Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அன்புள்ள பரிமளம் அறிவது!

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்
On 3/25/2019 at 2:03 PM, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

அசத்தல் குமாரசாமி. நல்ல ஐடியா😂😂

ஐடியா நல்ல ஐடியாதான்.....ஆனால் எனக்கு உந்த எழுத்து விளையாட்டெல்லாம் சரிவராது.😂

On 3/25/2019 at 8:55 PM, ரதி said:

கொப்பனும்,கொம்மாவும் உள்ள காணி,வயலை வித்து வெளி நாட்டுக்கு அனுப்பி விட வந்ததும்,வராததுமாய் பரிமளத்திற்கு கடிதம் 🙄
 

அப்புவும் ஆச்சியும் காணி பூமி வித்து என்னை அனுப்பேல்லை.....பொட்டகத்திலை இருந்த ஒரு கட்டு மட்டும்தான் வெளியிலை எடுத்து வெளிநாட்டுக்கு திரத்தி விட்டவை ð

On 3/25/2019 at 9:17 PM, Nathamuni said:

அண்ணரிண்ட  விளையாட்டு, இப்பதான் தங்கச்சியாருக்கு தெரியுது போல...

அது.....💪

  • Replies 294
  • Views 47.1k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்
On 3/26/2019 at 1:12 AM, Kavallur Kanmani said:

அந்த சிவப்பு நீலக்கரை போட்ட கடிதத்தை எதிர்பார்த்து காத்திருந்த ஞாபகங்களை மறக்கக் கூடியதா? அந்த நாளில் செல் போனும் இல்லை கணனியும் இல்லை. கடிதம் ஒன்றுதான் தொலைத் தொடர்பு சாதனம். அசத்தலாகக் கடிதம் எழுதும் குமாரசாமியின் கடிதங்கள் அபாரம். தொடருங்கள் . 

உங்கள் வரவுக்கும் கருத்து பகிர்வுக்கும் மிக்க நன்றி.

On 3/26/2019 at 6:28 AM, ஏராளன் said:

ஒரு முடிவோட தான் சாமியார் எழுதிறார்!
தொடர்கிறேன்... தொடருங்கள்.

தொய்வு வந்தாலும் தொடரும் கண்டியளோ...😄

On 3/26/2019 at 6:55 AM, புங்கையூரன் said:

பீயோன் ஏகாம்பரம் ஐயா காட்டில....இனி ஒரே மழை தான்...!😀

அந்தாளின்ரை காட்டிலை சும்மா மழையில்லை அடைமழை...ð

  • கருத்துக்கள உறவுகள்

அண்ணை, தொடர் சூப்பர் ஆக போகுது. நீங்கள் அண்ணி கோபம் கொள்ளும் அளவிற்கு அப்பிடி என்ன சொன்னீர்கள் என்று அறிய ஆவலாக உள்ளேன்

  • கருத்துக்கள உறவுகள்

காதல் அனுபவம் இல்லாமல் இப்படி எழுத முடியாது கு.மா அண்ணா. தொடருங்கள்.

பேர்லின், பிறேமன், முன்ஸ்டர் என்று 2 வருடத்துக்குள் பல இடத்தில் அத்தான் குமாரசாமி இருந்திருக்கிறார். 

  • கருத்துக்கள உறவுகள்
On 3/24/2019 at 5:42 PM, குமாரசாமி said:

உங்கை வீட்டிலை எல்லாரும் சுகமாய் இருக்கினமோ? எல்லாரையும் சுகம் கேட்டதாய் சொல்லுங்கோ. தோட்டப்பக்கம் போனனியளோ? பக்கத்து தோட்டக்காரன் சந்திரனோடை கவனம். அவன் என்ன கேட்டாலும் ஒரு பதிலும் சொல்லக்கூடாது.

பதிலொன்றையும் காணவில்லை என்றவுடன் சந்திரனோடை கம்பி நீட்டியிட்டாவோன்று நினைச்சன்.

