாகக் கருதப்பட்டு உபயோகிக்கப் படுவதும் சரியென்று என்னால் ஏற்றுகொள்ள முடியவில்லை!
ஒட்டகச் சிவிங்கி அல்லது காட்டு விலங்குகள் குட்டி போடும் போது.. சில மணி நேரங்களுக்குள் அவை நடக்க வேண்டும். இல்லாவிடின் அவை வேறு விலங்குகளின் உணவாகும் சந்தர்ப்பங்களே அதிகம்!
ஆபிரிக்க தேசமொன்றில்...சில மாணவிகள் படிக்கும் காலங்களில் குழந்தைகள் பெற்றுக்கொள்வது மிகவும் சாதாரணமானது! அத்துடன் அந்தக் குழந்தைகள்..அந்த மாணவியின் தந்தையாரின் குடும்பப் பெயரில்,, பதியப் படவும் அவர்களது சட்டத்தில் இடமுண்டு! ஒரு குழந்தை  பிறந்து மூன்றாவது நாளன்றே ..அந்த மாணவியால் வழக்கம் போல பாடசாலைக்கு வந்து தொடர்ந்து கல்வியைத் தடற முடிகின்றது!
பிரான்சில் ஒரு அரசியல் வாதியான பெண்மணியோருவர் ..குழந்தை பிறந்து மூன்றாவது நாளே பாராளுமன்றத்துக்குச் சமூகமளிக்க முடிந்தது!
ஒரு காரணத்துக்காகத் தான் பொருளாதார நிலையில் இரு துருவங்களான இரண்டு தேசங்களிலிருந்து உதாரணங்களை எடுத்தேன்!
சில சிக்கலான பிரசவங்களைத் தவிர்த்து.....நாம் எதற்காக...பெண்களின் பிரசவங்களை...அதி உன்னத தியாகங்களாகவும் ....மிகப் பெரிய சாதனைகளாகவும் கருதுகின்றோம்?
ஒரு ஆணும் பெண்ணும்...சரி பாதியாக இணைந்து சேர்வதே குடும்பம் என்பது! அது இயற்கையானது!
நாங்கள் எமது பெண்களுக்கு மற்றைய சமூகங்களை விடவும் அதிக சலுகைகள் கொடுப்பதால் தான்...அவர்கள் மேலும்...மேலும் தங்கள் கணவர்களிடம் எதிர்பார்க்கின்றார்கள் போல உள்ளது!
இந்தக் கருத்து ஒரு விவாதத்துக்காக மட்டுமே!
எல்லோரும் தடி தண்டுகளைத் தூக்கிக் கொண்டு அடிக்க வரக் கூடாது!
பி.கு: நானும் இந்த விசயத்தில நல்லா நொந்து நூலாகிப் போனவன்!

ஒவ்வொருவருத்தருடைய உடம்பு வாசியும் வித்தியாசமானது...காப்பிலி பெண்கள் செக்ஸ் செய்வது மாதிரி தமிழ்ப் பெண்களால் செக்ஸ் செய்ய முடியுமா?...தவிர,நம் பெண்கள் மிகவும் மென்மையானவர்கள்:mellow:

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, புங்கையூரன் said:

