Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இவர தொட்ட நீ கெட்ட ஜோதிகாவை நேரடியாக எச்சரித்த இயக்குனர் மோகன்.!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
40 minutes ago, குமாரசாமி said:

ஜோத்திகா கோவிலை பழிக்கவுமில்லை. குறை சொல்லவுமில்லை. ஆகையால் அவர் சொன்னதை வேதவாக்காக எடுக்கமுடியாது.

1) அவர் சார்ந்த சினிமாத்துறை பணத்தை தண்ணீராக இறைக்கும் துறை. அனாவசிய செலவுகள் நிறைந்த துறை. அந்த அநாவசிய செலவுகளை ஒரு வருடம் நிறுத்தி அந்த பணத்தை மருத்துவமனைகளுக்கு கொடுக்கும் எண்ணம் பகுத்தறிவு சிந்தனைவாதி ஜோத்திகாவுக்கு ஏன் வரவில்லை.
 கோடிக்கணக்கில் செலவாகும் ஒரு பாடல் காட்சிகளுக்கு மட்டும் சுவீஸ் வந்து குத்தியாட்டம் போட்ட ஜோத்திகாவுக்கு இந்த பரந்துபட்ட பகுத்தறிவு சிந்தனைகள் அப்போது முளைக்கவில்லையா? அல்லது துளிர் விடவில்லையா? 
உலகிலே சகல இயற்கை காட்சிகளும் நிறைந்த இந்தியாவை விட்டு பாரின் சூட்டிங் போய்

2)காசை கரியாக்க வேண்டாம் என ஜோத்திகாவிடம் சொல்வீர்களா?சொல்வீர்களா?சொல்வீர்களா?
அந்த பணத்தை ஏழை எளிய மக்களுக்கு கொடுக்கும்படி உத்தமி ஜோத்திகாவிடம் சொல்வீர்களா?

 

இரண்டு விடயங்களை ஜோவின் பேச்சோடு போட்டுக் குழப்பிக் கொள்கிறீர்கள்.

1) அது அவரின் தொழில்👍

2) காசைக் கரியாக்குவதென்றால் பிரயோசனம் இன்றி வீணாக்குகிறார் என்று கூறுகிறீர்களா ? அதெப்படி ஒரு வியாபாரத்தில் முதலீடு செய்வதை கரியாக்குவதாக கூறலாம். 🤔

அதுசரி,

இவையெல்லாம் எப்படி அவரின் கூற்றுடன் தொடர்புபடும் ? 🤔

41 minutes ago, குமாரசாமி said:

70 களிலிருந்தே கருணாநிதி என்பவர் மேல் நம்பிக்கை வைக்க ஆரம்பித்த ஈழத்தமிழினம் படிப்படியாக எல்லோர் மீதும் நம்பிக்கை வைத்து இன்று கருவறுக்கப்பட்டு நடுத்தெருவில் நிற்கின்றது.

குசா,

நீங்கள் கரு நா நி(த்)தி அல்லவே🙂

  • Replies 116
  • Views 11.8k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் நாடும் கருத்துச் சுதந்திரமும்!
===========================
இப்போதுதான் தமிழ்நாட்டில் மதுவந்தியின் விளம்பர வீடியோ சர்ச்சை ஓயத் தொடங்கியது. அடுத்தததாக ஜோதிகாவின் மேடையில் சொன்ன கருத்து கையில் எடுக்கப்பட்டுள்ளது. இவை இரண்டும் தற்செயலாக நடந்தவைதானா என்ற கேள்வி எழுவதைத் தவிர்க்க முடியவில்லை. 

அண்மையில் நடந்த விருது விழாவில் ஜோதிகா இந்து சமயத்தை சீண்டியதாகவும், தஞ்சைப் பெரும் கோவிலை இலக்கு வைத்து பேசியதாகவும் Youtubers Channelகள் வெளுத்து வாங்குகின்றன. ஒரு விடயத்தை எப்படியெல்லாம் திரித்துச் சொல்லலாம் என்பதற்கு நல்ல உதாரணம் ஜோதிகா சம்பந்தப்பட்ட சர்ச்சை.