11 minutes ago, nunavilan said:

பேர்லின், பிறேமன், முன்ஸ்டர் என்று 2 வருடத்துக்குள் பல இடத்தில் அத்தான் குமாரசாமி இருந்திருக்கிறார். 

ஓ இப்ப உங்களுக்கும் அத்தானாகிப் போனாரோ?

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, குமாரசாமி said:

 

சிவமயம்

முன்ஸ்ரர்
மேற்கு ஜேர்மனி
19.03.1983

அன்புள்ள பரிமளத்திற்கு!

                                                     நான் நல்ல சுகம் அது போல் நீங்களும் சுகமாயிருக்க சன்னதி முருகனை வேண்டுறன்.

நான் இதோடை ஆறு கடிதம் போட்டுட்டன். இன்னும் ஒரு பதிலுமில்லை. ஏகாம்பரம் ஐயாவை விசாரிச்சால் எல்லா கடிதமும் குடுத்தனான் எண்டு சொல்லுறார். நீங்கள் வேண்டா வெறுப்பாய் கடிதத்தை வாங்கினதாயும் சொன்னார்.திருப்பியும் சொல்லுறன்  நான் அப்பிடியொண்டும் கூடாத நோக்கத்தோடை அந்தக்கேள்வியை உங்களிட்டை கேக்கேல்லை. எல்லாம் எங்கடை பிற்கால வாழ்க்கை நன்மைக்குத்தான் கேட்டனான். நான் இன்னுமொரு கடிதம் போடுவன்.அதுக்கும் பதில் இல்லையெண்டால் நான் உங்கை வந்துடுவன்.
இப்படிக்கு அன்புடன்
குரு

மாத விடாய் ஒழுங்காய் வருதோ என்றே கேட்டனியல் 🤔
 

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, ஈழப்பிரியன் said:

பதிலொன்றையும் காணவில்லை என்றவுடன் சந்திரனோடை கம்பி நீட்டியிட்டாவோன்று நினைச்சன்.

ஓ இப்ப உங்களுக்கும் அத்தானாகிப் போனாரோ?

கடிதம் எழுதியவர் குமாரசாமி அத்தான் என்பதால் தான்  அப்படி எழுதினேன். கடிதம் கற்பனையாக கூட இருக்கலாம் அல்லவா??

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, குமாரசாமி said:

ஐடியா நல்ல ஐடியாதான்.....ஆனால் எனக்கு உந்த எழுத்து விளையாட்டெல்லாம் சரிவராது.😂

அப்புவும் ஆச்சியும் காணி பூமி வித்து என்னை அனுப்பேல்லை.....பொட்டகத்திலை இருந்த ஒரு கட்டு மட்டும்தான் வெளியிலை எடுத்து வெளிநாட்டுக்கு திரத்தி விட்டவை ð

 

ஏன் அண்ணி உங்கட சாதி இல்லையோ?

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, ரதி said:

ஏன் அண்ணி உங்கட சாதி இல்லையோ?

சீதனம் இல்லையாம்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ரதி said:

மாத விடாய் ஒழுங்காய் வருதோ என்றே கேட்டனியல் 🤔
 

 

1 hour ago, ரதி said:

ஏன் அண்ணி உங்கட சாதி இல்லையோ?

உதென்ன கேள்வியள் எண்டு கேட்கிறன்?

தாரும் ஆம்பிளயள் மறுமொழி சொல்லேலுமே?

எனக்கெண்டா, இவர், என்ற தங்கச்சிய, உம்மட அண்ணன் கட்டுவாரெண்டா, நான் உங்களக் கட்டி இங்க டபக்கெண்டு கூப்பிடுவன், தங்கச்சீண்ட பிரச்சணை முடிஞ்சா நாங்க சந்தோசமா வாழலாம்தானே எண்டு, எழுதியிருப்பார் போலகிடக்குது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்
On 3/26/2019 at 7:49 AM, ராசவன்னியன் said:

இவ்வளவு உருகும் பரிமளம் அம்மணி, ஏன் 'குமாரசாமி அத்தானோட' அயல்நாட்டிலிருக்கும்  புகைப்படத்தை கேட்கவில்லை..? :innocent:

ரகசியமாக முத்தமிட்டுக்கொள்ளலாம்.. அல்லது முண்டாசுபட்டி கதாநாயகி மாதிரியும் தூங்கலாமே..? :)

என்னத்தை சொல்ல?☹️

படமெல்லாம் அனுப்பினனான் வன்னியர்.