என்னைப் பொறுத்தவரையில் என்னை ஒரு பெண்ணிய வாதியாகவோ அல்லது ஒரு ஆணிய வாதியாகவோ கருதுவதில்லை!
எனினும், பிரசவம என்பது கடுமையானது என்றும்....அந்த வலி மிகவும் தாங்கவியலாதது என்றும் எனது சமூகத்தால் எனக்குக் கூறப்பட்டது!
நாற்பது நாட்கள் வரை....பாய்த் தடுக்குகளால் மூடப்பட்ட கூட்டுக்குள் ஒரு பெண் முடங்குவதும், ஊரிலுள்ள வேப்ப மரங்கள் அவ்வளவும் துகிலுரியப் பட்டு நிர்வாணமாக நிற்பதுவும், சீரகம் தான் ஒரு சர்வரோக நிவாரணியாகக் கருதப்பட்டு உபயோகிக்கப் படுவதும் சரியென்று என்னால் ஏற்றுகொள்ள முடியவில்லை!
ஒட்டகச் சிவிங்கி அல்லது காட்டு விலங்குகள் குட்டி போடும் போது.. சில மணி நேரங்களுக்குள் அவை நடக்க வேண்டும். இல்லாவிடின் அவை வேறு விலங்குகளின் உணவாகும் சந்தர்ப்பங்களே அதிகம்!
ஆபிரிக்க தேசமொன்றில்...சில மாணவிகள் படிக்கும் காலங்களில் குழந்தைகள் பெற்றுக்கொள்வது மிகவும் சாதாரணமானது! அத்துடன் அந்தக் குழந்தைகள்..அந்த மாணவியின் தந்தையாரின் குடும்பப் பெயரில்,, பதியப் படவும் அவர்களது சட்டத்தில் இடமுண்டு! ஒரு குழந்தை  பிறந்து மூன்றாவது நாளன்றே ..அந்த மாணவியால் வழக்கம் போல பாடசாலைக்கு வந்து தொடர்ந்து கல்வியைத் தடற முடிகின்றது!
பிரான்சில் ஒரு அரசியல் வாதியான பெண்மணியோருவர் ..குழந்தை பிறந்து மூன்றாவது நாளே பாராளுமன்றத்துக்குச் சமூகமளிக்க முடிந்தது!
ஒரு காரணத்துக்காகத் தான் பொருளாதார நிலையில் இரு துருவங்களான இரண்டு தேசங்களிலிருந்து உதாரணங்களை எடுத்தேன்!
சில சிக்கலான பிரசவங்களைத் தவிர்த்து.....நாம் எதற்காக...பெண்களின் பிரசவங்களை...அதி உன்னத தியாகங்களாகவும் ....மிகப் பெரிய சாதனைகளாகவும் கருதுகின்றோம்?
ஒரு ஆணும் பெண்ணும்...சரி பாதியாக இணைந்து சேர்வதே குடும்பம் என்பது! அது இயற்கையானது!
நாங்கள் எமது பெண்களுக்கு மற்றைய சமூகங்களை விடவும் அதிக சலுகைகள் கொடுப்பதால் தான்...அவர்கள் மேலும்...மேலும் தங்கள் கணவர்களிடம் எதிர்பார்க்கின்றார்கள் போல உள்ளது!
இந்தக் கருத்து ஒரு விவாதத்துக்காக மட்டுமே!
எல்லோரும் தடி தண்டுகளைத் தூக்கிக் கொண்டு அடிக்க வரக் கூடாது!
பி.கு: நானும் இந்த விசயத்தில நல்லா நொந்து நூலாகிப் போனவன்!

ரோமியோ நாமே நமக்கானவற்றை வரையறுக்கிறோம் இயற்கை எவருக்கும் விதிவிலக்கல்ல. உங்கள் கருத்துடன் உடன்படுகிறேன்

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ரதி said:

ஒவ்வொருவருத்தருடைய உடம்பு வாசியும் வித்தியாசமானது...காப்பிலி பெண்கள் செக்ஸ் செய்வது மாதிரி தமிழ்ப் பெண்களால் செக்ஸ் செய்ய முடியுமா?...தவிர,நம் பெண்கள் மிகவும் மென்மையானவர்கள்:mellow:

ரதி....காப்பிலிப் பெண்கள் படை நடத்தியதாக..இதுவரை வரலாறு இல்லை!

ஆனால்....தமிழ்ப்பெண்கள்..படை நடத்தியவர்கள்...!

மறம் கொண்டு....எதிரிகளைப் புறங்காட்டி ஓட...ஓடத் துரத்தியவர்கள்!