இதில் முரண் நகையான சில விடயங்கள் உள்ளன.
1. பெண் நிருபர்கள் தமது உடலைப் பயன்படுத்தியே பதவியுயர்வு பெறுகிறார்கள் என்று கூறி பெண்களை இழிவுபடுத்திய, பண்பாடுள்ள மனிதரான S.V. சேகர், இன்று ஜோதிகா வைத்தியசாலைக்கும் பாடசாலைக்கும் பண உதவி செய்யச் சொன்னது அயோக்கியத்தனம் என்கிறார்.

2. சமூக வலைத் தளங்களில் ஜோதிகாவை கண்டிக்கும் பலரும் தமிழிலேயே மிக மோசமான வார்த்தைகளைப் பாவித்துத் திட்டுகிறார்கள். 

இவர்கள் எல்லோரும் தமிழ் மற்றும் இந்துமதப் பண்பாட்டில் வளர்ந்தவர்கள் என்றால் எப்படி இவ்வளவு சரளமாக கீழ்த்தரமான வார்த்தைகளை ஒரு பெண்ணை நோக்கிப் பேச முடிகிறது. (சில மாதங்களுக்கு முன்னர் நித்தியானந்தாவின் சிஷ்யைகள் செந்தமிழில் பேசியது வேறு இந்த நேரத்தில் ஞாபகம் வந்து தொலைக்கிறது!)

உண்மையில் என்னதான் நடந்தது?
--------------------------------------------------------
இந்த விருது விழா நேற்றோ போனவாரமோ நடைபெறவில்லை. நாற்பது நாட்களுக்கு முன்னர், கடந்த மார்ச் மாதம் 14 ம் திகதி Chennai Trade Centre இல் நடைபெற்ற Just for Women 2020 விருது விழாவில்தான் ஜோதிகா சில விடயங்களை சொல்லியிருந்தார். 

ஜோதிகா அங்கு சொல்லியது கோவிலுக்கு பணம் கொடுப்பது போலவே பாடசாலைகளுக்கும் வைத்தியசாலைகளுக்கும் கொடுத்து உதவுங்கள் என்றுதான். கோவில் பணத்தை எடுத்துக் கொடுங்கள் என்றோ, கோவிலுக்குக் கொடுக்காமல் வைத்தியசாலைக்கு கொடுங்கள் என்றோ அவர் சொல்லவேயில்லை. 

உண்மையில் அவர் தமிழ் பேசியதையே  தமிழில் பிழையாக (தமக்குத் தேவையான வகையில்) மொழிபெயர்க்கும் சில வலைத்தள ஊடகர்களின் திறமையைப் பார்த்து எனக்குத் தலையே சுற்றிவிட்டது. 

அவர் தஞ்சைப் பெருங்கோவிலைப் பற்றி பேசியதால் தமிழரின் அடையாளத்தை இலக்கு வைத்துப் பேசுகிறாராம். ஒருவர் தன் பதிவில் ஜோதிகா அரசியல்தான் பேசுகிறாராம். அதனால் அவர் வார்த்தைகளை கவனமாகப் பயன்படுத்த வேண்டுமாம். இன்னொருவர் ஜோதிகா பிறப்பால் முஸ்லிம் என்பதால்தான் இந்துக் கோவிலை இலக்கு வைத்து பேசினாராம். 

இதற்கு முன்னரும் H. ராஜா என்பவர் நடிகர் விஜயை கிறிஸ்தவர் என இலக்கு வைத்துக் தாக்கியது வரலாறு. சமூக அக்கறையில் யார் என்ன பேசினாலும் அதற்கு தமக்குத் தேவையான சாயம் பூசுவதில் பல விற்பன்னர்கள் தமிழ்நாட்டில் இருக்கிறார்கள் என்பது மட்டும் தெளிவாகிறது.

உண்மையில் தங்களைச் சுற்றி நடக்கும் அரசியலை சூழலை தமிழக மக்கள்தான் தம் அறியாமையால் அறியாது இருக்கின்றனரோ என்று எண்ணத் தோன்றுகிறது.

