Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

நான் சிறுத்துப் போனேன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நான் சிறுத்துப் போனேன் 

 

அந்தத் தொலைபேசியின் மணி எப்போதாவதுதான் ஒலிக்கும். அது எனக்கு மட்டும் உரித்தான வீட்டுத் தொலைபேசி. எனது முக்கிய உறவினர்களுக்கு மட்டும்தான் அந்தத் தொலைபேசியின் இலக்கம் தெரியும். வேலை, நண்பர்கள், இன்னபிற தேவைகளுக்கு எனது கைத்தொலைபேசியையே பயன்படுத்திக் கொண்டிந்தேன். 

 

அன்று ஞாயிற்றுக்கிழமை.  வீட்டுத்  தொலைபேசி ஒலித்தது. அழைப்பை ஏற்கும் போது பார்த்தேன். அழைப்பு சிறிலங்காவில் இருந்து வந்திருந்தது. எனது உறவுகள் யாரும் சிறிலங்காவுக்குப் போவதற்கு சாத்தியமில்லையே என்ற நினைப்புடனேயே “ஹலோ சொன்னேன்.

 

ஆர் கவியே கதைக்கிறது?

 

அங்கிருந்து கதைப்பது யாராகா இருக்கும்? பரம இரகசியமாகப் பாதுகாத்த எனது வீட்டுத் தொலைபேசி எப்படி சிறிலங்காவில் உள்ளவருக்குத் தெரிந்திருக்கிறது? என்ற கேள்விகள் என்னுள் எழுந்தாலும், ஓம் கவிதான் கதைக்கிறன். நீங்கள்...என்றேன்.  

 

நான் விமலா. விமலாக்கா. எப்பிடி இருக்கிறாய் கவி?

 

ஊரில் எனது அயல்வீடுதான் விமலா அக்காவின் வீடு. அவருக்கும் எனக்கும் உறவென்று இல்லை. பாசத்தோடு பழகியதால்  பெயரளவில் எனக்கு அக்காவாகிப் போனவர். அவரின் ஒரு மகன் இலண்டனிலும், மகள் கனடாவிலும் குடும்பமாக இருக்கிறார்கள். 

 

எப்பிடி என்ரை ரொலிபோன் நம்பர் உங்களுக்கு கிடைச்சது?” என்று கேட்க எத்தனித்தேன். அதற்கு சிலநொடிகள் கூட ஒதுக்காமலே விமலா அக்காவின் குரல் தொலைபேசியை ஆக்கிரமித்து இருந்தது.

 

அவருடனான உரையாடலில் என்னிடம் இருந்து பணம் எதிர்பார்க்கிறார் என்பது புரிந்தது.

 

ஏன் பிள்ளைகள் காசு அனுப்புற இல்லையோ?

 

அனுப்பினம்தான். மருந்து, அந்தச் செலவு இந்தச் செலவெண்டு காசு செலவழிஞ்சு போயிடுமடா

 

கதைத்து முடிக்கும் போது ஒரு தடவைக்கு இரு தடவை தனது வங்கி விபரத்தை விமலா அக்கா என்னிடம் ஒப்புவித்தார். ஆனால் இறுதிவரை எனது தொலைபேசி இலக்கம் தனக்கு கிடைத்த விபரத்தை அவர் எனக்குச் சொல்லவேயில்லை.

 

சம்பளம் வந்த அடுத்த வாரமே அடுத்த சம்பளத்துக்கு இன்னும் மூன்று வாரங்கள் இருக்கே என்று தவிக்கும் ஜாதி நான். ஆனாலும் விமலா அக்கா கேட்ட போது ஏதாவது அவவுக்குக் கொடு என்று உள்ளுணர்வு சொன்னது. பட்ஜெட்டுக்குள்ளே அடங்காத சம்பளத்தில் 300 யூரோக்கள் விமலா அக்காவுக்கு அனுப்பலாம் என்று கணக்குப் போட்டுக்கொண்டேன்.

