Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பிரதமரின் இணைப்பாளராக கருணா

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பிரதமரின் இணைப்பாளராக கருணா

October 13, 2020

FB_IMG_1602590964975.jpg

கருணா அம்மான் என்று அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் பிரதமர் மகிந்த ராஜபக்சவின் மட்டு அம்பாறை மாவட்ட ஒருங்கிணைப்பாளராக இன்று (13)   அலரிமாளிகையில் வைத்து  உத்தியோகபூர்வமாக தனது பதவியினை பொறுப்பேற்றுக் கொண்டார்.

கடந்த நாடாளுமன்ற தேர்தலில் அம்பாறை மாவட்டத்தில் போட்டியிட்டு சுமார்  30000 அளவிலான வாக்குகளைபெற்ற அவர் மக்களின்  எதிர்பார்ப்புகளை நிறைவேற்றி கொள்வதற்கான ஓர் சந்தர்ப்பத்தை பிரதமர் மகிந்த ராஜபக்சவிடம்  கேட்டிருந்தார்.

இதற்கமைய விநாயகமூர்த்தி முரளிதரனுக்கு இப்பதவியை வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது #கருணா #மகிந்தராஜபக்ச #இணைப்பாளர்

received_3786984294687384.jpeg

 


 

https://globaltamilnews.net/2020/151794/

 

  • கருத்துக்கள உறவுகள்

சும்மா பக்கத்தில் இருக்கிற கதிரையில் இருந்து விட்டு போகட்டுமேன். அவசரத்துக்கு படம் காட்டி, தமிழருக்கும் அரசியலில்  சம அந்தஸ்து அளித்திருக்கிறோம் என்று விளக்கம் கொடுக்க உதவும். 

  • கருத்துக்கள உறவுகள்

கருணாவுக்கு முக்கிய பதவியை வழங்கினார் பிரதமர் மஹிந்த! | Athavan News

கருணாவுக்கு முக்கிய பதவியை வழங்கினார் பிரதமர் மஹிந்த!

கருணா அம்மான் என அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் மட்டக்களப்பு, அம்பாறை மாவட்ட ஒருங்கிணைப்பாளராக உத்தியோகபூர்வமாக பதவியேற்றுள்ளார்.

பிரதமர் அலுவலகமான அலரிமாளிகையில் வைத்து அவர் இன்று (செவ்வாய்க்கிழமை) தனது பதவியை பொறுப்பேற்றார்.

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் அம்பாறை மாவட்டத்தில் போட்டியிட்டு சுமார் 30ஆயிரம் அளவிலான வாக்குகளைப் பெற்ற தனக்கு, மக்களின்  எதிர்பார்ப்புகளை நிறைவேற்றிக் கொள்வதற்கான ஓர் சந்தர்ப்பத்தை வழங்குமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிடம் கருணா அம்மான் கேட்டிருந்தார். இதற்கமைய பிரதமரால் இவ்வாறு பதவி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, பிரதமரின் பெருந்தோட்ட இணைப்புச் செயலாளராக பதவி வகித்து வரும் செந்தில் தொண்டமானுக்கு தற்போது மேலும் ஒரு புதிய பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

இதன்படி, செந்தில் தொண்டமானுக்கு பிரதமர் அலுவலகத்தின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பதவி இன்று மாலை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவினால் அலரி மாளிகையில் வைத்து வழங்கப்பட்டுள்ளது.

http://athavannews.com/கருணாவுக்கு-முக்கிய-பதவி/

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் கர்ணா அம்மான் ( முரளிதரன் )😜😜😉

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஆளுநர் பதவி கிடைக்கும் என எதிர்பார்த்த கருணா அம்மானுக்கு கிடைத்த மஹிந்தவின் தற்காலிக இணைப்பாளர் பதவி

 
bb6e8835f27c37804e4a904b0776dbe6_XL.jpg


கருணா அம்மான் என்று அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் பிரதமர் மகிந்த ராஜபக்ஷவின் மட்டு அம்பாறை மாவட்ட ஒருங்கிணைப்பாளராக இன்று (13)  பொறுப்பேற்றுக் கொண்டார்.