சம்பவம் ஒன்று: இந்தியாவில் ஊரடங்கு நடைமுறைக்கு வந்தபின் மதுவந்தி இரண்டு முறை மக்கள் இலகுவாக தவறு கண்டுபிடிக்கும்படியான வகையில்  வீடியோக்களை வெளியிடுகிறார். ஒன்றுக்கு மமதையோடு மன்னிப்புக் கேட்டும் வீடியோ வெளியிடுகிறார். அதன்பின் பலரின் கவனமும் அதற்கு meme போடுதல், பகிர்தல், வீடியோ மூலம் பதில்வாதம் செய்தலில் இருந்தது. 

சம்பவம் இரண்டு: நாற்பது நாட்களுக்கு முன்னர் நடந்த நிகழ்வின் பதிவின் சிறுதுண்டு திடீரென வெட்டியெடுக்கப்பட்டு சிலநாட்களுக்கு முன்னால் நடந்ததாகச் சித்தரித்து ஜோதிகா இந்துமதத்தை அவமதித்தார் என்று பிரச்சனை கிளப்பி விடப்பட்டுள்ளது. பலரும் இப்போது அதைப்பற்றியே பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

இங்கு கவனிக்க வேண்டிய விடயம், மதுவந்தி விவகாரம் சூடு தணியத் தொடங்கியதும், ஜோதிகாவின் விடயம் தோண்டியெடுக்கப்பட்டு சுடச்சுட புதிய தட்டில் பரிமாறப்பட்டுள்ளது. இனி கொஞ்ச நாட்களுக்கு பலரின் கவனமும் இதிலேயே இருக்கும். அதுதான் சிலருக்குத் தேவைப்படுகிறதா? 

தமிழக இளைஞர்கள் 2017இல் ஜல்லிக்கட்டு போராட்டத்தில் வென்ற பின்னர், கடந்த காலங்களில் முக்கியமான தருணங்களில் மக்களைத் திசைதிருப்ப S.V. சேகர், H.  ராஜாவின் அட்மின், சில தமிழக அமைச்சர்கள் போன்று பலரும் பல சர்ச்சையான விடயங்களைச் செய்து வருவதும் பேசி வருவதும் ஒன்றும் தமிழக மக்களுக்குப் புதிதில்லைதானே?

இது ஒருபுறம் இருக்க, தமிழகத்தில் யார் என்ன பேசலாம் என தீர்மானிக்கும் ஒரு மனநிலை அண்மைக் காலங்களில் அதிகரித்து வருகிறது. 
உதாரணம் நடிகர்கள் அரசியல் பேசக்கூடாது, யாருமே ஆளும் கட்சியை விமர்சிக்கக் கூடாது; நடிகைகள் சமூக அக்கறையில் எதுவும் பேசக்கூடாது. இந்து சமயத்தை யாரும் விமர்சனம் செய்யக்கூடாது என அவர்களின் பட்டியல் வளர்ந்து கொண்டே போகிறது. 

இதுவும் மிகவும் ஆபத்தானது.

 

 

 

  • கருத்துக்கள உறவுகள்

 

  • கருத்துக்கள உறவுகள்

 

EWQrvZCVAAEppBJ?format=jpg&name=900x900

 

ஜோதிகா கடவுள் இல்லைன்னு சொல்லிருந்தா கூட நேக்கு இவ்வளவு டென்சன் ஆகிருக்காது.. படுபாவி நேரா உண்டியல்ல கைய வச்சுண்டா.. பகவானே நேக்கு BP எகிரிடுத்தூ.. அபச்சாரம்... அபச்சாரம்...

1 hour ago, tulpen said:

 

யாழ் கள சமய சித்தாந்தவாதிகள் இதில் ஜோதிகா சொன்னதைத் தெளிவாக் கேட்டார்களா?இல்லை என்ன சொல்லப்பட்டது என்று விளங்கினார்களா? வந்து இனி சப்பைக்கட்டு கட்டாம பாத்தீங்களா விளங்கினீங்களா அதில் என்ன தப்பு என்று சொல்லுவாங்களா?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
9 minutes ago, Aalavanthan said:

 

யாழ் கள சமய சித்தாந்தவாதிகள் இதில் ஜோதிகா சொன்னதைத் தெளிவாக் கேட்டார்களா?இல்லை என்ன சொல்லப்பட்டது என்று விளங்கினார்களா? வந்து இனி சப்பைக்கட்டு கட்டாம பாத்தீங்களா விளங்கினீங்களா அதில் என்ன தப்பு என்று சொல்லுவாங்களா?