முதுகில் புண்பட்டு இறந்த மகனைப் போர்க்களத்தில் கண்டு...அவனுக்காகப் பாலூட்டிய முலையை அறுத்தெறிந்தவர்கள்!

 

அந்த வம்சத்தில் உதித்த செருக்கு...எனக்கு நிறையவே உண்டு!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உந்த டாக்குத்தர் மருத்துவச்சிமார் என்ன கோதாரிக்கு புருசன்மாரையும் பிள்ளைப்பெறு வாட்டுக்கு வந்து நிக்கச்சொல்லி அடம் பிடிக்கிறாங்கள் எண்டு எனக்கு விளங்கேல்லை.....

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, குமாரசாமி said:

உந்த டாக்குத்தர் மருத்துவச்சிமார் என்ன கோதாரிக்கு புருசன்மாரையும் பிள்ளைப்பெறு வாட்டுக்கு வந்து நிக்கச்சொல்லி அடம் பிடிக்கிறாங்கள் எண்டு எனக்கு விளங்கேல்லை.....

அடுத்ததைப் பற்றி...முடிவெடுக்கும் முன்பு....கொஞ்சம் யோசியுங்கள்...என்று சொல்லாமல் சொலவதற்காகத் தான்!:cool:

அந்த நாளையில ஐரிஷ் காரனுக்கும், வெள்ளைக்காரனுக்கும்... இந்திய பாகிஸ்தானியர்களுக்கும்... இப்படிச் செய்திருந்தால்...உலகம் இண்டைக்கு,...இருக்கிறதை விடவும்...நியாயமான இனப் பரம்பலுடன் இருந்திருக்கும்!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 minute ago, புங்கையூரன் said:

அடுத்ததைப் பற்றி...முடிவெடுக்கும் முன்பு....கொஞ்சம் யோசியுங்கள்...என்று சொல்லாமல் சொலவதற்காகத் தான்!:cool:

அந்த நாளையில ஐரிஷ் காரனுக்கும், வெள்ளைக்காரனுக்கும்... இந்திய பாகிஸ்தானியர்களுக்கும்... இப்படிச் செய்திருந்தால்...உலகம் இண்டைக்கு,...இருக்கிறதை விடவும்...நியாயமான இனப் பரம்பலுடன் இருந்திருக்கும்!

கூடுதலாய் ஐரோப்பிய நாடுகளிலை மனுசி பிள்ளை பெறேக்கை புருசனும் பக்கத்திலை நிக்க வேணும்....அவுசிலை இல்லையோ? :unsure:

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, குமாரசாமி said:

கூடுதலாய் ஐரோப்பிய நாடுகளிலை மனுசி பிள்ளை பெறேக்கை புருசனும் பக்கத்திலை நிக்க வேணும்....அவுசிலை இல்லையோ? :unsure:

ஐரோப்பாவில உள்ள நல்லது கெட்டது  ..... எல்லாம் இஞ்சையும் இருக்குது!

ஆனாலும் எனது மகள் பிறந்த போது..நான் ஐரோப்பாவில்...!

எதுக்கும் வடிவாய் ஒருக்கால் ....ஆரிட்டையும் விசாரிச்சுப் போட்டுச் சொல்லுறன்!

 

  • கருத்துக்கள உறவுகள்
23 hours ago, புங்கையூரன் said:

என்னைப் பொறுத்தவரையில் என்னை ஒரு பெண்ணிய வாதியாகவோ அல்லது ஒரு ஆணிய வாதியாகவோ கருதுவதில்லை!
எனினும், பிரசவம என்பது கடுமையானது என்றும்....அந்த வலி மிகவும் தாங்கவியலாதது என்றும் எனது சமூகத்தால் எனக்குக் கூறப்பட்டது!
நாற்பது நாட்கள் வரை....பாய்த் தடுக்குகளால் மூடப்பட்ட கூட்டுக்குள் ஒரு பெண் முடங்குவதும், ஊரிலுள்ள வேப்ப மரங்கள் அவ்வளவும் துகிலுரியப் பட்டு நிர்வாணமாக நிற்பதுவும், சீரகம் தான் ஒரு சர்வரோக நிவாரணியாகக் கருதப்பட்டு உபயோகிக்கப் படுவதும் சரியென்று என்னால் ஏற்றுகொள்ள முடியவில்லை!
ஒட்டகச் சிவிங்கி அல்லது காட்டு விலங்குகள் குட்டி போடும் போது.. சில மணி நேரங்களுக்குள் அவை நடக்க வேண்டும். இல்லாவிடின் அவை வேறு விலங்குகளின் உணவாகும் சந்தர்ப்பங்களே அதிகம்!
ஆபிரிக்க தேசமொன்றில்...சில மாணவிகள் படிக்கும் காலங்களில் குழந்தைகள் பெற்றுக்கொள்வது மிகவும் சாதாரணமானது! அத்துடன் அந்தக் குழந்தைகள்..அந்த மாணவியின் தந்தையாரின் குடும்பப் பெயரில்,, பதியப் படவும் அவர்களது சட்டத்தில் இடமுண்டு! ஒரு குழந்தை  பிறந்து மூன்றாவது நாளன்றே ..அந்த மாணவியால் வழக்கம் போல பாடசாலைக்கு வந்து தொடர்ந்து கல்வியைத் தடற முடிகின்றது!
பிரான்சில் ஒரு அரசியல் வாதியான பெண்மணியோருவர் ..குழந்தை பிறந்து மூன்றாவது நாளே பாராளுமன்றத்துக்குச் சமூகமளிக்க முடிந்தது!
ஒரு காரணத்துக்காகத் தான் பொருளாதார நிலையில் இரு துருவங்களான இரண்டு தேசங்களிலிருந்து உதாரணங்களை எடுத்தேன்!
சில சிக்கலான பிரசவங்களைத் தவிர்த்து.....நாம் எதற்காக...பெண்களின் பிரசவங்களை...அதி உன்னத தியாகங்களாகவும் ....மிகப் பெரிய சாதனைகளாகவும் கருதுகின்றோம்?
ஒரு ஆணும் பெண்ணும்...சரி பாதியாக இணைந்து சேர்வதே குடும்பம் என்பது! அது இயற்கையானது!
நாங்கள் எமது பெண்களுக்கு மற்றைய சமூகங்களை விடவும் அதிக சலுகைகள் கொடுப்பதால் தான்...அவர்கள் மேலும்...மேலும் தங்கள் கணவர்களிடம் எதிர்பார்க்கின்றார்கள் போல உள்ளது!
இந்தக் கருத்து ஒரு விவாதத்துக்காக மட்டுமே!
எல்லோரும் தடி தண்டுகளைத் தூக்கிக் கொண்டு அடிக்க வரக் கூடாது!
பி.கு: நானும் இந்த விசயத்தில நல்லா நொந்து நூலாகிப் போனவன்!

இதில் இரண்டு விதமான வாதம் உண்டு .....

நாம் எல்லோரும் தலையணை வைத்தே படுக்கிறோம் 
நமது பூட்டியின் பூட்டிக்கு தலையணை இருந்து இருக்குமா ?

பூட்டியின் பூட்டி தலையணை வைக்கவில்லை எனபதை காரணம் காட்டி 
இப்போ தலையனையை பறிப்பதில் என்ன அர்த்தம் இருக்க போகிறது ?