 

வருடத் தொடக்கத்தில் பொங்கலுக்கு அன்பளிப்பாக இருக்கட்டும் என்று பணத்தை விமலா அக்காவுக்கு அனுப்பி விட்டு எனது செலவை மேலும் இறுக்கமான கட்டுப்பாட்டுக்குள் அடக்கிக் கொண்டேன்.

 

பொங்கல் முடிந்து இரண்டு மாதங்கள் ஆயிற்று. பணம் கிடைத்ததா இல்லையா என்பது பற்றி விமலா அக்காவிடம் இருந்து தகவல் ஏதும் வரவேயில்லை. ஒருவேளை வங்கி இலக்கத்தில் நான் ஏதாவது பிழை விட்டு விட்டேனா என்ற சந்தேகம் எழ, விமலா அக்காவுக்கு தொலைபேசி எடுத்தேன்.

 

பொங்கல் எப்பிடிப் போச்சுது?

 

நானும், மனுசனும்தானே. பிள்ளைகள் பக்கத்திலை இல்லாததாலை நான் பொங்க இல்லையடா

 

காசு அனுப்பினனான் கிடைச்சதே? பெருமையோடு கேட்டேன்.

 

அது என்னடா கொஞ்சக் காசுதானே. மாத்தக்கை 50,000 ரூபா மட்டிலைதான் வந்தது

 

நான் சிறுத்துப் போனேன்.

 

கவி அருணாசலம்

17.02.2018

  • கருத்துக்கள உறவுகள்

புலத்துக்கும்  தாயகத்துக்குமான 

இடைவெளியின் ஒரு யதார்த்தமிது

அனுப்பியவன் தான்

கிடைத்ததையும்  உறுதிப்படுத்தணும்

ஏனெனில் அவனுக்கு மட்டுமே அப்பணத்தின் வலி தெரியும்

 

நன்றி  சகோ

தொடர்ந்து எழுதுங்கள்

  • கருத்துக்கள உறவுகள்

வாங்குபர்கள் சிறுத்துப் போகும் நிலைமாறி கொடுப்பவர்கள் சிறுத்துப் போகுமளவிற்கு உலகம் மாறிவிட்டது!

வெளிநாடு போனவர்கள் எல்லாம் குபேரர்களாக இருக்கின்றார்கள் என்றும் போனடித்தால் காசு உடன் வரும் என்று இருந்த காலம் போர் முடிந்து பலர் வெளிநாடுகளில் இருந்து விடுமுறைக்குப் போய் வரும் இக்காலத்திலும் தொடர்கின்றதா?

 

  • கருத்துக்கள உறவுகள்

கதையை வாசித்து முடித்ததும் நான் பூரித்துப் போனேன்!

எனது அனுபவம் பலருக்கும் இருக்கே என்று...!

தொடர்ந்தும் எழுதுங்கள்!

  • கருத்துக்கள உறவுகள்
Quote

 

நீங்களுமா? நானுந்தான்.
இரு வருடங்களுக்கு முன்  எமக்கு ஊரிலிருக்கும் பொழுது எமது குடும்பத்துடன் பழக்கமான ஒருவர். (உறவினர் அல்ல)
திடீரென போன் அடித்தார். எப்படி எமது நம்பர் எடுத்தாரோ தெரியாது. அக்கா எனது மகனுக்கு யூனிவசிற்றி கிடைச்சிருக்கு . அவனுக்கு அங்க போறத்துக்கு  உடுப்பு சப்பாத்து முதலியன வாங்க வசதியில்ல.எனக்கும் இப்ப வேலை இல்ல.இப்படி புலம்பினார். அட பிள்ளையின் படிப்புக்கு கேட்கிறார். கட்டாயம் உதவி செய்ய வேணும் எண்டு உடனேயே எனது உழைப்பில் இருந்து 250 டொலர்களை அனுப்பி விட்டேன். கிடைத்ததா என்று நான் அழைத்துத்தான் கேட்கவேண்டி இருந்தது. இது வரை எந்த தொடர்பும் இல்லை.
  • கருத்துக்கள உறவுகள்

இதுபோல் எத்தனையோ அனுபவங்கள் இலங்கை போய் வந்ததில்.