பல தடவைகள் கேட்டத்துதான்.
மற்றவைகளை சுட்டிக்காட்ட முன் தான் சார்ந்திருக்கும் சமுதாயத்தை திருத்த வேண்டும்.

Just now, குமாரசாமி said:

பல தடவைகள் கேட்டத்துதான்.
மற்றவைகளை சுட்டிக்காட்ட முன் தான் சார்ந்திருக்கும் சமுதாயத்தை திருத்த வேண்டும்.

கேள்வி விளங்காவிடில் திருப்பியும் கேட்கின்றேன். இங்கு ஜோதிகா சொன்னதில் என்ன தப்பு

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Just now, Aalavanthan said:

கேள்வி விளங்காவிடில் திருப்பியும் கேட்கின்றேன். இங்கு ஜோதிகா சொன்னதில் என்ன தப்பு

எனக்கு நீங்கள் தமிழ் படிப்பிக்க வேண்டாம்.
கேள்வி நன்றாக விளங்கியது.
மருத்தவமனைகளுக்கு பொதுமக்கள் உதவவேண்டும் என்றால் அரசு எதற்கு?

ஜோதிகா சொன்னது நூற்றுக்கு நூறு வீதம் சரியானது.  அதில் எந்த தவறும் இல்லை.  அதை சொல்லும் தகுதி அவருக்கு உண்டு. தெருவில் போகும் சில சங்கி பண்டாரங்களின்  என்ன வேண்டுமென்றாலும் சொல்லி விட்டு போகட்டும். 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

எனக்கு நீங்கள் தமிழ் படிப்பிக்க வேண்டாம்.
கேள்வி நன்றாக விளங்கியது.
மருத்தவமனைகளுக்கு பொதுமக்கள் உதவவேண்டும் என்றால் அரசு எதற்கு?

திரும்பவும் முதலிலிருந்தா 🤥

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Aalavanthan said:

கேள்வி விளங்காவிடில் திருப்பியும் கேட்கின்றேன். இங்கு ஜோதிகா சொன்னதில் என்ன தப்பு

எங்களுக்கு கேள்வி நன்றாகவே விளங்குகிறது. சொன்னதில் பிழையில்லை ஏனென்றால் தமிழ்நாட்டில் கோவில் உண்டியலுக்கு செல்லும்காசு அரசாங்கத்துக்கே செல்கிறது. அதைவைத்துக்கூட ஒன்றும் செய்கிறார்களில்லை. இப்படி சொன்னவ ஒருபிடி மேலேபோய் சினிமாவிலும். கட்டவுட்டுகளுக்கு பாலூற்றுவதிலும் செலவழிக்கும் காசை பாடசாலைக்கும் வைத்தியசாலைக்கு கொடுத்து முன்னேற்ற சொல்லியிருக்கலாம் என்ற ஆதங்கம்தான்.

ஒன்று தெரியவேண்டும். இது கல்வி அறக்கட்டளை நடத்துவதுபோல் அவ்வளவு சுலபமானதில்லை. அரச மருத்துவமனைகளில் தனியார் உதவிகளை நெறிப்படுத்துவது அவ்வளவு எளிதல்ல, 

“இவரை தொட்ட நீ கெட்ட”... ஜோதிகாவை நேரடியாக எச்சரித்த திரெளபதி இயக்குநர்...!

போங்க தம்பி எப்பபாரு காமடி பண்ணிக்கிட்டு 

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, Kaalee said:

“இவரை தொட்ட நீ கெட்ட”... ஜோதிகாவை நேரடியாக எச்சரித்த திரெளபதி இயக்குநர்...!