கடந்த பாராளுமன்ற தேர்தலில் அம்பாறை மாவட்டத்தில் போட்டியிட்டிருந்தார் ,   வாக்குகள் சிதறடிக்கப்படாமையால் அம்பாறையில்   தமிழ்த் தேசிய கூட்டமைப்பிற்கு    வழமையாக கிடைத்த தமிழ் பாராளமன்ற பிரதிநிதித்துவம் இல்லாமல் போனது .  கருணா அம்மானிற்கு தேசிய பட்டியல் கிடைக்கும் என எதிர்பார்த்த போதும் மஹிந்த தரப்பால் வழங்கப்படவில்லை . 

அம்பாறைக்கு தமிழ் பிரதிநிதித்துவம் இல்லாமல் போனதையடுத்து தமிழ்த் தேசிய கூட்டமைப்பிற்கு கிடைத்த ஒரு தேசிய பட்டியலை அம்பாறைக்கு வழங்கினர். 

கடைசியில் கருணா அம்மானிற்கு ஆளுநர் பதவி கிடைக்கும் என எதிர்பார்த்தவர்களுக்கு ஏமாற்றமே கிடைத்திருந்தது . 

 

http://www.battinews.com/2020/10/blog-post_375.html

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, கிருபன் said:

 

கடைசியில் கருணா அம்மானிற்கு ஆளுநர் பதவி கிடைக்கும் என எதிர்பார்த்தவர்களுக்கு ஏமாற்றமே கிடைத்திருந்தது . 

எதை எங்க  வைக்கணும் என்று சிங்களத்துக்காவது  தெரிந்திருக்கு???

  • கருத்துக்கள உறவுகள்

அம்மானுக்கு... ஆளுநர் பதவி எல்லாம்,

”குருவி தலையில், பனங்காயை வைத்தது போல் இருக்கும்” 😁

ரதி... வர முதல், நான் எஸ்கேப்பு. 🏃🏽🏃🏽‍♂️ 🤣

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, கிருபன் said:

கடந்த பாராளுமன்ற தேர்தலில் அம்பாறை மாவட்டத்தில் போட்டியிட்டிருந்தார் ,   வாக்குகள் சிதறடிக்கப்படாமையால் அம்பாறையில்   தமிழ்த் தேசிய கூட்டமைப்பிற்கு    வழமையாக கிடைத்த தமிழ் பாராளமன்ற பிரதிநிதித்துவம் இல்லாமல் போனது . 

சிங்களப் பேரினவாதிகளால் இறக்கிவிடப்பட்ட விநாயகமூர்த்தி முரளீதரனால் வாக்குகள் சிதறடிக்கப்பட்டதாலேயே கூட்டமைப்பிற்கு ஒரு ஆசனம் அம்பாறையில் கிடைக்காமல்ப் போனது. ஆனால், செய்தியில் சிதறடிக்கப்படாமையால் கூட்டமைப்புத் தோற்றது என்று எழுதப்பட்டிருக்கிறது. 

ஆனாலும், தனது தேசியப்பட்டியல் ஆசனத்தை அம்பாறைக்குக் கூட்டமைப்பு வழங்கியிருக்கிறது. ஆனால், விநாயகமூர்த்தி முரளீதரனுக்கு தேசியப்பட்டியல்மூலம் ஆசனத்தைக் கொடுப்பதைக் கூட அவரது எஜமானர்கள் விரும்பவில்லை. போனால்ப் போகுதென்று இணைப்பாளர் பதவியைக் கொடுத்திருக்கிறார்கள். இது முதலும் அவருக்குக் கொடுக்கப்பட்ட பதவிதான், அதனை வைத்து கிழக்கினை சொர்க்கபுரியாக மாற்றிவிட்டிருந்தார். அதனை மீளவும் இனித் தொடர்வார் என்று நாம் நம்பலாம். 