போதாக்குறைக்கு சறம் கட்டிக்கொண்டு வெறும் மேலோடை சாமியை கும்புடுறமாதிரி ஒரு படம் எடுத்து அனுப்பச்சொல்லி அதுவும் அனுப்பினனான் கண்டியளோ. ஜேர்மனிக்கு போனவுடனை நல்ல வெள்ளையாய் வந்துட்டியள் எண்டு சந்தோச கடிதமும் வந்தது பாருங்கோ.

நீங்கள் கேட்டபடியாலை இன்னுமொரு விசயத்தையும் சொல்லுறன் கேளுங்கோ.......அவள் பாவியை(பரிமளம்) பிரிஞ்சு இருக்கிற கவலையிலை தாடியும் வளர்த்து   தலையும் வளர்த்து  இவங்கடை சவக்காலையுக்கை  கையிலை ஒரு ரோசாப்பூவோடை  நிண்டு ஒரு படமும் எடுத்து அனுப்பினனான் கண்டியளோ....போட்டோ பின்பக்கத்திலை பாட்டு வசனம் வேறை....

oru thalai ragam hero shankar à®à¯à®à®¾à®© ப஠மà¯à®à®¿à®µà¯

நான் ஒரு ராசியில்லா ராஜா!
என் வாசத்திற்கில்லை இதுவரை ரோஜா!
ஆயிரம் பாடட்டும் மனது!
என் ஆசைக்கு இல்லை உறவு!

நான் ஒரு ராசியில்லா ராஜா!
என் வாசத்திற்கில்லை இதுவரை ரோஜா! 
 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்
On 3/26/2019 at 8:35 AM, suvy said:

Image associée

நான் இவவுக்குத்தானே குடுத்தேன்.இவை யார் யாருக்கு பகிர்ந்திருப்பா .......!  😁

சும்மா கிளறப்படாது...😁

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்
On 3/26/2019 at 3:25 PM, ஈழப்பிரியன் said:

அட நீங்கள் அகதியாவே வந்தனீங்கள்?நான் நினைச்சன் என்னைப் போல ஸ்கொலசிப்பில வந்தனீங்கள் என்று.

Vadivelu Dk14 GIF - Vadivelu Dk14 Time GIFs

  • கருத்துக்கள உறவுகள்

ஆனாலும் கு.சா அவர்களே,

யாழ்ப்பாண வயல்வெளி, பனந்தோட்டம் எல்லாம் பரிமளத்தோடை உலா வந்துவிட்டு, அனுபவித்த அந்த ரகசியமான 'உன்னத உணர்வை' இப்படி அம்பலத்தில் ஏத்தப்படாது கண்டியளோ..? 😍

"சொல்லாமல் செய்யும் காதல் கனமானது
சொல்லச் சொன்னாலும் சொல்வதுமில்லை மரபானது
சொல்லும் சொல்லை தேடி தேடி யுகம் போனது
இந்த சோகம் தானே காதலிலே சுகமானது

 

வாசனை,வெளிச்சத்தை போல
அது சுதந்தரமானது அல்ல
ஈரத்தை இருட்டினை போல
அது ஒளிந்திடும் வெளி வரும் மெல்ல

 

"நீ கேட்காமல் காட்டும் அன்பு உயர்வானது
கேட்டுக் கொடுத்தாலே காதல் அங்கு உயிரானது
கேட்கும் கேள்விக்காகதானே பதில் வாழுது
காதல் கேட்டு வாங்கும் பொருளும் அல்ல இயல்பானது


நீரினை நெருப்பினைப் போல
விரல் தோடுதலில் புரிவதும் அல்ல
காதலும் கடவுளை போல
அதை உயிரினில் உணரனும் மெல்ல

ரகசியமானது காதல்
மிக மிக ரகசியமானது காதல்
ரகசியமானது காதல்
மிக மிக ரகசியமானது காதல்


முகவரி சொல்லாமல் முகம் தன்னை மறைக்கும்
ஒருதலையாகவும் சுகம் அனுபவிக்கும்
சுவாரசியமானது காதல்
மிக மிக சுவாரசியமானது காதல்.."