போங்க தம்பி எப்பபாரு காமடி பண்ணிக்கிட்டு 👍

வாங்க காளி, அவரையே தமிழ் நாட்டில் மறந்துவிட்டார்கள். காவியை தொட்ட நீ கெட்ட என்று வந்திருக்கனும் 

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, nedukkalapoovan said:

 

காமாளைக் கண்ணனுக்கு கண்டதெல்லாம் மஞ்சள். 😜

6 hours ago, nedukkalapoovan said:

 

கோவிலைப் பிரம்மாவின் தலையில் இருந்து பிறந்தவர்களிடம் தரவேண்டுமாம். 😜😜

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, குமாரசாமி said:

பல தடவைகள் கேட்டத்துதான்.
மற்றவைகளை சுட்டிக்காட்ட முன் தான் சார்ந்திருக்கும் சமுதாயத்தை திருத்த வேண்டும்.

அதுக்கும் எங்கே விடுறீர்கள் 
நீங்களே ஞானஸ்தானம் தந்து முதலில் கிறிஸ்தவன் ஆக்கிவிட்டுத்தானே 
மற்ற கும்மியடி குளவியடி என்று தொடங்கிறீங்கள்.

இந்த கேடு கெட்ட மதம் 
அழிந்துபோனால்தான் முதலில் தமிழ் ஆவது தலை நிமிரும். 

  • கருத்துக்கள உறவுகள்

 

 

 

 

  • கருத்துக்கள உறவுகள்

 

1 hour ago, nedukkalapoovan said:

 

தஞ்சைப்பெருவுடையார் கோவில்  ராஜ ராஜ சோழனின் சொந்த பணத்தில் அவரது சொந்த உழைப்பில் வந்த பணத்தை கொண்டு கட்டபட்டதாக இந்த வீடியோவில் கூறப்பட்ட   பெரிய புளுகுமூட்டையை  நம்பி நெடுக்ஸ் இந்த காணொணியை இணைத்துள்ளார்.  எல்லா மன்னர்களும் மக்களிடம் வரி வாங்கி தான் தமது சாம்ராஜ்யங்களை நிர்வகித்தனர் என்பது உலகறிந்த உண்மை. இதில் ராஜ ராஜ சோழனுக்கு விதிவிலக்கு இல்லை. இந்த கோவிலின் சரித்திர பெருமை குறித்தோ அதன் பிரமாண்டம் குறித்தோ எவரும்  கருத்து கூறவில்லை. அப்படி இருக்க ஜோதிகா சொன்ன விடயத்தை தமது வசதிக்கு திரித்து ஜோதிகா மீது அவதூறு கூறும் நோக்கத்திற்காக அவர் மீது வன்ம‍ம் கொண்ட சில கும்பல்கள் வெளிவிடும் பித்தலாட்ட வீடியோக்கள் இவை. 

Edited by tulpen

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, tulpen said:

தஞ்சைப்பெருவுடையார் கோவில்  ராஜ ராஜ சோழனின் சொந்த பணத்தில் அவரது சொந்த உழைப்பில் வந்த பணத்தை கொண்டு கட்டபட்டதாக இந்த வீடியோவில் கூறப்பட்ட   பெரிய புளுகுமூட்டையை 

அவா சொன்ன பெரிய புளுகுமூட்டையை நானும் கவனித்தேன்.😂சீரியஸ் மாதிரி பெரிய பொய்யை சொல்கிறா.இனி இந்த புளு மூட்டை இந்தியா முழுவதும் கொறோனாவைவிட வேகமாக பரவும். வெளிநாடுகளில் வசிக்கும் ஈழ தமிழர்களிமும் பரவும் என்பது கவலைக்குரியது😢

  • கருத்துக்கள உறவுகள்

ஜோதிகா சொன்னதில் எந்தவித தவறும் இல்லை. எதையும் மத அடிப்ப்டையில் பார்க்க கூடாது. 

 

இங்கு சிலருக்கு கேள்வி விளங்கவில்லை 

Edited by colomban

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, colomban said:

இங்கு சிலருக்கு கேள்வி விளங்கவில்லை

உங்களுக்கு இருக்கும் விளக்கம் எனக்கு இல்லைபோல் உள்ளது குறைநினையாமல்  அதை கொஞ்சம் விளங்கப்படுத்தினால் என்னை போல் உள்ளவர்கள் படித்து பயன்பெறுவார் ?

  • கருத்துக்கள உறவுகள்

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.