நான் நினைக்கின்றேன் இதே பதவியைத் தான் இனியபாரதி முதலில் வகித்துக் கொண்டு இருந்தார் என. இப்ப அந்த எலும்பை பதவியை தூக்கி கருணாவுக்கு கொடுத்துள்ளார்கள் போலிருக்கு.

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, நிழலி said:

நான் நினைக்கின்றேன் இதே பதவியைத் தான் இனியபாரதி முதலில் வகித்துக் கொண்டு இருந்தார் என. இப்ப அந்த எலும்பை பதவியை தூக்கி கருணாவுக்கு கொடுத்துள்ளார்கள் போலிருக்கு.

மட்டக்களப்பில் காணி அபகரிப்பிற்கு இவரின் படை தேவை, எப்பதான் உணர்வார்களோ எம் மக்கள்

1 hour ago, விசுகு said:

எதை எங்க  வைக்கணும் என்று சிங்களத்துக்காவது  தெரிந்திருக்கு???

இவர் ஒரு கறிவேப்பிலை, ஆனா இனிமேல் அதற்கு கூட ஒப்பிட என் மனம் இடம் கொடுக்கவில்லை, கருவேப்பிலையில் நல்ல பல பலன்கள் இருக்கு

 

curry leaves are best|சாப்பாட்டில் கறிவேப்பிலை கண்டால் அனிச்சையாகத் தூக்கி  எறிபவர்கள் கவனத்துக்கு...- Dinamani

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, உடையார் said:

மட்டக்களப்பில் காணி அபகரிப்பிற்கு இவரின் படை தேவை, எப்பதான் உணர்வார்களோ எம் மக்கள்

அபிவிருத்தியா நிலமா என்று வரும்போது அபிவிருத்தியே பிரதானமாக இருக்கும் என்று நினைக்கிறேன். நிலம் இன்றிருக்கும், நாளை போகும், அபிவிருத்தியென்பது அப்படியா? நிரந்தரமானதல்லவா? நிலம் இல்லாவிட்டாலும் பரவாயில்லை, சிங்களவன் ஆக்கிரமிக்கும் எமது நிலத்தில் நாம் எமது அபிவிருத்தியைத் தொடர்வோம். 

12 minutes ago, நிழலி said:

நான் நினைக்கின்றேன் இதே பதவியைத் தான் இனியபாரதி முதலில் வகித்துக் கொண்டு இருந்தார் என. இப்ப அந்த எலும்பை பதவியை தூக்கி கருணாவுக்கு கொடுத்துள்ளார்கள் போலிருக்கு.

நாட்டின் பிரதமருக்கு நிகரான பதவி. இப்பதவிமூலம் அவர் அபிவிருத்தி, சலுகைகள், வேலைவாய்ப்பு, காணி-பொலீஸ் ஆகியவற்றின் மேலான அதிகாரம், நிதிவளம் என்று  பாரிய அதிகாரங்களையும், வல்லமையையும் கொண்டிருக்கப்போகிறார். நாட்டின் ஜனாதிபதியோ, பிரதமரோ இவரை எதுவுமே கேட்கமுடியாதென்றால் பார்த்துக்கொள்ளுங்களேன். 

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, உடையார் said:

இவர் ஒரு கறிவேப்பிலை, ஆனா இனிமேல் அதற்கு கூட ஒப்பிட என் மனம் இடம் கொடுக்கவில்லை, கருவேப்பிலையில் நல்ல பல பலன்கள் இருக்கு

முதலில் புலிகளை அழிக்க இவரைப் பயன்படுத்தினார்கள். இப்போது, தமிழர் தாயகத்தில் அவர்களின் பாராளுமன்றப் பிரதிநிதித்துவத்தை அழிக்கப் பாவிக்கிறார்கள். ஆக, இனிவரும் காலங்களில் எதோ ஒருவிதத்தில், குறைந்தது ஆட்களைக் கடத்திக் கொல்வதற்காகவாவது பாவிக்கலாம். சிங்களத்திற்கு நன்றியாக இருப்பவர்களை, சிங்களம் இலகுவில் கைகழுவிவிடாதென்றே நினைக்கிறேன். 