  • கருத்துக்கள உறவுகள்

நாம்  இங்கிருந்து அனுப்பும் பணம் அவர்களுக்கு சிறிதாக தான் தெரிகிறது ..வாங்குபர்கள் சிறுத்துப் போகும் நிலைமாறி கொடுப்பவர்கள் சிறுத்துப் போகுமளவிற்கு உலகம் மாறிவிட்டது! உடை நடை  லிருந்து  பகடடாக  எதிர்பார்க்கிறார்கள் 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

விசுகு, கிருபன், புங்கையூரான், காவலூர் கண்மணி, யா.சுமேரியர், நிலாமதி ஆகியோரின் கருத்துக்களைப் பார்க்கும் போது  இந்த “வைரஸ்” பலரைத் தாக்கி இருப்பது புரிகிறது.

புலத்துக்கும் நிலத்துக்கும் உறவுப்பாலம் அமைப்போம் என்பதில் ‘பணம்’ தான்  அதற்கான அத்திவாரமோ என்கிற ஐயம் வருகிறது.

அனைவரது கருத்துகளுக்கும் நன்றி!

23 hours ago, Kavi arunasalam said:

அது என்னடா கொஞ்சக் காசுதானே. மாத்தக்கை 50,000 ரூபா மட்டிலைதான் வந்தது

பலருக்கும் ஏற்பட்ட அனுபவம் இது.. பொருத்தமான கதைத் தலைப்பு.

 

  • கருத்துக்கள உறவுகள்
On 2/17/2018 at 3:51 AM, Kavi arunasalam said:

நான் சிறுத்துப் போனேன் 

 

 

பட்ட அனுபவத்தால்,  நான் சிறுத்துபோனேன் என்று தலைப்பு போட்டிருந்தாலும், ஒன்றை நீங்கள் கவனிக்கவில்லை கவி அருணாச்சலம்,மனிதர்களுடன் பழகும் விதத்தில் பலர் மனசில்  ரொம்ப பெரிதாய் தெரிகிறீர்கள்!

  • கருத்துக்கள உறவுகள்

ஊரில் ஒரு பிரச்சினை என்றவுடன் நாங்கள் அந்தரப்பட்டு பணம் அனுப்புகின்றோம். அதற்குப்பின் அது எதோ எங்களின் கடமை என்ற ரீதியில் கதைப்பார்கள்.பிள்ளைகளுக்கு அந்தப் பிரச்சினை வராது என்று நினைக்கின்றேன். அவர்கள் ரொம்ப விவரமாய் இருக்கினம்....!  tw_blush:

  • கருத்துக்கள உறவுகள்

வெளிநாடு தான் இனி காசு காய்க்கும் மரம் சிலருக்கு எல்லோருக்கும் அல்ல 

  • கருத்துக்கள உறவுகள்

இந்த அனுபவம் பெரும்பாலும் எல்லாருக்கும் இருக்குது.நான் உட்பட.

  • கருத்துக்கள உறவுகள்
On 2/17/2018 at 3:51 AM, Kavi arunasalam said:

அது என்னடா கொஞ்சக் காசுதானே. மாத்தக்கை 50,000 ரூபா மட்டிலைதான் வந்தது

பணத்திற்கு பெறுமதியே இல்லை என்பது உண்மையே.

  • கருத்துக்கள உறவுகள்

ம் நாம்தான் இப்போது பெறுமதி அற்றவர்களாக போய்க் கொண்டிருக்கிறோம் ஊரில் வாழுபவர்களின் வசதியான வாழ்க்கையை அவர்களின் ஆடம்பரங்களைப் பார்க்கும்போது நாம் ஒன்றுமே இல்லை

  • கருத்துக்கள உறவுகள்

வெளினாடுகளில் இருந்து , தாயகத்துக்கு செல்லும் சிலரின் ஆடம்பரச் செலவுகள், ஊரில் இருப்பவர்களுக்கு வெளினாட்டில் இருப்பவர்கள் எல்லோரிடமும் அதிக பணம் இருக்கிறது என்ற தோற்றத்தை ஏற்படுத்துகிறது.    

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.