 

 

Edited by ராசவன்னியன்

  • கருத்துக்கள உறவுகள்
33 minutes ago, ராசவன்னியன் said:

யாழ்ப்பாண வயல்வெளி, பனந்தோட்டம் எல்லாம் பரிமளத்தோடை உலா வந்துவிட்டு, அனுபவித்த அந்த ரகசியமான 'உன்னத உணர்வை' இப்படி அம்பலத்தில் ஏத்தப்படாது கண்டியளோ..? 😍

எங்க சார் உலா வந்தது?
யாரும் சின்னபெடியளாக பார்த்து அந்த அக்காட்டை இதைக் கொண்டுபோய் குடடா என்று கடிதம் மட்டும் போகும்.
சும்மா கேள்விப்பட்டதுக்கே அண்ணன்மாரின் அடியைப் பார்க்கலையோ?

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, ஈழப்பிரியன் said:

எங்க சார் உலா வந்தது?
யாரும் சின்னபெடியளாக பார்த்து அந்த அக்காட்டை இதைக் கொண்டுபோய் குடடா என்று கடிதம் மட்டும் போகும்.
சும்மா கேள்விப்பட்டதுக்கே அண்ணன்மாரின் அடியைப் பார்க்கலையோ?

கு.சா அவ்வளவுதானா..? :innocent:

"அடைந்தால் பரிமளா தேவி,
இல்லையெனில் மரண தேவி.."

என வீரத்துடன் காதலிக்காக போராடியிருப்பாரென்றல்லவா நினைத்தேன்..! :)

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, ராசவன்னியன் said:

கு.சா அவ்வளவுதானா..? :innocent:

"அடைந்தால் பரிமளா தேவி,
இல்லையெனில் மரண தேவி.."

என வீரத்துடன் காதலிக்காக போராடியிருப்பாரென்றல்லவா நினைத்தேன்..! :)

Image associée

என்ன செய்வது முடிந்தவரை முயற்சி செய்தார், முடியல .....!  😩

  • கருத்துக்கள உறவுகள்

சூப்பர் கு.சா

என்னதான் இருந்தாலும்  இல்லாத அவலுக்கே உரலை இடிக்கிற சனத்திட்ட புது வெள்ளாமை அரிசி பொரிச்சு வெல்லத்தோட குடுத்திட்டியள் கண்டியளோ....😜

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, Nathamuni said:

 

உதென்ன கேள்வியள் எண்டு கேட்கிறன்?

தாரும் ஆம்பிளயள் மறுமொழி சொல்லேலுமே?

எனக்கெண்டா, இவர், என்ற தங்கச்சிய, உம்மட அண்ணன் கட்டுவாரெண்டா, நான் உங்களக் கட்டி இங்க டபக்கெண்டு கூப்பிடுவன், தங்கச்சீண்ட பிரச்சணை முடிஞ்சா நாங்க சந்தோசமா வாழலாம்தானே எண்டு, எழுதியிருப்பார் போலகிடக்குது.

நீங்கள் எழுதின பிறகு தான் நினைவு வருது என்ட அண்ணர் வந்து மாத்து கல்யாணம் தான்...எங்கேயோ முந்தி அவர் எழுதி  வாசிச்ச மாதிரி இருக்கு 

  • கருத்துக்கள உறவுகள்

ஒழுங்கா எழுதிக்கொண்டுவந்த குமாரசாமியை பரிமளத்தின்ர ஆட்கள் ஆரோ வெருட்டிப் போட்டினமோ??