  • கருத்துக்கள உறவுகள்

அதிமுக மாறி கிடக்கு.? இணை ஒருங்கிணைப்பாளர் எங்கப்பா..?👍

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
8 hours ago, தனிக்காட்டு ராஜா said:

வாழ்த்துக்கள் கர்ணா அம்மான் ( முரளிதரன் )😜😜😉

உ...வாவ்   பிறகென்ன....இனி மடைதிறந்த வெள்ளம் போல கிழக்கு அபிவிருத்தி அடையப்போகுது. மட்டகளப்பு ஏரியாவுக்கு இனி கொம்மான் கிட்டத்தட்ட பிரதமர் மாதிரி இருப்பார்.😜

  • கருத்துக்கள உறவுகள்

The Magic word is "அபிவிருத்தி"  

என்ன இருந்தாலும் அவன்தானே உனக்கு "கட்டின 
புருஷன்" என்பதற்குள் எவ்வளவு வலி அடங்கும் என்பது 
சில பெண்களுக்கு மட்டுமே தெரியும். 

The magic word is "கட்டின புருஷன்"

  • கருத்துக்கள உறவுகள்
On 14/10/2020 at 15:01, குமாரசாமி said:

உ...வாவ்   பிறகென்ன....இனி மடைதிறந்த வெள்ளம் போல கிழக்கு அபிவிருத்தி அடையப்போகுது. மட்டகளப்பு ஏரியாவுக்கு இனி கொம்மான் கிட்டத்தட்ட பிரதமர் மாதிரி இருப்பார்.😜

நான் அறிந்தவரையில 

முரளியிடம் இருக்கும்  சொத்தை  அவிட்டு விட்டாலே

மட்டக்கிளப்பு முழுமையாக  அபிவிருத்தி அடைந்துவிடும்

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, விசுகு said:

நான் அறிந்தவரையில 

முரளியிடம் இருக்கும்  சொத்தை  அவிட்டு விட்டாலே

மட்டக்கிளப்பு முழுமையாக  அபிவிருத்தி அடைந்துவிடும்

அபிவிருத்தி அடையட்டும் மிக்க மகிழ்ச்சி. ஆனால் அங்குள்ள விருத்தைகளும் கவனமாக இருக்கவேண்டும்.😲 

  • கருத்துக்கள உறவுகள்

மொத்தத்தில்.. ஒரு மாமா வேலை. அதுவே இதுக்குப் பெரிசு. 

  • கருத்துக்கள உறவுகள்
On ‎14‎-‎10‎-‎2020 at 11:55, தமிழ் சிறி said:

அம்மானுக்கு... ஆளுநர் பதவி எல்லாம்,

”குருவி தலையில், பனங்காயை வைத்தது போல் இருக்கும்” 😁

ரதி... வர முதல், நான் எஸ்கேப்பு. 🏃🏽🏃🏽‍♂️🤣

இல்லை இந்த பதவி கொடுத்ததிற்குகே  இங்க கண பேருக்கு பைத்தியம் பிடிக்குது ...ஆளுநர் பதவி கொடுத்தால் ஹாட் அட்டாக்கே வந்து விடும்  😉
 

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, ரதி said:

இல்லை இந்த பதவி கொடுத்ததிற்குகே  இங்க கண பேருக்கு பைத்தியம் பிடிக்குது ...ஆளுநர் பதவி கொடுத்தால் ஹாட் அட்டாக்கே வந்து விடும்  😉

ரதி, நீங்கள்  சண்டை பிடிக்க வருவீர்கள் என்று, நாம் பயந்து கொண்டிருந்தால்...
நீங்கள், "வெறி சிம்பிளாக"  விசயத்தை முடித்தது ஆச்சரியமாக உள்ளது. :)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.