பிரவசம் என்பது ஒரு மகிமை 
அது இயற்கையாக இருக்குமிடத்து இலகு 
ஆடு குட்டி போடுகிறது ... குட்டி ஆடாகிறது 
பின்பு குட்டி .... ஒரு குட்டி போடும் ஆடாக வளர்கிறது 

நம் குழந்தைகள் அப்படி அல்ல .......
படிப்பு வேலை என்று எங்கோ எங்கோ நகர்கிறார்கள் 
மாதமாக இருக்கும்போது .... பல துயர்களுடனும் வேலைக்கு போகிறார்கள் 
இப்போ இங்கே ஒரு உதவி ஆறுதல் வார்த்தை இருக்கும்போது 
அந்த சுமை கொஞ்சம் சுகமாகிறது.

ஆப்ரிக்காவில் குழந்தை பிரவசத்தில் இறக்கும் பெண்கள் 
குழந்தைகள் எண்ணிக்கை உலகிலேயே அதிகமாக இருக்கிறது 
தப்பியதை பற்றி நாம் பேசுகிறோம் மாண்டதும் இருக்கிறது.

இறக்கும் எண்ணிக்கை குறைவான இடத்தில் ....
பராமரிப்பு கூடுதலாக இருக்கிறது .... இரண்டுக்கும் தொடர்பு இருக்கும்போது 
அங்கு சும்மா பெறுகிறார்கள் ...... இவர்களுக்குத்தான் பராமரிப்பா ?
என்பது கொஞ்சம் சிக்கலான கேள்வி. 

தன்னம்பிக்கை என்பது எல்லா இடத்திலும்தான் இருக்கிறது ..
ஒருவன் தலை மயிரில் கட்டி லொறியை இழுக்கிறான் .... அவனும்தானே 
இழுக்கிறான் என்றுவிட்டு உங்கள் வீட்டு காரி உங்கள் தலை மயிரில் ஒரு லொறியை கட்டலாமா ? 

கூடுதலான அன்பு ....
கூடுதலான பராமரிப்பு ..
அந்த சுமையை கொஞசம் குறைக்கிறது 
அவள் என்ன ரோட்டில் போகும் ஒருத்தியா ? உங்களின் எங்களின் மனைவிதானே.
அப்பன் வைத்த வேம்பை துகில் உரிந்த கையோடு ... இன்னொரு வேம்பை வைத்துவிட்டால் 
என் மகன் ... தனது மனைவியின் பிரவசத்திற்கு துகிலிரிய உதவும். 

நீருக்குள் சுவாசித்துக்கொண்டு இருந்த குழந்தை 
இப்போ சட்டெனே காற்றை சுவாசிக்க தொடங்குகிறது 
இந்த நொடி ஒரு அதிசயம் !
அதை கொஞ்சம் கவனமாக பார்ப்பதுதான் நன்று ! 
 

Maternal_mortality_ratio%2C_2000.jpg

Prevention[edit]

The death rate for women giving birth plummeted in the twentieth century. The historical level of maternal deaths is probably around 1 in 100 births.[24] Mortality rates reached very high levels in maternity institutions in the 1800s, sometimes climbing to 40 percent of birthgiving women (see Historical mortality rates of puerperal fever). At the beginning of the 1900s, maternal death rates were around 1 in 100 for live births. Currently, there are an estimated 275,000 maternal deaths each year.[25] Public health, technological and policy approaches are steps that can be taken to drastically reduce the global maternal death burden.

Four elements are essential to maternal death prevention, according to UNFPA.[3] First, prenatal care. It is recommended that expectant mothers receive at least four antenatal visits to check and monitor the health of mother and fetus. Second, skilled birth attendance with emergency backup such as doctors, nurses and midwives who have the skills to manage normal deliveries and recognize the onset of complications. Third, emergency obstetric care to address the major causes of maternal death which are hemorrhage, sepsis, unsafe abortion, hypertensive disorders and obstructed labour. Lastly, postnatal care which is the six weeks following delivery. During this time bleeding, sepsis and hypertensive disorders can occur and newborns are extremely vulnerable in the immediate aftermath of birth. Therefore, follow-up visits by a health worker to assess the health of both mother and child in the postnatal period is strongly recommended.

https://en.wikipedia.org/wiki/Maternal_death

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.