  • கருத்துக்கள உறவுகள்

நான் ஒரு ராசியிலா  ராசா   என்று தண்ணியை போட்டுட்டு  படுத்துவிடடார் போல  

அல்லது போலீஸ்  பிடிச்சுவிட்ட்து போல 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்
On 3/26/2019 at 9:31 PM, ரதி said:

உண்மையிலேயே 82 ம் ஆண்டு வெளிநாட்டுக்கு வந்து விட்டீங்களா அண்ணா?

ஓம்....கடிதத்திலை இருக்கிறதின் படி வந்துட்டன்...😂

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்
On 3/28/2019 at 10:54 AM, putthan said:

உந்த அண்ணன்மார் இருக்கினமே தாங்கள் சுழட்டுவாங்கள், தங்கட தங்கச்சி யாரையும் சுழட்டுது என்றால் வந்திடுவாங்கள் கத்தி பொல்லுகளுடன்....

உந்த அண்ணன்மார் சுழட்ட வெளிக்கிட்டு  இருட்டடி, நாய்க்கடி வாங்கினதையெல்லாம் எழுத வெளிக்கிட்டால் மகாபாரதம் தோத்துப்போகும் கண்டியளோ...
அவையும் அவையின்ரை எடுப்பும்....:wink:
வாற கோவத்துக்கு......

 

Vadivel Vadivelu GIF - Vadivel Vadivelu Majaa GIFs

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தபால் கந்தோர்
கரணவாய்
06.04.1983

தம்பி குரு அறிவது!
                                         யான் நல்ல சுகம்.அது போல் உங்கள் சுகத்திற்கும் கடவுளை பிரார்த்திக்கின்றேன்.

நீங்கள் எனக்கு எழுதிய கடிதம் கிடத்தது. அதனுடன் பரிமளத்தினுடைய கடிதமும் கிடைத்தது. கடிதத்தினுள் முத்திரை செலவிற்கென 100 ஜேர்மன் மார்க் நோட்டும் கிடைக்கப்பெற்றேன். சந்தோசம்.

உங்களுக்கும் பரிமளத்திற்கும் என்ன பிரச்சனை? உங்கள் கடிதங்களை அவரிடம் கொடுக்கும் போது வேண்டா வெறுப்பாக வாங்குவார். இந்த முறை உங்கள் கடிதம் கொடுக்கும் போது இனிமேல் எனக்கு கடிதம்  எழுத வேண்டாம் என சொல்லுங்கோ ஐயா என என்னிடம்  கூறினார்.

தம்பி! உங்களுக்குள் என்ன பிரச்சனை என்று சொல்லுங்கள் முடிந்தால் நான் தீர்த்து வைக்கின்றேன்.சென்ற வெள்ளிக்கிழமை பிள்ளையார் கோவிலில் தாயாருடன் பரிமளத்தை கண்டேன். பழைய சந்தோசத்தை முகத்தில் காணவில்லை.

வசந்தி என்னிடம் ஒரு கடிதத்தை தந்து உங்களுக்கு அனுப்புமாறு என்னிடம் தந்துள்ளார்.அதனையும்  சேர்த்து அனுப்பியுள்ளேன்.

தம்பி நீங்களும் பரிமளமும் சண்டை பிடிக்காமல் மனக்கசப்புகளை மறந்து பழையபடி சந்தோசமாய் வாழவேண்டும்.


ஜேர்மனி குளிர்நாடு எப்படியிருக்கின்றது. இத்தாலி உணவகத்தில் வேலை செய்வதாக பரிமளம் ஒருமுறை சொன்னார்.

வேறு விடயமில்லை.இத்துடன் முடிக்கின்றேன்.

இப்படிக்கு
ஏகாம்பரம்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்
On 3/30/2019 at 12:07 AM, nilmini said:

காகிதம் எங்க போகுது? ஊருக்கோ ?

ஓமோம்......காடு கரம்பை மேடு பள்ளம் பனங்கந்து வடலியெல்லாம் தாண்டி ஊருக்குத்தான் போகுது...:grin:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.